உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26590 topics in this forum
-
அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து எலன்மஸ்க் விலகல் - பின்னணி என்ன? 29 MAY, 2025 | 10:19 AM அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலன்மஸ்க் அறிவித்துள்ளார். இதனை எக்ஸ் தள பதிவு மூலம் அவர் தெரிவித்துள்ளார். “சிறப்பு அரசு ஊழியராக எனது பணிக்காலம் முடிவடையும் நிலையில் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கான பணியை மேற்கொள்ளும் வாய்ப்பை அளித்த ஜனாதிபதிடொனல்டுக்கு ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையின் நோக்கம் காலப்போக்கில் வலுப்பெறும்” என மஸ்க் தெரிவித்துள்ளார். இதை வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார். பின்னணி என்ன? - ட்ரம்ப்பின் புதிய வரி…
-
- 3 replies
- 267 views
- 1 follower
-
-
ஹார்வர்டில் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க ட்ரம்ப் நிர்வாகம் தடை! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் வியாழக்கிழமை (22) ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர்களைச் சேர்க்கும் திறனை இரத்து செய்தது. மேலும், தற்போதைய வெளிநாட்டு மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றவோ அல்லது அவர்களின் சட்டப்பூர்வ அந்தஸ்தை இழக்கவோ கட்டாயப்படுத்துகிறது. அதேநேரத்தில், ஏனைய கல்லூரிகளுக்கும் இந்த நடவடிக்கையை விரிவுபடுத்துவதாக உத்தரவு அச்சுறுத்துகிறது. 2025-2026 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் திட்ட சான்றிதழை நிறுத்துமாறு உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் உத்தரவிட்டதாகத் ஒரு அறிக்கையில் சுட்டிக்க…
-
- 1 reply
- 228 views
-
-
Published By: RAJEEBAN 28 MAY, 2025 | 11:29 AM பட்டினியின் பிடியில் வாடும் பாலஸ்தீனியர்கள் உணவு விநியோகிக்கப்படும் நிலையத்தில் பெருமளவில் திரண்டதையடுத்து காசாவில் அமெரிக்கா ஆதரவுடனான புதிய குழுவின் மனிதாபிமான உதவி வழங்கும் நடவடிக்கைகள் பெரும் குழப்பத்திற்குள் சிக்கியுள்ளதாக ஏபி செய்தி வெளியிட்டுள்ளது. உணவு விநியோகிக்கப்படும் பகுதியை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு பெருமளவு பாலஸ்தீனியர்கள் நுழைந்ததை தொடர்ந்து இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என ஏபி தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய டாங்கிகளின் துப்பாக்கி பிரயோகத்தையும் துப்பாக்கி சூட்டு சத்தத்தையும் கேட்க முடிந்ததாக தெரிவித்துள்ள ஏபி செய்தியாளர் ஹெலிக்கொப்டரில் இருந்து துப்பாக்கி …
-
-
- 3 replies
- 325 views
- 1 follower
-
-
“ஹமாஸ் அமைப்பின் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டார்” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு! இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் போர் தொடங்கியது. 1 வருடத்தை தாண்டியும் நீடித்து வந்த இந்த போரை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் தலையீட்டால் நடப்பாண்டு ஜனவரியில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் இரு நாடுகளில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டது. இஸ்ரேல், ஹமாஸ் இடையே சில வாரங்களாக போர் நிறுத்தம் அமலில் இருந்தது. இதனிடையே, போர் நிறுத்தத்தின் 2ம் கட்டத்தை அமல்படுத்த ஹமாஸ் வலியுறுத்தி வந்தது. 2ம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தப்படி காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும். ஆ…
-
- 0 replies
- 239 views
-
-
"அடிடாஸில்" பெரும் பிளவு! வாடிக்கையாளர் ரகசியங்கள் திருட்டு! யார் அடுத்த குறி? அடிடாஸ் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத் தாக்குதலுக்கு உள்ளாகி திருடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. விளையாட்டு ஆடை உலகின் ஜாம்பவானான அடிடாஸ், வாடிக்கையாளர் சேவைப் பிரிவுடன் தொடர்பு கொண்டவர்களின் “முக்கியமாக” தொடர்புத் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து அடிடாஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர், இந்தச் சம்பவம் “செயல்பாட்டு ரீதியாக எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை” என்று கூறியுள்ளார். கடவுச்சொற்கள், கடன் அட்டைத் தகவல் மற்றும் பணம் செலுத்துதல் தொடர்பான தரவுகள் இந்தத் திருட்டால் பாதிக்கப்படவில்லை என்றும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இது ஒரு ச…
