உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26625 topics in this forum
-
அணுசக்தி உடன்பாடு - இந்திய நாடாளுமன்றத்தில் அமளி. ஜ வெள்ளிக்கிழமைஇ 17 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ இந்தியா - அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாடு குறித்து, இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வியாழக்கிழமை அமளி ஏற்பட்டது. இந்தியா எதிர்காலத்தில் அணுகுண்டு சோதனை நடத்துவதற்கு ஒப்பந்தத்தில் எந்தத் தடையும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங்கும் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூறிவருகிறார்கள். ஆனால், அணுகுண்டு சோதனை நடத்தினால் இந்தியாவுடனான அணுசக்தி உடன்பாடு ரத்துச் செய்யப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் புதன்கிழமையன்று வாஷிங்டனில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமை மக்களவை கூடியதும், தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்ட…
-
- 0 replies
- 641 views
-
-
August 16,2007 இலங்கை தமிழர்களின் அவல நிலையை சித்தரிக்கும் வகையில், "ஆணிவேர்" என்ற ஒரு தமிழ் திரைப்படம் தயாரிக்கப்பட்டு ள்ளது. இந்த படத்தை தமிழ்நாட்டில் திரையிட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு தணிக்கை குழுவின் அனுமதி கிடைக் குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. "ஆணிவேர்" இலங்கை (Srilanka) அரசாங்கத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக யுத்தம் நடந்து வருகிறது. த மிழர்கள் வசிக்கும் பகுதியை தனி நாடாக அறிவிக்கக்கோரி, விடுதலைப்புலிகள் போராடி வருகிறார்கள். இதனால் இலங்கை அரசாங்கம், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட தமிழர்களின் அ வலநிலையை சித்தரிக்கும் வகையில், ஒரு தமிழ் திரைப்படம் தயாராகி இருக்க…
-
- 6 replies
- 1.7k views
-
-
பெரு நாட்டில் மிக பயங்கர நிலநடுக்கம்-320 பேர் பலி ஆகஸ்ட் 16, 2007 பெரு: தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 320 பேர் உயிரிழந்து விட்டனர். இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் உருவாகலாம் என எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், சுனாமி தாக்குதல் ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கம் நேற்று மாலை 6.40க்கு (இந்திய நேரப்படி இரவு 11.40க்கு) நிகழ்ந்துள்ளது. கடல்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியது. இதில் 320 பேர் வரை பலியாகியுள்ளனர். 850க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளில் ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில்…
-
- 1 reply
- 850 views
-
-
நீதி தடுமாறுகிறது உச்ச நீதி மன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வெட்கக் கேடான நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரிக்கு மாற்றப்பட்ட பிறகு கூட தமிழக அரசின் வழக்கறிஞர்கள் அவ்வழக்கில் வாதாடுவதற்கு உச்ச நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த நிலையில் அந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.மாத்தூர், பி.கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாலசுப்பிரமணியன் "நான் காஞ்சி சங்கராச்சாரியாரின் பக்தன். எனவே இந்த மனுவை விசாரிக்க மாட்டேன். மூன்று வாரத்திற்கு இந்த மனுவைத் தள்ளி வைக்கிறேன். அதன் பிறகு வேறு நீதிபதி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்" என்று கூறி வழக்கை ஒத்தி வைத்திருக்கிற…
-
- 2 replies
- 1.1k views
-
-
புதன் 15-08-2007 16:46 மணி தமிழீழம் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து இனப் பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க வேண்டும் என லிபியா கூறியுள்ளது. லிபியா சென்றிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம அங்கு லிபியா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்த போதே அவர் இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதாக முன்னேற்றத்திற்கு லிபியா பொருளாதார உதவிகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரு தரப்பு உறவுகளை வலுப்பெறும் நோக்கில் லிபியாவில் தூதரகம் ஒன்றை அமைக்கவும் இணக்கம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. -நன்றி பதிவு.
