நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
காபி குடித்தால் தூக்கம் பாதிக்கப்படும என்பது எல்லோருக்கும் தெரிந்து விஷயம் தான் என்றாலும் உடலின் ஒழுங்குணர்வையும் மாற்றிவிடுகிறது என்று பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர். காபியில் உள்ள கெஃபெயின் என்ற ரசயாம் உடலில் தூக்கத்தை ஏற்படுத்தும் மெலடோனின் என்ற ஹார்மோன் தயாரிப்பதை தடுத்துகிறது என்று பிரிட்டனின் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தகவல் தெரிவிக்கின்றனர். தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்னர் ஒரு இரட்டை எஸ்ப்ரஸ்ஸோ குடிப்பது உடல் இயற்கையாகவே மெலடோனின் என்ற இந்த ஹார்மோனை உற்பத்தி செய்வதை 40 நிமிடங்கள் வரை தாமதப்படுத்தி விடுவதாக இந்த ஆய்வு மூலம் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்ற…
-
- 1 reply
- 392 views
-
-
நம்மூர் வாசிகள் நியூஸ் பேப்பர் இல்லாமல் பஜ்ஜி சாப்பிடமாட்டார்கள். எண்ணெய்யுடன் கூடிய பஜ்ஜியை நியூஸ் பேப்பரில் அமுக்கி தேய்த்து அவர்கள் சாப்பிடும் அழகே தனி தான். பஜ்ஜி சாப்பிடுவதால் பல்வேறு கெடுதல் வரும்னு சொல்வாங்க ஆனால் அதை விட கெடுதல் பஜ்ஜி சாப்பிட நியூஸ் பேப்பரை பயன்படுத்துவது.செய்தி தாள்கள் செய்திகளை படிப்பதற்காக பயன்படுத்துவதை விட அதன் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. சாப்பிட்டு விட்டு கைகளை துடைப்பதற்கு அதை அதிகமாக பயன்படுத்துகிறோம். சிறிய உணவகங்கள், தெருவோர கடைகளில் அதிகமாக செய்தி தாள்களையே கை துடைக்க பயன்படுத்துகின்றனர்.செய்தி தாள்களை இப்படி பயன் படுத்துவதால் பல்வேறு ஆபத்துகள் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். செய்தித்தாளில் கை துடைப்பது சிறிய ஓட்டல்கள், தெருவோ…
-
- 4 replies
- 411 views
-
-
தினமும் சாப்பிடும் உணவில் மீனை சேர்த்துக்கொண்டால் மன அழுத்தம் நீக்கி மகிழ்ச்சியாக வாழலாம் என சமீபத்தில் சீனாவில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.மீன் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்று கேள்விப்பட்டிருப்போம் ஆனால் மீன் சாப்பிட்டா கண்ணுக்கு மட்டுமில்ல மனதுக்கும் ரொம்ப நல்லதுனு இந்த ஆய்வு சொல்லுது. சீனாவின் கிழக்கில் உள்ள ஷாண்டோன்ங் மாகாணத்தில் இருக்கும் க்விங்டாவ் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியின் ஆய்வுக் குழு இந்த ஆய்வை நடத்தியது.அவர்கள் தினசரி உணவில் மீன் உண்ணும் சுமார் ஒன்றரை லட்சம் மக்களைக் கொண்டு இந்த ஆய்வை நடத்தினர். அவர்களின் ஆரோக்கியம் தொடர்பான புள்ளிவிவரங்கள் அடங்கிய 2001-2014-ம் ஆண்டுகளுக்குள் உள்ள பட்டியலை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் அவர்களின் மன அழுத்தம் குறைந்தி…
-
- 1 reply
- 632 views
-
-
யு.எஸ்.- நவீன அறிவியல் அறுவை சிகிச்சை மூலம் 87வயதுடைய முதியவர் ஒருவரின் படு மோசமாக எரிந்த கையை வைத்தியர்கள் சரிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் ஹியுஸ்ரனில் உள்ள ஹியுஸ்ரன் மெதடிஸ்ட் வைத்தியசாலையில் நடநதுள்ளது.இவரது பாதிக்கப்பட்ட கையை வயிற்றிற்குள் வைத்து இந்த சத்திரசிகிச்கை செய்யப்பட்டது. இவரது வயிற்றில் உள்ள திசு பைக்குள் மூன்று வாரங்களிற்கு வைக்கப்பட்டது. சுகமடையவும், ஒரு புதிய இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தவும் இவ்வாறு செய்யப்பட்டது.விறாங் றேய்ஸ் என்ற இவரின் கை தற்காலிக வீடான வயிற்றிற்குள் இருந்து வெட்டி வெளியே எடுக்கப்பட்டது.கடந்த கோடைகாலத்தில் ரயர் ஒன்றை மாற்றிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் கையின் முழு பாவனையையும் விறாங் இழந்து விட்டார்.ஒரு ஓய்வுபெற்ற கால்நடை பண்ணை தொழில…
