Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தூதர் கொலை சம்பவம் ரஷ்யா, துருக்கி இடையிலான ஒத்துழைப்பை பாதிக்காது: அதிபர் எர்டோகன் ரஷிய தூதர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை பாதிக்காது என்பதில் துருக்கி மற்றும் ரஷ்யா உறுதியாக உள்ளது என்று அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். அங்காரா: துருக்கிக்கான ரஷிய தூதராக பதவி வகித்து வந்தவர் ஆண்ட்ரே கார்வேஸ். அங்காரவில் நடந்த ஓவிய கண்காட்சியை பார்வையிட வந்த ஆண்ட்ரேவை மெவ்லட்மெர்ட் அய்டின் டாஸ் (22) என்ற போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டார். இதனால் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார். சிரியாவின் காலப்போ நக…

  2. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு அடி உயரத்திற்கு பனிக் கட்டிகள் உருவாகியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டென்வர், கொலின்ஸ் உள்ளிட்ட சில பகுதிகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராக்கி மலைப்பகுதியை ஒட்டியுள்ள கொலராடோவில் பனிப்பொழிவு ஏற்படுவது வாடிக்கைதான் என்றாலும், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு தற்போது ஏற்பட்டுள்ளது. http://puthiyathalaimurai.tv/heavy-snowfall-in-colarado

  3. சதித்திட்டத்தின் பின்னாலுள்ள மியான்மர் இராணுவத் தலைவர்கள் மீது பைடன் பொருளாதாரத் தடைகள் விதிப்பு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மியன்மாரில் நடந்த இராணுவ சதித் தலைவர்களுக்கு பொருளாதாரத் தடை விதிக்கும் நிறைவேற்று ஆணையில் புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளார். இது ஆட்சி கவிழ்ப்பை வழிநடத்திய இராணுவத் தலைவர்கள், அவர்களின் வணிக நலன்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீது நேரடியாக தாக்கம் செலத்துகிறது. இது தொடர்பில் வெள்ளை மாளிகையில் உரையாற்றிய பைடன், இன்று, சதித்திட்டத்தின் தலைவர்கள் மீது விளைவுகளை சுமத்தத் தொடங்குவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளை நான் அறிவிக்கிறேன். பர்மிய (மியான்மர்) அரசாங்கத்தில் ஒரு பில்லியன் டொலர்களை ஜெனரல்கள் முறையற்ற முறையில…

  4. முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனையும், 1940ஆம் ஆண்டுகளில் ஹாலிவுட்டின் கவர்ச்சிக்கன்னியாகவும் திகழ்ந்த Esther Williams நேற்று லண்டனில் காலமானார். அவருக்கு வயது 91 1940 ஆம் ஆண்டு நீச்சல் போட்டியின் சாம்பியனாக திகழ்ந்த Esther Williams, பின்னர் ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். கறுப்பு வெள்ளை படங்கள் எடுக்கும் காலத்திலேயே திரையில் நீச்சலுடையில் தோன்றி ரசிகர்களை தனது கவர்ச்சியால் கவர்ந்து இழுத்துவர். இவருடைய கவர்ச்சியை நம்பி தயாரிப்பாளர்கள் பெரும் பணத்தை முதலீடு செய்து மிகப்பெரிய லாபத்தையும் அடைந்தனர். Gene Kelly and Frank Sinatr போன்ற புகழ்பெற்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பெரும் புகழை பெற்றார். 1962 ஆம் ஆண்டு Fernando Lamas என்பவருடன் இவருக்கு திருமணம் ஆனது. அதன…

    • 0 replies
    • 390 views
  5. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், இராக்கில் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள மோசூல் நகரின் மேற்கு பகுதியை நோக்கி இராக்கிய படைகள் முன்னேற்றம். அங்கு படைகளுடன் களத்தில் பிபிசி செய்தியாளர். வடகொரிய தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரரின் கொலையை அடுத்து மலேசிய - வடகொரிய உறவில் உரசல். வடகொரியாவுக்கான தனது தூதரை மலேசியா திரும்ப அழைத்துள்ளது. நீங்கள் இறக்கும்போது உங்கள் மூளையை மருத்துவ பரிசோதனைக்கு தானமாக வழங்வீர்களா? எதிர்கால சிகிச்சைகளுக்காக அதிகமான மூளைகள் மருத்துவர்களுக்கு தேவைப்படுகின்றது.

