நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
கோலா பானங்கள் புற்றுநோயைத் தூண்டுமா? சில வருடங்களுக்கு முன்பு பிரபல கார்பனேட்டட் குளிர்பானம் ஒன்றின் நூற்றாண்டு கால ரகசியம் வெளிப்பட்டது. அதில், சுவையைக் கூட்ட, திரும்பத் திரும்ப குடிக்கத் தூண்ட ஆல்கஹால் கலக்கப்படுகிறது எனத் தெரியவந்தது. தற்போது, மற்றொரு பிரபல குளிர்பானம் ஒன்றில் புற்றுநோய்க்குக் காரணமான ரசாயனம் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் விரும்புவது குளிர்பானங்களைத்தான். பல்வேறு நிறங்களில், சுவைகளில் கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள், காண்போரை சுலபமாக ஈர்க்கும் தன்மை உடையவை. இந்திய உணவுத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, குளிர்பானங்கள் தயாரிக்க எவ்வளவுதான் வரைமு…
-
- 0 replies
- 513 views
-
-
ஏன்... மூக்கில், உள்ள முடியை அகற்றக் கூடாது என உங்களுக்கு தெரியுமா? ஆரோக்கியம் சார்ந்து நாம் தினமும் காட்டும் அக்கறையை விட, அழகு சார்ந்து நாம் அன்றாடம் காட்டும் அக்கறை தான் அதிகமாக இருக்கிறது. அழகாக உடை உடுத்த வேண்டும், மிடுக்காக இருக்க வேண்டும், ஷூ பாலிஷ் செய்ய வேண்டும், முடிக்கு க்ரீம் பயன்படுத்துவது, தாடி ட்ரிம் செய்வது, மூக்கின் முடியை கூட மொத்தமாக அகற்றுவது என நாம் இவற்றை தினமும் செய்கிறோம். சமீபத்திய ஆய்வில், தாடியை கிளீன் ஷேவ் செய்வதே தவறு, தாடி இருப்பதால் நல்ல கிருமிகள் வளர்கின்றன.இவை, முகத்தின் சருமத்திற்கு நன்மை விளைவிக்கின்றன என கண்டறியப்பட்டது. அதே போல மூக்கின் முடியை முழுமையாக தினமும் அகற்றுவதும் தவறு என கூறுகின்றனர். உண்மையில் மூக்கின் முடி பாக…
-
- 0 replies
- 579 views
-
-
வாழைப்பழத்தோல் தரும் மருத்துவம் வாழைப்பழத்தோல் தரும் மருத்துவம் Posted By: online3@uthayan.comPosted date: July 28, 2016in: மருத்துவம் வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை வீசி எறிய கொஞ்சம் யோசிப்பீர்கள். முள்ளை எடுக்க வேண்டுமா? முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டுமென்பதில்லை. வாழைப் பழத் தோல் இருந்தா போதும் அன்பர்களே! கைகளிலோ, பாதத்திலோ, மரச்சில்லுகள் அல்லது முள் குத்தினால், வலியில் சுருக்கென்று உயிரே போகும்படி இருக்கும். இதனை எடுக்க முடியாமல் டாக்டரிடம் சென்று , கத்தி காயங்கள் வாங்கியவர்களும் உண்டு. இந்த அவஸ்தை எல்லாம் இனி வ…
-
- 3 replies
- 525 views
-
-
மறதி நோயை (அல்சீமர் நோய்) தடுக்கக்கூடிய காய்கறிகள்! உடல் ஆரோக்கியத்திற்காக உட்கொள்ளப்படும் காய்கறிகள் மறதிநோய் எனப்படும் அல்சீமர் நோய் ஏற்படாமல் தடுக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள சத்தான கொழுப்புகளும், காய்கறிகளில் உள்ள தாவர எண்ணெய்களும்தான் அல்சீமரை தடுக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். சிகாகோவில் உள்ள ஆய்வாளர்கள் 65 வயதிற்கு மேற்பட்ட 815 நபர்களிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். அவர்களுக்கு உயர்தர சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பால் பொருட்களை கொடுத்து சோதனை செய்தனர். அதில் வியப்பூட்டும் மாற்றம் ஏற்பட்டது. 80 சதவிகிதம் வரை அல்சீமர் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. காய்கறிகளில் உள்ள நல்ல கொழுப்புகள் ரத்த நாளங்களில் உள்ள கெட்ட …