-
- 0 replies
- 1.2k views
-
-
நீங்கள் நாற்பது வயதை கடந்துவிட்டீர்களா?? அப்போது கண்டிப்பாக உங்கள் உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். வாலிப வயது மட்டும் தான் கல்லையும் கரைக்கும். வயதாக வயதாக, பஞ்சை கரைக்க கூட சிரமப்படும் நமது உடலியக்கம். அந்தந்த வயதிற்கு ஏற்ப உணவில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது கட்டாயம். ஏனெனில், இளம் வயதில் உங்களுக்கு ஆரோக்கியத்தை அளித்த அதே உணவு உங்கள் ஆரோக்கியத்தை 40 வயதுக்கு மேல் கெடுக்கலாம். உதாரணமாக, வாழைத்தண்டு சிறுநீரகத்திற்கு நல்லது. ஆனால் 50 வயதிற்கு மேல் அதே வாழைத்தண்டு சிறுநீரகத்தின் செயல்பாட்டிற்கு தடையாகி செரிமானத்தை கெடுக்கும். முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு. எனவே, நாற்பது வயதை கடந்த பிறகு, கட்டாயம் டயட்டில் சேர்…
-
- 0 replies
- 365 views
-
-
வீட்டில் பாகற்காய் குழம்பு என்றாலே தலைத்தெறித்து ஓடுவோர் பலர். ஆனால் அந்த பாகற்காயை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதனால் தற்போதைய மக்கள் அதிகம் சந்திக்கும் பல பிரச்சனைகளைப் போக்கலாம். அந்த அளவில் பாகற்காயில் சத்துக்களானது நிறைந்துள்ளது. குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், பாகற்காயை உட்கொண்டு வந்தால், கட்டுப்பாட்டுடன் வைத்துக கொள்ளலாம். நீரிழிவு அதுமட்டுமின்றி, வேறு பல நன்மைகளும் பாகற்காயில் அடங்கியுள்ளது. அவை என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு பாகற்காயை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் பெறும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. 1. கொலஸ்ட்ரால் பிரச்சனைகள்: கொலஸ்ட்ரால் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், பாகற்காயை உட்கொண்டு வந்தால், அதில் உள…
-
- 0 replies
- 308 views
-
-
வியர்வை.... ஏன் துர்நாற்றம், வீசுகிறது என்பதற்கான காரணங்கள்!!!வாயுப் பிரச்சனைக்கு பிறகு ஓர் மனிதன் பொது இடங்களில் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாவது இந்த வியர்வை துர்நாற்ற பிரச்சனையின் காரணத்தினால் தான். பொதுவாக வெயிலில் அலைந்து, திரிந்து வேலை செய்பவர்களுக்கு அதிகம் வியர்க்க வாய்ப்புகள் இருக்கின்றன. வியர்வை எப்படி ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது? ஆனால், சிலருக்கு சாதாரண வேலைகள் செய்யும் போது கூட அளவிற்கு அதிகமாக வியர்வை வெளிப்படும். வியர்வை வெளிவருவது நல்லது தான், ஆனால் வியர்வையோடு சேர்ந்து அதிகமாக துர்நாற்றம் வெளிப்படுவது தான் இவர்களுக்கு ஏற்படும் சிக்கலே. அதிகமாக வியர்வை வெளிபடுதல் இந்த நோய்களுக்கான அறிகுறிகள் என்று உங்களுக்கு தெரியுமா? அனைவருக்கும் தான் வியக்கிறது…
-
- 7 replies
- 6.8k views
-
-
இயற்கை நமக்கு தந்த ஓர் வரப்பிரசாதம் தான் சீரகம். சமையலில் பயன்படுத்தும் சீரகம் தன்னுள் பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. இதனால் உடலின் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்ய சீரகம் பயன்படுகிறது. அதில் செரிமான பிரச்சனை, நோயெதிர்ப்பு சக்தி குறைவு, ஆஸ்துமா, சளி, இரத்த சோகை, தூக்கமின்மை, பைல்ஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை.அதுமட்டுமின்றி, சீரகம் தற்போது பலரும் அவஸ்தைப்படும் அசிடிட்டி பிரச்சனைக்கும் நல்ல தீர்வை வழங்கும். இதனை இயற்கை மருத்துவ வைத்தியர்களும் பரிந்துரைக்கின்றனர். மேலும் சீரகம் இரைப்பையில் அதிகப்படியான அமில உற்பத்தியினால், நெஞ்செரிச்சல் ஏற்படுவதையும் தடுக்கும். சீரகத்தில் உள்ள சத்துக்கள் :- சீரகத்தில் புரோட்டீன், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்ட…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
