Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. முக்கிய ரத்தக்குழாய் வெடிப்பை தடுக்கும் கிரீன் டீ : ஆய்வில் தகவல் கோப்புப் படம்: ஆர்.ரகு. அடிவயிறு, இடுப்பெலும்புப் பகுதி, மற்றும் கால்களுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய ரத்தக்குழாய் வெடிக்காமல் கிரீன் டீ தடுக்கும் என்று ஜப்பான், கீயோட்டோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கிரீன் டீ-யில் உள்ள பாலிபினால் ரத்தக்குழாய் வெடிப்பை தடுப்பதாக எலிகளை வைத்து மேற்கொண்ட பரிசோதனைகளில் தெரியவந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ரத்தக்குழாய் வெடிப்பு திடீரென நிகழ்வதால் சிகிச்சைக்கு நேரமின்றி உயிரிழப்பு ஏற்படுகிறது. ஆய்வாளர்களில் ஒருவரான கென்ஜி மினகட்டா தெரிவிக்கையில், “அடிவயிறு, இடுப்பெலும்பு மற்றும் கால்களுக்கு ரத்தத்த…

  2. டிமென்ஷியா எனப்படுகின்ற மறதி நோயினால் உலகெங்கும் நான்கு கோடியே அறுபது லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்து ஐம்பதுக்குள் இந்த எண்ணிக்கை மூன்று மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

  3. ஒராண்டுக்கு முன்னால், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த என்னுடைய தந்தையைப் பார்த்தபோது, வலியாலும் வேதனையாலும் படுக்கையில் புலம்பிக்கொண்டும் புரண்டுகொண்டும் இருந்தார். அவருடைய அரற்றல் என் காதுக்கு எட்டாத தொலைவுக்கு ஓடிவிட வேண்டும் என்றே விரும்பினேன். 84 வயதான அவர் எனக்கு உற்ற நண்பர். கையிலும் உடலின் வேறு பகுதியிலும் ஊசியாலும் ரப்பர் குழாய்களாலும் செருகப்பட்டு, தாள முடியாத வேதனையில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அவரால் டாக்டர்களையோ செவிலியர்களையோ எதிர்த்து எதுவும் பேச முடியவில்லை. ரப்பர் குழாய்களைப் பிய்த்துப் போடுகிறார் என்பதற்காக ஒரு கையைக் கட்டிலோடு சேர்த்துக் கட்டி வைத்திருந்தார்கள். மருத்துவமனை என்பது நோயாளிக்கு எந்தச் சுகமும் கண்ணியமும் கூடாது என்று நினைக்கிறத…

    • 0 replies
    • 507 views
  4. http://img.vikatan.com/news/2016/08/20/images/பற்கள் 2.jpg டூத் பேஸ்ட் விளம்பரங்களில் ஒரு பிரஷ் முழுக்க பேஸ்ட்டைப் பிதுக்கிப் பல் துலக்குவதைப் பார்த்திருப்போம். உண்மையில் அவ்வளவு பேஸ்ட்டைப் பயன்படுத்தக் கூடாது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? டூத் பேஸ்ட்டில் ஃபுளோரைடு உட்பட பல்வேறு ரசயானப் பொருட்கள் உள்ளன. எனவே, ஒரு பட்டாணி அளவு எடுத்துத் பல் துலக்கினாலே போதும்; அதற்கு மேல் சேர்ப்பதால், அளவுக்கு அதிகமான ஃபுளோரைடு உடலில் சேரும். 'அப்ப, ஃபுளோரைடு பல்லுக்கு நல்லது இல்லையா ?' என்று கேட்கலாம். எதுவும் அளவுக்கு மிஞ்சினால்தான் ஆபத்துதான்! ஃபுளோரைடு கலந்த பற்பசைகளைப் பயன்படுத்துமாறு பல் மருத்துவக் கழகங்களும், பல் மருத்துவர்களும் பொதுவாக அறிவுறுத்துகிறார்கள். நாம…