  6. மணிப்பூர் மாநிலம் மற்றும் மியான்மர் நாட்டிற்கும் இடையேயான எல்லைப் பிரச்னையில், தமிழர்களின் கோவிலை, மியான்மருக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என, மணிப்பூர் அரசு உறுதியாக தெரிவித்துஉள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூருக்கும், அதன் எல்லையில் உள்ள, மியான்மர் நாட்டிற்கும் இடையே, நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை நிலவுகிறது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து, 100 கி.மீ., தொலைவில் உள்ள மோரே என்ற இடத்தில், தமிழர்களுக்கு சொந்தமான கோவில் உள்ளது. மணிப்பூர் மாநிலத்திற்குள் அமைந்துள்ள அந்த கோவிலைச் சுற்றி, 17 ஆயிரம் தமிழர்களும் வசித்து வருகின்றனர். அந்த பகுதியை, மியான்மர் அரசு, தன் பகுதி எனக் கோரி வருகிறது. அதை மணிப்பூர் அரசு மறுத்து வருகிறது.""மோரே பகுதி, மணிப்பூர…

  7. சென்னை: லண்டனில் நடக்கும் சர்வதேச பட விழாவில் பாலா இயக்கிய பரதேசி படம் எட்டு பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ‘சேது' துவங்கி ‘பரதேசி' வரை ஆறு படங்களை இயக்கியுள்ள பாலா, ‘நான் கடவுள்' படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும், மற்ற படங்களுக்காக நான்கு தேசிய விருதுகளையும், ஆறு சர்வதேச தமிழ்த் திரைப்பட விருதுகளையும், பல மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். பி.எச். டேனியல் எழுதிய ‘ரெட் டீ' என்ற ஆங்கில நாவலை மொழிபெயர்த்து தமிழில் வெளிவந்த ‘எரியும் பனிக்காடு' என்ற நாவலை அடிப்படையாக கொண்டு ‘பரதேசி' படத்தை பாலா உருவாக்கினார். கடந்த மார்ச் மாதம் உலகெங்கிலும் வெளியான பரதேசியின் சிறப்பைப் பார்த்து பிரமித்த இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் வடஇந்தியா முழ…

  8. தலிபான்களின் புதிய அரசாங்கத்தில் உயர் பதவிகளில் பெண்களுக்கு இடமில்லை: தலிபான் அமைப்பு! ஆப்கானிஸ்தானில் விரைவில் புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ள தலிபான்கள், புதிய அரசாங்கத்தில் உயர் பதவிகளில் பெண்களுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளனர். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிய அரசாங்கத்துடனும், மக்கள் பிரதிநிதிகளுடனும் தலிபான்கள் பேசியதற்கு முரண்பட்டதாக உள்ளது. முன்னதாக, ஜனாதிபதி, பிரதமர் தவிர மற்ற அனைத்துப் பதவிகளிலும் பெண்கள் இருப்பார்கள் என்றும் நிறுவனத் தலைவர்களாக இருக்கலாம் என்றும் அப்போது தலிபன்கள் கூறியிருந்தார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கம் அமையும் என்று கட்டாரில் உள்ள அந்த அமைப்பின் அரசியல் பிரிவு துணைத் தலைவர் அப்பா…

  9. அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்த இந்தியா முஜாகிதீன் இயக்க தலைவர் யாசின் பட்கல் திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது. புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த யாசின் பட்கல் மற்றும் அவனது கூட்டாளி அசதுல்லா அக்தர் ஆகிய இருவரும் இந்திய நேபாள எல்லையில் தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட வந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தற்போது அல்கொய்தா இயக்கத்தை வழிநடத்த வரும் ஜவாகிரியுடன் யாசின் பட்கல் தொடர்பில் இருந்தது வந்தது தெரியவந்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி அமைதியை குலைக்க அல்கொய்தாவின் உதவியை யாசின் பட்கல் நாடியதை…

  10. பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தல்: அதிபர் மெக்ரான் கட்சி வெற்றி பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்றத் தேர்தலில் முழுப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றுள்ளது அதிபர் மெக்ரான் கட்சி. பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக 39 வயதான இமானுவேல் மெக்ரான் கடந்த மே மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்டின் எம்பி-க்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதற்கான பாராளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. மொத்தம் 577 எம்பி., எண்ணிக்கைகள். அதிபர் மேக்ரானின் கட்சி மொத்தம் உள்ள 577 இடங்களில் 355-ல் இருந்து 425 இடங்கள் வரை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. பாராளுமன்றத் தேர்தலில் அதிபரின் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், மேக்ரான் முன்வைத்த பொருளா…

