உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
ஐரோப்பிய நாடான குரோசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 பேர் உயிரிழப்பு ஐரோப்பிய நாடான குரோசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான குரோசியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலடுக்கம் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நிலநடுகத்தால் தலைநகரின் தென்கிழக்கில் கட்டடங்கள் சேதமடைந்தன என்பதுடன், சிலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கி…
-
- 0 replies
- 354 views
-
-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்கும் ஈரான் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியை முதல் முறையாக பரிசோதிக்க ஆரம்பித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஒருவார காலத்தில் 15 இலட்சம் தடுப்பூசிகளை தயாரிக்கும் இயலுமை தங்களிடம் காணப்படுவதாகவும் ஈரான் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கத் தடைகள் காரணமாக போதுமான அளவு தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதில் நாடு தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் குறித்த அறிவிப்பை ஈரான் வெளியிட்டுள்ளது. மேலும் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரானியர்கள் தடுப்பூசியை பரிசோதிக்க முன்வந்ததாகவும், முதல் கட்ட மனித சோதனைகளில் பங்கேற்க 56 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 390 views
-
-
கோப்புப்படம் வங்கதேசத்தின் சிட்டகாங் நகரிலிருந்து 5 கப்பற்படைக் கப்பல்கள் மூலம், 1700க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளை ஆள் நடமாட்டமில்லாத தனித்தீவுக்கு வங்கதேச அரசு இன்று அனுப்பி வைத்துள்ளது. அடைக்கலம் தேடி வந்த அகதிகளை ஆள்நடமாட்டமில்லாத தனித்தீவில் கொண்டுவிடும் வங்கதேச அரசுக்கு சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த ரோஹிங்கியா அகதிகள் அனைவரும் சிட்டகாங் நகரிலிருந்து கடலில் 3 மணி நேரப் பயணத்துக்குப் பின் பாஷன் சார் தீவில் கொண்டுவிடப்படுகின்றனர். இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத வங்கதேச அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “ சிட்டகாங்கில் உள்ள காக்ஸ் பஜார் பகுதியில் இருந்து 1700க்கும் மேற்பட்ட ரோஹிங்கி…
-
- 0 replies
- 363 views
-
-
ஏற்கனவே பரவியுள்ள வைரஸ் திரிபடைவதை தடுக்கமுடியாது – மருத்துவத் துறை எச்சரிக்கை BharatiDecember 29, 2020 ஏற்கனவே பரவியுள்ள வைரஸ் திரிபடைவதை தடுக்கமுடியாது – மருத்துவத் துறை எச்சரிக்கை2020-12-29T07:05:50+05:30Breaking news, மருத்துவம் FacebookTwitterMore நாட்டுக்குள் திரிபடைந்த வைரஸ் நுழைவதை தடுப்பதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், நாட்டுக்குள் ஏற்கனவே பரவியுள்ள வைரஸ்கள் திரிபடைவதை நம்மால் தடுக்க முடியாது. இப்படித் தெரிவித்திருக்கிறார் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலர் மருத்துவர் ஹரித அலுத்கே. ஊடகங்களுக்கு நேற்று கருத்துத் தெரிவித்த அவர், “எந்தவொரு நாட்டிலும் உள்ள வைரஸும் மாற்றம் அடை…
-
- 0 replies
- 452 views
-
-
கனடாவில் பாவனைக்கு வந்து விட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி BharatiDecember 29, 2020 கனடாவில் பாவனைக்கு வந்து விட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி2020-12-29T11:18:45+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore குரு அரவிந்தன் தினக்குரல் வாசகர்களுக்கு முதற்கண் இனிய புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். புத்தாண்டு எமக்கு நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையின் அடையாளமாக கொரோனா வைரசுக்கான தடுப்பூசி உலகம் முழுவதும் அறிமுகமாகின்றது. இந்த வருடம் அதாவது 2020 ஆம் ஆண்டு கோவிட் -19 தாக்கம் காரரணமாக ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதில் இருந்து மீள்வதற்கான மருந்துகள், தடுப்பூசிகள் நடைமுறைக…
