உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
சுருட்டு சாமியாரின் காம லீலைகள் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. குழந்தை வரம் கேட்டு சென்ற போலீஸ்காரரின் மனைவியை சுருட்டு சாமியார் `செக்ஸ்’ தொல்லை கொடுத்து நாசப்படுத்தியதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாமியாரிடம் மோசம் போன பெண்களின் பட்டியலை போலீசார் ரகசியமாக சேகரித்து வருகிறார்கள். ஜெயிலில் சுருட்டு சாமியார் சென்னை, வேளச்சேரி துர்கா அறக்கட்டளை ஆசிரமத்தை நடத்தி வந்த சுருட்டு சாமியார் பழனிச்சாமி, 2 மனைவிகள் இருக்கும் போது, 3-வதாக பெண் டாக்டர் திவ்யாவை ரகசிய திருமணம் செய்ததால் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். சுருட்டு சாமியார் மதுரைவீரன் சாமியை வைத்து, சாமி ஆடி குறி சொல்லி புகழ் …
-
- 9 replies
- 6.9k views
-
-
பெனாசிருக்கு தீவிரவாதி கள் மிரட்டல் இருந்த நிலையிலும் அவருக்கு முஷரப் அரசு உரிய பாதுகாப்பு வழங்காததால்தான் அவர் கொல்லப்பட்டு இருக்கிறார். தனது உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து குறித்து பெனாசிர் தனது நண்பரும் அமெரிக்க சி.என்.என். நிருபருமான ஒல்ப் பினிட்சருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஒரு இ- மெயில் அனுப்பி இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:- நான் பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறேன். முஷரப் எனக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை. எனக்கு வழங்கப்பட்டுள்ள கார் பாதுகாப்பானதாக இல்லை. எனது காரை சுற்றி 4 பக்கத்திலும் போலீஸ் பாதுகாப்பு வாகனம் வரவேண்டும். எந்த ஏற்பாடும் செய்யவில்லை. வெடிகுண்டை செயலிழக்க செய்யும் ஜாமர் கருவி பொருத்தவில்லை. வேறு வழி தெரியவில்லை. பாதுகாப்பற்…
-
- 0 replies
- 879 views
-
-
உலகை உலுக்கிய மோசமான படுகொலைச் சம்பவ வரிசையில் பெனாசிர் பூட்டோவின் கொலைச் சம்பவம் சேர்ந்துள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் உலகம் சந்தித்த மிக மோசமான சில படுகொலைச் சம்பவங்களின் பட்டியல். 1948, ஜனவரி, 30. தேசத் தந்தை மகாத்மா காந்தியை, நாதுராம் கோட்சே, நேருக்கு நேர் சுட்டுப் படுகொலை செய்தார். 1951, அக்டோபர், 16. பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலி கான், சுட்டுக் கொல்லப்பட்டார். 1975, ஆகஸ்ட், 15. வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் ராணுவ அதிகாரிகளால் கொல்லப்பட்டார். 1981, மே, 30. வங்கதேச அதிபர் ஜியா உர் ரஹ்மான் ராணுவ அதிகாரிகளால் கொல்லப்பட்டார். 1981, அக்டோபர், 6. எகிப்து அதிபர் அன்வர் அல் சதாத் இஸ்லாமிய த…
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு தீவிர ஆதரவளித்தவர்கள் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவுமே திருமாவளவன் [Monday December 24 2007 08:48:10 AM GMT] [யாழ் வாணன்] சென்னை, முதலமைச்சர் கருணாநிதி ஒரு போதுமே விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவுமே விடுதலைப் புலிகளுக்கு தீவிர ஆதரவளித்தவர்கள். பிரபாகரனுக்கு ஏதாவது நேர்ந்தால் தமிழகம் தாங்காது என்று கூட ஜெயலலிதா கூறியுள்ளார் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதான விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் வன்னியரசை பிணையில் விடுவிப்பதற்காக நான் முதலமைச்சரை சந்தித்தேன் என்பதை ஜெயலலிதா நிரூபித்தால். நான் அரசியலை விட்டே விலக…
