உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27038 topics in this forum
-
ராகுல் விரைவில் காங்கிரஸ் தலைவராவார்: சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி விரைவில் பொறுப்பேற்பார் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாரம்பரிய தேசியக் கட்சியான காங்கிரஸ், இனி ராகுல் காந்தி தலைமையில் பயணிக்கப் போவது ஊர்ஜிதமாகியுள்ளது. விரைவில் கட்சியின் செயற்குழு கூடி அதிகாரப்பூர்வமாக அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீபாவளிக்குப் பிறகு இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் கட்சி தொடர் பின்னடைவைச் சந…
-
- 0 replies
- 334 views
-
-
குர்துக்களுக்கு எதிராக திரும்புகிறதா இராக் இராணுவம்? இராக் பிரதமர் மறுப்புக்கு மத்தியில் அணிதிரளும் இராணுவம்! குவியும் குர்துப்படைகள்!! பாகிஸ்தானில் இந்துப்பெரும்பான்மை கிராமம்! அன்றாட நிகழ்வாகும் இந்து முஸ்லிம் கூட்டுப்பிரார்த்தனைகள்!! மற்றும் எரிமலை வெடிப்பை முன்கூட்டியே கணிக்க முடியுமா? ஐஸ்லாந்தின் வானத்தில் பறந்து விடைதேடும் விஞ்ஞானிகள் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 208 views
-
-
பள்ளிச் சீருடையுடன் தங்கையைச் சுமந்தவாறு வங்கதேசம் வந்த சிறுவன்! மியான்மரில் ரோஹிங்யா மக்களை ராணுவம் தாக்கி வருகிறது. லட்சக்கணக்கானோர் மியான்மரிலிருந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். வங்கதேசத்தை நோக்கி சென்றவர்களில் ரதேன்டாங் நகரத்தைச் சேர்ந்த யாசர் ஹூசைன் என்ற 7 வயது சிறுவனும் ஒருவன். யாஷரின் தந்தை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, மியான்மரில் வசிக்க முடியாத நிலையில் தாய் ஃபிரோஷா பேகம் குழந்தைகளுடன் வங்கதேசத்துக்குத் தப்பிச் செல்ல முடிவெடுத்தார். ஃபிரோஷா பேகத்தின் தலையில் மூட்டை முடிச்சுகள் இருந்தது. இதனால், யாஷரின் தங்கை நோயிம் ஃபாத்திமாவை இடுப்பில் சுமந்தவாறு நடக்க அவர் சிரமப்பட்டார். தாயின் சிரமத்தை அறிந்துகொண்ட…
-
- 0 replies
- 288 views
-
-
தாய்வான் வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் இலங்கையின் அரச வங்கியில் வைப்பில் தாய்வானின் ஃபா ஈஸ்டர்ன் இன்டர் நெஷனல் வங்கியின் கணினி கட்டமைப்பிற்குள் ஊடுருவி பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டுப் பிரதமர் லேய் ச்சின் டேயின் உத்தரவின் பேரில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்ளையிடப்பட்ட சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை. கம்போடியா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தாய்வான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ஃபா ஈஸ்டன் இன்டர்நெஷனல் வங்கியிடமிருந்து இலங்கை வங்கியின் தனியார் கணக்கில் வைப்பிலிடப்பட்ட 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பில் குற…
-
- 7 replies
- 1.1k views
-
-
எங்கள் ஆயுதங்களால் உலக நாடுகளுக்கு முன்னால் அமெரிக்கா தலைகுனியும் நிலை ஏற்படும்: வடகொரியா நியாமாக செயல்படவில்லை என்றால் எங்கள் ஆயுத பலத்தால் உலக நாடுகளின் முன்னால் தலைகுனியும் நிலை ஏற்படும் என்று வடகொரியா அமெரிக்காவை எச்சரித்துள்ளது. இதுகுறித்து வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரி யாங் ஹோ, ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, "அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம்முடன் போருக்கான வார்த்தைகளை பயன்படுத்துகிறார். ஐக்கிய நாடுகள் சபையில் வடகொரியவுக்கு எதிரான கருத்துகள், பொருளாதார தடைகள் விதித்து போருக்கான நெருப்பை ட்ரம்ப்தான் உருவாக்கினார். எங்கள் அதிபர் கிம் ஜோங் முன்னரே எச்சரித்திருந்தார் அமெரிக…
