Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கனடாவில் துப்பாக்கிப் பிரயோகம் : ஐவர் பலி By SETHU 19 DEC, 2022 | 01:34 PM கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர் டொரண்டோவிலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவிலுளள வோன் (Vaughan) எனும் நகரில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை இத்துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்ம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் என உள்ளூர் பொலிஸ் உயரதிகாரி ஜிம் மெக்ஸ்வீன் தெரிவித்துள்ளார். சந்தேக நபர், பொலிஸாருடனான மோதலில் உயிரிழந்துள்ளார் எனவும் ஜிம் மெக்ஸ்வீன் தெரிவித்துள்ளார். குடியிருப்புக் கட்டடமொன்றில் இத்துப்பா…

  2. பிரித்தானியாவிற்குள் கடல்வழியாக சட்டவிரோதமான முறையில் நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பும் அரசாங்கத்தின் திட்டம் சட்டபூர்வமானதென பிரித்தானிய உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ருவாண்டாவிற்கு புகலிட கோரிக்கையாளர்களை அனுப்பும் பிரித்தானியாவின் திட்டம் சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுக்கும் நோக்கத்துடனேயே உள்ளதாக லண்டனில் உள்ள உயர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த வாரம் ஆபத்தான பயணத்தில் நான்கு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து நீதிமன்ற இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ருவாண்டா கொள்கை சட்டத்தை மீறவில்லை என்றும், 1998 மனித உரிமைகள் சட்டத்துடன் பாராளுமன்றத்தால் …

  3. உக்ரேன் போரில் உலகளாவிய பேரழிவை தடுத்தவர் மோடி : அமெரிக்க சிஐஏ பாராட்டு By DIGITAL DESK 2 19 DEC, 2022 | 12:01 PM உக்ரேன் போர் விவகாரத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பேரழிவைத் தடுப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடம் தனது செல்வாக்கை பயன்படுத்தி மிகப்பெரிய பேரழிவைத் தடுத்துள்ளதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் (சிஐஏ) இயக்குநர் பில் பர்ன்ஸ் கூறியுள்ளார். உக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு சாதகமானவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி புட்டின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முடிவெடுத்துள்ளதாகக் கூறப்பட்டது. இது சர்வதேச அளவில் பேசும்பொருளானது. அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் இந்…

  4. குளிர்காலத்தின் முதலாவது கொவிட் தொற்றலையை சீன எதிர்கொண்டுள்ளது: சீனாவின் உயர்மட்ட சுகாதார அதிகாரி தகவல்! இந்த குளிர்காலத்தில் கொவிட் நோய்த்தொற்றுகளின் எதிர்பார்க்கப்படும் மூன்று அலைகளில் முதல் அலையை சீனா அனுபவித்து வருவதாக சீனாவின் உயர்மட்ட சுகாதார அதிகாரி ஒருவர், தெரிவித்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் அதன் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதிலிருந்து நாடு தொற்றுகளின் அதிகரிப்பைக் காண்கிறது. சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான புதிய தினசரி தொற்றுகளைக் காட்டுகின்றன. இருப்பினும், கொவிட் பரிசோதனையில் சமீபத்திய குறைப்பு காரணமாக இந்த எண்கள் குறைத்து மதிப்பிடப்பட்டதாக கவலைகள் உள்ளன. …

  5. அமெரிக்க நாடாளுமன்ற கலவரம் தொடர்பாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய தீர்மானம் ! அமெரிக்க நாடாளுமன்றில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக டொனால்ட் ட்ரம்பின் மீது மூன்று கிரிமினல் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்ய தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் குழு பரிந்துரைத்துள்ளது. குறித்த குழு தனது விசாரணையை நிறைவு செய்துள்ள நிலையில் கலவரம் தொடர்பாக ட்ரம்ப் மீது கிளர்ச்சியை தூண்டியாமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதித்துறைக்கு பரிந்துரைத்துள்ளது. இதனை தவிர அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் செயற்பட்டமை, உத்தியோகபூர்வ நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் அமெரிக்காவை ஏமாற்ற சதி செய்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடு…