-
- 4 replies
- 1.6k views
-
-
தமிழக அரசியல்வாதிகளிலேயே மிகவும் வித்தியாசமானவர் திரு.ரவிக்குமார் அவர்கள். ஆழ்ந்த அனுபவம், பரந்த வாசிப்பு, தீர்க்க சிந்தனை, வெளிப்படையான பேச்சு மற்றும் எழுத்து என்று அவர் மற்ற எந்த அரசியல்வாதிகளோடும் ஒப்பிட முடியாதபடி உயர்ந்து நிற்கிறார். தனிப்பட்ட முறையில் அவரோடு மிகவும் நெருக்கமாக பழகிய நண்பர்கள் இருக்கிறார்கள். மாற்றுக் கருத்துடையவர்களுடனும் மிகவும் அன்புடனும், அக்கறையுடனும் பழகுபவர் அவர் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஏற்கெனவே சல்மாவின் நாவலுக்கு ரவிகுமார் எழுதிய முன்னுரையைப் படித்து வியந்திருக்கின்றேன், இத்துனை ஆழமும், நேர்மையும், தீர்க்க சிந்தனையும் உள்ள அரசியல்வாதிகள் நம்மிடையேயும் இருக்கிறார்களே என்று. ரவிக்குமார் அவர்களின் இந்தக் கட்டுரை அவர்…
-
- 0 replies
- 1.3k views
-
-
சேலம் மாவட்டம் தைலானூர் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி வசந்தா (வயது 35). இவர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- எனக்கும், அய்யனார் என்பவருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு பூவரசன் என்ற மகனும், பிரகதி என்ற மகளும் உள்ள னர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கண வரின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. அவர் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு என்னை யும், குழந்தைகளையும் துன் புறுத்தி வந்தார். எனக்கு பெற்றோர் சீதன மாக கொடுத்த 15 பவுன் நகைகளை சமீபத்தில் பறித்துக் கொண்டு மேலும் ரூ.50 ஆயிரம் வரதட்சணை வாங்கி வா என்று என்னையும், குழந்தைகளையும் துரத்திவிட்டார். அதன்பின்னர் சில நாட்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
உலக அமைதியை வலியுறுத்தி 3 தமிழர்கள் சைக்கிள் பயணம் December 23rd, 2007 | பகுப்புகள்: உலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | உலக அமைதியை வலியுறுத்தி 3 தமிழர்கள் சைக்கிள் பயணம் உலக அமைதியை வலியுறுத்தி கோலாலம்பூரில் தமிழர்கள் 3 பேர் சனிக்கிழமை சைக்கிள் பயணத்தை தொடங்கினர். கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் அவர்கள் சைக்கிள் மூலம் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். செண்பக வைரவாஞ்சி வளமாறவழுதி(48) அவரது உறவினர்கள் கே.சுரேந்திரன்(42), ராஜேஷ்குமார் (22) ஆகியோர் இந்த அமைதி பயணத்தை மேற்கொள்கின்றனர். இவர்கள் மூவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் சைக்கிள் மூலம் பயணம் மேற்கொள்ளும் அவர…
-
- 0 replies
- 997 views
-
-
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வெப்படை என்.பி.காலனியை சேர்ந்தவர் வசந்த் (வயது 30), விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (24).இவர் நேற்று முன்தினம் வெப்படையில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றார். அங்கு அதே பகுதியை சேர்ந்த வசந்த் (30) என்ற பெயிண்டர் சினிமா பார்க்க வந்தார். பின்னர் சாந்தியின் இருக்கைக்கு நேராக பின் புறம் வசந்த் உட்கார்ந்தார். திரைப்படம் ஓடத் தொடங் கியதும் வசந்த் சாந்தியை செக்ஸ் சில்மிஷம் செய்தார். இதை சற்று எதிர்பாராத சாந்தி அந்த வாலிபரை முறைத்தார். இருந்தாலும் வசந்த் கண்டுகொள்ளாமல் செக்ஸ் சில்மிஷத்தை தொடர்ந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சாந்தி எழுந்து வசந்தை திட்டியதாக தெரிகிறது. அப்போது தியேட்டரில் இருந்தவர்களும் வசந்தை திட்ட…
