உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26608 topics in this forum
-
உலகின் முதல் 'டெஸ்ட் ட்யூப் பேபிக்கு' பிரசவம்! ஜனவரி 14, 2007 லண்டன்: உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை என்ற பெருமை கொண்ட இங்கிலாந்தைச் சேர்ந்த லூயிஸ் பிரவுனுக்கு அழகான ஆண் குழந்தை இயற்கையான முறையில் பிறந்துள்ளது. பிரவுனின் தாயார் லெஸ்லிக்கு திருமணமான பிறகு கர்ப்பம் தரிக்கவில்லை. 9 வருடங்களாக குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்தார் அவர். அப்போதுதான் இங்கிலாந்தில் சோதனைக் குழாய் மூலம் குழந்தையை உருவாக்கும் முறை சோதனைரீதியாக வெற்றியை நெருங்கிக்ö காண்டிருந்தது. இதையடுத்து சோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்க விருப்பம் தெரிவித்தார் லெஸ்லி. ஓல்தாம் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் லெஸ்லிக்கு சோதனைக் குழாய் மூலம் கரு உட் செலுத்தப்பட்டது. டாக்டர்கள் ராபர்ட்…
-
- 0 replies
- 872 views
-
-
தொடர்ந்து 126 நாட்கள் சூரிய நமஸ்காரம் கடலுõரில் கின்னஸ் சாதனைக்கு முயற்சி கடலுõர்:கடலுõரில் தொடர்ந்து 126 நாட்கள் சூரிய நமஸ்காரத்தை கின்னஸ் சாதனையாளர் ஜெயராமன் நேற்று துவக்கினார். கடலுõர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(79). இவர் கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார். ஜெயராமன் உலக அமைதிக்காக வட சென்னையில் தொடர்ந்து 200 மணிநேரமும், கோல்டன் பீச்சில் 360 மணிநேரமும் பேசி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் உலக அமைதி வேண்டி சிதம்பரத்திலிருந்து தரையில் உருண்டபடி (அங்கபிரதட்சணம்) சென்னை வரை 250 கி.மீ., துõரம் சென்றும், மெரினா கடற்கறையில் ஆயிரத்து 8 மணிநேரமும், சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில் 508 மணி நேரமும் தொடர்ந்து பேசி சாத…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை சிலிங்கோ நிறுவனத்தின் பண மோசடி.... இலங்கையில் மிகவும் பிரபலமானதும் முன்னனி பங்கு வாத்தக நிறுவனமான சிலிங்கோ நிறுவனத்தில் பணத்தை இழந்து பல மக்கள் தவிப்பதாக அந்த பணத்தை இழந்த பலர் எம்மிடம் தெரிவித்தனர். சிலிங்கோ - சுப்பிறீம் ஆயுள்காப்புறுதி என கூறி அதில் மருத்துவ காப்புறுதி மற்றும் ஆயுள் காப்புறுதி அடங்கலாக பல லட்சம் பணத்தை முதலீடு செய்து அதிக வட்டி பணம் தருவதாக கூறி அந்த மக்களின் பணத்தை ஏமாற்றிய நிலையை கேட்கும் போது எமக்கே நெஞ்சு விறைத்தது. இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில் அவர்கள் குறிவைத்தது புலம்பெயர் நாடுகளில் இருந்து போன உறவுகளையே. இவர்கள் தான் தற்போது பெருமளவிலான பணத்தை கொடுத்து விட்டு அல்லல் படுகிறார்கள்... கொடுத் பணத்தை கே…
-
- 24 replies
- 5.1k views
-
-
கலைஞர் நினைத்தால் இந்திய அரசின் போக்கை மாற்றலாம்.. எழுதியவர் துரைரத்தினம் Monday, 15 January 2007 - தொல்.திருமாவளவன் சுவிஸ் நிலவரம் பத்திரிகைக்கு வழங்கிய சிறப்பு செவ்வி - "கலைஞர் நினைத்தால் இந்திய அரசின் போக்கை மாற்றி ஈழத்தமிழர்களுக்கு விடிவை ஏற்படுத்த முடியும்''... தொடர்ந்து படிக்க......................... http://tamilnews24.com//index.php?option=c...06&Itemid=2
-
- 0 replies
- 876 views
-
-
கிரையோஜெனிக் இயந்திர சோதனை வரும் ஜனவரி 19 நாள்,2007ல் , திருநெல்வேலி மாவட்டம் , வள்ளியூர் அருகில் அமைந்துள்ள மகேந்திரமலையில் அமைந்துள்ள திரவ எரிபொருள் செலுத்துவிசை மையத்தில் கிரையோஜெனிக் இயந்திர பரிசோதனை நடைபெற உள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றால் , இந்தியா 2000 கிலோ நிறையுள்ள செயற்கைகோள்களை 36000 கிலோ மீட்டா தூரம் ஏவ, மற்ற நாடுகளை நாட வேண்டிய அவசியம் ஏற்படாது. இந்த சோதனையில்,கிரையோஜெனிக் இயந்திரம் 720 செகண்ட் வரை இயங்க, பற்ற வைக்கப்படும்.மேலும் 12 டன் செலுத்துவிசையும்(propellants),7.5 டன் தள்ளு விசையும்(thrust) கூடிய பறக்கும் சக்தியும் பரிசோதிக்கப்படும்.இம்முறைய
