நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
எப்போது பால் குடிப்பது நல்லது? காலை நேரமா அல்லது இரவு நேரமா?
-
- 0 replies
- 435 views
-
-
கடந்த ஒரு மாதமாக இந்த வகை ஸ்ரோக் வந்த எனது தாயாரோடு நேரத்தை செலவிட்டுக் கொண்டு இருக்கிறேன்...இதனால் ஏற்படப் போகும் தாக்கத்திலிருந்து மீளுவதும் கடினமாக போகிறது.....வைத்தியர்களைப் பொறுத்தரை (thalamus.) என்ற வகை ஸ்ரோக் வந்தவர்கள் உயிர் பிழைப்பது அபூர்வம் என்று சொல்கிறார்கள்..எந்த நிமிடத்திலும் என்னவும் ஏற்படாலம்...ஏற்கனவே நீரளிவு,மற்றும் கிட்னிபெயிலிராகி டயலஸ் போன்றவை நடந்து கொண்டு கொண்டு இருப்பதனால் உயிர் பிழைப்பது கடினம் என்றே சொல்கிறர்கள்..இதனைப் பற்றிய மேலதிக தகவல்கள் அறிய ஆவலாய் உள்ளேன்...நெடுக் அண்ணா மற்றும் யாராவது அறியத் தந்தால் உதவியாக இருக்கும்....
-
- 18 replies
- 1.5k views
-
-
மூலநோயை முற்றிலும் குணப்படுத்த கருணை கிழங்கு! நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் இருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கருணை கிழங்கின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.பல்வேறு நன்மைகளை கொண்ட கருணை கிழங்கு, மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் இடுப்பு வலி, கைகால் வலியை போக்கும் மருந்தாக விளங்குகிறது. கொழுப்பு சத்தை கரைக்க கூடியது. ரத்தத்தை சமன்படுத்துகிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. கருணை கிழங்கில் புரதம், வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. ஈரலுக்கு பலம் கொடுக்கிறது. ரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது. மாரடைப்பு, கேன்சர் …
-
- 0 replies
- 1.7k views
-
-
புற்றுநோய்க் கலங்களை அழிக்கும் தன்மை பாகற்காய் வித்துக்களுக்கு உண்டென பேராதனை பல்லைக் கழகத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளதாக பேராசிரியர் ஜயந்த ராஜபக் ஷ தெரிவித்தார். புற்றுநோய்க்கலங்ளை முற்றாகச் செயல் இழக்கச் செய்யும் ரசாயன இயல்பு பாகற்காய் வித்துக்களுக்கு இருப்பதாக ஆய்வுகள் மூலம் அறிந்து கொண்டதாகவும் பேராதனைப் பல்லைக்கழக மிருகவைத்திய பிரிவு பேராசிரியர் ஜயந்த ராஜபக் ஷ மேலும் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், ஒரு வருட காலமாக பாகற்காய் வித்துக்களை வைத்து தான் மேற்கொண்ட ஆய்வுகளின் படி பாகற்காய் வித்திலுள்ள அல்பா ஸ்டியரிக்பெடி அமிலம் (Steric fatty acid) என்ற ரசாயனம் மூலம் புற்று …
-
- 0 replies
- 279 views
-
-
எமது மூதாதையரின் உணவுப் பழக்கங்களும் வைத்திய முறைகளும் ஒரு மனிதனின் ஆயுட்காலமானது சுமார் 100 ஆண்டுகள் என்பதும், திடகாத்திரத்து டனும் ஆரோக்கியமாகவும் இருக்கும் காலம் 60 ஆண்டுகள் என்பதும் அனைவரினதும் கணிப்பீடாகும். எமது மூதாதையர் ஓரளவு வயதினராகும் போதே பெண்களும் வயலிலும் , வீடுகளிலும் கடினமான உழைப்பாளிகளாக இருந்தனர். அதிகாலையிலே எழுந்து தமது வீட்டு வேலைகளை முடித்து மதியத்தில் கணவனுக்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு செல்வர் உணவு பரிமாறியதும் கணவனுக்கு ஒத்தாசையாகச் சில வேலைகளை மேற்கொள்வர். காலை உணவு காலையிலே கணவ…
-
- 1 reply
- 863 views
-
-
நுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு மீண்டும் அந்த நோய் தாக்கும் என்பதை ஓராண்டுக்கு முன்பே கண்டறியும் புதிய இரத்தசோதனையை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதுனர். ஸ்கேன் மூலம் இந்த புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பே இந்த எளிய இரத்தசோதனை மூலம் கண்டறிய முடியும். இதன் மூலம் நுரையீரல் புற்றுநோய் யாரையெல்லாம் மீண்டும் தாக்கும் என்பதை ஒருவருடம் முன்பே துல்லியமாக கண்டறிய முடியும். புற்றுநோய்களில் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்துவது நுரையீரல் புற்றுநோய் . அது எப்படி உருவாகிறது என்பது குறித்த மிகப்பெரிய மரபணு ஆய்வின் முடிவில் இந்த புதிய இரத்தசோதனை உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பிபிசியின் பிரத்யேக செய்தி.
