Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 31 வயதிலேயே ஆஸ்திரிய நாட்டின் தலைவராகும் செபாஸ்டின் குர்ஸ் யார்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஆஸ்திரிய நாட்டின் வேந்தராகவுள்ள செபாஸ்டின் குர்ஸ் ஆஸ்திரியாவின் கன்சர்வேட்டிவ் மக்கள் கட்சி சமீபத்தில் நடந்து முடிந்த நாட்டின் பொதுத் தேர்தலில் அதிக சதவீத வாக்குகளையும், இடங்களையும் வென்றுள்ளது. இதையடுத்து அந்தக் கட்சியின் தல…

  2. கனடாவில் கருணைக்கொலை கனடாவில் கடந்த ஓராண்டில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கனேடியர்கள் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை தெரிவிக்கின்றது. கருணைக்கொலை செய்யப்பட்ட அனைவரும் வைத்தியர்களின் உதவியுடன் சட்டபூர்வமாக தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அவ் அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது. குறித்த விடயம் தொடர்பாக கனேடிய சுகாதார நிறுவனம் தெரிவிக்கையில், பெரும்பாலும் புற்றுநோயால் அவதிப்பட்டு வருபவர்களே இவ்வாறு உயிரிழப்பதாகவும், வைத்தியர்களின் உதவியுடன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நடவடிக்கை கடந்த 2016ஆம் ஆண்டு கனடாவில் சட்டபூர்வமாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/25847

  3. `முதல் குண்டு விழும்வரை` ராஜதந்திரம் தொடரும் : டில்லர்சன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionரெக்ஸ் டில்லர்சன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியாவுடனான மோதலை, ராஜதந்திர முறைப்படியே தீர்க்க விரும்புவதாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். விளம்பரம் `வடகொரியா முதல் கு…

  4. பெங்களூரில் 115 ஆண்டுகளுக்குப் பின் கனமழை – 6 பேர் பலி இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூர் நகரில் கடந்த 115 ஆண்டுகளுக்குப் பின்னர் கனமழை பெய்துள்ளதாக அந்த மாநிலத்தின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிகரகாரம்1,615.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேவேளை வடகிழக்கு பருவமழையின் போது மேலும் மழைப் பொழிவு அதிகமாகலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான மழை காரணமாக பெங்களூர் நகர் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. நகரின் வீதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்த வெள்ள அனர்த்தம் காரணமாக இடிபாடுகளுக்குள் சிக்கி…

    • 1 reply
    • 435 views
  5. கலிஃபோர்னியாவில் ஆறு நாட்களாக கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயில் சிக்கி 40 பேர் பலி பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionகலிஃபோர்னியாவில் ஆறு நாட்களாக கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ கலிஃபோர்னியாவில் ஆறு நாட்களாக கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயில் சிக்கி 40 பேர் இறந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போய் உள்ளனர். இந்த காட்டுத் தீ, கிராமப்புற பகுதிகளை தீக்கிரையாக்கியதில், ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்துள்ளன. விளம்பரம் இதுகுறித்து கருத்து தெரிவித்த கலிஃபோர்னியா மாகாண ஆளுநர், இந்த மாகாணம் இதுவரை சந்தித்திராத மோசமான பேரழிவு என்று வர்ணித்தார். இன்னும் 16 இடங்கள…

  6. சோமாலியாவில் லொறி குண்டுத் தாக்குதல்; முப்பது பேர் பலி! சோமாலியா தலைநகர் மொகாதிஷுவில் சற்று முன் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் சுமார் முப்பது பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல் ஒன்றின் முற்புறம், முழுவதும் வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்ட லொறியொன்று வெடிக்கச் செய்யப்பட்டே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டது முதல் சிறிது நேரத்துக்கு அப்பகுதியில் இருந்த வாகனங்கள், கட்டடங்கள் என்பனவற்றில் தீ பரவியதாகவும், கடும் முயற்சியின் பின் அவை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, மதீனாவில் நடத்தப்பட்ட மற்றொரு குண்டுத் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். இத்…

