Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. லண்டன்: மனநிலை பாதிக்கப்பட்டதால் பலமுறை தற்கொலைக்கு முயன்றதாக பிரபல 'ஹாரி பாட்டர்' புத்தகங்களை எழுதிய நாவலாசிரியை ஜே.கே.ரௌலிங் கூறியுள்ளார். சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த 42 வயதான நாவலாசிரியை ரௌலிங் கூறுகையில், "எனது முதல் கணவர் ஜார்ஸ் ஆரண்டிஸை விட்டு பிரிந்தபோது பெரும் மன உளைச்சலை அடைந்தேன். வாழ்க்கையை வெறுத்து பலமுறை தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தேன். இளம்வயதிலேயே ஆதரவற்ற நிலையில் ஏழ்மை என்னை சின்னாபின்னமாக்கிவிட்டது. ஆனால் நான் மீண்டும் பழைய நிலையை அடையவேண்டும் என்று விரும்பியதற்கு காரணம் என் மகள். நான் இருந்த மோசமான சூழ்நிலையில் வாழவேண்டியவள் அல்ல. அவள் (என் மகள்) கஷ்டத்தை அனுபவிக்கக் கூடாது. அவளை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று முடிவு …

  2. இடி-மின்னல்: டிவி வெடித்து சிறுமி பலி திருவள்ளூர்: டிவி வெடித்து சிறுமி பரிதாபமாக இறந்தாள். திருவள்ளூர் அடுத்த வெள்ளவேடு சொக்கநல்லூர் காலனியில் வசிப்பவர் சுதாகர். கூலி தொழிலாளியான இவரது மகள் சித்ரா (11). சித்ரா வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது இடி, மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிவி வெடித்து சிதறியது. இதில் டிவி அருகே அமர்ந்திருந்த சித்ரா உடல் சிதறி பலியானாள். வெடித்த கலர் டிவி அரசு வழங்கிய இலவச கலர் டிவி என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். http://thatstamil.oneindia.in/news/2008/03...v-explodes.html

    • 4 replies
    • 1.5k views
  3. குற்றவாளிக் கூண்டில் புஷ்! [ வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2008, 01:23.57 PM GMT +05:30 ] [ உதயன் ] சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!' என்பார்கள். அமெரிக்க ஜனாதிபதி புஷ் தலைமையிலான உலகப் பொலிஸ்கார வல்லரசின் எதேச்சாதிகாரம் தன்னுடைய திமிர்ப் போக்கினால் ஈராக்கில் பண்ணிய அராஜகம் இப்படித்தான் போயிருக்கின்றது. "பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை' மாதிரி ஈராக்கில் தலையிட்ட புஷ், ஈராக் விவகாரத்தை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அந்தரிக்கின்றார். ஆப்பு இழுத்த குரங்காகிவிட்டது அமெரிக்கா. ஈராக் மீது அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஆரம்பித்து இந்த வாரத்துடன் ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் ஐம்பது ஆண்டுகளானாலும், ஈராக்கிலிருந்து அவ…

    • 2 replies
    • 1.3k views
  4. சீனாவுக்கு யூ.எஸ். கண்டனம் . தர்மசாலா, மார்ச். 22: திபெத் பிரச்சனை தொடர்பாக சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. திபெத்தில் உள்ளவர்கள் சீனாவிடமிருந்து சுதந்திரம் கோரி போராட்டம் நடத்தியுள்ளனர். இதனை சீனா அடக்கி வருகிறது. இந்த போராட்டத்தை தலாய்லாமா தூண்டிவிடுவதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. . இந்நிலையில் தர்மசாலாவில் நேற்று அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பெலோசி தலாய்லாமாவை சந்தித்து பேசினார். அதன் பிறகு அவர் திபெத் தொடர்பான சீனாவின் அணுகுமுறையை விமர்சனம் செய்தார். திபெத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு தலாய்லாமாவே பொறுப்பு என சீனா கூறுவதை சுதந்திரமான 3வது நாட்டின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். திபெத் பிரச்சனை உலகின…