  5. மாரடைப்பு - இதய நோய் தாக்காமல் தடுக்க உலகின் மிகக் கொடிய உயிர்க் கொல்லி நோய்களில் முக்கியமானது மாரடைப்பு (Heart attack) நோய் ஆகும்! என்னங்க சற்று நேரத்திற்கு முன்தான் என்னிடம் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றோம். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு வழி யிலேயே உயிர் பிரிந்து விட்டது என்று கூறினர் என்று சொல்லி கோவென அழும் உறவினர்கள் ஏராளம்! இரவெல்லாம் எங்களிடம் நன்றாக பேசிக் கொண்டிருந்து தூங்கப் போனவர்; விடியற்காலை எழுந்து விடும் பழக்கம் உடையவர், பொழுது விடிந்தும் இவ்வளவு நேரமா தூங்குகிறார் என்று எழுப்பப் போனால், எழும்பவில்லை; தூங்கும் போதே சில மணி நேரங்கள் முன்பே அவர் இறந்து விட்டார் என்…

  6. உங்களை உறைய வைக்கும்... 20 "எக்ஸ்ரே" படங்கள்.

  7. பக்கவாதத்தை குணப்படுத்தும் ஆராய்ச்சியில் முக்கிய வெற்றி கோப்புப்படம் முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயத்தால் நீண்ட காலமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எட்டு பேரின் நடமாட்டம் மற்றும் உணர்வுகளை மீட்டெடுக்கும் ஆராய்ச்சியில் பாதியளவு வெற்றியடைந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இது அறிவியல் ஆய்வில் மிக முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. செயற்கை உறுப்புக்களை இயக்க மூளைக்குப் பயிற்சி அளிப்பதற்காக, மெய்நிகர் மற்றும் உணர்வூட்டும் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி அந்த நோயாளிகளுக்கு ஓராண்டாக அளிக்கப்பட்டது. பிரேசில் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், அந்த நோயாளிகளிடம் ஆச்சரியப்படும் வகையில் சில மாற்றங்களைக் கண்டனர். செயற்கை உறுப்புக்களைக் க…

  8. 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்களின் உயிரணுக்களை அழிக்கிறது. ஆண்மையை அழிக்கும் பிராய்லர் குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி. “பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்”. …

  9. Image copyrightGETTY ஆஸ்துமாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயது வந்தவர்களுக்கு உதவும் வகையில் பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் சோதனை அடிப்படையில் ஒரு மாத்திரையை கண்டுபிடித்துள்ளனர். கட்டுப்படுத்த முடியாத ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்ட பிறகு அவர்களின் அறிகுறிகள் மேம்பட்டிருப்பது உணரப்பட்டதாக லெஸ்டர் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட சிறிய சோதனை முயற்சியில் தெரிய வந்துள்ளது. லான்செட் சுவாச மருத்துவதிற்கான இதழ் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளன. ஆஸ்துமா யு.கே என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர் சமந்தா வாக்கர் கூறுகையில், இந்த ஆராய்ச்சியை எச்சரிக்கையுடன் கூடிய நேர்மறை சிந்தனையுடன் பார்க்கப்பட வேண்டும். ஆனால், இது மருந்துக் கடைகளில் …

  10. தாய்ப்பால் அதிகமா கொடுத்தா அழகு குறைஞ்சிடுமாமே’ என்னும் தவறான செய்திகள் இப்போது பெரும்பாலும் நம்பப்படுவதில்லை. நேர்மாறாக, தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உற்சாகமாக இருப்பதுடன், மார்பகப் புற்றுநோய் வராது என்னும் செய்தி பல அம்மாக்களை எட்டியிருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் தொடர்ந்து ஒரு வருடத்துக்குக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துவந்தால், மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்கிறது இன்றைய ஆராய்ச்சி. ஒளவையாரின் வாக்கு `பீரம் பேணி பாரம் தாங்கும்’ எனும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் பாடல் (12-ம் நூற்றாண்டு), தாய்ப்பாலை நன்றாகக் குடித்து வளர்ந்த குழந்தைகள், பிற்காலத்தில் பெரும் பாரத்தைத் தாங்கும் அளவுக்கு உறுதிபெறுவார்கள் என்பதை உணர்த்து…

