Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரஷ்யாவின் எரிவாயு தடையால் உலக நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் என்னென்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES எந்த போராக இருந்தாலும் சரி அல்லது மோதலாக இருந்தாலும் சரி அது உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும். யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பும் அதே நிலையைதான் ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா தடை செய்துவிடுமோ என்ற கவலை தற்போது எழுந்துள்ளது. இதன் பின்னணியை சற்று சுருக்கமாக பார்க்கலாம். ஐரோப்பாவிற்கு இப்போது ரஷ்யா வழங்கி வரும் எரிவாயுவுக்கான பணத்தை நட்பற்ற நாடுகள் ரஷ்ய ரூபாயான ருபிளில் தர வேண்டும் என்று அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார். அதாவது …

  2. அல்கைடா தலைவர் ஐமான் அல் சவாஹிரியைக் கொன்றுவிட்டதாக அமெரிக்கா அறிவிப்பு ஒசாமாவுக்குப் பின்னர் அல் கைடாவினை வழிநடத்திச் சென்ற அதன் தலைவர் கலாநிதி ஐமான் அல் சவாஹிரியை ட்ரோன் தாக்குதல் ஒன்றின்மூலம் கொன்றுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. நேற்று ஆப்கானிஸ்த்தான் தலைநகர்காபூலில் உள்ள மறைவிடம் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலில் அல்கைடா தலைவர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இத்தாக்குதலை கண்டித்திருக்கும் தலிபான்கள், இது சர்வதேச நியமங்களை மீறி நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் என்றும் கூறியிருக்கிறது. https://edition.cnn.com/2022/08/01/politics/joe-biden-counter-terrorism/index.html

  3. ரஷ்யாவிற்கு, அமெரிக்கா... மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது – புடின் ரஷ்யாவிற்கு அமெரிக்கா மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய கடற்படை தினத்தை முன்னிட்டு புனித பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற போர்க்கப்பல்களின் அணிவகுப்பு மரியாதையை புடின் ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து அங்கு கருத்து வெளியிடும் போதே விளாடிமிர் புடின் இவ்வாறு தெரிவித்துள்ளார். உலகில் உள்ள அனைத்து பெருங்கடல்களிலும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த நினைப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நேட்டோ படைகளின் கூட்டமைப்பில் ரஷ்ய எல்லையில் உள்ள நாடுகள் இணைவது நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒலிய…

  4. பின்லேடனின் குடும்பத்திடம்... நன்கொடை வாங்கிய விவகாரம்: இளவரசர் சார்லஸ் அறக்கட்டளை தலைவர் விளக்கம்! அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரும் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவருமான ஒசாமா பின்லேடனின் குடும்பத்திடம் இருந்து வேல்ஸ் இளவரசர் சார்லஸின் அறக்கட்டளை நன்கொடை வாங்கிய சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து சார்லஸ் அறக்கட்டளை தலைவர் சர் அயன் செஷர் விளக்கம் அளித்துள்ளார். வேல்ஸ் இளவரசர் அறக்கட்டளை நிதியம், கடந்த 2013ஆம் ஆண்டில் பெரிய மற்றும் பணக்கார சவூதி குடும்பத்தின் தேசபக்தர் பக்ர் பின்லேடன் மற்றும் அவரது சகோதரர் ஷபிக் ஆகியோரிடமிருந்து பணத்தைப் பெற்றதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. …

  5. பிரிட்டன் பிரதமர் தேர்தல் : கருத்து கணிப்பில் ரிஷி சுனக்குக்கு பின்னடைவு பிரிட்டன் பிரதமர் தேர்தலுக்கான கருத்து கணிப்பில் ரிஷி சுனக்குக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜோன்சன் அண்மையில் பதவி விலகியதை அடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. பிரதமர் பதவிக்கான போட்டியில் 2-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களம் இறங்கியதால் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில் முதல் கட்ட தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் பல்வேறு சுற்றுகளாக வாக்களித்து போட்டியிட்ட 8 பேரில் 2 பேரை இறுதி வேட்பாளர்களாக தேர்வு செய்தனர். அதன்படி இந்திய வம்சாவளியை சேர்ந…

  6. ஜோசப் ஸ்டாலின்: சோவியத் சர்வாதிகாரி இறுதி நாட்களில் டாக்டரை வரவழைக்க தாமதம் ஆனது ஏன்? ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 50ஆவது கட்டுரை இது.) 1952 டிசம்பர் 21 அன்று ஸ்டாலின், 'பில்ஸ்னாயா' பண்ணை வீட்டில் தனது பிறந்தநாள் விழாவை நடத்தினார். அதில் அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர்…

