உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
சவூதி தூதுவரலாயத்தினுள் நுழைந்த சில நிமிடங்களிலேயே கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால் கடந்த 2 ஆம் திகதி, துருக்கியின் தலைநகர் இஸ்த்தான்புல்லில் அமைந்துள்ள சவூதி தூதுவராலயத்திற்கு தனது திருமணத்திற்கான ஆவணங்களைப் பெறும் பொருட்டு, அமெரிக்காவில் வதிபவரும், வோஷிங்க்டன் போஸ்ட்டில் பத்தி எழுத்தாளரும், சவூதியின் இளவரசர் சல்மானின் கடும்போக்கிற்கெதிராக குரல் கொடுத்துவருபவருமான ஜமால் கஷோகி அவர்கள் சென்றுள்ளார். கடந்த சில வருடங்களாக, சவூதியின் முடிக்குரிய இளவரசர் சல்மான், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செய்துவரும் கடும்போக்கு நடவடிக்கைகள் பற்றியும், மனிதவுரிமை மீறல்கள் பற்றியும் ஜமால் கஷோகி அவர்கள் பகிரங்கமாகக் கருத்துக் கூறி வந்த நிலையில், அவரைக் கொல்வதற்கு இளவரசரும் அவரது …
-
- 17 replies
- 2.3k views
-
-
ஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்து: 25 பேர் உயிரிழப்பு! ஆப்கானிஸ்தானில் அரச உயரதிகாரிகள் சென்ற இராணுவ உலங்குவானூர்தி விபத்திற்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தில் இன்று (புதன்கிழமை) குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தில் இருந்து அருகாமையில் உள்ள ஹேரட் மாகாணத்தை நோக்கி பரா மாகாண கவுன்சில் தலைவர் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட 25 பேர் குறித்த இராணுவ உலங்குவானூர்தியில் பயணித்திருந்தனர். இரு மாகாணங்களுக்கும் இடையிலான அனார் டாரா மாவட்டத்துக்கு உட்பட்ட மலைப்பகுதி வழியாக சென்றபோது (உள்ளூர் நேரப்படி) இன்று காலை சுமார் 9 மணியளவில் மோசமான வானிலையால் கட்டுப்பாட்டை இழந்த உல…
-
- 0 replies
- 425 views
-
-
தெய்வ நிந்தனை செய்த வழக்கொன்றில் கிறிஸ்தவ பெண்ணை விடுதலை செய்து பாகிஸ்தான் உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாடு முழுவதும் இதுவொரு முக்கியதுவம் வாய்ந்த வழக்காக பார்க்கப்பட்டது. அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட சச்சரவொன்றில் அசியா பீபி எனும் பெண் முகமது நபியை அவமனாப்படுத்திய வழக்கில் 2010 ஆம் ஆண்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், தான் அவ்வாறாக அவமானப்படுத்தவில்லை என்று கூறிவந்தார். எட்டு ஆண்டுகள் தனிமை சிறையிலும் இருந்தார். தெய்வ நிந்தனை சட்டங்கள் வலுவாக உள்ள பாகிஸ்தானில் இ…
-
- 0 replies
- 595 views
-
-
ரியூனிசியத் தலைநகரில், தற்கொலைக் குண்டுத்தாக்குதல். ரியூனிசியாவில் தலைநகரமான ரியூனிஸ் நகரில் சற்றுமுன் 30 வயது மதிக்கத்தக்க பெண் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களே இத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 9 பேர் இக்குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் இவர்களில் 8 பேர் காவல்துறை அதிகாரிகள் எனவும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் ரியூனிசியாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்றின்போது பல ஐரோப்பிய சுற்றுலாப் பய…
-
- 0 replies
- 423 views
-
-
2021 இற்குப் பின்னர் அரசியலில் இருந்து விலகுகிறார் அஞ்ஜெலா மெர்க்கல் ஜேர்மனியின் நிதியமைச்சரான அஞ்ஜெலா மெர்க்கல் 2021 ஆம் ஆண்டில் முடிவுக்கு வரும் தனது பதவிக்காலத்தின் பின்னர் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லையென தெரிவித்துள்ளார். சமீபத்திய பிராந்திய தேர்தலில் அவரது கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை தொடர்ந்தே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமது பதவிக் காலம் முடிந்த பிறகு, எந்த அரசியல் பதவியும் வகிக்க மாட்டேன் என பெர்லினில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார். டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் தலைவருக்கான தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 64 வயதான அஞ்ஜெலா மெர்க்கல் 2000ஆம் ஆண்…
-
- 1 reply
- 566 views
-
-