  11. இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவலாக அனைவராலும் விரும்பி பருகப்படும் குளிர்பானமாக உள்ள கோக்க கோலாவை குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? முதல் பத்து நிமிடம்: நமது இரத்த மண்டலத்தில் பத்து தேக்கரண்டி அளவிலான சர்க்கரை ஒரே நேரத்தில் பாய்கிறது. (இது ஒருநாள் முழுவதும் ஒரு மனிதர் உட்கொள்ளக் கூடிய அதிகபட்ச சர்க்கரையின் அளவாகும்) இதன்விளைவாக, உங்களுக்கு வாந்தி வரக்கூடும். ஆனால், கோக்க கோலாவில் உள்ள ‘பாஸ்பரிக் ஆஸிட்’ இந்த குமட்டல் அறிகுறியை அடக்கி விடுகிறது. இருபதாவது நிமிடம்: உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு தாறுமாறாக கூடுகிறது. இதன் விள…

  12. ஆர்கானிக் உணவுகளை கண்டுபிடிப்பது எப்படி? தெருவுக்கு தெரு ஆர்கானிக் கடைகள், ஆனால் அது உண்மையில் ஆர்கானிக் கடைதானா என்பதில் பலருக்கும் சந்தேகம். விலையும் அதிகமாக இருக்கிறது. அதற்கு மார்கெட்டிலேயே வாங்கி விடலாம், என்றே பலரது முடிவும் இருக்கிறது. அதிக விலை கொடுத்து வாங்குபவர்களுக்கும் ஆர்கானிக் உணவுகளை வாங்குவதில், பல சந்தேகங்கள் இருக்கின்றன. ஆர்கானிக் பொருட்களை எப்படி வாங்கலாம்? இதோ, அதற்கான டிப்ஸ்... *இயற்கையான முறையில் வளர்ந்தது என்றால், அனைத்து காயோ, கனியோ ஒரே மாதிரி, ஒரே அளவில் இருக்காது. நிறம், வடிவம், அமைப்பு போன்றவை மாறி இருக்கத்தான் செய்யும். இதை வைத்து ஆர்கானிக் என்று கண்டுபிடிக்கலாம். பருப்புகள் கூட ஒரே நிறத்தில் இல்லாமல், ஒரு …

  13. சிறுநீர் தொற்றிற்கு தீர்வு காண நம் வீட்டு சமையலறையிலேயே போதிய மருத்துவ குணங்கள் நிரம்பிய பொருட்கள் உள்ளன. சிறு நீர் கழிக்கும்போது, அசௌகரியம் ஏற்படுகிறதா? எரிச்சல், கடுப்பு, அல்லது சிறு நீர் வெளி வெளிவராமல் இருந்தால், சிறு நீர்ப்பதையிலோ, சிறு நீர்ப்பையிலோ பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கும். இதற்கு டிஸ்யூரியா என்று பெயர். வெஜைனாவில் தொற்று ஏற்பட்டிருந்தால், சுத்தமில்லாமல் பராமரிக்கப்பட்டால், அல்லது நீர் சத்து குறைந்து போனாலோ, இது போல் பிரச்சனைகள் ஏற்படும். இந்த சிறு நீர் தொற்றிற்கு வீட்டிலேயே தீர்வு காணலாம். மோர் : புரோபயாடிக் என்று சொல்லக் கூடிய உணவுகளெல்லாம் உடலுக்கு தேவையான …