-
- 4 replies
- 1.7k views
-
-
ஈரான் உடனான ஈராக்கின் குரிதிஸ்தான் வட கிழக்கு எல்லைகளில் ஈராக் பகுதிகளில் இயங்கிவரும் ஈரானிய கமியூனிஸ்ற் கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்காவின் பார்வை திரும்பியுள்ளது. இவர்கள் உலகப் போர் 1 இன் பின்னர் கிட்டத்தட்ட 3 அல்லது 4 ஆகா பங்கு போடப்பட்ட குரிதிஸ்தான் தேசத்தின் ஈரானிய ஆக்கிரமிப்பிலுள்ள பகுதிகளின் விடுதலைக்காக போராடுகிறார்கள். ஈரானிய அரசை கவிழ்பதற்கா இவர்களினை பலப்படுத்தி உதவி வழங்குவதில் அமெரிக்கா தீவிரம் காட்டுகிறது. ஈராக்கில் இயங்கிவரும் கிளர்ச்சியாளர்கள் எல்லைகளை கடந்து சென்று ஈரானுக்குள் கொரிலாத் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். புலம்பெயர்ந்துள்ள ஈரானிய அதிருப்த்தியாளர்களையும் ஒன்று திரட்டுவதில் அமெரிக்கா மும்மரமாக ஈடுபட்டுள்ளது. ஈரானின் இன்றய அரசு …
-
- 3 replies
- 1.6k views
-
-
மகள் திருமணத்துக்கு கிட்னி விற்றோம்: பெண்கள் பேட்டி எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் மீனவ பெண்களில் பலர் தாங்கள் கிட்னி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு கணவன்மார்களே காரணம் என்று குற்றம் சாட்டினார்கள். இங்குள்ள மீனவர்கள் அனைவரும் மீன்பிடி தொழில் தவிர கூலி வேலை செய்தும் சம்பாதிக்கிறார்கள். அவர்களது வருமானம் குடும்ப செலவுக்கு போதுமானதாக இல்லை. பெரும்பாலானவர்களுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அவர்கள் சம்பாதிக்கும் சிறிய அளவு பணம் கூட வீடு வந்து சேராது என்று பெண்கள் குமுறலுடன் கூறினார்கள். சுனாமிக்கு முன்பும் காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவ பெண்கள் சிலர் கிட்னி விற்று ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என சம்பாதித்து இருக்கிறார்கள். அவர்கள் கையில் மொத்தமாக பணத…
-
- 4 replies
- 4.9k views
-
-
ஜப்பானின் பயங்கர நிலநடுக்கம்சுனாமி எச்சரிக்கை ஜனவரி 13, 2007 டோக்கியோ: ஜப்பானின் கடல் பகுதியில் இன்று மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 8.4 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளதால் சுனாமி அலைகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட பசிபிக் கடலில் ஜப்பானின் குரில் தீவுகளுக்கு கிழக்கே இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஜப்பானின் கிழக்குப் பகுதி, ரஷ்யாவின் தென் கிழக்குப் பகுதிகளை சுனாமி தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஹொக்காய்டோ தீவை விட்டு வெளியேறுமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல ஹொன்சு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுளளனர். அதே போல தைவான…
-
- 0 replies
- 782 views
-
-
புதுடெல்லி அரசியல் சாசனத்தின் 9வது அட்டவணையில் 1973-ம் ஆண்டுக்கு பிறகு இடம் பெற்ற சட்டங்களையும் ஆய்வு செய்யும் உரிமை நீதி மன்றத்திற்க்கு உண்டு என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசு கொண்டுவந்த 69% இட ஒதுக்கீடு உட்பட எராளமான சட்டங்களின்எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளது. மேலும் இந்த தீர்ப்பின் மூலம் நீதி மன்றத்துக்கும், நாடளு மன்றத்திகும் இடையே மோதல் நிலையும் உருவாகி இருக்கிறது.
