Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 21 Oct, 2025 | 12:53 PM அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திடாவிட்டால், அந்த நாடு மீது 155 சதவீதம் வரை வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "சீனாவுடன் அமெரிக்கா மிகவும் மரியாதையுடன் நடந்து வருகிறது. அதேசமயம், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை எனது நிர்வாகம் பொறுத்துக்கொள்ளாது. சீனா ஏற்கனவே 55 சதவீத வரிகளைச் செலுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியும்" என்று குறிப்பிட்டார். மேலும், "சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்…

  2. வடக்கு ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான பால்க் மாகாணத்தின் தலைநகரான மசார்-இ-ஷெரிஃப் நகருக்கும், வடக்கு ஆப்கானிஸ்தானின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றான குல்ம் நகருக்கும் அருகில் 28 கிலோமீட்டர் (17.4 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பால்க் ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஹாஜி ஜைத் கூறுகையில், இதுவரை குறைந்தது நான்கு பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. "நாங்கள் நிதி மற்றும் மனித இழப்புகளைச் சந்தித்துள்ளோம், பலர் காயமடைந்துள்ளோம், இதுவரை கிடைத்த தகவல்கள் நான்கு பேர் இறந்ததை உறுதிப்படுத்துகின்றன," என்று அவர் கூறினார். https://www.cnn.com/2025/11/02/…

  3. காஸா முனையில் இஸ்ரேல் தாக்குதல் : ஹமாஸ் முக்கிய தளபதி உயிரிழப்பு Published By: Digital Desk 3 14 Dec, 2025 | 11:30 AM இஸ்ரேலிய இராணுவம் சனிக்கிழமை காஸா நகரில் கார் ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதியான ரயிட் சயத் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஸா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காஸா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை…

  4. 500 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்பை எட்டிய முதல் நபராக எலோன் மஸ்க்! குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையாக, வரலாற்றில் 500 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிகர மதிப்பினை விஞ்ஞசிய தனிநபராக டெஸ்லாவின் (TSLA.O) தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் (Elon Musk) உருவெடுத்துள்ளார். இந்த அசாதாரண சாதனை ப்ளூம்பெர்க்கின் பில்லியனர்கள் குறியீட்டின் தரவுகளால் உறுதிப்படுத்தப்பட்டது. இது நிதித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. 2023 ஒக்டோபர் நிலவரப்படி, மஸ்க்கின் செல்வம் முதன்மையாக டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸில் அவர் வைத்திருக்கும் உரிமைப் பங்குகளிலிருந்து வருகிறது. உலகின் மிகப் பெரிய செல்வந்தராக மாறுவதற்கான எலோன் மஸ்க்கின் பயணம் அசாதாரணமானது. 1971 ஜூன் 28 அன்று தென்னாப்பி…

  5. போலந்தில் கோழிப் பண்ணையில் தீ விபத்து : பலியான ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் 25 Oct, 2025 | 12:15 PM போலந்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கோழிப் பண்ணை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன. தென்மேற்கு போலந்தில் உள்ள ஃபால்கோவிசே (Fałkowice) கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான கோழிகள் அடைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, அந்தக் கோழிப் பண்ணையில் சுமார் 1.3 இலட்சம் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இந்த விபத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கோழிகள் உயிரிழந்தன. எனினும், சில ஊடகங்கள் இந்த எண்ணிக்கை 4 இலட்சம் வரை இருக்கலாம…

  6. ஜப்பானில் ஏற்பட்ட தீ விபத்தில் 170 கட்டிடங்கள் தீக்கிரை! தெற்கு ஜப்பானிய கடலோர நகரமான ஒரு பகுதியில் 170க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் எரிந்தும் இன்னும் முழுமையாக அணையவில்லை என்று தேசிய தீயணைப்பு நிறுவனம் புதன்கிழமை (19) தெரிவித்துள்ளது. டோக்கியோவிலிருந்து தென்மேற்கே சுமார் 770 கிமீ (478 மைல்) தொலைவில் உள்ள ஒய்டா நகரின் சாகனோசெக்கி மாவட்டத்தில் சுமார் 175 குடியிருப்பாளர்கள், செவ்வாய்க்கிழமை மாலை 5:40 மணியளவில் (0840 GMT) தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அவசரகால தங்குமிடத்திற்கு ஓடிவிட்டதாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஒருவர் இன்னும் காண…