  11. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம், சாம்சங் நிறுவனத்தின் மேல் அமெரிக்க நீதிமன்றத்தில் தனது வடிவமைப்பை (Design) அனுமதியின்றி பயன்படுத்துவதாக வழக்கு தொடுத்திருந்தது. ஓரங்களில் வளைவுகளோடு கூடிய செவ்வக வடிவம் மற்றும் தொடு திரையில் விரல் தீற்றல் மூலம் கைபேசியை அன்லாக் செய்வது உள்ளிட்டவை தனது சொந்தக் கண்டுபிடிப்பு என்று உரிமை கோரியிருந்தது ஆப்பிள் நிறுவனம். செவ்வக வடிவத்திற்குக் கூட உரிமை கோரிய இந்த கேலிக்கூத்தான வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் ஆப்பிள் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. மைக்ரோசாப்ட், வால்மார்ட், கோக் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களோடு ஆப்பிள் நிறுவனமும் அமெரிக்கப் பெருமிதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மேற்படி நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி மற்றும் சந்தை அணுகுமுறை என…

  12. லிபிய கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்துக்களில் 160 க்கும் மேற்பட்டோர் பலி கடந்த வாரத்தில் லிபியா கடற்பரப்பில் இரண்டு வெவ்வேறு கப்பல் விபத்துகளில் 160 க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஐ.நா குடியேற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் சிறந்த வாழ்க்கையைத் தேடும் அகதிகள் சம்பந்தப்பட்ட மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகரமான சம்பவம் இதுவாகும். இந்த இறப்புகளினால் மத்திய மத்தியதரைக் கடல் பாதையில் இந்த ஆண்டு நீரில் மூழ்கி இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1,500 ஆக உயர்வடைந்துள்ளது. சமீபத்திய மாதங்களில் திரிபோலியில் அகதிகள் மீதான அடக்குமுறையை அந் நாட்டு அதிகாரிகள் முடுக்கிவிட்டதால், லிபியாவிலிருந்து ஐரோப்பிய நடுகள…

  13. மத்திய பிரதேச மாநிலத்தில், கடந்த நான்கு மாதங்களில் 30 ஆயிரம் சிறுமியர் காணாமல் போய் உள்ளனர். இவர்கள், கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டு இருக்கலாம் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மத்திய பிரதேச மாநில, காங்கிரஸ் தலைவர் காந்திலால் பூரியா இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில், "மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதாக ஆட்சியின் கீழ், சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. பழங்குடியின மக்கள் வசிக்கும் மாவட்டங்களில், ஆட்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இங்கு, கடந்த நான்கு மாதங்களில் மட்டும், 30 ஆயிரம் சிறுமியர் காணாமல் போய் உள்ளனர். இவர்கள், ஆள்கடத்தும் கும்பலால் கடத்தப்பட்டு உள்ளனர். இந்த சம்பவங்களை மாநில அரசும், பொலிஸும் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். இத…

  14. ட்ரம்பின் முக்கிய ஆலோசகர் பதவி நீக்கம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முக்கிய ஆலோசகர் நேற்று பதவி நீக்கம் செய்யப்படுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. வலதுசாரி அரசியில் நோக்குகளில் பிரபல்யம் பெற்ற ஸ்டீபன் பன்னன் டிரம்பின் அரசியல் திட்டங்களின் பின்னணியில், பல இஸ்லாமிய நாடுகளில் உள்ளவர்களுக்கு விதித்த பயணத் தடைத் திட்டம் உட்பட, பல திட்டங்களின் பின்னணியில், இவர் ஒரு பலம் வாய்ந்த சக்தியாக இருந்து வந்துள்ளார் . கடந்த சனிக்கிழமையன்று வெர்ஜீனியாவின் பட்டினமொன்றில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக இவர் வெளியிட்ட முரண்பாடான கருத்துக்களே இவரின் பதவி நீக்கத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகின்றது. 63 வயதான ஸ்டீபன் முன்னாள் கடற…

