உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27043 topics in this forum
-
நிக்கி ஹாலே. | படம்.| ஏ.பி. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் இந்தியா, சீனா போன்ற நாடுகள் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுவது கூடாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஐநாவுக்கான இந்திய-அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளை நிக்கி ஹாலே சாடியுள்ளார், எப்படி விலகும் முடிவை எடுத்த ட்ரம்ப் இந்தியாவையும் சீனாவையும் தாக்கிப் பேசினாரோ அதே போல் நிக்கி ஹாலே அமெரிக்காவுக்கு அறிவுரை வழங்க வேண்டாம் என்ற தொனியில் சாடியுள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்பை குறிப்பிடாமலேயே இந்தியப் பிரதமர் மோடி கூறிய போது, “பாரீஸோ பாரீஸ் இல்லையோ, எதிர்காலச் சந்ததினியருக்…
-
- 0 replies
- 258 views
-
-
பருவநிலை ஒப்பந்தம்: டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு - சீனாவுக்கான அமெரிக்க தூதர் ராஜினாமா பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது என்ற அதிபர் டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீனாவுக்கான அமெரிக்க தூதர் ராஜினாமா செய்துள்ளார். வாஷிங்டன்: பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு பல்வேறு நாடுகளும் தொடர்ச்சியாக ஒப்புதல் அளித்த வண்ணம் இருந்தன. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவும் ஒப்புதல் அளித்திருந்தார். பாரீஸ் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெர…
-
- 0 replies
- 227 views
-
-
லண்டனில் சனிக்கிழமை ஏழு பேர் கொல்லப்பட்டமை சுதந்திர உலகின் மீதான ஒரு தாக்குதல் என்கிறார் பிரிட்டிஷ் பிரதமர்; • மத்திய கிழக்கில் ஒரு இராஜதந்திரப் போர் ஆரம்பம், கட்டார் நாட்டுடனான உறவை ஆறு நாடுகள் துண்டித்தன. • கரு முட்டையக புற்றுநோய்க்கட்டிகளை கரைக்கும் புது மருந்துக்கான ஆரம்பகட்ட பரிசோதனை முடிவுகள் நம்பிக்கையளிப்பதாக கூறும் பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் ஆகியவை இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 245 views
-
-
கத்தாரின் சேக் தமீம் பின் ஹமத் அல் தானி. இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதால் கத்தாருடனான தங்கள் ராஜாங்க உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அரபு நாடுகளும் அறிவித்துள்ளன. வளைகுடா நாடான கத்தார் இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவளித்து தீவிரவாதத்தை வளர்ப்பதாகக் கூறி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவை தெரிவித்துள்ளன. ஏமனில் நடந்துவரும் போரில் இருந்து கத்தார் படைகள் விடுவிக்கப்படும் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது. ஆகாய, கடல் வழிப் பயணங்கள் என்னவாகும்? அனைத்து நாடுகளும் கத்தாருடனான ஆகாய மற்றும் கடல் வழி மார்க்கப் பயணத்தை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகி…
-
- 2 replies
- 736 views
-
-
லண்டன் தாக்குதலில் முக்கிய குற்றவாளி பாகிஸ்தானை சேர்ந்தவன்: பகீர் தகவல் லண்டன் நகரில் ஏழு உயிர்களை பறித்த தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்தவன் முக்கிய குற்றவாளி என தெரியவந்துள்ளது. லண்டன்: லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜில் நேற்று சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தாறுமாறாக ஓடி பாலத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதனையடுத்து மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடினர். கண்ணில் தென்பட்டவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த சுமார் 5…
-
- 0 replies
- 341 views
-
-
60 டெஸ்ட் ட்யூப் குழந்தைகளுக்கு தந்தை யார்? மருத்துவரா ? ஹாலந்து நாட்டில், சமீபத்தில் இறந்துபோன ஒரு செயற்கை கருத்தரிப்பு மைய மருத்துவர், தன்னிடம் சிகிச்சைக்காக வந்த டஜன் கணக்கான பெண்களுக்கு தனது சொந்த விந்தணுக்களை செலுத்தி கர்ப்பம் தரிக்கவைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டை அடுத்துஅவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட உடமைகள் மீது டி.என்.ஏ சோதனை நடத்த வேண்டும் என்ற அக்குடும்பங்களின் கோரிக்கைக்கு, நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜான் கார்பாத் என்ற அந்த மருத்துவர் ராட்டர்டாம் அருகே பிஜ்தார்ப் என்ற மையத்தை நடத்தி வந்த அவர், சுமார் 60 குழந்தைகள் உருவாவதற்கு அவரே காரணமாக இருந்துள்ளார் என்று சந்தேகம் எழுந்த…
-
- 1 reply
- 516 views
-
-
'Van hits pedestrians' on London Bridge in 'major incident' Image copyright PA Image caption People running down Borough High Street on the south side of London Bridge Police are responding to reports that a van has hit a number of pedestrians on London Bridge in central London. Armed officers were sent to the scene after witnesses reported seeing a white van mount the pavement and drive into people. The Met Police say they are dealing with an incident on the bridge and "multiple resources" are in attendance. Transport for London said the bridge has been closed in both directions due to a "major po…