-
- 0 replies
- 777 views
-
-
19 நாடுகளின் இராணுவத் தளபதிகள் சிட்னியில் இரகசியச் சந்திப்பு [15 - August - 2007] * இலங்கை இராணுவத் தளபதியும் பங்கேற்பு அவுஸ்திரேலியா உள்ளிட்ட 19 நாடுகளின் இராணுவத் தளபதிகள் இரகசியச் சந்திப்பொன்றை சிட்னியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நிகழ்த்தியுள்ளதாக செய்தி வெளிவந்திருக்கிறது. இச் சந்திப்பை பசுபிக் இராணுவத் தளபதிகள் மாநாடு நடைபெறும் சமயத்தில் பகிரங்கப் படுத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டதாக அவுஸ்திரேலியாவின் இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் பீற்றர் லிகி தெரிவித்துள்ளார். மேலும், சிட்னியில் பல விடயங்கள் நடைபெறுகின்றதென்பது எமக்கும் தெரியும். ஆனால், அதனை பரபரப்பாக்க விரும்பவில்லை என பி.பி.சி. செய்திச் சேவைக்கு கூறியுள்ளார். தொடர்ந்து அவர் கூறுகையில…
-
- 1 reply
- 862 views
-
-
[Wednesday August 15 2007 07:15:01 AM GMT] ஈராக்கில் அமெரிக்க படைகளுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் தீவிர வாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சன்னி-ஷியா பிரிவினருக்கு இடையே கோஷ்டி மோதலிலும் தினம் ஏராளமானவர்கள் பலியாகி வருகிறார்கள். சமீபகாலமாக யாசிடி என்ற பிரிவினருக்கு எதிராகவும் தாக்குதல் நடந்து வருகிறது. நேற்று சிந்கார் மாவட்டத் தில் மோசல் அருகே உள்ள அல்கதா மியா மற்றும் அல் அட்னியா ஆகிய கிராமங் களில் தற்கொலை படை தீவிர வாதிகள் 4 எண்ணை லாரி களில் வந்தனர். அந்த லாரிகள் நிறைய வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு இருந்தன. அந்த லாரிகளை தீவிர வாதிகள் வீடுகள் மீது அடுத் தடுத்து மோதி வெடிக்க வைத்தனர். வெடிகுண்டு லாரிகள் பயங்கர மாக வ…
-
- 3 replies
- 1.3k views
-
-
பிரிட்டனிடமிருந்து ஸ்கொட்லாந்து விடுதலைபெறுவதற்கான திட்டம் [14 - August - 2007] [Font Size - A - A - A] * இந்த வாரம் அறிவிப்பு இலண்டனின் கட்டுப்பாட்டிலிருந்து நாட்டை விடுதலைபெறச் செய்யும் பணியை மேற்கொள்வதற்கான தனது திட்டத்தை இந்தவாரம் ஸ்கொட்லாந்தின் முதல் அமைச்சர் அலக்ஸ் சால்மொன்ட் வெளியிடவிருக்கிறார். ஐக்கிய இராச்சியத்திற்குள் ஸ்கொட்லாந்தின் எதிர்காலம் தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிடப்போவதாக தேர்தல் விஞ்ஞாபனத்தின்போது அலெக்ஸ் சால் மொன்ட் வாக்குறுதியளித்திருந்தார். ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி அரசாங்கம் பதவியேற்ற 100 நாட்களுக்குள் தேசிய மட்டத்தில் கலந்துரையாடலை மேற்கொள்ளப்போவதாகவும் அவர் அறிவித்திருந்தார். `ஸ்கொட்லாந்தின் எதிர்காலத்தை தேர்ந்தெட…
-
- 0 replies
- 912 views
-
-
தமிழில் எம்.பி.பி.எஸ்.,! ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுகிறது மருத்துவ சொற்களை மொழிபெயர்க்கும் பணி தீவிரம் நமது சிறப்பு நிருபர் தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழகத்தில் மருத்துவ தமிழ் மேம்பாட்டுக் கழகம் என்ற அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. மருத்துவச் சொற்களுக்கு உரிய தமிழ் சொற்களை உருவாக்குவது, மருத்துவ படிப் பிற்கான பாடப் புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்தல் ஆகிய பணிகளை இந்த அமைப்பு செய்து வருகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் தமிழில் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற முடியும். தமிழ் ஆர்வலர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வரும் தமிழில் மருத்துவ படிப்பு என்ற கோரிக்கை குறித்து தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் மீர்முஸ்தபா உசேன் …