  7. மியன்மாரில் வைத்தியசாலை மீது தாக்குதல்; 34 பேர் உயிரிழப்பு! Published By: Digital Desk 3 12 Dec, 2025 | 05:16 PM மியன்மாரில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரக்கைன் மாகாணத்தில் உள்ள அரசு பொது வைத்தியசாலை மீது அந்நாட்டு இராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் உட்பட குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். வைத்தியசாலையின் கட்டடங்கள், வாகனங்கள் கடும் சேதமடைந்தன. வைத்தியசாலை மீதான தாக்குதல் மனித உரிமை மீறல் என ஐ.நா. மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/233199

  8. பட மூலாதாரம், Justice department படக்குறிப்பு, புதன்கிழமை புளோரிடா நீதிமன்றத்தில் ஆஜரான ரிண்டர்க்னெக்ட், எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை. கட்டுரை தகவல் அனா ஃபேகுய் மற்றும் நார்டின் சாட் பிபிசி நியூஸ் 9 அக்டோபர் 2025, 12:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜனவரி மாதத்தில் லாஸ் ஏஞ்சலிஸில் ஏற்பட்ட பசிபிக் பாலிசேட்ஸ் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அந்த தீயை பற்ற வைத்ததாக சந்தேகத்தின் பேரில் 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஜோனாதன் ரிண்டர்க்னெக்ட் என்பவரின் டிஜிட்டல் சாதனங்களில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களில், அவர் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி உருவாக்கிய எரியும் நகரத்தின் படமு…

  9. 2030 ஆம் ஆண்டுக்குள், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களின் தாக்கங்கள் காரணமாக உலகளவில் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகளின் அனர்த்த முகாமைத்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஆண்டுக்கு சுமார் 560 பேரிடர்களை எதிர்கொள்ளும் என அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. பேரிடர் அபாயக் குறைப்புக்கான உலகளாவிய கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 13 ஆம் திகதி சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தைக் கடைப்பிடிக்கிறது. ஒற்றுமையின் மூலம் மட்டுமே உலகைப் பாதுகாப்பானதாக மாற்ற முடியும் என்பதே சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தின் கருப்பொருளாகும். https://…

  10. 23 Sep, 2025 | 10:56 AM ( இணையத்தள செய்திப் பிரிவு ) இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையிலான மோதல் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற உறுப்பு நாடுகள் கூட்டத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், பாலஸ்தீன நாடு என்பது ஒரு உரிமை, அது பரிசு அல்ல என்று வலியுறுத்திப் பேசினார். பல தலைமுறைகளாகத் தீர்க்கப்படாமல் உள்ள இந்த மோதலில், பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை இழந்துவிட்டன. ஐ.நா. தீர்மானங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று குட்டெரெஸ் வருத்தத்துடன் தெரிவித்தார். இந்த மோதலுக்கு 'இரு நாடுகள்' என்பதே ஒரே தீர்வு என்றும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரண்டு இறையாண்மை கொண்ட, சுதந்திர மற்றும் ஜனநாயக நாடுகள் தங்கள் …

  11. வரி அச்சுறுத்தலுக்கு மத்தியில் டெனால்ட் ட்ரம்பின் சூப்பர் மேன் அவதாரம்! உலகளாவிய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து, தனது கட்டண அச்சுறுத்தால் சந்தை ஏற்ற இறக்கங்களைத் குழப்பத்தில் ஆழ்த்தி வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, வெள்ளை மாளிகை ‘சூப்பர்மேன்’ என்று சித்தரித்துள்ளது. 79 வயதான அவரை “நம்பிக்கையின் சின்னம்” என்று அழைத்த வெள்ளை மாளிகை, ஜேம்ஸ் கன் இயக்கிய சூப்பர்மேன் திரைப்படம் வெள்ளிக்கிழமை (11) வெளியானதைத் தொடர்ந்து, சூப்பர்மேன் கதாப்பாத்திரத்தில் AI-உருவாக்கிய ட்ரம்பின் படத்தை வெளியிட்டது. வெள்ளை மாளிகை அல்லது ட்ரம்ப்பால் AI-உருவாக்கப்பட்ட படங்களைப் பகிர்வது புதுமையல்ல. கடந்த மே மாதம் போப் லியோ தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதி போப் போன்ற AI-உ…