  14. மூளை வளர்ச்சிக்கு உதவும் கிவி பழம் மூளை வளர்ச்சிக்கு உதவும் கிவி பழம் Posted By: online3@uthayan.comPosted date: July 28, 2016in: மருத்துவம் கிவி பழம் என்பது தோல் பிறவுன் நிறத்திலும், உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும். இந்த பழத்தில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் உள்ளது. கிவி பழத்தில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது. வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும், இதில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் மற்ற கனிகளை விட மிகவும் அதிகமான அளவில் உள்…

    • 0 replies
    • 381 views
  15. நோயை விரட்டும் நாவல்பழம் நோயை விரட்டும் நாவல்பழம் Posted By: online3@uthayan.comPosted date: July 28, 2016in: Uncategorized இயற்கை, ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டில் வசிக்கும் மக்களுக்கு ஏற்றவாறும் தட்பவெப்ப நிலைக்குத் தகுந்தவாறும் தன் படைப்புகளை அளித்து வருகிறது. அந்தவகையில், அந்தந்த நேரங்களில் கிடைக்கும் உணவுகளை உட்கொள்ளும்போது மனிதனின் ஆரோக்கியம் பாதுகாப்பாகவே இருக்கும் என்பதே உண்மை. இது பழ வகைகளுக்கும் பொருந்தும். அப்படி கிடைக்கும் பழங்களை அந்தந்த காலங்களில் தவறாமல் சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்கள் குறிப்பாக வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள் அடுத்த சீசன் வரை உடலுக்குப் …

    • 0 replies
    • 437 views
  16. பாரம்பரிய உணவு, இயற்கையாக விளைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை கொடிய நோய்களுக்கு உலகில் பெரிய வேலையில்லாமல் இருந்தது. துரித உணவு, ரெடிமேட் உணவு, சத்தற்ற சக்கை உணவு உலகை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பிறகு நோய்கள் கட்டுப்பாடில்லாமல் வளர ஆரம்பித்தன. இன்று எந்த வித்தியாசமும் இன்றி யாருக்கு வேண்டுமானாலும் புற்றுநோய் வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் மாறிவிட்ட உணவுப் பழக்கம்தான். உலகச் சுகாதார நிறுவனத்தின் ஒரு அங்கமாகச் செயல்பட்டுவரும் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி முகமையும் (ஐ.ஏ.ஆர்.சி.) இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. மனிதர்களுக்குப் புற்றுநோயை உண்டாக்கும் உணவுப் பொருட்களின் பட்டியலை அந்த அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறது. அந்த உணவு வகைகள் என்னென…

  17. உதட்டு கருமையை போக்க சூப்பர் டிப்ஸ்....! July 29, 2016 சிலர் அடிக்கடி லிப்ஸ்டிக் போடுவதால் அவர்களுடை உதடு கருமையாக காட்சியளிக்கும். அதனை போக்க எந்த விதமான கொமிக்கல் கலந்த பொருட்களையும் உபயோகிக்காமல் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உதட்டினை பாதுகாக்கலாம். வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எப்படி உதட்டு கருமையை போக்கலாம் என்று பார்க்கலாம். * சிறிது தேனை எடுத்து, உதடுகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். லிப் பாமிற்கு பதிலாக தேனை உபயோகித்தால் நாளடைவில் வசீகரமான உதடுகள் கிடைக்கும். கருமையுன் வறட்சியும் மறைந்துவிடும். தினமும் இதை செய்து வந்தால் விரைவில் நல்ல பல…

  18. நோய் இருப்பதை அறியாமலே குணப்படுத்துவது எப்படி? ஹெபடிட்டிஸ் - சி என்றழைக்கப்படும் கல்லீரல் அழற்சியானது, பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் உலகளாவிய சுகாதார பிரச்சினையாகவும், உலகம் முழுவதும் அதிகரிக்கும் இறப்புகளுக்குக் காரணமாகவும் உள்ளது. ஆனால், இந்த நோய் பீடித்தவர்கள், தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதையே அறிந்திருப்பதில்லை. இதன் காரணமாக, சோதனை என்பது அவசியமாகிறது. இந்தியா, நெதர்லாந்து, மங்கோலியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மேற்கொண்டு வரும் திட்டங்கள் விழிப்புணர்வை அதிகரிப்பதால் பாராட்டுப் பெற்று வருகின்றன. மருத்துவ வல்லுநர்கள் ஹெபடிட்டிஸ்-சி-யை அமைதி தொற்றுநோய் என்று அழைக்கிறார்கள். காரணம், இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில், 95 சதம் நோயாளிக…

