உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26873 topics in this forum
-
வடகொரியாவின் கிறிஸ்மஸ் பரிசு தயாரா? அதிர்ச்சியில் அமெரிக்கா சர்வதேசத்தின் கருத்துகளையும், அறிவுறுத்தல்களையும் செவிமடுக்காது செயற்பட்டுவரும் வடகொரியா, ஏவுகணைகளை உருவாக்குவதற்கான தளபாடங்களின் உற்பத்தியை விரிவுபடுத்துவதாகத் தெரிகின்றது. இந்த மாதம் 31ஆம் திகதிக்குள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுக்காவிட்டால், அந்த நாட்டுக்கு ‘கிறிஸ்மஸ் பரிசாக அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக வட கொரியா எச்சரித்துள்ள நிலையில், இந்த செய்தியானது அமெரிக்காவை சற்று அச்சமடைய வைத்துள்ளது. வட கொரியாவில் பாதுகாப்புத் தளபாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் கூடுதல் கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருவது கடந்த 19ஆம் திகதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் …
-
- 4 replies
- 845 views
-
-
இத்தாலியின் வெனிஸ் நகரை மீண்டும் வெள்ளப்பெருக்கு நனைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் பெரும் வெள்ளப்பெருக்க சந்தித்த வெனிஸ் நகரம் அதிலிருந்து மெல்ல மீண்டது. இந்நிலையில் வெனிஸ் நகரை வெள்ளப்பெருக்கு முற்றுகையிட்டுள்ளது. இதனால் அங்குள்ள புனித மார்க் சதுக்கம் உள்ளிட்ட இடங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட உள்ள நிலையில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு வெனிஸ் மக்களை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. https://www.polimernews.com/dnews/94073/வெனிஸ்-நகரில்-மீண்டும்பெருக்கெடுத்த-வெள்ளத்தால்மக்கள்-தவிப்பு https://globalnews.ca/news/6329944/venice-italy-flooding-december/
-
- 0 replies
- 440 views
-
-
படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த ஆண்டில் சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேருக்கு சௌதி அரேபிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் அரசு வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரபல பத்திரிகையாளரான கஷோக்ஜி சௌதி அரசு மீது விமர்சனங்களை வைத்து வந்தார். கடந்த ஆண்டு (2018) அக்டோபர் 2-ம் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் நுழைந்த பின்னர் உயிருடன் வெளியே வரவில்லை. சௌதிக்கு கஷோக்ஜியை திருப்பி வர வைப்பதற்காக அனுப்பப்பட்ட ஊழியர்கள் மேற்கொண்ட ஒரு முரட்டுத்தனமான நடவடிக்கையில் கஷோக்ஜி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சௌதி தலைநகரான ரியாத்தில் 11 ப…
-
- 7 replies
- 792 views
-
-
(லியோ நிரோஷ தர்ஷன்) சீனாவின் 5ஜீ தொலைத்தொடர்பு கட்டுமானங்களினால் பிராந்திய நாடுககளின் உறவுகளுக்கு சுதந்திரத்திற்கும் ஏற்பட கூடிய தாக்கங்கள் மற்றும் சீனாவின் நியாயமற்ற பொருளாதார நடவடிக்கைகளினால் இந்து - பசுபிக் பிராந்தியங்களில் ஏற்பட கூடிய பாதிப்புகள் குறித்து அமெரிக்க - இந்திய உயர் மட்ட பேச்சுக்களின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை , ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், மற்றும் இந்து மா சமுத்திரத்தன் பிராந்திய நிலைமைகள் தொடர்பான மதிப்பீடுகளும் இதன் போது பகிர்ந்து கொள்ளப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். வொசிங்டனில் கடந்த 18 ஆம் திகதி புதன்கிழமை அமெரிக்க- இந்திய உயர் மட்ட அதிகாரிகளுக்கு இடையே இரு தரப்பு …
-
- 0 replies
- 319 views
-
-
சோமாலியாவில் பாலைவன வெட்டுகிளிகளின் படையெடுப்பு பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இந்த வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கம் முன்பை விட பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில் அவை பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் பயிர்களை தின்று முற்றிலும் சேதப்படுத்தியுள்ளன. இதனால் தங்கள் குழந்தைகளுக்கு கூட கொடுக்க உணவு எதுவுமின்றி பட்டினியால் தவிப்பதாக அந்நாட்டு மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு வெட்டுக்கிளிகளால் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை, சோமாலியாவை மட்டுமின்றி எத்தியோப்பியா உள்பட ஆப்பிரிக்காவின் மற்ற இடங்களிலும் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக குற…
