நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
மாரடைப்பு வராமல் தடுக்க மஞ்சள் போதும் : மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிப்பு புதுடில்லி : "மாரடைப்பு வராமல் தவிர்க்க, மஞ்சள் போதும்' என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.கனடாவில் உள்ள, சுவாசக் கோளாறு ஆராய்ச்சி மைய நிபுணர்கள் இது தொடர்பாக ஆய்வு செய்து, இதை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது:மஞ்சளில், மஞ்சள் நிறத்தை தருவது, அதில் உள்ள,"கர்குமின்' (விதையில் உள்ள ரசாயன பொருள்) எனப்படும் ஒரு கலவை. அதில் ரசாயன சத்து உள்ளது. உணவில் சேர்த்து சாப்பிடும் போது,மஞ்சளில் உள்ள சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது; புற்றுநோய் கட்டி ஏற்படாமல் தடுக்கிறது; ரத்தக்குழாய்களில் அடைப்பு வராமல் தடுக்கிறது; பாக்டீரியா தாக்குதலை முறியடிக்கிறது.மஞ்சளில்…
-
- 5 replies
- 2.2k views
-
-
நீண்ட ஆயுளுக்கு 4 செயல்கள் ! நான்கு விஷயங்களை வாழ்நாளில் கடைபிடித்து வாழ்ந்தால் ஆயுளில் பதினான்கு ஆண்டுகளை அதிகப்படுத்த முடியும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை ஈடுபடுத்தி, பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட விரிவான ஆய்வு ஒன்று இந்த முடிவை எட்டியிருக்கிறது. அதென்ன நான்கு விஷயங்கள் ? 1. புகை பிடித்தலை விலக்குதல் 2. மதுவை வெகுவாகக் குறைத்தல் ( அதிகபட்சம் வாரம் 7 கப் வைன்) 3. தினமும் அரை மணி நேர உடற்பயிற்சி 4. பழவகைகள், காய்கறிகள் இணைந்த உணவுப் பழக்கம். இந்த நான்கு செயல்களையும் கடைபிடித்தால் இதய நோய்களோ, புற்று நோய் போன்ற அச்சுறுத்தல்களோ இல்லாமல் முதுமையை அனுபவிக்க …
-
- 1 reply
- 1.4k views
-
-
முடி வளர சித்தமருத்துவம் முடி உதிர்வதை தடுக்க வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். வழுக்கையில் முடி வளர: கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை ம…
-
- 0 replies
- 3.4k views
-
-
தன்னம்பிக்கை- மகிழ்ச்சி வளரணுமா? ஸ்மைல் ப்ளீஸ்... மனிதனின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்ணாடியாக முகம் உள்ளது. சோகம், மகிழ்ச்சி, விரக்தி, கோபம், அருவருப்பு என பல வகையான உணர்வுகளை ஒருவன் பூட்டிக் கொள்ள நினைத்தாலும் அது முடியாது. இப்படிப்பட்ட முகத்துக்கு அழகு தருவது எது? சிரிப்பு தான். சிரிப்பு இல்லாத முகம் தெய்வம் இல்லாத கோவில் போன்றது என்று சொல்லலாம். கள்ள கபடமற்ற குழந்தைகள் சிரிப்பதை பார்த்தால் சகல சோகங்களும் ஓடி விடும். அதை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். அதுபோல சிலர் எப்போதும் சிரித்த முகத்துடன் பொலிவுடன் காணப்படுவர். இத்தகைய நபர்களிடம் பழகுவதற்கும் அனைவரும் விரும்புவர். சிரித்த முகம் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது. …
-
- 2 replies
- 1.4k views
-
-
கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும் என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள். இதில் 2-வதாக உள்ள வழக்கு இருதய நோய்களுக்கு அப்படியே பொருந்தும். ஆமாம், மூக்குக்கு மேல் வரும் கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் சொல்கிறக்ர் கள். 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகம் ஆகும். இதுவே 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக அமைகிறது. அதாவது 2 மடங்கு அதிகமாக... சரி, கோபம் கொள்வதால் மாரடைப்பு எப்படி வருகிறது தெரியுமா? கோபமான…