-
- 0 replies
- 894 views
-
-
பகல் பொழுதில் ஒரு மணி நேரம் உறங்குவீர்களா? ஆய்வில் அதிர்ச்சி தகவல் பகல் பொழுதில் ஒரு மணி நேரம் உறங்குவது நீரிழிவு பாதிப்பு ஏற்படும் அபாயத்தை 45 சதவீதத்தால் அதிகரிப்பதாக ஜப்பானிய ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த ஆய்வின் பெறுபேறுகள் உலகமெங்குமுள்ள 307,237 பேரை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட 21 ஆய்வுகளை அடிப்படை யாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பகல் பொழுதில் சுமார் 60 நிமிடங்கள் உறக்கத்தில் ஆழ்பவர்களுக்கு அவ்வாறு உறங்காதவர்களுடன் ஒப்பிடுகையில் நீரிழிவு ஏற்படும் அபாயம் 45 சதவீதம் அதிகமாகவுள்ளதாக டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் யமடா த…
-
- 0 replies
- 317 views
-
-
நாற்பது வயதைக் கடந்துவிட்டாலோ அல்லது உயர் குருதி அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தவில்லை என்றாலோ இதயம் பாதிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்து இருக்கிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதய பாதிப்பிற்காக சிகிச்சை எடுக்கும் போது சத்திர சிகிச்சையை தெரிவு செய்வதில்லை. மருத்துவர்கள் நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசினாலும் இதயத்தில் சத்திர சிகிச்சையை மனமுவந்து செய்துக்கொள்வதில்லை. இதனை கருத்தில் கொண்டே மருத்துவ உலகம் இதய பாதிப்பிற்கு தற்போது சத்திர சிகிச்சையில்லாமல் பல புதிய சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறர்கள். அதில் ஒன்று தான் கீலேசன் தெரபி. எம்முடைய உடல்நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவமனைகளில் குளுக்கோஸ் ஏற்றுவார்களே அதே போன்றது தான் இந்த கீலேசன் தெரப…
-
- 0 replies
- 660 views
-
-
மத்தியத்தரைக்கடல் பகுதி உணவு வகைகள் இதய நோயாளிகளின் ஆயுட்காலத்தை இது நீட்டிக்கிறது என இத்தாலியில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு கூறுகிறது. பழங்கள், காய்கறிகள், மீன், கடலை வகைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய்யை ஆகியவை இவற்றில் அடங்கும்.சிவப்பு இறைச்சி மற்றும் வெண்ணையை உண்பவர்களை விட இவற்றை உட்கொள்பவர்கள் 37 சதவீதம் கூடுதலாக உயிர்வாழும் வாய்ப்பு உள்ளதாம். BBC
-
- 1 reply
- 449 views
-
-
ஆரோக்கியம் காக்கும் 6 உணவுகள் ஃபேஷன், டிரெண்ட் எனக் கருதி, தெருவோரக் கடைகளிலும் ஃபாஸ்ட்ஃபுட் கடைகளிலும் கிடைப்பதை உண்டு, உடலை நோய்க்காடாக மாற்றி இருக்கிறோம். பாரம்பரிய உணவுகளில்தான் ஆரோக்கியம் நிறைந்திருக்கிறது. அவற்றை உண்டுதான் நம் முன்னோர் உடல் வளர்த்து; உயிர் வளர்த்து இன்புற்று வாழ்ந்தனர். அப்படி, ஆரோக்கியம் காக்கும் ஆறு உணவுகள் பற்றி இங்கே பார்ப்போம்... சோளம்: சோளத்தில் புரதம்,கொழுப்புச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, தயமின், நியாசின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. வயிற்றுப்புண்ணுக்கு மிகவும் உகந்தது. சர்க்கரை நோய் , ரத்தச்சோகை உள்ளவர்களுக்கு சோ…
-
