Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரெதாக்சியன் பதவி,பிபிசி செய்தியாளர் 1 ஜூலை 2023 செயற்கை நுண்ணறிவு(A.I) தொழில்நுட்பம் காரணமாக பல்வேறு துறைகளில் மனிதர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படக்கூடும் என்ற கூற்று ஒருபுறம் வலுவாக வைக்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியானது பெரும்பகுதி வேலைகளை அழித்துவிடும் என்ற அச்சம் இருந்தபோதிலும், எதிர்காலத்தில் புதிய வேலைவாய்ப்புகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். “உருவாகி வரும் செயற்கை நுண்ணறிவு காரணமாக என்ன நடந்து வருகிறது என்பதையும் பல்வேறு துறைகளில் எவ்வளவு வேகமாக செயற்கை நுண்ணறிவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது …

  2. பட மூலாதாரம்,PA நீங்கள் எவற்றைத் தேடுகிறீர்கள், எதை விரும்புகிறீர்கள், நீங்கள் பார்க்கும் தளம் போன்றவை இதற்குத் தெரியும். உலகின் மிகவும் பிரபலமான தேடல் தளமாக கூகுளை பற்றிதான் நாங்கள் பேசுகிறோம். ''நீங்கள் கூகுள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் தரவுகளை நம்பி அளிக்கிறீர்கள்'' தமது பயனர்களுக்கான அந்தரங்க உரிமை விதிமுறைகள் மற்றும் நிபந்தனையின் முதல் வரியில் கூகுள் தெளிவாகக் கூறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், ''மை ஆக்டிவிட்டி (My activity)'' செயல்பாட்டில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை அகற்றுவதற்கான சாத்தியத்தை கூகுள…

  3. Published By: SETHU 02 MAY, 2023 | 02:29 PM செயற்கை நுண்ணறிவின் ஞானத்தந்தை (கோட்பாதர்) என வர்ணிக்கப்படும் கணினியியல் விஞ்ஞானி ஒருவர் கூகுள் நிறுவனத்திலிருந்து இராஜினாமா செய்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆபத்து குறித்து பேசுவதற்காக அவர் விலகியுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜெப்ரி ஹின்டன் எனும் இவ்விஞ்ஞானி, செயற்கை நுண்ணறிவு சாதனங்களுக்கான அடிப்படை தொழில்நுட்பத்தை உருவாக்கியவர். நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையிடம் அவர் பேசுகையில், இத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சமூகத்துக்கும் மனித குலத்துக்கும் ஆழமான ஆபத்துகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். '5 வருடங்களுக்கு முன்னர் …

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,டெரெக் காய் & அன்னாபெல் லிங் பதவி,பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு கடந்த வார இறுதியில் ஜப்பானில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களில் ஒன்றான செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தற்போது பேசுபொருளாகி உள்ளது. செயற்கை நுண்ணறிவின் எதிர்மறை தாக்கங்கள் குறித்து வெளிப்படுத்தப்படும் கவலைகள், இந்த நவீன தொழில்நுட்பத்தில் சீனாவின் ஆர்வத்தைத் தடுக்கும் அமெரிக்காவின் முயற்சியாக இருக்குமோ என்று பார்க்க வேண்டியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தற்போது அமெரிக்காவின் கை ஓங…

  5. Published By: DIGITAL DESK 3 26 MAY, 2023 | 12:19 PM ஆர். பி. என். நீங்கள் எப்போதாவது இணையவழி மோசடிகளில் சிக்கி பணத்தை இழந்துள்ளீர்களா ? அல்லது உங்கள் வங்கி அட்டைகளில் இருந்து எப்போதாவது பணம் திருடப்பட்டுள்ளதா ? அவ்வாறெனில் எவ்வாறு இந்த மோசடிகளில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம். நாட்டில் இன்று அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றம் என்பன அனைத்து தரப்பினரையும் மோசமாக பாதித்துள்ளது. அதனால் மலிவான விலையில் எங்கு பொருட்களை கொள்வனவு செய்யலாம்? என்பதில் பலரும் ஆவலாக இருக்கின்றனர். அதேவேளை , இணையம் மூலமாகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வாயிலா…