-
- 0 replies
- 408 views
-
-
சென்னையில் நடைபெறும் ‘மார்கழியில் மக்கள் இசை ‘ நிகழ்வில் ஒலித்த ஈழத் தமிழரின் உரிமைக்கான குரல் BharatiDecember 29, 2020 சென்னையில் நடைபெறும் ‘மார்கழியில் மக்கள் இசை ‘ நிகழ்வில் ஒலித்த ஈழத் தமிழரின் உரிமைக்கான குரல்2020-12-29T13:36:12+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதியில், புத்தாண்டை சமத்துவ புத்தாண்டாக கொண்டாட வானம் கலைவிழா எனும் நிகழ்ச்சியை இயக்குனர் பா. இரஞ்சித் ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்ச்சி பல்வேறு தரப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் நீட்சியாக தற்போது 2020 ஆம் …
-
- 0 replies
- 426 views
-
-
கொவிட்-19: பெல்ஜியத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பமானது! Ilango BharathyDecember 29, 2020 கொவிட்-19: பெல்ஜியத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பமானது!2020-12-29T14:59:56+05:30உலகம் FacebookTwitterMore கொரோனாப் பரவலைத் தடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பைசர் தடுப்பூசி மருந்து செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தில் நேற்றைய தினம் ஜோஸ் ஹெர்மன்ஸ்( Jos Hermans )என்ற 96 வயது முதியவருக்கு முதல்நபராக பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய குறித்த முதியவர், மருந்து செலுத்தப்பட்டபின்னர் 30 …
-
- 0 replies
- 335 views
-
-
திபெத்தின் புதிய தலாய்லாமாவை தெரிவு செய்வதில்... சீனாவின் தலையீட்டை தடுக்கும் சட்டத்தில், ட்ரம்ப் கையெழுத்து திபெத்தின் புதிய தலாய்லாமாவை தெரிவு செய்வதில் சீனாவின் தலையீட்டை தடுக்கும் ஒரு சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். சீனாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ‘திபெத் கொள்கை மற்றும் ஆதரவு சட்டம் 2020’ என்கிற சட்டமூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த சட்டமூலம் ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (திங்கட்கிழமை) கையெழுத்திட்டார். இந்த சட்டத்தின் முக்க…
-
- 0 replies
- 604 views
-
-
வுஹான் கொரோனா வைரஸ் அறிக்கைகளுக்காக சீன பத்திரிகையாளருக்கு 4 ஆண்டுகள் சிறை கொவிட்-19 பரவலின் ஆரம்ப காலக் கட்டத்தில் வுஹானுக்கு விஜயத்தை மேற்கொண்டு பல உண்மை தகவல்களை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ஜாங் ஜான்னுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஜாங் ஜான், ஷாங்காய் நீதிமன்றில் ஒரு குறுகிய விசாரணையின் பின்னர் தண்டனை உறுதி செய்யப்பட்டதாக அவரது பாதுகாப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான ரென் குவானியு செய்தியாளர்களிடம் கூறினார். ஜாங் ஜான், வெடிப்பின் குழப்பமான ஆரம்ப கட்டங்களில் அறிக்கை செய்ததற்காக மோதல்கள் மற்றும் சிக்கலைத் தூண்டுவதற்கும் வழியமைத்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்காககே இந் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சீனாவை சேர்ந்த …
-
- 0 replies
- 404 views
-
-
இலங்கையை விட அதிக பிரபலமடைந்துவரும் மாலைதீவு விமான நிலையம்.! இலங்கை விமான நிலையத்தில் உள்வரும் விமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் அதிகமான விமான நிறுவனங்கள் தமது விமான சேவைகளை மாலைதீவு வழியாக செயற்படுத்தி வருகின்றன. இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்கு விமானங்கள் இயக்கப்படுகின்ற போதும் மீண்டும் இலங்கைக்கு திரும்பும் விமானங்கள் இல்லை என்பதால் இலங்கை விமான நிலையத்தை விட மாலைதீவு விமான நிலையம் 24 மணி நேரமும் இருவழி பாதைகளும் இயங்குவதால் பிரபலமடைந்து வருகின்றது. சகல நாடுகளின் விமானங்களும் தற்போது மலைதீவு ஊடாக நடைபெற்று வருகின்றன காலப்போக்கில் இவ் விமான நிலையம் சர்வதேச நாடுகளை கவரும் வகையில் மாற்றப்படலாம். இலங்கையின் நிலை இவ்வாறு தொட…