-
- 12 replies
- 2.7k views
-
-
ஞாயிறு 12-08-2007 00:07 மணி தமிழீழம் [மயூரன்] படகுகளில் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றால் நெடுமாறனைக் கைது செய்யுமாறு கடற்படையினருக்கு உத்தரவு தமிழ் நாட்டில் இருந்து படகுகள் மூலம் உணவுப் பொருட்களை எடுத்தவரும் முயற்ச்சியில் பழ நெடுமாறன் ஈடுபட்டால் அவரை கைது செய்யுமாறு இந்திய மற்றும் இலங்கை கடற்படையினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் உள்ள மக்களுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் உணவுப் பொருட்களை உரிய வகையில் அனுப்பி வைக்காதமையை கண்டித்து பழ நெடுமாறன் தலைமையிலான ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் தமிழகத்தில் இருந்து உணவுப் பொருட்களை யாழ்பாபணத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை யாழ்பாணத்திற…
-
- 8 replies
- 2k views
-
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அமெரிக்க கை பொம்மையாகிப்போன இந்திய பிரதமர் மிரட்டுகிறார். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 12 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ இந்தியா - அமெரிக்கா இடையிலான, சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை எதிர்க்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில், அமெரிக்க கை பொம்மையாகிப்போன பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ள கருத்தால், சனிக்கிழமையன்று இந்திய அரசியல் அரங்கில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அரசுக்கும் தமிழ் நாட்டு இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக யூகங்கள் வெளியாயின. கொல்கத்தாவில் இருந்து வெளியாகும் டெலிகிராப் பத்திரிகையில், அமெரிக்க கை பொம்மையாகிப்போன பிரதமரின்…
-
- 0 replies
- 715 views
-
-
கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றம், கிழக்கிலிருந்தும் தமிழர்கள் வெளியேற்றம், கிழக்கைப் பிடித்து விட்டோமென வெற்றி விழாவைத் தொடர்ந்து வடக்கிலும் இராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக சிறிலங்கா கூறும் நிலையிலும் தாய்த் தமிழகம் இப்படியேதான் இருக்குமா? என்று தமிழகத்திலிருந்து வெளியாகும் புதிய ஏடான "கருஞ்சட்டை தமிழர்" கேள்வி எழுப்பியுள்ளது. திராவிட தமிழர் இயக்கப் பேரவையின் செயலாளரான பேராசிரியர் சுப.வீரபாண்டியனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்திருக்கும் "கருஞ்சட்டை தமிழர்" (ஓகஸ்ட் 2007) ஏட்டில் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை: ஈழத்தில் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கு ஆகியவற்றில் கிழக்குப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து…
-
- 1 reply
- 1.2k views
-
-