  12. காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! 06 Sep, 2025 | 01:23 PM காசா நகரத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களின் போது நேற்று வெள்ளிக்கிழமை (05) ஏழு குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு நகர்ப்புற மையத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் சனிக்கிழமை(இன்று) அதிகாலை வரை தொடர்ந்தது. பாலஸ்தீனிய வீடுகள் மீது பாரிய தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. கசா நகரத்தில் அதிகளவான மக்கள் தொகை கொண்ட பகுதியில் ஒரு உயரமான கோபுரத்தை இராணுவம் அழித்ததால், காசாவில் "நரகத்தின் வாயில்கள்" திறக்கப்படுவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.…

  13. மாயமான விமானம் - 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தேடல் General03 December 2025 காணாமல் போய் ஒரு தசாப்தத்திற்கு பின்னர், மலேசிய வானூர்தியை தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குச் செல்லும் வழியில் போயிங் 777 என்ற மலேசிய வானூர்தி 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் காணாமல் போனது. அதன் பின்னர் குறித்த வானூர்தியை தேடி பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அனைத்தும் பலனளிக்கவில்லை. இந்தநிலையில், 2025, டிசம்பர் 30 ஆம் திகதியன்று, குறித்த வானூர்தியை தேடும் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என மலேசிய போக்குவரத்து அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இந்தநிலையிலேயே, வானூர்தியை கண்டுபிடிப்பதற்கான அதிக நிகழ்தகவு இருப்பதாக மதிப…

  14. வெடிக்கும் புதிய ஆவணத்தில் ஐரோப்பா 'நாகரிக அழிப்பு' நிலையை எதிர்கொள்கிறது என்று டிரம்ப் எச்சரிக்கிறார் அதிகாரப்பூர்வ தேசிய பாதுகாப்பு உத்தியில் பரந்த கண்ட சரிவைத் தூண்டுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இடம்பெயர்வு ஆகியவற்றை அமெரிக்க ஜனாதிபதி குற்றம் சாட்டுகிறார். கேளுங்கள் இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய பாதுகாப்பு உத்தி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பிரபலமான MAGA இயக்கத்திற்கும் ஐரோப்பாவின் தேசியவாதக் கட்சிகளுக்கும் இடையே ஒரு தெளிவான கருத்தியல் சீரமைப்பை வழங்குகிறது. | ஆண்ட்ரூ கபல்லெரோ-ரெனால்ட்ஸ்/AFP வழியாக கெட்டி இமேஜஸ் டிசம்பர் 5, 2025 காலை 11:02 CET லாரா கயாலி எழுதியது ஐரோப்பாவில் உடனடியாக நிகழும் முழுமையான …

    • 0 replies
    • 102 views
  15. காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்: ஒரே நாளில் 60 பாலஸ்தீனியர்கள் 27 Sep, 2025 | 10:06 AM காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் நேற்று வெள்ளிக்கிழமை (26) சுமார் 60 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 16ஆம் திகதி தரைவழி நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. அல்-வேஹ்தா தெரு, ஷாதி முகாம் மற்றும் நாசர் சுற்றுப்புறம் உள்ளிட்ட இடங்கள் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வெவ்வேறு தளங்கள் மற்றும் இடங்களை குறிவைத்து இஸ்ரேலிய தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் நிலைமை மோசமாகி வருவதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதிகரித்த குண்ட…

