உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26581 topics in this forum
-
Published By: Digital Desk 1 22 Sep, 2025 | 10:01 AM லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானில் குழந்தைகள் மீதான தாக்குதலை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவம் இன்று அதிகாலை தெற்கு லெபனானில் தாக்குதலொன்றை நடத்தியதாகக் கூறுகிறது. அதில் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. லெபனானின் தெற்கு நகரமான பின்ட் ஜபீலில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவதாக லொபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலின் இலக்கு ஒரு ஹிஸ்புல்லா உறுப்பினர் என்றும், அவரும் கொல்லப்பட்டதாகவும் அறிக்கையொன்றில், குறிப்பிடப்பட்டுள்ளது. இ…
-
- 0 replies
- 113 views
- 1 follower
-
-
தந்தை அருகில் இருந்த போதே 13 வயது மகனை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் படை - மேற்கு கரையில் என்ன நடக்கிறது? படக்குறிப்பு, அப்தெல் அஜீஸ் மஜர்மே தனது 13 வயது மகன் இஸ்லாமின் மரணத்தால் துக்கம் அனுஷ்டிக்கிறார். கட்டுரை தகவல் லூசி வில்லியம்சன் பிபிசி மத்திய கிழக்கு செய்தியாளர், ஜெனின் 22 செப்டெம்பர் 2025, 05:18 GMT புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் நாடுகள் குடிமக்களைப் பாதுகாக்கத்தான் இருக்கின்றன. ஒரு தந்தையும் தனது பிள்ளையைப் பாதுகாக்கவே விரும்புகிறார். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமின் நுழைவாயிலில், தனது 13 வயது மகன் இஸ்லாம், இஸ்ரேலியப் படைகளால் இந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அப்தெல் அஜீஸ் மஜர்மே அருகில் நின்றுகொண்டிருந்தார். "என் மகன்…
-
- 1 reply
- 235 views
- 1 follower
-
-
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 91 பேர் 21 Sep, 2025 | 11:22 AM இஸ்ரேலியப் படைகள் நேற்றையதினம் காசாவில் 91 பாலஸ்தீனியர்களைக் கொன்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் பிரபல வைத்தியரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வடக்கு காசா நகரத்திலிருந்து தப்பிச் செல்லும் லொறியில் இருந்த நான்கு பேர் உள்ளிட்டோரும் அடங்குவதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை (நேற்று) நடந்த கொலைகள், இஸ்ரேலியப் படைகள் காசா நகரத்தைக் கைப்பற்றவும், தெற்கில் உள்ள செறிவு மண்டலங்களுக்குள் மக்களைத் தள்ளவும் இடைவிடாத வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதலைத் தொடர்ந்தும் மேற்கொண்டனர். இஸ்ரேலியப் படைகள் குடியிருப்பு வீடுகள், பாடசாலைகள் தங்குமிடங்களாக மாற்றப்பட்ட கூடாரங்க…
-
-
- 2 replies
- 198 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 29 வயதில் முகமது பின் சல்மான் துணை பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டார். கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 21 செப்டெம்பர் 2025, 03:11 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் 2015 ஜனவரி 23ஆம் தேதி, செளதி அரேபிய அரசர் அப்துல்லா நுரையீரல் புற்றுநோயால் இறந்தபோது, சல்மான் பின் அப்துல்அஜிஸ் புதிய மன்னரானார். புதிய மன்னர், உளவுத்துறையின் முன்னாள் தலைவர் முக்ரின் பின் அப்துல்அஜிஸை புதிய பட்டத்து இளவரசராக நியமித்தார், அப்போது அவருக்கு வயது 68. மூன்று மாதங்களுக்குப் பிறகு, யாருமே எதிர்பாராத விதமாக புதிய பட்டத்து இளவரரை மன்னர் சல்மான் பதவி நீக்கம் செய்தார். அவருக்குப் பதிலாக, மன்னர் தன்னுடைய மருமகனான 55 வயது முகமது பின் …
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மிக்-31 போர் விமானங்கள் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் ஜாரோஸ்லாவ் லுகிவ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்ய போர் விமானங்கள் தங்களின் வான் எல்லைக்குள் ஊடுருவியதாகக் கூறும் எஸ்டோனியா, நேட்டோ உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஊடுருவலை "அதிர்ச்சிகரமானது" என எஸ்டோனிய வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது. ரஷ்யாவின் மூன்று மிக்-31 போர் விமானங்கள் எஸ்டோனியா வான் பரப்புக்குள் அனுமதியின்றி நுழைந்து பின்லாந்து வளைகுடா மீது 12 நிமிடங்கள் வரை இருந்ததாக எஸ்டோனியா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேட்டோ படைகள் உடனடியாக எதிர்வினையாற்றி ரஷ்ய விமானங்களை இடைமறித்து திருப்பி அனுப்பியதாகக் கூறும்…