3,000 சீக்கியர் படுகொலை! யார் குற்றவாளி? கற்பனைகளுக்கெல்லாம் எட்டாத வினோத நாடு நமது இந்தியா. இந்த நாட்டில்தான் ஒரு தலைவர் தாக்கப்பட்டுவிட்டாலோ அல்லது படுகொலை செய்யப்பட்டாலோ உள்ளூர் காவல்துறையில் இருந்து மத்திய புலனாய்வுக் கழகம் வரை ஈடுபடுத்தப்படுவது மட்டுமின்றி, அப்படிப்பட்ட குற்றங்களுக்கு அந்நியப் பின்னணி இருப்பின், நமது நாட்டின் அயல் நாட்டு உளவுப் பிரிவும் ஈடுபடுத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளதை கண்டுள்ளோம். 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தனது இல்லத்தில் தன்னுடைய மெய்க்காப்பாளர்களாலேயே அன்றையப் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகளில் ஒருவர் அங்கேயே சுட்டுக் கொல்லப்பட்டுவிட்ட…
-
- 2 replies
- 2.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று பிரித்தானியா நாடாளுமன்றத்தின் அனைத்து கட்சிக் குழுவினருக்கு அமெரிக்காவின் கலிபோர்ணியா மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்டத்தரணியான கரன் பாக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சி குழுவுக்கு வேண்டுகோள் விடுத்து கடந்த வியாழக்கிழமை (02.08.07) கரன் பாக்கர் அனுப்பிய மனு: தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை தடை செய்தமையானது சட்ட ரீதியாகவும் உண்மையடிப்படையிலும் தவறானது. உண்மையில், அவ்வாறான தடை நடைமுறையில் உள்ள மனிதாபிமானச் சட்டத்துக்கு முரணானது. அமெரிக்காவும், சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இணைக்குமாறு பிரித்தானியாவையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும…
-
- 2 replies
- 1k views
-
-
பிரிட்டனில் அகதிஅந்தஸ்துக் கோரி விண்ணப்பம்செய்த ஈழத்தமிழர் ஒருவரின் வழக்கில் திருப்புமுனையான, முக்கியமான தீர்ப்பை பிரிட்டனின் அகதி மேன்முறை யீட்டு நீதிமன்றம் நேற்று வழங்கியுள்ளது. வழக்குத்தாக்கல் செய்த அகதி, இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர் அந்நாட்டு அரசாங்கத்தால் கைது செய்யப் பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படு வார் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்புமூலம், பிரிட்டனின் உள் துறைத் திணைக்களத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான அணுகுமுறையிலும் நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள அவர்களுடைய மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பான சட்டநிவாரணங்களிலும் பெரும் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வவுனியாவைச் சேர்ந்த பிரஸ்தாப நபர்…
-
- 5 replies
- 1.5k views
-
-
துருக்கியில் குர்திஸ் இனத்தவர்களையும் உள்ளடக்கிய புதிய பாராளுமன்ற பதவியேற்பு [06 - August - 2007] துருக்கியில் பல வருடங்களின் பின்னர் குர்திஸ் இனத்திற்கு சார்பான 20 பிரதிநிதிகளை உள்ளடக்கிய புதிய பாராளுமன்றம் சத்தியப் பிரமாணம் செய்துள்ளது. 1983 களிலிருந்து தொடரும், துருக்கி மற்றும் குர்திஸ் இன மோதலுக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்கு தாம் விரும்புவதாக புதிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். 1991 இற்குப்பின்னர் தற்போது முதற் தடவையாக குர்திஸ் இன பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனரென்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக பாராளுமன்றத்திற்கு தெரிவான குர்திஸ் இன உறுப்பினர்கள் குர்திஸ் மொழியிலேயே தமது சத்தியப் பிரமாணத்தை மேற்கொண்ட போதும் தற்போது இவர்…
-
- 0 replies
- 670 views
-
-