  16. சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல் – 460 பேர் உயிரிழப்பு… October 31, 2025 சூடானில் மகப்பேற்று மருத்துவமனை ஒன்றில் சுமார் 460 பேரை அந்நாட்டு துணை இராணுவப் படை கொன்று குவித்ததாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 2023 முதல் சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவ படையினருக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்துவருகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு டார்பர் பகுதியில் எல்-பாஷர் நகர மகப்பேற்று மருத்துவமனைக்குள் இருந்த நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் உட்பட அனைவரையும் துணை இராணுவப் படையினர் கொடுரமாகக் கொன்றனர் என உள்ளுர் மக்கள் தெரிவித்தனர். நூற்றுக்கணக்கானோர் கொடூரமாகக் கொல்லப்பட்டகா…

  17. 15 AUG, 2025 | 03:07 PM காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு என்று விமர்சித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இது முடிவில்லாத போரை நோக்கி நகர்த்தும் என்றும் தெரிவித்துள்ளார். ராணுவ நடவடிக்கை மூலம் காசா நகரை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு அதன் பாதுகாப்பு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. ஏற்கெனவே காசா பகுதியில் சிக்கி உள்ள அப்பாவி மக்கள் உணவுப் பஞ்சத்தாலும் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலாலும் கடும் பேரழிவை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் காசாவின் முக்கிய பகுதியான காசா சிட்டியை கைப்பற்ற இஸ்ரேல் திட்டமிட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள …

  18. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ஆண்டனி ஸுர்கர் வட அமெரிக்க செய்தியாளர், வாஷிங்டன் 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட அரசாங்க முடக்கம் 43 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அரசு ஊழியர்கள் மீண்டும் சம்பளம் பெறத் தொடங்குவார்கள். தேசிய பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படும். குறைக்கப்பட்ட அல்லது முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு சேவைகள் மீண்டும் தொடங்கும். அனைத்தும் அமைதியான பிறகு, நிதி மசோதாவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட மை காய்ந்த பிறகு, இந்தச் சாதனை படைத்த அரசு முடக்கம் என்ன சாதித்தது? அதன் விலை என்ன? செனட் சபையில் ஜனநாயகக் கட்சியினர் சிறுபான்மையினராக இருந்தபோதிலும், குடியரசுக் கட்சியினர் அரசாங்கத்திற்குத் தற்…

  19. உக்ரைனிய தலைநகர் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் 9 பேர் படுகாயம்! உக்ரைனிய தலைநகர் கீவ் மீதான ரஷ்யாவின் பாரிய தாக்குதல்களில் , குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கீவ் மேயர் வித்தாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் அடங்குதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, குறித்த தாக்குதலில் மருத்துவமனை வசதிகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் உட்பட பல மாவட்டங்களில் தீ விபத்துக்கள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தாக்குதலின் விளைவாக ஏற்பட்ட மின்சாரத் தடைகள் சரிசெய்யப்பட்டாலும், வெப்பமூட்டும் வசதிகளில் தடைகள் இன்னும் நீடிப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், மேயர் மருத்துவர்களும் அவசரகால சேவைகளும் எல்…

  20. இந்த வார இறுதியில் மிசிசிப்பி முழுவதும் குறைந்தது மூன்று துப்பாக்கிச் சூடுகள் நடந்தன, இவை அனைத்தும் உயர்நிலைப் பள்ளி கால்பந்து விளையாட்டுகளுடன் தொடர்புடையதாகத் தெரிகிறது, இதில் கர்ப்பிணித் தாய் உட்பட பலர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் அல்லது சனிக்கிழமை அதிகாலையில் வடமேற்கு மிசிசிப்பி நகரமான லேலண்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 12 பேர் காயமடைந்தனர் என்று நகர மேயர் கூறினார். நள்ளிரவில் லேலண்ட் நகர மையத்திற்கு அருகில் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் மேயர் ஜான் லீ CNN இடம் கூறினார். 16 பேரில் இறந்த நால்வரையும் லீ கணக்கிட்டாரா என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை…