-
- 2 replies
- 223 views
- 1 follower
-
-
இனி அமெரிக்காவில் வேலை சாத்தியமற்றதா? - எச்1பி கட்டண உயர்வால் இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,Getty Images அமெரிக்காவில் வெளிநாடுகளைச் சேர்ந்த ஊழியர்களை பணிக்கு எடுப்பதற்கான ஹெச்1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக உயர்த்தி, வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 19) அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 'பன்மடங்கு விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்திய மென்பொருள் நிறுவனங்களின் வருவாயில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்' என, தொழில்துறை அமைப்புகள் கூறுகின்றன. 'ஆண்டுதோறும் விசா கட்டணத்தை செலுத்த வேண்டும்' என்ற டிரம்பின் புதிய உத்தரவால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். டிரம்பின் உத்தரவால் இந்திய …
-
- 0 replies
- 187 views
-
-
https://fb.watch/Ce88Q5X_Pd/ "அமெரிக்க படையினர் இஸ்ரேலுக்கான ஆயுத விமானங்களை பறக்க மறுத்ததால் கைது –நீக்கப்படுவதற்கு முன் வீடியோவைப் பாருங்கள்!" #USMilitary #HonourableMenAndWomen #RefuseToFly #NoArmsToIsrael #PentagonProtest #TruthBehindWar #StopTheWar #JusticeForPeace #VoiceOfSoldiers #ShareBeforeDelete See more in Video 0:21 'He's a great gentleman and a great King' 👑 #dailyexpress #kingcharles #trump Daily Express
-
-
- 2 replies
- 436 views
- 1 follower
-
-
ரஷ்யா–பெலருஸ் இணைந்து மாபெரும் இராணுவப் பயிற்சி! ரஷ்யா மற்றும் பெலருஸ் நாடுகள் இணைந்து நடத்தும் ‘Zapad‑2025‘ என்ற மாபெரும் இராணுவப் பயிற்சி, ஐரோப்பிய நாடுகளுக்கான நேரடி எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. செப்டம்பர் 12 முதல் 16 வரை நடைபெறும் இப் பயிற்சியில் ஹைபர்சோனிக் ஏவுகணைகள், Su‑34 போர் விமானங்கள், கனரக ராணுவ வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. மேலும், ரஷ்யா வெலருஸ் நிலப்பரப்பில் இடைத் தூர ஏவுகணைகள் (intermediate-range missiles) அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா–பெலருஸ் கூட்டணி இந்த இராணுவப் பயிற்சி “பாதுகாப்பு நோக்கத்துக்காக மட்டுமே” எனத் தெரிவிக்கின்ற …
-
- 5 replies
- 515 views
-
-
முன்னாள் காதலியை துன்புறுத்தியவரை கைதுசெய்யச் சென்ற பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு : 3 பேர் பலி - அமெரிக்காவில் சம்பவம் 19 Sep, 2025 | 02:10 PM அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள யாக் கவுண்டி பகுதியில், பொலிஸ் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் மேலும் 2 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட நபர், பின்னர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பென்சில்வேனியாவில் உள்ள நோர்ட் கோடோரஸ் நகரில், குற்றவாளியைக் கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது வியாழக்கிழமை (செப். 18) குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 24 வயதுடைய மத்தேயு ரூத் (Matthew Ruth) என்ற இளைஞர், அவரது முன்னாள் கா…
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