-
- 0 replies
- 1.1k views
-
-
''கிரேக்கத்துல ''கடவுளின் பானம்''னு சொல்வாங்க கிரேப் ஜூஸை. அநேகமாக மனிதனுக்கு அறிமுகமான முதல் ஜூஸ் இதுவாகத்தான் இருக்கும். ஏன்னா, கி.மு. 1000-ம் ஆண்டிலேயே கிரேப் ஜூஸ் (Grape juice) தயாரிச்சிருக்காங்களாம்!''. திராட்சை ரசத்தின் மேன்மைகளைப் பார்ப்போம். * இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, ஐந்து பிளேட் பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச் சமம். * ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்; ரத்தம் கிளாட் ஆவதை, அதாவது, ஆங்காங்கே உறைவதைத் தடுக்கும். * திராட்சைப் பழரசத்தை சோடா, கோலாக்களுக்கு பதிலாக அருந்துவது அத்தனை ஆரோக்கியம்! தினமும் மதிய உணவுக்குப் பின் 200 மில்லி கிரேப் ஜூஸ் குடிப்பது நல்லது! * ஒரு கிளாஸ் கிரேப் ஜூஸ’ல் 80 சதவிகிதம் தண்ரும், 60 சதவிகிதம் கலோரிகளும் இரு…
-
- 1 reply
- 1.7k views
-
-
''விளையாட்டு வினையாகும்னு சொல்வாங்க. நானே அதைப் பல தடவை பல பேருக்குச் சொல்லியிருக்கேன். ஆனா, எனக்கு நானே அப்படிச் சொல்லிக்கிற துர்பாக்கிய நிலைமை வரும்னு நினைக்க லீங்க. சின்ன வயசுல பசங்களோடு சேர்ந்து திருட்டு தம்மடிக்க எங்கேயாச்சும் ஓரமா ஒதுங்குவோம். ஒரு சிகரெட்டை எடுத்துப் பத்தவெச்சுப் புகைவிட்டதுமே, நாமளும் பெரியவங்க ஆகிட்டோம்கிற மாதிரி ஒரு மிதப்பு வரும். உலகத்தையே கால்ல போட்டு மிதிச்ச மாதிரியான நினைப்பு. அதுல வாழ்க்கையைத் தொலைச்சவங்க எத்தனையோ பேரில் நானும் ஒருத்தன். விளையாட்டா ஆரம்பிச்ச பழக்கம் இப்ப வினையாகிப்போச்சு. என்னைப் பத்தி சில வார்த்தைகளை உங்ககிட்ட பகிர்ந்துக்க விரும்புறேன். இது வளரும் சமுதாயத்துக்கு ஒரு பாடமாக அமையும். தயவுசெஞ்சு காது கொடுத்துக் கேளுங்க. நான் ப…
-
- 0 replies
- 942 views
-
-
இனிப்பைக் குறைத்தாலே உடல் பருமன் குறையும்! சனி, 9 பிப்ரவரி 2008( 13:47 IST ) நமது உடலிற்குத் தேவையான சத்துக்களை குறைந்த அளவிற்கே அளிக்கும் உணவு வகைகளையும், பானங்களையும் சாப்பிடுவதன் மூலம் உடல் பருமனைக் குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பெல்ஸ்லி, ஆதம் ட்ரூவோன்ஸ்கி ஆகியோர் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் குறைந்த கலோரி அளவு கொண்ட இனிப்புச் சத்துகள், சக்தியின் அடர்த்தி தன்மை, திருப்தித் தன்மை ஆகியவைத் தொடர்பாக நடத்திய ஆய்வில் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் இனிப்பு அளவைக் குறைத்துக் கொண்டாலே உடல் பருமனைக் கட்டுப்படுத்துவது எளிது என்பதைக் கண்டறிந்…
-
- 0 replies
- 2.8k views
-
-