-
- 0 replies
- 311 views
-
-
-
-
- 0 replies
- 302 views
-
-
இன உறுப்புகளின் வளர்ச்சியை கண்டறிய உதவும் கேரியோடைப்பிங் பரிசோதனை (karyotype test) மாறி வரும் புறச்சூழல், கதிர்வீச்சு,செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், தொழிற்சாலை புகை, கழிவுகள் ஆகியவற்றுடன் நாம் தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருள்களையும் சாப்பிடத் தொடங்கிவிட்டோம். அதிலும் மைதா மாவால் தயாரிக்கப்படும் புரோட்டா போன்ற உணவு வகைகளை விரும்பி சாப்பிடுகிறோம். குழந்தைகளுக்கும் வாங்கிக் கொடுக்கிறோம். இதிலுள்ள ‘அலாக்ஸான்’ என்ற ரசாயனப் பொருள் எம்முடைய மரபு ரீதியிலான உடல் ஆரோக்கியத்தையே மாற்றிவிடுகிறது. இதன் காரணமாக இன்றைய திகதியில் ஆணா அல்லது பெண்ணா என தீர்மானிக்க முடியாத வகையில் பாலின உறுப்புகளில் குறைபாடுகளுடன் குழந்தைகள் ப…
-
- 0 replies
- 302 views
-
-
காய்கறிகளில் அதிக கசப்பு தன்மை கொண்டது பாகற்காய். கசப்பு தன்மைவுடைய சிவயை பெற்றிருந்தாலும் பாகற்காய் உண்பதால் பல நன்மைகள் ஏற்படும். அவற்றை இங்கு காண்போம்... பாகற்காயில் நீர்ச்சத்து, புரதம், மாவு, கொழுப்பு, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புத் தாது, வைட்டமின் என எல்லா வகையான சத்துகளும் அடங்கி உள்ளன. நன்மைகள்: # பாகற்காய் ஒரு சிறந்த விஷ முறிவாக செயல்படுகிறது. # உடம்பில் உள்ள நரம்புகளுக்கு சக்தியை வழங்குகிறது. # கல் அடைப்பு மற்றும் மூல நோயை பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் குணமாகும். # கல்லீரலில் உள்ள வீக்கத்தை சரி செய்ய பாகற்காய் உதவுகிறது. # நீரிழிவு நோயாளிகள் பாகற்காயை தொடர்ந்து சாப்…
-
- 5 replies
- 953 views
-
-
அதிகரித்து வரும் மலக்குடல் புற்றுநோய் இப்போதைய இளைய தலைமுறையினர், இணைய தலைமுறையினராக இருப்பதால் ஆரோக்கியத்திற்கு அதிகளவில் முக்கியத்துவம் தருவதில்லை. பொருளீட்டுவதற்கு தான் முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். இதன் பின்விளைவாக எந்த நேரத்திலும் உணவு உண்பது, சமைத்த ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல் துரித வகை உணவுகள் உண்பது, சிவப்பு இறைச்சி உட்கொள்வது, புகைபிடிப்பது, மது அருந்துவது, மாசடைந்த புறச்சூழலில் தொடர்ந்து இயங்குவது போன்ற காரணங்களால் மலக்குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். மலக்குடல் புற்றுநோயால் உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் 1.4 லட்சம் பேர் புதிதாகப் பாதிக்கப்படுகிறார்கள். 6 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் இதன…
-
- 0 replies
- 619 views
-
-
உங்கள் தலைவலி எந்த மாதிரியானது? உஷார்…இப்படிப்பட்ட தலைவலி இருந்தால் அது ஆபத்தானது!! தலைவலி என்பது பொதுவாக காய்ச்சல், சளி, சைனஸ், உடல்சோர்வு, மன அழுத்தம், அதிக நேரம் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் பார்ப்பது மற்றும் அதிக இரத்த அழுத்தம் போன்றப் பிரச்சனைகளால் வரக்கூடும். இப்படிப்பட்ட தலைவலிகள் வரும் அதற்கென மாத்திரைகளை அடிக்கடி போடுவதால் அது பல பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால், சில சமயங்களில் தலைவலி என்பது பெரிய பிரச்சனைகளின் முன் அறிகுறியாகக் கூட இருக்கலாம். தலைவலி என்பது அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது. ஒவ்வொரு விதமான தலைவலியும் ஒவ்வொரு பிரச்சனையின் அறிகுறி இருக்கலாம். இங்கே குறிபிட்டுள்ள விதமான தலைவலிகளை நீங்கள் உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகி அதற்கு…
