உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26876 topics in this forum
-
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு இங்குள்ள கேரளாவைச் சேர்ந்தவர்கள் மகத்தான பங்களிப்பு அளித்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் லீ சியென் லூங் புகழாரம் சூட்டியுள்ளார். சிங்கப்பூரில் இயங்கிவரும் மலையாளிகள் சங்கத்தின் நூற்றாண்டு விழா விருந்தில் நேற்றிரவு பிரதமர் லீ சியென் லூங் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- உலகின் பல நாடுகளில் தீவிரவாதம், மதவாதம் மற்றும் நிறவெறி மேலோங்கிவரும் நிலையில் இதுபோன்ற வியாதிகளால் சிங்கப்பூர் இன்னும் பாதிக்கப்படவில்லை. வேறுபாடுகளை வலிமையாக மாற்றுவது எப்படி? என்பதை இங்குள்ள கேரளாவைச் சேர்ந்த மலையாள சமூகத்தினர் நமக்கு காட்டியுள்ளனர். எண்ணைக்கையில் சிறிதாக இருந்தாலும் நாட்டின் வளர்ச்சிக்கு தங்களது பங்களி…
-
- 0 replies
- 549 views
-
-
வடகொரியாவில் ஏவுகணைகள் இடமாற்றம்; சந்தேகத்தில் சர்வதேசம் வடகொரியத் தலைநகர் பியோங்யேங்கில் உள்ள ஏவுகணை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில் இருந்து ஏவுகணைகள் சில எடுத்துச் செல்லப்பட்டதாக தென்கொரிய மற்றும் அமெரிக்க புலனாய்வுத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எடுத்துச் செல்லப்பட்ட ஏவுகணைகள் மத்திய தர அல்லது கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய ஏவுகணைகளாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த ஏவுகணைகள் எங்கு எடுத்துச் செல்லப்பட்டன, எதற்காக எடுத்துச் செல்லப்பட்டன என்பது குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று தென்கொரிய புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஜப்பான்…
-
- 0 replies
- 437 views
-
-
குர்திஸ்தான் பகுதிக்குச் செல்லும் சர்வதேச விமானங்களை நிறுத்தியது இராக் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இராக்கின் வட பகுதியில் நடத்திய கருத்து வாக்கெடுப்பில் குர்திஸ்தான் விடுதலைக்கு ஆதரவாக 92 சதவீத மக்கள் வாக்களித்துள்ள நிலையில், இந்த வாக்கெடுப்பை எதிர்த்துவரும் இராக் மத்திய அரசு, குர்திஸ்தான் பகுதிக்குச் செல்லவேண்டிய, அங்கிருந்து வெளியே வர வேண்டிய சர்வதேச விமானங்களை ரத…
-
- 0 replies
- 402 views
-
-
எட்டு ஆண்டுகளாகப் பெண்கள் பிரிவில் வாக்களிக்கும் ட்ரம்ப் மருமகன்! அமெரிக்க ஜனாதிபதியின் மருமகன், எட்டு ஆண்டுகளாகப் பெண்கள் பிரிவில் வாக்களித்து வந்தது குறித்து, சமீபத்தில் ஆதாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மருமகனும் இவான்கா ட்ரம்ப்பின் கணவருமான ஜாரெட் குஷ்னர், அமெரிக்காவின் முன்னணிப் பணக்காரர்களுள் ஒருவர். ரியல் எஸ்டேட் தொழில், தினசரி நாளிதழ் வெளியீட்டாளர் எனப் பன்முகத் தன்மைகொண்ட குஷ்னர், தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மூத்த ஆலோசகராகப் பணியாற்றிவருகிறார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், அவருக்கு நிகராகப் பல சர்ச்சைகளிலும் சிக்கிப் பிரபலமானவர், ஜாரெட் குஷ்னர். அமெரிக்க…
-
- 0 replies
- 288 views
-
-
லண்டனில் இருந்து டுபாய்க்கு 27 நிமிடங்களில்! அசத்தும் எலோனின் திட்டம்!! (காணொளி) உலகின் எந்த நாட்டிலிருந்தும் எந்த நாட்டுக்கும் ஒரு மணி நேரத்தினுள் பயணிக்கக் கூடிய புத்தம் புதிய தொழில்நுட்பத்தை விரைவில் அறிமுகப்படுத்தப்போவதாக, பிரபல ரொக்கெட் தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’இன் நிறுவனர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடைபெற்ற சர்வதேச விண்வெளி மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த ரொக்கெட் மணிக்கு 27 ஆயிரம் கிலோமீற்றரில் பறக்கும் என்றும், இதன்மூலம் லண்டனில் இருந்து டுபாய்க்கு 27 நிமிடங்களில் பறக்கமுடியும் என்றும், ஏறக்குறைய அனைத்து நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்தை வெறும் ஒர…
-
- 7 replies
- 594 views
-
-
