உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26608 topics in this forum
-
உக்ரேன் போர்; சவுதி அரேபியாவில் அமெரிக்கா, ரஷ்யா அதிகாரிகள் சந்திப்பு!உக்ரேன் – மொஸ்கோவுக்கு இடையிலான சுமார் மூன்றாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் எதிர்வரும் நாட்களில் சவுதி அரேபியாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் சனிக்கிழமை (15) தெரிவித்தனர். அதன்படி, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் மற்றும் வெள்ளை மாளிகையின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோர் சவுதி அரேபியாவுக்கு எதிர்வரும் நாட்களில் பயணம் மேற்கொள்வார்கள் என்று அமெரிக்க பிரதிநிதி மைக்கேல் மெக்கால் ரொய்ட்டர்ஸ் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளார். என…
-
- 0 replies
- 184 views
-
-
தெற்கு ஆஸ்திரியாவில் கத்துக் குத்து தாக்குதல்.தெற்கு ஆஸ்திரியாவில் சனிக்கிழமையன்று (15) ஒரு சிரிய புகலிடக் கோரிக்கையாளர் மேற்கொண்ட கத்திக் குத்துத் தாக்குதலில் 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.இந்த சம்பத்தில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர். பாதிக்கப்பட்டவர்களில் இருவர் பலத்த காயம் அடைந்தனர், மற்ற இருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக வில்லாச் நகரில் உள்ள பொலிஸார் அந்நாட்டின் தேசிய செய்தித்தாளான க்ளீன் ஜெய்டுங்கிடம் உறுதிபடுத்தியுள்ளனர். அந் நாட்டு நேரப்படி சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நடந்த இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து 23 வயதுடைய சிரிய இளைஞனை பொலிசார் விரைவாகக் கைது செய்தனர். இந்த நகரம் இத்தாலியுடனான ஆஸ்திரியாவின் எல்லையிலிருந்து 2…
-
- 1 reply
- 228 views
-
-
உலகெங்கும் அதிகளவில் பயன்படுத்தப்படும் கருத்தடை மாத்திரைகள் மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக டென்மார்க் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. டென்மார்க் நாட்டில் 1996ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், 15-49 வயதுடைய 20 லட்சத்துக்கும் அதிகமாக பெண்களின் மருத்துவ அறிக்கையை ஆய்வுக்குட்படுத்தி ஆய்வறிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் பெண்கள் கருத்தடை மாத்திரைகள் அடிக்கடி உட்கொள்வதால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்திரைகள், உடலுக்குள் பொறுத்திக்கொள்ளும் பொருட்கள், ஊசிகள் உள்ளிட்ட கருத்தடை நடைமுறைகளை அடிக்கடி பயன்படுத்துவதால் உடல் ரீ…
-
-
- 11 replies
- 454 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,EPA கட்டுரை தகவல் எழுதியவர், டியர்பெய்ல் ஜோர்டன் பதவி, செய்தியாளர், பிபிசி நியூஸ் 15 பிப்ரவரி 2025 அமெரிக்கா இனிமேலும் ஐரோப்பாவின் உதவிக்கு வராது என கருத்து தெரிவித்துள்ள யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிராக பாதுகாத்துக் கொள்ள "ஐரோப்பாவின் ராணுவம்" ஒன்றை உருவாக்க அழைப்பு விடுத்தார். மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், "யுக்ரேன் தங்கள் முதுகுக்கு பின்னால் தங்களது பங்களிப்பு இல்லாமல் செய்யப்படும் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்ளாது " என்றார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் அமைதி பேச்சுவார்த்தையைத் தொடங்க ஒப்புக்கொண்ட பிறகு ஸெலென்ஸ்கி இதைக் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை நிகழ்த்திய உரையில் ஐரோப்ப…
-
-
- 18 replies
- 869 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, அட்ரியன் சிமன்காஸ் கயாக்கிங் செய்து கொண்டிருந்த போது, அவரை ஒரு ஹம்பேக் திமிங்கிலம் (humpback whale) விழுங்கியது. கட்டுரை தகவல் எழுதியவர், ஆண்ட்ரியா டியாஸ் & அயெலன் ஒலிவா பதவி, 3 மணி நேரங்களுக்கு முன்னர் கயாக்கிங் (கயாக் என்பது துடுப்பு போட்டு இயக்கக் கூடிய ஒரு சிறு படகு) சென்ற அட்ரியன் சிமன்காஸை ஒரு திமிங்கிலம் விழுங்கியபோது, அவர் முதலில் கவனித்தது வழுவழுப்பான ஒரு உணர்வைத் தான். "நான் ஏதோ ஒன்றின் வாய்க்குள் இருப்பதை உணர்ந்தேன், ஒருவேளை அது என்னை சாப்பிட்டிருக்கலாம், அது ஓர்கா (திமிங்கிலம்) அல்லது கடல் அரக்கனாக இருக்கலாம் என நினைத்தேன் " என்று 23 வயதான அட்ரியன் பிபிசி முண்டோவிடம் கூறினார். …