  7. ஜிஹாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட விமானம் கடலில் விழுந்து விபத்து பிரான்ஸ் இராணுவத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்த சரக்கு விமானம் ஒன்று சற்றுமுன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்தனர். ஏனைய ஆறு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உக்ரேனியத் தயாரிப்பான இந்த ‘அண்டனோவ்’ ரக விமானம், ஐவரி கோஸ்ட் நகரின் கடற்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. கடும் மழை மற்றும் இடி-மின்னல் நிறைந்த சூழலில் தரையிறங்க முயற்சித்தபோதே விமானம் விபத்துக்குள்ளானதாக ஐவரி கோஸ்ட் இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான சில மணி நேரங்களில் விமானத்தின் சிதைவுகள் கரையொதுங்கிய…

  8. உலகில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்த டோக்கியோ - புதுடெல்லிக்கு 43-வது இடம் புதுடில்லி: உலகம் முழுதும் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில், டில்லி 43வது இடத்திலும், மும்பை 45வது இடத்திலும் உள்ளது. ஆய்வு பொருளாதார உளவுப்பிரிவு என்ற அமைப்பு உலகின் பாதுகாப்பான நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தியது. டிஜிட்டல், சுகாதாரம், உள்கட்டமைப்பு தனிநபர் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்டது. பயங்கரவாத அச்சுறுத்தல்கள், லண்டன், பாரீஸ் மற்றும் பார்சிலோனா நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்தும் கவனத்தில் கொள்ளப்பட்டது. ஆய்வு வெளியிட்ட கிறிஸ் க்ளாக் என்பவர் கூறுகையில், உலகில் பெரும்பாலான நகரங்கள் பொருளாதார ரீதியான நடவடிக்கையை அதிகரிக்கும் நிலையில்…

  9. இரான் அணு ஒப்பந்தம்; டிரம்ப் எதிர்த்தாலும் உலக நாடுகள் ஆதரவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இரான் அணு ஒப்பந்தம் தொடர்ந்து நீடிப்பதற்கு அமெரிக்க அதிபர் ஒப்புதல் வழங்க மறுத்திருந்தாலும், அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள் உள்பட உலகின் சக்திமிக்க நாடுகள் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES 2015ம் ஆண்டு இரானுக்கும் அமெரிக்…

  10. தலிபான்கள் பிடியில் ஐந்து வருடங்கள்: விவரிக்கும் பணயக் கைதி ஐந்து வருடங்களாக தலிபான்கள் பிடியில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்ட கனேடிய-அமெரிக்க தம்பதியர் கனடா சென்று சேர்ந்தனர். தமது பணயக் காலத்தில் இடம்பெற்ற சோகச் சம்பவங்களையும் அவர்கள் விவரித்துள்ளனர். ஜோஷுவா பொய்லே மற்றும் அவரது மனைவி கெய்ட்லன் கோல்மன் ஆகிய இருவரும், தமது மூன்று குழந்தைகளுடன் ஐந்து வருடங்களுக்கு முன் குறுகிய பயணம் ஒன்றை மேற்கொண்டு ஆப்கானிஸ்தான் சென்றிருந்தனர். அங்கு, தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த குக்கிராமங்களில் வசித்துவரும் மக்களுக்கு தம்மாலான உதவிகளைச் செய்து கொடுத்து வந்தனர். அப்போது ஒருநாள், தலிபான்களின் வலையமைப்பில் உள்ள கடும்போக்க…

  11. 20 பெண்களை பலாத்காரம் செய்து கொன்ற சயனைடு கொலையாளிக்கு தூக்கு ரத்து: கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு மோகன் குமார் திருமணம் செய்துகொள்வதாக கூறி 20 பெண்களை பலாத்காரம் செய்து, சயனைடு கொடுத்து கொன்ற 'சீரியல் கில்லர்' மோகன்குமாருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னட மாவட்டத்தில் உள்ள மங்களூருவை சேர்ந்தவர் மோகன் குமார் (53). அங்குள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் 2009-ம் ஆண்டு பண்டுவலாவை சேர்ந்த அனிதாவை (22) திருமணம் செய்துகொள்வதாக கூறி, பலாத்காரம் செய்துள்ளார். கருக்கலைப்பு மாத்திரை எனக் கூறி அவருக்கு…