    • 0 replies
    • 835 views
  5. இணையத்தள நிருபர் - பூமியைப் போன்று விண்வெளியில் மிதக்கும் வேறு கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதா ? என்பது இன்றளவும் விஞ்ஞான உலகில் புரியாத புதிரகவே உள்ளது. பறக்கும் தட்டுக்கள், வேற்றுக்கிரக வாசிகள் என்றெல்லாம் அவ்வப்போது சஞ்கைகளில் மர்மத் தகவல்கள் வெளியாகுகின்ற போதிலும் இதன் உண்மைத்தன்மை பற்றி யாராலும் இது வரை விரிவாகத் தெளிவுபடுத்தப்பட்டவில்லை . இந்தப் புரியாத புதிர்களுக்கெல்லாம் விடைகான விஞ்ஞான ஆராட்சியாளர்கள் நீண்ட காலமாகவே முயன்று வருகிறார்கள் . விஞ்ஞானிகள் விண்வெளி ஓடங்களில் வேற்றுக் கிரகங்களுக்கு சென்று இது சம்பந்தமாக ஆய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்கள். இதன் பெறுபேறுதான் என்ன? விண்வெளியில் மிதக்கும் சனிக்கிரகம் பற்றிய ஆராட்ச…

  6. திபெத்தில் தனிநாடு கோரி கலவரம் ; புத்த துறவிகள் மீது சீன ராணுவம் துப்பாக்கி சுடு : 7 பேர் பலி திகதி : Saturday, 15 Mar 2008, [saranya] 1950 முதல் திபெத் சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறது. தனிநாடு கோரி திபெத்தியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். புத்த துறவிகளும் திபெத்தை தனிநாடாக அறிவிக்க கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். திபெத்தின் லாசா நகரில் சீன அரசை கண்டித்தும் தனிதிபெத் கோரியும் போராட்டம் நடந்தது. இதில் புத்த துறவிகளும் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போதுகலவரம் வெடித்தது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கலவரத்தை தடுக்க ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த கலவரம், துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியானார்கள். இந்த கலவரத்தை தீபெ…

    • 5 replies
    • 1.6k views
  7. புதிய அரசுடன் இணைந்து பணியாற்றுவேன்: முஷாரப் திகதி : Saturday, 22 Mar 2008, [saranya] பாகிஸ்தானில் புதியதாக அமையப்போகும் அரசுடன் இணைந்து பணியாற்றுவேன் என அதிபர் முஷாரப் வியாழக்கிழமை தெரிவித்தார். கடந்த பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(என்) கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றன. முஷாரப் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (க்யூ) கட்சி குறைந்த இடங்களிலேயே வெற்றி பெற்றது. இதையடுத்து பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையில் அடுத்த வாரம் புதிய அரசு அமையவிருக்கிறது. முஷாரப் ஆதரவு பெற்ற கட்சி தோல்வியைத் தழுவியதால் புதிய அரசுக்கு எதிராக முஷாரப் செயல்படுவார் என கருதப்பட்டது. இந்நிலையி…

    • 0 replies
    • 685 views
  8. ராஜீவ் காந்தி கொலையில் சி.ஐ.ஏ க்கும் சுப்பிரமணிய சாமிக்கும் பங்கு இருப்பதாக கூறுகிறார் ஜெயின் கமிசன் முன்பு ஆஜாராகி பரபரப்பாக சாட்சி சொன்ன திருச்சி வேலுச்சாமி http://sinnakuddy1.blogspot.com/2008/03/blog-post_3748.html

  9. சீனவோடு நெருங்கிய உறவுகளைப் பேண விரும்பும் எதிர்க்கட்சி வேட்பாளர் தாய்வானின் ஐனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். கடசி நேரத்தில் திபெத் நிகழ்வுகளை வைத்து ஆளும்கட்சியின் வேட்பாளர் தரப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்த போதும் தாய்வான் தேர்தல் முடிவுகள் மேற்குலகிற்கு சிறு ஏமாற்றத்தை தருவதாக இருக்கும். http://www.nytimes.com/2008/03/23/world/asia/23taiwan.html http://www.nytimes.com/2008/03/21/world/asia/21taiwan.html