-
- 0 replies
- 322 views
-
-
உக்ரைனுக்கு வெள்ளை மாளிகை வழங்கும் உதவிகளை நிறுத்தியது ஏன்? வெளியானது அதிர்ச்சி தகவல் உக்ரைனுக்கு வெள்ளை மாளிகை வழங்கும் உதவிகளை நிறுத்தியது ஏன் என, இதுவரை புரியாத புதிராக இருந்துவந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. புதிதாக வெளியான அமெரிக்க அரசாங்கத்தின் மின்னஞ்சல் ஒன்றின் மூலம் இந்த விவகாரம் தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிதி வோலோடிமிர் சேலன்ஸ்கி ஆகிய இருவருக்கும் இடையில் இடம்பெற்ற 91 நிமிடங்கள் உரையாடலுக்கு பின்னரே இந்த உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தற்போது உறுதிப்பட்டுள்ளப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 25ஆம் திகதி, சேலன்ஸ்கி மற்றும் ஜனாதிபதி ட்ரம்ப் இடையேயான 91 நிமிட கலந்துரையாடலுக்கு பிறகு வெள்ளை மா…
-
- 0 replies
- 301 views
-
-
சவுதியின் செயற்பாட்டிற்கு துருக்கி கடும் கண்டனம்! சவுதி அரசாங்கத்தின் செயற்பாடு காரணமாகவே பாகிஸ்தான் இஸ்லாமிக் உச்சி மாநாட்டிலிருந்து வெளியேறியது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. துருக்கி ஜனாதிபதி எர்டோகன் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். மலேசியாவில் நடைபெற்ற இஸ்லாமிக் உச்சி மாநாட்டில் மலேசியப் பிரதமர் பின் முகமத் மற்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகனுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கலந்துகொள்ள இருந்தார். எனினும் இறுதி உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் கலந்துகொள்ளமால் அதனை புறக்கணித்திருந்தது. இந்தநிலையில் சவுதியின் பொருளாதாரத் தடை மிரட்டல் காரணமாகவே பாகிஸ்தான் இஸ்லாமிக் உச்சி மாநாட்டிலிருந்து வெளியேறியதாக துருக்கி ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 441 views
-
-
உலகை மிரட்டும் இராணுவ பலம்: வடகொரியா அடுத்த கட்டத்துக்கு நகர்வு வட கொரியாவினுடைய இராணுவ பலத்தினை அதிகரிக்கும் நோக்குடன் வட கோரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், அந்நாட்டு இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட கொரியா-அமெரிக்கா இடையே மோதல் நிலை மீண்டும் வலுப்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே, அமெரிக்காவின் கருத்துகளையும், அறிவுறுத்தல்களையும் செவிமடுக்காது செயற்பட்டுவரும் வடகொரியாவுடன் சமரசம் செய்ய அமெரிக்கா விருப்பம் தெரிவித்திருந்தது. சிங்கப்பூரில் நடந்த வரலாற்று உச்சி மாநாட்டின் போது இரு தலைவர்களும் செய்த க…
-
- 0 replies
- 483 views
-
-
கியூபாவில் 43 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் பதவியேற்பு அமெரிக்காவின் அண்டை நாடான கியூபாவில் 43 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். 1976 ஆம் ஆண்டு வரையான பிடல் காஸ்ரோ பிரதமாராக இருந்ததற்குப் பின்னர் பிரதமர் பதவி நீக்கப்பட்டு ஜனாதிபதிக்கே பிரதமருக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் மீண்டுப் பிரதமர் பதிவி உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 90 ஆண்டுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் இருந்த கியூபா, பிடல் காஸ்ற்ரோ, சே குவேரா ஆகியோர் தலைமையில் நடந்த மாபெரும் கியூபா புரட்சிக்குப் பின் விடுதலை ஆனது. இதனையடுத்து 1959ஆம் ஆண்டு கியூபாவின் முதல் பிரதமராக பிடல் காஸ்ற்ரோ பதவியேற்றார். 1976ஆம் ஆண்டு கியூபாவின் ஜனாதிபதியானார். 2008ஆம் ஆண்டு உடல்ந…
-
- 0 replies
