Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. மாதவிடாய் நின்ற பிறகும் பெண்கள் கலவி இன்பத்தை பெறுவது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES 11 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் உடலுறவு கொள்வதில் குறைவான ஆசை, பெண்ணுறுப்பில் வறட்சி மற்றும் தீவிர மனநிலை மாற்றங்கள்... இவை மாதவிடாய் நிறுத்தத்தின்போது (மெனோபாஸ்) பெண்கள் அதிகம் அனுபவிக்கும் சில அறிகுறிகள். பலருக்கு, இந்த மாற்றங்கள் மாதவிடாய் இறுதியாக நிற்பதற்கு பத்து ஆண்டுகள் முன்பிருந்தே தொடங்கலாம். இந்தக் காலகட்டம் பெரிமெனோபாஸ் என்று அழைக்கப்படுகின்றது. கனடாவில் உள்ள வான்கூவரில் தனது 40களில் இருக்கும் சூசன் வசித்து வருகிறார். அவர் தற்போது பெரிமெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கிறார். "இந்த நேரத்தில் உடலுறவு கொள்வதென்பது வலி மிகுந்ததாகிவிட்டது. உடலுறவு கொள்ள …

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சோஃபியா பெட்டிஸா பதவி, பிபிசி உலக சேவை 3 மணி நேரங்களுக்கு முன்னர் திரவ தங்கம் என்று அழைக்கப்படும் தாய்ப்பாலை நிபுணர்கள், மாய சக்தியின் பிறப்பிடம் என்றும் கூறுகின்றனர். தாய்ப்பாலில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு அம்சங்கள் குழந்தைகளுக்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது என்பதை அறிவியலாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் பெரியவர்கள் தாய்ப்பலை, அதில் உள்ள ஊட்டச்சத்துகளுக்காக சேமித்து வைத்து பயன்படுத்துகின்றனர். மூன்று குழந்தைகளுக்கு அப்பாவான ஜேம்சன் ரைடெனூர் அவருடைய 39 வயதில் முதன்முறையாக தாய்ப்பாலை அருந்தினார். அவருடைய துணைவி மெலிசா குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்துவந்தார். அதிகமாக சுரக்கும் தாய்ப்ப…

  3. எச்.ஹுஸ்னா நாட்டில் 2024 ஆம் ஆண்டு டெங்கு நோயினால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன், 24 உயிரிழப்புகளும் பதிவான நிலையில் இந்த ஆண்டின் 3 மாத நிறைவில் மட்டும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறான சூழலில் டெங்கு நோயினால் மக்களும் டெங்கு நோயாளர்களினால் வைத்தியசாலைகளும் திண்டாடிவரும் நிலையில், டெங்குவின் குடும்பத்தை சேர்ந்த சிக்குன் குனியாவும் தற்போது ஜோடி சேர்ந்து மக்களை மிரட்டத் தொடங்கியுள்ளது. இலங்கையில் நுளம்புகளால் பரவும் வைரஸ் நோயான சிக்குன்குனியா (Chikungunya) வேகமாகப் பரவி வருவதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். எனவே இலங்கை முழுவதும் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவத…

  4. நீங்கள் கொழுப்பைச் சுமப்பவரா? மார்ச் 16, 2025 -கு.கணேசன் சிகரெட், பீடி, மது… இவற்றுக்கு மட்டும்தான் இதயத்தோடு தொடர்பு இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். நம் உடல் எடைக்கும் இதயத்துக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. பெற்றோரிடம் பொதுவான ஒரு குணம் உண்டு. குழந்தைகள் ஒல்லியாக இருந்தால், “Tonic எழுதிக் கொடுங்க, டொக்டர். சீக்கிரம் உடம்பு வைக்கணும்” என்று டொக்டர்களிடம் ஓடிவருவார்கள். “நோய் எதுவும் இல்லாமல் குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் போதும்; குண்டாக இருக்க வேண்டும் என்பதில்லை” என்று டொக்டர்கள் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஊடக விளம்பரங்களில் வரும் குழந்தைகளைப் போன்று தங்கள் குழந்தைகளும் குண்டு குண்டாக இருந்தால்தான் அழகு, ஆரோக்கியம்! அதே பெற்றோர், குழந்தை பருவ…