  10. இந்தக் காலத்தில மேற்குநாடுகளில பல்கலைக்கழகப் படிப்பு என்பது வியாபாராமாகிப் போச்சு. அதுவும் இணைய வரவுக்குப் பின்னர் டிகிரிக்குத் தேவையான எழுத்து வேலைகளை அடுத்தவையைக் கொண்டு செய்வித்து கொடுத்து டிகிரி வாங்கிறது பெருமையாகிட்டு வருகுது. அதுமட்டுமன்றி கோஸ் வேர்க்குகளைக் கூட இணையத்தில் இருந்து கொப்பி அண்ட் பேஸ்ட் செய்து சின்னச் சின்ன மாற்றங்களோடு சமர்ப்பிச்சு மார்க்ஸ் வாங்கிக்கிறாங்க. இதால உண்மையான திறமை என்பது அடிபட்டுப் போகுது. இப்ப என்னடான்னா.. இப்படி சீற் பண்ணுற மாணவர்களைப் பிடிக்கிறது கஸ்டமாகிட்டு வருவதா பல்கலைக்கழகங்களுக்கு கவலை பெருகிட்டு வருகுது. என்னதான் சீற் பண்ணுறதை கண்டறிய மென்பொருட்கள் வந்தாலும் அதையும் உச்சி.. காசுக்கு கட்டுரைகள்.. திசிஸ் எழுதிக் கொடுக்க…

  11. வியாழன், 20 மார்ச் 2008 மத ரீதியான சம்பிரதாயங்களால் அழுத்தப்பட்டு, பாதிற்பிற்குள்ளான பெண்களின் துயரத்தை தனது எழுத்துக்களால் எடுத்தியம்பிய காரணத்திற்காக மத அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகியும் மனம் தளராமல் போராடிய ஒரு பெண்ணை, தனது அரசியல் லாபத்திற்காக கட்டாயப்படுத்தி வெளியேற்றி தீராத அவமானத்தை இந்தியாவிற்கு பெற்றுதந்துவிட்டது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் ஆகியவற்றின் அடையாளமாக சித்தரிக்கப்பட்ட இந்திய நாடு, தன்னிடம் அடைக்கலமான தஸ்லிமா எனும் மானுட போராளியை நெருக்குதல் அளித்து துரத்தியதன் மூலம் தனது உண்மையான முகத்தை தெளிவாக உலகிற்கு காட்டியுள்ளது. இதுவரை மூடி, மறைத்து மாற்றிக் காட்டப்பட்ட அந…

  12. நடிகர் ஷோபன்பாபு மரணம்! உப்பு ஷோபன சலபதி ராவ் என்ற இயற்பெயர் கொண்ட பிரபல நடிகர் ஷோபன்பாபு இன்று மரணமடைந்தார். அவரது வயது 71. நான்கு முறை ஃப்லிம் பேர் விருதும், ஐந்து முறை நந்தி விருதும் மற்றும் ஏராளமான விருதுகளும் பெற்ற தலைசிறந்த நடிகர் அவர். 30 ஆண்டுகளில் அதிக விருதுகள் பெற்ற ஆந்திராவின் ஒரே நடிகர் அவர் தான். 1965ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தெலுங்கு படங்களில் கதாநாயகனாக 1997 வரை நடித்துக் கொண்டிருந்தார். என்.டி.ஆர், நாகேஸ்வரராவ் போன்ற ஜாம்பவான்கள் தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் கூட ஷோபன்பாபுவுக்கு என்று ரசிகர்களும், ரசிகைகளும் ஆந்திராவில் அதிகளவில் இருந்தார்கள். ஷோபன்பாபு படங்களில் மிதமான மேக்கப்பில் மிக அழகாக உடையணிவா…