- 0 replies
- 723 views
-
-
அதீத நோய் எதிர்ப்பு சக்தியை சமநிலைப்படுத்தும் மருந்துக்கு மன அழுத்தத்தை போக்கும் சக்தி மனித உடலில், அதீதமாக செயல்படும் நோய் எதிர்ப்பு சக்தியை சமநிலைப்படுத்தும் மருந்துகளுக்கு, மன அழுத்தத்தைக் குணப்படுத்தும் சக்தி உள்ளதாக மூத்த விஞ்ஞானிகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 350 மில்லியன் மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்; அதில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் அதீத நோய் எதிர்ப்பு செயல்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி மற்றும்மூளையின் செயல்பாடுஆகியவற்றின் ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தியிருப்பது அந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான புரட்சியின் தொடக்கம் எனக் கூறுகிறார் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் கார்மன் பாரிய…
-
- 0 replies
- 266 views
-
-
முக்கிய ரத்தக்குழாய் வெடிப்பை தடுக்கும் கிரீன் டீ : ஆய்வில் தகவல் கோப்புப் படம்: ஆர்.ரகு. அடிவயிறு, இடுப்பெலும்புப் பகுதி, மற்றும் கால்களுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய ரத்தக்குழாய் வெடிக்காமல் கிரீன் டீ தடுக்கும் என்று ஜப்பான், கீயோட்டோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கிரீன் டீ-யில் உள்ள பாலிபினால் ரத்தக்குழாய் வெடிப்பை தடுப்பதாக எலிகளை வைத்து மேற்கொண்ட பரிசோதனைகளில் தெரியவந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ரத்தக்குழாய் வெடிப்பு திடீரென நிகழ்வதால் சிகிச்சைக்கு நேரமின்றி உயிரிழப்பு ஏற்படுகிறது. ஆய்வாளர்களில் ஒருவரான கென்ஜி மினகட்டா தெரிவிக்கையில், “அடிவயிறு, இடுப்பெலும்பு மற்றும் கால்களுக்கு ரத்தத்த…
-
- 0 replies
- 559 views
-
-
டிமென்ஷியா எனப்படுகின்ற மறதி நோயினால் உலகெங்கும் நான்கு கோடியே அறுபது லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்து ஐம்பதுக்குள் இந்த எண்ணிக்கை மூன்று மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
-
- 0 replies
- 290 views
-
-
ஒராண்டுக்கு முன்னால், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த என்னுடைய தந்தையைப் பார்த்தபோது, வலியாலும் வேதனையாலும் படுக்கையில் புலம்பிக்கொண்டும் புரண்டுகொண்டும் இருந்தார். அவருடைய அரற்றல் என் காதுக்கு எட்டாத தொலைவுக்கு ஓடிவிட வேண்டும் என்றே விரும்பினேன். 84 வயதான அவர் எனக்கு உற்ற நண்பர். கையிலும் உடலின் வேறு பகுதியிலும் ஊசியாலும் ரப்பர் குழாய்களாலும் செருகப்பட்டு, தாள முடியாத வேதனையில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அவரால் டாக்டர்களையோ செவிலியர்களையோ எதிர்த்து எதுவும் பேச முடியவில்லை. ரப்பர் குழாய்களைப் பிய்த்துப் போடுகிறார் என்பதற்காக ஒரு கையைக் கட்டிலோடு சேர்த்துக் கட்டி வைத்திருந்தார்கள். மருத்துவமனை என்பது நோயாளிக்கு எந்தச் சுகமும் கண்ணியமும் கூடாது என்று நினைக்கிறத…
-
- 0 replies
- 496 views
-
-