-
- 5 replies
- 928 views
-
-
ட்ரம்ப் கையெழுத்திட மறுப்பது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் – ஜோ பைடன் In அமொிக்கா December 27, 2020 12:02 pm GMT by : Benitlas http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/dss-1.jpg கொரோனா நிவாரண சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்திட மறுப்பது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கீடு செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் அண்மையில் ஒப்புதல் வழங்கியிருந்தது. இதையடுத்து, இது தொடர்பான கொரோனா நிவாரண சட்டமூலம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலம் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதலுக்காக …
-
- 0 replies
- 653 views
-
-
ஜேர்மனியில் துப்பாக்கிப் பிரயோகம் – நால்வர் காயம்! ஜேர்மனியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். ஜேர்மனியின் பெர்லின் மாகாணம் கிருஸ்பெர்க் மாவட்டத்தில் சமூக ஜனநாயக கட்சி தலைமையை அலுவலகம் அமைந்துள்ளது. குறித்த கட்சி தலைமை அலுவலகம் அருகே நேற்று துப்பாக்கியுடன் வந்த மர்மநபர் அப்பகுதியில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இந்த தாக்குதலில் 3 பேருக்கு துப்பாக்கிக்குண்டு காயம் ஏற்பட்டது. மேலும், ஒருவர் தனது உயிரை காப்பற்றிக்கொள்ள அருகில் இருந்த கால்வாய்க்குள் விழுந்ததில் அதில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு …
-
- 0 replies
- 325 views
-
-
20 ஆண்டுகால காத்திருப்பு: அதிநவீன போர் விமானத்தை விமானப்படையில் இணைத்தது ரஷ்யா! ஒலியின் வேகத்தை விஞ்சும் விரைவு, வானில் எந்த திசையிலும் துரிதமாக திரும்பும் திறன், செங்குத்தாக மேலேறுவது, குட்டிக்கரணம் அடித்தபடியே கீழிறங்குவது என உலகிலேயே அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை ரஷ்யா தனது விமானப்படையில் இணைத்துள்ளது. 20 ஆண்டுகால காத்திருப்புக்கு பின்னர் சுஹோய் வரிசையில் ஐந்தாம் தலைமுறையை சேர்ந்த Su-57 ஜெட் போர் விமானத்தை ரஷ்யா தனது விமானப்படையில் இணைத்துள்ளது. ராடார், இன்ஃபிராரெட், சோனார் கருவிகளால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத தொழில்நுட்பத்தை கொண்டுள்ள Su-57 குறித்த அறிவிப்பு 2002ஆம் ஆண்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு 2010 ஆம் ஆண்டு சுகோய் 57 ரக முதல் விமானம் தயாரிக…
-
- 0 replies
- 528 views
-
-
-
- 0 replies
- 316 views
-
-
புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு ஜப்பான் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் வேண்டுகோள்! Ilango BharathyDecember 26, 2020 புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு ஜப்பான் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் வேண்டுகோள்!2020-12-26T16:07:26+05:30உலகம் FacebookTwitterMore கொரோனாப் பரவல் ஆபத்து இருப்பதை சுட்டிக்காட்டி, புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்கும்படி ஜப்பான் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் யோஷிஹிதே சுகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்திய அவர், கொரோனாப் பரவலை தடுக்க புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட வேண்டாம் என்றும், புத்தாண்டு விடுமுறையை அமைதியான முறையில் வீட்டி…
-
- 0 replies
- 366 views
-
-