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அமண்டா ருகேரி பதவி, பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இரவு தூக்கத்திற்குப் பிறகு சுறுசுறுப்பாக உணர்வதற்கான ரகசியம், உங்களது பகல் நேரப் பழக்க வழக்கங்களில் இருந்து தொடங்குகிறது. உங்கள் தூக்கத்தை மேம்படுத்தவும், சோர்வைக் குறைக்கவும் சில குறிப்புகள் இங்கே அளிக்கப்பட்டுள்ளன. சோர்வாக உணர்கிறீர்களா? நீங்கள் மட்டுமே அவ்வாறு உணர்வதில்லை. அதோடு, உங்களது தூக்கப் பழக்கத்தை எப்படி மாற்றுவது என்பது குறித்தும் நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கலாம். இதுகுறித்து அடிக்கடி நமக்குச் சொல்லப்படும் உத்திகள் பெரும்பாலும், இரவுநேரப் பழக்கங்களைக் குறித்தானதாகவே இருக்கும். அதாவது வழக்கமாக உறங்கும் நேரம், படுக்கையில் கைப்பேசியை உபயோகப்படுத்தாமல…

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், வெரோனிக் கிரீன்வுட் பதவி, 2 மணி நேரங்களுக்கு முன்னர் இறைச்சி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, மீண்டும் சாப்பிட தொடங்கும் போது உடலில் சில மோசமான விளைவுகளை சந்தித்ததாக சிலர் தெரிவித்தனர். இறைச்சியை செரிமானம் செய்வது எப்படி என்பதை உங்கள் உடல் மறந்துவிடுமா? வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் கார்பனின் அளவை குறைப்பதற்கு உட்கொள்ளும் இறைச்சியை குறைத்துக்கொள்வது ஒரு எளிமையான வழி. பிரிட்டனில் உள்ள அனைவரும் நாளொன்றுக்கு 50 கிராமுக்கு குறைவான இறைச்சியை உட்கொள்ளும் உணவுமுறைக்கு மாறினால், 8 மில்லியன் கார்கள் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கும்போது சேமிக்கப்படும் அதே அளவிலான கார்பன் வெளியீட்டை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்ற…

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் எச்சரிக்கை: இந்தச் செய்தியில் தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன. நாய்க் கடியால் ரேபிஸ் நோய் தாக்கி முற்றிய நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த வட மாநிலத் தொழிலாளி ஒருவர், நோயின் வேதனை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பு, அவருடைய செயல்பாடுகள் குறித்த வீடியோ, வைரலாக பரவியுள்ள நிலையில், ரேபிஸ் முற்றிய நோயாளிகள் குறித்த அச்சமும் மக்களிடம் எழுந்துள்ளது. அதேவேளையில், ரேபிஸ் முற்றிய நிலையிலுள்ள நோயாளிகளைக் கையாள்வது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, கடந…

  8. மருத்துவ உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் கிலா அரக்கப் பல்லியின் விஷம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த பல்லியின் விஷம், செமிக்ளூடைடு எனும் மருந்துக்கு ஆதாரமாக விளங்குகின்றது கட்டுரை தகவல் எழுதியவர்,ரஃபேல் அபுசைபே பதவி,பிபிசி முண்டோ 4 மணி நேரங்களுக்கு முன்னர் வட அமெரிக்காவின் பாலைவனங்களில் பளபளக்கும், செதில்களைக் கொண்ட, மெதுவாக நகரும் அந்தச் சிறிய உயிரினம்தான் மருந்துகள் துறையில் புரட்சியை ஏற்படுத்த மறைமுகமாக உதவியுள்ளது. அதன் அறிவியல் பெயர் ஹெலோடெர்மா சஸ்பெக்டம் (Heloderma suspectum), ஆனால், பெரும்பாலானோர் அதை கிலா மான்ஸ்டர் என்கின்றனர். அதன் விஷம், பல தீவிரமான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். 2024 நவம்பரில் கொலோரடோ மாகாணத்தில் இந்த கிலா அரக்கப் பல்லியின்…

