உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27006 topics in this forum
-
துருக்கி நிலநடுக்கம்: கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு சடலமாக கண்டெடுப்பு! துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு தனது வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் இறந்து கிடந்ததை அவரது முகவர் உறுதிப்படுத்தியுள்ளார். கானா தேசிய வீரரான 31 வயது கிறிஸ்டியன் அட்சு, பிரீமியர் லீக் அணிகளான எவர்டன், செல்சியா மற்றும் நியூகேஸில் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். பெப்ரவரி 6ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து அட்சுவை காணவில்லை, தற்போது இது ஹடேயின் அன்டாக்யாவில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு இடிபாடுகளில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபிய அணி அல்-ரேட் உடனான ஒரு சீசனுக்கு…
-
- 0 replies
- 687 views
-
-
விசா நடைமுறைகளில் மாற்றம் - படகுகள் வருகை அதிகரிக்கலாம் என அச்சம் - கண்காணிப்பை அதிகரிக்கின்றது அவுஸ்திரேலியா Published By: RAJEEBAN 16 FEB, 2023 | 11:13 AM புகலிடக்கோரிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கலாம் என ஊகங்கள் வெளியாகியுள்ள நிலையில் படகுகளை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பான தற்காலிக பாதுகாப்பு விசா விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதால் ஆள்கடத்தல்காரர்கள் அதனை பயன்படுத்தி புகலிடக்கோரிக்கையாளர்களை படகுகள் மூலம் அழைத்து வர முயலாம் என எதிர்கட்சி எச்சரித்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் தமது கண்காணிப்பை அதிகரித்துள்ளத…
-
- 1 reply
- 623 views
- 1 follower
-
-
முன்னோடியில்லாத எதிர்விளைவுகளை தென்கொரியா- அமெரிக்கா எதிர்கொள்ள நேரிடும்: வட கொரியா அச்சுறுத்தல்! தென் கொரியாவும் அமெரிக்காவும் எதிர்வரும் வாரங்களில் திட்டமிட்ட இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டால், முன்னோடியில்லாத வகையில் தொடர்ச்சியான மற்றும் வலுவான எதிர்விளைவுகளை கட்டவிழ்த்து விடுவதாக வட கொரியா அச்சுறுத்தியுள்ளது. தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் வருடாந்திர ஃப்ரீடம் ஷீல்ட் கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்கு முன்னதாக, வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். மேலும், தென்கொரிய- அமெரிக்கா கூட்டுப் இராணுவப் பயிற்சிகள், வட கொரியா மீதான படையெடுப்புக்கான தயாரிப்புகள் என்று பியோங்யாங்கின் நீண்டகால கூ…
-
- 0 replies
- 475 views
-
-
கனடா, அமெரிக்காவைப்போன்று இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிப்பீர்களா ? - பின்லாந்து அரசாங்கத்திடம் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி Published By: T. SARANYA 17 FEB, 2023 | 04:28 PM (நா.தனுஜா) இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக கனடா மற்றும் அமெரிக்காவைப்போன்று தமது நாடு தடைகளை விதிக்குமா? என்று பின்லாந்து அரசாங்கத்திடம் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ கேள்வி எழுப்பியுள்ளார். இவ்விவகாரம் தொடர்பான கேள்விகளை பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ அந்நாட்டு அரசாங்கத்திடம் எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளார். அதுமாத்திரமன்றி இலங்கை அரசாங்கத்தினால் தம…
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
துருக்கி, சிரியா பூகம்பம் ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்தது Published By: T. SARANYA 17 FEB, 2023 | 09:21 AM சிரியாவில் பூகம்பம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் பூகம்பம் தாக்கியது. ரிச்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த பூகம்பம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த பூகம்பம் இஸ்ரேல், லெபனான், எகிப்து …