ஏஞ்சலா மெர்க்கல் வெற்றி ஏன் உலக அளவில் முக்கியமானது? ஜெர்மனி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நான்காவது முறையாக அதிபராகியிருக்கிறார் ஏஞ்சலா மெர்க்கல். அதேசமயம், அவரது கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பலம் கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பதும், வலதுசாரிக் கட்சியான ஏ.எஃப்.டி. கட்சி (ஜெர்மனிக்கான மாற்றுக் கட்சி) நாடாளுமன்றத்துக்குள் நுழைந்திருப்பதும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான ஜெர்மனியின் வரலாற்றில் மிக முக்கியமான தருணம். ஏ.எஃப்.டி. கட்சிக்கு 12.6% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. சமரசத்திலும், இணக்கமான போக்கிலும் நம்பிக்கை வைத்திருக்கும் ஜெர்மனிக்கு எழுந்திருக்கும் முக்கியமான சவாலாக இது பார்க்கப்படுகிறது. …
-
- 6 replies
- 611 views
-
-
உலகின் வேகமாக அதிகரிக்கும் அகதி நெருக்கடி விவகாரம்: ரோஹிஞ்சாக்களின் உரிமைகளுக்கான அழுத்தங்களை மியான்மருக்கு கொடுக்கத் தவறிய ஐ.நா பற்றிய ஆதாரங்களை கண்டறிந்தது பிபிசி காத்திருக்கும் மக்களின் வாழ்க்கை: - இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பது? வெடிக்கும் நிலையில் உள்ள பாலி எரிமலையால் வெளியேறியுள்ள லட்சக்கணக்கானோர் தவிப்பு பதினோரு நாடுகளில் பல லட்சக்கணக்கான மரங்கள் - வறண்ட பாலைவனமாவதைத் தடுக்கும் ஆஃப்ரிக்காவின் மிகப் பெரிய பசுமைச் சுவர் பற்றிய ஒரு குறிப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 254 views
-
-
வங்காளதேசத்துக்கு தஞ்சமடைய சென்றபோது ஆற்றில் படகுகள் கவிழ்ந்தன - 60 ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலி கலவர பூமியாக மாறிவிட்ட மியான்மரில் இருந்து வங்காள தேசத்துக்கு தஞ்சமடைய ரோஹிங்கியா இனத்தவர்கள் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். டாக்கா: மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சான் சூகி அரசு ஆலோசகராக இருந்து வ…
-
- 0 replies
- 278 views
-
-
உக்ரைன் ஆயுதக்கிடங்கில் மாபெரும் வெடிவிபத்து (காணொளி) மத்திய உக்ரைனில், 188 ஆயிரம் டன் வெடிபொருட்கள் சேமித்துவைக்கப்பட்டிருந்த ஒரு ராணுவ வெடிமருந்து கிடங்கு வெடித்து சிதறிய காட்சிகள். BBC
-
- 0 replies
- 244 views
-
-
22 பேரின் உயிரைப் பறித்த வதந்தி! மும்பை ரயில் நிலையத்தில் பயங்கரம் மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் பரவிய வதந்தியால் கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாகியுள்ளனர். பலரும் காயமடைந்துள்ளனர். மும்பை எல்பின்ஸ்டான் ரயில் நிலையத்தில் சிறிது நேரத்துக்கு முன்னர் மின்கசிவு ஏற்பட்டதாக ஒரு வதந்தி பரவியது. இதனால் பதற்றமடைந்த மக்கள் விபத்திலிருந்து தப்பிக்கும் பொருட்டு ஓடியதில் பலரும் நெரிசலில் சிக்கினர். மக்கள் கூட்ட நெரிசலில் பலரும் சிக்கிக் காயமடைந்தனர். உடனடியாக மீட்புப் பணிகளில் போலீஸார் ஈடுபட்டனர். முதலில் மூன்று பேர் பலியானதாகக் கூறப்பட்டது. ஆனால், பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போலீஸார் கூறுகின்றனர். …
-
- 3 replies
- 489 views
-
-
ஈராக்கில் உதயமாகுமா தனிநாடு? ஈராக்கில், பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இடம்பெற்ற குர்திஸ்களுக்கான குர்திஸ்தான் சுயாட்சி குறித்த தேர்தலில், 92 சதவீதத்துக்கு மேலானவர்கள் சுயாட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஈராக்கின் குர்திஸ்கள் செறிந்து வாழும் மூன்று மாகாணங்கள் அடங்கலான பகுதிக்கு சுயாட்சி அளிப்பதா, இல்லையா என்று முடிவு செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில், முப்பத்து மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட குர்திஸ்கள் மற்றும் குர்திஸ் அல்லாதவர்கள் பங்கேற்றார்கள். இதில், சுயாட்சிக்கு ஆதரவாக 28 இலட்சத்து 61 ஆயிரம் பேர் வாக்களித்தனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவிருந்த கடைசி நேரத்தில், முடிவுகளை இரத்துச் செய்யுமாறு ஈர…
-
- 8 replies
- 1.6k views
-
-