  9. பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர்,சஜித் ஹுசைன் பதவி,பிபிசி ஹிந்திக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் முன்பெல்லாம் உடல் பருமன் என்பது மேற்கத்திய நாடுகளில் மட்டும்தான் பிரச்னையாக பார்க்கப்பட்டது, ஆனால் சமீப ஆண்டுகளாக இந்தியா போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் பிரச்னையாக மாறியுள்ளது. இதை எதிர்கொள்ளும் பொருட்டு, உடல் பருமனுக்கு எதிராக நாடு தழுவிய இயக்கத்தை முன்னெடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார். பிப்ரவரி 23 அன்று நடைபெற்ற 'மான் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில், தாங்கள் எடுத்துக்கொள்ளும் எண்ணெயின் அளவை 10 சதவிகிதமாக குறைக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார். உடல் பருமனை குறைப்பதில் அது முக்கியமான நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார். "ஆரோக்கியமான நாடாக மாறு…

  10. பெருங்குடல் புற்றுநோய் அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை! இலங்கையில் பெருங்குடல் புற்றுநோய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், 3,000 நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் குளோபோகன் 2022 தரவுகளின்படி, சர்வதேச அளவில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1.9 மில்லியன் ஆகும், இறப்புகளின் எண்ணிக்கை 900,000 ஐ தாண்டியுள்ளது. இந்த நோயின் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவது பெரும்பாலும் முழுமையான குணப்படுத்துதலுக்கு வழிவகுக்கும் என்று தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் ஹசராலி பெர்னாண்டோ கூறினார். புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதால் பெருங்குட…

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜேஸ்மின் ஃபாக்ஸ்- ஸ்கெல்லி பதவி,‎ 3 மணி நேரங்களுக்கு முன்னர் நாளொன்றுக்கு ஒரு முறை கழிக்கப்படும் டைப் 3 அல்லது டைப் 4 என வகைப்படுத்தப்படும் சாஸேஜ் வடிவிலான மலமே சிறந்தது எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை மலம் கழிக்கும் மனிதரா, அல்லது கழிவறை செல்வதே அபூர்வமான ஒன்றா? இப்படியாக, ஒவ்வொருவரின் மலம் கழிக்கும் இடைவெளியும் எண்ணிக்கையும் வேறுபடும். அவை உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உணர்த்துவது என்ன? மலத்தின் பின்னால் உள்ள அறிவியலை இங்கு தெரிந்துகொள்வோம். ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது ஏன் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்? இந்தியாவில் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவர்களை அதிகம் பாதிக்கும…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 3 மார்ச் 2025, 04:50 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இயர்போன் அல்லது ஹெட்போன் இல்லாமல் உங்களால் ஒருநாளைக் கூட கடக்க முடியாதா? 'அப்படியென்றால் உங்களுக்கு நிரந்தர காது கேளாமை பாதிப்பு ஏற்படும்' எனக் கூறுகிறது தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை. பாதுகாப்பற்ற இயர்போன்களின் பயன்பாடு மற்றும் அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளை பொது சுகாதாரத்துறை பட்டியலிட்டுள்ளது. 'இரைச்சல் மூலம் ஏற்படும் செவித்திறன் பாதிப்பை மாத்திரைகள் மூலம் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது' என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். இயர்போன் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல் என்ன? ஆய்வு …

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், இம்ரான் குரேஷி பதவி, பிபிசி 2 மார்ச் 2025, 08:44 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் உணவகங்களுக்குச் செல்லும் போது இட்லி மிகவும் பாதுகாப்பான உணவாக பலராலும் எப்போதும் நம்பப்படுகிறது. ஆனால் கர்நாடக அரசு, வெறும் இட்லியில் புற்றுநோயை உருவாக்கும் நச்சுத்தன்மை இருப்பதை கண்டறிந்துள்ளது. 241 உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது 52 உணவகங்களில் துணிக்கு பதிலாக பிளாஸ்டிக் தாள்கள் மீது இட்லி மாவு ஊற்றி இட்லி சமைக்கப்பட்டதை அம்மாநிலத்தின் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். பொதுவாக, இட்லியை நீராவியில் வேக வைக்க, இட்லி தட்டில் சுத்தமான துணியை பயன்படுத்துவார்கள். ஆனால் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துகள் ந…