-
- 0 replies
- 222 views
-
-
“கோல்டன் டோம்” திட்டத்தில் இணைய கனடாவுக்கு அமெரிக்கா விசேட சலுகை! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தான் முன்மொழிந்த “கோல்டன் டோம்” ஏவுகணை பாதுகாப்பு அமைப்பில் கனடா இணைவதற்கு ஒரு விலையை நிர்ணயித்துள்ளார். மேலும், அந்த செயல்பாட்டில் தனது இணைப்பு அச்சுறுத்தலையும் புதுப்பித்துள்ளார். இது குறித்து செவ்வாயன்று (27) சமூக தளத்தில் டரம்ப் இட்ட பதிவில், அவர்கள் (கனடா) ஒரு தனி தேசமாக இருந்தால், கோல்டன் டோமில் சேர கனடாவுக்கு 61 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும். ஆனால், அவர்கள் எங்கள் நேசத்துக்குரிய 51 ஆவது மாநிலமாக மாறினால் அவ்வாறு எந்த செலவும் இருக்காது என்று கூறினார். கனடா இந்த சலுகையை “பரிசீலனை செய்து வருகிறது” என்றும் அவர் கூறினார். கனடாவின் இறையாண்மையை வலியுறுத்திய மன்னர…
-
- 0 replies
- 202 views
-
-
விந்தணுவில் புற்றுநோய்; ஒரே குடும்பத்தில் 10 குழந்தைகள் பாதிப்பு;ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி ஐரோப்பாவில் ஒரே நபரின் விந்தணுவில் கருத்தரித்த 67 குழந்தைகளில் 10 பேருக்கு புற்றுநோய் அபாயம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவில் செய்யப்பட்ட ஒரு பரிசோதனையில் மிகப்பெரிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த பரிசோதனையில் 8 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 46 குடும்பங்களைச் சேர்ந்த 67 குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் ஒரே நபரின் விந்தணு மூலம் 67 பேர் கருத்தரித்துள்ளனர். அவர்களை பரிசோதனை செய்ததில் அந்த நபரின் விந்தணுவில் கருத்தரித்த குழந்தைகளில் 10 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் கேன்சர் செல்களான ”லுகேமியா மற்…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா புதிய திட்டம்! சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ‘கோல்டன் டோம்’ எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அமெரிக்க ஜனதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். சீனா மற்றும் ரஷ்யாவால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்கும் நோக்கில், ‘கோல்டன் டோம்’ எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அமைக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். இந்த பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு 175 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். https://athavannews.com/2025/1432614
-
- 4 replies
- 377 views
- 1 follower
-
-
பிரிட்டனில் லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்தின் ரசிகர்கள் மீது காரால் மோதிய நபர் – 27 பேர் காயம் 27 MAY, 2025 | 06:35 AM லிவர்பூலில் லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்தின் அணிவகுப்பு நிகழ்வின் மீது நபர் ஒரு காரால் மோதியதில் 27 பேர் காயமடைந்துள்ளனர். பொதுமக்கள் மீது காரால் மோதிய 53 வயது பிரிட்டிஸ் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களில் நான்கு சிறுவர்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை பயங்கரவாத சம்பவமாக கருதவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/215780
-
-
- 5 replies
- 286 views
-
-
சவுதி அரேபியாவில் மது தடை நீக்கப்பட்டதா? சவுதி அரேபியா, 73 ஆண்டுகால மது தடையை நீக்கும் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளை திங்களன்று (26) அந் நாட்டு ஒருவர் மறுத்தார். இது முஸ்லிம்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் விவரித்தார். 2034 கால்பந்து உலகக் கோப்பையை நடத்த நாடு தயாராகி வருவதால், சுற்றுலா அமைப்புகளில் மதுபான விற்பனையை அனுமதிக்க சவுதி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. இந்தத் தகவலுக்கான நம்பகத் தகுந்த ஆதாரம் சுட்டிக்காட்டப்படவில்லை. ஒரு காலத்தில் தீவிர பழமைவாத நாடாக இருந்த இந்த இராச்சியம், தனது பொருளாதாரத்தை பன்முகப்படுத்தவும், எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் ஒரு இலட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுலாப் பயணிகளையும் சர்வத…