-
- 0 replies
- 371 views
-
-
நீண்ட காலம் ஆண்டிபயாடிக் உட்கொள்வோருக்கு புற்றுநோய் ஆபத்து? நீண்ட காலமாக ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களின் குடலில் ஒரு வித வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அது புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாகவும் அமையலாம் என்று ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGARO/PHANIE/SCIENCE PHOTO LIBRARY Image captionநீண்ட காலமாக ஆண்டிபயாடிக்குகளை உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து? வயிற்றில் உண்டாகும் பல விதமான கிருமி பெருக்கத்தால் கட்டிகள் உருவாவதற்கு காரணமாக அமைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதை தங்களின் புதிய ஆராய்ச்சி முடிவோடு இணைத்து ஆராய்ச்சியாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஜர்னல் கட…
-
- 0 replies
- 248 views
-
-
அதிக வியர்வையா..? இளம் பெண்கள் ஏனைய பருவ காலங்களைக் காட்டிலும் கோடை காலத்தில் அதிக வியர்வையால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்காக குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட இடத்தை தேடுவது, சந்தன குளியல் என நிவாரணங்களைத்தான் தேடுகிறார்கள். ஆனால் வியர்வை அதிலும் அதிகப்படியான வியர்வை ஏன் ஏற்படுகிறது என்பதை அறிந்தால், அதிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வர். அதிகட்சமாக வியர்வை வெளியாவதற்கு காரணம், போதிய அளவிலான உறக்கமின்மை, பதற்றம், பயம், பயத்தின் காரணமாக அதிகரிக்கும் இதயத்துடிப்பு, உடல் எடை குறைவது, அடிக்கடி உணர்ச்சிவசப்படுவது, சீரற்றமாதவிடாய், உடல் இரவிலும் சூடாக இருப்பதாக உணர்வது போன்றவைகள் தான். இயல்பான மனநிலையின் போது புற மற்றும் அகச் சூழல…
-
- 0 replies
- 300 views
-
-
யாருக்கெல்லாம் மாரடைப்பு ஆபத்து அதிகம்? படத்தின் காப்புரிமைMADDIE MEYER/GETTY IMAGES) ஐக்கிய ராஜ்ஜியத்தில் 20 மில்லியனுக்கு மேலானோர் உடல் அளவில் இயங்காமல் (செயல்படாமல்) இருப்பதாக பிரிட்டிஷ் இதயம் பவுண்டேஷன் தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு செயல்படாமல் இருப்போர் இதய நோய்களுக்கு ஆளாகும் ஆபத்து அதிகரித்து ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 1.2 பில்லியன் பவுண்ட் தேசிய சுகாதார சேவையில் செலவை ஏற்படுத்துவதாக எச்சரித்துள்ளது. தன்னுடைய 44 வயதில் மாரடைப்பு ஏற்பட்ட ஹாரியட் முல்வானே, அவருடைய வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி கொள்ள தீர்மானித்தார். "இப்போது திரும்பிப் பார்க்கையில், நான் அதிகமாக இயங்காமல், செயல…
-
- 0 replies
- 588 views
-
-
டெங்கு என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? படத்தின் காப்புரிமைSPL டெங்கு என்றால் என்ன? ஏடிஸ் என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வகைக் கொசு, மற்ற கொசுக்களைப் போலல்லாமல், பகல் வேளைகளில்தான் கடிக்கின்றது. உலகெங்கிலும் ஆண்டுக்கு 6 கோடி பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 24,000 பேர் இதனால் இறக்கின்றனர் ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் இது காணப்படுகிறது. அறிகுறிகள் தலைவலி காய்ச்சல் தோலில் தடிப்புகள் …
-
- 0 replies
- 317 views
-
-
இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுவதால் ஏற்படும் ஆபத்து என்ன? இரவில் சிறுநீர் கழிக்க தூக்கத்திலிருந்து எழுபவர்கள் தங்கள் உணவில் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவைக் குறைத்து கொள்ள வேண்டும் என ஜப்பான் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES இரவில் அதிகப்படியான சிறுநீர் கழிக்கும் நிலையான நாக்டுரியா, குறிப்பாக 60 வயதை தாண்டியவர்களுக்கு வருகிறது; அதனால் இரவில் தூக்கம் தடைபடுவதால் அது வாழ்க்கை நடைமுறையை பாதிக்கிறது. 300 தன்னார்வலர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், உப்பின் அளவை குறைவாக எடுத்துக் கொள்வதனால் குறைந்த அளவில் சிறுநீர் கழிக்க வழிவகுக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சமச்சீர் உணவு, இந்த பிரச…
-
- 0 replies
- 1.8k views
-
-
டெங்கு நோய் பற்றி அரசாங்க வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றி வரும் லலிதாகோபன் தரும் விளக்கம் என்பது காலத்தின் கட்டாயம்.பொது மக்கள் அறிந்து கொள்வது மிக அவசியம். டெங்கு காய்ச்சலினால் கிழக்கு மாகாணம் பரவலாக பாதிக்கபட்டு உயிரிழப்புக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.நாம் தொடர்ச்சியாக இதில் அலட்சியம் காட்டுவோமானால் நாம் இன்னுமொரு உயிரிழப்பு நடைபெற துணைபோகின்றோம்! காத்தான்குடியில் டெங்கு புதிய காத்தான்குடி நூறாணியா பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக காத்தான்குடி நூறாணியா வித்தியாலய மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. நூறாணியா வித்தியாலயத்தில் தரம் 4 இல் …
-
- 0 replies
- 447 views
-
-
வீகன் டயட் நலம் வாழ நனி சைவம் நன்றி குங்குமம் டாக்டர் திடீர் மினி தொடர் தொடங்கும் முன்...இணையதளங்களைப் பயன்படுத்துவோர் மட்டுமே அறிந்திருந்த ‘பேலியோ உணவுமுறையை, விரிவான அட்டைப்பட கட்டுரையின்மூலம் தமிழ் வாசகர்களுக்குப் பரவலாகக் கொண்டு சேர்த்த முதல் தமிழ் ஊடகம் ‘குங்குமம் டாக்டர்’தான் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கும்.அதேபோல், சமீபகாலமாக அடிக்கடி கேள்விப்படும் ‘வீகன் டயட்’ பற்றிய ஒரு புரிதலை வாசகர்களுக்கு ஏற்படுத்துவதற்காகவே இந்த திடீர் மினி தொடர். இதனால், குறிப்பிட்ட உணவுமுறையை வாசகர்களுக்கு ‘குங்குமம் டாக்டர்’ பரிந்துரைக்கிறது என்று அர்த்தம் இல்லை. உணவுப்பழக்கம் என்பது தனிநபரின் உடல்நிலை, வாழ்க்கைமுறை, விருப்பம் போன்ற பல்வேறு காரணங்களின் அட…
-
- 8 replies
- 3k views
-
-
பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை.... ஏன் ஷேவிங் செய்யக்கூடாது என்று தெரியுமா? தற்போது ஆண்கள், பெண்கள் என இருபாலரும் மென்மையாக ரோமம் இல்லாத சருமத்தின் மீதுள்ள மோகத்தால், தங்கள் சருமத்திற்கு பாதுகாப்பை அளிக்கும் முடியை அகற்றி வருகின்றனர். அதில் கை, கால், அக்குள்களில் மட்டுமின்றி, பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியையும் அகற்றுகின்றனர். அந்தரங்க முடியை ஷேவிங் செய்யும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்!!! மேலும் உடலில் வளரும் முடியை அகற்றுவதற்கு பல வழிகள் உள்ளன. அதில் ஷேவ் செய்வது, ட்ரிம் செய்வது, வேக்ஸ் செய்வது போன்றவை பொதுவான வழிகள். இதில் ஷேவிங் முறையைத் தான் நிறைய பேர் பின்பற்றுகின்றனர். ஏனெனில் இந்த வழியால் நமக்கு வலி இருக்காது. அந்தரங்க பகுதியில் …
-
- 13 replies
- 15.7k views
-
-