  14. அறிவியல் நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது. இதனால் எண்ணற்ற அறிவியல் பொருட்கள் மனிதர்களின் கைகளுக்கு விருந்தாக அமைகின்றன. அதில் ஒன்றாக செல்போன் வளர்ச்சியும் இருக்கிறது. இன்றைய காலங்களில் செல்போன்கள் பேசுவதற்காக மட்டுமின்றி விளையாட்டு, பாடல்கள், வீடியோக்கள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் அதனை உபயோகப்படுத்தப்படுகிறது. நொடிப் பொழுதில் மனிதனின் அன்றாட வாழ்வின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கின்ற மிகப்பெரிய அத்தியாவசிய பொருளாக செல்போன்கள் மாறி வருகின்றன. உள்ளங்கையில் செல்போனை வைத்தப்படி உலகில் உள்ள அனைத்துத் தகவல்களையும் பெறுகிறோம். கணினியின் பாதிச் சேவையையாற்றும் செல்போன்கள், மனிதர்களின் மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. அதேநேரத்தில், இந்த செல்போன்களால்…

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரண்டாம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களை செகண்ட் இயர் சிண்ட்ரோம் பிரச்னை அதிகம் பாதிக்கிறது (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், ரக்‌ஷனா.ரா பதவி, பிபிசி தமிழ் 21 பிப்ரவரி 2025 பிரியா, பிலிப்பைன்ஸில் நான்காம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக அனைத்தையும் வகுப்பறையில் படித்தவர், நான்காம் ஆண்டில் நோயாளிகளைப் பரிசோதிக்க அனுமதிக்கப்பட்டார். அப்படி நோயாளிகளை நேரடியாகப் பரிசோதிக்கத் தொடங்கியதும் அவரிடம் ஒரு மாற்றம் தென்பட்டது. "அடிக்கடி சிறுநீர் கழிப்பது, தாகத்துடன் இருப்பது மற்றும் அதிகமாக இனிப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற துடிப்பு இருப்பது ஆகியவை நீரிழிவு நோய்க்கான அறிகுறி. இந்தப் பிரச்னை இருக்க…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மனித உடலின் செயல்பாட்டில் தண்ணீர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது 15 பிப்ரவரி 2025, 11:07 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் புனேவில் கியான் பாரே சின்ட்ரோம் (Guillain-Barre syndrome) நோய் குடிநீர் மூலம் பரவுவதாகத் தெரிய வந்துள்ளது. குழாய் நீர், போர்வெல் நீர், ஆர்.ஓ. மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் - எந்த நீரை குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது? இவற்றில் குடிப்பதற்குப் பாதுகாப்பான நீர் எது? எந்த நீர் அதிக தூய்மையானது? ஊட்டச் சத்துகள் அதிகமுள்ள நீர் எது? இந்தக் கட்டுரையின் மூலம் புரிந்துகொள்ளலாம். தண்ணீர் என்பது H2O. தண்ணீர் மூலக்கூறு 2 ஹைட்ரஜன் அணுக்கள் மற்றும் ஒரு ஆக்சிஜன் …

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 56 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு கொசு கடித்தால், எறும்போ அல்லது ஒரு பூச்சியோ உடலில் ஊர்வது போன்ற உணர்வு ஏற்பட்டால், உடனே ஏற்படும் அரிப்பை விரல்களால் சொறிந்துகொள்வது நமக்கு ஒரு வித ஆறுதலைக் கொடுக்கும். நிச்சயம் சொறிந்தே தீர வேண்டும் எனும் உணர்வு, நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து நம்மை தன்னிச்சையாகச் சொறியத் தூண்டிவிடும். அந்த ஆறுதல் உணர்வுக்குப் பிறகுதான், நம்மை யாரும் பார்த்தார்களா என்பதைக் கவனிப்போம். சிலருக்கு பிறர் சொறிந்து கொள்வதைப் பார்த்தாலே, அவர்களுக்கும் அரிப்பு ஏற்படுவதைப் போன்ற உணர்வு ஏற்படும். …