-
- 0 replies
- 395 views
-
-
கெலிஃபோரினியா காட்டுத்தீயின் வேகத்தைக்கூட்டும் சூறைக்காற்று! இதுவரை இருபத்தி மூன்றுபேர் பலி!! நூற்றுக்கும் அதிகமானவர்கள் காணவில்லை!!! ஆயிரக்கணக்கானவர்கள் வீடின்றி தவிப்பு!!!! உலக அளவில் வேகமாக குறையும் கழுதைகள் எண்ணிக்கை! மரபு மருத்துவத்துக்காக இவை காணாமலே போகுமா? மற்றும் அமிலவீச்சு பாதிப்பைக்கடந்த ஆடை அலங்காரபோட்டி! முகம் சிதைந்தாலும் உறுதிகுலையாமல் உலகை எதிர்கொள்ளும் வங்கதேசப்பெண்கள் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 487 views
-
-
பாலஸ்தீனம்: ஹமாஸ் - ஃபதா இடையே சமரச ஒப்பந்தம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பாலஸ்தீனத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தங்களுக்குள் நீடிக்கும் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளும் வகையில், தங்கள் எதிராளி அமைப்பான ஃபதாவுடன் சமரச ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP Image captionபாலஸ்தீனத்தில் காஸா பகுதி ஹமாஸின் கட்டுப்பாட…
-
- 0 replies
- 276 views
-
-
அணு ஆயுத செய்தி சர்ச்சை: தொலைக்காட்சி உரிமம் ரத்து செய்யப்படலாம் என மிரட்டும் ட்ரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்கா வசமுள்ள அணு ஆயுதங்களின் அளவை பத்து மடங்கு அதிகரிக்க அந்நாட்டு அதிபர் டிரம்ப் விரும்புவதாக செய்தி வெளியிட்ட என்.பி.சி. தொலைக்காட்சியின் உரிமத்தை ரத்து செய்யும் வாய்ப்பு பற்றி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டிவிட்டரில் ஒரு கருத்தைப் பதிவு செய்த…
-
- 0 replies
- 352 views
-
-
நிர்மலா சீதாராமனின் நட்பை வரவேற்கிறோம்: சீன அரசு ஊடகம் கருத்து YouTube அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் நாதுலா எல்லைக்கு சென்றார். அப்போது அவரும் சீன ராணுவ வீரர்களும் பரஸ்பரம் கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். - PTI இந்தியாவின் சிக்கிம் மாநிலம், சீனாவின் திபெத் பகுதி சந்திப்பான நாதுலா எல்லைப் பகுதிக்கு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் சென்றார். அப்போது அங்கு முகாமிட்டுள்ள சீன ராணுவ வீரர்களை சந்தித்துப் பேசினார். நிர்மலாவும் சீன அதிகாரிகளும் பரஸ்பரம் (நமஸ்தே) கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவியது. குறிப்பாக சீனாவில் லட்சக்கணக்கானோர் வீடியோவை விர…
-
- 0 replies
- 415 views
-
-
“போருக்கான திரியை அமெரிக்கா பற்றவைத்துவிட்டது” “வடகொரியாவுடன் போருக்கான திரியை அமெரிக்கா பற்றவைத்துவிட்டது. இதற்கான நட்ட ஈட்டை அந்நாடு கடும் தீச்சுவாலைகளால் செலுத்தும்” என்று வடகொரிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளதாக ரஷ்ய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேற்படி இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் நிலை விடாமல் அதிகரித்து வருகிறது. அண்மைய வாரங்களில் வடகொரியா ஏழு ஏவுகணைகளைப் பரிசோதனை செய்ததும், ஹைட்ரஜன் குண்டு ஒன்றைப் பரிசோதனை செய்ததும் அமெரிக்காவைக் கடுமையாகச் சீண்டியுள்ளது. இதையடுத்து, வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ரஷ்ய ஊடகம் ஒன்றுக்குக்…