  7. உக்ரைனின் தாக்குதலில்... 40 உக்ரேனிய போர் கைதிகள், கொல்லப் பட்டதாக... ரஷ்யா தகவல்! பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் சிறைச்சாலையில் உக்ரைனிய ஷெல் தாக்குதலில் 40 உக்ரைனிய போர் கைதிகள் கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒலெனிவ்காவில் உள்ள சிறை முகாமின் மீது ரொக்கெட் தாக்குதலில் மேலும் 75பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டினர். உக்ரைனின் இராணுவம் தாக்குதல் நடத்தியதை மறுத்தது மற்றும் சிறைச்சாலை மீது ரஷ்யா ஷெல் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியது. அந்த இடத்தில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை மறைக்க ரஷ்யா முயல்வதாக உக்ரைன் கூறியது. ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில காட்சிகள்…

  8. ஈரானில்... 3 பெண்களுக்கு, ஒரே நாளில் தூக்குத் தண்டனை! ஈரானில் 3 பெண்களுக்கு ஒரே நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஈரான் மனித உரிமைகள் குழுவின் கூற்றுப்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 32 பேர் தூக்கிலிடப்பட்டனர். தங்களது கணவரைக் கொன்ற குற்றத்துக்காக மேற்குறித்த மூன்று பேரும் தூக்கிலிடப்பட்டனர். இதில் 15 வயதில் திருமணமான ஷோகிலா அபாதியும் ஒருவர். தூக்கிலிடப்பட்டபோது ஷோகிலாவுக்கு 25 வயது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இதுவரை இரண்டு மடங்கு அதிகமானோருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதால், அதிகாரிகள் தங்கள் மரண தண்டனையை கணிசமாக முடுக்கிவிட்டதாக நம்பப்படுகிறது. மற்ற எந்த நாட்டையும் …

  9. அமெ­ரிக்க கூடைப்­பந்­தாட்ட வீராங்­க­னையை விடு­விக்க ரஷ்ய ஆயுத கடத்­தல்­கா­ரரை விடு­விக்க அமெ­ரிக்கா சம்­மதம் போதைப்­பொருள் குற்­றச்­சாட்டில் ரஷ்ய சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ள அமெ­ரிக்­காவின் கூடைப்­பந்­தாட்ட வீராங்­கனை பிரிட்­டனி கிறை­னரை விடு­விப்­ப­தற்­காக, 25 வருட சிறைத்தண்டனை ரஷ்ய ஆயுதத் தரகர் விக்டர் பௌட்டை கைதிகள் பரி­மாற்ற முறையில் விடுவிப்­பது குறித்து அமெ­ரிக்கா ஆராய்ந்து வரு­கி­றது. 31 வய­தான பிரிட்னி கிறைனர் அமெ­ரிக்­காவின் மிகப் பிர­ல­மான கூடைப்­பந்­தாட்ட வீராங்கனைகளில் ஒருவர். 2 தட­வைகள் ஒலிம்பிக் தங்கப் பதக்­கங்­களை வென்­றவர் என்­பது குறிப்பி­டத்­தக்­கது. ரஷ்ய சிறை­க­ளி­லுள்ள பிரிட்னி கிறை­ன­ரையும் முன்னாள் கடற்­படை அதி­காரி போல் வெலனையு…

    • 5 replies
    • 627 views
  10. ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராடிய நான்கு ஜனநாயக ஆர்வலர்களை... தூக்கிலிட்டது மியான்மார். பயங்கரவாத செயல்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு ஜனநாயக ஆர்வலர்களை மியன்மாரின் இராணுவ அதிகாரிகள் தூக்கிலிட்டுள்ளனர். பல தசாப்தங்களின் பின்னர் நாட்டின் அமுல்படுத்தப்பட்ட முதல் மரணதண்டனை இதுவென சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்தை எதிர்த்துப் போராட, போராளிகளுக்கு இவர்கள் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த தண்டனைகள் சர்வதேச கண்டனத்தை ஈர்த்துள்ள அதேவேளை, மக்கள் மத்தியில் பயத்தைத் தூண்டும் மோசமான முயற்சி என ஐ.நா நிபுணர்கள் இருவர் தெரிவித்துள்ளனர். மரண …