-
- 5 replies
- 1.6k views
-
-
2006ம் ஆண்டில் ரூ.35 கோடியை தாண்டியது சீரடி சாய்பாபா கோவில் உண்டியல் வசூல் அகமதுநகர்:மகாராஷ்டிரா சீரடி சாய்பாபா கோவில் உண்டியல் வசூல் கடந்த ஆண்டு ரூ.35 கோடியை தாண்டியுள்ளது. மகாராஷ்டிராவிலுள்ள சீரடி என்ற இடத்தில் சாய்பாபா கோவில் உள்ளது. பிரசித்திபெற்ற இந்த கோவிலுக்கு ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கடந்த 2006ம் ஆண்டில் இந்த கோவிலின் உண்டியல் மூலம் கிடைத்த வருவாய் பற்றிய விவரம் வெளியிடப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு சாய்பாபா கோவிலில் உண்டியல் மூலம் 35 கோடியே 25 லட்சத்து 57 ஆயிரத்து 100 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதில், 9.326 கிலோ தங்கம் மற்றும் 136.131 கிலோ வெள்ளியும் அடங்கும். கடந்த ஆண்டில் இரண்டு கோடி பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிந்துள…
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை: விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை அரசிடம் ஒப்படைக்க வருவாய்துறை அதிகாரிகள் கெடு கொடுத்துள்ளனர். கோயம்போடு நூறு அடி ரோட்டில் உள்ள விஜய்காந்த் மனைவியின் ஆண்டாள் அழகர் திருமண மண்டத்தின் அருகே புதிய மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மண்டபத்தின் ஒரு பகுதியும், இந்த பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்டவர்களின் கட்டிடங்களும் இடிக்கப்பட வேண்டியுள்ளது. எனவே இந்த இடங்களை அரசு கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் உள்ளிட்ட நிலங்களுக்கு நஷ்ட ஈடு பணத்தை வழங்க முடிவு செய்யப்பட்டு, அதன்படி மண்டபத்துக்கு ரூ. 8.55 கோடி நஷ்ட ஈடு வழக்கப்படும் என்றும், அதை காஞ்சிபுரம் வருவாய்துறை அதிகாரி அலுவலகத்தில் டிசம்பர் 1…
-
- 0 replies
- 1k views
-
-
லண்டன்: ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டது தவறானது என இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் திடீரென கருத்து தெரிவித்துள்ளார். சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதை கண்டித்தும், ஆதரவு தெரிவித்தும் அனைத்து நாட்டு தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் எந்த கருத்தும் தெரிவிக்கமால் இருந்து வந்தார். சதாம் தூக்கிலிடப்பட்டபோது பிளேர் அமெரிக்காவில் இருந்தார். இப்போது தத் முதன் முறையாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார். பிளேர் கூறுகையில், சதாம் உசேன் செய்த குற்றங்கள் மன்னிக்க முடியாதது. அவருடைய காட்டுமிராண்டித்தனத்தை யாரும் மறந்து விடவும் முடியாது. ஆனால் அவர் செய்த குற்றத்துக்கு தூக்கில் போடுவது தான் சரியான தண்டனை என்பை…
-
- 3 replies
- 1.4k views
-
-
இந்தியின் முன்னணி நடிகை ஷில்பா ஷெட்டி. சல்மான் கான் உள்பட பல ஸ்டார்களின் முன்னாள் காதலியான இவர் சினிமாவிலிருந்து டி.வி.க்கு வந்திருக்கிறார். இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சேட்டிலைட் சேனல் 'சேனல் 4.' இதன் பிரதான நிகழ்ச்சி 'பிக் பிரதர்.' பிரபலமான நபரின் ஒருமாத வாழ்க்கையை அப்படியே லைவ்வாக காண்பிக்கும் இந்நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முதன்முறையாக இந்நிகழ்ச்சிக்கு இந்தியாவைச் சேர்ந்த ஷில்பா ஷெட்டியை 'சேனல் 4' தேர்ந்தெடுத்திருக்கிறது. ஒருமாதம் வேறு சில பிரபலங்களுடன் தங்கியிருக்கும் ஷில்பாவை லைவ்வாக காண்பிக்கப் போகிறார்கள். எழுத்தாளர்கள், பாப் இசைக்கலைஞர்கள் கொண்ட இந்த குழுவில் அனைவரையும் கவர்ந்தவர் ஷில்பா ஷெட்டிதான் என்கிறார்கள். ஒருமாத…