  6. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகளை நீக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. மே 16ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் கணக்குகளை நீக்கிய பின்னர், அதனுடன் தொடர்புடைய ஏனைய சமூக வலைத்தள கணக்குகளும் முடக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகளை ஒருமுறையேனும் பயன்படுத்துவதனால் இந்த நடவடிக்கையில் இருந்து தனது கூகுள் கணக்கை காப்பாற்றிக்கொள்ள முடியும் என கூகுள் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/254653

  7. சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனம் குறுஞ்செய்திகளை தங்களுக்குள் மக்கள் அனுப்பி, பகிர்ந்து கொள்ளும் நோக்கோடு உருவானது. பின்னர், சிறிய அளவிலான வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பி, பரிமாறி கொள்ளும் வகையில் அதன் செயல்பாடுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டன. இதன் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) செயல்பட்டு வந்த ஜாக் டோர்சி கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி பதவி விலகினார். இதனை தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டார். இதன்பின்னர், உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க், கடந்த ஆண்டு ஒக்டோபர் இறுதியில் டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரானார். அதற்கான ஒப்பந்தம் முடிந்தவுடன் எ…

  8. சாட் ஜிபிடி adminApril 23, 2023 http://www.yaavarum.com/wp-content/uploads/2023/04/bhrathiraja-696x392.jpg பாரதிராஜா “எனக்கு திடீரென நெஞ்சு வலிக்கிறது. எந்த மருத்துவமனைக்குச் சென்றால் நல்லது?” என்ற கேள்வியை உங்கள் கணினியிடமோ அலைபேசியிடமோ கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். “இங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் அந்த மருத்துவமனைக்குச் செல்லுங்கள். உங்கள் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் அந்த மருத்துவமனைக்குப் போய்விடாதீர்கள். அங்கே போனவர்கள் வீடு திரும்பியதில்லை. அடுத்து இரண்டு கி.மீ. தொலைவில் இருக்கும் அந்த மருத்துவமனைக்கும் போய்விடாதீர்கள். அங்கே போனவர்கள் ஆண்டியாகாமல் வீடு திரும்பியதில்லை” என்ற விடை கிடைத்தால் எப்படியிருக்கும்? அதுதான் அடு…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 'பிளாக் பாக்ஸ்' என்றதும் உங்கள் மனதில் முதலில் தோன்றுவது எது? விமானத்தில் விபத்து ஏற்பட்டால், கடைசி நேரத்தில் விமானத்திற்குள் என்ன நடந்தது என்பதை கண்டறிய உதவும் Flight Recorder-ஐ 'பிளாக் பாக்ஸ்' என்பார்கள். இந்தச் சொல்லை நாம் அடிக்கடி செய்திகளின் வழியே கடந்து வந்திருப்போம். அல்லது மேஜிக் ஷோவில் மாயாஜாலங்கள் செய்ய பயன்படுத்தும் ஒரு கருப்பு பெட்டி உங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் அங்கமாக இருக்கும் AI உலகில் இந்த பிளாக் பாக்ஸ் என்ற பெயருக்கு வேறு ஒரு அர்த்தம் இருக்கிறது. இது பற்றி பேசிய கூகுளின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, உங…

  10. இணையத்தில் தகவல் சேமிப்பு பாதுகாப்பானதா? கூகுள், அமேசான் நிறுவனங்கள் தரவுகளை என்ன செய்கின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES 24 ஏப்ரல் 2023 கணினியில் நீங்கள் பார்க்கும் திரைப்படங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் தரவு மையத்தின் சேவையகங்களில் சேமிக்கப்படும். இந்தத் தரவுச் சேவையகங்கள் மற்றும் மையங்கள் கிளௌட் ஸ்டோரேஜ் என்று அழைக்கப்படுகின்றன. இங்கு சேமிக்கப்படும் தரவு இணையம் மூலம் உங்கள் மொபைல் போன் அல்லது கணினியைச் சென்றடைகிறது. இதேபோல், உங்கள் தரவுகளும் இந்த கிளௌட் ஸ்டோரேஜ்களில் சேமிக்கப்பட்டு, நீங்கள் விரும்பும் போதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். சாதாரண மக்களாக இருந்தாலு…