    • 2 replies
    • 466 views
  11. ஈராக்கின்... உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் ஊடுருவி, நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்! நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை உடைத்து ஈராக்கின் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்துள்ளனர். சக்திவாய்ந்த ஈராக்கிய மதகுரு மொக்தாதா அல்-சதரின் ஆதரவாளர்கள் பிரதமர் பதவிக்கு போட்டி வேட்பாளரை நியமிப்பதை எதிர்த்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த குழு பாக்தாத்தின் நெருக்கமாக பாதுகாக்கப்பட்ட உயர் பாதுகாப்பு பசுமை மண்டலத்திற்குள் ஊடுருவியது. இது தூதரகங்கள் உட்பட தலைநகரின் மிக முக்கியமான கட்டடங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. சதரின் அரசியல் கூட்டணி கடந்த ஒக்டோபரில் நடந்த பொதுத் தேர்தலில் அத…

  12. குரங்கம்மையை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது உலக சுகாதார அமைப்பு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது. உலக அளவில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து இதை உயரிய எச்சரிக்கையுடன் இருக்கும் நோய் பாதிப்பாக அந்த அமைப்பு வகைப்படுத்தியிருக்கிறது. தொற்று நோய்கள் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது அவசர கூட்டம் இன்று நடைபெற்றது. அதன் முடிவில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது குறித்து பேசிய அந்த அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ், "75 நாடுகளில் இருந்து 16,000 …

  13. ஈராக்கில் உள்ள... துருக்கி தூதரகம் மீது, தாக்குதல்! ஈராக்கின் வடக்கு நகரமான மொசூலில் உள்ள துருக்கியின் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று துருக்கிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஈராக்கின் மோசூல் நகரில் உள்ள தனது தூதரகம் மீதான தாக்குதலுக்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தூதரக அதிகாரிகளுக்கும் தூதரக பணிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது ஈராக்கின் பொறுப்பு மற்றும் கடமை ஆகும் என்று துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மோசூலில் உள்ள துருக்கியின் தூதரகம் நேற்று (புதன்கிழமை) காலை தாக்கப்பட்டதாக அதன் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. …

    • 2 replies
    • 641 views
  14. ஐரோப்பிய நாடுகளுக்கான... எரிவாயு விநியோகத்தை, 20 சதவீதமாக குறைத்தது ரஷ்யா! ஐரோப்பிய நாடுகளுக்கு நோர்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடம் வழியாக மேற்கொண்டு வரும் எரிவாயு விநியோகத்தை 20 சதவீதமாக ரஷ்யா குறைத்துள்ளது. ஏற்கனவே, வெறும் 40 சதவீத கொள்ளளவு மட்டுமே ரஷ்யா எரிவாயு விநியோகம் செய்து வந்த நிலையில், தற்போது அது மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜேர்மனியின் எரிவாயு வழித்தட ஒழுங்காற்று அமைப்பின் தலைவர் க்ளாஸ் முல்லர் கூறுகையில், ‘நோர்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடம் வழியாக அனுப்பப்படும் எரிவாயுவின் அளவைக் குறைக்கவிருப்பதாக ஏற்கெனவே ரஷ்யா கூறியிருந்தது. அதன்படி, அந்த வழித் தடம் வழியாக ஜேர்மனிக்கு வரும் எரிவாயு, தினசரி கொள்ளளவில் வெறும் 20 சதவீதம…

  15. குடியேற்றக் கொள்கையை... கடுமையாக்கப் போவதாக, ரிஷி சுனக் வாக்குறுதி! பிரித்தானியாவின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் குடியேற்றக் கொள்கையைக் கடுமையாக்கப் போவதாக முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் வாக்குறுதி அளித்தார். இது குறித்து ‘தி டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழிலுக்கு அவர் வழங்கிய செவ்வியில், ‘எனது ஆட்சியில் நடைமுறைக்குத் தகுந்த குடியேற்றக் கொள்கையைக் கடைப்பிடிப்பேன். அகதிகளை ஏற்க மறுக்கும் நாடுகளுக்கு நிதி உதவியை நிறுத்திவைக்கும் ஐரோப்பி ஒன்றியம் மனித உரிமைகள் ஆணையத்தின் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன். அகதிகளை நாட்டுக்குள் விடாமல் கப்பல்களில் தங்கவைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவேன்’ என கூறினார். மேலும், ருவ…

  16. இந்த நூற்றாண்டில்... பிரித்தானியாவுக்கு, சீனா... மிகப் பெரிய அச்சுறுத்தல்: ரிஷி சுனக்! இந்த நூற்றாண்டில் பிரித்தானியா, உலகின் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக சீனா விளங்குகிறது என பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா முதல் இந்தியா வரையிலான நாடுகளை சீனா குறிவைத்துள்ளது என்பதற்கான சான்றுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 42 வயதான முன்னாள் திறைசேரியின் தலைவரான ரிஷி சுனக், பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், சீன தொழில்நுட்ப ஆக்கிரமிப்பிற்கு எதிராக தற்காத்துக் கொள்ள சுதந்திர நாடுகளின் புதிய நேட்டோ- பாணி சர்வதேச இராணுவக் கூட்டணியை உருவாக்குவது உட்பட, அவர் மேற்கொள்ளும் தொடர்ச்சியான திட்டங்களை முன…