தற்போது பலரும் செரிமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதற்கு நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள் செரிமான மண்டலத்தில் தங்கி, அதன் சீரான இயக்கத்தைத் தடுப்பதை முக்கிய காரணமாக சொல்லலாம். எனவே வயிற்றில் தங்கியுள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்ற, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். செரிமான மண்டலத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்!!! குறிப்பாக ஸ்நாக்ஸ் நேரத்தில் பழங்களை சாப்பிட்டால், மிகவும் எளிமையாக வயிற்றை மட்டுமின்றி, உடலின் அனைத்து உறுப்புக்களையும் சுத்தப்படுத்தலாம். மேலும் உடல்நல நிபுணர்கள், தினமும் ஒரு ஃபுரூட் பௌல் சாப்பிட்டு வந்தால், உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம் என்கின்றனர். செரிமான பிரச்சனைகளைத் தடுக்க ஆயுர்வேதம் ச…
-
- 0 replies
- 403 views
-
-
நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்? நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள். சாதாரண தசை வலியிலிருந்து இதய நோய்வரை பல நோய்களுக்கு நெஞ்சு வலி ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால், இதை அலட்சியப்படுத்த முடியாது. அதேவேளையில் எல்லா நெஞ்சுவலியும் மாரடைப்பாகத்தான் இருக்கும் என்று எண்ணி, தேவையில்லாமல் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. நடைமுறையில் பெரும்பாலான நெஞ்சு வலிக்கு இதய நோய்கள் காரணமாக இருக்காது; வேறு காரணங்கள்தான் இருக்கும். காரணம் என்ன? நெஞ்சு வலிக்குப் பல காரணங்கள் உள…
-
- 0 replies
- 2.1k views
-
-
தமிழன் கண்ட தோப்புக்கரணம் ..! சொந்தம் கொண்டாடி காப்பி ரைட் வாங்கிய அமெரிக்கா.! கம்ப்யூட்டரைப் பார்த்து வியக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். விரலசைவில் உலகையே வீட்டுக்குள் கொண்டு வந்து விடுகிற நம்முடைய மகத்தான கண்டுபிடிப்பு அது. இத்தனை சக்தி வாய்ந்த கம்ப்யூட்டரையே வடிவமைத்த சூப்பர் கம்ப்யூட்டர்தான் மனித மூளை. உடலின் உச்சியில், மண்டை ஓடு என்கிற திடப்பொருளின் பாதுகாப்பிற்குள் மூளைதண்டுவடத் திரவத்தில் மிதக்கிற அந்த ஒன்றரை கிலோ ‘மென்பொருளின்’ நலன்பேணும் அக்குபிரஷர் சிகிச்சைகள். ஒட்டுமொத்த உடலுறுப்புகளையும் இயக்கும் நம் மூளை, நரம்பு மண்டலத்தோடு பின்னிப் பிணைந்த தொடர்பில் இருக்கிறது. மூளை, நரம்பு மண்டலம் இரண்டும் சேர்ந்த அமைப்பை உடலின் ‘டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்’ எனலாம். தொடுதல், பார…
-
- 0 replies
- 692 views
-
-
பக்கவாதம் எதனால் ஏற்படுகிறது.? சாத்தியக்கூறுகள் என்ன .? மூளை இயக்கங்களில் ஏதேனும் தடை உண்டாகும் நேரங்களில் ஏற்படுவதுதான் பக்கவாதம். மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் தடங்கல் ஏற்பட்டால் மூளைச் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதும் தடையாகிறது. இதனால் அவை செயலிழக்க ஆரம்பித்து விடுகின்றன. இதன் காரணமாக அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் உடல் பாகங்கள் தங்கள் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும். இப்படி ஏற்படும் பக்க வாதத்திற்கு “ஐசெமிக் ஸ்ட்ரோக்” (Ischemic stroke) என்று பெயர். மூளைக்குச் செல்லும ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு ரத்தப் போக்கு அதிகமாகும் சமயங்களிலும் பக்கவாதம் உண்டாகும். இதற்கு “ஹெமராஜிக் ஸ்ட்ரோக்” என்று பெயர். எனவே, பக்கவாதம்…
