Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வெள்ளை தேசியவாதம், பிரிவினைவாதத்தை கொண்டாடும் பதிவுகளை நீக்க முடிவு… March 28, 2019 வெள்ளை தேசியவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை கொண்டாடும், ஆதரிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் பதிவுகளை முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்ரகிராம் ஆகிய இரண்டும் அடுத்தவாரம் முதல் தடை செய்யவுள்ளதாக முகப்புத்தக நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் பயங்கரவாத குழுக்கள் பகிரும் தகவல்களை அடையாளம் கண்டு தடை செய்யும் திறனை மேம்படுத்தவுள்ளதாகவும அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோன்று புண்படுத்தும் சொற்களை முகப்புத்தகத்தில் தேடினால் வலதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக பணி புரியும் தொண்டு நிறுவனங்களின் பக்கங்களுக்கு செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது http://…

  2. ஜனாதிபதி ட்ரம்பின் நீண்டகால கோரிக்கை நிறைவேறியது – எல்லை சுவர் அமைக்க நிதி. அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் புதிதாக சுவர் அமைப்பதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வழங்குவதற்கு பென்டகன் ஒப்புதலளித்துள்ளது. எல்லை சுவர் அமைப்பது தொடர்பாக தேர்தல் பிரசாரத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி வழங்கியிருந்தார். ஜனாதிபதி ட்ரம்பின் நீண்டகால கோரிக்கையாக அவரது உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் முதல் முறையாக இந்த நிதி வழங்கலுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது 91 கிலோமீற்றருக்கு எல்லை சுவர் அமைப்பதற்காக பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்டகனின் இந்த அறிவிப்பிற்கு ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். எல்ல…

  3. உலகின் சிறந்த ஆசிரியருக்கான விருதை வென்ற கென்யா ஆசிரியர் கென்யாவை சேர்ந்த விஞ்ஞான ஆசிரியர் ஒருவர் இந்த ஆண்டிற்கான சர்வதேச சிறந்த ஆசிரியர் விருதினை பெற்றுள்ளார். கென்யாவின் கஷ்டப்பிரதேச ஆசிரியரான பீட்டர் (Peter Tabichi) என்பவருக்கே இந்த விருது கிடைத்துள்ளது. அத்தோடு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களும் இவருக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் (சனிக்கிழமை) 5வது முறையாக இடம்பெற்றது தமது சம்பளத்தில் 80 வீதத்தை ஏழை மாணவர்களுக்கு செலவிடும் ஆசிரியர் இவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கென்யாவில் மட்டுமன்றி ஆபிரிக்க நாடுகளிலும் விஞ்ஞான துறையை வளர்ப்பதே தமது கனவென ஆசிரியர் பீட்டர் தெரிவித்துள்ளார். h…

  4. படத்தின் காப்புரிமை MANDEL NGAN Image caption டொனால்டு டிரம்ப் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அந்நாட்டின் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷ்யாவுடன் சேர்ந்து எவ்வித சதித்திட்டத்திலும் ஈடுபடவில்லை என்று அதுகுறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை அதிகாரி ராபர்ட் முல்லரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லர் விசாரணை அறிக்கையின் முக்கிய கூறுகளை அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்…

  5. ஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ள சதித்திட்டம் – 10 பேர் கைது.. March 25, 2019 ஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ள சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் கீழ் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலியடுத்து ஹெஸ்சி, ரைன்லேண்ட்-பாலாட்டினேட் ஆகிய மாகாணங்களில் தீவிரவாதிகளை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதே இவ்வாறு 10 பேர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கத்திகள், போதைப்பொருட்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஜேர்மனி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் http://globaltamilnews.net/2019…

  6. மாலியில் தாக்குதல்: கர்ப்பிணிகள் உட்பட 134 பேர் உயிரிழப்பு மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் உள்ள கிராம மக்கள் 134 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 55 பேர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கூரிய ஆயுதங்களுடன் புகுந்த தோகோன் பழங்குடியினத்தவர்களே நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இவ்வாறு கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலியில் உள்ள மொப்டி பிராந்தியத்தில் உள்ள Ogossagou கிராமத்தில் வாழும் புலானி இன மக்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளும் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், வேட்டைக்காரர்களான தோகோன் பழங்குடியினருக்கும், புலானி வ…

  7. "முற்றிலும் வீழ்ந்தது ஐ.எஸ்" - சிரிய ஜனநாயகப் படைகள் அறிவிப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைDELIL SOULEIMAN சிரியாவில் தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டதையடுத்து, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் அமைப்பின் காலம் முடிந்துவிட்டதாக அமெரிக்க ஆதரவுள்ள சிரிய ஜனநாயக படைகள் தெரிவித்துள்ளது…