"போர்க்களத்தில் வெற்றி பெற எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருந்தது, இன்னும் அது இருக்கிறது." ரஷ்யர்களை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து ஜெனரல் முஷென்கோ. 2024-12-09 15:15 2014-2019 ஆம் ஆண்டில் உக்ரைனின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் விக்டர் முஷென்கோ (தற்போது ஆயுதப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் முன்னணி ஆராய்ச்சியாளர்), ஊடக ஃபேக்டிக்கு அளித்த பேட்டியில் , முன்னணியில் தற்போதைய நிலைமையை மதிப்பிட்டு, இராணுவத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளை கோடிட்டுக் காட்டினார் மற்றும் எதிர் தாக்குதலின் தோல்விக்கான முக்கிய காரணங்களை பட்டியலிட்டார். Texty.org.ua உரையாடலின் முக்கிய பகுதிகளை முஷென்கோவின் ஒழுங்கமைக்கப்பட்ட நேரடி உரையின் வடிவத்தில் வெளியிடுகிறது. பொதுப் பணியாளர்களின் தலைவர் — …
-
-
- 2 replies
- 269 views
-
-
வொஷிங்டனில் ஜனாதிபதி ட்ரம்புக்கு 12 அடியில் தங்க நிறத்தில் சிலை. அமெரிக்காவில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கையில் ‘பிட்காயின்’ எனப்படும் மெய்நிகர் நாணயம் வைத்திருப்பது போன்ற, 12 அடி உயர தங்க நிறத்தாலான சிலை நிறுவப்பட்டுள்ளது. அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் உள்ள பார்லிமென்டுக்கு வெளியே, நேஷனல் மால் பகுதியில் கையில் பிட்காயின் ஏந்தியபடி இருக்கும் ட்ரம்பின் 12 அடி உயர பொன்நிற சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பல்வேறு விவாதங்களையும் கிளப்பியுள்ளது. அந்நாட்டின் மத்திய வங்கியான, பெடரல் வங்கி, கடந்த 2024 டிசம்பருக்கு பின் தற்போது அதன் வட்டி விகிதத்தை 25 சதவீத அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக அறிவித்தது. அறிவிப்பு வந்த அதே நேரத்தில் இச்சிலை திற…
-
- 0 replies
- 239 views
-
-
வரவு-செலவுத் திட்டங்களுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்! அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் வியாழக்கிழமை (18) முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவும் சமர்ப்பிக்கப்படவுள்ள தங்களது வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களை கைவிடுமறும் வலியுறுத்தினர். போராட்ட நாளின் ஒரு பகுதியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களில் ஆசிரியர்கள், ரயில் சாரதிகள், மருந்தாளுநர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அடங்குவர். அதே நேரத்தில், பதின்ம வயதினர் உயர்நிலைப் பாசாலைகளை மணிக்கணக்கில் முற்றுகையிட்டனர். போராட்டக்காரர்களும் தொழிற்சங்கங்களும் முந்தைய அரசாங்கத்…
-
- 0 replies
- 142 views
-
-
18 Sep, 2025 | 04:07 PM இணையதளச் செய்திப் பிரிவு சட்டவிரோத போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். இந்தப் பட்டியலில் இந்தியா உள்ளிட்ட 23 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள நாடுகள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதன் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதால், அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் தவறியதாக ஆப்கானிஸ்தான், பொலிவியா, மியான்மர் உள்ளிட்ட ஐந்து நாடுகளை அ…
-
- 0 replies
- 124 views
-
-
Published By: Digital Desk 1 18 Sep, 2025 | 08:01 AM கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பான "Sikhs for Justice" (SFJ)இ வான்கூவரில் உள்ள இந்திய தூதரகத்தை வியாழக்கிழமை (செப்டம்பர் 18) முற்றுகையிடப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. SFJ அமைப்பின் அறிவிப்பின்படி இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரைஇ 12 மணி நேரத்திற்கு இந்தியத் தூதரகத்தை முற்றுகையிடப் போவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய-கனடா வம்சாவளியினர் தூதரகத்திலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. கனடாவில் உள்ள இந்திய தூதரகங்கள்இ காலிஸ்தான் ஆதரவாளர்களைக் குறிவைத்து ஒரு உளவு வலையமைப்பை நடத்தி வருவதாக SJF குற்றம் சாட்டியுள்ளது. 2023-ல் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய உளவு அமைப்பின் பங்கு …
