Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற நிதி முதலீட்டு நிர்வாகிகளில் ஒருவரான ஜெப்ரே எப்ஸ்டெய்னின் உடல், சனிக்கிழைமை சிறையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தமது சிறை அறையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கருத்துப்படுகிறது. 2002 முதல் 2005 வரை 18 வயதுக்கும் குறைவான பல சிறுமிகளுடன் பாலுறவு கொண்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கைதான அவர் மீது, பாலுறவுக்காக சிறுமிகளைக் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES 2005இல் அவரால் பாதிக்கப்பட்டதாக 14 வயது சிறுமி ஒருவரின் குடும்பம் புகார் கூறியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளியில் தெரியவந…

  2. ரொறன்ரோவில் அதிகரித்துவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்! ரொறன்ரோவில் அண்மைக் காலமாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்துவருவதாக, ரொறன்ரோ பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் சௌன்டர்ஸ், தெரிவித்துள்ளார். கடந்த வார இறுதியில் ரொறன்ரோவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளதாகவும், 11 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. அவற்றுள்ள 33 சதவீத சம்பவங்கள் ரொறன்ரோ நகரின் வடமேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும், அனேகமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இரவு வேளைகளிலேயே இடம்பெறுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. http://athavannews.com/…

  3. வடகொரியா மேலும் இரண்டு அடையாளம் தெரியாத ஏவுகணைகளைப் பரிசோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் இந்த செயற்பாடு அண்மைய வாரங்களில் இடம்பெற்ற 5ஆவது ஏவுகணை பரிசோதனையாகும்.தென் ஹம்ங்யொங் மாகாணத்தின் கிழக்கு நகரமான ஹம்ஹங்கில் வைத்து ஜப்பான் கடற்பரப்பை நோக்கி இந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. வடகொரியத் தலைவர் கிம் ஜோன் அன்னிடமிருந்து தான் மிகவும் சிறந்த ஒரு கடிதத்தை பெற்றுக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், இந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது. அமெரிக்க மற்றும் தென்கொரிய கூட்டு இராணுவ பயிற்சி தொடர்பில் கிம் ஜோன் அன், மகிழ்ச்சியற்றிருந்தார் என்றும் ட்ரப்ம் தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tami…

    • 2 replies
    • 418 views
  4. ஹொங்கொங்கில் ஜனநாயககோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காராகள் ஹொங்கொங்கின் சர்வதேச விமானநிலையத்திற்குள் மூன்று நாள் முற்றுகை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வெள்ளிக்கிழமை மதியம் முதல் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் சர்வதேச விமானநிலையத்தின் உட்பகுதிக்குள் நுழைந்து வருகின்றனர். மேலும் விமானநிலையத்தில் காணப்படும் சுற்றுலாப்பயணிகளிற்கு தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டுபிரசுரங்களையும் வழங்கி வருகின்றனர். உலகின் மும்முரமான விமானநிலையங்களில்ஹொங்கொங் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் இந்த விமானநிலையத்தை பயன்படுத்துகின்றனர்.இதுதவிர 200 நகரங்கள…

    • 2 replies
    • 857 views
  5. பெண்கள் கத்தி வைத்திருக்கும் குற்றங்கள் அதிகரிப்பு இங்கிலாந்தில் பெண்கள் கத்தி வைத்திருக்கும் குற்றங்கள் 2014 முதல் அதிகரித்துள்ளதாகவும் ஒவ்வொரு ஆண்டும் இக்குற்றம் 10% அதிகரித்து வருவதாகவும் பொலிஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2018 ஆம் ஆண்டில் இவ்வகையான 1,509 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் குற்றங்கள் 73% அதிகரித்துள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. பெண்களை பொலிஸார் தடுத்து நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், சில பெண்கள் கும்பல்களுக்காக ஆயுதங்களை எடுத்துச் செல்கிறார்கள் என்று கூறப்படுகின்றது. 2014 மற்றும் 2018 க்கு இடைப்பட்ட காலத்தில் பெண்கள் கத்தி வைத்திருக்கும் குற்றங்கள் 5,800 க்கும் அதிகமாகப் பதிவாகியு…