  8. படத்தின் காப்புரிமை Getty Images Image caption பட்டுப்பாதை புதிய பட்டுப்பாதை திட்டம் எனும் சீனாவின் கனவுத் திட்டத்தில் இத்தாலியும் இணைந்திருக்கிறது. சீன அதிபர் ஜின்பிங்கின் ரோம் பயணத்தின் போது 2.8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 29 ஒப்பந்தத்தில் இத்தாலி மற்றும் சீன தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், அதே நேரம் இத்தாலியின் இந்த முடிவானது அதன் மேற்கத்திய கூட்டாளி நாடுகளை கவலையுற செய்துள்ளது. சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் இணையும் ம…

  9. சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்தது இத்தாலி சீனாவின் புதிய பட்டுப்பாதை வர்த்தகத்தில் இணைவது தொடர்பான ஒப்பந்தத்தில் இத்தாலி கையெழுத்திட்டது. சீனா-இத்தாலிக்கிடையில் 5 முதல் 7 பில்லியன் யூரோ வரையிலான 29 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் இத்தாலி பிரதமர் கியூசெப் கொன்டுடன் நேற்று (சனிக்கிழமை) விசேட சந்திப்பை மேற்கொண்டுள்ள நிலையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஆசியாவில் இருந்து ஐரோப்பா வரை தடையற்ற வர்த்தகத்திற்காக சீனா பட்டுப்பாதை வகுத்து வருகிறது. இந்நிலையில் ஜி 7 அணியை சேர்ந்த முதல் நாடாக இத்தாலி சீனாவின் இத்திட்டத்தில் இணைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் சீனாவ…

  10. பிரெக்ஸிற் விவகாரம்: கையெழுத்து சேகரிப்பு 4 மில்லியனை தாண்டியது பிரெக்ஸிற் விவகாரத்தை எதிர்த்து பிரித்தானிய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் பிரெக்ஸிற்றைத் திரும்ப பெறுமாறு கோரி மக்கள் கையெழுத்து சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த கையெழுத்து சேகரிப்பானது நேற்று (சனிக்கிழமை) மாலை வரையில் 4.7 மில்லியனை எட்டியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ‘ஒரு மனு தொடர்பாக 10 000 கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டால் அதற்கு நாடாளுமன்றம் பதில் அளிக்க வேண்டும். அதேபோல ஒரு இலட்சம் கையெழுத்துக்கள் பெறப்படுமாயின் அது தொடர்பில் நாடாளுமன்றில் திறந்த விவாதம் நடத்தப்பட வேண்டும்’ என பிரித்தானிய சட்டம் தெரிவிக்கிறது . இந்நிலையில் பிரெக்ஸிற் தொடர்பான கையெழுத்துக்கள் …

  11. டிரம்ப் அதிபராக ரஷ்யா உதவியதா - விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionடொனால்ட் டிரம்பு 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், ரஷ்யாவுக்கு இடையில் இருந்ததாக கூறப்படும் தொடர்பு பற்றி நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட…

  12. பிரெக்ஸிற்றின் விதி பிரித்தானியாவின் கைகளிலேயே உள்ளது: டொனால்ட் ரஸ்க் பிரெக்ஸிற்றின் விதி தற்போது பிரித்தானியாவின் கைகளிலேயே தங்கியுள்ளது என ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் ரஸ்க் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ரஸ்க் கூறியதாவது; ஏப்ரல் 12 ஆம் திகதி வரை நீண்ட கால தாமதம் அல்லது பிரெக்ஸிற்றை முழுமையாக ரத்து செய்வது உட்பட அனைத்துமே சாத்தியமானது. பிரெக்ஸிற்றை பிற்போடுவதற்கான பிரித்தானியாவின் கோரிக்கையை 27 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் ஆதரவு வழங்கியுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. பிரெக்ஸிற்றின் விதி பிரித்தானியாவின் வசமே உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தவரையில் நல்லதே நடக்குமென நாங்கள் எதிர்பார்க்கிறோம் ஆனால…