இந்தியாவை சிறுமைப்படுத்த ஐ.நா. சபையில் தவறான புகைப்படத்தைக் காட்டிய பாகிஸ்தான் தூதர் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES, TWITTER ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் இந்தியாவிற்குப் பதில் தரும் பேச்சில், காசாவில் எடுக்கப்பட்ட ஒரு சிறுமியின் புகைப்படத்தை காஷ்மீர் சிறுமி எனக் காட்டியதால் ஐ.நாவிற்கான பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி மலீஹா லோதி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறார். நியூயார்க்கில் நடக்கும் ஐ.நா.வின் வருடாந்திர பொதுச்சபை கூட்டத்தில் சனிக்கிழமையன்று பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகக் கூறியிருந்தார். பாகிஸ்தானை விமர்சித்து ஐ.நா ச…
-
- 5 replies
- 657 views
-
-
பர்மாவின் ரக்கைன் மாநிலத்திற்கான ஐநாவின் பயணத்திட்டத்தை பர்மிய அரசாங்கம் திடீரென ரத்துச் செய்துள்ளது குறித்த செய்திகள் மற்றும் ஐஎஸ் அமைப்பின் தலைநகராக கருத்தப்பட்ட ரக்கா நகரம் தற்போது அரபு மற்றும் குர்து போராளிகளால் கைப்பற்றப்படவுள்ள நிலையில் அங்கிருந்து வரும் பிபிசியின் பிரத்யேக செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 253 views
-
-
காபூல்: அமெரிக்கா நடத்திய வான் வழி தாக்குதலில் பலர் உயிரிழப்பு? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA Image captionதாக்குதலுக்கு உள்ளான காபூல் விமான நிலையம் ஆப்கான் தலைநகர் காபூலில் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய வான் வழி தாக்குதலில் செலுத்தப்பட்ட ஏவுகணையொன்று சரியாகச் செயல்படாத காரணத்தால் சில குடிமக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித…
-
- 0 replies
- 348 views
-
-
பிரித்தானியாவில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஓருவர் கொல்லப்பட்டுள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியாவின் பிரிஸ்டலில் எம்ஐ வீதியில் ஆயுத மேந்திய காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஓருவர் கொல்லப்பட்டுள்ளார். வாகனமொன்றின் மீது காவல்துறையினர் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டதை பார்த்தாக ஒருவர் தெரிவித்துள்ளார். வாகனமொன்றின் மீது துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்ட பின்னர் நபர் ஓருவரை வெளியே இழுத்ததை பார்த்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் ஐந்து ஆறு தடவை துப்பாக்கிபிரயோகம் செய்தனர் எனவும் அந்த வாகனத்தை சுற்றிவளைத்து துப்பாக்கி பிரயோகம் செய்தனர் எனவும் பின்னர் நபரை வெளியே இழு…
-
- 0 replies
- 401 views
-
-
குர்திஸ்தான் சுதந்திரத்துக்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவுக்கு குர்து மக்கள் காத்திருக்கின்றனர், சௌதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு மற்றும் கடந்த வார பூகம்ப தாக்கத்திலிருந்து மீண்டு வரும் மெக்ஸிகோ குறித்த ஒரு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 351 views
-
-
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் சென்று இறங்கிய சிறிது நேரத்தில் காபூல் விமான நிலயத்தின் அருகே ரொக்கட் தாக்குதல் ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள ஹமித் கர்சாய் சர்வதேச விமான நிலயத்தின் அருகே இன்று காலை ; மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு மேலும் அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்புவது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜிம் மற்றிஸ் ( Jim Mattis ) சென்றடைந்த சிறிது நேரத்தில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊள்ளுர் நேரப்படி முற்பகல் 11மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்தத்தாக்குதல் ஜிம் மற்றிஸை குறி வைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. அடுத்தடுத்து, காபுல் நகரின் பல பகுதிகள…
-
- 0 replies
- 513 views
-
-
யிங்லக் சினவத்ராவுக்கு 05 ஆண்டு சிறைத் தண்டனை தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் சினவத்ராவுக்கு 05 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளின் போது குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குவதில் அவர் கவனக்குறைவாக இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. http://tamil.adaderana.lk/news.php?nid=95870
-
- 0 replies
- 277 views
-
-