  6. ஒக்டோபர் 31 ல் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் – பிரதமர் 2016 பிரெக்ஸிற் வாக்கெடுப்பை நாடாளுமன்றம் மதித்து அதன் பிரகாரம் ஒக்டோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறவேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் இராஜினாமா செய்வீர்களா என்ற கேள்விக்கு நேற்று (வியாழக்கிழமை) பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அந்தவகையில் ஒக்டோபர் மாத இறுதியில், ஒரு ஒப்பந்தத்துடன் அல்லது ஒப்பந்தம் இல்லாமல், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை வெளியேற்றுவதாக பிரதமர் ஜோன்சன் உறுதியளித்துள்ளார். அத்தோடு ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிற்றை நிறுத்த முயற்சிப்பதாக சப…

    • 1 reply
    • 470 views
  7. இந்தோனிசியத் தலைநகரம் போர்னியோவுக்கு மாற்றப்படுகிறது இந்தோனேசியாவின் தலைநகரம் ஜகார்த்தாவிலிருந்து போர்னியோவுக்கு மாற்றப்படும் என்று ஜனாதிபதி ஜொகோ விடோடோ இன்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். எங்கள் நாட்டின் தலைநகரம் போர்னியோ தீவுக்கு நகரும் என்றும் இந்த இடம் மத்திய கலிமந்தன், கிழக்கு கலிமந்தன் அல்லது தெற்கு கலிமந்தனில் அமையலாம் என்று ஜொகோ விடோடோ தனது ருவிற்றரில் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்த அனைத்து அம்சங்களும் ஆழமாக ஆய்வு செய்யப்படுகின்றன. இது எங்கள் நாட்டின் எதிர்காலம் பற்றிய சரியான முடிவு. அடுத்த 10, 50, 100 ஆண்டுகளுக்கு தேசத்திற்கும் மாநிலத்திற்கும் இம்முடிவினால் நன்மை கிடைக்கும் என்றும் விடோடோ கூறியுள்ளார். இந்த நடவடிக்கை நீண்ட காலமாகப…

  8. கடந்த இரண்டு வாரங்களிற்கு மேல் தாங்கள் தேடிவந்த இளைஞர்களின் உடல்களை மீட்டுள்ளதாக கனடாவின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலிய காவல்துறை அதிகாரியின் மகனையும் மகனின் அமெரிக்க நண்பியையும் கொலை செய்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த இளைஞர்களின் உடல்களையே மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நெல்சன் ஆற்றின் கரையில் உடல்களை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 19 வயது கம் மக்லியோட் பிரையர் ஸ்மெல்ஸ்கி ஆகியோரின் உடல்களையே காவல்துறையினர் மீட்டுள்ளனர். இவர்கள் கடந்த வாரம் வாகனமொன்றை திருடிய பகுதிக்கு அருகில் சடலங்களை காவல்துறையினர் மீட்டு;ள்ளனர். எனினும் இவர்கள் எப்படி உயிரிழந்தனர் என்பது குறித்த விபரங்களை அதிகார…

    • 1 reply
    • 932 views
  9. ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை தடுக்க கூகுள் சதி – ட்ரம்ப்! ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் பழமைவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக ட்ரம்ப் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது கூகுள் நிறுவனம் தனக்கு எதிராகவும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார். இந்த நிலையில், கூகுள் நிறுவனத்திலிருந்து கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட கெவின் கெர்னெகீ அண்மையில் தனியார் தொலை…

  10. அணுவாயுதம் தயாரிக்க இணையத்தில் பணம் திருட்டு – வடகொரியா மீது புதிய குற்றச்சாட்டு! வட கொரியா தனது அணுவாயுத திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியை பெறுவதற்காக, இணைய திருட்டில் ஈடுபட்டு இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் கிரிப்டோகரன்சி எனும் மின்னணு பணத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களின் மூலம் இரண்டு பில்லியன் டொலர்களை வடகொரியா திருடியுள்ளதாக அந்த அறிக்கையில் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான 35 இணைய தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரித்து வருவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வௌியாகியுள்ளன. கடந்த இரண்டு வாரங…