-
- 0 replies
- 374 views
-
-
புதிய போர்க்கப்பலை அறிமுகம் செய்வதில் தோல்வி – வட கொரிய ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை May 25, 2025 4:43 pm புதிய போர்க்கப்பலை அறிமுகம் செய்யும் போது ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து வடகொரியா கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, அதிகாரிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஒரு குற்றச் செயல் என்று விவரித்ததாகக் கூறப்படுகிறது. வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் கலந்து கொண்ட போர்க்கப்பலை அறிமுகம் செய்யும் நிகழ்வின் போது கப்பலின் அடிபாகங்கள் சில சேதமடைந்துள்ளது. கப்பலை விடுவிப்பதில் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கப்பல் நகர்ந்து செல்வதில் சிக்கில் ஏற்பட்டு கப்பலின் அடிபாகங்கள்…
-
- 0 replies
- 350 views
-
-
உக்ரேன் மீது ரஷ்யா வான் தாக்குதல்: புடின் மற்றும் செலன்ஸ்கியை விமர்சித்த ட்ரம்ப். உக்ரேன் மீது ரஷ்யப் படையினர் நடத்திய வான் தாக்குதல் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் புடின் ‘முற்றிலும் பைத்தியமாகிவிட்டார்’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். உக்ரேன் தலைநகா் கீவ் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 12 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் நேற்றைய தினம் தெரிவித்தனா். கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உக்ரேன் நாட்டை குறிவைத்து 298 ட்ரோன்கள், 69 ஏவுகணைகள் என மொத்தம் 367 ஆயுதங்கள் மூலம் மிகப்பெரும் வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியதாக உக்ரைன் விமானப் படை செய்தித் தொடா்பாளா் யூரி இஹ்னாத் தெரிவித்தாா். இந்நிலையில்…
-
-
- 5 replies
- 354 views
-
-
ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவிட்டால் 25% வரி விதிக்கப்படும் ! ட்ரம்ப் எச்சரிக்கை! ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவில்லை என்றால், இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்(Iphones) உற்பத்தியை இந்தியாவில் அதிகளவில் உற்பத்தி செய்து வருகின்ற நிலையில் இந்தியாவில் ஐபோன்கள் தயாரிக்கப்படுவதை டொனால்ட் ட்ரம்ப் விரும்பவில்லை. இந்நிலையில் ஐபோன் தயாரிப்பு குறித்து பேசியிருக்கும் ட்ரம்ப், “அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்றும் தான் நீண்ட காலமாக ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் (TIM COOK ) தெரிவித்து…
-
-
- 7 replies
- 644 views
- 1 follower
-
-
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் மருத்துவரின் 9 பிள்ளைகள் பலி - குழந்தை மருத்துவராக பல வருடங்களாக மருத்துவசேவையாற்றியவர் தனது அனைத்து சொந்தங்களையும் இழக்க நேரிட்ட தாங்க முடியாத கொடூரம் Published By: RAJEEBAN 25 MAY, 2025 | 11:00 AM காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் மருத்துவர் ஒருவரின் பத்து பிள்ளைகளில் 9 பிள்ளைகள் கொல்லப்பட்டனர். வைத்தியர் அலா அல் நஜார் என்பவரின் வீட்டை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் அவரது கணவரும் பிள்ளையொன்றும் காயமடைந்துள்ளனர் என நாசெர் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவரின் உயிர்பிழைத்த 11 வயது மகனிற்கு சத்திரசிகிச்சையை மேற்கொண்ட பிரிட்டிஸ் மருத்துவர் கிரேஸ் குரூம் குழந்தை மருத்துவராக குழந்தைகள் சிறுவர்களிற்கு பல …
-
-
- 2 replies
- 293 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆல்ட்ரிச் அமெஸ் கட்டுரை தகவல் எழுதியவர், மைல்ஸ் பர்க் பதவி, 25 மே 2025, 02:43 GMT சோவியத் ஒன்றியத்துக்கு அமெரிக்காவின் உளவுத் தகவல்களை விற்று 100-க்கும் மேற்பட்ட ரகசிய திட்டங்களை முறியடிக்க உதவி 10 மேற்கு உளவாளிகளின் இறப்புக்கும் காரணமாக இருந்த குற்றத்திற்காக ஆல்ட்ரிச் சிறையில் உள்ளார். 1994-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வருடம் பிப்ரவரியில் அமெஸால் துரோகம் இழைக்கப்பட்ட ஒரு உளவாளியிடம் பிபிசி பேசியது. 1985-ம் ஆண்டு அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவுக்கு வேலை பார்த்து வந்த சோவியத் ஏஜெண்ட்டுகள் ஒவ்வொருவராக காணாமல் போயினர். இந்த மேற்கத்திய உளவாளிகள் எல்லாம் சோவியத் உளவு அமைப்பான கேஜிபியால் பிடிக்கப்…