முத்தம் என்ன செய்யும்? என்னதான் பொறுமை, நிதானம், மற்றவர்கள் பேசுவதற்குக் காது கொடுப்பது, பொறுப்பாக நடந்து கொள்வது, சின்சியாரிடி என்று பல்வேறு குணாம்சங்கள் ஒரு தம்பதிக்கு இருந்தாலும் அந்தத் திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியை நிர்ணயிப்பதில் முக்கியமான பங்கு தாம்பத்திய உறவுக்கு உண்டு. அதனால்தான் அந்த உறவுக்கு இருவரில் யாராவது ஒருவர் தகுதியில்லாதவராக இருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டால் உடனே வேறு எந்தக் கேள்விக்கும் இடமின்றி டைவர்ஸ் கூட சுலபமாகக் கிடைத்துவிடுகிறது. ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அந்த உறவுக்கு தகுதியில்லாத நிலை எதனால் ஏற்படுகிறது? அதைப் பற்றிப் பின்னால் பார்க்கலாம். ஆனால், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தகுதியும் திறனும் இருந்தும்கூட சிலரது வாழ்க்கையி…
-
- 26 replies
- 5.3k views
-
-
நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத்தான் அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நகை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை... அதில் மருத்துவ ரீதியான பலன்களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். ‘‘குறிப்பாக, இது நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது...!’’ என்கிறார் கோவை கே.ஜி. மருத்துவ மனையின் அக்குபஞ்சர் துறை டாக்டர் சி.வி. அருணா சுபாஷினி.. அவர் சொன்னார்... ‘‘நம் உடலின் இரத்த ஓட்டத்தை ஏந்திச் செல்ல குழாய்களும், அதற்கான பாதைகளும் இருப்பது போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. ‘நாடி ஓட்டப் பாதை’ என்று இதற்குப் பெயர…
-
- 3 replies
- 3.9k views
-
-
சித்த மருத்துவம் பழங்களின் மருத்துவ குணங்கள் 1.செவ்வாழைப்பழம் கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும் 2.பச்சை வாழைப்பழம் குளிர்ச்சியை கொடுக்கும் 3.ரஸ்தாளி வாழைப்பழம் கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. 4.பேயன் வாழைப்பழம் வெப்பத்தைக் குறைக்கும் 5.கற்பூர வாழைப்பழம் கண்ணிற்குக் குளிர்ச்சி 6.நேந்திர வாழைப்பழம் இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும் 7.ஆப்பிள் பழம் வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது 8.நாவல் பழம் நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும் 9.திரட்சை 1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, கா…
-
- 2 replies
- 2.9k views
-
-
உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு! இரத்த அழுத்தம் என்றால் என்ன...? உடல் சீராக இயங்க இரத்த ஓட்டம் அவசியம். இரத்தம் என்பது ஓடிக்கொண்டே இருப்பது. அதனை இயக்கும் பம்ப்பாக இருதயம் இருக்கிறது. இருதயம் தான் இந்த இரத்தத்தை எல்லா உறுப்புக்களுக்கும் பம்ப் செய்து அவை சீராக செயல்பட உதவுகிறது. அது சீரற்று இரத்தத்தை மிகையாக அழுத்தும்போது இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது...? பொதுவாக “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பார்கள். ஆனால் இந்த உப்புத்தான் உடலுக்குப் பகைவன். உயர் ரத்த அழுத்தத்தின் துணைவன். உப்பு அதிகமாகச் சேர்ப்பதே இதன் முக்கியக் காரணம் என்றாலும், மரபு வழியாகவும் உடற்பருமனாலும், மன உளைச்சலும் இதன் காரணங்களாகின்றன. இதில் இரண்டு…
-
- 2 replies
- 44.4k views
-
-