    • 1 reply
    • 433 views
  11. ஆசியாவில் ஏவுகணைகளை நிறுத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டோம்: அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை ‘ஆசியாவில் அமெரிக்கா ஏவுகணைகளை குவித்தால், அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்,’ என சீனா எச்சரித்துள்ளது.அணு ஆயுதங் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையே கடந்த 1987ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தை, கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா ரத்து செய்தது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் ஆயுதப் போட்டி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்கும் விதமாக, ‘ஆசிய - பசிபிக் பகுதிகளில் ஏவுகணைகள் நிறுத்தப்படும்’ என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் சில தினங்களுக்கு முன் அறிவித்தார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவி…

    • 0 replies
    • 855 views
  12. குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மனநலக் கோளாறுகள் உருவாகும் ஆபத்து? குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மனநலக் கோளாறுகள் உருவாகும் ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வு ஒன்றின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. கார்டிஃப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் இதுகுறித்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. கார்டிசோல் என்ற மன அழுத்த ஹோர்மோனின் அளவு வசந்த காலத்தில் அல்லது கோடைகாலத்தில் பிள்ளைகளை பெற்றெடுப்பவர்களை விட இலையுதிர்காலத்திலும் குளிர்காலத்திலும் குழந்தைகளை பிரசவிக்கும் பெண்களில் அதிகமாக இருப்பதை இதன்போது ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன்காரணமாக அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்…

  13. டெக்சாஸ் மற்றும் ஒஹாயோ பகுதிகளில் நடந்த இருவேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 29 பேர் பலியாகி உள்ளனர். டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள எல் பசோ எனும் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்; 26 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். "டெக்சாஸின் வரலாற்றில் இது மிகவும் மோசமான தினங்களில் ஒன்று" என்று இந்தத் தாக்குதல் குறித்து அம்மாகாண ஆளுநர் கிரெக் அபாட் கருத்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லைக்கு அருகே உள்ள 'சியில்லோ விஸ்டா மால்' எனும் வணிக வளாகத்தை ஒட்டியுள்ள வால்மார்ட் கடையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய ஒரே தாக்குதலாளியாக கர…

    • 0 replies
    • 817 views
  14. இரான்: வளைகுடா பகுதியில் மேலும் ஒரு வெளிநாட்டு எண்ணெய் கப்பலை பிடித்தது - அதிகரிக்கும் பதற்றம் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP வளைகுடா கடல் பகுதியில் மேலும் ஒரு வெளிநாட்டு எண்ணெய் கப்பலை இரான் பிடித்து வைத்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவிக்கிறது. ஏதோ ஒரு அரபு நாட்டிற்கு எரிபொருளை க…

  15. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்: காஷ்மீர் பிரச்சனையில் மூன்றாவது தரப்பு தலையீடு அவசியம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES காஷ்மீர் பிரச்சனையில் மூன்றாவது தரப்பு தலையீட்டை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோரி உள்ளார். காஷ்மீர் பிரச்சனை இந்த பிராந்திய சிக்கலாக உருவெடுக்கலாம் என்ற…

  16. சுற்றுலா விசாவில் வேலையா?: இந்தியர்களை அனுமதிக்க போகும் ஆவுஸ்திரேலியா வளர்ந்த நாடுகளில் முன்னணியில் உள்ள ஆஸ்வுதிரேலியாவுக்கு செல்வது இந்தியர்களுக்கு அமெரிக்க கனவைப் போன்றதே. இவ்வாறான சூழலில் இந்திய சுற்றுலாப்பயணிகளுக்கு Backpacker விசாவில் வேலை செய்வதற்கான அனுமதியை ஆவுஸ்திரேலியா வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலையில், குறித்த விசாவில் வேலை செய்ய பிரேசில், மெக்ஸிக்கோ, பிலிப்பைன்ஸ், சுவிஸ், பிஜி, சொலமன் தீவுகள், குரோஷியா, லத்வியா, லித்துவேனியா, அன்டோரா, மொனாகோ மற்றும் மங்கோலியா உள்ளிட்ட நாட்டவர்களுக்கே ஆவுஸ்திரேலியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆவுஸ்திரேலியாவின் பெரும் நிலப்பரப்புகளில் உள்ள பண்ணைகளில் வேலை செய்வதற்கு ஆட்கள்…