-
- 0 replies
- 374 views
-
-
அவுஸ்திரேலிய கட்சியின் தலைமைக்கு இலங்கை வம்சாவளிப் பெண் நியமனம் அவுஸ்திரேலியாவின் முன்னணி அரசியல் கட்சிகளுள் ஒன்றான ‘கிறீன்ஸ்’ கட்சியின் விக்டோரியா பிராந்திய தலைவராக இலங்கை வம்சாவளிப் பெண்ணான சமந்தா ரட்ணம் அறிவிக்கப்பட்டுள்ளார். மோர்லண்டின் முன்னாள் மேயராகப் பதவி வகித்த சமந்தா ரட்ணம், நாளை (13) உத்தியோகபூர்வமாகத் தனது பதவியை ஏற்கவுள்ளார். மேற்படி தலைமைப் பதவியில் இருந்த முன்னாள் தலைவர் கிறெக் பார்பர் பதவி விலகியதையடுத்தே அப்பதவிக்கு சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/25657
-
- 0 replies
- 470 views
-
-
ரோஹிஞ்சா நெருக்கடி: அர்சா தீவிரவாதிகள் குறித்த உண்மைகளை தேடி ஒரு பயணம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைYOUTUBE Image captionஅர்சா அமைப்பு வெளியிட்ட ஒரு வீடியோ பிபிசி-யின் தென் கிழக்கு ஆசியாவின் செய்தியாளர் ஜொனாதான் ஹெட், மியான்மரில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி, மியான்மர் ராணுவத்தின் மீது தாக்குதல் தொடுத்த `அர்சா` அமைப்பைச் சேர்ந்தவர்களையும், வங்கதேசத்தில்…
-
- 0 replies
- 411 views
-
-
கெடலோனியா சுதந்திர நாடா? இல்லையா? விளக்கம் கோரும் ஸ்பெய்ன் பிரதமர்! விவாதிக்கக் கூடும் அவர் அமைச்சரவை!!! செனகலை பாதிக்கும் துருக்கி அரசியல் மோதல்! வெளிநாட்டில் வாழும் துருக்கிய மதகுரு மீதான தடையால் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கும் மாணவர்கள்!! மற்றும் கடலில் கலக்கும் பிளாஸ்டிக்கின் அளவு ஆண்டுக்கு எண்பது லட்சம் டன்னாக அதிகரிப்பு! ஸ்வீடனின் பாட்டில்களை திருப்பித்தரும் திட்டம் அதை தடுக்க உதவுமா என்பதை ஆராயும் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 237 views
-
-
பிரபாகரனின் சடலத்தை பார்த்து வேதனையடைந்த ராகுல் காந்தி பிரபாகரனின் சடலத்தை பார்த்து நானும் எனது சகோதரி பிரியங்காவும் வேதனையடைந்தோம் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். குஜராத்தின் வதோதராவில் நேற்று தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார். அதில் பங்கேற்றவர்கள் ராகுல் காந்தியிடன் சில கேள்விகளை முன்வைத்தனர். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி பிரபாகரனின் சடலத்தை பார்த்து நானும் எனது சகோதரி பிரியங்காவும் மிகவும் வேதனையடைந்த…
-
- 8 replies
- 1.8k views
-
-
அறிவுச் சோதனை வைத்துக்கொள்ளுவோமா? ராஜீய செயலர் டில்லர்சனுக்கு டிரம்ப் சவால் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் டிரம்ப்பை மூர்க்கர் என்று அந்நாட்டு ராஜீய செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் சொன்னதாகக் கூறப்படுவதைப் பற்றி கேட்டபோது, அவருக்கும் எனக்கும் ஐ.க்யூ. டெஸ்ட் எனப்படும் அறிவுச் சோதனை வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டு டிரம்ப் சவால் விடுத்துள்ளார். படத்தின் காப…
-
- 0 replies
- 220 views
-
-