ஒன்பது மணிநேரம் தூங்குபவர்களா நீங்கள் : ஆய்வாளர்களின் அதிர்ச்சி தகவல் வழமையாக அதிகநேர தூக்கம் தேவைப்படாமல் இரவு நேரங்களில் ஒன்பது மணித்தியாலயத்திற்கு அதிகமாக தூங்குபவர்கள் டிமென்டியா எனும் மனநோயால் பாதிக்கப்படும் அபாயத்தை பெறுவதோடு, அல்சைமர்ஸ் எனப்படும் நினைவாற்றல் பாதிப்புறும் நோயின் தாக்கத்தின் ஆரம்ப அறிகுறிகளை வெளிப்படுத்தலாம் என புதிய ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நோய் ஆய்வானது சராசரியாக அறுபது வயதுடைய சுமார் 2500 பேரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒன்பது மணித்தியாலயத்திற்கு அதிகமாக, தொடர்ச்சியாக தூங்கியவர்களுக்கு அல்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருமடங்கு இருப்பதற்கான சாத்தியக்க…
-
- 0 replies
- 331 views
-
-
உஷார் மக்களே...நீங்கள் சாப்பிடுவது பிளாஸ்டிக் முட்டையாகவும் இருக்கலாம்! #EggAlert முட்டை... குறைந்த செலவில் அதிக ஊட்டச்சத்து தரும் ஓர் உணவு. அதிலும் கலப்படம் என்பதுதான் இப்போது எல்லோரையும் கதிகலங்கவைத்திருக்கிறது. கேரளாவில் ஆரம்பித்தது பிரச்னை... இன்று சென்னை, திருச்சி, சேலம், கோவை... எனத் தமிழகத்தின் பல நகரங்களுக்கும் பரவியுள்ளது. இது தொடர்பாக வலைதளத்தில் வெகு வேகமாகப் பரவிவரும் சில வீடியோக்கள், மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கின்றன. செயற்கையான சீன முட்டைகள், இன்று தமிழகத்தின் பல நகரங்களில் நல்ல முட்டைகளோடு கலந்து விற்பனையாகின்றன. இவற்றில் பிளாஸ்டிக் உண்டு. சாப்பிட்டால், புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் தாக்கும் என்கிறார்கள். ம…
-
- 0 replies
- 395 views
-
-
கோதுமை உணவு தடைசெய்யப்பட வேண்டும் ஏன்? எதனால்
-
- 1 reply
- 297 views
-
-
எனக்கு வயது 30 அடிக்கடி மூச்சு விடுவதில் சிரமமாக இருக்கிறது. டாக்டர் பரிந்துரையின் படி எல்லா டெஸ்ட் செய்ததில் ஒன்றும் இல்லை. ஆன்னால் எப்பொழுதும் தொண்டை அடைதுகொண்டே இருக்கிறது. பின் மண்டையில் அவ்வப்போது லேசான வலி ஏற்படுகிறது. ப்ளூட் பிரஷர் நார்மல். மூச்சு பிடிப்பாக இருந்தால் அதற்க்கேன விடையை சொல்லுப்ங்க ப்ளீஸ். ஏன் என்றால் அவ்வப்போது இதயத்தில் ஊசி குத்து வது போன்று வலிக்கும். எல்லவற்றிர்க்கும் மேலாக மரண பயம் பயங்கரமாக இருக்கிறது. psychiatrist பார்த்தேன் அவரு anxity என்று tablets கொடுத்தார். இந்த மாத்திரைகளை சாப்பிட்டால் என்னே என்னே விளைவுகள் வரும் என்று தெரியவில்லை. இரவு நன்றாக உறக்கம் வருகிறது. காலையில் எழுந்திரிக்க ரொம்ப கஷ்டமாக இருக்கிறது இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்ட…
-
- 2 replies
- 732 views
-
-
இயற்கையாக ரத்த அழுத்தத்தைக் குறைக்க 10 வழிகள் #HealthTips இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் அலுவலகத்தில் மேல் அதிகாரியின் கண்டிப்பு, குடும்ப நிர்வாகம், குழந்தைகள் படிப்பு, நேர நிர்வாகம், பண நிர்வாகம், வயதான பெற்றோரை கவனித்தல் என பல பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கின்றன. பெரும்பாலான இந்திய நடுத்தர வர்க்கம், தங்களது அன்றாட வாழ்க்கையில் இதுபோன்ற பிரச்னைகளை சந்தித்தபடிதான் ஒவ்வொரு நாளையும் நகர்த்துகின்றனர். இதனால் மனஅழுத்தத்தோடு, உயர் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. இது இதயக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. இதைத் தவிர்க்க நமது அன்றாட வாழ்க்கையில் சில சின்னச்சின்ன ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றி வந்தாலே போதும், மருந்து மாத்திரைகளின் உதவி இல்லாமலேயே ரத்தஅழுத்தத்தைக் கட்டு…
-
- 0 replies
- 835 views
-