-
- 71 replies
- 9.2k views
-
-
சென்னை வான் வெளி இப்போது பண்பலை வரிசை வெள்ளத்தில் திழைக்கிறது. • சிட்டி 91.1 MHz • ஆஹா 91.9 MHz • பிக் 92.7 MHz • சூரியன் 93.5 MHz • ரேடியோ ஒன் 94.3 MHz • மிர்ச்சி 98.3 MHz • பெயரிடப்படாதது 98.9 MHz • கோல்டு 105 MHz • ஹலோ 106.4 MHz • ரெயின்போ 107.1 MHz
-
- 2 replies
- 1.3k views
-
-
வில்லியம்சின் இதயம் கவர்ந்த இளம்பெண் இதோ இன்னொரு டயானா லண்டன், ஜன.10:{மாலைசுடர்} அவர் எங்கே போனாலும் மீடியா அவரை பின்தொடர்கிறது. அவர் எது செய்தாலும் அது தலைப்புச் செய்தியாகி விடுகிறது. அவருடைய 25வது பிறந்த நாள் பிரிட்டனே எதிர்பார்க்கும் நிகழ்வாக மாறியிருக்கிறது. வருங்கால இளவரசி என பிரிட்டனே அவரை கொண்டாடுகி றது. இளவரசர் வில்லியம்சின் இதயம் கவர்ந்த இளம் பெண்ணான கேதே மிடில்டன்தான் இப்படி பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனிக்கப் படும் நபராக உருவாகியிருப்பவர். இந்த இளம் பெண்ணை சூழ்ந்துள்ள பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பை பார்க்கும்போது, மறைந்த இளவரசி டயானா, சார்லசை காதலிக்கத் துவங்கியபோது உண்டான பரபரப்புதான் நினைவுக்கு வருவதாக பிரிட்டனில் பேசிக…
-
- 0 replies
- 809 views
-
-
காங்கிரஸ்க்கு ‘ஷாக்’ கொடுக்கும் விஜயசாந்தி ‘‘சோனியாகாந்தி உண்மை பேசட்டும்...’’ ‘இனி நான் நடிகை அல்ல. மக்களுக்காகக் குரல் கொடுக்கும் சமூகப் போராளி. புதுவருடத்தில் என் புது அவதாரம் இதுதான்!’ &ஆந்திர மாநிலம் தெலுங்கானா பகுதியில் இறந்துபோன விவசாயி களுக்காக நீதிகேட்டு கடந்த 8&ம் தேதி ஹைதராபாத் நேரு பார்க்கில் ஒருநாள் உண்ணாவிரதமிருக்கக் கிளம்பிக் கொண்டிருந்த தெலுங்குபட உலகின் லேடி சூப்பர் ஸ்டாரும், ‘தல்லி தெலுங்கானா’ என்ற அரசியல் இயக்கத் தின் தலைவியுமான விஜயசாந்தி நம்மிடம் சொல்லிய டயலாக்தான் இது. ‘‘என்ன திடீரென்று மம்தா பானர்ஜி ஸ்டைலில் கிளம்பி விட்டீர்கள்?’’ என்ற கேள்வியுடன் அவரிடம் உரையாட ஆரம்பித்தோம். குரலில் கோபம் தொனிக்கப் பேச ஆர…
-
- 0 replies
- 926 views
-
-
பறிபோகுமா பதவி? ஆபத்தில் 5 அமைச்சர்கள்! தங்களுடைய பதவி எப்போது பறிபோகுமோ என்று தெரியாமல் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள் ‘திக்’கடித்தபடியே இருப்பார்கள். ஆனால், ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை என்பதுதான் இப்போதைய அதிர்ச்சி! கடந்த ஆட்சிக்கு சற்றும் குறையாத நிலையில்தான் இப்போதைய தி.மு.க. ஆட்சியிலும் பல அமைச்சர்கள் நகம் கடித்தபடி டென்ஷனில் இருக்கிறார்கள். குறிப்பாக டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள்தான் இப்படி ஒரு தவிப்பில் இருப்பதாக மாவட்டம் முழுக்க செய்திகள் பரவிக் கிடக்கிறது. இதற்கிடையில் ம.தி.மு.க&வின் அவைத் தலைவராக இருந்த(?) எல்.ஜி&யும் தனி அணி அமைத்து, தி.மு.க&வில் இணைய காலம் பார்த்துக் கொண்டிருப்பதால், தி.மு.க&வின் ம…
-
- 2 replies
- 954 views
-
-