    • 0 replies
    • 737 views
  12. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கடன்களை பிரித்தானியா செலுத்த வேண்டும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கடன்களை பிரித்தானியா செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிக் கொண்டதன் பின்னர் கொடுக்க வேண்டியவற்றை செலுத்தாது, அதற்கு முன்னதாகவே செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜீன்-க்ளூட் ஜங்கர் ( Jean-Claude Juncker ) இதனைத் தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் புதிய புதிய பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் பிரச்சினைகள் காரணமாகவே எதிர்பார்க்கப்பட்டதனை விடவும் பிரிடெக்ஸிற்கு நீண்ட காலம் தேவைப்படுகின்ற…

  13. ராகுல் விரைவில் காங்கிரஸ் தலைவராவார்: சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி விரைவில் பொறுப்பேற்பார் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாரம்பரிய தேசியக் கட்சியான காங்கிரஸ், இனி ராகுல் காந்தி தலைமையில் பயணிக்கப் போவது ஊர்ஜிதமாகியுள்ளது. விரைவில் கட்சியின் செயற்குழு கூடி அதிகாரப்பூர்வமாக அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீபாவளிக்குப் பிறகு இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் கட்சி தொடர் பின்னடைவைச் சந…

  14. குர்துக்களுக்கு எதிராக திரும்புகிறதா இராக் இராணுவம்? இராக் பிரதமர் மறுப்புக்கு மத்தியில் அணிதிரளும் இராணுவம்! குவியும் குர்துப்படைகள்!! பாகிஸ்தானில் இந்துப்பெரும்பான்மை கிராமம்! அன்றாட நிகழ்வாகும் இந்து முஸ்லிம் கூட்டுப்பிரார்த்தனைகள்!! மற்றும் எரிமலை வெடிப்பை முன்கூட்டியே கணிக்க முடியுமா? ஐஸ்லாந்தின் வானத்தில் பறந்து விடைதேடும் விஞ்ஞானிகள் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  15. பள்ளிச் சீருடையுடன் தங்கையைச் சுமந்தவாறு வங்கதேசம் வந்த சிறுவன்! மியான்மரில் ரோஹிங்யா மக்களை ராணுவம் தாக்கி வருகிறது. லட்சக்கணக்கானோர் மியான்மரிலிருந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். வங்கதேசத்தை நோக்கி சென்றவர்களில் ரதேன்டாங் நகரத்தைச் சேர்ந்த யாசர் ஹூசைன் என்ற 7 வயது சிறுவனும் ஒருவன். யாஷரின் தந்தை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, மியான்மரில் வசிக்க முடியாத நிலையில் தாய் ஃபிரோஷா பேகம் குழந்தைகளுடன் வங்கதேசத்துக்குத் தப்பிச் செல்ல முடிவெடுத்தார். ஃபிரோஷா பேகத்தின் தலையில் மூட்டை முடிச்சுகள் இருந்தது. இதனால், யாஷரின் தங்கை நோயிம் ஃபாத்திமாவை இடுப்பில் சுமந்தவாறு நடக்க அவர் சிரமப்பட்டார். தாயின் சிரமத்தை அறிந்துகொண்ட…

  16. ஆசிய கண்டத்தில் அதிக பட்டினியாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா.. இந்தியா பட்டினியால் வாடுபவர்களின் பட்டியலில் 100வது இடத்துக்கு சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா மேலும் 3 இடங்கள் பின் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலக அளவில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் உள்ள 119 நாடுகளில் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் மேற்கொண்ட ஆய்வுகளின் இது தெரிய வந்துள்ளது. இந்தநாடுகளில் பெரும்பாலானவற்றில் உணவு தானியங்கள் உற்பத்தி குறைவு காரணமாக பட்டினி நிலை தோன்றியுள்ளது. நேற்றையதினம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுகளின் முடிவுகளின்படி இந்தியாவில் பட்டினியாக கிடப்பவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த…