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
தொழிலதிபர் எலான் மஸ்க்கின் (Elon Musk) பரிந்துரையின்படி 10,000 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அதிரடி உத்தரவைப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றுதான் ஃபெடரல் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவு. அமெரிக்க அரசாங்கத் துறைகளில் மொத்தம் 2 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். ஜனாதிபதி ட்ரம்ப் இந்நிலையில், அவர்களில் பலர் செயல்திறனற்றவர்கள் என்றும் தனக்கு எதிராகச் செயல்படுகின்றனர் என்றும் கூறி, ஆட்குறைப்பு செய்யப் போவதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எப்-35 போர் விமானம் என்பது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமாகும் 15 பிப்ரவரி 2025, 01:22 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் நேற்று வெள்ளை மாளிகையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது வர்த்தகம், பாதுகாப்பு, குடியேற்றம் போன்ற விஷயங்கள் குறித்து பேசிய அவர்கள் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டனர். பாதுகாப்பு தொடர்பாக ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார் டொனால்ட் டிரம்ப், "இந்த ஆண்டு, இந்தியாவிற்கு ராணுவ உபகரணங்களின் விற்பனை பில்லியன் கணக்கான டாலர்கள் அதிகரிக்கும். …
-
- 0 replies
- 208 views
- 1 follower
-
-
பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் அமைப்பு ! பணயக் கைதிகளை பரிமாறிக்கொள்வதற்காக இன்று சனிக்கிழமை விடுவிக்க இருக்கும் மூன்று இஸ்ரேலிய கைதிகளின் பெயர்களை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. காசா போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறியதாக கூறி பணயக்கைதிகளை விடுவிப்பதை ஒத்திவைப்பதாக ஹமாஸ் அமைப்பு முன்னதாக கூறியிருந்தது. ஆனால் கெயிரோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அதனை கடைபிடிப்பதற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டது. நேற்று வெள்ளிக்கிழமை வெளியான அறிக்கையின்படி இஸ்ரேலிய ரஸ்யரான தாஷா ட்ருபுனோ, இஸ்ரேலிய அமெரிக்கரான சாகுள் ஜெகல்ஜேன் மற்றும் இஸ்ரேலிய ஆர்ஜன்டினரான யார் ஹான் ஆகிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டு இருந்தனர் . காசாவின் எதிர்காலம் குறித்து அரபு நாடுகளின் புதிய முன்மொழிவுகளை வரவேற்பதாக…
-
- 2 replies
- 282 views
- 1 follower
-
-
ரஷ்ய ஜனாதிபதி புடினை நிபந்தனைகளுடன் சந்திக்கத் தயார் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி புடினைத்(Vladimir Putin) தவிர மற்ற ரஷ்ய(Russia)அதிகாரிகளைச் சந்திக்க திட்டமிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஜெலென்ஸ்கியின் திட்டம் இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், "நான் ரஷ்யர்களைச் சந்திக்க மாட்டேன், அது எனது திட்டத்தில் இல்லை. நான் ஒரே ஒரு ரஷ்யரை மட்டுமே-அதாவது புடினை மட்டுமே சந்திப்பேன். அதுவும் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பாவுடன் இரு நாடுகளுக்கான பொதுவான திட்டம் உருவான பிறகே, புடினுடன் அமர்ந்து போரை முடிவுக்கு கொண்டு வருவோம். அ…
-
- 4 replies
- 460 views
-
-
14 FEB, 2025 | 04:24 PM உடல் நலப் பாதிப்பு காரணமாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது. நெஞ்சுசளி பாதிப்பினால் பரிசுத்த பாப்பரசர் பாதிக்கப்பட்டுள்ளார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக சுவாசிப்பதில் பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்த 88 வயது பாப்பரசர் தனது உரைகளை வாசிக்கும் பொறுப்பை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தார். இன்று காலை ஆராதனைக்கு பின்னர் பரிசுத்த பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/206696