  21. உக்ரைனுக்கான இழப்பீட்டு கடன்கள் குறித்த ஐரோப்பிய ஆணையத் திட்டத்தை பெல்ஜியம் இன்னும் ஆதரிக்கவில்லை. Ulyana Krychkovska, Tetyana Vysotska, Anastasia Protz — 22 அக்டோபர், 14:32 பெல்ஜியக் கொடி. ஸ்டாக் புகைப்படம்: பெல்ஜியக் கொடி 1332 தமிழ் உக்ரைனுக்கு €140 பில்லியன் இழப்பீட்டுக் கடன்களை வழங்க, முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களைப் பயன்படுத்துவது குறித்து ஐரோப்பிய ஆணையம் பெல்ஜியத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, ஆனால் பிரஸ்ஸல்ஸ் இன்னும் இந்த முயற்சியை அங்கீகரிக்கவில்லை. மூலம்: ஐரோப்பிய பிராவ்தா , பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதர்களை மேற்கோள் காட்டி. ஒரு EU தூதரின் மேற்கோள்: "ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் கூட்டம் தற்போது நடந்து வருகிறது, அங்கு உக்ரைனுக்கு ஆதரவாக முடக்…

    • 0 replies
    • 101 views
  22. இங்கிலாந்து சென்றடைந்தார் டெனால்ட் ட்ரம்ப்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது அரசு பயணமாக செவ்வாய்க்கிழமை (16) இங்கிலாந்து சென்றடைந்துள்ளார். அரச கொண்டாட்டங்கள், வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேச அரசியல் ஆகியவற்றின் கலவையாக இந்த விஜயம் அமைகிறது. செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க ஜனாதிபதி லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் தரையிறங்கினார். அங்கு அவர் விமானத்தில் இருந்து இறங்கும் போது, அவரை இங்கிலாந்தின் புதிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் வரவேற்றனர். மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா புதன்கிழமை (17) லண்டனுக்கு அருகிலுள்ள வின்ட்சர் கோட்டைக்கு ஜனாதிபதி ட்ரம்ப்பையும், முதல் பெண்மணியையும் வரவேற்பார்கள். அங்கு அவர்கள் வி…

  23. கோலன் மலைப்பகுதி ஆக்கிரமிப்பு: இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு Published By: Vishnu 03 Dec, 2025 | 05:51 PM சிரியாவின் கோலன் மலைப்பகுதி மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பை சட்டவிரோதமானது எனக் கூறி, அந்தப் பகுதியை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. எகிப்து முன்வைத்த இந்த தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 123 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இதற்கெதிராக 7 நாடுகள் மட்டுமே வாக்குகளை பதிவு செய்துள்ளன. மேலும் 43 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகி புறக்கணித்தன. கோலன் பிராந்தியத்தின் சட்ட அந்தஸ்து மற்றும் நிலைமை குறித்து சர்வதேச மட்டத்தில் மீண்டும் கவனம் திரும்பிய நிலையில், இந்த …

  24. ட்ரம்பை சந்திக்கவுள்ள ஷெலன்ஸ்கி உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஷெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிர்வரும் திங்கட்கிழமை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பானது வொஷிங்டன் டிசியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உக்ரைன் ஜனாதிபதியும் தமது டெலிகிராம் கணக்கில் உறுதிப்படுத்தியுள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இடம்போரை நிறுத்துவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை டொனால் ட்ரம்பின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பான பேச்சுவார்த்தை இலங்கை நேரப்படி இன்று இடம்பெற்றிருந்த நிலையில், அது எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்தது. இன்றைய பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்பட்டிருக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்தா…

  25. கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவரும் ட்ரம்ப்! கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகவும், அந்த நாட்டிற்கான புதிய கட்டண விகிதத்தை விரைவில் அறிவிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரது ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்தார். ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்காவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்க கூடிய கனடாவுக்கு வர்த்தக பேச்சு விவகாரத்தில் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்.கனடவை அமெரிக்காவின் மற்றொரு மாகாணம் என்று கூறி அந்நாட்டை ட்ரம்ப் சீண்டியிருந்தார். இந்த நிலையில், அமெரிக்க தொழிநுட்ப நிறுவனங்கள் மீது கூடுதல் வரியை கனடா விதித்தது. இதனால் கடும் கோபமடைந்த ட்ரம்ப், கனடாவின் செயல் அப்பட்டமான விதி மீறல் என்றும் அந்த நாட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.