- 267 views
-
-
ட்ரம்பிற்குச் சாதமாகிய பதவிநீக்க விசாரணை? சிவதாசன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவியிறக்க நாடகம் முடிவுக்கு வந்திருக்கிறது. அவர் பதவியிறக்கப்படத் தகுதியானவர் என, அவரது எதிர்க்கட்சி பெரும்பான்மையாகவுள்ள கீழ்ச்சபை (House of Representatives) தீர்ப்பளித்திருக்கிறது. வரலாற்றில் மூன்றாவது தடவையாக ஒரு அமெரிக்க ஜனாதிபதி பதவி நீக்கத்துக்காகச் சிபார்சு செய்யப்பட்டிருக்கிறார். இத் தீர்ப்பின் மூலம் அவரைப் பதவியிலிருந்து நீக்க முடியாது. இனி இவ் வழக்கு மேல்சபையில் ( Senate) விசாரிக்கப்படும். மேல்சபையில் பெரும்பான்மையாக இருப்பது ட்ரம்பின் குடியரசுக் கட்சி. அங்கு வழக்கு நடக்கும்போது சட்டத்தை இயற்றுபவர்களும், நீதிபதியும், ஜூரர்களும் செனட் சபை த…
-
- 0 replies
- 604 views
-
-
அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்! அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவிற்கும், ஜேர்மனிக்கும் இடையிலான எரிவாயுக் குழாய் பொருத்துவதற்கான திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவின் குறித்த தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியமும், ஜேர்மனியும் கண்டனம் வெளியிட்டுள்ளன. இந்தத் தடை மூலம் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக அவை குற்றம் சுமத்தியுள்ளன. குறித்த தடை குறித்து ரஷ்யாவும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://athavannews.com/அமெரிக்காவின்-தீர்மானத்/ ######…
-
- 1 reply
- 732 views
-
-
விமானப்படை, கடற்படை வரிசையில் அமெரிக்கா புதிதாக விண்வெளிப் படையை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவில் ராணுவம், மெரைன் கார்ப்ஸ், கடற்படை, விமானப்படை, கடலோரக் காவல்படை என 5 படைப்பிரிவுகள் உள்ளன. 6வது படைப் பிரிவாக, விண்வெளிப்படையை அமெரிக்கா புதிதாக உருவாக்கியுள்ளது. இதற்காக, 738 பில்லியன் டாலர்கள் தொகையை ஒதுக்குவதற்கான சட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். புதிய படைப் பிரிவை உருவாக்கியுள்ளதன் மூலம் மிகப்பெரிய சாதனை எட்டப்பட்டுள்ளதாக அப்போது அவர் குறிப்பிட்டார். விண்வெளியில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்களை பாதுகாப்பது விண்வெளிப் படையின் முக்கிய நோக்கமாகும். விண்வெளியானது போர்க்களங்களில் ஒன்றாக மாறியிருப்பதாகவும், அதில் அமெரிக்காவின் ஆ…
-
- 4 replies
- 1.1k views
-
-
மேற்கு கரையிலும் காஸாவிலும் இடம்பெறுகின்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழ்க்கறிஞர் படு பென்சவுடா இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள மேற்கு கரை கிழக்கு ஜெரூசலேம் மற்றும் காஸா பள்ளத்தாக்கு ஆகியபகுதிகளில் யுத்த குற்றங்கள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் யுத்த குற்ற விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான போதுமான தகவல்களை திரட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான போதிய காரணங்கள் உள்ளன என நான் த…
-
- 0 replies
- 785 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேற அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். ஜனவரி 31ம் தேதிக்குள் பிரக்ஸிட் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிரதிநிதிகள்சபையில் பிரெக்ஸிட் மசோதாவை பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று தாக்கல் செய்தார். அப்போது, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பின், ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கு வேறு வழிமுறைகள் உள்ளதாகவும் எனவே, இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து மசோதா மீது வாக்…
-
- 1 reply
- 453 views
-
-