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கு 2023 இல் ஹமாஸுடனான போர் தொடங்கியதிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று முடிவு செய்வதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது. ஒரு குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது, அவர்களுக்கு கடுமையான உடல் மற்றும் மன ரீதியான தீங்கு விளைவிப்பது, குழுவை அழிக்க வேண்டுமென்றே நிபந்தனைகளை விதிப்பது மற்றும் பிறப்புகளைத் தடுப்பது என்பனவற்றின் ஊடாக வௌிப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இனப்படுகொலை நோக்கத்திற்கான சான்றாக இஸ்ரேலிய தலைவர்…
-
- 3 replies
- 327 views
- 1 follower
-
-
பிரித்தானியாவில் ட்ரம்புக்குப் பிரமாண்ட அரச விருந்து 18 Sep, 2025 | 06:32 PM பிரிட்டனுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு, பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரித்தானிய அரச குடும்பத்தினர் பிரமாண்டமான அரச விருந்து அளித்துள்ளனர். விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபத்தில், 155 அடி நீளமுள்ள மேசை அமைக்கப்பட்டது. இந்த மேசை முழுக்க, வெள்ளிப் பாத்திரங்கள், தங்க நிறத்திலான பொருட்கள், மற்றும் மெழுகுவர்த்தி அலங்காரங்கள் இடம்பெற்றிருந்தன. விருந்திற்காக பிரிட்டன் இராணுவத்தின் பாதுகாப்புப் பிரிவினர், அரண்மனையின் ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு அளிக்கப்பட்ட இந்த வரவேற்பு, அமெரிக்கா - பிரிட்டன் இட…
-
- 0 replies
- 135 views
-
-
பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலுக்குள் பல சிரமங்களை எதிர்கொள்கிறார். கட்டுரை தகவல் பால் ஆடம்ஸ் பிபிசி 4 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் போர் தொடர்கிறது. மறுபுறம், இஸ்ரேல் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாகத் தெரிகிறது. இஸ்ரேல், நிறவெறி கொள்கை காரணமாக உலகளவில் புறக்கணிக்கப்பட்ட 'தென்னாப்ரிக்கா' காலத்திற்கு மீண்டும் செல்கிறதா? அந்நேரத்தில் அரசியல் அழுத்தமும், பொருளாதாரம், விளையாட்டு, கலாசார தளங்களில் தென்னாப்ரிக்காவுக்கு விதிக்கப்பட்ட புறக்கணிப்பும், அந்தக் கொள்கையை கைவிட நிர்பந்தித்தன. அல்லது, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி அரசாங்கத்தால் தனது நாட்டின் சர்வதேச நிலையை நிரந்தரமாக சேதப்பட…
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 3 17 Sep, 2025 | 11:36 AM பாகிஸ்தானின் பிரபல குழந்தை நட்சத்திரமான உமர் ஷா ( Umar Shah) தனது 15 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் அந்நாட்டு ரசிகர்களையும், பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல 'ஜீதோ பாகிஸ்தான்' (Jeeto Pakistan) தொலைக்காட்சி தொடர் உட்பட பல நிகழ்ச்சிகளில் நடித்து வந்த உமர் ஷா, தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது என்பது மிகவும் அரிதானது. இந்நிலையில், சிறு வயதிலேயே உமர் ஷா உயிரிழந்தது பாகிஸ்தானில் உள்ள ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உமர் ஷாவின் சகோதரரும், பிரபல டிக்டொக் நட்சத்திரமுமான அகமது ஷா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் …
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம்! மத்திய லண்டன் சனிக்கிழமையன்று (14) அண்மைய பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய வலதுசாரி ஆர்ப்பாட்டங்களில் ஒன்றைக் கண்டது. குடியேற்ற எதிர்ப்பு ஆர்வலர் டோமி ரொபின்சனின் பதாகையின் கீழ் 100,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர். ஆர்ப்பாட்டங்களின் போது பல அதிகாரிகள் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். “Unite the Kingdom” அணிவகுப்பு என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில் சுமார் 110,000 பேர் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், போராட்டத்தின் வான்வழி காட்சிகள் மத்திய லண்டன் வீதிகளின் சில கிலோ மீட்டர்கள் போராட்டக்காரர்களால் நிரம்பி வழிவதைக் காட்டியது. இது அதிகாரிகளால் எண்ணிக்கையை குறைத்த…
-
- 9 replies
- 642 views
- 1 follower
-
-