  6. குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு 420,000 யென் : ஜப்பான் அரசு அறிவிப்பு! By DIGITAL DESK 2 14 DEC, 2022 | 01:50 PM ஜப்பானில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு 420,000 யென் ரூபா (இலங்கை மதிப்பில் 2.6 லட்சம்) வழங்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஜப்பானில் அண்மைக்காலமாக மக்கள் தொகை குறைந்து வருவதுடன், பிறப்பு விகிதமும் குறைந்துள்ளது. இந்நிலையில் ஜப்பானின் சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகம், அறிவித்துள்ள சில சலுகைகள் மூலம் மக்கள் குழந்தைகளைப் பெற ஊக்குவிக்கும் என்று நம்புகிறது. ஜப்பான் டுடே வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் தெரிவி…

  7. ஆஸ்திரேலியா: நச்சு கீரை சாப்பிட்டவர்களுக்கு சித்த பிரமையா? என்ன நடந்தது? கட்டுரை தகவல் எழுதியவர்,டிஃபானி டர்ன்புல் பதவி,பிபிசி நியூஸ், சிட்னி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆஸ்திரேலியாவில் நச்சுத் தன்மை வாய்ந்த கீரையை சாப்பிட்டவர்கள் கடுமையான உடல் சுகவீனம் மற்றும் சித்த பிரமைக்கு ஆளான சம்பவம் அங்கு அவசர சுகாதார எச்சரிக்கையை விடுக்கத் தூண்டியிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் காஸ்ட்கோவில் இருந்து 'ரிவியரா ஃபார்ம்ஸ்' பேபி கீரை சாப்பிட்ட ஒன்பது பேருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. சித்த பிரமை பிடித்தல், இதய துடிப்பு திடீரென அதிகரித்…

  8. ஜோன் எவ் கென்னடி படுகொலை தொடர்பான 13,000 ஆவணங்கள் முதல் தடவையாக வெளியீடு By Sethu 16 Dec, 2022 | 11:27 AM அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எவ் கென்னடி படுகொலை தொடர்பான பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை வெளியிடுவதற்கு வெள்ளை மாளிகை முதல் தடவையாக உத்தரவிட்டுள்ளது. 13,173 ஆவணங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டதன் மூலம், இக்கொலை தொடர்பான 97 சதவீத ஆவணங்கள் இப்போது பகிரங்கமாக கிடைக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்து;ளளது. இந்த ஆவணங்கள் மூலம் பெரும் தகவல் எதுவும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை. ஆனால், குற்றம்சுமத்தப்படும் கொலையாளி குறித்து மேலும் தகவல்களை தெரிந்துகொள்ளலாம் …

  9. அமெரிக்காவில் அரச சாதனங்களில் டிக்டொக்கை பயன்படுத்த தடை செய்யும் சட்டமூலம் நிறைவேற்றம் By T. Saranya 16 Dec, 2022 | 11:38 AM அமெரிக்க அரசு ஊழியர்கள் சீனாவுக்கு சொந்தமான வீடியோ செயலியான டிக்டொக்கை அரசுக்குச் சொந்தமான கருவிகளில் பயன்படுத்தக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் சட்டமூலத்தை நிறைவேற்றி உள்ளது. அமெரிக்க சென்ட் நேற்று புதன்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் அரசுக்குச் சொந்தமான கருவிகளில் டிக்டொக்கை பயன்படுத்தக் கூடாது என சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் பின்பு இந்த சட்டமூலம் அ…

  10. கொவிட்-19 தொற்றுநோய் இனி உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு! கொவிட்-19 தொற்றுநோய் இனி அடுத்த ஆண்டில் உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இந்த வியடத்தினை தெரிவித்தார். வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படவில்லை என சீன சுகாதார பிரிவினர் அறிவித்துள்ள நிலையில், உலகின் பிற பகுதிகளில் இந்த நிலைமை முற்றிலும் வேறுபட்டது என அதனோம் தெரிவித்தார். வெற்றிகரமான தடுப்பூசி செலுத்துகை ஊடாக கொவிட் -19 வைரஸின் தீவிரம் குறைக்கப்பட்டதன் மூலம், வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துள்ளது என்றும் உலக சுகாதார அம…