  13. அல்-நூர் மசூதி திறக்கப்பட்டது: கண்ணீருடன் மக்கள் பிரார்த்தனை துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் இடம்பெற்று ஒருவாரத்தின் பின்னர் நியூஸிலாந்து அல்-நூர் மசூதி மீண்டும் இன்று சனிக்கிழமை திறக்கப்படுகிறது. நியூஸிலாந்து கிறிஸ்ட்சர்ச் அல்-நூர் மசூதி கடந்த 15 ஆம் திகதி வழமைக்கு மாறான சம்பவத்தால் அமைதியிழந்திருந்தது. வெள்ளிக்கிழமை விசேட தொழுகைக்காக நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் அவுஸ்திரேலியா நபர் ஒருவர் வெறித்தனமாக மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 50 பேர் உயிரை இழந்ததோடு பலர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அல்-நூர் மசூதி மீண்டும் இன்று திறக்கப்படுகிறது. “தாக்குதலுக்கு பின்னரான முதல் பிரார்த்தனைகளுக்காக நாம் இன்று ஒன்றுகூடியு…

  14. சுத்தமான குடிநீரின்றி உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! சுத்தமான குடிநீரின்றி உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான நிதியம் யு.என்.எச்.சி.ஆர் இதனைத் தெரிவித்துள்ளது. உள்நாட்டு மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டினால் பெரும்பாலான குழந்தைகள் உயிரிழப்பதாக அந்த நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. 1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் உலக நீர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டதுடன், வருடாந்தம் மார்ச் 22ஆம் திகதி உலக நீர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சுகாதார சீர்கேடுகளால் 15 வயதிற்குட்பட்ட 85,700 குழந்தைகள் வருடாந்தம் உ…

  15. வடகொரியா-தென்கொரியா பிளவு ? – கூட்டுறவு அலுவலகத்திலிருந்து வடகொரியா வெளியேற்றம் வடகொரியாவும் தென்கொரியாவும் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரிய அதிகாரிகள் வெளியேறியுள்ளனர். வடகொரியாவின் உத்தரவை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) அந்நாட்டு அதிகாரிகள் வெளியேறுவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. எதிரி நாடுகளாக செயற்பட்டு வந்த தென்கொரியாவும் வடகொரியாவும் கடந்த ஆண்டு சமாதானமடைந்த நிலையில் இருநாட்டு அதிகாரிகளும் கலந்துரையாட வடகொரிய எல்லையில் கூட்டுறவு அலுவலகம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அத்தோடு இருநாட்டு தலைவர்களும் நேரடியாக பேசுவதற்கு தொலைபேசி சேவைகளும் ஏற்படுத்தப்பட்டது. எனினும் தற்போது குறித்த அலுவலகத்தில் இருந்து …

  16. கனடா புதியவர்களை வரவேற்கிறது: பிரதமர் ட்ரூடோ புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும், புதியவர்களை வரவேற்பதாக, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஒன்ராறியோ மிசிசாகாவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குடியேற்றவாசிகள் பிரச்சினை அரசியல் மயமாக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களுக்கு கனேடியர்கள் தொடர்ச்சியாக ஆதரவை வெளியிட்டு வருகின்றனர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 2017ஆம் ஆண்டு முதல் காடுகள், வெளிகள் ஊடாக தரை மார்க்கமாக 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கனடாவிற்குள் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கனடா-புதியவர்…

  17. எவரெஸ்ட் சிகரத்தில் தென்படும் சடலங்கள் - பனி உருகுவதால் வெளியே வருகின்றன 22 மார்ச் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFRANK BIENEWALD எவரெஸ்ட் மலையில் உள்ள பனிப்பாறைகள் உருகிவருவதால், அதில் ஏறி இறந்தவர்களின் பனியில் புதைந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதாக பயண ஏற்பாட்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். …

  18. படத்தின் காப்புரிமை Getty Images கிழக்கு சீனாவில் அமைந்துள்ள ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமையன்று, யான்செங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் உள்ளூர் நேரம் பகல் 2.50க்கு இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. உரப்பொருட்கள் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பை தொடர்ந்து அந்த இடத்தில…

  19. ஈராகில் படகு கவிழ்ந்ததில் 70 பேர் பலி ; 20 பேர் மாயம் ஈராக் – மொசூல் நகரிலுள்ள ரைக்ரிஸ் எனும் நதியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் அதில் பயணித்த 71 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அளவிற்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றமையே இந்த விபத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விபத்தில் மேலும் 20 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளின் தகவல் படி அந்த விபத்தில் பெண்களும் குழந்தைகளுமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 100 க்கும் மேற்பட்ட பயணிகள் குறித்த படகில் பயணித்ததாகவும், அவர்கள் நீந்திக் கரையேறுவதற்கு முடியாமையாலேயே உயிரிழக்க நேரிட்டதாகவும் மொச…