இதுக்கு நான் பொறுப்பல்ல. வாசித்ததை இணைக்கின்றேன் ஆனால் தினந்தோரும் இதை நான் கடைப்பிடிக்கின்றேன் DRINK WATER ON EMPTY STOMACH It is popular in Japan today to drink water immediately after waking up every morning. Furthermore, scientific tests have proven a its value. We publish below a description of use of water for our readers. For old and serious diseases as well as modern illnesses the water treatment had been found successful by a Japanese medical society as a 100% cure for the following diseases: Headache, body ache, heart system, arthritis, fast heart beat, epilepsy, excess fatness, bronchitis asthma, TB, meningitis, kidney and urine diseases,…
-
- 3 replies
- 1.7k views
-
-
இரத்த தானம் செய்யலாமா? Donating Blood ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள்: வயது 17 முதல் 55 வரை. உடல் எடை 45 கிலோவுக்கு குறையாமல், எய்ட்ஸ், காமாலை, மலேரியா போன்ற வியாதிகள் இல்லாமல் இருக்க வேண்டும். இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்: உங்கள் இரத்தப் பிரிவு, உங்கள் இரத்தத்தில் மஞ்சள் கா…
-
- 8 replies
- 3.6k views
-
-
பல் வலி _ எஸ். அன்வர் "பல் வலியும் தலைவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்" என்பது சுகந்தியின் விஷயத்தில் சரியாக இருக்கிறது. பல்வலி என்றால் அப்படியரு வலி. அவரது கீழ்த் தாடையில் இரண்டு பற்களில் குழி. ஒவ்வொரு முறை அவர் சாப்பிட்டு முடிக்கும் போதும், சில பருக்கைகள் அந்தக் குழிகளில் போய் உட்கார்ந்து கொள்ளும். அந்தப் பருக்கைகளை குண்டூசி, குச்சிகள் போன்ற ஆயுதங்களுடன் போராடித்தான் மீட்க வேண்டியது வரும். இதோடு முடிந்து விடாது. படுக்கப் போகும்போது பல்லில் வலி லேசாக எட்டிப் பார்க்கும். அந்த வலி அப்படியே கூடிக் கொண்டு போய் அன்றைய தூக்கம் காலி. இப்படிப் பல இரவுகள் அவருக்கு நரகவேதனைதான். பல் வலிக்கும்போது கணவரையோ, குழந்தைகளையோ சரியாகக் கவனிக்காமல் போகும்போது எரிச்சல், …
-
- 0 replies
- 2.1k views
-
-
ரத்த அழுத்தம் சீராக சாக்லெட் சாப்பிடுங்க!! சாக்லெட்களை சிறிதளவு தினந்தோறும் சாப்பிட்டால் உடலின் ரத்த அழுத்தம் குறைகிறது என ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கோகோ அதிகம் உள்ள கறுமை நிற சாக்லெட்களை சாப்பிட்டால் இதயத்துக்கு நல்லது என முந்தைய ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. ஆனால், அதில் இருக்கும் கூடுதல் சர்க்கரை, கொழுப்புச்சத்து மற்றும் கலோரி ஆகியவற்றால் கோகோவால் ஏற்படும் நன்மை கெட்டுவிடுகிறது என்றும் மற்றொரு ஆய்வு அறிக்கை தெரிவித்தது. ஆனால், சாக்லெட்டை அளவாக சாப்பிட்டால், அதாவது தினந்தோறும் 7 கிராம் அளவுக்கு சாக்லெட் சாப்பிட்டால், எந்த வித பாதிப்பும் இல்லாமல் ரத்த அழுத்தத்தின் அளவு குறைகிறது என்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் டிர…
-
- 0 replies
- 1.7k views
-
-