  17. அமெரிக்காவுடன் இணைய முடியாது – பிரித்தானியாவுடன் பேசுகின்றோம் : ஜேர்மனி! அமெரிக்காவினால் விடுக்கப்பட்டிருந்த மிக முக்கிய கோரிக்கை ஜேர்மனிய அரசாங்கம் நிராகரித்துள்ளது. பேர்சிய வளைகுடா பகுதியில், கப்பல்களை ஈரான் கைப்பற்றுவதிலிருந்து பாதுகாப்பதற்காக போர்க்கப்பல்களை அனுப்பி வைக்குமாறு ஜேர்மனியிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது. இந்தநிலையில் அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ள குறித்த கோரிக்கையினை ஜேர்மனியின் துணை சன்ஸலரான Olaf Scholz நிராகரித்துள்ளார். அத்துடன், அமெரிக்கா தலைமையிலான கடல் பாதுகாப்புப் படையில் தமது நாடு பங்கேற்காது எனவும் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். ‘இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து எமது பிரெஞ்சு மற்றும் பிரித…

  18. படத்தின் காப்புரிமைAFP அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணதிலுள்ள எல் பசோ எனும் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்; 26 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். "டெக்சாஸின் வரலாற்றில் இது மிகவும் மோசமான தினங்களில் ஒன்று" என்று இந்த தாக்குதல் குறித்து அம்மாகாண ஆளுநர் கிரெக் அபாட் கருத்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லைக்கு அருகே உள்ள 'சியில்லோ விஸ்டா மால்' எனும் வணிக வளாகத்தை ஒட்டியுள்ள வால்மார்ட் கடையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடத்திய ஒரே தாக்குதலாளியாக கருதப்படும் 21 வயதான ஒருவரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் இந்த உடனடி நடவடிக்கைக்கு அம…

  19. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே கொத்து எறி குண்டுகளை வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கும் தீவிரவாத மற்றும் ராணுவ இலக்குகள் மீது மட்டுமே தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜூலை 30 மற்றும் 31 தேதிகளுக்கு இடையிலான இரவில் இந்தியா நீலம் பள்ளத்தாக்கில் நடத்திய தாக்குதலில் ஒரு நான்கு வயது சிறுவன் உள்பட இரண்டு குடிமக்கள் இறந்துள்ளதாகவும் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் காவல் படைகளின் செய்தி வெளியீட்டு அமைப்பான இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் இன்று, சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய…

  20. ஆசிய பகுதிகளில் விரைவில் புதிய நடுத்தர ரக ஏவுகணைகளை நிறுவ அமெரிக்கா விரும்புவதாக, அந்நாட்டின் புதிய பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் கூறியுள்ளார். அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையே கடந்த 1987ம் ஆண்டு, ‘நடுத்தர ரக அணு ஏவுகணை தடை ஒப்பந்தம் (ஐஎன்எப்)’ ஏற்பட்டது. இதன்படி, 500 கி.மீ முதல் 5,500 கி.மீ தூரம் வரை செல்லும் அணு ஏவுகணைகளின் தயாரிப்பையும், பயன்பாட்டையும் குறைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்த விதிமுறைகளை மீறி ‘9எம்729’ என்ற புதிய ரக ஏவுகணைகளை ரஷ்யா தயாரித்ததால், இந்த ஒப்பந்தத்தை அமெரிக்காவும்-ரஷ்யாவும் நேற்று முன்தினம் முறித்துக் கொண்டன. இதனால், இரு நாடுகள் இடையே மீண்டும் ஆயுத போட்டி உருவாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத…