  11. ஆப்கானிஸ்தான் முதல் சூடான் வரை : உலகின் மிகவும் ஆபத்தான நாடுகள் – எந்த நாட்டுக்கு முதலிடம்? ஒவ்வொரு ஆண்டும், Economics and Peace என்ற நிறுவனம் உலகளாவிய அமைதி குறியீட்டு அறிக்கையை வெளியிடுகிறது. பயங்கரவாதம், உள்நாட்டு மோதலால் ஏற்படும் இறப்புகள் மற்றும் கொலை விகிதம் உள்ளிட்ட 23 வெவ்வேறு விஷயங்களின் அடிப்படையில் ஒரு நாடு எவ்வளவு ஆபத்தானது அல்லது பாதுகாப்பானது என்பதை இந்த அறிக்கை அளவிடுகிறது. அப்படி உலகின் மிகவும் ஆபத்தான நாடுகள் குறித்து காணலாம் …

  12. உக்ரைனில் மின்கட்டமைப்பை சீரமைக்க 800 மில்லியன் யூரோ தேவை! ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு வரும் உக்ரைனில் சேதமடைந்த மின்கட்டமைப்பை சீரமைக்க 800 மில்லியன் யூரோ தேவைப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைனுக்கு உதவுவதற்காக பரிஸில் நடந்த சர்வதேச மாநாட்டில் இக்கோரிக்கையை முன்வைத்த ஜெலன்ஸ்கி, நிதியாக மட்டுமின்றி மின்மாற்றிகள், உயரழுத்த மின்கம்பிகள், ஜெனரேட்டர்கள் போன்றவற்றையும் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மின்சார கட்டமைப்புகள் சேதப்படுத்தப்பட்டதால் வரும் குளிர் காலத்தை சமாளிக்கும் வகையில் சுமார் இரண்டு பில்லியன் கன மீட்டர் கூடுதல் எரிவாயுவை வழங்க வேண்டுமென ஜி7 நாடுகளுக்க…

  13. பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டம்! பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி ஜோ பைடன் இந்த வாரம் இந்த நடவடிக்கையை அறிவிப்பார் என்று பெயரிடப்படாத அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரஷ்ய தாக்குதல்கள் தொடர்ந்து பொதுமக்களைக் கொன்று பெரும் இருட்டடிப்புகளை ஏற்படுத்தியதால், உக்ரைன் சில காலமாக மேலும் வான் பாதுகாப்பு ஆதரவைக் கோரி வருகிறது. பேட்ரியாட் மிகவும் மேம்பட்ட அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும், ஆனால் உக்ரைனுக்கான விநியோகம் குறைவாகவே இருக்கும் என நம்பப்படுகின்றது. இதில் எத்தனை பேட்ரியாட் வ…

  14. ஈரானில் ஹிஜாப் போராட்டம் : 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை By Digital Desk 2 15 Dec, 2022 | 09:05 AM ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 400 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்தது. 3 மாதங்களாக நடைபெற்ற இந்த போராட்டம் ஈரானை உலுக்கியது. சொந்த மக்களின் இந்த போராட்டத்தை வெளிநாட்டு சதி என குற்றம் சாட்டிய ஈரான் இரும்பு கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கியது. இதில் 68 சிறுவர்கள் உட்பட சுமார் 490 போராட்ட…

  15. 3.58 பில்லியன் டொலர் பெறுமதியான டெஸ்லா பங்குகளை விற்பனை செய்தார் மஸ்க் By SETHU 15 DEC, 2022 | 09:25 AM உலகின் 2 ஆவது நிலை பெரும் செல்வந்தரான இலோன் மஸ்க், தனது வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் மேலும் 22 மில்லியன் பங்குகளை விற்பனை செய்துள்ளார். இவற்றின் பெறுமதி 3.58 பில்லியன் டொலர்களாகும். கடந்த திங்கட் முதல் புதன்கிழமை வரையான நாட்களில் இப்பங்குகள் விற்பனை செய்யப்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த வருடத்தில் இலோன் மஸ்க் விற்பனை செய்த டெஸ்லா நிறுவனப் பங்குகளின் பெறுமதி சுமார் 40 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. இம்முறை அவர் டெஸ்லா நிறுவனப் பங்குகளை விற்பனை செய்தமைக்கான காரணம் தெரிவிக்…