அநீதிக்கு ஆளான அலன் ஆனந்தன்- பழ. நெடுமாறன் உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழு உறுப்பினரும் பிரான்சு நாட்டு கிளையின் அமைப்பாளருமான அலன். ஆனந்தன் டெல்லி வழியாக கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் பண்பாட்டு மாநாட்டுக்குச் சென்றபோது தடுத்து பிரான்சுக்கே திருப்பி அனுப்பப்பட்ட அப்பட்டமான மனித உரிமை மீறல் இந்திய அரசு அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்டுள்ளது. பிரான்சு நாட்டில் உள்ள டுக்னி நகராட்சியின் உறுப்பினராகவும், பிரான்சு நாட்டின் குடிமகனாகவும் அலன். ஆனந்தன் உள்ளார். இந்தியா வந்து செல்வதற்காக அவருக்கு ஓராண்டு விசாவும் உள்ளது. கடந்த சூலை 18ஆம் தேதியன்று கோலாலம்பூர் செல்லும் வழியில் தில்லி விமான நிலையத்தில் அவர் விமானம் மாறுவதற்காக இருந்தபோது இந்திய குடியுரிமை அதிகார…
-
- 0 replies
- 891 views
-
-
Tiger ban could bite Howard in his seatFont Size: Decrease Increase Print Page: Print Cameron Stewart and George Megalogenis | August 04, 2007 THE Howard Government risks harming its re-election chances in two marginal Sydney seats, including the Prime Minister's electorate of Bennelong, if it moves to list the Tamil Tigers as a terrorist organisation.Research obtained by The Weekend Australian highlights the danger of an ethnic voter backlash if the Government proscribes the Liberation Tigers of Tamil Eelam. The Tamil Tigers are banned in the US, Britain, Canada and the 27 countries of the European Union, prompting speculation that Australia will also ban the group. Lega…
-
- 6 replies
- 2.3k views
-
-
foot-and-mouth நோய்த்தாக்கம் கண்ட கால்நடைகள் அழிக்கப்படும் காட்சி. (பழையது) பிரிட்டனில் சரே என்ற இடத்தில் உள்ள பண்ணையில் இருக்கும் கால்நடைகள் (மாடுகள்) மத்தியில் foot-and-mouth எனும் நோய்க்கான தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நோய் கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்கும் பரவக் கூடியது மட்டுமன்றி மரணம் விளைவிக்கக் கூடிய நோயாகும். இருந்தாலும் மனிதரில் தொற்று குறைவாகவே உள்ளது. இதனை அடுத்து பிரிட்டன் பிரதமர் தனது விடுமுறையை ரத்துச் செய்துவிட்டு... கோப்ரா எனும் அமைச்சரவை அவசர மாநாட்டைக் கூட்டி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முன்னரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நோய் பிரிட்டன் கால்நடைகளைத் தாக்கி..பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமன்றி கால்நடை இறைச்சி ஏற்ற…
-
- 4 replies
- 1.9k views
-
-
இந்திய இலங்கை ஒப்பந்தம் தோல்வியடைந்த போதிலும் தீர்வில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க முடியும் வீரகேசரி நாளேடு இந்திய இலங்கை ஒப்பந்தம் தோல்வியடைந்த போதிலும், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று பெரும்பான்மையான தமிழ் மக்கள் நம்புவதாக பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் டோன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவ
-
- 1 reply
- 799 views
-
-