-
- 19 replies
- 745 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 14 FEB, 2025 | 03:11 PM ரஸ்ய உக்ரைன் யுத்தம் குறித்து உக்ரைன் இல்லாமல் அமெரிக்காவும் ரஸ்யாவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளதை தொடர்ந்து உக்ரைனிற்கு அமெரிக்கா துரோகமிழைக்கின்றதா என்ற கேள்வி சர்வதேச அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. எனினும் இதனை மறுத்துள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் அமெரிக்கா உக்ரைனிற்கு துரோகமிழைக்கவில்லை என தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஸ்ய ஜனாதிபதியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். மில்லியன் கணக்கான உயிர்களை காப்பாற்றுவதற்காக நான் ரஸ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்…
-
-
- 4 replies
- 398 views
- 1 follower
-
-
14 FEB, 2025 | 02:31 PM பெருமளவு வெடிபொருட்கள் நிரம்பிய ஆளில்லா விமானமொன்று செர்னோபில் அணுஉலை மீது மோதியுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். செர்னோபில் அணுஉலையின் அழிக்கப்பட்ட நான்காவது உலையை பாதுகாக்கும் பாதுகாப்பு கவசத்தை வெடிமருந்துகள் நிரம்பிய ஆளில்லா விமானம் தாக்கியது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆளில்லா விமானம் தாக்குவதை காண்பிக்கும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். சிதைவுகளையும் வீடியோவில் காணமுடிகின்றது. https://www.virakesari.lk/article/206674
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை நிச்சயம் மீட்போம்! -நேட்டோவிடம் உக்ரேன் உறுதி. ”ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை தாம் நிச்சயம் மீட்போம் ”என நேட்டோ இராணுவக் கூட்டமைப்பிடம் உக்ரேன் உறுதியளித்துள்ளது. ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளை உக்ரேனால் இனி திரும்பப் பெற முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அண்மையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்து. இந்நிலையில் குறித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் உக்ரேன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ருஸ்தம் உமெரொவ், நோட்டோ தலைவர் மார் க் ரூட்டை, நேட்டோ தலைமையகத்தில் அண்மையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது உக்ரேனுக்கு நேட்டோ அமைப்பு தொடர்ந்து …
-
- 0 replies
- 288 views
-
-
பட மூலாதாரம்,CROWN OFFICE படக்குறிப்பு, 1984ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மேரி மெக்லாஃப் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் கட்டுரை தகவல் எழுதியவர், பால் ஓ'ஹரே பதவி, பிபிசி ஸ்காட்லாந்து நியூஸ் 52 நிமிடங்களுக்கு முன்னர் மேரி மெக்லாஃப்லின் குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிகரெட் துண்டு, 30 ஆண்டுகளுக்கு முன்னர், அவரது கழுத்தை நெரித்துக் கொன்ற கொலையாளியை அடையாளம் காண்பதற்கான முதல் தடயத்தை வழங்கியது. அதன் பின்னர், 11 குழந்தைகளின் தாயான மேரியைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட ஆடையில் உள்ள கயிற்றின் முடிச்சில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மரபணு விவரமும் கண்டுபிடிக்கப்பட்டது. முடிவுக்கு வராத இந்த கொலை வழக்கில்…
-
- 0 replies
- 326 views
- 1 follower
-
-
உக்ரைன் யுத்தம் குறித்து இன்று முக்கிய பேச்சுவார்த்தை - டிரம்ப் 14 FEB, 2025 | 12:22 PM உக்ரைன்யுத்தத்தினை எவ்வாறு முடிவிற்கு கொண்டுவருவது என்பது குறித்து ஜேர்மனியின் மியுனிச்சில் இடம்பெறும்மாநாட்டில் அமெரிக்க ரஸ்ய உக்ரைன் பிரதிநிதிகள் ஆராயவுள்ளனர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் பிரதிநிதிகளும் எங்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வார்கள்,உக்ரைனையும் அழைத்துள்ளோம் ஆனால் அந்த நாட்டின் சார்பில் யார் கலந்துகொள்வார்கள் என்பது தெரியவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் மூன்று நாடுகளில் இருந்தும் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 195 views