-
- 0 replies
- 1.7k views
-
-
சென்னை மடிப்பாக்கத்தில் ஆசிரமம் நடத்தி வந்த சுருட்டு சாமியார் பழனிச்சாமி பெண்களை ஏமாற்றி 3 திருமணங்கள் செய்ததால் கைது செய்யப் பட்டார். முதல் மனைவி இருக்கும்போது கிருஷ்ணவேணி, ஓமியோபதி டாக்டர் திவ்யா ஆகியோரை மணந்தார். முதல் மனைவி சரசுவதி கொடுத்த புகாரால் சாமியார் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பழனிச்சாமி அந்தப் பகுதியில் குறி சொல்லி வந்தார். இதை கேள்விப்பட்டு குறி கேட்க வந்த பெண்களை அவர் மயக்கி தன் வலையில் விழ வைத்து இருக்கிறார். சாமியாரால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிய வருகிறது. ஆனால் வெளி உலகுக்கு பயந்து யாரும் புகார் செய்ய முன்வரவில்லை. சாமியாரால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் தைரியமாக முன்வந்து புகார் செய்யலாம். அவ…
-
- 4 replies
- 2.1k views
-
-
மறைந்தும் மறையாத தலைவர் மக்கள் திலகம் மறைந்து 20 ஆண்டுகள் -பண்ருட்டி இராமச்சந்திரன்- எந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால், எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம் தான் இருந்தது. அவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து இருபது ஆண்டுகள் சென்றபிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது. இருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த…
-
- 2 replies
- 1.7k views
-
-
வீட்டில் அடி வாங்கும் பெண்கள் "தம்' அடிப்பது அதிகரிப்பு : ஆய்வு தகவல் சிகரெட் புகைக்கும் பழக்கத்திற்கு இந்தியப் பெண்கள் அடிமையாவதற்கு, குடும்ப வன்முறைகளும் காரணமாக அமைக்கின்றன என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்தியாவில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் எண்ணிக்கை அதிகம். இப்படிப்பட்ட வன்முறைக்கும், பெண்களிடையே அதிகரிக்கும் புகை பிடிக்கும் வழக்கத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு சுகாதார மையத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. 199899ம் ஆண்டில், தேசிய குடும்ப சுகாதார ஆய்வு குறித்து இந்தியாவில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.லீலண்டு அகர்சன் மற்றும் சுப்ரம…
-
- 2 replies
- 1.2k views
-
-
சுனாமியின் கோரத்தாண்டவத்தில் 4 குழந்தைகளை பறிகொடுத்த பெண், குடும்ப கட்டுப்பாடு மறு ஆபரேஷன் செய்து 2 குழந்தைகளை பெற்றார். தற்போது அவர் 3-வது குழந்தை பெற கர்ப்பமாக உள்ளார். சுனாமியில் பறிகொடுத்த 4 குழந்தைகளையும் பெற்றெடுப்பேன் என்று அவர் சபதம் செய்து அதை நிறைவேற்றி வருகிறார். சுனாமி தாண்டவம் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி தாக்கிய சுனாமி பேரலைக்கு உலகின் பல நாடுகளில் லட்சக்கணக்கானவர்கள் பலியானார்கள். தமிழகத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பேர் வரை இறந்தனர். குமரி மாவட்டத்தில் பல கடற்கரை கிராமங்களில் ஏராளமானவர்கள் குடும்பம், குடும்பமாக உயிரிழந்தனர். குமரி மாவட்டம் குளச்சல் அருகேயுள்ள கொட்டில்பாட்டை சேர்ந்த ஒரு பெண் 4 குழந்தைகளை சுனாமிக்கு பறிக…
-
- 1 reply
- 1.5k views
-
-