    • 2 replies
    • 2.3k views
  13. மழையைக் கொடுக்கும் பக்டீரியா அமெரிக்காவில் கண்டுபிடிப்பு [18 - March - 2008] மழையைக் கொடுக்கும் பக்டீரியா எதுவென்று அமெரிக்காவின் மொன்டானா மாநிலப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் பக்டீரியாவின் பெயர் மேலும் பல ஆய்வுகளை நடத்தி உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வெளியிடப்படவுள்ளது. இந்த பக்டீரியா உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகிறது. தாவரத்தின் இலை மீது இவை தங்கியிருக்கும். இவை விண்ணில் பறந்து சென்று ஒரு கூட்டமாக நிலைபெறும். இவற்றைச் சுற்றி உறைந்த பனிக்கட்டிகள் சேரும். அந்தப்பரப்பே இறுகி மேகமாக மாறும். பிறகு அதில் மேலும் பல மடங்கு நீர்த்துளிகள் சேர்ந்து கருமேகமாகி மழை பெய்யும். அமெரிக்காவிலேயே மொன்டானா, கலிஃபோர்னியா, கிழக்கு அமெ…

  14. பிரிட்டனில் உள்ள ஒரு கோயிலில் இரண்டரை லட்சம் ரூபாய் திருட்டு போனது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். ஹரோவில் உள்ள சித்தாஸ்ரம்‌ சக்தி மையத்தில் மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மக்களிடம் இருந்து சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் திரட்டப் பட்டு இருந்தது. கோயிலின் பூட்டை உடைத்த திருடன் அங்கிருந்த இரண்டரை லட்சம் பணத்தை கொள்ளையடுத்து சென்றான். கோயிலில் வைக்கப்பட்ட கேமராவில் திருடனின் செயல்கள் அனைத்தும் பதிவாகி இருந்தன. திருடன் கருப்பு நிற உடையும் சூவும் அணிந்திருத்ததாக தெரிவித்த போலீசார் திருடனை கண்டுபிடிக்க இது மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர். மேலும் திருடனை கண்டுபிடிக்கும் வரை திருடப்பட்ட பணத்திற்கு கோயில் உறுப்பினர்கள் பொறுப்பேற்றுள்ளனர். …

    • 22 replies
    • 4.1k views
  15. ஈராக்கில் வெற்றி கிட்டாது: ஹிலாரி . Tuesday, 18 March, 2008 10:19 AM . வாஷிங்டன், மார்ச் 18: ஈராக் போரில் அமெரிக்கா வெற்றி பெற முடியாது என்று ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிட விரும்பும் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார். . இந்த போர் காரணமாக அமெரிக்காவுக்கு ஒரு டிரில்லியன் டாலர் இழப்பு ஏற்படுவதுடன் மேலும் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுக்க தொடங்கி ஐந்தாவது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஹிலாரி கிளிண்டன் இவ்வாறு கூறியுள்ளார். ஈராக் மீதான போர் காரணமாக …

    • 1 reply
    • 889 views
  16. கொசோவாவை அங்கிகரித்த ஜப்பான் கொசோவாவை, பிரித்தானியா அமெரிக்கா உட்பட்ட 25 நாடகளுடன் இணைந்து தாங்கள் தனிநாடாக அங்கிகரிதுள்ளதாக ஜப்பானின் அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும்....

    • 1 reply
    • 1.1k views
  17. விஜயகாந்த் விளக்கம் . Sunday, 16 March, 2008 02:18 PM . சென்னை, மார்ச். 16: மாநிலங்களவை தேர்தலில் யாரையும் ஆதரிக்காதது ஏன் என்பது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தெரிவித்தார். மக்களுடன் தான் கூட்டணி என்பதை மீண்டும் அவர் உறுதிப்படுத்தினார். . தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று பாமகவைச் சேர்ந்த வள்ளல் பத்மநாபன், மணலி நகர் மன்ற கவுன்சிலர் சுப்பையா ஆகியோர் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிகவில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களை வாழ்த்தி, வரவேற்று விஜயகாந்த் பேசியதாவது: நீங்கள் அனைவரும் தேமுதிகவில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என் கட்சி வளர்ந்து வருகிறது என்பதாலும், என் …