-
-
மோடி – டிரம்ப் சந்திப்பு: முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி இடையேயான சந்திப்பின் போது முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் வருகை மிகவும் சிறப்பானது என தெரிவித்த ட்ரம்ப் இந்தியா, மோடியுடனான தனது நல்லுறவைப் பற்றியும் எடுத்துரைத்தார். இவேளையில் அமெரிக்கா மீது இந்தியா அதிக வரி விதிப்பதாக கவலை வெளியிட்ட ட்ரம்ப் இந்தியா விதிக்கும் வரியையே அமெரிக்காவும் விதிப்பதாக தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு நல்லுறவு மட்டுமல்லாது இராணுவம், வர்த்தக…
-
-
- 4 replies
- 437 views
- 1 follower
-
-
ஜெர்மனியின் முனீச் நகரில் இடம்பெற்ற போராட்டத்தில் கார் ஒன்று பாய்ந்தமையால் 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். முனீச் நகரில் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், உலகத் தலைவர்கள் பலர் அங்கு பங்குபற்றியுள்ளனர். குறித்த நகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு இந்நிலையில், போராட்டக் களத்திற்குள் வேகமாக உட்புகுந்த கார், மோதியதில் 28 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, காரினை செலுத்திய 24 வயதுடைய இளைஞன் ஒருவர் ஜெர்மனி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, சர்வதேச மாநாடு நடக்கும் இடத்தி…
-
- 1 reply
- 787 views
-
-
பட மூலாதாரம்,@NARENDRAMODI படக்குறிப்பு, ஜனவரி 27 அன்று நடந்த தொலைபேசி உரையாடலில் மோதியை அமெரிக்காவுக்கு அழைத்தார் டிரம்ப் 12 பிப்ரவரி 2025, 07:58 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அவரை வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் ஜோர்டான் அரசர் அப்துல்லா ஆகியோர் சந்தித்துள்ளனர். இப்போது, டிரம்பை சந்திக்கவுள்ள நான்காவது சர்வதேச தலைவராகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி. அதிபரானவுடன் டிரம்ப் பல நாடுகளின் பொருட்களை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்ய கூடுதல் வரிகளை அறிவித்தார். இந்தியா மீது இதுவரை தனியாக எந்தவொரு வரியும் வி…
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
ட்ரம்பின் கட்டண அச்சுறுத்தல்; அமெரிக்காவுக்கான பயணத்தை தவிர்க்கும் கனேடியர்கள்! அமெரிக்க கட்டண அச்சுறுத்தல்களால் தேசபக்தியின் எழுச்சிக்கு மத்தியில் அதிகமான கனேடியர்கள் தங்கள் அமெரிக்க பயணங்களை இரத்து செய்துவிட்டு வேறு நாடுகளுக்கு விடுமுறைக்கு செல்வதாக கனடாவின் பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனேடிய இறக்குமதிகள் மீது 25 சதவீத சுங்க வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளார். அதே போல் கனடாவை 51 ஆவது மாநிலமாக உள்வாங்குவதற்கு “பொருளாதார சக்தியை” பயன்படுத்துவது குறித்தும் யோசனை வெளியிட்டுள்ளார். திங்களன்று (10), கனடா மற்றும் பிற இடங்களில் இருந்து அனைத்து எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதிகள் மீது 25 சதவீத வரிகளை விதிக்கும…
-
- 0 replies
- 143 views
-
-
14 ஆண்டுகளுக்குப் பின்னர் சிங்கப்பூருக்குக் கிடைத்த அங்கீகாரம்! இலஞ்ச ஊழல் குறைந்த உலக நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலக அளவில் லஞ்ச ஊழல் விவகாரங்களைக் கண்காணிக்கும் ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுள்ள கடந்த ஆண்டுக்கான லஞ்ச ஊழல் கண்ணோட்டக் குறியீட்டு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய பசிபிக் வட்டாரத்தில் லஞ்ச ஊழல் குறைந்த நாடாக இருந்த நியூசிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முன்னேறியுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் உலக அளவில் 180 நாடுகளில் மூன்றாம் இடத்துக்கு சிங்கப்பூர் வந்திருப்பது, 2020…