(தினத்தந்தி) தஞ்சாவூர், நாகையில் கடல் உள்வாங்கியதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. கடல் உள்வாங்கியது 2004 டிசம்பர் 26 அன்று நாகையையே நாசப்படுத்திய சுனாமி பேரலைகளின் 3-வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன. இந்த சூழ்நிலையில், பருவ மழை நேரத்தில் பெரும் சீற்றத்துடனே காணப்பட்ட நாகை கடல், கடந்த சில நாட்களாக அமைதியாக காணப்பட்டது. நேற்று கடல் உள்வாங்கியதாக தகவல் வெளியானது. இதனால், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, நம்பியார்நகர், சாமந்தம்பேட்டை, ஆரியநாட்டுத் தெரு, பொய்கைநல்லூர், செருதூர் போன்ற கடலோர கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது. மீனவர் கருத்து இது குறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை துணைத் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:…
-
- 0 replies
- 1k views
-
-
உச்சிப்புளி கடற்கரைப்பகுதியில் 4 துப்பாக்கிகள் புதைத்து வைக்கப்பட்ட இடத்தில் மேலும் துப்பாக்கி புதையல் உள்ளதா என்று போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். துப்பாக்கிகள் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன்வலசை கடற்கரையில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) சிறுவர்கள் மணலைத் தோண்டி விளையாடிக்கொண்டிருந்த போது மணலில் 4 எந்திரத் துப்பாக்கிகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அவற்றை கைப்பற்றினர். இந்த துப்பாக்கியில் ஒரே நேரத்தில் 20 தோட்டாக்களை போட்டு தொடர்ந்து சுட முடியும். 200 மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளை கூட தாக்கும் சக்தி கொண்ட இந்த துப்பாக்கிகள் கொரில்லா தாக்குதலுக்கு பயன்பட…
-
- 0 replies
- 834 views
-
-
சோமாலியாவில் ஆபிரிக்க ஒன்றிய படைகளுடன் புருண்டி படை இணைவு [25 - December - 2007] [Font Size - A - A - A] புஜும்புரா: சோமாலியாவில் சமாதானத்துக்காக போராடும் ஆபிரிக்க ஒன்றியப் படைகளுடன் இணைவதற்கு புருண்டி அரசு தனது நூறு இராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது. மொகாடிசுவின் அரச படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் நான்கு பொதுமக்கள் பலியானதைத் தொடர்ந்து இந்நூறு படையினரும் கடுமைான பாதுகாப்புகளுக்கு மத்தியில் மோஹாடிசு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர். இங்கு ஏற்கனவே கடமையில் ஈடுபட்டுள்ள 8000 படையினரின் பலத்தை மேலும் வலுவடையச் செய்யும் நோக்குடன் மேலும் 1,600 உகண்டாவின் இராணுவத்தினரும் சேர்க்கப்படவுள்ளனர். ஆனால், இங்கு தொடர்ந்த…
-
- 0 replies
- 823 views
-
-
மதம் மாறினார் டொனி பிளேயர் செய்தியை படிக்க.... http://www.dinamalarbiz.com/demo11/worldne...=row3&ncat=
-
- 0 replies
- 759 views
-
-
அவுஸ்திரேலியாவில் புதுவாழ்வுக்கான எதிர்பார்ப்புடன் நாரூதீவில் காத்திருக்கும் 74 இலங்கை அகதிகள் [Tuesday December 25 2007 09:37:52 AM GMT] [pathma] நாரூதீவில் கடந்த மார்ச் முதல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 74 இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவில் புதுவாழ்வை ஆரம்பிப்பதற்கான எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். நாரூவிலுள்ள தடுப்பு முகாமை மூடிவிடுவதில் அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட் உறுதியாக உள்ளார். அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவை சென்றடையும் நோக்கத்துடன் கடந்த மார்ச்சில் படகில் பயணித்த 83 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கடந்த செப்டெம்பரில் அவர்களில் 74 பேருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது. தமது தாயகத்திற…