-
- 0 replies
- 722 views
-
-
கல்லீரல் சுருக்கம்...தடுப்பது எப்படி? "என்.முருகன்" கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், அப்போலோ மருத்துவமனை அன்றாடம் காய்கறிகளை விற்றுப் பிழைப்பு நடத்திவந்த செல்வத்துக்கு, திடீரென வயிற்றில் கடுமையான வலி. அதனைத் தொடர்ந்து மஞ்சள் காமாலை, அடுத்த சில நாட்களிலேயே கல்லீரல் முற்றிலும் செயல் இழப்பு ஏற்பட்டு, இறந்துபோனார். இன்று, அவர் மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் ஆதரவு இன்றித் தவிக்கின்றனர். செல்வத்தின் மரணத்துக்குக் காரணம், கல்லீரல் சுருக்கம் எனப்படும் ‘லிவர் சிரோசிஸ்’ (Liver Cirrhosis) நோய். 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மது அருந்தியதன் விளைவுதான், கல்லீரல் செயல் இழப்புக்குக் காரணம். மது அருந்தியதன் காரணமாக், கல்லீரல் பிரச்னையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரமா…
-
- 0 replies
- 2k views
-
-
உயிர்ச்சத்துகளில் வைட்டமின் டி முக்கியமானது. அதேநேரம் அதிகக் கவனம் செலுத்தப்படாத வைட்டமின்களில் ‘டி'யும் ஒன்று. வைட்டமின் டி என்பது எலும்புக்கும் பற்களுக்கும் அத்தியாவசியம். நமது உடலுக்குள் நடக்கும் முக்கியமான பல உயிர்வேதியியல் செயல்பாடுகளுக்கும், இந்த வைட்டமின் மிகவும் அடிப்படையானது என்பது தற்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. வைட்டமின் டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோஸிஸ், ரிக்கட்ஸ், இதய நோய், புற்றுநோய், மல்ட்டிபிள் ஸ்கிளரோஸிஸ், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஜலதோஷத்தை விரட்டுவதிலும் மன அழுத்தத்தைச் சமாளிப்பதிலும் வைட்டமின் டி உதவுவதாகக் கூறப்படுகிறது. மற்ற வைட்டமின்களைப் பொறுத்தவரை நமது வழக்கமான உணவுப் பொருட்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். வைட்டமின் ‘டி'…
-
- 0 replies
- 1.7k views
-
-
இளம் வயதினர் முதல் நடுத்தர வயதினர் வரை சகலரும் பொதுவாக கவலைப்படும் ஓர் விடயம் தலைமுடி உதிர்வு அதிலும் அண்மைய நாட்களில் பெண்களை விட ஆண்களே அதிகம் கவலைப்படுகின்றனர். காரணம் தலைமுடி என்பது ஒருவரது பால் வேறுபாட்டை வெளிக்காட்டும் ஆளுமை மற்றும் கம்பீரத் தன்மை என்பதனை மற்றவருக்கு தெரியப்படுத்தும் ஊடகமாகவும் அமைகிறது என்கிறார் வைத்தியர் சிவஞான சுந்தரம். இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: பொதுவாக நம்மில் பலர் தமது பற்களுக்கு கொடுக்கும் கவனிப்பையே தமது தலைமுடிக்கு கொடுக்கின்றனர். அதாவது பல்வலி வரும்வரை அவர்கள் தமது பற் சுகாதாரம் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை அதை போல் தான் தலைமுடி அதிகம் உதிரத் தொடங்கும் வரை தலை முடியின் பராமரிப்பை பற்றியோ அதன் நிலையைப் பற்றியோ அதிக கவனம் ச…
-
- 1 reply
- 4.6k views
-
-
மனித வாழ்வில் நட்பு, காதல் இரண்டும் இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. இவற்றில் சிலரது நட்பு ஆரோக்கியமானதாகவும், சிலரது நட்பு ஆரோக்கியமற்றதாகவும் காணப்படுகின்றது. எது எவ்வாறெனினும் இளம் வயதினரின் நட்பானது வயதான காலத்தில் உடல் உள ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு உதவுவதாக அமெரிக்காவிலுள்ள Rochester பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்காக 20 வயதை அடைந்த பட்டப்படிப்பை மேற்கொள்பவர்கள் 30 வயதை அடையும் வரை கண்காணிக்கப்பட்டுவந்தனர். ஆரம்பத்தில் இவ் ஆய்வில் 222 பேர் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன் ஆய்வு முடிவடையும் தருணத்தில் 133 நபர்களே கண்காணிக்கப்பட்டிருந்தனர். இவ் ஆய்வின் முடிவில் நண்பர்களுடன் குதூகலமாக நேரத்தை செலவிடுபவர்கள் தமது பின்னைய காலத்தில் உடல், உள ஆரோக்கியத்தில் சி…
