உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
"ட்ரம்பின் விருப்பத்திற்கிணங்கவே இராஜினாமா செய்தேன்" - ஜெஃப் செஸ்ஸன்ஸ் அமெரிக்காவின் அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த ஜெஃப் செஸ்ஸன்ஸ் டொனால்ட் ட்ரம்பின் வேண்டுகோளுக்கிணங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், அட்டார்னி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸின் சேவைக்கு நாங்கள் அவருக்கு நான்றி கூறுகின்றோம். அவரது எதிர்காலத்துக்கு எங்களின் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். இது குறித்து தனது இராஜினாமா கடிதத்தில் செஷன்ஸ், பதவி விலகல் முடிவு எனது சொந்த முடிவு அல்ல. உங்களின் (ட்ரம்ப்பின்) வேண்டுகோளினை ஏற்றே நான் எனது இராஜினாமா கடிதத்தை கையளிக்கின்றேன். மேலும் நாட்டின் அட்டார்னி ஜெனரலாக நான் பணியாற்றிய காலத்தில் சட்…
-
- 0 replies
- 534 views
-
-
பிள்ளைகளை உணவுக்காக விற்கும் கொடுமை – எங்கு என தெரியுமா? எதிர்கால திட்டங்களின்றி முடிவுகளை எடுத்து கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நாடு வெனிசுலா. அண்மைக்காலமாகவே அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளனன. பொருளாதார நெருக்கடி அதி தீவிரமடைந்த நிலையில் இங்குள்ள மக்கள் அயல் நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அத்துடன், குடும்ப உறுப்பினர்களின் பட்டினியை போக்க பெண்கள் அயல் நாடுகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமாத்திரமின்றி பட்டினியால் தமது பிள்ளைகள் வாடுவதை பொறுக்காமல் பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை விற்பனை செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பல நாட்கள் உணவ…
-
- 0 replies
- 649 views
-
-
கமரூனில் கடத்தப்பட்ட 77 மாணவர்கள் விடுதலை November 7, 2018 மத்திய ஆபிரிக்க நாடான கமரூனில் பாடசாலை ஒன்றிலிருந்து கடத்தப்பட்ட 77 மாணவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கமரூனில் பமிண்டா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் என 80க்கும் மேற்பட்டோர் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளால் கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது கடத்தப்பட்ட 77 பள்ளி மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் எனினும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் தொடர்ந்தும் தீவிரவாதிகளின் கட்டுப்பாடிலேயே இருப்பதாகவும் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடத்தலுக்க…
-
- 0 replies
- 480 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் இடைக்கால தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வென்றுள்ளது. இந்த இடைக்கால தேர்தல்களில், பிரதிநிதிகளின் முழு சபைக்கான 435 உறுப்பினர்களையும், 100 உறுப்பினர் கொண்ட செனட்டின் 33 உறுப்பினர்களையும் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தல் முடிவுகள் குறித்த ஐந்து முக்கியமான தகவல்களை காண்போம் …
-
- 0 replies
- 377 views
-
-
அமெரிக்க இடைத்தேர்தல் ; பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சி வசம் ; செனட் சபையை தக்க வைத்தது குடிரசுக் கட்சி அமெரிக்க இடைத் தேர்தலில் ஜனநாயக கட்சி, பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியுள்ளது என்றும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கம் வகிக்கும் குடிரசுக் கட்சி, செனட் சபையின் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க இடைத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இந்த வாக்கெடுப்பானது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதலாவது இரு வருட காலப் பதவிக் காலம் தொடர்பான மக்களின் கருத்தை அறியும் ஒரு வாக்கெடுப்பாக நோக்கப்படுகிறது. அத்துடன் இது அவரது எஞ்சியுள்ள இரு வருட பதவிக் காலம் தொடர்பில் தீர்மானிப்பதாகவும் உள்ள…