  19. Started by nunavilan,

    ஆரோக்கியப் பெட்டகம்: பீட்ரூட் பீட்ரூட்டின் நிறம், மணம், குணம் என எல்லாமே அதை ருசிக்கத் தூண்டுபவை. செக்கச் சிவந்த அதன் நிறத்தைப் பார்த்து, ‘பீட்ரூட் சாப்பிட்டா ரத்தம் ஊறும்’ என்கிற அளவுக்கு மட்டுமே தெரிந்து வைத்திருப்போருக்கு பீட்ரூட்டின் அறியப்படாத பக்கங்களையும் காட்டி, சாப்பிட வைக்கும் இங்கே பகிரப்பட்டிருக்கும் தகவல்கள்! ‘‘பீட்ரூட் ஆசியா, வட ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் இயற்கையாக வளர்ந்து வரும் பண்டைய காயாகும். அந்த காலத்தில் பீட்ரூட்டின் கீரையை மட்டுமே சாப்பிடுவார்கள். பீட்ரூட் பல முறைகளில் சமைத்து உண்ணப்படுகிறது. அதை ஜூஸ் ஆக செய்தால் அதில் தானாக இனிப்பான சுவை வரும். அந்த ஜூஸில் சில மூலிகைகளைச் சேர்த்தும் பருகலாம். பீட்ரூட் பல க…

  20. தாவர உணவுகளில் மிகவும் ருசியான சோயா பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒர் உணவாகும். சோயா பீன் (Bean) (சோயா அவரை) மிக அதிக புரதச் சத்து நிறைந்த தானியமாகும். உணவுகளில் உள்ள புரதத்தின் அளவுகள் ( 100g இற்கு கணக்கிடப்பட்டுள்ளது. உணவு வகை புரதத்தின் அளவு (கிராம் இல்) அரிசி 6.4 சோயா பீன 43.2 கௌபி 24.1 பயறு 24.0 உழுந்து 24.0 மிகையான புரதச் சத்தும், விற்றமின்களும் உள்ளடங்கியிருப்பதனால் சோயா பீன், வளரும் பிள்ளைகளுக்கு ஒரு நிறை ஆகாரமாகும். அது மட்டுமல்லாமல் அது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சத்தியையும் கொடுக்கின்றது. பால் ஒவ்வாமை நோய் உள்ள குழந்தைகளுக்கு…

  21. மது குடிப்பதற்கும் ஏழு வகையான புற்றுநோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.உடல்கூறியல் ரீதியான காரணங்கள் தெளிவாக இல்லாவிட்டாலும், `அடிக்ஷன்' என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியான ஆராய்ச்சி முடிவுகளின்படி, மதுகுடிப்பதற்கும் புற்றநோய் ஏற்படுவதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.மது குடிப்பதால், வாய், தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல், சிறுகுடல் மற்றும் மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் தலைமை மருத்துவ அதிகாரி கடந்த ஜனவரி மாதம் இதுகுறித்து கூறுகையில், எந்த அளவு மது குடித்தாலும், அது தொடர் பழக்கமாக இருக்கும் நிலையில், ஆபத்தில்லா…