  15. இந்தாள் ஒரு பெரிய நாட்டுப்பற்றுள்ள மனிதந்தானப்பா. தனது உக்ரேன் மீதான வலுத்தாக்குதலுக்கான (offense) மெய்யான மிகச் சிறந்த ஏரண விளக்கத்தை அந்த ஊடகவியலாளர்க்கு கொடுக்கின்றார். தனது வீட்டின் வாசலில் எவனேனும் பாரிய ஆயுதங்களைக் கொண்டு வந்து குவித்து விட்டு நான் உன்வீட்டின் மீது படையெடுப்பேன் என்றால் 'முந்துபவன் வெல்வான்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் முந்திச் செயல்பட்டு தன் நாட்டைக் காத்துள்ளதான தொனியில் விளக்கம் அளிக்கின்றார். அவர்தம் மேலும் பல விளக்கங்களைக் காண கீழுள்ள நிகழ்படத்தை சொடுக்குக. 👌

  16. பிலிப்பனிஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரனமாக் அங்கு கடும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆயிரகணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். கம்போஸ்ட்லா பள்ளதாக்கு மாகாணத்தில் வெள்ளத்திற்கு 6 பேர் பலியானார்கள். இதுபோல் டவா ஓரிண்டல் மாகாணத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். 10 மாகானங்களில் இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.என பேரிடர் மீட்பு குழு தெரிவித்து உள்ளது. கடந்த 212 ஆம் ஆண்டு டிசமபர் மாதம் இதேபகுதியில் ஏற்பட்ட தய்பூன் புயலுக்கு 2000-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். http://www.dailythanthi.com/2014-01-13-13-dead%252C-7-missing-in-Philippine-floods

  17. ஜெர்மனி: எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் ஏஞ்சலா மெர்க்கல் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் ஜெர்மனி பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்லின் பழமைவாத கூட்டணி 246 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இழுபறி நிலை காரணமாக எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அவர் மீண்டும் ஆட்சி அமைக்கிறார். பெர்லின்: ஜெர்மனி பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்லின் பழமைவாத கூட்டணி 246 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இழுபறி நிலை காரணமாக எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அவர் மீண்டும் ஆட்சி அமைக்கிறார். வலிமையான ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக திகழும் ஜெர்மனியில் 2005-ம் ஆண்டு முதல் ஏஞ்சல…

  18. சீன ஆற்றில் மிதந்த 21 குழந்தைகள் பிணம் சீனாவில் உள்ள ஜினிங் நகரில் காங்பூ என்ற ஆறு ஓடுகிறது. இதில் தேங்கி கிடந்த தண்ணீரில் ஏராளமான குழந்தைகள் பிணங்கள் கிடந்தன. அனைத்து குழந்தைகளுமே பிறந்தவுடன் இறந்த குழந்தைகள். எப்படி குழந்தைகள் பிணம் இங்கு வந்தது என்று விசாரித்தபோது அருகில் உள்ள மருத்துவ பல்கலைக்கழக வைத்தியசாலையில் இறந்த குழந்தைகளை ஆற்றில் போட்டு இருப்பது தெரிந்தது. வைத்தியசாலையில் இறந்த குழந்தைகளை அங்குள்ள பிண அறைகளில் ஒப்படைத்து இருந்தனர். அவற்றை ஊழியர்கள் புதைப்பதற்கு பதிலாக சாக்கடை குழாயில் போட்டுவிட்டனர். சாக்கடை தண்ணீரோடு சேர்ந்து குழந்தை பிணங்களும் ஆற்றில் வந்து விழுந்தன. அவை தண்ணீரில் அடித்து செல்லப்படாமல் அங்கேயே மிதந்து கொண்டிருந்தது த…

    • 0 replies
    • 564 views
  19. Guatemala Sinkhole Is Serious Business (Pics) Residents of Guatemala City may be thinking the world is trying to swallow them after the mother of all sinkholes appeared in a city street. The Guatemala sinkhole opened up on Sunday in Guatemala City following a drenching by tropical storm Agatha. The depth of the sinkhole is unknown at this stage, but as you can see from the pictures, it appears to be rather deep. Some discussion around the Guatemala sinkhole (or Guatemala crater as some are calling it) is suggesting that the picture is photoshopped: we can’t say for sure that it isn’t, but we do know the source of the photos: both come from …