-
- 1 reply
- 548 views
- 1 follower
-
-
பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் 100 பேர், சிரியாவில் 111 பேர் பலி By Sethu 06 Feb, 2023 | 11:34 AM துருக்கியில் இன்று ஏற்பட்ட பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், அயல் நாடான சிரியாவில் குறைந்தபட்சம் 111 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் சிரியாவின் எல்லை அருகில் 7.8 ரிக்டர் மற்றும் 6.7 ரிக்டர் உட்பட 4.7 ரிக்டர்களுக்கு மேற்பட்ட 10 பூகம்பங்கள் இன்று ஏற்பட்டன. துருக்கி பூகம்பத்தின் அதிர்வுகள் சைப்பிரஸ் தீவு மற்றும் எகிப்திலும் உணரப்பட்டன. துருக்கியில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் கட்டடங்கள் உட…
-
- 21 replies
- 1.5k views
- 1 follower
-
-
ரசாயனம் ஏற்றிவந்த ரயில் தடம்புரண்டு விபத்து: 'செர்னோபிள்' அனுபவம் என்று கூறும் உள்ளூர் மக்கள் பெர்ண்ட் டெபியூஸ்மான் ஜூனியர் பிபிசி நியூஸ் 18 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, விபத்து நடந்த பகுதியின் படம். அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தின் கிழக்கு பாலஸ்தீனம் என்ற ஊரில் வசிக்கும் ஜாண் மற்றும் லிசா ஹாம்னர் ஆகியோர் பிப்ரவரி 3 அன்று இறவு 8.55 மணிக்கு, தங்கள் வாழ்நாளில் எதிர்கொள்ளாத அசாதாரண சூழலை எதிர்கொண்டனர். அந்த …
-
- 0 replies
- 694 views
- 1 follower
-
-
இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் பலத்த நிலநடுக்கம் 17 FEB, 2023 | 04:29 PM இந்தோனேசியாவில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. https://www.virakesari.lk/article/148458
-
- 0 replies
- 260 views
- 1 follower
-
-
சுவீடன், பின்லாந்து நேட்டோவில் இணைவதை துருக்கி அங்கீகரிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது: நேட்டோ தலைவர் நேட்டோ அமைப்பில் இணைவதற்கான சுவீடன் மற்றும் பின்லாந்தின் முயற்சிகளை துருக்கி அங்கீரிக்கப்பதற்கான தருணம் வந்துவிட்டது என நேட்டோ தலைவர் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் இன்று கூறியுள்ளார். துருக்கிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்டோல்டென்பேர்க், துருக்கிய வெளிவிவகார அமைச்சர் மேவ்லுத் கவுசோக்குலுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார். ரஷ்யாவின் எல்லையிலுள் பின்லாந்தும் அதன் அயல் நாடான சுவீடனும் பல தசாப்தங்களாக இராணுவ அணி சேரா கொள்கையை கடைபிடித்து வந்தன. ஆனால், உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்த பின்னர், அமெரிக்கா தலைமையிலான நேட்ட…
-
- 1 reply
- 687 views
-
-
ஆயுதங்கள் மட்டுமே ரஷ்யா புரிந்துகொள்ளும் மொழி: உக்ரைன் ஜனாதிபதி! ஆயுதங்கள் மட்டுமே ரஷ்யா புரிந்துகொள்ளும் மொழி என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் ஒரு வருடத்தைக் குறிக்கும் வகையில் பிபிசிக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, ரஷ்யாவுடனான அமைதி ஒப்பந்தத்தில் தனது நாட்டின் எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுக்க முடியாது என குறிப்பிட்டார். ஒரு முன்னறிவிக்கப்பட்ட வசந்த தாக்குதல் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக கூறிய அவர், ரஷ்ய தாக்குதல்கள் ஏற்கனவே பல திசைகளில் இருந்து நடந்துவருவதாக கூறினார். எவ்வாறாயினும், உக்ரைனின் படைகள் ஒரு எதிர்தாக்குதலைத் தொடங்கும் வரை …
-
- 1 reply
- 584 views
-
-