அமெரிக்கா : யூத வழிபாட்டுதலத்தில் துப்பாக்கி சூடு - பலர் உயிரிழப்பு Google அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு யூத வழிபாட்டு மையத்தில் நுழைந்த ஒரு துப்பாக்கிதாரி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ட்ரீ ஆஃப் லைஃப் என்ற அந்த வழிபாட்டு சபையில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணி அளவில் அவசர சேவை பிரிவுகள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் பல உயிரிழந்துள்ளதாக பிட்ஸ்பர்க் நகர போலிஸ் துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரி போலீசாரிடம் சரணடைந்துள்ளதாகவும், அவர் போலிஸ் காவலில் உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் நடந்த பகுதிக்கு அர…
-
- 1 reply
- 650 views
-
-
ஜமால் கசோக்கியின் மரணத்தின் மர்மம் தீரும் வரை சவூதிக்கு ஆயுதங்களை விற்க மாட்டோம் October 27, 2018 பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் மரணத்தின் மீதான மர்மம் தீரும் வரை சவூதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்க மாட்டோம் என ஜெர்மனியின் அதிபர் அன்ஜலா மோர்கல்; அறிவித்துள்ளார். வூதி அரேபியாவில் அந்நாட்டு கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருபவரும் வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளருமான 59 வயதான ஜமால் கசோக்கி துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் கொல்லப்பட்டார் என்ற தகவலை அண்மையில் சவூதி அரசு உறுதி செய்திருந்தது. இதனை அடுத்து, சவுதிக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் அழுத்தம் கொடுப்பதுடன் பத்திரிகையாளரின் மரணத்துக்கு முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகள…
-
- 0 replies
- 490 views
-
-
ஒபாமா – ஹிலாரி உள்ளிட்ட பலருக்கும் வெடிகுண்டு அனுப்பியவர் கைது October 27, 2018 அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி; ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டன் உட்பட பலருக்கும் வெடிகுண்டுகளை தபால் மூலம் அனுப்பிய நபரை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரின் அலுவலக முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிபொருள் பொதிகளை அமெரிக்க உளவுப்படையினர் கைப்பற்றியிருந்தனர். மேலும் ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஹொலிவூட் நடிகருக்கும் இதுபோன்ற பொதிகள் அனுப்பப்பட்டிருந்த நிலையில் தீவிரமாக தேடுதல் மேற்கொண்ட காவல்துறையினர் 56 வயதான சீசர் சாயோக் என்பவரை கைது செய்…
-
- 0 replies
- 350 views
-
-
மிகப்பெரும் உலக நாடுகளின் பிளாஸ்டிக் கழிவைக்கொட்டும் குப்பைத்தொட்டி மலேசியா! அமெரிக்கா, பிரித்தானியா, தென்கொரியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள், கப்பலின் மூலம் கொண்டுவரப்பட்டு மலேசியாவின் மிகப்பெரிய துறைமுகத்தைக் கொண்ட கோலாலம்பூரிற்கு சில கிலோமீற்றர் தூரத்திலுள்ள புலவ் இன்தாஹ் தீவில் கொட்டப்படுகின்றன. மலேசியாவிற்குச் சொந்தமான குறித்த தீவானது, 12 இற்கும் அதிகமான மீள்உற்பத்தி தொழிற்சாலைகளைக் கொண்டிருப்பினும் கொட்டப்படும் பிளாஸ்டிக் மழைமேடுகள் குறையாமலுள்ளன. புலவ் இன்தாஹ் என்பதன் பொருள் அழகான தீவாகும். எனினும், குறித்த பிளாஸ்திக் கழிவுகளினால் மிகவும் அருவருப்பான மாசுபடும் தீவாக காணப்படுவது மிகவும் வருத்தத்திற்குரிய விடயமாகும். கடந்த சில…
-
- 1 reply
- 588 views
-
-
முகப்புத்தக நிறுவனத்துக்கு இங்கிலாந்து தகவல் ஆணையகம் 5 லட்சம் பவுண்ஸ் அபராதம் October 26, 2018 1 Min Read வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் தொடர்பாக, முகப்புத்தக நிறுவனத்துக்கு இங்கிலாந்து தகவல் ஆணையகம் ; 5 லட்சம் பவுண்ஸ்களை அபராதம் விதித்துள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பயனாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக முகப்புத்தக நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அமெரிக்காவை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் தேர்தல் பிரசார நிறுவனம் முகப்புத்தக பயனாளர்களின் தகவல்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக முகப்புத்…