-
- 2 replies
- 697 views
-
-
அமெரிக்கா இடைத்தேர்தல் ஆர்வத்துடன் மக்கள் வாக்களிப்பு! அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அமெரிக்க நாடாளுமன்றத்தில் மேலவையான செனட் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஆக உள்ளது. கீழவையான பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 435 ஆகவும் இருக்கிறது. இதில் பதவிக்காலம் முடிவடையும் 435 பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் தொகுதிகளில் இன்று(செவ்வாய்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஜனாதிபதி தேர்தலுடன் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும். ஆனால் இந்த முறை ஜனாதிபதிதேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த தேர்தல் நடைபெறுவதால் இடைக்கால தேர்தல் என ஊடகங்கள் வர்ண…
-
- 1 reply
- 505 views
-
-
ஈராக்கில் 200 க்கும் அதிகமான மனிதப் புதைகுழிகளை விட்டுச்சென்ற ஐ.எஸ் ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான சடலங்களைக் கொண்ட 200 க்கும் மேற்பட்ட மனிதப்புதைகுழிகள் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்புதைகுழிகள் 12000 வரையான சடலங்களைக் கொண்டிருக்கக்கூடுமென ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் ஈராக்கின் சிலபகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ் குழு, அப்பகுதிகளில் மிகவும் கொடூரமான ஆட்சியை நடத்தியதுடன் தமக்கு எதிராக செயற்பட்ட அனைவரையும் கொன்று குவித்தது. பின்னர் அமெரிக்காவின் ஆதரவுடன் ஈராக் அரசு முன்னெடுத்த தாக்குதல்களினால் ஐ.எஸ் குழு தோற்கடிக்கப்பட்ட போதிலும்கூட இ…
-
- 0 replies
- 481 views
-
-
பிரித்தானியாவில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய இலங்கை தமிழ் குடும்பம்! இந்தக் காலத்தில் இப்படியுமா? Report us Vethu 9 hours ago பிரித்தானியாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பத்தின் செயற்பாடு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கையில் பிறந்து ஜேர்மனியில் வளர்ந்து பிரித்தானியாவில் வாழைப்பழம் செய்கையில் ஈடுபட்டு வரும் தமிழ் குடும்பம் ஒன்று பிரபல்யம் அடைந்துள்ளது. பிரித்தானியா கொவன்றி பிரதேசத்தில் Radford பகுதியில் வாழும் நபர் ஒருவர் பாரிய வாழைப்பழ செய்கையில் ஈடுபட்டுள்ளார். Radford சாலையில் வசிக்கும் சின்னையா செந்தில்செல்வன் தனது வீட்டின் பின்னாலுள்ள தோட்டத…
-
- 81 replies
- 7.2k views
-
-
உடலையாவது தம்மிடம் ஒப்படையுங்கள்- ஜமாலின் பிள்ளைகள் சவுதியிடம் கோரிக்கை மர்மமான முறையில் கொல்லப்பட்ட சவுதி நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்ஜியின் உடலை தம்மிடம் ஒப்படைக்குமாறு அவரது பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சவுதி அரசுக்கு எதிராக கட்டுரை எழுதி வந்த ஜமால் கசோக்ஜி, ஒரு மாதத்துக்கு முன் துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள சவுதி துாதரகத்திற்கு சென்ற போது மர்மமான முறையில் கொல்லப்பட்டார். முதலில் இவர் காணாமல் போனதாக செய்தி பரவியது. கொலை என்பதை மறுத்து வந்த சவுதி, பின் இதனை ஒத்துக் கொண்டது. கொல்லப்பட்ட கசோகியின் உடல் பற்றி எவ்வித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து அவரது மகன்களான சலாஹ் மற்றும் அப்துல்லா, முதல்முறையாக…
-
- 0 replies
- 362 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்காவில் நவம்பர் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் இடைக்கால தேர்தல்களில், தனது கட்சியான குடியரசு கட்சிக்கு ஆதரவு சேகரிக்கும் கடைசி கட்ட முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். இத்தேர்தல் டிரம்பின் ஆட்சிக்காலத்தின் மீதான வாக்கெடுப்பாக கருதப்படுகிறது. ''நாளைய தேர்தல் நம் சாதனைகள் அனைத்துக்கும் பதில் கூறுவதாக அமையும்'' என்று டிரம்ப் கடைசியாக நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார். இந்த இட…