  17. ஐரோப்பாவிற்கு எதிராக.... எரிவாயுப் போரை நடத்தி வருவதாக, ரஷ்யா மீது... உக்ரைன் குற்றச்சாட்டு! மக்கள் மீது பயங்கரவாதத்தை ஏற்படுத்துவதற்காக எரிவாயு விநியோகத்தை ரஷ்யா குறைப்பதாக உக்ரைனின் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். ஒவ்வொரு மாதமும் மோசமடைந்து வரும் ஐரோப்பாவின் எரிவாயு தேவை, ரஷ்யாவின் எச்சரிக்கையால் ஒவ்வொரு ஐரோப்பியரின் வாழ்க்கையையும் மோசமாக்குகிறது என அவர் மேலும் தெரிவித்தார். இதன் விளைவாக குளிர்காலங்களில் பாதிக்கப்படக்கூடிய ஏழை மக்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல், குளிர்காலத்திற்குத் தயாராகும் ஐரோப்பாவை இது வேண்டுமென்றே கடினமாக்கும் நோக்கமாக கொண்டுள்ளது என அவர் குற்றஞ்சாட்டினார். ரஷ்ய எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம், நோர்ட் ஸ்…

  18. கனேடிய பழங்குடியின மாணவர்கள் மீதான... துன்புறுத்தல்கள்: மன்னிப்பு கோரினார், போப் ஃபிரான்சிஸ்! கனடாவில் கத்தோலிக்க தேவாலயங்கள் நடத்திய பாடசாலைகளில் கடந்த 1970ஆம் ஆண்டு வரை பழங்குடியின மாணவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதற்காக போப் ஃபிரான்சிஸ் மன்னிப்பு கோரினார். ஆறு நாட்கள் பயணமாக கனடா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப், நேற்று (திங்கட்கிழமை) முதல் நிகழ்வாக அல்பர்டாவில் எட்மான்டனின் தெற்கு பகுதியில் மிகவும் பாழடைந்த நிலையில் அமைந்திருக்கும் கத்தோலிக்க தேவாலய பாடசாலையில் குழுமியிருந்த பூர்வகுடி மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடையே உரையாற்றினார். இதன்போதே அவர் மன்னிப்பு கோரினார். இதன்போது உரையாற்றிய அவர், ‘பூர்வகுடி மக்களுக்கு ஏராளமா…

  19. உக்ரைனின்... இராணுவ இலக்குகளைக் குறிவைத்தே, தாக்குதல்: உக்ரைனின் விமர்சனத்துக்கு ரஷ்யா பதில்! உக்ரைனின் இராணுவ இலக்குகளைக் குறிவைத்தே அந்த நாட்டின் ஒடெசா துறைமுகத்தில் தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது. உக்ரைன் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று உக்ரைனுடன் ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்ட மறுநாளே ஒடெசா துறைமுகத்தின் மீது ஏவுகணை வீச்சு நடத்தப்பட்டதற்கு உக்ரைன் தரப்பில் கடும் விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில், ஒடெசா துறைமுகத்தில் உக்ரைன் இராணுவ இலக்குகள் மீது மட்டுமே துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகார் கொனஷென்கோவ் விளக…

  20. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து தலைவர் டேவிட் டிரிம்பிள் காலமானார் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து நாட்டின் முதலமைச்சராக இருந்த டேவிட் டிரிம்பிள் தனது 77 ஆவது வயதில் காலமானார். அவர் மறைந்துவிட்ட செய்தியை அவரது குடும்பத்தினர் நேற்று உறுதிபடுத்தியுள்ளதாக டிரிம்பிளின் அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சி(யூயூபி) தெரிவித்துள்ளது. அவருடைய முயற்சியின் கீழ் 1998ம் ஆண்டு பெல்பாஸ்ட் ஒப்பந்தம் நிறைவேறியது. மேலும் அவர் புனித வெள்ளி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக திகழ்ந்த சிற்பி என்று போற்றப்படுபவர் ஆவார். அப்பகுதிகளில் 30 ஆண்டுகளாக நீடித்து வந்த செக்டேரியன் வன்முறையில் சுமார் 3,600 பேர் பலியானார்கள். அங்கு கலவரத்தை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை நிலை…