வாஷிங்டன்: இந்தியா-அமெரிக்கா இடையே வாஷிங்டனில் நேற்று நடந்த 2வது ‘டூ பிளஸ் டூ’ பேச்சுவார்த்தையில், இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு மற்றும் ராணுவ உறவுகளை வலுப்படுத்தும் 2வது டூ பிளஸ் டூ கூட்டம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நேற்று நடந்தது. இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அமெரிக்க பாதுகாப்புத்தறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் சந்தித்து பேசினர். இதில் இருதரப்பு உறவுகளையும், ஒத்துழைப்பையும் மேலும் விரிவுபடுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில், ‘‘ராணுவத்துறையில் இரு நாடுகளுடம் அத…
-
- 0 replies
- 304 views
-
-
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் மத்திய பகுதியில் உள்ள ரஷ்யா FSB பாதுகாப்பு பிரிவு தலைமையகத்தில், மர்ம நபர் ஒருவர், திடீரென துப்பாக்கியால், கண்மூடித்தனமாக சுட்டதில், மூன்று பேர் கொல்லப்பட்டனர். திடீரென இவனது நடவடிக்கையை கண்டு, அப்பகுதியில் இருந்துவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். நிகழ்விடத்தில் வந்த காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப்படையினர், துப்பாக்கிச்சூடு நடத்தியவனை, சுட்டுக் கொன்றனர். அப்பகுதியில் நீண்ட நேரம் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் போலீசார் கையில் துப்பாக்கியுடன் பதுங்கிச் செல்லும் காட்சிகள் ஒளிபரப்பாகின. துப்பாக்கியால் சுட்ட நபர் யார் எதற்காக சுட்டான் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 391 views
-
-
குற்றம் எதுவும் செய்யாமலேயே பதவி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளேன் – ட்ரம்ப்! குற்றம் எதுவும் செய்யாமலேயே தான் பதவி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்துள்ளார். ட்ரம்ப் மீது ஜனநாயகக் கட்சி கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் 14 மணித்தியாலங்கள் விவாதம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் டிரம்ப்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 230 பேரும், எதிராக 194 பேரும் வாக்களித்துள்ளனர். …
-
- 1 reply
- 419 views
-
-
US government lists fictional nation Wakanda as trade partner 😜😧 - பெரும் பகிடி... \
-
- 1 reply
- 529 views
-
-
அவுஸ்திரேலியாவில் அவசரகால நிலை பிரகடனம்! அவுஸ்திரேலியா - நியூ சவுத் வேல்ஸில் ஒரு வாரத்திற்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. குறித்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் வெப்ப சூழல் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து இதன் நெருக்கடியை தவிர்க்கும் பொருட்டு இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று குறித்த பகுதியில் வெப்பநிலை சராசரியாக அதிகபட்சம் 40.9 சி வரை காணப்பட்டது. ஆனால் இதனைவிட இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 7 நாட்களுக்கு குறித்த அவசரகால நிலை அமுலில் இருக்கும். இதனிடையே நிய…
-
- 0 replies
- 768 views
-
-
இந்த ஆண்டில் உலகெங்கும் 49 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் நடப்பு ஆண்டில் உலகெங்கும் 49 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையொன்று தெரிவித்துள்ளது. பிரான்ஸின் பரிஸிலிருந்து செயற்படும் எல்லைகள் இல்லாத ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இந்த ஆண்டில் உலகெங்கும் 49 ஊடகவியலாளர்கள்; கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் யேமன், சிரியா, ஆப்கானிஸ்தானில் நடக்கும் உள்நாட்டுப் போர்கள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோது கொல்லப்பட்டனர். கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்த அளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் சராசரியாக ஆண்…
-
- 0 replies
- 302 views
-
-