அமெரிக்க இராணுவத்தின் புதிய சாதனை! Ilango BharathyDecember 26, 2020 அமெரிக்க இராணுவத்தின் புதிய சாதனை!2020-12-26T10:12:38+05:30உலகம், தொழில்நுட்பம் FacebookTwitterMore அமெரிக்காவில் சூப்பர் கன் எனப்படும் மேம்படுத்தப்பட்ட பீரங்கி கிட்டத்தட்ட 70 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கி சாதனை படைத்துள்ளது. அரிசோனா பாலைவனத்தில் அமெரிக்க இராணுவத்தால் சோதனை செய்யப்பட்ட இந்த சூப்பர் கன் ஜிபிஎஸ் மற்றும் லேசர் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி குண்டை வெடிக்க வைத்தது. பின்னர் 70 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள இராணுவ கவச வாகனத்தை துல்லியமாகத் தாக்கியது. இது வரலாற்றில் மிக தூரமான, துல்லியமாக வ…
-
- 1 reply
- 889 views
-
-
80 மோப்ப நாய்களின் உதவியுடன் கொரோனாத் தொற்றைக் கண்டுபிடிக்கும் பணி! எந்த நாட்டில் தெரியுமா? Ilango BharathyDecember 26, 2020 80 மோப்ப நாய்களின் உதவியுடன் கொரோனாத் தொற்றைக் கண்டுபிடிக்கும் பணி! எந்த நாட்டில் தெரியுமா?2020-12-26T12:01:12+05:30உலகம் FacebookTwitterMore உலக அளவில் குற்ற புலனாய்வுத்துறையில் பொலிஸாருடன் இணைந்து பணியாற்றுவதில் மோப்ப நாய்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது. அந்தவகையில் அமீரகத்திலும் பல்வேறு இடங்களில் காவல் துறையில் கே-9 என்ற மோப்ப நாய் பிரிவு சிறப்…
-
- 0 replies
- 527 views
-
-
கொரோனா சிகிச்சையில் இனப் பாகுபாடு குற்றம்சாட்டிய அமெரிக்க பெண் மருத்துவர் பலி 25 டிசம்பர் 2020 பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டாக்டர் சூசன் மூர். கருப்பினத்தவர் என்பதால் தனக்கு கொரோனா சிகிச்சை சரிவர அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய கருப்பினப் பெண் மருத்துவர் உயிரிழந்தார். அமெரிக்காவில் இண்டியானாபொலிஸ் மாகாணத்தில் இது நடந்தது. சூசன் மோர் என்கிற அந்த பெண் மருத்துவர் கொரோனா தொற்று ஏற்பட்டு 'இந்தியானா யுனிவர்சிட்டி ஹாஸ்பிடல் நார்த்' என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது தனது மருத்துவமனை படுக்கையில் இருந்து அவர் பேசும் வீடியோ ஒன்று வெளியானது. அதில் தமக்க…
-
- 0 replies
- 755 views
-
-
பிரெஞ்சுப் பிரஜா உரிமை பெறுவதற்கு நிறைய வேலை செய்வது அவசியமா? BharatiDecember 26, 2020 பிரெஞ்சுப் பிரஜா உரிமை பெறுவதற்கு நிறைய வேலை செய்வது அவசியமா?2020-12-26T05:45:19+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore பாரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன் மிகையான உழைப்புக் காரணமாக குடியுரிமை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் மீள மனுச் செய்வதற்கு வாய்ப்பான காலம் இது. பிரான்ஸில் குறிக்கப்பட்ட நேர அளவுக்கு மேலதிகமாகத் தொழில் செய்யும் வெளிநாட்டவர்கள் குடியுரிமை கோரும் தகுதியை இழக்கின்றனர். பிரஜா உரிமை பெறுவதற்கு நிறைய மணித்தியாலங்கள் வேலை செய்வது அவசியம் என்ற தப்புக் கணக்கு இங்கு…
-
- 0 replies
- 1k views
-
-
புதிய வைரஸ் தொற்றிய முதல் நபர் பிரான்ஸ் Tours நகரில் கண்டுபிடிப்பு BharatiDecember 26, 2020 புதிய வைரஸ் தொற்றிய முதல் நபர் பிரான்ஸ் Tours நகரில் கண்டுபிடிப்பு2020-12-26T06:00:40+05:30Breaking news, உலகம் FacebookTwitterMore மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் தொற்றிய முதல் நோயாளி பிரான்ஸில் நத்தார் தினமான நேற்று கண்டறியப்பட்டுள்ளார். பிரிட்டனில் இருந்து கடந்த 19 ஆம் திகதி பிரான்ஸின் Tours( Indre-et-Loire) நகருக்கு வருகைதந்த ஆண் ஒருவருக்கே புதிய வைரஸ் தொற்றி இருக்கிறது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் வசிக்கும் பிரெஞ்சுப் பிரஜையான அவருக்கு Tours மருத்துவமனையில் வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது…
-
- 0 replies
- 691 views
-
-