-
- 0 replies
- 348 views
-
-
பாலியல் குற்றச்சாட்டு – 13 சிரேஸ்ட மேலாளர்கள் உள்ளிட்ட 48 பேரை கூகுள் நிறுவனம் நீக்கியது.. October 26, 2018 1 Min Read கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 13 சிரேஸ்ட மேலாளர்கள் உள்பட 48 பேரை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சை அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஊழியர்களின் பொருத்தமற்ற நடத்தை குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நிறுவனம் கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை சந்தித்தபோதிலும், பணிநீக்கத்துக்கு பின்னர் கூகுள் நிறுவனத்தில் இருந்து 90 மில்லியன் டொலர்களை க…
-
- 0 replies
- 497 views
-
-
கருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட 2,400 ஆண்டுகள் பழைமையான கப்பல்! வரலாறு அறிந்த டைட்டானிக் கப்பலைத்தான் அனைவரும் மனதில் நினைவு வைத்திருக்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி வரலாற்றில் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பழங்காலத்தில் இடம்பெற்ற பல போர் சூழ்நிலை மற்றும் கடல்சார் விபத்துக்கள் காரணமாக இவ்வாறு பெறுமதி வாய்ந்த பல கப்பல்கள் மூழ்கி கடலுக்கடியில் மறைந்திருக்கின்றன. அந்தவகையில், பல்கேரியா நாட்டின் கடல் எல்லைக்குள் கருங்கடல் பகுதியில் சுமார் 2400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கிரேக்க நாட்டை சேர்ந்த வர்த்தகக் கப்பல் ஒன்று கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய மற்றும் பல்கேரிய விஞ்ஞானிகளின் குழு ஒன்று இந்த கப்பலை கண்டுபிடித்துள்ளது. இது பல்கேரியாவின…
-
- 0 replies
- 603 views
-
-
ரோஹிங்யா இனப்படுகொலை: ஐ.நா. பேச்சுவார்த்தையை தடுக்கும் முயற்சியில் சீனா தோல்வி! ரோஹிங்யா முஸ்லிம்களின் படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மாநாட்டில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை தடுக்கும் செயன்முறையில் சீனா தோல்விகண்டுள்ளது. மியன்மார் இராணுவ வீரர்களைக் கொண்டு ரோஹிங்ய முஸ்லிம்களைக் கொன்று குவித்த குற்றத்தை விசாரணை செய்வதற்காக 15 பேர் கொண்ட குழுவை அமைக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கலந்துரையாடலொன்று நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது. மியன்மாரின் விவகாரத்திலுள்ள உண்மைகளை வெளிக்கொண்டுவரும் நிகழ்ச்சித் திட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையினால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர் மர்சூக்கி தருஸ்மன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 342 views
-
-
ரொறன்ரோ நகரசபையின் மேயராக மீண்டும் ஜோன் ரோறி தேர்வு ரொறன்ரோ நகரசபையின் மேயராக மீண்டும் ஜோன் ரோறி தெரிவாகியுள்ளார். மாநகருக்கான புதிய ஆட்சிச் சபையினை தீர்மானிக்கும் வாக்குப் பதிவுகள் நேற்று (திங்கய்கிழமை) ஆரம்பமாகியது. இந்த தேர்தலுக்கான முன்னணி வேட்பாளர்களான ஜோன் ரோறி மற்றும் முன்னாள் நகர திட்டமிடல் அதிகாரி ஜெனிபர் கீஸ்மட் ஆகியோர் மேயர் தேர்தலில் போட்டியிட்டனர். இந்நிலையில் நேற்று இடம்பெற்ற வாக்கு பதிவில் ஜோன் ரோறி 63 விகித வாக்குகளையும், ஜெனிபர் கீஸ்மட் 23 சதவிகித வாக்குகளையும் பெற்றனர். அந்தவகையில் ரொறன்ரோ நகரசபையின் மேயராக 2 ஆவது தடவையாகவும் தொடர்ந்தும் மக்கள் ஆதரவுடன் ஜோன் ரோறி வெற்றி பெற்றுள்ளார். http://athavannews.com/category/கனடா…
-
- 0 replies
- 386 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…
-
- 0 replies
- 410 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Getty Images Image caption முதல் இந்திய-அமெரிக்கனான மிஸ் அமெரிக்க பட்டம் பெற்ற நினா டவுலரி தெலுகு மொழி பேசக்கூடியவர் கூற்று: அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மொழி தெலுங்கு. உண்மை: ஆம். சில வல்லுநர்களின் ஆய்வுப்படி இது உண்மைதான். தென் இந்திய மொழியான தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஏழு ஆண்டுகளில் 86 சதவீதம் உயர்ந்துள்ளது. எனினும், ஆங்கிலத்தைத் தவிர பரவலாக பேசப்படும் மொழிகளில் முதல் 20 இடங்களில் தெலுங்கு இடம் பெறவில்லை. …