நியூசிலாந்து அருகே கடலில் மாபெரும் பூகம்பம்: கட்டடங்கள் சேதம்- சுனாமி பீதியில் தீவுகள்! ஆகஸ்ட் 02, 2007 வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டின் வடக்கே உள்ள வனாது தீவுக்கு அருகே தென் பசிபிக் கடலில் மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது, இதனால் நியூசிலாந்து உள்பட அப் பகுதியில் உள்ள பல தீவுகள் குலுங்கின. சுனாமி ஏற்படலாம் என்ற பீதியும் பரவியது. Shot at 2007-08-01 நியூசிலாந்து நேரப்படி இன்று அதிகாலை 4.08 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.2 என்ற அளவுக்கு பதிவானது. இதனால் நியூசிலாந்தின் பல பகுதிகள் அதிர்ந்தன. சாலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டன. கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்தபடி ஓடினர். மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டது. …
-
- 2 replies
- 1.1k views
-
-
அமெரிக்கவில் Mississipp ஆற்றுக்கு மேலுள்ள பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது, இதில் பலவாகனங்கள் அகப்பட்டுள்ளது. ஒருவர் பலி மேலதிகவிபரம் தெரிந்தவர்கள் அறியத்தரவும்
-
- 17 replies
- 3.2k views
-
-
பரத முனிவர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலத்தைத் திரும்பப்பெறு! 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலான தொல்காப்பியமும், ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலப்பதிகாரமும் தமிழர்களுக்கே உரிய ஆடல் கலையின் சிறப்பினை விவரிக்கின்றன. ஆனால் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய பரதமுனிவரை தமிழக நடனக்கலைக்குத் தந்தை எனக் கற்பித்து, பொய்யான ஒரு கூற்றினை தொடர்ந்து தமிழ்ப்பகைவர்கள் பரப்பிவருகிறார்கள். இந்தப் பொய்மையை நிலைநிறுத்த பரதமுனிவருக்கு தமிழ்நாட்டில் கோயில்கட்டவும் முற்பட்டிருக்கிறார்கள். செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இக்கோயில் கட்டுவதற்கு அரசு நிலத்தையும், பணத்தையும் வாரி வழங்கினார். பொய்யை மெய்யாக்கவும் தமிழர்களை இழிவுபடுத்தவும் நடைபெறும் இந்த முயற்சியைக்…
-
- 5 replies
- 2.2k views
-
-
வேலூர் அகதி முகாம்களில் விடுதலைப்புலிகள் ஊடுருவலா? - போலீசார் விடிய விடிய சோதனை வேலூர், ஜுலை. 30- வேலூர் மாவட்டத் தில் இலங்கை அகதி களுக்கான சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் வாலாஜா, பானாவரம், வேலூர் கருக முத்தூர், ஆம்பூர், திருப்பத்தூர், குடியாத்தம் ஆகிய 6 இடங்களில் செயல்படுகிறது. அகதி முகாம்களில் இலங் கையில் இருந்து அகதிகளாக திரும்பிய தமிழ் குடும்பங்கள் தங்கி இருக்கிறார்கள். மொத்தம் 3 ஆயிரத்து 50 பேர் அகதி களாக உள்ளனர். அகதிகள் முகாம்களில் அகதிகள் போர்வையில் விடுதலைப்புலிகள் ஊடுருவலாம் என்று `கிï' பிரிவு போலீசுக்கு உளவு பிரிவு போலீசார் ரகசிய தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அகதி கள் முகாம்களை தீவிர மாககண்காணிக்கும்படி கிï பிரிவு போ…
-
- 1 reply
- 888 views
-
-
ஆங்கில நாடாக வேகமாக மாறிவரும் தமிழகம் [30 - July - 2007] -எம்.ஏ.சேவியர்- தமிழ்நாடு வேகமாக `ஆங்கில நாடாக' மாறி வருகிறது. அந்த அளவுக்கு கிராமம் முதல் நகரங்கள் வரை ஆங்கில மோகம் பரவி இருக்கிறது. ஆங்கிலமே அறிவு என்ற கருத்து வேரூன்றியுள்ளது. தமிழ் எங்கள் உயிர் மூச்சு என்று மேடைகளில் முழங்குகிற அரசியல் கட்சிகளிலிருந்து திரைப்படங்கள் வரை ஆங்கில ஆதிக்கமும் அதன் மோகமும் ஊடுருவியிருக்கிற அவல நிலை தமிழகத்தில்! ஆங்கிலத்தில் பேசினால்தான் நாகரிகம், கௌரவம், மதிப்பு, பெருமை என்ற மாயை பெரும்பாலானோர் மனங்களில் புகுத்தப்பட்டுள்ளது. ஆங்கில மோகத்தின் விளைவுகளை சமூக, அரசியல், பண்பாடு போன்ற பல தளங்களில் வெளிப்படையாகவே காண முடிகிறது. குழந்தைகள் அம்மாவை `மம்மி' என்றும் …
-
- 9 replies
- 2.8k views
-