  11. மீண்டும் ட்விட்டர் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்! டுவிட்டர் சமூக வலைதளத்தின் லோகோவை மீண்டும் பழைய படி நீலக் குருவியாக மாற்றி உள்ளார் அதன் உரிமையாளர் எலான் மஸ்க். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான ‘Dogecoin’ லோகோவை டுவிட்டரின் லோகோவாக அவர் மாற்றி இருந்தார். மஸ்கின் இந்த செயலுக்கு பின்னர் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. Dogecoin நிறுவன முதலீட்டாளர்கள் அவர் மீது தொடுத்துள்ள வழக்கை திசை திருப்பும் நோக்கில் இதை செய்திருக்கலாம் என்பது அதில் முதன்மையானதாக இருந்தது. டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்தத் தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப…

  12. டுவிட்டர் செயலிக்கு மாற்றாக அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி Jack Dorsey புதிய சமூக வலைத்தள செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தை உலகின் முன்னணி பெரும் பணக்காரரான எலான் மஸ்க் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் அதிகாரிகள், பணியாளர்கள் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதன்போது, டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த Jack Dorsey அந்நிறுவனத்திலிருந்து வெளியேறினார். எனினும், அவர் விரைவில் டுவிட்டர் நிறுவனத்தில் மீண்டும் இணைவார் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டுவிட்டர் போன்ற புதிய சமூக வலைதளத்தை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். …

  13. வட்ஸ்அப் தொடர்ந்து பல மேம்படுத்தல்களை மேற்கொண்டு வருகிறது. மேலும் அந்த நிறுவனம் எதிர்வரும் மாதங்களில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. செய்திகளை அனுப்புவதை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், அம்சம் நிறைந்ததாகவும் மாற்றும் முயற்சியில், விரைவில் செய்திகளைத் திருத்தல், அரட்டையில் குறிப்பிட்ட செய்தியைப் Pin செய்தல் உள்ளிட்ட பல வசதிகளை வழங்கவுள்ளது. இந்த அம்சங்கள் டெலிகிராம் போன்ற சில செயலிகளில் ஏற்கனவே கிடைத்தாலும், அவை வட்ஸ்அப் பயனர்களுக்கு வரவேற்கத் தக்க மேலதிக அம்சமாகவுள்ளது. செய்திகளைத் திருத்துதல் இந்த அம்சம் ஊடாக அனுப்பிய செய்தியில், விரைவில் தவறுகளை எளிதாக திருத்தலாம் அல்லது குறிப்பிட்ட செய்திகளை நீக்காமல் கூடுதல் தகவலைச் சேர்க்கல…

  14. டுவிட்டரின் தற்போதைய பெறுமதி 20 பில்லியன் டொலர்க‍ளே : இலோன் மஸ்க் கூறுகிறார் Published By: SETHU 27 MAR, 2023 | 12:57 PM டுவிட்டர் நிறுவனத்தின் தற்போதைய பெறுமதி 20 பில்லியன் டொலர்களே என அதன் உரிமையாளர் இலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். பங்குரிமை இழப்பீட்டுத் திட்டமொன்று தொடர்பில், ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில் இதனை இலோன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 5 மாதங்களுக்கு முன்னர் 44 பில்லியன் டொலர்களுக்கு இந்நிறுவனத்தை இலோன் மஸ்க் வாங்கியமை குறிப்பிடத்தக்கது. டுவிட்டர் கடும் நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ள இலோன் மஸ்க், ஒரு கட்டத்தில் இந்நி…

  15. பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 7 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய தீர்மானம் டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதும் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரிகள் முதல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை பலரையும் அதிரடியாக பணிநீக்கம் செய்தது. அதைத் தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவும் பொருளாதார மந்த நிலையால் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றிய 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்தது. அந்த வகையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை உள்ளடக்கிய மெட்டா நிறுவனம் ஒரு புதிய சுற்று பணி நீக்கங்களுக்கு திட்டமிட்டு வருகிறது. மேலும் இந்த வாரத்தில் மாத்திரம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை குறைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. …