http://img.vikatan.com/news/2016/08/20/images/பற்கள் 2.jpg டூத் பேஸ்ட் விளம்பரங்களில் ஒரு பிரஷ் முழுக்க பேஸ்ட்டைப் பிதுக்கிப் பல் துலக்குவதைப் பார்த்திருப்போம். உண்மையில் அவ்வளவு பேஸ்ட்டைப் பயன்படுத்தக் கூடாது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? டூத் பேஸ்ட்டில் ஃபுளோரைடு உட்பட பல்வேறு ரசயானப் பொருட்கள் உள்ளன. எனவே, ஒரு பட்டாணி அளவு எடுத்துத் பல் துலக்கினாலே போதும்; அதற்கு மேல் சேர்ப்பதால், அளவுக்கு அதிகமான ஃபுளோரைடு உடலில் சேரும். 'அப்ப, ஃபுளோரைடு பல்லுக்கு நல்லது இல்லையா ?' என்று கேட்கலாம். எதுவும் அளவுக்கு மிஞ்சினால்தான் ஆபத்துதான்! ஃபுளோரைடு கலந்த பற்பசைகளைப் பயன்படுத்துமாறு பல் மருத்துவக் கழகங்களும், பல் மருத்துவர்களும் பொதுவாக அறிவுறுத்துகிறார்கள். நாம…
-
- 2 replies
- 451 views
-
-
மாரடைப்பு - இதய நோய் தாக்காமல் தடுக்க உலகின் மிகக் கொடிய உயிர்க் கொல்லி நோய்களில் முக்கியமானது மாரடைப்பு (Heart attack) நோய் ஆகும்! என்னங்க சற்று நேரத்திற்கு முன்தான் என்னிடம் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றோம். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு வழி யிலேயே உயிர் பிரிந்து விட்டது என்று கூறினர் என்று சொல்லி கோவென அழும் உறவினர்கள் ஏராளம்! இரவெல்லாம் எங்களிடம் நன்றாக பேசிக் கொண்டிருந்து தூங்கப் போனவர்; விடியற்காலை எழுந்து விடும் பழக்கம் உடையவர், பொழுது விடிந்தும் இவ்வளவு நேரமா தூங்குகிறார் என்று எழுப்பப் போனால், எழும்பவில்லை; தூங்கும் போதே சில மணி நேரங்கள் முன்பே அவர் இறந்து விட்டார் என்…
-
- 1 reply
- 1.1k views
-
-
உங்களை உறைய வைக்கும்... 20 "எக்ஸ்ரே" படங்கள்.
-
- 0 replies
- 340 views
-
-
பக்கவாதத்தை குணப்படுத்தும் ஆராய்ச்சியில் முக்கிய வெற்றி கோப்புப்படம் முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயத்தால் நீண்ட காலமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எட்டு பேரின் நடமாட்டம் மற்றும் உணர்வுகளை மீட்டெடுக்கும் ஆராய்ச்சியில் பாதியளவு வெற்றியடைந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இது அறிவியல் ஆய்வில் மிக முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. செயற்கை உறுப்புக்களை இயக்க மூளைக்குப் பயிற்சி அளிப்பதற்காக, மெய்நிகர் மற்றும் உணர்வூட்டும் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி அந்த நோயாளிகளுக்கு ஓராண்டாக அளிக்கப்பட்டது. பிரேசில் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், அந்த நோயாளிகளிடம் ஆச்சரியப்படும் வகையில் சில மாற்றங்களைக் கண்டனர். செயற்கை உறுப்புக்களைக் க…
-
- 0 replies
- 278 views
-
-
40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்களின் உயிரணுக்களை அழிக்கிறது. ஆண்மையை அழிக்கும் பிராய்லர் குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி. “பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்”. …
-
- 2 replies
- 493 views
-
-