இங்கிலாந்து சென்றடைந்தார் டெனால்ட் ட்ரம்ப்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது அரசு பயணமாக செவ்வாய்க்கிழமை (16) இங்கிலாந்து சென்றடைந்துள்ளார். அரச கொண்டாட்டங்கள், வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேச அரசியல் ஆகியவற்றின் கலவையாக இந்த விஜயம் அமைகிறது. செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க ஜனாதிபதி லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் தரையிறங்கினார். அங்கு அவர் விமானத்தில் இருந்து இறங்கும் போது, அவரை இங்கிலாந்தின் புதிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் வரவேற்றனர். மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா புதன்கிழமை (17) லண்டனுக்கு அருகிலுள்ள வின்ட்சர் கோட்டைக்கு ஜனாதிபதி ட்ரம்ப்பையும், முதல் பெண்மணியையும் வரவேற்பார்கள். அங்கு அவர்கள் வி…
-
- 0 replies
- 99 views
-
-
அவுஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள ஒரு வீட்டின் வாகனம் பழுது பார்க்கும் இடத்தில் இயங்கும் ஒரு இந்திய கடைக்கு எதிராக இலங்கையர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். குறித்த கடை 2023ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மேலும் உறைந்த உணவுகள் உட்பட பல்வேறு பொருட்கள் அங்கு விற்பனை செய்யப்படுகின்றன. கடையில் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இருப்பதும், அவர்களின் கவனக்குறைவான வாகன நிறுத்துமிடமும் அந்தப் பகுதியில் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். ஆபத்தான சூழ்நிலை கடைக்கு பொருட்களை கொண்டு செல்லும் லொறிகள் வீதியில் பயனாளர்களுக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன. காலை 6:30 மணி முதல் இரவு 11:00 மணி வரை கடை இயங்குகிறது, மேலும் பொருட்கள…
-
-
- 5 replies
- 478 views
-
-
பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, உச்சிமாநாட்டிற்கு முன்பாக கத்தார் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினர். கட்டுரை தகவல் சந்தீப் ராய் பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அரபு நாடுகளிடையே நேட்டோ போன்ற ஒரு ராணுவ கூட்டணியை உருவாக்கும் முயற்சி வேகமெடுத்து வருவதாகத் தெரிகிறது. கத்தாரில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் குறித்து விவாதிக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் தோஹாவில் இன்று அவசர உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக நேற்று நடந்த கூட்டத்தில் அந்தந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தநிலையில் இன்று நடக…
-
-
- 3 replies
- 364 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எஸ்சிஓ உச்சிமாநாட்டில் புதின், மோதி, ஜின்பிங் கட்டுரை தகவல் டாம் லேம் பிபிசி மானிட்டரிங் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சிமாநாட்டிற்காக தலைவர்கள் சீனாவின் தியான்ஜினில் சந்தித்தபோது புதிய வளர்ச்சி வங்கி தொடங்குவதற்கான திட்டம் இறுதி செய்யப்பட்டது. சீனா நீண்ட காலமாக இதனை முன்னிறுத்தி வருகிறது. எஸ்சிஓவின் இந்த வளர்ச்சி வங்கிக்கான சாத்தியங்களை சீன ஊடகங்கள் புகழ்ந்துள்ளன. இந்த வங்கி இயற்கை வளம் மிக்க எஸ்சிஓ உறுப்புநாடுகளில் உள் கட்டமைப்பு வளர்ச்சிக்கு நிதியுதவி வழங்க முடியும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த வங்கி சீனாவுக்கும் மத்திய ஆசியாவுக்குமான பொருளாதார இணைப்பை வலுப்படுத்தி, யூரேசியாவில் (ஆசியா மற…
-
-
- 3 replies
- 339 views
- 1 follower
-
-
வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை: வட கொரியா குறித்து ஐ.நா. அறிக்கை 13 Sep, 2025 | 01:08 PM வட கொரியாவில், தென் கொரியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது அல்லது பகிர்வது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வட கொரிய அரசு, புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதன் விளைவாக, தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள், அந்நாட்டுக் குடிமக்களின் வாழ்க்…
-
- 3 replies
- 237 views
- 1 follower
-
-
டிரோன்கள் நவீன போர் சூழலை எவ்வாறு மாற்றுகின்றன என்பது குறித்து விவரிக்கிறது இந்த காணொளி.
-
- 0 replies
- 166 views
- 1 follower
-