  16. ட்விட்டர் பயனர்களுக்கு இனி பாதுகாப்பு கிடைக்காது - பிபிசி புலனாய்வில் அதிர்ச்சி தகவல் கட்டுரை தகவல் எழுதியவர்,மரியானா ஸ்பிரிங் பதவி,தவறான தகவல் தடுப்பு மற்றும் சமூக ஊடக செய்தியாளர், பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஈலோன் மஸ்க் ஈலோன் மஸ்க் தலைமையில் ட்விட்டரில் நடந்த பணிநீக்கங்கள், மாற்றங்களைத் தொடர்ந்து, ட்விட்டர் தளத்தில் நடக்கும் ட்ரோலிங், தவறான தகவல் பரவுவது, குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் ஆகியவற்றில் இருந்து பயனர்களை இனி அந்த நிறுவனத்தால் பாதுகாக்க முடியாது என்று ட்விட்டர் நிறுவன ஊழி…

  17. சாட்பாட் தொழில்நுட்பத்தில் மோதும் கூகுள் - மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் சோய் கிளெய்ன்மேன் தொழில்நுட்ப ஆசிரியர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GOOGLE சாட்ஜிபிடிக்கு (ChatGPT) போட்டியாக கூகுள் நிறுவனம் தற்போது 'பார்டு' (Bard) எனப்படும் சாட்பாட்டை களமிறக்க உள்ளது. இந்த சாட்பாட், சோதனை ஓட்டத்திற்குப் பின்னர், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் ஏற்கெனவே உருவாக்கிய 'லாம்டா' (Lamda) எனப்படும் உரையாடல் செயற்கை நுண்…

  18. பேஸ்புக்கில் ட்ரம்ப் மீண்டும் அனுமதிக்கப்படுவார்: மேட்டா அறிவிப்பு By Sethu 26 Jan, 2023 | 09:52 AM அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் அனுமதிக்கப்படவுள்ளார் என பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மேட்டா அறிவித்துள்ளது. 2021 ஜனவரியில் அமெரிக்கப் பாராளுன்ற கட்டடத்தில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ட்ரம்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பின் இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில், சில வாரங்களுக்குள் ட்ரம்ப் மீண்டும் அனுமதிக்கப்படவு;ளார் என மேட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. …

  19. வட்ஸ்அப்பில் 'போல்ஸ்' அறிமுகம் By T. SARANYA 19 NOV, 2022 | 09:47 AM வட்ஸ்அப் செயலியில் 'போல்ஸ்' ("Polls") உருவாக்கும் புது அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்டாவிற்கு சொந்தமான, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் போல்ஸ் அம்சம் செயல்பாட்டில் இருக்கிறது. இதனைத்தொடர்ந்து வட்ஸ்அப் செயலியிலும் "Polls" உருவாக்கும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வட்ஸ்அப் 'போல்ஸ்' அம்சம் ஒரு கருத்துக்கணிப்பு அம்சமாகும். இந்த போல்ஸ் அம்சம் தனிப்பட்ட சாட்கள் (Private chat) மற்றும் குரூப் சாட்கள் (Group chat) போன்ற இரண்டிலும் இப்போது பயன்படுத்தக் கிடைக்கிறது. இது பயனர்களுக்கு 12 விருப்பங்கள் வரை பதில்களுடன் தங்…

  20. ஜாலிக்காக சர்வர் தரவுகளை அழித்த ஹேக்கர் தம்பதி 33 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "முதலில் பணத்துக்காக சைபர் தாக்குதல் நடத்த நினைத்தோம். ஆனால், பின்னர் மனதை மாற்றிக்கொண்டு 'வைப்பர் அட்டாக்' நடத்திவிட்டோம்." பிரபல ஓட்டல் நிறுவனத்தின் சர்வர் தரவுகளை அழித்ததாக ஒரு கணவனும் மனைவியும் பிபிசிக்கு கொடுத்த வாக்குமூலம் இது. வியட்நாமிலிருந்து வந்ததாக தெரிவிக்கும் இந்த தம்பதியர், முதலில் பணத்துக்காக நடத்திய முயற்சி தோல்வியுற்றதால் இப்படி தரவுகளை அழித்துள்ளனர். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தரவுகள் மீட்டெடுக்க முடியாத அளவுக்கு நிரந்தரமாக அழிக்கப்பட்டன. 'ஹாலிடே இன்' என்ற …

  21. சைபர் போர்: அச்சுறுத்தும் மின்னணு தாக்குதல்கள்; தப்புவது எப்படி? விமலாதித்தன் மணி சைபர் பாதுகாப்பு வல்லுநர், ஐக்கிய அரபு அமீரகம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் இருபதாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவ…