வட கொரியா பற்றி தெரிந்துகொள்ள உதவும் ஒன்பது முக்கிய அட்டவணைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வடகொரியாவும், அமெரிக்காவும் பரஸ்பரம் அச்சுறுத்தல்களை விடுத்துவரும் நிலையில், வடகொரிய மக்கள் இந்த சொற்போரை எவ்வாறு பார்க்கின்றனர் என்பது பற்றி வெளியுலகத்திற்கு அதிகம் தெரியாது. ஏனெனில், கிம் ஜோங்-உன், தன் நாட்டு மக்கள் வெளியுலகத்துடன் தொடர்பு கொள்வதை கவனமாக கட்டுப்படுத்தி இரும்…
-
- 0 replies
- 575 views
-
-
முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி : செளதி மன்னர் ஆணை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நாட்டில் முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் ஆணையொன்றை செளதி அரேபியா மன்னர் சல்மான் பிறப்பித்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP விளம்பரம் இது குறித்த அறிக்கைகளை அரசு அமைச்சரவைகள் 30 நாட்களுக்குள் தயார் செய்யவுள்…
-
- 0 replies
- 338 views
-
-
சர்வதேச அழுத்தங்களை மீறி நடந்த குர்து மக்களின் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பின் வாக்குகள் எண்ணப்படுவதற்கு குர்து மக்கள் காத்திருப்பது குறித்த செய்தித் தொகுப்பு, வடக்கு நைஜீரியாவில் உள்ளூர் மக்களை அச்சுறுத்தும் போகோ ஹராம் குறித்த செய்தித் தொகுப்பு மற்றும் பாகிஸ்தானில் தெரு நாய்களிடம் அன்பு காட்டும் மீனவர்கள் குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 285 views
-
-
அமெரிக்காவில் மீள்குடியேற்றுவதற்காக மனஸ்தீவு முகாமிலிருந்து 25 அகதிகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அவுஸ்திரேலியாவின் மனஸ்தீவு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அகதிகளில் 25 பேரை அதிகாரிகள் அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்காக அழைத்துச்சென்றுள்ளனர். இன்று செவ்வாய்கிழமை காலை இவர்கள் போர்ட் மொரெஸ்பையிலிருந்து புறப்பட்டுச்சென்றுள்ளனர். பப்புவா நியு கினியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொதுமக்கள் விவகார அதிகாரி பெவெர்லி தக்கர் இதனை உறுதிசெய்துள்ளார். முதல் தொகுதி அகதிகள் அழைத்துச்செல்லப்பட்டுள்ளதை உறுதிசெய்துள்ள அவர் எதிர்வரும் வாரங்களில் மேலும் 25 பேரை அமெரிக்கா அழைத்துச் செல்லவுள்ளோம் என தெரிவித்…
-
- 0 replies
- 255 views
-
-
மேற்குக்கரை: பாலஸ்தீனியர் சுட்டதில் மூன்று இஸ்ரேலியர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மேற்குக் கரையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள ஹர் அடார் என்னும் யூதக் குடியிருப்பின் நுழைவாயிலில், இன்று செவ்வாய்க்கிழமை, ஒரு பாலஸ்தீனியர் சுட்டதில் மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல்நாட்டுப் போலீசார் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைEPA Image captionஅந்த யூதக…
-
- 0 replies
- 281 views
-
-
வட கொரியா மீது போரா? : அமெரிக்கா மறுப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தனது நாட்டின் மீது போர் பிரகடனம் செய்திருப்பதாக அமெரிக்கவை குற்றஞ்சாட்டும் வட கொரியாவின் ஓர் அறிக்கையை அமெரிக்கா அபத்தமான யோசனை என்று கூறி புறக்கணித்துள்ளது. விளம்பரம் அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானங்களை சுட்டுத்தள்ளும் உரிமை எங்களுக்கு இருக…
-
- 0 replies
- 402 views
-
-
ஜெர்மனி: எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் ஏஞ்சலா மெர்க்கல் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் ஜெர்மனி பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்லின் பழமைவாத கூட்டணி 246 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இழுபறி நிலை காரணமாக எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அவர் மீண்டும் ஆட்சி அமைக்கிறார். பெர்லின்: ஜெர்மனி பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்லின் பழமைவாத கூட்டணி 246 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இழுபறி நிலை காரணமாக எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அவர் மீண்டும் ஆட்சி அமைக்கிறார். வலிமையான ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக திகழும் ஜெர்மனியில் 2005-ம் ஆண்டு முதல் ஏஞ்சல…
-
- 0 replies
- 331 views
-