-
- 0 replies
- 418 views
-
-
ஆப்கானிஸ்தானில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் புதுவித நோய் தொற்றினால் உயிரிழப்பு November 6, 2018 ஆப்கானிஸ்தானின் மருத்துவமனை ஒன்றில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் புதுவித நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தானின் பன்ஷிர் மாகாணத்தில் உள்ள அவசர சிகிச்சைக்கான மருத்துவமனையிலேயே இவ்வாறு புதிதாக பிறந்த 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ள நிலையில் மருத்துவர்களால் இந்தக் குழந்தைகளின் உயிரிழப்புக்களுக்கான காரணத்தினை கண்டறிய முடியவில்லை. உயிரிழந்த 12 குழந்தைகளிலும் ஒரே மாதிரியான நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அந்த நோய் குறித்து ஆய்வு மேற்கொள்ள தலைநகர் காபுலில் உள்ள ஆராய்ச்சிக்கூடத்துக்கு ஆய்வு மாதிரிகள் அனுப்பப்பட்…
-
- 0 replies
- 375 views
-
-
கமரூனில் பாடசாலை ஒன்றிலிருந்து மாணவர்கள் பலர் கடத்தல் November 5, 2018 ஆபிரிக்க நாடான கமரூனின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையிலிருந்து பெருமளவு மாணவர்கள் ஒட்டுமொத்தமாக கடத்தப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. வட மேற்கு பிராந்தியத்தின் தலைநகர் பேமெண்டாவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறைந்தது 79 மாணவர்கள் கடத்தப்பட்டதாக அரச மற்றும் ராணுவத் தகவல்களை மேற்கோள் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஆயுதம் தாங்கிய நபார்கள் இன்று திங்கட்கிழமை காலை அவர்களைக் கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கமரூனின் வட மேற்கு மற்றும் தென் மேற்கு பிராந்தியங்கள் அண்மைக்காலமாக பிரிவினைவாதக் கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் பேசும் இரண்டு பகுதிகளை த…
-
- 0 replies
- 458 views
-
-
பட்டினியால் உயிரிழந்த 7 வயது சிறுமி – கண்கலங்க வைக்கும் ஒளிப்படம்! ஏமனில் பட்டினியால் உயிரிழந்த 7 வயது சிறுமியின் ஒளிப்படம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. தென் மேற்கு ஆசிய நாடான ஏமனில் ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. இதில் ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுவதுடன், ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவளித்து வருகின்றது. சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஏமனில் உள் நாட்டு யுத்தம் நடைபெற்ற இரண்டு வருடங்களில் சுமார் 3 லட்சத்துக்கு அதிகமான குழந்த…
-
- 5 replies
- 709 views
-
-
எதிர்ப்புகளை கடந்து அமுலுக்கு வருகிறது ஈரான் மீதான பாரிய பொருளாதார தடை! வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வருகின்றது. எண்ணெய்வளம் நிறைந்த நாடான ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இடம்பெற்றுவரும் பனிப்போரின் உச்சகட்டமாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது. இத்தடை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரமே அறிவித்திருந்த நிலையில், அதற்கெதிராக ஈரானில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அவற்றை கடந்து இன்றுமுதல் குறித்த தடை அமுலுக்கு வரவுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக அமெரிக்கா கடந்த மே மாதம் அறிவித்தது.…
-
- 1 reply
- 491 views
-
-
கனடா ஆண்டுதோறும் புலம்பெயர்ந்தவர்களை ஏற்பதற்கான உள்நோக்கத்தை அறிவித்துள்ளது! கனேடிய அரசாங்கம் ஆண்டுதோறும் 350,000 புலம்பெயர்ந்தோரை ஒப்புக்கொள்வதற்கான அதன் உள் நோக்கங்களை அறிவித்துள்ளது. ஒருவேளை, பல்வேறு தேவையுடையவர்களுக்கு கனடாவின் மனிதாபிமான பிரதிபலிப்பை நிரூபிக்க தற்போது நேரம் ஏற்பட்டிருக்கலாம் என்று கனடாவின் ரைம்ஸ் கொலொனிஸ்ட் என்ற நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சில ஆயிரம் பேரை அழைத்து வருவதற்காக மெக்ஸிகோ பகுதிக்கு கப்பல் அல்லது ரயிலைக் அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கனடாவின் அயல் நாடுகளான அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகியன ஹொன்டுராஸ் பகுதியிலிருந்து வரும் இன்னல்களுக்கு உட்பட்ட மக்களையும், குழந்தைகளையும் நிராகரித்து வருகின்றன. …