சோமாலியாவின் பிரதி பிரதம மந்திரி தனது நாட்டில் உள்ள அல்கைதா உறுப்பினர்களை வெளியேற்ற அமெரிக்கப்படைகளின் உதவியை கோரியுள்ளார். சோமாலியாவின் வெளிவிவகார அமைச்சர் அமெரிக்கா விமானப்படையின் தாக்குதல்கள் ஊடகங்களில் சொல்லப்படுவது போல் அதிக அளவில் நடக்கவில்லை என்று கூறினார். சோமாலியாவில் அமெரிக்க விசேட படைகள் எதுவும் இல்லை என்றும் கூறினார். அதே வேளை அமெரிக்கா சோமாலியாவில் விமானத் தாக்குதல்களை முற்றாக மறுத்துள்ளது. அமெரிக்கா சோமாலியாவில் களம் திறப்பதற்கான காரணம் என்ன? ஆபிரிக்க கண்டத்தின் மேற்கு வடமேற்கு கரைகளில் தனது இருப்பை உறுதிப்படுத்தும் திட்டத்தின் ஒரு அங்கம்? ஆபிரிக்க கண்டத்தின் கிழக்கு கரையில் சீனா ஒரு கடற்படைத்தளத்தை நிர்மானிக்க அண்மையில் ஆரம்பித்துள்ளது. …
-
- 0 replies
- 775 views
-
-
மம்தா பாதையில் ஜெயலலிதா பயணம்! புற்றீசல் போல் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் படையெடுத்து வருவதைக் கண்டித்து செஞ்சட்டை காம்ரேட்கள் சிவப்பாய் வெடித்துக் கொண்டிருக்கும்போது, மத்திய அரசு இன்னொரு அதிர் வெடியைத் தூக்கிப்போட்டிருக்கிறது. ‘இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களை எல்லாம் நவீனப்படுத்த, அவற்றை தனியார் களிடம் ஒப்படைக்கப் போகிறோம்’ என்பதுதான் அந்த அதிர்வேட்டு. ஏற்கெனவே இந்த அதிர்வேட்டின் திரி, மும்பை மற்றும் டெல்லி ஆகிய சர்வதேச விமான நிலையங்கள் விஷயத்தில் கொளுத்தப்பட்டும் விட்டது. மேற்படி விமான நிலையங்களை நவீனப்படுத்தும் பணி தனியார்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இந்த வரிசையில் அடுத்துத் தனியார் கைகளுக்குப் போகப்போவது... சென்னை விமான நி…
-
- 0 replies
- 838 views
-
-
ஜனவரி 09, 2007 சென்னை: சென்னை மாநகரில் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தி பெரும் நாசத்தை விளைவிக்க திட்டமிட்டிருந்ததாக டெல்லியில் கைதாகியுள்ள இரண்டு தீவிரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். டெல்லியில் கடந்த டிசம்பர் 31ம் தேதி அகமது அலி ஷேக், சமியுல்லா ஷேக் ஆகிய இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இருவரும் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள், அண்ணன் தம்பிகள், லஷ்கர்ஏதொய்பா தீவிரவாதிகள். இருவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோது தென் மாநிலங்களில் நாச வேலைகளில் ஈடுபட இவர்கள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இருவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சியை முடித்துக் கொண்டு டெல்லி வந்த இவர…
-
- 1 reply
- 1.3k views
-
-
சோமாலியாவில் இஸ்லாமிய கடும்போக்குப் போராளிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது அமெரிக்க ஏசி 130 ரக விமானம் கடுமையான குண்டுத்தாக்குதலை மேற்கொண்டது. கடந்த சில வாரங்களாக சோமாலியப்படைகளும் எதியோப்பியப் படைகளும் இணைந்து சோமாலியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல பிரதேசங்கள் மீது தாக்குதல் நடத்திப் பல பிரதேசங்களை மீட்டும் இருந்தன. இன்னும் அவற்றின் தாக்குதல் தொடரும் தறுவாரில் அமெரிக்க இராணுவத் தலையீடு திடீர் என்று முளைத்திருக்கிறது. இந்தத் தாக்குதலில் 27 அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சிறுவர்களும் இதில் அடங்குவர் என்றும் செய்திகள் கூறுகின்றன. அமெரிக்க தாக்குதலுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் அல் கொய்டா தீவிரவாதிகளுக்கும் தொட…
-
- 3 replies
- 1.2k views
-
-