Image copyrightGETTY ஆஸ்துமாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயது வந்தவர்களுக்கு உதவும் வகையில் பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் சோதனை அடிப்படையில் ஒரு மாத்திரையை கண்டுபிடித்துள்ளனர். கட்டுப்படுத்த முடியாத ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்ட பிறகு அவர்களின் அறிகுறிகள் மேம்பட்டிருப்பது உணரப்பட்டதாக லெஸ்டர் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட சிறிய சோதனை முயற்சியில் தெரிய வந்துள்ளது. லான்செட் சுவாச மருத்துவதிற்கான இதழ் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளன. ஆஸ்துமா யு.கே என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர் சமந்தா வாக்கர் கூறுகையில், இந்த ஆராய்ச்சியை எச்சரிக்கையுடன் கூடிய நேர்மறை சிந்தனையுடன் பார்க்கப்பட வேண்டும். ஆனால், இது மருந்துக் கடைகளில் …
-
- 1 reply
- 280 views
-
-
தாய்ப்பால் அதிகமா கொடுத்தா அழகு குறைஞ்சிடுமாமே’ என்னும் தவறான செய்திகள் இப்போது பெரும்பாலும் நம்பப்படுவதில்லை. நேர்மாறாக, தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உற்சாகமாக இருப்பதுடன், மார்பகப் புற்றுநோய் வராது என்னும் செய்தி பல அம்மாக்களை எட்டியிருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் தொடர்ந்து ஒரு வருடத்துக்குக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துவந்தால், மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்கிறது இன்றைய ஆராய்ச்சி. ஒளவையாரின் வாக்கு `பீரம் பேணி பாரம் தாங்கும்’ எனும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் பாடல் (12-ம் நூற்றாண்டு), தாய்ப்பாலை நன்றாகக் குடித்து வளர்ந்த குழந்தைகள், பிற்காலத்தில் பெரும் பாரத்தைத் தாங்கும் அளவுக்கு உறுதிபெறுவார்கள் என்பதை உணர்த்து…
-
- 9 replies
- 7.4k views
-
-
இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவலாக அனைவராலும் விரும்பி பருகப்படும் குளிர்பானமாக உள்ள கோக்க கோலாவை குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? முதல் பத்து நிமிடம்: நமது இரத்த மண்டலத்தில் பத்து தேக்கரண்டி அளவிலான சர்க்கரை ஒரே நேரத்தில் பாய்கிறது. (இது ஒருநாள் முழுவதும் ஒரு மனிதர் உட்கொள்ளக் கூடிய அதிகபட்ச சர்க்கரையின் அளவாகும்) இதன்விளைவாக, உங்களுக்கு வாந்தி வரக்கூடும். ஆனால், கோக்க கோலாவில் உள்ள ‘பாஸ்பரிக் ஆஸிட்’ இந்த குமட்டல் அறிகுறியை அடக்கி விடுகிறது. இருபதாவது நிமிடம்: உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு தாறுமாறாக கூடுகிறது. இதன் விள…
-
- 0 replies
- 572 views
-
-
ஆர்கானிக் உணவுகளை கண்டுபிடிப்பது எப்படி? தெருவுக்கு தெரு ஆர்கானிக் கடைகள், ஆனால் அது உண்மையில் ஆர்கானிக் கடைதானா என்பதில் பலருக்கும் சந்தேகம். விலையும் அதிகமாக இருக்கிறது. அதற்கு மார்கெட்டிலேயே வாங்கி விடலாம், என்றே பலரது முடிவும் இருக்கிறது. அதிக விலை கொடுத்து வாங்குபவர்களுக்கும் ஆர்கானிக் உணவுகளை வாங்குவதில், பல சந்தேகங்கள் இருக்கின்றன. ஆர்கானிக் பொருட்களை எப்படி வாங்கலாம்? இதோ, அதற்கான டிப்ஸ்... *இயற்கையான முறையில் வளர்ந்தது என்றால், அனைத்து காயோ, கனியோ ஒரே மாதிரி, ஒரே அளவில் இருக்காது. நிறம், வடிவம், அமைப்பு போன்றவை மாறி இருக்கத்தான் செய்யும். இதை வைத்து ஆர்கானிக் என்று கண்டுபிடிக்கலாம். பருப்புகள் கூட ஒரே நிறத்தில் இல்லாமல், ஒரு …
-
- 0 replies
- 293 views
-
-