-
- 0 replies
- 919 views
-
-
55 கிமீ நீளம், 4 லட்சம் டன் இரும்பு.. கடல் மீது கட்டப்பட்ட உலகின் நீளமான பாலம்.. சீனா சாதனை! உலகின் மிக நீளமான பாலம் சீனாவில் இந்த வாரம் திறக்கப்பட உள்ளது. சீனா தற்போது உலகின் மிக வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுமான துறை மிக முக்கியமான காரணமாக உருவெடுத்து இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக சீனாவில் உலகிலேயே நீளமான பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த பாலம் கடல் மீது கட்டப்பட்டு இருப்பதுதான் வியக்கத்தக்க விஷயம் ஆகும்.சீனாவின் தென்புறத்தில் உள்ள மாக்கா தீவையும், ஹாங்காங்கையும், சீனாவில் உள்ள சுஹாய் நகரத்தையும் இணையும் வகையில் இந்த பாலம் கட்டுப்பட்டு இருக்கிறது. உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிச…
-
- 5 replies
- 1.7k views
-
-
மருத்துவ வசதிகளுக்காக 11 குழந்தைகள் நவ்ரூ தீவு தடுப்பு முகாமிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மாற்றம் October 23, 2018 நவ்ரூ தீவில் உள்ள தடுப்பு காவல் முகாமிலிருந்து 11 குழந்தைகள் மருத்துவ வசதிகள் பெறுவதற்காக அவுஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடும் ஆயிரகணக்கான மக்கள் நரூ தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த தீவில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மோசம் அடைந்துள்ளதாக தொடர்ந்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள். குறிப்பாக முகாம்களில் உள்ள குழந்தைகள் மோசமான மனசிதைவுக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் நவ்ரூ தீவில் உள்ள தடுப்பு காவல் முகாமிலிருந்து 11 குழந்தைகள் மருத்துவ வசதிகள் பெறுவதற்காக அ…
-
- 0 replies
- 361 views
-
-
சவுதி இளவரசருடன் அமெரிக்க சிரேஷ்ட அதிகாரி சந்திப்பு! சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசன் முகம்மது பின் சல்மானை அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஸ்டீவன் மெனூசிகன் சவுதியின் தலைநகர் றியாதில் சந்தித்துள்ளார். சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலை விவகாரம் தொடர்பில் சவுதி அரேபியா மீது உலக நாடுகள் குற்றச்சாட்டுக்களை குவித்து கொண்டிருக்கும் தருணத்தில், நேற்று (திங்கட்கிழமை) அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்டீவன் மெனூசிகன், சவுதி இளவரசரைச் சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார். கடந்த இரண்டாம் திகதி துருக்கியின் இஸ்தான்புலிலுள்ள சவுதி தூதரகத்திற்கு சென்ற ஜமால் கஷோக்கி, அலுவலகத்திற்குள் வைத்து கொல்லப்பட்டதாக சவுதி அரேபியா மீது துருக்கி குற்றஞ் சுமத்தியிருந்தது…
-
- 0 replies
- 463 views
-
-
சவுதி அரேபியாவின் முதலீட்டு மாநாட்டை புறக்கணிப்போர் பட்டியல் வெளியானது! ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலையில் சவுதி அரேபியாவின் ஈடுபாட்டைத் தொடர்ந்து அங்கு இடம்பெறவுள்ள மிகப் பிரமாண்டமான முதலீட்டு மாநாட்டில் கலந்துகொள்வத்திலிருந்து வணிக உலகின் மிக சக்திவாய்ந்த முதலாளிகள் மற்றும் பல நாடுகளின் அரச அதிகாரிகள் விலகியுள்ளனர். ஆனாலும் ரியாத்தில் நடைபெறவுள்ள இம்மூன்று நாள் நிகழ்வானது நூற்றுக்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்களின் வருகை எதிர்பார்ப்புடன் முன்னோக்கி செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செவ்வாயன்று ஆரம்பிக்கவுள்ள இம்மாநாட்டைப் புறக்கணிப்போரின் பட்டியலை கீழே காணலாம். சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் (Christ…
-
- 0 replies
- 418 views
-
-
மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்க நாட்டிற்குள் நுழைய ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருக்கின்றனர். எல்லை நகரமான சுயோடாட் இடால்கோவிலிருந்து வடக்கு நோக்கி அந்த மக்கள் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். எங்கும் வறுமை, வன்முறை முன்னதாக இவர்களை மெக்சிகோ அதிகாரிகள் மெக்சிகோ, குவாட்டமாலா இடையே உள்ள எல்லை பாலம் அருகே தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் சிலர் சட்டத்திற்கு புறம்பாக படகுகள் மூலம் தப்பித்து தங்கள் ஊர்வலத்தை முன்னெடுத்தனர். படத்தின் காப்புரிமை Reuters இவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய அமெரிக்க நாடான ஹோண்டியுரஸ் நாட்டை சேர்ந்தவர்கள். ஏன் அவர்கள் அமெரிக்காவுக்குள் செல்ல முயல்கிறார்கள்? வறுமை, வன்முறை காரணமாக, அவற்ற…
-
- 0 replies
- 546 views
-
-
பெல்ஜியத்தில் இந்திய உணவை தேடிச் சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. 2 வது ஆசிய – ஐரோப்பிய நாடுகளின் மாநாடு பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் இடம்பெற்று வருகின்றது. இதில் கலந்து கொள்வதற்காக 3 நாள் விஜயமாக இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஐரோப்பிய நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் நேற்று (சனிக்கிழமை) தென் இந்திய பிரபல உணவகமான சரவண பவனில் இரவு உணவு உட்கொண்டார். அத்துடன், பெல்ஜியத்தின் இந்திய தூதர் காயத்திரி இசார் குமார் உட்பட இந்திய பிரதிநிதிகளை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்தித்தார். இதுகுறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது டிவிட்டர் பதிவில், “பிரஸ்ஸல்ஸில், பெல்ஜியத்தின் இந்திய தூதர் காயத்திரி இசார் குமார் உட்பட இந்திய பிரதிநிதிகளுட…
-
- 0 replies
- 488 views
-
-
பிரெக்சிற் புதிய வாக்கெடுப்பு: லண்டனில் வரலாறு காணாத பேரணி! பிரெக்சிற் தொடர்பான புதிய வாக்கெடுப்பை வலியுறுத்தி லண்டனில் மிகவும் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. லண்டனிலுள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. பிரித்தானிய வரலாற்றில் பதியப்படும் அளவிற்கு சுமார் 700,000இற்கும் அதிகமான மக்கள் அலையென திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. லண்டன் மேயர் சாதிக்கான் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்து வைத்து உரையாற்றியதையடுத்து, முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றனர். பொ…
-
- 0 replies
- 543 views
-
-
ரஷ்யாவுடனான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேற்றம்! பனிப்போர் காலத்தில் ரஷ்யாவுடன் அமெரிக்கா மேற்கொண்ட அணுவாயு வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக்கொள்ளப் போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுடனான சந்திப்பில் நேற்று (சனிக்கிழமை) கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 1987ஆம் ஆண்டு இடைப்பட்ட தூரத்திற்குள் செயற்படும் அணுவாயுதங்களுக்கான வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா-ரஷ்யா கைச்சாத்திட்டதற்கு இணங்க, ரஷ்யா முறையாக செயற்படவில்லையென ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார். குறித்த ஒப்பந்தமானது, 500 தொடக்கம் 5,500 வரையான கிலோ மீற்றர் பரப்பிற்குள் செயற்படும் அணுவாயுதங்க…
-
- 0 replies
- 388 views
-
-
ஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 13 பேர் பலி ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் பல்வேறு பகுதிகளில் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 13-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். #Afghanistanpoll காபுல்: 249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. 2500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் மோதும் இந்த தேர்தலில் சுமார் 89 லட்சம் வாக்களிக்கவுள்ளனர். சுமார் ஐயாயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என அறிவுத்துள்ள…
-
- 0 replies
- 269 views
-