-
- 0 replies
- 409 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை EPA பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று விடுதலையான கிறித்துவ பெண்ணின் கணவர், அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் தஞ்சம் கோரியுள்ளார். ஆசியா பிபி என்ற அந்த பெண்ணின் கணவர் ஆஷிக் மாசி, பாகிஸ்தானில் அவர்கள் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்தார். புதன்கிழமையன்று ஆசியா பிபி மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஆதரங்கள் வலுவானதாக இல்லை என நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. அவரின் விடுதலை எதிராக பல வன்…
-
- 0 replies
- 393 views
-
-
அமெரிக்க கூட்டுப் படை தாக்குதலில் சிரியாவில் 14 பொது மக்கள் பலி சிரியாவில் கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலில் 14 பொது மக்கள் உயிரிழந்துள்ளனர். சிரிய அசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை ஒடுக்குவதற்காக சிரிய அரசு ஆதரவு படையினர் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து அங்கு போராடிவரும் பல்வேறு புரட்சிப் படைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், கிழக்கு சிரியாவின் ஹஜின் பகுதியில் அமெரிக்கா கூட்டுப் படையினர் மேற்கெண்ட திடீர் வான்வெளித் தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந…
-
- 0 replies
- 341 views
-
-
CNN)Authorities have so far uncovered nothing to suggest that two Saudi Arabian sisters whose bodies were found bound on the banks of the Hudson Riverwere victims of foul play, according to a law enforcement official who spoke to CNN on the condition of anonymity. The case remains steeped in mystery more than a week after the bodies of 22-year-old Rotana Farea and 16-year-old Tala Farea of Fairfax, Virginia, were discovered in upper Manhattan with their feet and waists bound together by duct tape. Water was found in the sisters' lungs, the official said, leading investigators to believe they were alive when they entered the water. Police previously said the bo…
-
- 2 replies
- 761 views
-
-
பிரான்சில் வலுப்பெரும் தனிநாட்டு கோரிக்கை – இன்று வாக்கெடுப்பு! பிரான்சிலிருந்து பிரிந்து தனிநாடாகச் சுதந்திரப்பிரகடனம் செய்வதற்கான பொதுவாக்கெடுப்பு புதிய கலதோனியாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. பிரான்சின் கடல் கடந்த மாணமான புதிய கலதோனியாவில் 174.154 வாக்காளர்கள் உள்ளனர். அண்மையில் Harris Interactive நடாத்திய கருத்துக் கணிப்பில், 66 சதவீத மக்கள் புதிய கலதோனியா சுதந்திரநாடாவதை எதிர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மோசமான பெருளாதார நிலை, கடல் நடந்த மாகாணங்களில் காட்டப்படும் வேற்றுமை, எதிர்காலம் நோக்கிய அச்சம் என்பனவே புதிய கலதோனிய மக்கள் பிரான்சிலிருந்து பிரிந்து தன்னாட்சி பெற முயற்சிப்பதற்கான காரணம் என குறிப்பிடப்படுகின்றது. h…
-
- 0 replies
- 354 views
-
-