நாக்கு கசப்பாய் இருப்பது ஏன்? கேள்வி:என் கணவருக்கு நாக்கு எப்பவுமே கசப்பாய் இருக்கிறதாம். மேலும் உடல் எப்போதும் உற்சாக மின்றி சோர்வாகவே உணர்கிறார். காரணம் என்னவாயிருக்கும்...? பதில்:உடல், மனப் பலவீனம் இரண்டுமே காரணமாக இருக்கலாம். ப்ளட் ப்ரஷர், சர்க்கரை நோய் இரண்டும் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும். சர்க்கரை நோய் இருந்தால் வாய் கசக்கும். நாக்கில் இன் ஃபெக்ஷன் இருந்தாலும் வாய் கசக்கும். நாக்கில் மாவு மாதிரி இருக்கும். சுவை தெரியாது. வீட்டிலேயோ அலுவலகத்திலோ டென்ஷன் இருந்தாலும் சோர்வாக இருக்கலாம். போதுமான ஓய்வெடுத்தும், உடல் முழு உற்சாகத்துக்குத் திரும்பாமல் மீண்டும் களைப்பாகவே இருந்தால் அது மனச் சோர்வினால் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் டாக்டரிடம் சென்று …
-
- 0 replies
- 1.4k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/12/video_22.html
-
- 0 replies
- 1.1k views
-
-
இருதய நோயைத் தடுக்கும் கோழி முட்டை -ஈழவாசன்- இருதய நோயைத் தடுக்கும் கோழி முட்டையை தமிழகத்தைச் சேர்ந்த கோழிப்பண்டை நிறுவனமம் அறிமுகம் செய்துள்ளது. தமிழகம் கோவை என்ற இடத்தில் அமைந்துள்ள சுகுணா பவுல்ட்ரி பாம் என்ற நிறுவனம் சுகுணா கார்ட் என்ற ஒரு வகை கோழி முட்டையையும் சுகுணா ஆக்ரிவ் என்ற மற்றொரு கோழி முட்டையையும் அறிமுகம் செய்து வைத்துள்ளது. சுகுணா காட் ரக முட்டை ஏனைய முட்டையைவிட 24 விழுக்காடு கொழுப்புச் சத்து குறைவானது. இந்த முட்டை இருதய நோய், அதிக பதற்றம், ஒவ்வாமை, நீரிழிவு நோய் வராது தடுக்க ஆற்றல் கொண்டது. இருதய நோய் வராது தடுக்கும் விற்றமின் - E , ஒமேகா அசிட் என்பன இந்த முட்டையில் உள்ளடங்குகின்றன. சுகுணா ஆக்ரிவ் ரக முட்டை புற்றுநோய், எ…
-
- 0 replies
- 1.3k views
-
-
தாய் நலனே சேய் நலன் -------------------------------------------------------------------------------- cri "தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமுமில்லை" என்பார்கள். "அன்னை ஓர் ஆலையம்" என்று தாயை கோவிலாக போற்றும் வழக்கம் என்றுமே இருந்து வருகிறது. தாய் தான் குடும்பத்தை அரவணைத்து செல்பவராக உலா வருகிறார். தந்தை இல்லாத குடும்பத்தை நினைத்து பார்த்தாலும் தாய் இல்லாத கும்பத்தை நினைத்து பார்க்க முடியாது. தாய் தந்தையையின் அரவணைப்போடு வளரும் குழந்தையும், அவர்களின் இணைந்த திட்டத்தின்படி அமையும் குடும்பமும் சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை. இல்லறத்தின் நிறைவாக குழந்தைகள் பாவிக்கப்படுகின்றனர். குழந்தைகளே குடும்பத்தின் மகிழ்ச்சி. எவ்வளவு தான் …
-
- 0 replies
- 2.4k views
-
-
மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை, எதுவும் உங்களை அண்டவே அண்டாது. ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்கள், மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பல முறை எடுத்துச்சொல்லிவிட்டனர். மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த ஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர் களுக்கு அவர்கள் அறியாமலேயே, "ஒமேகா 3' கிடைக்கிறது. அதனால், வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட…
-
- 3 replies
- 1.7k views
-
-