-
- 0 replies
- 288 views
- 1 follower
-
-
ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி! எதிர்வரும் ஜூன் 01ஆம் திகதி முதல் ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தனது சமூக ஊடக பதவில், அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை எனவும் டிரம்ப் சுட்டிக்காட்டினார். இதேவேளை, டிரம்பின் 50 சதவீத வரி அச்சுறுத்தலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பதிலலிக்காத நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433062
-
- 0 replies
- 212 views
-
-
Published By: DIGITAL DESK 2 24 MAY, 2025 | 09:01 PM டென்மார்க் அரசு, தனது நாட்டில் ஓய்வூதிய வயதை 70 ஆக உயர்த்தும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் டென்மார்க், ஐரோப்பாவில் ஓய்வூதிய வயதை 70-க்கு உயர்த்தும் முதல் நாடாக மாறியுள்ளது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டத்திற்கு 81 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 21 பேர் எதிராகவும் வாக்களித்தனர். புதிய சட்டம் 1970 டிசம்பர் 31க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போதைய ஓய்வூதிய வயது சுமார் 67 ஆக இருந்தாலும், 1967 ஜனவரி 1 பிறந்தவர்களுக்கு அது 69 வரை உயரக்கூடியதாகும். இந்த உயர்வு, எதிர்கால சந்ததிகளுக்கு நிலையான சமூக நலன்கள் வழங்கும் நோக்கில் அமல்படுத்தப்படுகிறது என ஊதிய அமைச்சர் அண்ணே ஹால்ஸ்போ ஜோர்ஜன…
-
-
- 5 replies
- 388 views
- 1 follower
-
-
ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் 12பேர் படுகாயம்! ஜெர்மனியில் ஹம்பர்க் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் அந்நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் ஹம்பர்க் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக்கொண்டு இருந்தவர்கள் மீது திடீரென மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் 12 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் இவர்களில் மூன்று பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கத்தியால் தாக்கிய நபரை அங்கிருந்த பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளதுடன் கத்தி குத்து தாக்குதல் நடத்தியவரின் நோக்கம் குறித்தும் அவரது பின்னணி குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://at…
-
-
- 8 replies
- 407 views
-
-
15 APR, 2025 | 12:30 PM சிவில் உரிமைகள் சட்டங்களை நிலை நிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக் கழகங்களுக்கு நிதி கிடைக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கான 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிவில் உரிமைகள் சட்டங்களை நிலை நிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக்கழகங்களுக்கு நிதி கிடைக்காது. கடந்த சில ஆண்டுகளாகவே பல்கலைக்கழகங்களில் கற்றல் நடவடிக்கைகள் சீர்குலைந்து வருகிறது. யூத மாணவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது. பல்கலைக்கழகங்கள் இந்தப் பிரச்சினையைத் த…
-
- 4 replies
- 379 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,BBC/PUNEET KUMAR படக்குறிப்பு, எலி கோஹன் கட்டுரை தகவல் எழுதியவர், பரத் சர்மா பதவி, பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலின் புகழ்பெற்ற உளவாளி எலி கோஹன் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். இஸ்ரேலிய அரசாங்கம், அதன் உளவுத்துறை அமைப்பான மொசாட், ஒரு நட்பு நாட்டின் உளவுத்துறை முகமையுடன் இணைந்து ஒரு ரகசிய மற்றும் சிக்கலான நடவடிக்கையை (Covert operation) மேற்கொண்டதாகக் கூறுகிறது. இந்த நடவடிக்கையின் மூலம், எலி கோஹன் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்களை சிரியாவிலிருந்து இஸ்ரேலுக்குக் கொண்டு வர முடிந்தது. இஸ்ரேலின் கூற்றுப்படி இந்த ரகசிய நடவடிக்கையில், எலி கோஹனின் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் உள்பட சுமார் 2500 ஆவணங்கள் சிரியாவிலிருந்து இஸ்ரேலுக…