வட கொரியாவை மிரட்டும் வகையில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் போர் பயிற்சி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP Image captionஅமெரிக்க பசிஃபிக் பிராந்தியமான குவாம் பகுதியிலிருந்து அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள் விண்ணில் சீறிப்பாய்ந்து தென் கொரிய வான்வெளியில் நுழைந்தன கொரிய தீபகற்பத்தின் மீது முக்கியத்துவம் வாய்ந்த இரு குண்டுவீச்சு விமானங்களை செல…
-
- 0 replies
- 485 views
-
-
பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் EU தனது தந்திரோபாயத்தை மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கும் – டொனால்ட் டஸ்க் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் 2017 டிசம்பரிற்குள் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் ஐரோப்பிய ஓன்றியம் தனது தந்திரோபாயத்தை மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கும் என ஐரோப்பிய பேரவையின் தலைவர் கருத்து வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஓன்றியத்திற்கும் உடன்பாடு எதுவும் ஏற்படாமல் பிரித்தானியா அதிலிருந்து வெளியேறுவது குறித்த சூழ்நிலையை எதிர்கொள்ள தயாராகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியா உடன்பாடு ஏற்படாத நிலையில் வெளியேறிச்செல்வதற்கான சூழலை எதிர்கொள்ள தயாராகிவருவதாக அறிக…
-
- 0 replies
- 401 views
-
-
டெல்லியை போல, மும்பையிலும் பட்டாசு விற்பனைக்கு தடை... கவலையில் வியாபாரிகள். மும்பை மாநகர், புறநகர் பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்ய மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தீபாவளி பண்டிகையானது வரும் 18ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையின் போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழல் மாசு அடைவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனையடுத்து,டெல்லியில் பட்டாசுகள் விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்தது.கடந்த ஆண்டு ஒலி மற்றும் காற்று மாசுபடுவதை தடுக்க டெல்லியில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பட்டாசு விற்க உச்சநீதிமன்றம் த…
-
- 0 replies
- 399 views
-
-
கேட்டலோனியா தனி நாடு பிரகடனம் இடை நிறுத்தம்: கேட்டலன் தலைவர் கார்லஸ் பூஜ்டியமோன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கேட்டலோனியா ஸ்பெனிலிருந்து வெளியேறி சுதந்திர நாடாக பிரகடனப்படுத்துவதை இடைநிறுத்தம் செய்வதாக கேட்டலோனிய அரசின் தலைவர் கார்லஸ் பூஜ்டியமோன் அந்தப் பிராந்தியத்தின் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். ஸ்பெயின் அரசுடன் நியாயமான பேச்சு வார்த்தை நடத்தும் நோக்கில், சில வாரங்…
-
- 2 replies
- 368 views
-
-
அமெரிக்கா-தென் கொரியா போர் திட்டங்களை திருடிய வட கொரிய ஹேக்கர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP PHOTO / KCNA VIA KNS Image captionகிம் ஜாங் - உன் வட கொரியாவை சேர்ந்த ஹேக்கர்கள், தென் கொரியாவின் இணையத்தை ஊடுருவி, வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்-ஐ கொல்ல வைத்திருந்த திட்டம் உள்ளிட்ட பல ராணுவ ஆவணங்களை திருடி உள்ளனர் என்று கூறப்படுகிறது. …
-
- 1 reply
- 426 views
-
-
ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் எழுப்பும் எல்லைவேலி பயங்கரவாதத்தை தடுக்குமா? பிபிசியின் நேரடி படப்பிடிப்பு ; சேற்றில் பிறந்த சிசு! மியன்மாரிலிருந்து தப்பிவந்த ரொஹிஞ்சா தாய்க்கு,, அகதி முகாமின் கோணிப்பை படுக்கையில் பிறந்த குழந்தையின் கதை மற்றும் ஆட்களை மட்டுமல்ல, அவர்களின் பின்னணி அனைத்தையும் கண்டறியும் புதிய கைரேகை தொழில்நுட்பம்! குற்றவாளிகளை துல்லியமாக கண்டுபிடிக்க உதவும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்!! இது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 210 views
-
-
மியன்மாருக்கு போப் ஃபிரான்சிஸ் விஜயம்! நவம்பர் மாதம் மியன்மாருக்கு விஜயம் செய்யவுள்ள பாப்பரசர் ஃபிரான்சிஸ், மியன்மாரின் சிரேஷ்ட பௌத்த சமயத் தலைவர்களையும், இராணுவ உயரதிகாரிகளையும் அந்நாட்டு மக்கள் தலைவர் ஆங் சான் சூ கீயையும் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தெரியவருகிறது. மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில், அங்கு விஜயம் செய்யவுள்ள பாப்பரசர் ஃபிரான்சிஸ், அந்தப் பிரச்சினை குறித்தே மேற்படி முக்கிய பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது. நவம்பர் ஆறாம் திகதி முதல் டிசம்பர் இரண்டாம் திகதி வரையான இந்த விஜயத்தின்போது போப் ஃபிரான்சிஸ் பங்களாதேஷுக்கும் விஜயம் செய்யவுள்ளார். மியன்மா…
-
- 0 replies
- 446 views
-
-
ஹிட்லர் வரைந்த ஓவியம் கிழிப்பு பகிர்க படத்தின் காப்புரிமைMUSEO DELLA FOLLIA Image captionநவம்பர் 19 வரை நடக்கும் கண்காட்சியில் இந்த ஓவியம் இடம்பெற்றுள்ளது. இத்தாலி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்த, ஹிட்லர் வரைந்த ஓவியத்தை ஸ்குரூடிரைவர் மூலம் ஒருவர் கிழித்தார். நாசி தலைவரின் ஓவியம், பொதுமக்களுக்கான இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் கோபமடைந்த 40 வயதுடைய ஒருவர் இந்த தலைப்பிடப்படாத ஓவியத்தை கிழித்தார் என்று, கொரியாரே டெல்லா சேரா என்னும் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. "பைத்தியக்காரத்தனத்திற்கான அருங்காட்சியகம்" என்று பெரியரிப்பட்ட கண்காட்சி நிகழ்ச்சிக்காக, கர்டா ஏரிக்கரையின் அருகில் உள…
-
- 0 replies
- 714 views
-
-
கலிபோர்னியாவில் 8 நகரங்களில் எரியும் காட்டுத்தீ - 10 பேர் உயிரிழப்பு அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் 8 நகரங்களில் எரிந்து கொண்டிருக்கும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். கலிபோர்னியா: அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ பரவி வருகிறது. அங்குள்ள நபா, சோனோமா, யுபா, மென்டோசினோ உள்ளிட்ட 8 நகரங்களில் காட்டுத்தீ எரிகிறது. இப்பகுதிகளில் திராட்சை பழம் அதிக அளவில் விளைகின்றன. எனவே இங்கு ஒயின் தொழிற்சாலைகள் பெருமளவில் உள்ளன. இங்கு வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் தீ பிடித்தது. பலத்த காற்று காரணமாக தீ நகரப் பகுதிகளுக்கும் பரவுகிறது. எனவே வனப…
-
- 0 replies
- 374 views
-
-
உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் - துபாயில் செயல்பாட்டுக்கு வந்தது போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. துபாய்: போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. ‘எஸ்.பி.எஸ்.’ என பெயர் சுருக்கம் கொண்ட இந்த ஸ்மார்ட் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தல், போக்குவரத்து அபராதம் செலுத்துதல், விபத்து குறித்து பதிவு செய்தல், தேவையான ஆவணங்கள் பெறுதல் உள்ளிட்ட 60 சேவைகளை பொதுமக்கள் பெற…
-
- 0 replies
- 366 views
-