டிரம்பிற்கு எதிராக தீர்மானம் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேறியது பிரதிநிதிகள் சபையில் தீர்மானத்திற்கு 200 மேற்பட்ட எம்.பி.க்கள் வாக்களிப்பு 229 எம்.பி.க்கள் தீர்மானத்திற்கு ஆதரவு- 194 பேர் எதிர்ப்பு https://www.polimernews.com/dnews/93430/அமெரிக்க-அதிபர்டிரம்பிற்கு-எதிரான-கண்டனத்தீர்மானம்-நிறைவேறியது
-
- 1 reply
- 440 views
-
-
சீனாவின் 2வது விமானம் தாங்கிக் கப்பலான ஷான்டாங் அந்நாட்டுக் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. தனது நாட்டு ராணுவத்தைப் பலப்படுத்தும் வகையில் முழுவதும் உள்நாட்டிலேயே விமானம் தாங்கிக் கப்பலை சீனா தயாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அந்நாட்டு 2வது விமானம் தாங்கிக் கப்பலான ஷான்டாங்கை, ஹைனான் தீவில் உள்ள சன்யா என்ற இடத்தில் நடந்த விழாவில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பிரமாண்டக் போர்க் கப்பலை கடற்படைக்கு அர்ப்பணித்தார். அப்போது பேசிய அவர், சீனாவை உலகத் தரம் வாய்ந்த ராணுவ சக்தியாகவும், அமெரிக்காவுக்கு இணையாகவும் மாற்றி வருவதாகக் கூறினார். 315 மீட்டர் நீளமும், 70 ஆயிரம் டன் எடையும் கொண்ட இந்தக் கப்பலில் 35 போர் விமானங்களை கொண்டு சென்று இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.…
-
- 7 replies
- 1.2k views
-
-
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இன்று அதிபர் டிரம்ப்புக்கு எதிராக தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் சபாநாயகர் நான்சி பெலோசிக்கு டிரம்ப் எழுதிய நீண்ட கடிதத்தில் தம்மை கூட்டுச் சதிக்கு ஆளானவர் என்று விளக்கம் அளித்துள்ளார். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட உள்ள ஜோ பிடனின் மகனுக்கு உக்ரைன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள வர்த்தகத் தொடர்பு குறித்து விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசிடம் டிரம்ப் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், தேசிய பாதுகாப்பு, அதிபர் தேர்தலுக்கான நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றுக்கு டிரம்ப் ஆபத்து விளைவித்து விட்டார் என்று ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியது. இதை அடுத்து டிரம்ப்பை பதவியை விட்டு நீக்க திட்…
-
- 1 reply
- 894 views
-
-
சிம்பாப்வே துணை ஜனாதிபதியை கொல்ல முயன்ற மனைவி: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு சிம்பாப்வே துணை ஜனாதிபதி கான்ஸ்டான்டினோ சிவெங்காவைக் அவரது மனைவி கொலை செய்ய முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை ஹராரே நீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, துணை ஜனாதிபதியின் மனைவியும், தொழிலதிபரும், முன்னாள் மொடல் அழகியுமான மேரி முபைவா, பலத்த பாதுகாப்புக்கு இடையில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது அவர் மீது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக துணை ஜனாதிபதி கான்ஸ்டான்டினோ சிவெங்காவை, மருத்துவ சிகிச்சைக்காக தென்னாபிரிக்கா- பிரிட்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, கொல்ல முயன்ற…
-
- 0 replies
- 353 views
-
-
பாரீஸ் :இந்தாண்டில் உலகெங்கும் 49 பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கடந்த 16 ஆண்டுகளில் இது மிகவும் குறைவு. ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரீஸில் இருந்து செயல்படும் எல்லைகள் இல்லாத நிருபர்கள் என்ற அமைப்பு 2019ம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த ஆண்டில் உலகெங்கும் 49 பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் ஏமன், சிரியா, ஆப்கானிஸ்தானில் நடக்கும் உள்நாட்டு போர்கள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோது கொல்லப்பட்டனர். கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்த அளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 80 பத்திரிகையாளர் உயிரிழந்துள்ளனர். https://www.dinamalar.com/new…
-
- 0 replies
- 614 views
-