    • 0 replies
    • 370 views
  21. இளம் தாய்மார்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி! In ஐரோப்பா August 3, 2019 3:42 am GMT 0 Comments 1130 by : Benitlas சுவிஸில் இளம் தாய்மார்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவிஸில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய சுவிஸில் 20 வயதுக்கு உட்பட்ட இளம் தாய்மார்களின் எண்ணிக்கை 0.8 சதவீதம் என தெரிவிக்கப்படுகின்றது. இது ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்பதுடன், ஐரோப்பியாவிலேயே இளம் தாய்மார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என கருதப்படும் டென்மார்க்கில் 1 சதவீத இளம் தாய்மார்களே உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்த…

    • 1 reply
    • 907 views
  22. ஹீத்ரோ விமான நிலையத்தின் சில விமான சேவைகள் இரத்து! In இங்கிலாந்து August 3, 2019 7:23 am GMT 0 Comments 1091 by : Benitlas ஹீத்ரோ விமான நிலையத்தின் சில விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஹீத்ரோ விமான நிலைய ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக முன்னரே அறிவித்திருந்தது. எதிர்வரும் 5, 6, 23, 24 ஆம் திகதிகளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காவலர்கள், பொறியியலாளர்கள், பயணிகள் சேவை செயற்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் உட்பட 4000 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுப…

  23. விமானத்தில் இருந்து குதித்து மாணவி பலி விமானத்தில் இருந்து குதித்து உயிரிழந்த மாணவியின் உடலை பொலிஸார் தேடி வருகின்றனர். இங்கிலாந்து - லண்டனை சேர்ந்தவர் அலானா கட்லாண்ட் (வயது 19). இவர் அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அலானா கட்லாண்ட், தொழில்முறை பயிற்சிக்காக ஆபிரிக்கா - மடகாஸ்கருக்கு சென்றார். அங்கு வடமேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான அஞ்சாஜாவியில் தங்கியிருந்து அவர் ஆய்வுபணிகளை மேற்கொண்டு வந்தார். கடந்த மாதம் 25 ஆம் திகதி உயிரினங்கள் குறித்த ஆய்வுக்காக நாட்டின் வடக்கு பகுதிக்கு சென்றார். பின்னர் ஆய்வுகளை முடித்துக்கொண்டு சிறிய ரக பயணிகள் விமானத்தில் அஞ்சாஜாவிக்கு புறப்பட்டார். விமானம் …

  24. அமெரிக்காவும்-ரஷ்யாவும் கடந்த 1987ம் ஆண்டு செய்து கொண்ட ‘நடுத்தர ரக அணுசக்தி ஏவுகணை ஒப்பந்தத்தை (ஐஎன்எப்) நேற்று முறித்துக் கொண்டன. அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையே நிலவி வந்த பனிப்போரால், உலகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இருநாடுகளும் போட்டிப் போட்டு அணு ஆயுதங்களை தயாரித்தன. இது, உலகளவில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையே கடந்த 1987ம் ஆண்டு, ‘நடுத்தர ரக அணு ஏவுகணை தடை ஒப்பந்தம் (ஐஎன்எப்)’ ஏற்பட்டது. இதன்படி, 500 கி.மீ முதல் 5,500 கி.மீ தூரம் வரை செல்லும் அணு ஏவுகணைகளின் பயன்பாட்டை குறைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் அப்ேபாதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனும்…

    • 1 reply
    • 447 views
  25. ஆண்களின் துணையின்றி பயணிக்க சவுதிப்பெண்களுக்கு அனுமதி! In உலகம் August 2, 2019 9:29 am GMT 0 Comments 1036 by : Benitlas சவுதி அரேபியாவில் ஆண் பாதுகாவலரின் துணையின்றி பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணிப்பதற்கு முதன்முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 21 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஆண் பாதுகாவலரின் அனுமதியின்றி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் இன்று (வெள்ளிக்கிழமை) சவுதி அரேபிய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபிய ஆண்களைப் போன்றே பெண்களும் எவ்வித வேறுபாடுமின்றி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கு இதன் மூலம் அனுமதி கிடைத்துள்ளது. தங்களது திருமணம், குழந்தை பிறப்பு மற்று…

    • 2 replies
    • 549 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.