    • 0 replies
    • 802 views
  18. சுதந்திர நாடு கோரி திபெத்தியர்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து உலகம் முழுவதும் உள்ள சீன தூதரகங்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் திபெத்தியர்கள். டில்லியில் உள்ள சீன தூதரகம் முன் பாதுகாப்பை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் உள்ள சீன தூதரகத்தில் அத்து மீறி நுழைந்த திபெத்தியர்கள் அங்கிருந்த சீன கொடியை வலுக்கட்டாயமாக இறக்கி திபெத் கொடியை ஏற்ற முற்பட்டனர். திபெத் தலைநகர் லாசாவில் இன்னும் பதட்டம் நிலவி வருகிறது. தலாய் லாமா சீன அரசுக்கு திபத்தியர்களை கவுரமாக நடத்துமாறு ‌வேண்டுகோள் ‌விடுத்துள்ளார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமைச்செயலகம் முன்பும் ‌போராட்டம் நடந்து வருகிறது. ஆதாரம் தினமலர்

    • 4 replies
    • 1.1k views
  19. ஆயிரமாயிரம் குடும்பங்களின் வாழ்க்கையை, மகிழ்ச்சியை தன்னுள் கரைத்த ஆழிப்பேரலையின் கொடூரத்தை, பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் பார்வையில் கோடு காட்டும் குறும்படம். http://www.keetru.com/video/neelam/arivumathi.wmv நன்றி கீற்று இணையம்

  20. நீங்கள் நினைத்தது என்ன? இதை கண்டுபிடிக்க ஜோதிடம் வேண்டாம்; அறிவியல் கண்டுபிடிப்பு வந்துவிட்டது. ஆம், அடுத்தவர் மனதில் இருப்பதென்ன என்பதை துல்லியமாக கண்டுபிடித்து விடலாம். நீங்கள் பார்க்கும் படம் மூளையில் ஆராய்ச்சி செய்வதில், அமெரிக்க நிபுணர்கள் புதிய ஆராய்ச்சி முடிவை கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக, கம்ப்யூட்டருடன் இணைந்த சாதனத்தை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். நிபுணர்கள் ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: மூளையில் உள்ள செல் அதிர்வுகளை வைத்து, அவற்றின் செயல்பாடுகளை கணக்கிடலாம். ஒரு விஷயம் பற்றி நினைக்கும் போது, மூளையின் சில செல்கள் இயங்குகின்றன; அவற்றின் அதிர்வுகள் மூலம், நம் மனதில் நினைக்கும் எண்ணங்களை வடிவமைக்கலாம்; இதற்கு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் முறை …

  21. உலகமயமாகி வரும் சூழ்நிலையில் ஏழு பாவச் செயல்கள் பட்டியலை வத்திக்கான் கத்தோலிக்க சர்ச் மாற்றியமைத்துள்ளது. வத்திக்கான் சர்ச், மனிதர்கள் செய்யக்கூடாத பாவச் செயல்கள் பட்டியலை ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. தற்போது, உலகமயமாகி வரும் சூழ்நிலை காரணமாக, இந்த பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வாடிகனின் பழமையான பாவப்பட்டியலில், ஏழு செயல்கள் பாவச் செயல்களாக அறிவிக்கப்பட்டு இருந்தன. சிற்றின்ப வெறி, பெருந்தீனி, பொருள் திரட்டும் பேராசை, சோம்பல், கோபம், பொறாமை, தற்பெருமை ஆகியவை பாவச் செயல்களாக அறிவிக்கப்பட்டு இருந்தன. தற்போது உலகமயமாகி வரும் சூழ்நிலையில், திருத்தி அமைக்கப்பட்டுள்ள பாவப்பட்டியலில், போதை கடத்தல், ஒழுக்கக் கேடான செயல்கள் மூலம் செல்வம் சேர்த்…