நாங்கள் ஒரு புதிய பனிப்போரைத் தேடவில்லை: சீன உளவு பலூன் குறித்து பைடன் கருத்து! அமெரிக்க கடற்பகுதியில் சீன உளவு பலூன் பறந்த விவகாரம் தொடர்பில், இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ‘தாங்கள் ஒரு புதிய பனிப்போரைத் தேடவில்லை’ என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அத்துடன், அமெரிக்க கடற்பகுதியில் சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியதற்காக மன்னிப்பு கேட்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். அதேவேளை, பலூன் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்பட்டது எனவும் வட அமெரிக்கா மீது சுட்டு வீழ்த்தப்பட்ட மற்ற மூன்று பொருட்கள் வெளிநாட்டு உளவு கைவினைப்பொருட்களாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறினார். இதேபோன்ற வான்வழி பொருட்களைக் கண்டறி…
-
- 0 replies
- 388 views
-
-
பஃபேலோ பல்பொருள் அங்காடி துப்பாக்கி சூடு: வெள்ளை மேலாதிக்கவாதிக்கு பிணையில்லா ஆயுள் தண்டனை! பஃபேலோ பல்பொருள் அங்காடி துப்பாக்கி சூட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட வெள்ளை மேலாதிக்கவாதிக்கு, பிணையில்லா ஆயுள் தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி நியூயோர்க்கில் உள்ள பஃபேலோ பல்பொருள் அங்காடியில், பேட்டன் ஜென்ட்ரான் என 19 வயதான இளைஞன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 கறுப்பினத்தவர்கள் உயிரிழந்தனர் மற்றும் 3பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், பேட்டன் ஜென்ட்ரான் மீதான வழக்கு விசாரணை நேற்று (புதன்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர் மீது முதல் நிலை கொலை மற்றும் வெறுப்பால் தூண்டப்பட்ட பயங்கரவாதம் உட்பட 25 குற்றச…
-
- 0 replies
- 146 views
-
-
கடந்த 24 மணித்தியாலங்களில் உலகம் முழுவதும் 32 இடங்களில் நிலநடுக்கங்கள்! கடந்த 24 மணித்தியாலங்களில் உலகம் முழுவதும் 32 இடங்களில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கங்களில், அதிகபட்சமாக 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ளது. அத்துடன், நியூசிலாந்து, அலாஸ்கா, கொலம்பியா, டோங்கா, பொலிவியா உள்ளிட்ட பல நாடுகளில் 5 ரிக்டருக்கு மேல் வலிமை கொண்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. பயங்கர சோகத்தை எதிர்கொண்ட துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது. இதேவேளை, இந்த நிலநடுக்கங்களினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் எவையும் இதுவரையில…
-
- 0 replies
- 552 views
-
-
சுட்டு வீழ்த்தப்பட்ட 3 பறக்கும் பொருட்கள் தீங்கற்றவையாக இருக்கலாம்: அமெரிக்கா Published By: Sethu 15 Feb, 2023 | 10:17 AM அமெரிக்காவினால் கடந்தவாரம் சுட்டுவீழ்த்தப்பட்ட அடையாளம் காணப்படாத 3 பறக்கும் பொருட்கள் தீங்கற்றவையாக இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இம்மாதம் 4 பறக்கும்பொருட்களை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. சீனாவுக்குச் சொந்தமான 200 அடி உயரமான பாரிய பலூன் ஒன்றை கடந்த 4 ஆம் திகதி சௌத் கரோலினா மாநிலத்துக்கு அருகில் அமெரிக்கப் படையினர் சுட்டுவீழ்த்தினர். அதன்பின் அடையாளம் காணப்படாத 3 பறக்கும் பொருட்களை…
-
- 0 replies
- 437 views
-
-
நியூ ஸிலாந்து வரலாற்றில் 3 ஆவது தடவையாக அவசரநிலை பிரகடனம் Published By: SETHU 14 FEB, 2023 | 09:37 AM நியூ ஸிலாந்தை நேற்று சூறாவளி தாக்கியதையடுத்து, அந்நாட்டு அரசாங்கம் இன்று நாடளாவிய ரீதியில் அவரசநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. நியூ ஸிலாந்தின் மக்கள் தொகை மிகுந்த வட தீவில் நேற்று கப்ரியல் சூறாவளி தாக்கியது. இதனால், 46,000 இற்கும் அதிகமான வீடுகள் மின்சாரத்தை இழந்துதுடன், கட்டங்கள், வீதிகளும் சேதமடைந்தன. பெரும் எண்ணிக்iகான குடும்பங்கள் இம்பெயர்ந்துள்ளன. பெரும் எண்ணிக்கையான வீடுகள் மின்சாரத்தை இழநை;துள்ளன. நாடு முழுவதும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன' என பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறியுள்ளார்…
-
- 2 replies
- 291 views
- 1 follower
-
-