-
- 1 reply
- 861 views
-
-
நீரிழிவு நோயாளிகளுக்கான காலிபிளவர் சப்பாத்தி காலிபிளவர் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக உள்ளது காலிபிளவரில் உள்ள சத்துக்கள். காலிபிளவரில் பொட்டாசியம், விட்டமின் B6 ஆகியவை உள்ளன. இதில் விட்டமின் சி மிக அதிகமாக உள்ளது. ஒரு கப் நறுக்கிய பூவில் கலோரி 24 கிராம், புரதம் 2 கிராம், மாவுச்சத்து 5 கிராம், விட்டமின் சி 72 மில்லி கிராம், ஃபோலாசின் 66 மைக்ரோ கிராம், பொட்டாசியம் 355 மில்லி கிராம் அடங்கியுள்ளது. மருத்துவ பயன்கள்: இந்த காய்கறியை அதிகமாக வேக வைக்க கூடாது. இல்லையெனில் சத்துக்கள் கரைந்துவிடும். மேலும் காலிபிளவர் கொழுப்பு சத்து இல்லாத காய்கறி. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் இதயநோய்க்கு இதமான காய்கறி இது. காலிபிளவருக்கு புற்று நோயை தடுக்கும் சக்தி உள்ளது.பூ …
-
- 0 replies
- 988 views
-
-
ஒருவருக்கு சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டுவிட்டால், கீழ் வயிற்றில் அதீதமான வயிற்றுவலி ஏற்படும். முதுகுப் பகுதியில், சிறுநீரக மண்டலத்தில் வலி அதிகமாக இருக்கும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், ரத்தம் கலந்து வருதல் ஆகிய பிரச்சினைகள் இருக்கும். சிறுநீரகக் கல் இருப்பதைக் கண்டறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனைகள் போதுமானவை. இதற்கு என்னதான் சிகிச்சை? சிறுநீரகத்தில், சிறுநீர்ப் பையில், சிறுநீரகக் குழாயில் எங்கே கல் உள்ளது என்று கண்டறிந்துவிட்டால், என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என்பதை முடிவு செய்துவிடலாம். சுமார் 5 மி.மீ. வரை அளவுள்ள கற்களை, மருந்து, மாத்திரைகள் மூலமாகவே கரைத்துவிடலாம். பெரிய கற்களுக்கு வே…
-
- 0 replies
- 1.4k views
-
-
இரவு நேரத்தில் அதிகமாக சுரக்கும் "செக்ஸ்" ஹாமோன்கள்: எச்சரிக்கை இரவு நேரத்தில் பணிபுரிவர்களுக்கு செக்ஸ் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கப்படுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவை சேர்ந்த Pompeu Fabra University இரவு நேரத்தில் பணிபுரிபவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் சாத்தியம் அதிகமாக இருப்பதற்கு காரணம் ஏன் என்பது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதற்காக 100 பேரை தெரிவுசெய்து 24 மணி நேரத்தில் அவர்கள் கழிக்கும் சிறுநீரை ஆய்வு செய்தது. அதில், செக்ஸ் ஹார்மோன்களான ‘டெஸ்டோஸ்டிரோன்’ மற்றும் ‘ஈஸ்ட்ரோஜன்’ ஆகியவை தவறான நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவை விட அதிகமாக சுரப்பது கண்டறியப்பட்டுள்ளது. இயல்பு வாழ்க்கையில் காலை 6 மணி முதல் 10 வரை சுரக்கும் இந்த…
-
- 11 replies
- 3.8k views
-
-
நீர்க்கடுப்பு ஏற்படுவதன் காரணம் என்ன? நீர்க்கடுப்பு ஏற்பட்டால் தாங்க முடியாத வலியை அனுபவிக்க வேண்டிவரும்.அதிகமாக கோடைக்காலத்தில் தான் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது, உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். கோடைக் காலத்தில் தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது, கடுக்கிறது. கோடையில் அதிகமாக வியர்ப்பதால் உடலில் சீக்கிரம் நீரிழப்பு ஏற்பட்டுவிடும். நம் உடலில் போதுமான அளவு திரவ…