சிறுநீர் தொற்றிற்கு தீர்வு காண நம் வீட்டு சமையலறையிலேயே போதிய மருத்துவ குணங்கள் நிரம்பிய பொருட்கள் உள்ளன. சிறு நீர் கழிக்கும்போது, அசௌகரியம் ஏற்படுகிறதா? எரிச்சல், கடுப்பு, அல்லது சிறு நீர் வெளி வெளிவராமல் இருந்தால், சிறு நீர்ப்பதையிலோ, சிறு நீர்ப்பையிலோ பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கும். இதற்கு டிஸ்யூரியா என்று பெயர். வெஜைனாவில் தொற்று ஏற்பட்டிருந்தால், சுத்தமில்லாமல் பராமரிக்கப்பட்டால், அல்லது நீர் சத்து குறைந்து போனாலோ, இது போல் பிரச்சனைகள் ஏற்படும். இந்த சிறு நீர் தொற்றிற்கு வீட்டிலேயே தீர்வு காணலாம். மோர் : புரோபயாடிக் என்று சொல்லக் கூடிய உணவுகளெல்லாம் உடலுக்கு தேவையான …
-
- 3 replies
- 5.3k views
- 1 follower
-
-
மூளை வளர்ச்சிக்கு உதவும் கிவி பழம் மூளை வளர்ச்சிக்கு உதவும் கிவி பழம் Posted By: online3@uthayan.comPosted date: July 28, 2016in: மருத்துவம் கிவி பழம் என்பது தோல் பிறவுன் நிறத்திலும், உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும். இந்த பழத்தில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் உள்ளது. கிவி பழத்தில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது. வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும், இதில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் மற்ற கனிகளை விட மிகவும் அதிகமான அளவில் உள்…
-
- 0 replies
- 375 views
-
-
நோயை விரட்டும் நாவல்பழம் நோயை விரட்டும் நாவல்பழம் Posted By: online3@uthayan.comPosted date: July 28, 2016in: Uncategorized இயற்கை, ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டில் வசிக்கும் மக்களுக்கு ஏற்றவாறும் தட்பவெப்ப நிலைக்குத் தகுந்தவாறும் தன் படைப்புகளை அளித்து வருகிறது. அந்தவகையில், அந்தந்த நேரங்களில் கிடைக்கும் உணவுகளை உட்கொள்ளும்போது மனிதனின் ஆரோக்கியம் பாதுகாப்பாகவே இருக்கும் என்பதே உண்மை. இது பழ வகைகளுக்கும் பொருந்தும். அப்படி கிடைக்கும் பழங்களை அந்தந்த காலங்களில் தவறாமல் சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்கள் குறிப்பாக வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள் அடுத்த சீசன் வரை உடலுக்குப் …
-
- 0 replies
- 429 views
-
-
பாரம்பரிய உணவு, இயற்கையாக விளைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை கொடிய நோய்களுக்கு உலகில் பெரிய வேலையில்லாமல் இருந்தது. துரித உணவு, ரெடிமேட் உணவு, சத்தற்ற சக்கை உணவு உலகை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பிறகு நோய்கள் கட்டுப்பாடில்லாமல் வளர ஆரம்பித்தன. இன்று எந்த வித்தியாசமும் இன்றி யாருக்கு வேண்டுமானாலும் புற்றுநோய் வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் மாறிவிட்ட உணவுப் பழக்கம்தான். உலகச் சுகாதார நிறுவனத்தின் ஒரு அங்கமாகச் செயல்பட்டுவரும் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி முகமையும் (ஐ.ஏ.ஆர்.சி.) இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. மனிதர்களுக்குப் புற்றுநோயை உண்டாக்கும் உணவுப் பொருட்களின் பட்டியலை அந்த அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறது. அந்த உணவு வகைகள் என்னென…
-
- 1 reply
- 540 views
-