    • 3 replies
    • 1.3k views
  17. கட்­ட­லோ­னியா தனி­நாடு குறித்து 5 நாட்­களில் முடி­வெ­டுக்கக் கெடு ஸ்பெய்ன் நாட்டின் ஒரு பகு­தி­யான கட்­ட­லோ­னியா, தனி­நாடு கோரிக்கை தொடர்­பான இறுதி முடிவை எடுக்க ஐந்து நாட்கள் அவ­காசம் அளிப்­ப­தாக ஸ்பெய்ன் அறி­வித்­துள்­ளது. ஸ்பெய்ன் நாட்டில் வளம் மிகுந்த பகு­தி­யான கட்­ட­லோ­னியா, தொடர்ந்து தனி­நாடு கோரிக்­கையை முன்­வைத்­து­வந்­தது. ஸ்பெய்ன் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் ஐந்தில் ஒரு பங்கு கட்­ட­லோ­னியா பகு­தி­யி­லி­ருந்து கிடைக்­கி­றது. ஸ்பெய்ன் அர­சாங்கம், இவர்­க­ளது கோரிக்­கையை நிரா­க­ரித்­து­வந்­தது. இந்­நி­லையில், கட்­ட­லோ­னிய மாநில அரசு, தனி­நா­டு ­கு­றித்து ஸ்பெய்னின் தடை­யையும் மீறி பொது வாக்­கெ­டுப்பு நடத்­தி­யது. ஆனால், இந்த வாக்­கெ­டுப…

  18. எங்கள் ஆயுதங்களால் உலக நாடுகளுக்கு முன்னால் அமெரிக்கா தலைகுனியும் நிலை ஏற்படும்: வடகொரியா நியாமாக செயல்படவில்லை என்றால் எங்கள் ஆயுத பலத்தால் உலக நாடுகளின் முன்னால் தலைகுனியும் நிலை ஏற்படும் என்று வடகொரியா அமெரிக்காவை எச்சரித்துள்ளது. இதுகுறித்து வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரி யாங் ஹோ, ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, "அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம்முடன் போருக்கான வார்த்தைகளை பயன்படுத்துகிறார். ஐக்கிய நாடுகள் சபையில் வடகொரியவுக்கு எதிரான கருத்துகள், பொருளாதார தடைகள் விதித்து போருக்கான நெருப்பை ட்ரம்ப்தான் உருவாக்கினார். எங்கள் அதிபர் கிம் ஜோங் முன்னரே எச்சரித்திருந்தார் அமெரிக…

  19. ஐ.நா-வின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா! ஐ.நா சபையின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது. 'யுனெஸ்கோ, இஸ்ரேலுக்கு எதிராக எடுத்திருக்கும் நிலைப்பாடுதான் இதற்குக் காரணம்' என்று அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவிலும், ஐ.நா அமைப்புக்கு உள்ளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு குறித்து யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல் இரினா போகோவா, 'யுனெஸ்கோவிலிருந்து வெளியேறுகிறோம் என்று எனக்கு அமெரிக்காவிடமிருந்து அதிகாரபூர்வமாக கடிதம் வந்துவிட்டது. இது எனக்கு மிகவும் மன வருத்தத்தை கொடுக்கிறது. இந்த முடிவு யுனெஸ்கோவுக்கு இழப்பு, அமெரிக்காவுக்கும் இழ…