-
- 0 replies
- 169 views
-
-
2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு இன்று ஆரம்பம் 2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு இன்று (11) ஆரம்பமாக உள்ளது. இன்று முதல் 13 ஆம் திகதி வரை டுபாயில் உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியனின் அழைப்பையேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று (10) ஐக்கிய அரபு இராச்சியத்திற்குப் புறப்படுச் சென்றார். இந்த சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க டுபாயில் நடைபெறும் 2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டிலும் உரை நிகழ்த்தவுள்ளார். எதிர்கால நோக்கிலான பிரவேசங்கள், தொழில்நுட்ப புத்தாக்கம் உள்ளிட்ட விடயங்கள் குறித்த…
-
- 1 reply
- 246 views
- 1 follower
-
-
அரிசோனா மாநிலத்தில் தனியார் விமானம் விபத்து ஒருவர் உயிரிழப்பு. இரு சிறிய தனியார் விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழ்ந்து இருவர் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர். விபத்தில் சிக்கிய ஒரு விமானம் பிரபல் பாடகர் Mötley Crüe பாடகர் Vince Neil க்கு சொந்தமானது. இறந்த காயமடைந்தவர்களின் விபரங்கள் இன்னமும் வெளியிடவில்லை. மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள சுட்டியை அழுத்துங்கள். https://www.yahoo.com/news/arizona-plane-crash-ntsb-investigating-121701206.html
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
‘மெக்ஸிகோ வளைகுடா’ என்பதை ‘அமெரிக்க வளைகுடா’ என்று பெயர் மாற்றம்! பிப்ரவரி 9 ஆம் தேதியை “அமெரிக்க வளைகுடா தினம்” என்று ஒரு நிர்வாக உத்தரவு மூலம் நியமித்துள்ளார்.மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மெக்சிகோ வளைகுடாவை “அமெரிக்க வளைகுடா” என்று அதிகாரப்பூர்வமாக மறுபெயரிட்டுள்ளார். அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது வளைகுடாவின் பெயரை மாற்றுமாறு டிரம்ப் முதலில் பரிந்துரைத்தார், புதிய பெயர் அமெரிக்காவின் வரலாற்று மற்றும் பிராந்திய மரபை சிறப்பாக பிரதிபலிக்கிறது என்றும் . “மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று மறுபெயரிடுவோம் – அது ஒரு பெரிய வளையத்தைக் கொண்டுள்ளது என்றும், மேலும் அது ஒரு பரந்த பகுதியை உள்ளடக்கியது” என்று …
-
-
- 14 replies
- 710 views
- 1 follower
-
-
OpenAIஐ வாங்க எலோன் மஸ்க் $97 பில்லியன் சலுகை! எலோன் மஸ்க் தலைமையிலான முதலீட்டாளர்களின் கூட்டமைப்பு, ChatGPTயின் தயாரிப்பாளரான OpenAIஐக் கைப்பற்றும் முயற்சியில் 97.4 பில்லியன் டொலர் சலுகையை வழங்கியது. பில்லியனரின் சட்டத்தரணி மார்க் டோபரோஃப், தொழில்நுட்ப நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களுக்கான ஏலத்தை திங்களன்று (10) அதன் குழுவிடம் சமர்ப்பித்ததை உறுதிப்படுத்தினார். உலகின் மிகப் பெரிய செல்வந்தரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வலது கையுமான மஸ்க் மற்றும் OpenAI தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் ஆகியோருக்கு இடையிலான செயற்கை நுண்ணறிவு குறித்த போட்டியை இந்த நடவடிக்கை அதிகரித்தது. எனினும், ஆல்ட்மேன் இந்த வாய்ப்பை நிராகரித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். …
-
- 0 replies
- 122 views
-
-
குவாத்தமாலாவில் 115 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து; 55 பேர் உயிரிழப்பு! குவாத்தமாலா (Guatemala) தலைநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. திங்கட்கிழமை (10) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் குறைந்தது 55 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவ இடத்தில் 53 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு இருவர் உயிரிழந்து விட்டதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் பஸ் சாலையில் இருந்து விலகி பாலத்தின் கீழே உள்ள செங்குத்தான 115 அடி (35 மீட்டர்) பள்ளத்…
-
- 0 replies
- 131 views
-