    • 0 replies
    • 560 views
  20. அரசு ஊழியர்கள் மாநாட்டில் ஜெயலலிதா கூறிய கதை சென்னையில் நடந்த அரசு ஊழியர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசும்போது ஒரு கதையை கூறினார். அவர் பேசியதாவது:- நல்லாட்சியின் அடையாளம் அரசின் திட்டமிட்ட பயன்கள், ஏழை எளிய மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்திட, அந்த அரசின் சேவை செயலாக்க ஏற்பாடு மேம்படுத்தப்பட வேண்டும் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு கோட்பாடு ஆகும். ஒரு புறம், அரசு அலுவலர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, அதன் வாயிலாக அவர்கள் மக்களுக்கு மேலும் சிறப்பாக சேவை ஆற்ற ஊக்கம் அளித்திட வேண்டும் என்னும் நிலை; மறுபுறம், ஏழை எளிய மக்களுக்கு போதிய பயன்கள் உரிய நேரத்தில் சென்றடைவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்னும் நிலை. இந்த இரண்ட…

  21. வான் பாதுகாப்பு அமைப்புகளை... அனுப்புமாறு, உக்ரைன் ஜனாதிபதியின்... மனைவி, கோரிக்கை! ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புமாறு உக்ரைன் ஜனாதிபதியின் மனைவி ஒலனா ஸெலன்ஸ்கா கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். இதன்போது அவர் கூறுகையில், ‘துரதிர்ஷ்டவசமாக போர் முடிவுக்கு வரவில்லை. பயங்கரவாதம் தொடர்கிறது. இந்த போரில் கொல்லப்பட்டவர்கள் சார்பாகவும், கை கால்களை இழந்தவர்கள் சார்பாகவும், இன்னும் உயிருடன் இருப்பவர்கள் சார்பாகவும், போர் நடைபெறும் முன்களப் பகுதியில் இருந்து தங்கள் குடும்பத்தினர் திரும்ப வ…

  22. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பிரிவினைவாதிகளின் பிடியில் படத்தின் காப்புரிமைEPA பிரிவினைவாதிகளின் கட்டுபாட்டுக்குள், ஏமனின் தெற்கு துறைமுக நகரமான ஏடன் முழுக்க சென்றதாக ஏமன் மக்கள் கூறுகின்றனர். தெற்கு ஏமனை தனி நாடாக அறிவிக்கக்கோரு…

  23. வான் கருணை: “கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்ட கேப் டவுனில் பெய்தது மழை” இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். கேப் டவுனில் மழை படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES வறட்சியால் சூழப்பட்டு கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள கேப் டவுனில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்க…

  24. அனல் மின் நிலையம் மீது தாக்குதல்; இருளில் மூழ்கிய கிழக்கு உக்ரைன்: ரஷ்யாவுக்கு ஜெலன்ஸ்கி கண்டனம் தாக்குதலுக்கு உள்ளான உக்ரைன் அனல்மின் நிலையம் கீவ்: உக்ரைனில் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் நடத்தி மின் விநியோகத்தை தடைப்படச் செய்த ரஷ்யப் படைகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தொடங்கிய இத்தாக்குதல் 6 மாதங்களைக் கடந்தும் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் வடமேற்கு உக்ரைனில் இசியம் எனும் பகுதியில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கிய செய்திகள் வெளியாகின. இது ரஷ்ய போரில் திருப்புமுனை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், உக்ரை…

  25. 41 வயது மதிக்கதக்க ஒருவர் லண்டன் மாட்ரிட் தொடரூந்து நிலையத்தில் நிற்கும் போது , தவறுதலாக பின்னோக்கி நடந்து தண்டவாளத்தில் தலையின் பின் பக்கம் அடிபட விழுந்துள்ளார் , முள்ளந்தண்டிலும் தலையிலும் அடிபட்ட காரணத்தினால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை , அவர் குறுக்கே இருக்கமால் தண்டவாளத்துக்கு நடுவே நகர்த்தி கொள்கிறார் , அப்போது இன்னும் ஒரு நிமிடத்தில் தொடரூந்து வர இருப்பதாக நிலையத்தில் காண்பிக்க படுகிறது , தொடரூந்தை மக்கள் காண மக்கள் அதனை மறிக்க முற்படுகின்றனர் ..... ஆனால் ..30 வயது உடைய முந் நாள் போலீஸ் அதிகாரி ஒருவர் உடனடியாக குதித்து அம் மனிதரை சரியான நேரத்தில் காப்பாற்றுகிறார் இக் காட்சியை நிலைய கமராக்கள் படம் பிடித்துள்ளது .. வீடியோ வை இங்கே பாருங்கள். http…

    • 0 replies
    • 609 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.