அமெரிக்கா,இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் இந்தியாகள் இந்தியாவில் உள்ள பெண்களை திருமணம் செய்து கொண்டு பின்பு அமெரிக்கா சென்று விட்டு பாஸ்போர்ட் கிடைக்கவில்லை என காரணம் கூறி இப்பெண்களை ஏமாற்றி அங்கே உல்லாசமாக வாழ்கிறார்கள்.ஏனெனில் இந்திய சட்டங்கள் இந்நாடுகளில் செல்லுபடியாகது. இதனை பயன்படுத்தி ஏமாற்றுகாரர்கள் தப்பித்துவிடுகிறார்கள். இவ்வாறு இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் பஞ்சாப் , கேரளா போன்ற இந்திய மாநிலங்களில் அதிகஅளவில் உள்ளனர். இதனை தடுக்க இந்திய அரசு, அமெரிக்கா, இங்கிலாந்து அரசாங்களுடன் ஏற்கெனவே இந்நாடுகளுடன் இந்திய செய்துகொண்டிருக்கும் சாசனத்தில்(treaty), இந்திய சட்டங்கள், இந்நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினர்க்கு பொருந்துமாறு(applicab…
-
- 0 replies
- 913 views
-
-
புலிகளிடம் பணம் பெற்று கிளேமோர் பொருத்திக் கொடுத்த கிராம சேவையாளர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் கூறும் இடத்தில் இராணுவத்தினரை குறி வைத்து கிளேமோர் குண்டுகளை பொருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு கிராம சேவையாளர்களை வெலிக்கந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடந்த 4 ஆம் திகதி வெலிக்கந்த பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். இவ்வாறு இவர்களை இரண்டு கிளேமோர் குண்டுகளுடனும் மற்றும் அவற்றை வெடிக்க வைக்கும் ஐந்து டெட்டனேற்றர்களுடனும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்தனர். இந்த இரண்டு கிராம சேவையாளர்களிடம் வெலிக்கந்த பொலிஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது அவர்கள் தெரிவித்துள்ள தகவல்களுக்கேற்ப, இவ்வாறு கிளேமோர் குண்டுகளை புலிகள் இயக்கத்தினரின் அறி…
-
- 2 replies
- 1.1k views
-
-
சன்னை: பெரியார் சிலைகளையும், ஆன்மீக தலைவர்கள், கடவுள் சிலைகளையும் சேதப்படுத்துவோரை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று முதல்வர் கருணாநிதி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் வள்ளுவர் விருது க.ப.அறவாணனுக்கும், பாரதியார் விருது தமிழருவி மணியனுக்கும், பாரதிதாசன் விருது கா.செல்லப்பனுக்கும், திரு.வி.க. விருது க.திருநாவுக்கரசுக்கும், அம்பேத்கர் விருது தொல். திருமாவளவனுக்கும், பெரியார் விருது நடிகர் சத்யராஜுக்கும், காமராஜர் விருது ஏ.எஸ். பொன்னம்மாளுக்கும், அண்ணா விருது ஆர்.எம்.வீரப்பனுக்கும் வழங்கப்பட்டது. விருதுகளை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசுகையில், வசை பாடியவர்களுக்கு விருது…
-
- 0 replies
- 779 views
-
-
சென்னை: சென்னையிலிருந்து துபாய் செல்லும் விமானத்தில் பயணம் செய்த பெண்ணிடமும் அவரது மகளிடமும் மிகவும் கடுமையாகவும், அநாகரீகமாகவும் நடந்து கொண்ட குடியுரிமை (இமிகிரேஷன்) அதிகாரிகளுக்கு எதிராக விமான பயணிகள் ஒன்று திரண்டதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. துபாயில் உள்ள பிரிட்டிஷ் ஆயில் நிறுவனத்தில் அதிகாரிகளாக இருப்பவர்கள் கிளிண்டன், பெத்தேல் தம்பதியினர். அவர்கள் தங்களது மகள் கெல்லி யுடன் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாட சென்னை வந்தனர். பரங்கிமலையில் உள்ள உறவினர் வீட்டில் கிறிஸ்துமஸைக் கொண்டாடி விட்டு பெத்தேலும், கெல்லியும் துபாய் திரும்ப இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தனர். சனிக்கிழமையன்று டிக்கெட் உறுதி செய்யப்படாததால், ஞாயிற்றுக்கிழமை…
-
- 0 replies
- 922 views
-