  18. பட மூலாதாரம்,LUISA TOSCANO படக்குறிப்பு, பிரேசிலைச் சேர்ந்த 38 வயதான லுயிசா டோஸ்கானோ, தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டபோது அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார். கட்டுரை தகவல் எழுதியவர், லூயிஸ் பாருச்சோ பதவி, பிபிசி உலக செய்திகள் 4 பிப்ரவரி 2025, 03:47 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் தனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக லுயிசா டோஸ்கேனோவுக்கு தெரிந்தபோது அவர் திகைத்துப் போனார். "இது முற்றிலும் எதிர்பாராதது," என்கிறார் பிரேசிலை சேர்ந்த லுயிசா. அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. "நான் சிறப்பாக, ஆரோக்கியமாக, முழு உடற்தகுதியோடு இருந்தேன், எந்த ஒரு நோய்க்கான அபாயம…

  19. உடலுறவும் உடல் நலமும்: பால்வினை நோய்கள் அறிகுறியே இல்லாமல் பரவினால் கண்டறிவது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES 6 ஜனவரி 2022 புதுப்பிக்கப்பட்டது 13 ஜனவரி 2022 (பாலியல் நலம் தொடர்பாக பிபிசி தமிழ் வெளியிட்டுவரும் தொடரின் ஐந்தாவது கட்டுரை இது.) நன்கு படித்த தம்பதி அவர்கள். அன்பான வாழ்க்கை. குழந்தை பெறுவதற்கான முயற்சியில் முதல் முறை கருகலைந்துவிட்டது. 2வது முறையும் அதே நிலை. காரணம் புரியாமல் மருத்துவரிடம் சிகிச்சைக்காக வந்திருந்தார்கள். பெண்ணிற்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் பெரிதாக எந்த பிரச்னையும் இல்லை. சிகிச்சை கொடுத்த 3 மாதங்களில் அந்த பெண் கருவுற்றார். 5 ஆவது மாத ஸ்கேனில் குழந்தை ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் 7 …

  20. சில மாதங்களுக்கு முன் எனது உறவினர் ஒருவர் திருமண வைபவம் ஒன்றில் இன்னொரு நண்பரைச் சந்தித்ததை என்னிடம் விபரித்தார். அந்த நண்பர் முன்னர் இருந்ததை விட உடல் நன்றாக இளைத்து உற்சாகமாகக் காணப்பட்டதாகத் தெரிவித்தார். தான் உடல் இளைத்தமைக்கு இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பானம் ஒன்றே காரணம் என்றும் அதை எனது நண்பரையும் பாவிக்கும்படியும் அறிவுரை கூறியுள்ளார். தாங்கள் இவ்வாறான பானங்களைப் பற்றிக் கூட்டம் நடத்துவதாகவும் அதற்கு ஒரு முறை வந்து பார்க்குமாறும் கேட்டுள்ளார். இச் சம்பவத்தை எனக்குக் கூறிய நண்பர் அப் பானத்தின் பெயரை மறந்துவிட்டதால் நானும் பெரிதாகப் பொருட்படுத்தாது விட்டுவிட்டேன். இன்னொரு உறவினரை அண்மையில் சந்தித்தேன். அவரும் உடல் இளைத்து உற்சாகமாக இருந்தார். உடல் இளைப்…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரு சிலர் மற்றவர்களைக்காட்டிலும் மகிழ்ச்சியாக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் அதிக மகிழ்ச்சியாக இருக்க வழிகள் இல்லை என்பது இதற்கு அர்த்தமல்ல கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி ஃப்யூச்சர் பதவி, மகிழ்ச்சி என்றால் என்ன? இது பலமுறை நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் கேள்வி... இதற்கு பெரும்பாலும் நம்மிடம் தெளிவான பதில் இருப்பதில்லை. இதன் பொருள் கவலையின்றி வாழ்வதா அல்லது அன்றாடம் நம்மை ஆட்டிப்படைக்கும் பிரச்னைகள் இருந்தாலும் கூட நிம்மதியாக வாழ்வதா? உண்மை என்னவென்றால் சிலர் மற்றவர்களைவிட மகிழ்ச்சியாக இருப்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுள்ளது போலத் தெரிகிறது. …