துனிசிய கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழந்தது- நான்கு கர்ப்பிணிப்பெண்கள் உட்பட 20 பேர் நீரிழ் மூழ்கி மரணம் Rajeevan ArasaratnamDecember 25, 2020 துனிசிய கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழந்தது- நான்கு கர்ப்பிணிப்பெண்கள் உட்பட 20 பேர் நீரிழ் மூழ்கி மரணம்2020-12-25T23:16:08+05:30உலகம் FacebookTwitterMore துனிசிய கடற்பபரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த நான்கு கர்ப்பிணிப்பெண்கள் உடல்கள் உட்பட 20 பேரின் உடல்கனை மீட்டுள்ளதாக துனிசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துனிசிய கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 30க்கும் அதிகமானவர்கள் பேர் காணாமல்போயிருந்தனர். இவர்களில் நான்கு க…
-
- 0 replies
- 351 views
-
-
கொவிட்-19: சீனாவின் சினோவக் தடுப்பூசியை பயன்படுத்தும் துருக்கி! Ilango BharathyDecember 25, 2020 கொவிட்-19: சீனாவின் சினோவக் தடுப்பூசியை பயன்படுத்தும் துருக்கி!2020-12-25T16:02:22+05:30உலகம் FacebookTwitterMore சீனாவின் சினோவக் (Sinovac) கொரோனா தடுப்பூசி, முதல் கட்டமாக நல்ல விளைவை தந்துள்ளதால், மேலும் 30 லட்சம் டோஸ்களை ஓரிரு நாட்களில் வரவழைத்து துருக்கி அரசு பயன்படுத்தவுள்ளது. சீனாவின் சினோவேக் கொரோனா தடுப்பூசியை, தாங்களாக முன்வந்த 7,371 பேருக்கு துருக்கி அரசு செலுத்தியது.இதில் தடுப்பூசியானது 91.25 % பயனளிக்கும் வகையில் இருந்ததால், மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவடையாத நிலையிலும், மேலும் 30 லட்சம் டோஸ்களை துருக்கி …
-
- 0 replies
- 368 views
-
-
கொவிட்-19: பிரித்தானியாவில் 6.16 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது! Ilango BharathyDecember 25, 2020 கொவிட்-19: பிரித்தானியாவில் 6.16 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!2020-12-25T13:24:17+05:30உலகம் FacebookTwitterMore அமெரிக்காவின் பைசர் – ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனாத் தொற்றுக்கான தடுப்பு மருந்தைப் பொதுமக்களுக்குச் செலுத்தும் பணியை பிரித்தானியா கடந்த 8 ஆம் திகதி ஆரம்பித்தது. உலகிலேயே முதன்முறையாகப் பெருமளவில் பைசர் பயான்டெக் தடுப்பூசி போடும் பணிகளைத் தொடங்கியது பிரித்தானியா தான் என்பது குறிப்பிடத் தக்கது. இந் நிலையில் டிசம்பர் 20 வர…
-
- 0 replies
- 356 views
-
-
தேவைப்பட்டால் ஆறு வார காலத்தில் அடுத்த ஊசி தயார் என்கிறது பைசர்! BharatiDecember 25, 2020 தேவைப்பட்டால் ஆறு வார காலத்தில் அடுத்த ஊசி தயார் என்கிறது பைசர்!2020-12-25T05:37:47+05:30மருத்துவம் FacebookTwitterMore ‘பைசர் – பயோஎன்ரெக்’ தடுப்பூசி பிரிட்டனில் பரவியிருக்கும் திரிபடைந்த வைரஸை 99வீதம் எதிர்க்கக் கூடியது என்று அதைத் தயாரித்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. புதிய வைரஸின் புரதம் (proteins) 99வீதம் முந்திய கொரோனா வைரஸின் புரதத்தோடு ஒத்திருக்கிறது. எனவே பைசர் தடுப்பூசி புதிய வைரஸுக்கு எதிராகவும் தொழிற்படும் என நம்புகின்றோம். எனினும் மாற்றமடைந்த கொரோனா வைரஸ் உடல் எதிர்ப்பு சக்தியை மீ…
-
- 0 replies
- 506 views
-
-
ஜேர்மன் மண்ணிலும் புதிய வைரஸ் – லண்டனிலிருந்து வந்த பெண்ணால் பரவியது BharatiDecember 25, 2020 ஜேர்மன் மண்ணிலும் புதிய வைரஸ் – லண்டனிலிருந்து வந்த பெண்ணால் பரவியது2020-12-25T05:32:57+05:30கட்டுரை FacebookTwitterMore பாரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன் லண்டனை அச்சுறுத்தி வரும் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் ஜேர்மனியிலும் பரவியுள்ளது. ஜேர்மனியின் சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். ஞாயிறன்று லண்டனுக்கான வான் போக்குவரத்துகள் இடைநிறுத்தப்படு வதற்குச் சற்று நேரம் முன்னராக ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து பிராங்போர்ட் (Frankfurt) வந்தடைந்த பெண் ஒருவரைப் பரி…
-
- 0 replies
- 364 views
-