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 23 MAY, 2025 | 11:02 AM டொனால்ட் டிரம்பின் ஆதரவு இல்லாமலே இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகின்றது என சிஎன்என் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கடந்த சில மாதங்களில் பல மடங்காக அதிகரித்துள்ளன என அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா அந்த நாட்டுடன் மேற்கொள்ளவுள்ள பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால்,இஸ்ரேல் அதன் பின்னர் தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் அணுசக்தி கட்டமைப்பின் மீது தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் என இஸ்ரேலின் கடும்போக்குவாதிகள் பி…
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கேரி ஓ'டோனோகு பதவி, பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கி மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், வெளிநாட்டு தலைவர்கள் அமெரிக்க அதிபர் அலுவலகத்திற்கு செல்வதற்கு அழைப்பு கிடைப்பதை ஒரு புறம் பெருமையான விஷயமாகக் கருதலாம். ஆனால் அதே நேரத்தில் அனைவர் முன்னிலையில் விமர்சிக்கப்படுவதற்கும், அவமானப்படுத்தப்படுவதற்கான அபாயமும் அந்த அழைப்பில் உள்ளது என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிரில் ராமபோசாவுக்கும் இடையே நடந்த சந்திப்பு அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. மங்கலான விளக்குகள், நீண்ட வீடியோ ஒன்றின் திரையிடல் மற்றும…
-
- 0 replies
- 260 views
- 1 follower
-
-
சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்! இங்கிலாந்து மேல் நீதிமன்றத்தின் தடை உத்தரவின் மூலம், சாகோஸ் தீவுகள் (Chagos Islands) ஒப்பந்தத்தை முடிப்பதில் இருந்து அந் நாட்டு அரசாங்கம் தற்காலிகமாகத் தடுக்கப்பட்டுள்ளது. வரும் சில மணிநேரங்களில் மொரிஷியஸிடம் தீவுக்கூட்டத்தின் இறையாண்மையை இங்கிலாந்து ஒப்படைக்கும் ஒரு ஒப்பந்தத்தை அமைச்சர்கள் முடிப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வியாழக்கிழமை அதிகாலை இங்கிலாந்து வெளிவிவகார அலுவலகத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அவசரகாலத் தடை உத்தரவில், நீதிபதி கூஸ், இந்த ஒப்பந்தம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க முன்னர் வழக்குத் தொடர்ந்த பெர்ட்ரிஸ் பாம்பேவுக்கு “இடைக்கால நிவாரணம்” அளித்தார். திருமதி பாம்பே ஒரு சாகோசியன் பெண், இந்த ஒ…
-
- 5 replies
- 314 views
-
-
22 MAY, 2025 | 12:33 PM ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் இராஜதந்திரிகள் குழுவினரை நோக்கி இஸ்ரேலிய படையினர் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்தமைக்கு பல உலக நாடுகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. ஜெனின் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த இராஜதந்திரிகளை நோக்கி இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எவரும் பாதிக்கப்படவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபடுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. ஏழு துப்பாக்கி வேட்டுகளையாவது வீடியோவில் கேட்க முடிகின்றது. அனுமதியளிக்கப்பட்ட பகுதியிலிருந்து அவர்கள் விலகியதன் காரணமாகவே துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், அவர்களை எச்சரிக்கும் விதத்தில் வானை ந…
-
- 0 replies
- 179 views
- 1 follower
-
-
மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி! ரஷ்ய தலைநகர் மாஸ்கோ வியாழக்கிழமை அன்று மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாஸ்கோவை இலக்காகக் கொண்டு ஏவப்பட்ட 35 உக்ரைனிய ட்ரோன்கள் உட்பட, மொத்தம் 105 ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளன. இந்தத் தாக்குதல் காரணமாக மாஸ்கோவைச் சுற்றியுள்ள விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின், “விழுந்த சிதைவுகளை அகற்றும் பணியில் அவசர சேவை வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்” என்று டெலிகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். இது கடந்த ஒரு நாளுக்கு முன்பு மாஸ்கோ மீது 27 ட்ரோன்கள் ஏவப்பட்ட நிலையில் வ…
-
- 0 replies
- 345 views
-