  20. கெலிஃபோரினியா காட்டுத்தீயின் வேகத்தைக்கூட்டும் சூறைக்காற்று! இதுவரை இருபத்தி மூன்றுபேர் பலி!! நூற்றுக்கும் அதிகமானவர்கள் காணவில்லை!!! ஆயிரக்கணக்கானவர்கள் வீடின்றி தவிப்பு!!!! உலக அளவில் வேகமாக குறையும் கழுதைகள் எண்ணிக்கை! மரபு மருத்துவத்துக்காக இவை காணாமலே போகுமா? மற்றும் அமிலவீச்சு பாதிப்பைக்கடந்த ஆடை அலங்காரபோட்டி! முகம் சிதைந்தாலும் உறுதிகுலையாமல் உலகை எதிர்கொள்ளும் வங்கதேசப்பெண்கள் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  21. தலைமை செயலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த டெல்லி முதல்வர் கார் அபேஸ். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் காரை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லி முதல்வராக இருப்பவர் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால். இவர் நீல நிற வேகன் ஆர் காரை பயன்படுத்தி வந்தார்.இந்நிலையில் இன்று தலைமை செயலகத்துக்கு வந்த முதல்வர் தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் பணிகளை முடித்துக் கொண்டு அவர் வீடு செல்ல காரை எடுக்கச் சென்ற போது அவரது காரை அங்கு காணவில்லை. அக்கம்பக்கங்களில் தேடியம் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து முதல்வரின் காரை திருடியவர்கள் குறித்து போலீஸார் தேடி வருகின்றனர். பாதுகாப்பு நிறைந்த தலைமை செயலகத்தில் …

  22. பாலஸ்தீனம்: ஹமாஸ் - ஃபதா இடையே சமரச ஒப்பந்தம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பாலஸ்தீனத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தங்களுக்குள் நீடிக்கும் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளும் வகையில், தங்கள் எதிராளி அமைப்பான ஃபதாவுடன் சமரச ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP Image captionபாலஸ்தீனத்தில் காஸா பகுதி ஹமாஸின் கட்டுப்பாட…

  23. அணு ஆயுத செய்தி சர்ச்சை: தொலைக்காட்சி உரிமம் ரத்து செய்யப்படலாம் என மிரட்டும் ட்ரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்கா வசமுள்ள அணு ஆயுதங்களின் அளவை பத்து மடங்கு அதிகரிக்க அந்நாட்டு அதிபர் டிரம்ப் விரும்புவதாக செய்தி வெளியிட்ட என்.பி.சி. தொலைக்காட்சியின் உரிமத்தை ரத்து செய்யும் வாய்ப்பு பற்றி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டிவிட்டரில் ஒரு கருத்தைப் பதிவு செய்த…

  24. நிர்மலா சீதாராமனின் நட்பை வரவேற்கிறோம்: சீன அரசு ஊடகம் கருத்து YouTube அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் நாதுலா எல்லைக்கு சென்றார். அப்போது அவரும் சீன ராணுவ வீரர்களும் பரஸ்பரம் கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். - PTI இந்தியாவின் சிக்கிம் மாநிலம், சீனாவின் திபெத் பகுதி சந்திப்பான நாதுலா எல்லைப் பகுதிக்கு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் சென்றார். அப்போது அங்கு முகாமிட்டுள்ள சீன ராணுவ வீரர்களை சந்தித்துப் பேசினார். நிர்மலாவும் சீன அதிகாரிகளும் பரஸ்பரம் (நமஸ்தே) கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவியது. குறிப்பாக சீனாவில் லட்சக்கணக்கானோர் வீடியோவை விர…

  25. “போருக்கான திரியை அமெரிக்கா பற்றவைத்துவிட்டது” “வடகொரியாவுடன் போருக்கான திரியை அமெரிக்கா பற்றவைத்துவிட்டது. இதற்கான நட்ட ஈட்டை அந்நாடு கடும் தீச்சுவாலைகளால் செலுத்தும்” என்று வடகொரிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளதாக ரஷ்ய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேற்படி இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் நிலை விடாமல் அதிகரித்து வருகிறது. அண்மைய வாரங்களில் வடகொரியா ஏழு ஏவுகணைகளைப் பரிசோதனை செய்ததும், ஹைட்ரஜன் குண்டு ஒன்றைப் பரிசோதனை செய்ததும் அமெரிக்காவைக் கடுமையாகச் சீண்டியுள்ளது. இதையடுத்து, வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ரஷ்ய ஊடகம் ஒன்றுக்குக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.