மோல்டோவா அரசை கவிழ்க்க ரஷ்யா சதி: மோல்டோவா ஜனாதிபதி குற்றச்சாட்டு Published By: Sethu 14 Feb, 2023 | 04:45 PM மோல்டோவா அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதிப்புரட்சிக்கு ரஷ்யா சதி செய்கிறது என மோல்டோவா ஜனாதிபதி மாய்யா சாந்து கூறியுள்ளார். ஐரோப்பாவுக்கு ஆதரவான நாட்டின் தலைமையை அகற்றுவதற்காக, அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என்ற போர்வையில், நாசவேலை செய்பவர்களுடன் ரஷ்யா சதி செய்கிறது என அவர் நேற்று கூறியுள்ளார். யுக்ரைனுக்கும் ருமேனியாவுக்கும் இடையில் அமைந்துள்ள நாடு மோல்டோவா. 26 லட்சம் பேர் அந்நாட்டில் வசிக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு கடந்த வருடம் மோல்டோவா…
-
- 0 replies
- 350 views
-
-
போரில் புடின் தோற்றுவிட்டார்! ஜேர்மனி தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு உக்ரைனுடனான போரில் புடினுக்கு வெற்றியா தோல்வியா என்பது இன்னமும் முடிவாகவில்லை. ஆனால், ஜேர்மனியுடனான போரில் புடின் தோற்றுவிட்டார் என்கிறது ஜேர்மன் தரப்பிலிருந்து எழுந்துள்ள ஒரு குரல். ஜேர்மனியைக் கைவிட்ட புடின் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகள் விதித்தது. ஜேர்மனிக்கும் வேறு வழியில்லை, ஆகவே, ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்துகொண்டது. ஆனால், அதற்காக ஜேர்மனியை தண்டிக்க முடிவு செய்தார் ரஷ்ய ஜனாதிபதி புடின். ஆகவே, தங்கள் எரிவாயுவை அதிகம் சார்ந்திருந்த ஜேர்மனியைக் கைகழுவினார் புடின். அவரது முடிவு ஜேர்மனியில் பதற்றத்தை உருவாக்கியதை மறுப்பதற…
-
- 47 replies
- 3.6k views
-
-
விண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி அரேபிய பெண் Published By: T. SARANYA 14 FEB, 2023 | 11:07 AM முதல் முறையாக பெண் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப சவுதிஅரேபியா திட்டமிட்டுள்ளது. ரயானா பர்ணாவியுடன் சக நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் அலி அல் கர்னி உள்பட 4 பேர், AX-2 விண்வெளி பயணத்தில் இணையவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் பயணிக்க உள்ள விண்கலம், அமெரிக்காவில் இருந்து ஏவப்பட உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதியளித்த சவூதி அரேபிய அரசு, அடுத்த நான்கே ஆண்டுகளில் விண்வெளி பயணித்திற்கான அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.v…
-
- 0 replies
- 304 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி Published By: SETHU 14 FEB, 2023 | 11:20 AM அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தபட்சம் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குள்ளமான, ஜீன்ஸ் ஜக்கெட், முகக்கவசம் அணிந்த நபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி திங்கள் இரவு 8.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நபர் பல்கலைக்கழக கட்டத்திலிருந்து வெளியேறியமை கண்காணிப்பு கெமரா மூலம் அவதானிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 288 views
- 1 follower
-
-
சிங்கிள் ஊழியர்களுக்கு காதலர் தினத்தில் 3 மடங்கு ஊதியம் வழங்கும் பிலிப்பைன்ஸ் மேயர் Published By: SETHU 14 FEB, 2023 | 12:20 PM வாழ்க்கைத் துணையின்றி தனியாக வாழும் 'சிங்கிள்' ஊழியர்களுக்கு, காதலர் தினத்தில் மேலதிக கொடுப்பனவு வழங்குவதாக பிலிப்பைன்ஸிலுள்ள நகரமொன்றின் மேயர் அறிவித்துள்ளார். ஜெனரல் லூனா நகரின் மேயரான மெத் புளோரிடோ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். 42 வயதான மெட் புளோரிடோவும் இன்னும் திருணம் செய்யவில்லை. தான் 'பிறந்தது முதல் சிங்கிளாக' இருப்பதாக அவர் கூறுகிறார். தன்னுடன் பணியாற்றும் ஊழியர்கள் 5 வருடங்களாக சிங்கிளாக இருந்தால், அவர்களுக்கு இன்றைய காதலர் தினத்தில் வழக்கமான ஊதியத்தைப் போன்று 3 மடங்…
-
- 0 replies
- 774 views
- 1 follower
-
-