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிரேஸ் டிர்ரெல் பதவி, குளித்த பின்னர் துடைப்பதற்காக நாம் அதிகம் பயன்படுத்தும் துண்டுகளில் நுண்ணுயிரிகள் இருக்கும். அப்படியென்றால், அதை துவைப்பதற்கு முன் எவ்வளவு நேரம் நாம் காத்திருக்க வேண்டும்? இன்றைக்கு நீங்கள் ஏற்கனவே ஒரு துண்டின் மூலம் உங்கள் உடலை துடைத்திருப்பீர்கள். ஆனால், அந்த துண்டு உண்மையில் எவ்வளவு சுத்தமாக உள்ளது? நம்மில் பெரும்பாலானோர் வாரத்திற்கு ஒருமுறை துண்டை வாஷிங் மெஷினில் துவைப்போம். ஒரு ஆய்வில் பங்குபெற்ற 100 பேரில், மூன்றில் ஒருபங்கு மக்கள், மாதத்திற்கு ஒருமுறை தங்களது துண்டுகளை துவைப்பதாக தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கருத்துக்கணிப்ப…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மருத்துவர் தேஷம் பி.ஆர். பதவி, பிபிசிக்காக ரங்கா ராவுக்கு பத்து வருடங்களாக நீரிழிவு நோய் உள்ளது. அவர் முறையான உணவுப்பழக்கம், தினசரி உடற்பயிற்சி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வார். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை அவர் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்கிறார். ஆனால், கடந்த மாதம் சீதாப்பழத்தைப் பார்த்ததும் ரங்கா ராவுக்கு அதனை சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. உடனே ஒரு கூடை நிறைய சீதாப்பழங்களை வாங்கி வந்து, ஒரு நாளைக்கு ஒன்று என சாப்பிட்டார். கடைசியாக நீரிழிவு சோதனை செய்து 8 மாதங்கள் ஆகிவிட்டன என்பதை உணர்ந்தவுடன், அவர் உ…

  24. குளிர்ந்த நீரில் நீச்சல்: யுக்ரேன் போரிலிருந்து தப்பித்த பெண்ணின் மனநலனை மேம்படுத்தியது எப்படி? "கடலில் குளிர்ந்த நீரில் நீச்சலடிப்பது, என்னை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது." என்கிறார், யுக்ரேனை சேர்ந்த ஸ்விட்லானா. ரஷ்யா போர் தொடங்கியவுடன் அயர்லாந்துக்கு தப்பித்து வந்தார். 2022-ல் யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார். "எதுவுமே சாப்பிட முடியாது. வாந்தி எடுத்துவிடுவேன். உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடும் மன அழுத்தம் இருந்தது. என் குழந்தைக்காக தொடர்ந்து பயணித்தேன்." என கூறுகிறார் அவர். அவரை, குளிர்ந்த நீரில் நீச்சலடிக்குமாறு மருத்துவர் கூறியுள்ளார். குளிர்ந்த நீரில் நீச்சலடிப்பது அவருடைய மனநலனை மேம்படுத்தியுள்ளது. எ…

  25. ஒருசிலர் தூக்கத்தில் இருக்கும்போதே இறந்துபோனது குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறு தூக்கத்தில் இருக்கும்போதே ஒருவர் மரணம் அடைவது ஏன் என்பது குறித்து விளக்குகிறார். தூக்கவியல் நிபுணர் மருத்துவர் ஜெயராமன். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.