  20. படத்தின் காப்புரிமை JUNG HAWON தென்கொரியாவில் ஓட்டல் அறை எடுத்து தங்கிய விருந்தாளிகளுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஓட்டலில் ரகசிய கேமரா வைத்து ஒரு குழு ஆபாச காணொளியை தயாரித்து வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனால் 1600 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கைது கொரியாவில் செய்யப்பட்டுள்ளனர். ஓட்டல் அறையில் உள்ள தொலைக்காட்சிகளில், ஹேர் டிரையர் மாட்டுவதற்கு வைக்கப்படும் பிடிப்பச்சட்டம் ((Holder) மின்சாரம் மூலம் இயங்க தேவையான பொருள்களுக்கான மின் புதை குழி (Socket) ஆகியவற்றில் மினி கேமரா வைத்து அந்தக் குழு ஆபாச ப…

  21. இத்தாலியில் பாடசாலைப் பேருந்தைக் கடத்தி தீ வைப்பு 12 மாணவர்கள் பாதிப்பு… March 21, 2019 இத்தாலியில் மாணவர்களை ஏற்றிச்சென்ற பாடசாலைப் பேருந்தை சாரதியே கடத்திச் சென்று தீ வைத்ததில் 12 மாணவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இத்தாலியின் மிலன் நகரில் 51 மாணவர்களுடன் பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென மாணவர்களை நோக்கி கத்தியுள்ள சாரதி எல்லாவற்றுக்கும் இன்று முடிவு கட்ட விரும்புகிறேன் எனவும் மத்திய தரைக்கடல் பகுதியில் நடக்கும் மரணங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் கூ பேருந்தினுள் சிறிது பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து அவர்கள் விரைந்து செ…

  22. தானியங்கி துப்பாக்கிகளை, நியூசிலாந்து அரசு தடை செய்தது… March 21, 2019 கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து பகுதியளவிலான தானியங்கி துப்பாக்கிகளை நியூசிலாந்து அரசு தடை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள மசூதிகளில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த நபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதில் 50 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முக்கியக் குற்றவாளியான பிரெண்டன் டாரன்ட் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகின்ற நிலையில் அவர் பகுதியளவிலான தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியமை தெரியவந்துள்ள நிலையில் அத்தகைனய த…

  23. மொசாம்பிக்கில் இடாய் புயல் கோர தாண்டவம்: 150 பேர் உயிரிழப்பு; நூற்றுக் கணக்கானவர்கள் காணவில்லை Published : 17 Mar 2019 15:40 IST Updated : 17 Mar 2019 15:45 IST ஏபி ஹராரே (மொஸாம்பிக்) தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இடாய் புயல் தாக்குதலினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மொசாம்பிக், ஜிம்பாப்வே மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் இடாய் புயலின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர்; நூற்றுக்கணக்கானவர்கள் காணவில்லை மறறும் பின்தங்கிய கிராமப்புறப் பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அருகருகே உள்ள மூன்று தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1.5 மில்லியன் மக்கள் இட…

  24. கூகுள் நிறுவனத்துக்கு 1.49 பில்லியன் யூரோ அபராதம் March 21, 2019 அமெரிக்காவை சேர்ந்த இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளரினால் 1.49 பில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த விதிகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக நேற்றையதினம் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளார் தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனம் இணைய வர்த்தக சந்தையில் தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தி தனது போட்டியாளர்கள் தேடு விளம்பரங்கள் வெளியிடுவதை தடுத்துள்ளது எனவும் கூகுள் வர்த்தகரீதியாக மிகவும் முக்கிய விளம்பரதாரர்களுக்கு மட்டுமே தேடு விளம்பரங்கள் வெளியிட தனிப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் அனுமதி வழங்கியுள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் கூகுள…

  25. போர்க்குற்ற வழக்கு: பொஸ்னிய தலைவருக்கு 40 ஆண்டுகால சிறை உறுதியானது போர்க்குற்றம் புரிந்த வழக்கில் பொஸ்னிய அரசியல் தலைவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஐக்கிய நாடுகள் சபையின் நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர். குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று (புதன்கிழமை) வழங்கப்பட்டுள்ளது. செர்பிய இன மக்களின் போராளியாக ரடோவன் கராட்சிக் செயற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வந்தார். இந்த வழக்கில் கடந்த 2016ம் ஆண்டு கராட்சிக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்த நிலையில் அதனை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மீண்டும் உறுதி செய்தனர். ரஷ்யா உடைந்த பின் பொஸ்னியாவில் அரசியல் தலைவர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.