  21. புட்டின்... உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறுவதற்கு, எந்த ஆதாரமும் இல்லை: சி.ஐ.ஏ. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலையற்றவராகவோ அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவோ கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்காவின் முக்கிய உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.இன் இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு 70 வயதாகும் புடின் உடல்நலக்குறைவு, ஒருவேளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத ஊகங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், இதை பரிந்துரைக்க எந்த ஆதாரமும் இல்லை என்று வில்லியம் பர்ன்ஸ் கூறினார். அவர் மிகவும் ஆரோக்கியமாக தோன்றினார் என்று அவர் கேலி செய்தார். உக்ரைனுக்கு இன்னும் நீண்ட தூர ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அ…

  22. சுவிட்சர்லாந்தில் எரிபொருள் பிரச்சினை: விறகுகளை நாடும் மக்கள் -சி.எல்.சிசில்- சுவிட்சர்லாந்தில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் அதிகரித்துவரும் நிலையில், மக்கள் விறகுக் கடைகளை நோக்கி படையெடுக்கத் ஆரம்பித்துள்ளனர். உலகின் பல நாடுகள் இப்போது அதீத வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அதிகரித்துவரும் எரிபொருள் பிரச்சினை காரணமாக, குளிர்காலத்தை எப்படி எதிர்கொள்வது என்ற அச்சம் மக்கள் மனதில் நிலவி வருகிறது. அரசுகள் ஒரு பக்கம் மாற்று ஏற்பாடுகளைச் செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ள நிலையில், மக்கள் தாங்களும் மாற்று ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியுள்ளார்க…

  23. உலகில் மிகப்பெரிய படிக குகை - எங்கு உள்ளது? எப்படி உருவானது? நெக்ஸ்ட் ஸ்டாப் ஸ்டோரிஸ் பிபிசி ட்ராவல் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்பெயினில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒரு பிரகாசமான பொக்கிஷத்தை மறைத்து வைத்துள்ளது. அது தான் உலகின் மிகப்பெரிய ஜியோட் (ஜியோட் - பாறையில் படிக அல்லது கனிமப் பொருட்களைக் கொண்ட உட்குடைவுப் பள்ளம்). இது இயற்கையான நிகழும் படிக நிகழ்வாகும். இது விஞ்ஞானிகளை திகைக்க வைத்துள்ளது. ஸ்பெயினின் தென்கிழக்கு அல்மேரியா மாகாணத்தில் புல்பி என்ற பகுதியில் உள்ள சுரங்கத்தில், விலைமதிப்பற்ற உலோகத்தால் உருவாக்கப்படாத புதையலாக இது உள்ளது. புவியியலாளரும் 'புல்பி ஜ…

  24. ஒப்பந்தங்களை மீறி.. ரஷியா, தாக்குதல் – உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு. உக்ரைன் மீதான ரஷியாவின் போர் இன்று 150 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் உக்ரைனின் மத்திய பகுதியில் ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது, அங்குள்ள விமானப்படை தளம் மற்றும் ரயில்வே கட்டமைப்பை குறிவைத்து சரமாரியாக ஏவுகணைகளை தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தெற்கு உக்ரைனில் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை குறிவைத்து உக்ரைன் இராணுவமும் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் ரஷிய படைகளின் நடமாட்டத்தை தடுக்கும் விதமாக தெற்கு கெர்சான் பிராந்தியத்தில் உள்ள டினீப்பர் ஆற்றுபாலத்தை உக்ரைன் வீரர்கள் தகர்த்தியுள்ளனர். இதேவேளை தானிய ஏற்றுமதி…

  25. ஐரோப்பாவிற்கான... ‘நோர்ட் ஸ்ட்ரீம்- 1’ எரிவாயு விநியோகத்தை, மீண்டும் தொடங்கியது ரஷ்யா! ரஷ்யா தனது மிகப்பெரிய ‘நோர்ட் ஸ்ட்ரீம்- 1’ எரிவாயு விநியோகத்தை ஐரோப்பாவிற்கு மீண்டும் தொடங்கியுள்ளது. விநியோகத்தை கட்டுப்படுத்தலாம் அல்லது முற்றிலும் நிறுத்தலாம் என்ற எச்சரிக்கைகளுக்குப் பிறகு இன்று (வியாழக்கிழமை) விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின், அரசாங்க எரிவாயு நிறுவனமான காஸ்ப்ரோம் அதன் ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றும் என்று ஊடகங்களிடம் கூறி அச்சத்தை குறைத்துள்ளார். நோர்ட் ஸ்ட்ரீம்- 1 எரிவாயு விநியோகம், கடந்த 10 நாட்கள் பராமரிப்பு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், 40 சதவீத அளவே விநியோகிக்கப்படுகின…

    • 52 replies
    • 3.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.