  22. ஊழலில் இந்தியாவை முந்தியது சீனா திகதி : Wednesday, 12 Mar 2008, [saranya] இந்தியாவை விட சீனாவில் ஊழல் அதிகரித்துவிட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆசியப் பகுதி சிந்தனையாளர் அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஆசியாவில் உள்ள 13 பெரிய நாடுகளில் நிலவும் ஊழல் பற்றி 400 தொழிலதிபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. 0 முதல் 10 வரை அவர்கள் மதிப்பெண் வழங்கினர். இதில் இந்தியாவுக்கு 7.25 மதிப்பெண்ணும், சீனாவுக்கு 7.98 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் (1.13), ஹாங்காங் (1.80), ஜப்பான் (2.25) ஆகிய நாடுகளில் குறைந்த அளவே ஊழல் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த வரிசையில் இந்தியாவுக்கு 8-வது இடமும் சீனாவுக்கு 10 வது இடமும் கிடைத்துள்ளது. அதிகமான ஊ…

    • 3 replies
    • 1.4k views
  23. கொலைக் குற்றச்சாட்டின் பேரில் டாக்டர் ஜெயந்த் அமெரிக்காவில் கைது [14 - March - 2008] டாக்டர் எமன் என வர்ணிக்கப்பட்ட ஜெயந்த் பட்டேல் அமெரிக்காவின் ஒரிகான் மாநிலத்திலுள்ள அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யபபட்டுள்ளார். தனது கடமைகளில் கவனயீனமாக இவர் இருந்ததால் இவரது நோயாளர்கள் பலர் இறந்தும் பலர் தீராத நோய்கள், தேவையற்ற சத்திரச் சிகிச்சைகள் போன்றவற்றுடன் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து பொலிஸாரால் இவர் கைது செய்ப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் 17 நோயாளிகளின் இறப்புக்கும் வேறு சிலரின் உடல் உபாதைகளுக்கும் அவரே பொறுப்பு என்று குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. …

  24. ஒபமாவை விமர்சித்த ஹிலாரியின் ஆலோசகர் இராஜினாமா 14.03.2008 / நிருபர் எல்லாளன் அமெரிக்க ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரக் ஒபமா கறுப்பினத்தவராக இல்லாதவிடத்து அவரால் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் திகழ முடியாது என விமர்சித்தமை காரணமாக பெரும் சர்ச்சைக்குள்ளான ஹிலாரி கிளின்டனின் ஆலோசகர், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ""ஒபமா வெள்ளையராக இருந்தால் அவர் இந்நிலைக்கு ஒருபோதும் வந்திருக்க முடியாது'' என ஹிலாரி கிளின்டனின் ஆலோசகரான ஜெரால்டின் பெர்ராரோ கலிபோர்னிய பத்திரிகையெ?985;்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். 1984 ஆம் ஆண்டு உப ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஜெ?992;ால்டின் பெர்ராரோ, ஹிலாரி கிளின்டனின் நிதிச் சபையிலான கௌரவ பதவி…

    • 0 replies
    • 826 views
  25. அவுஸ்திரேலியாவில் சீக்கிய மாணவர்கள் தலைப்பாகை அணிவதற்குத் தடை [05 - March - 2008] அவுஸ்திரேலியாவிலுள்ள பாடசாலைகளில் சீக்கிய மாணவர்கள் தலைப்பாகை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் குயின்லாந்து மாகாணத்திலுள்ள ஓர்மிஸ்டன் கல்லூரியிலேயே இத்தடை முதன்முதலாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் மாணவர்களின் பெற்றோரை அழைத்த கல்லூரி நிர்வாகம்; தலைமுடியை சீராக கத்தரித்து சீவியும் மாணவர்கள் பாடசாலைக்கு தலைப்பாகை அணியாமலும் வருகை தரவேண்டும். தலைப்பாகை அணிவதற்கு பாடசாலை விதிகளில் இடமில்லை. அதனால் இக்கட்டுப்பாடுகளை அம்மாணவர்கள் விரும்பாவிட்டால் அவர்களை கல்லூரியிலிருந்து நீக்குவதைத் தவிர வேறுவழி இல்லையெனத் தெரிவித்துள்ளது. இவ்விடயம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.