உணவகம் செல்லும் போது கவனிக்க வேண்டிய 10 விடயங்கள் உறவுகளின் நெருக்கம் அதிகரிக்க அனைவரும் ஒன்றாய் அமர்ந்து கூட்டாஞ்சோறு உண்ணும் வாய்ப்பு நகர்ப்புற வாசிகளுக்கு வாய்ப்பதில்லை. அவசரகதியில் இயங்கும் வாழ்க்கை விடியலில் புறப்பட்டு, நள்ளிரவுக்கு சில மணி நேரம் மட்டுமே இருக்கும் போது வீடு வந்து சேரும் மனிதர்களையே தயாரித்திருக்கிறது. விலைவாசியின் உயர்வும், தாரளமயமாக்கலால் அதிகரித்திருக்கும் ஏற்றத் தாழ்வுகளும் இன்றைக்கு மனிதனின் உழைக்கும் நேரத்தை அதிகப்படுத்தியிருப்பதுடன், கணவன் மனைவி இருவரும் உழைத்தால் மட்டுமே ‘சமாளிக்க’ முடியும் எனுமளவுக்கு சூழலை இறுக்கப்படுத்தியும் இருக்கிறது. குடும்பத்தினருடன் செலவிடக் கிடைக்கும் ஒரு சில மணி நேரங்களைக் கூட ஊடகங்களின் மலினமான …
-
- 5 replies
- 1.8k views
-
-
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாய் இருக்கும் பெண்களுக்கு புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாய் இருப்பதாக ஐரோப்ப ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது. சர்க்கரை நோயோ, அதிகமாக இனிப்பு வகைகளை உண்பதோ இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. இப்படி உடலில் சேரும் அதிகப்படியான சர்க்கரையினால் பெண்களுக்கு கருப்பை, தோல் போன்ற பல இடங்களில் புற்று நோய் வரும் என அந்த ஆராய்ச்சி எச்சரித்துள்ளது. மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு வருவதற்கும் இந்த இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பது ஒரு காரணம் என்று உமேயா பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. அதுவும் 49 வயதுக்குக் குறைவான பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை அச்சுறுத்துகிறது. கடந்த பதிமூன்று வருடங்களாக இந்த ஆ…
-
- 0 replies
- 971 views
-
-
புகை பிடிப்பவர்களுக்கு வழுக்கை விழும் - ஆய்வு திங்கள்கிழமை, நவம்பர் 26, 2007 லண்டன்: புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட ஆண்களுக்கு வழக்குத் தலை ஏற்படும் என்று தைவானில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. புகை பிடிப்பதால் புற்று நோய் வரும், சுவாசக் கோளாறுகள் வரும், நரம்புத் தளர்ச்சி வரும், ஆண்மைக் குறைவு ஏற்படும் என்பது பொதுவான அபாயங்கள். ஆனால் இப்போது புகை பிடிப்பதால் வழுக்கைத் தலை ஏற்படும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட ஆண்களில் மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு தலை வழுக்கை ஏற்படுகிறதாம். அவர்களின் செக்ஸ் ஹார்மோன்களில் பாதிப்பு ஏற்படுவதால்தான் இந்த வழுக்கை பிரச்சினை வருவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. …
-
- 5 replies
- 2.5k views
-
-
பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடினால் அதனை 'டயாபடீஸ்' என்கிறோம். குறைந்தால் அதன் பெயர் என்ன? அதுவும் உடலுக்குப் பிரச்னையா? இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தால் "ஹைப்போ கிளைசி மாலா" ஏற்பட்டு, கைகள் நடுங்கும். பதறும். உடனே ஒரு சாக்லெட் போன்ற இனிப்புப் பொருளை வாயில் போட்டுக்கொள்வது நல்லது. இன்சுலின் தவறுதலாக அதிகம் போட்டுக் கொண்டவர்களுக்கு இந்த அபாயம் உண்டு. ------oOo------ சமையல் சோடா(cooking soda / baking soda) உபயோகிப்பது உடல்நலத்திற்குக் கெடுதலா? ஆமாம் எனில், அதற்கு மாற்று என்ன? உப்பு போல சமையல் சோடா என்பது இயற்கையானதில்லை. ஒரு வகையான கெமிக்கல்தான். எனவே, அதற்கு மாற்று கிடையாது. அதை அள…
-
- 0 replies
- 1.2k views
-