-
- 0 replies
- 314 views
-
-
பெண்களளுக்கு ஏற் படும் வயிற்று வலியானது பல காரணங்களுக்காக வர முடியும். ஆனால் பல பெண்கள் வயிற்று வலியால் அவதிப்படுவது ஒரு புறம் இருக்க அதனை எண்ணி அது எதனால் வருகிறது என நினைத்து பலதையும் யோசித்து பயப்படுவது இன்னொரு புறமாக உள்ளது. அதிலும் பெண்களது வயிற்று வலி அவர்களை மட்டுமல்ல அவர்களை சார்ந்த குடும்பத்தின் சமநிலையையும் குழப்பி விடக்கூடியதாக அமைந்து விடுகின்றது. அதாவது குடும்ப பெண் வயிற்று வலியால் துன்பப்படும் போது அவரை சார்ந்த மற்றைய குடும்ப அங்கத்தவர்களை சரியாக கவனிக்க முடியாமல் போகின்ற சந்தர்ப்பங்கள் உள்ளன. எனவே பெண்களுக்கு வயிற்று வலி ஏன் ஏற்படுகின்றது? இதற்கான பின்னணி என்ன? இதற்கு தீர்வுகள் எவை என்பது குறித்…
-
- 0 replies
- 25.9k views
-
-
நீர்க்கடுப்பு ஏற்படுவது ஏன்? ஜூன் மாதம் வந்துவிட்டாலும் வெயிலின் தாக்கம் மட்டும் இன்னும் தணியவில்லை. கோடையில் ஏற்படும் ஆரோக்கியத் தொல்லைகளுள் சிறுநீர்க் கடுப்பு கவனிக்கப்படவேண்டிய ஒன்று. ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், குழந்தை, முதியோர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கிற பிரச்சினை இது. எல்லாப் பருவத்திலும் இது வரலாம் என்றாலும், கோடையில் இதன் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். என்ன காரணம்? உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். கோடைக் காலத்தில் தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ண…
-
- 8 replies
- 15.3k views
-
-
கடலை மிட்டாயும் எள்ளுருண்டையும் காணாமல் போய், நம் வயிற்றை நிரப்பிவரும் பாக்கெட் உணவுகள் நோயைப் பரவலாக்கிவருகின்றன. அதற்கு மாற்றாக நமது சிறுதானிய உணவுகள் எப்படி ஆரோக்கியத்தை மீட்டெடுக்கின்றன என்பது பற்றி திருச்சியில் சமீபத்தில் நடைபெற்ற பாரம்பரிய விதை, மூலிகை, வேளாண் திருவிழா கவனப்படுத்தியது. இதன் காரணமாக, திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றத்தில் மரங்களின் நிழலில் ஜூலை 11, 12 ஆகிய இரண்டு நாட்களும் இயற்கை மணம் வீசியது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி, தானியங்கள், காய்கறிகள், வரகு, சாமை, திணை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்கள், அரிய மூலிகை மருந்துகள், பாரம்பரிய விதை ரகங்கள் குவிந்திருந்தன. பசுமை சிகரம், கவிமணி பாரதி உழவர் மன்றம், கிரியேட் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந…
-
- 0 replies
- 385 views
-
-
புதியமுறையில் இருதய அறுவை சிகிச்சை: சென்னை மருத்துவர்கள் சாதனை 16 ஜூலை 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:14 ஜிஎம்டி இருதயப் பகுதியை திறக்காமலேயே வயதான பெண்மணி ஒருவருக்கு சென்னையிலுள்ள மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளதாகக் கூறுகிறார்கள். மேற்குலக நாடுகளில் இதுபோன்ற அறுவை சிகிச்சை மிகவும் அபூர்வமாகச் செய்யப்படும் சூழலில், இந்தியாவில் முதல் முறையாக நவீன முறையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அதைச் செய்த டாக்டர் ராஜாராம் அனந்தராமன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். சென்னியிலுள்ள ஃப்ராண்டயர் லைஃப்லைன் மருத்துவமனையில், 81வயது பெண்மணிக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. காலில் ஒரு துளையிட்டு அதன் மூலம் சேதமடைந்த ரத்தக்குழாய்க்கு பதிலாக செயற்கை வால்வை மற்…
-
- 1 reply
- 247 views
-