  22. இணைய வசதி முழுக்க முழுக்க பெண்களால் உருவாக்கப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இணையம் ஆண்கள் இல்லாமல் உருவாக்கப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும். நிச்சயம் இப்போதிருப்பதைவிட வித்தியாசமானதாகவே இருக்கும். அதற்காக இணையம் முழுக்க முழுக்க ஆண்களால் மட்டுமே உருவாக்கப்பட்டது என்று அர்த்தமல்ல. இரு எழுத்தில் தொடங்கிய பயணம் 1969 அக்டோபர் 29. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், அந்த 21 வயது மாணவி மிக மிக கவனமாக தன் கணிணி முன் அமர்ந்திருந்தாள். கணிப்பொறி அறிவியல் படிக்கும் அந்த மாணவியின் கணிணியில் ஒரு பாப்பப் மெசேஜ் வந்தது. 'L O' என்று …

  23. QR கோட் மோசடிகள்: கவனமாக இருக்க உதவும் கேள்வி பதில்கள் ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக 19 ஜூன் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES QR குறியீடுகள் வாயிலாக நடக்கும் மோசடிகள் டிஜிட்டல் உலகில் தொடரந்து நடைபெற்று வருகின்றன. நம்மில் பெரும்பாலோனோர் டிஜிட்டல் பேமென்ட் முறையைப் பயன்படுத்துவதால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்த விழிப்புணர்வைப் பெறுவது அவசியம். பணப் பரிவர்த்தனைகள் மற்றும் அதிக தகவல்களை அறிய நாம் பயன்படுத்தும் QR குறியீடு மூலம் மோசடிகள் அரங்கேறுகின்றன. QR குறியீடு என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது இந்த மோசடியை எப்படித் தவிர்க்கலாம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்…

  24. டிஜிட்டல் உலகம்: உங்களைப் போலவே இருக்கும் செயற்கை நுண்ணறிவு சகோதரர் – விரைவில் நிஜமாகலாம் ஜேன் வேக்ஃபீல்ட் பிபிசி தொழில்நுட்ப செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உங்களைப் போலவே இருக்கும் டிஜிட்டல் இரட்டையரை உருவாக்கும் தொழில்நுட்பம் இன்னும் 10 ஆண்டுகளில் வரலாம் என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர். நம்மைப் போலவே ஒருவர் இருப்பதாக நம்மில் பலரிடமும் நம் நண்பர்கள் சொல்லியிருப்பார்கள். அது, நம் தோற்றத்தோடு பெரிதும் ஒத்துப்போகக்கூடிய உருவ அமைப்பைக் கொண்ட, அவர்கள் கடந்து வந்த யாரோ ஒரு நபராக இருக்கலாம். ஆனால், இப்படி…

  25. சைபர் வில்லன்கள்: திருமண வலைதள மோசடிகள் ஹரிஹரசுதன் தங்கவேலு நண்பர் ஒருவர் தனது பெண்ணுக்கு வரன் பார்ப்பதற்காக ஆன்லைன் மேட்ரிமோனியல் தளங்களில் கட்டணம் செலுத்தி சந்தாதாரராக சம்பந்தம் தேடிக்கொண்டிருந்தார். அதில் மாதக் கட்டணம் செலுத்துவது மட்டும்தான் அவர் பொறுப்பு. கணக்கை நிர்வகிப்பதை அவரது பெண்ணே செய்துவந்தார். ஒருநாள் அவரது மகளுக்கு ஒரு ப்ரொஃபைலில் இருந்து விண்ணப்பம் வந்தது. தான் தமிழ்க் குடும்பம் எனவும் கனடாவில் ஒரு வங்கியில் வேலை செய்துவருவதாகவும் சொல்லி, “உங்களது ஃப்ரொஃபைல் பிடித்திருக்கிறது, ஜாதகம் பகிர முடியுமா!” என்று எதிர்முனை கேட்டது. பெண்ணும் பகிர்ந்திருக்கிறார். சில நாட்களில் பையன் தரப்பிலிருந்து ஒரு குரல் வந்தது. “நான் அவனுடைய அம்மா பேசுறே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.