  16. எதிர்கால தலைமுறையினருக்கு சிகரெட் தடைசெய்யப்படும் சட்டத்தை நியூ ஸிலாந்து நிறைவேற்றியது By SETHU 14 DEC, 2022 | 09:42 AM நியூ ஸிலாந்தில் எதிர்கால தலைமுறையினர் சிகரெட் வாங்க முடியாத சட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதன்படி, 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த எவரும் ஒருபோதும் சிகரெட் அல்லது புகையிலைப் பொருட்களை வாங்க முடியாது போகலாம். நேற்று நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்தின்படி, புகையிலைப் பொருட்களை வாங்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் குறைந்துகொண்டு செல்லும். உதாரணமாக, 2050 ஆம் ஆண்டில் சிகரெட் வாங்கக்கூடிய ஆகக்குறைந்த வயதெல்லை 40 ஆக இருக்கும். இதன்படி, 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந…

  17. நடுக்கடலில் மாயமான மலேசிய விமானம்..! வெளியாகிய திடுக்கிடும் தகவல் எட்டு ஆண்டுகளுக்கு முன், நடுக்கடலில் மாயமான ‘மலேசியா ஏர்லைன்ஸ்’ விமானத்தை, அதன் விமானிகள் திட்டமிட்டு கடலில் மூழ்கடித்திருக்கலாம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஆசிய நாடான மலேஷியாவின் கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் பீஜிங் நகருக்கு, மலேஷிய விமான நிறுவனத்தின் விமானம் இயக்கப்பட்டது. இந்த விமானம், மார்ச் நடுக்கடலில் மாயமானது. இதில் பயணித்த பெரும்பாலானோர் சீனாவைச் சேர்ந்தவர்கள். மாயமான விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. ஆனால் பெரிய அளவில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், கிழக்கு ஆப்ரிக்க நாடான மடகாஸ்கரில் ஒரு மீனவர் வீட்டில் இருந்து, விமானத்தின் கதவு ஒன்று சமீபத…

  18. அமெரிக்காவில் கடும் பனி பொழிவு By T. SARANYA 14 DEC, 2022 | 11:52 AM ஒரு சக்திவாய்ந்த புயல் தெற்கு அமெரிக்காவில் சூறாவளியை உருவாக்கியதோடு, அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலைகளை கொண்டு வந்துள்ளது. கடும் பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் 137 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அங்கு கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. நியூயோர்க் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. இந்த பனிப்புயலால் நியூயோர்க், பென்சில்வேனியா, நெவாடா, கொலராடோ மற்றும் நெப்ர…

  19. உல்லாசக் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த யுவதி சடலமாக மீட்பு By SETHU 14 DEC, 2022 | 11:23 AM அவுஸ்திரேலிய கடற்பரப்பில் உல்லாசக் கப்பலொன்றிலிருந்து வீழ்ந்த யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பசுபிக் எக்ஸ்புளோரர் (Pacific Explorer) எனும் உல்லாசக் கப்பலில் அவுஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது நேற்றிரவு பெண்ணொருவர் கடலில் வீழ்ந்தார். அவரைக் கண்டுபிடிப்பதற்கு பாரிய தேடுதல்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், இன்று காலை ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம் அப்பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. 23 வயதான யுவதியொருரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இப்பெண்ணை கண்டுபிடிப்பதற்கு விமான…

  20. அவுஸ்திரேலியாவில் பொலிஸாரை குறிவைத்து தாக்குதல்; 6 பேர் பலி By Digital Desk 2 13 Dec, 2022 | 09:53 AM அவுஸ்திரேலியாவில் காணாமல் போன நபரை தேடி சென்ற பொலிஸாரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் விம்பிலா நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல்போன நபர் ஒரு பண்ணை வீட்டில் இருப்பதாக பொலிஸாருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அந்த பண்ணை வீட்டிற்கு நேற்று திங்கட்கிழமை (டிச.12) மாலை 5 மணியளவில் பொலிஸார் சென்றுள்னர். அப்போது, அந்த வீட்டிற்குள் இருந்த 3 பேர் கொண்ட கும்பல் பொலிஸார் மீது கண்மூடித்தனமாக துப்பாக்…

  21. இரானிய பெண் இயக்குநர் தனது முடியை வெட்டி கேரள சர்வதேச பட விழாவுக்கு அனுப்பியது ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர்,இம்ரான் குரேஷி பதவி,பிபிசி இந்தி 48 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானிய இயக்குநர் மஹ்னாஸ் மஹாமதி கேரளாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிற்கு தனது முடியை அனுப்பி வைத்த இரானிய இயக்குநர் ஒருவரின் பெயர் அண்மையில் தலைப்புச் செய்திகளில் அடிபட்டது. அதற்கு என்ன காரணம்? கேரள சர்வதேச திரைப்பட விழாவில் (IFFK) வழங்கப்பட்ட சினிமாவின் ஆன்மா விருதைப் பெற மஹ்னாஸ் மஹாமதியால் கடந்த வாரம் இந்…