2035 இல் பெற்றோல், டீசல் கார் விற்பனைக்கு தடை விதிக்கும் சட்டமூலத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் அங்கீகரித்தது. Published By: SETHU 14 FEB, 2023 | 06:08 PM 2035 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பெற்றோல் மற்றும் டீசல் கார்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் சட்டமூலத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் இன்று அங்கீகரித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஏற்கெனவே இச்சட்டமூலத்தை அங்கீகரித்துள்ளன. இந்நிலையில் ஐரோப்பிய பாராளுமன்றமும் இன்று அங்கீகாரம் வழங்கியது. ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது 340 எம்.பிகள் ஆதரவாக வாக்களித்தனர். 279 பேர் எதிராக வாக்களித்தனர். 21 பேர் வாக்களிப்…
-
- 0 replies
- 543 views
- 1 follower
-
-
குழந்தை பெற்றுக்கொள்ள அர்ஜென்டினாவை நோக்கி படையெடுக்கும் ரஷ்ய கர்ப்பிணிகள் 48 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சமீப மாதங்களில் ரஷ்யாவை சேர்ந்த 5000 கர்ப்பிணிகள் அர்ஜெண்டினாவிற்குள் நுழைந்துள்ளனர் அதில் 33 பேர் ஒரே விமானத்தில் வந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தேசிய குடிப்பெயர்வு முகமை, சமீபமாக வந்தவர்கள் தங்களின் கர்ப்ப காலத்தின் கடைசி மாதங்களில் இருப்பதாகத் தெரிவிக்கிறது. இந்தப் பெண்கள் அர்ஜென்டினாவில் குழந்தை பெற்றுக்கொண்டு தங்கள் குழந்தைகள் அர்ஜென்டினா குடியுரிமையைப் ப…
-
- 0 replies
- 478 views
- 1 follower
-
-
துருக்கி – சிரியா நிலநடுக்க மீட்பு பணிகளில் இருந்து இரு நாடுகள் விலகல்! துருக்கி மற்றும் சிரியாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் துருக்கியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 24,617 ஆகவும் சிரியாவில் இறப்பு எண்ணிக்கை 3,500 ஐயும் தாண்டியுள்ளது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பாரிய நில அதிர்வை தொடர்ந்து தெற்கு துருக்கியில் முன்னெடுக்கப்பட்ட வரும் மீட்பு நடவடிக்கைகளின் போது மோதல் ஏற்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்ற போதிலும் பலர் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜேர்மன் மீட்பு பணியாள…
-
- 6 replies
- 840 views
-
-
இணைப்பு குறிப்பு: 1: நேட்டோ ருசியா மீது யுத்தப்பிரகடனம் செய்துவிட்டது செயன்முறையால். ரஷ்யா உடமையான கட்டுமானத்தின் (எந்த வித படைபலத்துடனும் தொடர்பு இல்லாத) மீதான நேரடி தாக்குதல் தடத்தப்பட்டு இருக்கிறது; நேட்டோ உறுப்பினர் அல்லாத ஓர் நாட்டில் ருசியா இராணுவ நடவடிக்கையினால். 2: தனித்த, சுதந்திரமான ஊடகவியலாளர்கள் பற்றி இந்த தளத்தில் சிலருக்கு உள்ள பார்வையும், புரிதலும். 3: அவர் சொல்லும் , முதன்மை ஊடகம் நியூ யார்க் டைம்ஸ் , மர்மம் என்று சொல்லி இதை கவனத்தி இருந்து ஒதுக்கியது. 4: Seymour Hersh அமெரிக்கா அரசையும், நிர்வாகத்தையும் வேறுபடுத்தி - (Biden) நிர்வாகமே இதை செய்ததாக குறித்து இருக்கிறார். 5: மெர்கலின் பேட்டி போல இதையும் மறைக்கிறது மேற்கு …
-
- 9 replies
- 1.4k views
-
-
தங்களது ஜேர்மனிய உறவினர்களுடன் தற்காலிகமாக தங்க பேரழிவால் பாதிக்கப்பட்ட துருக்கி- சிரிய மக்களுக்கு அனுமதி! துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஜேர்மனியில் உள்ள உறவினர்களுடன் தற்காலிகமாக தங்க அனுமதிக்கப்படுவார்கள் என ஜேர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது. இது அவசர உதவி என்று ஜேர்மன் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் தெரிவித்துள்ளார். துருக்கிய அல்லது சிரிய குடும்பங்கள் பேரழிவு பகுதியில் இருந்து தங்கள் நெருங்கிய உறவினர்களை அதிகாரத்துவம் இல்லாமல் ஜேர்மனியர்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்து வர அனுமதிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதனிடையே, துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காயம் அடைந…
-
- 0 replies
- 474 views
-