-
- 0 replies
- 961 views
-
-
We don't just put our material survival at risk, more profoundly we put our spiritual sensitivity at risk "- Dr Rowan Williams நத்தார் தின உரை நிகழ்த்திய பிரித்தானியாவில் உள்ள கிறிஸ்தவ மதத்தலைவர் ஒருவர் மனிதர்கள் சுயநலத்தோடு இயங்கி இயற்கையை நாசம் பண்ணி வருவதை தவிர்த்து இயற்கையைப் பாதுகாக்க முன்வருவதுடன் மனித மனமெங்கும் மனிதாபிமானத்தை கட்டி வளர்க்க முன் வர அழைப்பு விடுத்துள்ளார்..! அதுமட்டுமன்றி பிரிட்டனில் நல் வாழ்க்கை இருக்கென்று நம்பி அதை நோக்கிக் குடிபெயரும் மக்களை நேசக்கரம் கொண்டு அணைக்க வேண்டும் வரவேற்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். The planet should not be used to "serve humanity's selfishness", he told worshippers at Canterbury Cathedral. The …
-
- 0 replies
- 826 views
-
-
இருதய நோயைத் தடுக்கும் கோழி முட்டையை தமிழகத்தைச் சேர்ந்த கோழிப்பண்டை நிறுவனமம் அறிமுகம் செய்துள்ளது. தமிழகம் கோவை என்ற இடத்தில் அமைந்துள்ள சுகுணா பவுல்ட்ரி பாம் என்ற நிறுவனம் சுகுணா கார்ட் என்ற ஒரு வகை கோழி முட்டையையும் சுகுணா ஆக்ரிவ் என்ற மற்றொரு கோழி முட்டையையும் அறிமுகம் செய்து வைத்துள்ளது. சுகுணா காட் ரக முட்டை ஏனைய முட்டையைவிட 24 விழுக்காடு கொழுப்புச் சத்து குறைவானது. இந்த முட்டை இருதய நோய், அதிக பதற்றம், ஒவ்வாமை, நீரிழிவு நோய் வராது தடுக்க ஆற்றல் கொண்டது. இருதய நோய் வராது தடுக்கும் விற்றமின் - E , ஒமேகா அசிட் என்பன இந்த முட்டையில் உள்ளடங்குகின்றன. சுகுணா ஆக்ரிவ் ரக முட்டை புற்றுநோய், எயிட்ஸ், ஹைபோதேரிடியம் ஆகிய நோய்கள் வராது தடுக்க உதவு…
-
- 1 reply
- 1.3k views
-
-
பாலத்தீனியர்களின் தலைநகரான ஜெருசேலத்தில் தொடர்மாடி யூதக் குடியிருப்புகளை அமைக்கவுள்ளதாக இல்ரேலிய அரசாங்கம் அறித்துள்ளது. ஜெருசேலத்தின் கிழக்கே உள்ள ஹர் ஹோமா என்ற பகுதியல் 500 வீடுகளையும், மாலேஹ் ஆதுமிம் பகுதியில் 240 வீடுகளைக் கட்டவும் இஸ்ரேலிய அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது. கோபத்துக்குகு உள்ளாகிய பாலஸ்தீனிய அரசியல் தலைவர்கள் குடியேற்றத் திட்டங்கள் எதிர்காலத்தில் பேச்சு வார்த்தைகளைப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஜெருசேலம் விவகாரகங்களுக்கான அமைச்சர் ஜெருசேலம் பகுதியில் குடியேற்றங்களை இஸ்ரேல் அரசாங்கம் அமைக்காது என ஒருபோதும் கூறியதில்லை எனத் தெரிவித்துள்ளார். pathivu.com
-
- 0 replies
- 694 views
-
-
ஆப்கானிஸ்தானில் நேட்டோவும் அதன் கூட்டுப் படைகளும் தோல்வி காணக்கூடாது என பிரான்ஸ் அதிபர் நிக்கோலா சர்கோசி தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்திருக்கும் பிரான்ஸ் அதிபர், தலைநகர் காபூலில் உரையாற்றும் போது... ஆப்கானிஸ்தான் நிலைகொண்டுள்ள நேட்டோவும் அதன் கூட்டுப்படைகளும் தீவிரவாதிகளிடம் (தலிபான்கள்) தோல்வி காணக்கூடாது. ஆப்கானிஸ்தானில் பிரான்ஸ் படைகள் தொடர்ந்து தங்கியிருப்பது குறித்த முடிவை இன்றும் சில வாரங்களில் உறுதியான முடிவு எடுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதேநேரம் அவுஸ்ரேலியாவின் புதிய அதிபர் கெவின் ரட் அவர்களும் ஆப்கானுக்கான பயணத்தை நேற்று சனிக்கிழமை மேற்கொண்டுள்ளார். pathivu.com
-
- 0 replies
- 692 views
-
-
சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கப்பல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கப்பல் நீரில் மூழ்கியிருப்பது 1987ம் ஆண்டு சீனர் கண்டுபிடித்தனர். இக்கப்பல் இருபது வருடங்களின் பின்னர் நேற்று சனிக்கிழமை (22-12-2007) அன்று வெளியே எடுக்கப்பட்டுள்ளது. 30 மீற்றர் கடல் மணலுக்குள் அக்கப்பல் புதையுண்டு காணப்பட்டுள்ளது. தற்போது வெளியே எடுக்கப்பட்ட கப்பல் இன்னொரு கப்பலின் மேல் வைக்கப்பட்டுள்ளது. இக்காட்சியை சீனாவின் அனைத்து ஊடகங்களும் ஒளிபரப்புச் செய்தன. இக்கல்பலிருந்து தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களினால் செய்யப்பட்ட 4 ஆயிரம் கலைப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இக்கப்பல் சீனாவின் அருங்காட்சியகத்தில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 8…
-
- 0 replies
- 854 views
-
-
செய்வாய் கோள் மீது அடுதமாதம் எரிநட்சத்திரம் மோதவுள்ளதாக ரஷ்சிய விஞ்ஞான அக்கடமியின் பேச்சாளர் செர்ஜி மின்னோவ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்... எதிவரும் புதிய ஆண்டு சனவரி மாத்தத்தில் செவ்வாய் கோள் மீது எரிநட்சத்திரம் மோதவுள்ளது. எரிநட்சத்திரம் வினாடிக்கு 8 மைல் வேகத்தில் பயணம் செய்கின்றது. இதனால் பூமிக்கு எதுவித பாதிப்பும் இல்லை. எரிநட்சத்திரம் தனது ஓடு பாதையை மாற்றிச் செல்லவும் வாய்ப்பு இருக்கின்றது. இதேநேரம் 2028ம் ஆண்டு பூமியில் அருகே பெரிய எரிநட்சத்திரம் செல்லவுள்ளது. அது பூமியுடன் மோதினால் பெரும் தேசம் ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் pathivu.com
-
- 0 replies
- 867 views
-
-
பூரண வசதிகளுடன் தஞ்சாவூரில் போர் விமானப்படைத் தளம் [22 - December - 2007] தமிழ் நாட்டின் தஞ்சாவூருக்கு அருகே முழு அளவில் யுத்தத்தை நடத்தக்கூடிய வசதிகளுடனான பாரிய படைபோர் விமானத்தளமொன்றை விரைவில் இந்திய விமானப்படை நிர்மாணிக்கவுள்ளது. பிரதான கடல்மார்க்க தொடர்பாடல்களை கண்காணிப்பதற்காக பயன்படுத்தப்படவுள்ள இந்தப் படைத்தளமானது இந்தியாவின் தென் மண்டலத்திலுள்ள ஆயுதப்படைகளை போர்புரிவதற்கு தயாரான நிலையில் எப்போதும் வைத்திருப்பதற்கான திட்டத்தின் ஒரங்கமாகவும் இருக்குமென சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி `இந்து' பத்திரிகை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. கிழக்காசிய நாடுகள் மற்றும் இந்தியாவுக்கான எரிபொருள் உட்பட உலக வர்த்தகத்தின் 60 சவீதமானவை இடம் பெற்றுவ…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒலிம்பிக் போட்டியால் வடகொரியாவும் தென்கொரியாவும் ஒன்றிணைந்தன [23 - December - 2007] [Font Size - A - A - A] ஒலிம்பிக் போட்டியின் நிமித்தம் பல வருடங்களாக கீரியும் பாம்புமாக இருந்துவந்த வடகொரியாவும் தென் கொரியாவும் அடுத்தாண்டு சீனாவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு ஒருங்கிணைந்து பங்குபற்றுவதென்று முடிவு செய்துள்ளன. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி சீனாவின் பெய்ஜிங் நகரில் ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இதற்கிடையில் ஒலிம்பிக் தீபம் 5 கண்டங்களுக்கூடாகவும் வலம்வர ஆரம்பித்துவிட்டது. 24 நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட இருக்கும் இந்த ஒலிம்பிக் தீபம் மொத்தம் 137,000 கிலோமீற்றர் பயணம் செய்யவுள்ளது. ஒலிம்பிக் தீபம் கடந்தவாரம் புதுடில்லிக்குக் …
-
- 0 replies
- 765 views
-