மீண்டும் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை : November 3, 2018 2015ம் ஆண்டு அணு ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் மீதான தடைகள் நீக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், மீண்டும் பொருளாதார தடைகளை கொண்டுவர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரானின் ஆற்றல், கப்பல்துறை மற்றும் வங்கித்துறைகளை இலக்காக கொண்டு, இதுவரை இல்லாத அளவிற்கு அந்நாட்டின் மீது விதிக்கப்படும் கடுமையான தடைகளாக இவை காணப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. எனினும், ஈரானிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் 8 நாடுகளை அமெரிக்கா தண்டிக்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஸ்யா, சீனா, பிரித்தானியா ,பிரான்ஸ் மற்றும் ஜெ…
-
- 1 reply
- 487 views
-
-
புளோரிடாவில் துப்பாக்கிச் சூடு.. இருவர் பலி.. அமெரிக்காவில் பரபரப்பு. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகிவிட்டனர். புளோரிடா மாகாணத்தில் யோகா கிளப் உள்ளது. இங்கு நேற்று மாலை மர்மநபர் ஒருவர் திடீரென நுழைந்தார்.அவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட தொடங்கினார். இந்த தாக்குதலில் இருவர் பலியாகிவிட்டனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் அந்த மர்மநபர் தன்னை தானே சுட்டுக் கொல்லவும் முயற்சித்தார். இதையடுத்து போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.Read more at: https://tamil.oneindia.com/news/washington/2-dead-after-gun-man-open-fire-florida-333400.html
-
- 0 replies
- 399 views
-
-
ஐரோப்பிய நாடுகளின் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் உக்கலடையாத கழிவுகளால் சூழல் மாசு அதிகரித்து வருகிறது. பெரும்பாலான கழிவுப் பொருட்கள் கடலில் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசுபடுவதுடன், கடல் வாழ் உயிரினங்களும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவு செய்தன. இதற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து நாடுகளும் புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளன. இதனை தொடர்ந்து ஸ்ட்ரோ, பலுான் உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். கடலில் பெருமளவிலான கழிவுகளைக் கொண்டிருக்கும் பொருட்களின் மீதான நேரடி தட…
-
- 0 replies
- 564 views
-
-
டேவ் லீ பிபிசி படத்தின் காப்புரிமை Reuters பாலியல் குற்றச்சாட்டுகளை கையாளும் கூகுள…
-
- 0 replies
- 417 views
-
-
இந்தோனேஷியாவில் கடலில் நொறுங்கிய பயணிகள் விமானம்.. 189 பேரின் நிலை என்ன? இந்தோனேஷியாவில் காணாமல் போன பயணிகள் விமானம் கடலில் விழுந்து நொறுங்கிய நிலையில் அதில் பயணம் செய்த 189 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. லயன்ஏர் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஜேடி 610 என்ற விமானம் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு 6.20 மணிக்கு புறப்பட்டது. இதையடுத்து அந்த விமானத்தின் தொடர்பு காலை 6.33 மணிக்கு துண்டிக்கப்பட்டது.அதாவது புறப்பட்ட 13 நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 200 பேர் பயணம் செய்யக் கூடிய இந்த விமானத்தில் 189 பேர் பயணம் செய்தனர். நடு வானில் மாயமான விமானம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த விமான…
-
- 14 replies
- 1.8k views
-
-
ஜேர்மனியில்... 100 பேரை கொன்ற, கொடூர தாதி! ஜேர்மனியில் நோயாளிகளுக்கு வைத்தியர்கள் பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட மருந்துகளை வழங்கி தாதியொருவர் 100 பேரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியை சேர்ந்த 41 வயதான ஆண் நர்சு நீல்ஸ் ஹேஜெல் என்ற இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றியுள்ளார். இந்த நிலையில் நோயாளிக்கு அளவுக்கு அதிகமான ஊசி மருந்து மற்றும் மாத்திரைகளைக் வழங்கி வந்த நிலையில் அதில் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 2005 ஆம் ஆண்டில் டெல்மென் ஹார்ஸ்ட் வைத்தியசாலையில் நோயாளிக்கு மருத்துவர் பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட ஊசி செலுத்தப்பட்ட போது அவர் கை…
-
- 3 replies
- 690 views
-