  22. இணையத்தளத்துக்கு அடிமையாதல் என்பது, ஒருவித மனநோயாகும் என்று கராப்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் மனநல மருத்துவ ஆலோசகர் டாக்டர் ரமணி ரட்ணவீர, தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், 'தற்போதுள்ள நவீன தொழில்நுட்பமானது, கல்வியுடன் ஒன்றிணைந்த ஒரு சாதனமாகும். ஆனால், அவ்வாறான இணைய மற்றும் தொழில்நுட்பத்துக்கு அடிமையாதல் என்பது, ஒரு நபருடைய மனநலத்தை பாதிக்கும்' என்றார். 'தற்போதுள்ள மாணவர்கள், பரீட்சைக்குத் தயாராகும் போது, மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். அவர்களை ஒரு நல்ல சூழ்நிலையில் தயார்படுத்துவது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும். இதன் மூலம், அவர்களால் இலகுவாக சாதனை படைக்க முடியும். கல்விக்கு இணையம் தேவை என்…

  23. கணினியின் முன் அமர்வது எப்படி? தொழில்புரியும் இடங்களில் உடல் உபாதைகள் ஏற்படுவது வழமையானதே. குறிப்பாக நாம் இன்று கணினி யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். எமது வேலையை கணினி இலகுவாக்கினாலும் தொடர்ச்சியான வேலைகளால் நாம் பல இன்னல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. கண்பார்வை குறைபாடு, உடல் நோ, கூன் விழுதல், கழுத்து, முதுகு வலி என பல நோய்கள் எம்மை இலகுவில் தொற்றிக்கொள்கின்றன. இவற்றிலிருந்து ஓரளவேனும் விடுபட வேண்டுமெனில் நாம் சில உடல் ஆரோக்கிய முறைகளை பின்பற்றுவது முக்கியம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எமது அன்றாட தொழில் நடவடிக்கைக்காக கணினியை பயன்படுத்தும் நாம், அலுவலகத்தில் வசதியாக, பாதுகாப்பாக, உற்சாகமாக இருக்கும் வழிகாட்டல் முறைகளை பின்…

  24. எதற்கும் கட்டுப்படாமல் உங்களின் தலைக்கு உள்ளே தொடர்ந்து வரும் இந்த ஒற்றைத் தலைவலியை விரட்ட நம்முடைய பாரம்பரிய பாட்டி வைத்தியம் இருக்கும் பொழுது கவலை எதற்கு. உடலையும் உள்ளத்தையும் உருக்குலைக்கும் ஒற்றைத் தலைவலி – மைக்ரோன் தலைவலி (Migraine) என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்யாகும். குறிப்பிடத்தக்க ஒற்றைத் தலைவலியானது, தலையின் ஒருபக்கமாக ஏற்படும், துடிப்புடைய (pulsating), 4 தொடக்கம் 72 மணித்தியாலங்களுக்கு நீடித்திருக்கக் கூடிய கடுமையான தலைவலியால் அடையாளம் காணப்படுகின்றது. இந்த ஒற்றைத் தலைவலியை தூண்டி விடும் காரணிகளை கண்டறிந்து தடுப்பது என்பத…

  25. பூண்டுத் தாவரங்கள் பல மிகப் பழைய காலத்திலிருந்தே சமையலில் பயன்பட்டு வருகின்றன. பல பூண்டுகளின் தண்டு, இலை, வேர், கிழங்கு முதலிய உறுப்புகள் ஊட்டச்சத்துகள் கொண்ட உணவாக அமையும் அதே வேளை, வேறு சில பூண்டுகளின் உறுப்புக்கள் உணவில் வாசனைப் பொருட்களாகப் பயன்படுகின்றன. பூண்டுகளின் பகுதிகள் மருத்துவக் குணம் கொண்டவை. இதனால் பல மருத்துவ முறைகளில் இப்பூண்டுகள் நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகின்றன. பூண்டுத் தாவரங்களிற் பல அழகிய பூக்களையோ, இலைகளையோ அல்லது தோற்றத்தையோ கொண்டிருப்பதனால், அவை அலங்காரத் தாவரங்களாகவும் பயன்படுகின்றன. பூண்டுகளின் பகுதிகள் மருத்துவக் குணம் கொண்டவை. இதனால் பல மருத்துவ முறைகளில் இப்பூண்டுகள் நோய்களைத் தீர்க்கும் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.