  22. தகவல் தொழில்நுட்பத்தில் சீனாவை விட இந்தியா மிகவும் முன்னிலையில் உள்ளது - சீன தொழில்நுட்ப நிபுணர் By VISHNU 13 DEC, 2022 | 01:38 PM 'தி ரைஸ் ஆஃப் இந்தியன் ஐடி' என்ற புத்தகத்தின் ஆசிரியர் மைக் லியு, உலகச் சந்தைகளில், குறிப்பாக தொழில்நுட்ப துறையில் இன்னும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய நிறுவனங்களைப் போலல்லாமல், சீனாவின் சாப்ட்வேர் வருவாயானது பெரும்பாலும் உள்ளகத்திலிருந்து வருகிறது என்றார். சீனாவின் தகவல் தொழில்நுட்ப வருவாயில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை உள்நாட்டு சீன சந்தையில் இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டார். இந்தியாவின் தொழில்நுட்ப துறை, அதன் பொருளாதாரத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். உலகளாவிய சந்தைகளில் …

  23. சீன விமானங்களை... எச்சரிக்க, ஜெட் விமானங்களை அனுப்பியது தாய்வான். நாட்டின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த 29 சீன விமானங்களை எச்சரிக்க தாம் நடவடிக்கை எடுத்ததாக தாய்வான் அறிவித்துள்ளது. செவ்வாயன்று சீனப் போர் விமானங்களின் ஊடுருவல் தைபே மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான பதட்டங்களை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தின் பிற்பகுதியிலிருந்து சீனாவின் மிகப்பெரிய வான் பாதுகாப்பு மண்டல மீறலை இந்த ஊடுருவல் குறிக்கிறது. அதன்படி நேற்று சீனாவின் 17 போர் விமானங்கள், ஆறு H-6 குண்டுவீச்சு விமானங்களும் நீர்மூழ்கி எதிர்ப்பு, வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களும் ஊடுருவியதாக தாய்வான் அறிவித்துள்ளது. சீன விமானங்களை எச்சரிக்க தமது போர் விமானங்களை …

  24. 'கடவுளுக்கு எதிரான குற்றம்' - இரானில் 23 வயது இளைஞருக்கு பொது இடத்தில் வைத்து தூக்கு தண்டனை பட மூலாதாரம்,IHRIGHTS 3 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்திய அரசு எதிர்ப்புப் போராட்டங்களுடன் தொடர்புடைய இரண்டாவது மரண தண்டனையை நிறைவேற்றியதாகவும் அதில், 23 வயது இளைஞரை பொது வெளியில் பகிரங்கமாகத் தூக்கிலிட்டதாகவும் இரான் கூறுகிறது. மாஜித்ரேசா ரஹ்னாவார்ட், 23 வயதான இளைஞர். அவர் மாஷாத் நகரில் திங்கள் கிழமையன்று அதிகாலை தூக்கிலிடப்பட்டதாக நீதித்துறை தெரிவித்துள்ளது. துணை ராணுவப் படைகளில் ஒன்றான பாசிஜ் எதிர்ப்புப் படையை (Basij Resistance Force ) சேர்ந்த இருவரை குத்திக் கொன்றதைக் கண்டறிந்த நீதிமன்றம் …

  25. இந்தியாவை ரஷ்யா திடீரென அதிகம் புகழ என்ன காரணம்? கட்டுரை தகவல் எழுதியவர்,தீபக் மண்டல் பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா இயல்பிலேயே பன்முனை உலகில் முக்கியமான தூண் ஆக இருக்க விரும்புவது மட்டுமின்றி, அது பன்முனை உலக அமைப்பை உருவாக்குவதற்கான மையமாகவும் இருக்கிறது என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் சமீபத்தில் கூறினார். இது குறித்து பேசி லாவ்ரோவ், யுக்ரேனுக்கு எதிரான போர் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு நடுநிலையானது என்று கூறி அதன் வெளியுறவுக் கொள்கையையும் பாராட்டினார். ப்ரிமகோவ் ரீடி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.