-
- 8 replies
- 1.2k views
-
-
லண்டன் பயங்கரவாத தாக்குதல்: 12 பேர் கைது 7 பேர் பலியாக காரணமான லண்டன் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மூன்று தாக்குதல்தாரிகளில் ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்பில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டைக்கு பின்னர் பார்கிங், கிழக்கு லண்டன் ஆகிய இடங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வாகனம் பாதசாரிகளின் கூட்டத்துக்குள் புகுந்து மோதியபோது இந்த வன்முறை தொடங்கியது. மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் பகுதிக்குள் கத்திகளுடன் ஓடி பலரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். http://www.bbc.com/tamil/glo…
-
- 1 reply
- 429 views
-
-
இத்தாலி: கால்பந்து போட்டியை திரையில் பார்த்தபோது, கூட்ட நெரிசலில் 1500 பேர் காயம் படத்தின் காப்புரிமைEPA Image captionசதுக்கத்தை விட்டு வேகமாக வெளியேறியதால் பரும் தங்களின் காலணிகளை இழந்தனர் இத்தாலியின் டியூரின் நகரில், சனிக்கிழமை இரவு நிகழ்ந்த ஒரு பட்டாசு வெடிப்பால் உருவான கூட்ட நெரிசலில் சுமார் 1500 பேர் காயமடைந்துள்ளனர். ரியல் மாட்ரிட் எதிராக ஜுவண்டிஸ் கால்பந்து அணி விளையாடிய சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தை கார்டிஃபில் நேரலையில் ஆயிரக்கணக்கானோர் பார்த்து கொண்டிருந்தனர். படத்தின் காப்புரிமைAFP Image captionபெரிய திரையில் கால்பந்து விளையாட்டு போட்டியை பார்க்க மக்கள் அந்த இடத்தில் நிறைந்திருந்தனர் அப்போ…
-
- 0 replies
- 359 views
-
-
லண்டன் தாக்குதலுக்கு பிரதமர் தெரசா மே கண்டனம்: 8-ம் தேதி திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என அறிவிப்பு லண்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் தெரசா மே, திட்டமிட்டபடி வரும் 8-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். லண்டன்: பிரிட்டனில் கடந்த 2015-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக் காலம் 2020ல் முடிவடைகிறது. ஆனால், பதவிக்காலம் முடியும் முன்னரே தேர்தலை நடத்த திட்டமிட்டார் பிரதமர் தெரசா மே. அதன்படி, ஜூன் 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது. நாட்டில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வருவதற்கு முன்கூட்ட…
-
- 0 replies
- 332 views
-
-
கல்வீச்சுக்கு எதிராக ராணுவம் 'மனிதக் கேடயம்' பயன்படுத்திய சம்பவம்: பத்திரிகையாளர்களுக்கு பதிலளிக்க ராஜ்நாத் மறுப்பு காஷ்மீரிகளின் கைகள் கல் எறிவதற்கானது அல்ல. காஷ்மீர் இளைஞர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம் என உள்துறை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆனால், காஷ்மீரில் புட்காம் மாவட்டத்தில் ராணுவ வாகனத்தின் முன் ஒருவரைக் கட்டி மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி கலவரப் பகுதிக்குள் ராணுவத்தினர் சென்ற சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூன்று ஆண்டு கால நிறைவை ஒட்டி நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ராஜ்நாத் சிங், "காஷ்மீரில் நடைபெற்றுவரும் மோசமான போரை நிறுத்த ப…
-
- 0 replies
- 346 views
-
-
இந்திய அரை வம்சாவளியரான லியோ வரத்கார் அயர்லாந்தின் பிரதமராவதற்கு வாய்ப்பு படத்தின் காப்புரிமைREUTERS இந்திய அரை வம்சாவளியரான, லியோ வரத்கார் அயர்லாந்து குடியரசின் அடுத்த பிரதமராகவிருக்கிறார். ஆளும் கூட்டணியின் முக்கிய கட்சியான, ஃபைன் கேல் கட்சியின் தலைமைப் பதவிக்கு நடந்த தேர்தலில் வரத்கார் வெற்றி பெற்றுள்ளார். கட்சி தலைமைப் பதவிக்கு நடந்த தேர்தலில், வீட்டு வசதித் துறை அமைச்சரான சைமொன் கொவ்னியைத் தோற்கடித்த, 38 வயதான இவர் , அயர்லாந்தின் முதல் ஒரு பாலுறவுக்கார பிரதமராவார். இன்னும் சில வாரங்களில், இந்த மத்திய வலது சாரிக் கட்சியின் தற்போதைய தலைவரான, எண்டா கென்னடிக்கு அடுத்த தலைவராகிறார் லியோ வ…
-
- 1 reply
- 396 views
-
-
| உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள், தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு புதிய உச்சத்தைத் தொட்ட நிறுவனம். இது தன் புதிய தலைமையகத்தை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கோபெர்டினோவில் ஒரு முடிவிலா வட்டமான கட்டிட வடிவில் நிர்மானித்து வருகிறது. பறக்கும் சாஸரைப் போல் ‘ஸ்பேஸ்ஷிப்’ அமைப்பிலுள்ள இந்தக் கட்டிடத்திற்கு ‘ஆப்பிள் பார்க்’ என்று பெயரிட்டுள்ளனர். மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பது ஆப்பிள். ஆகையால் இப்பொழுது கட்டப்பட்டு வரும் இந்தக் கட்டிடமும் பல சிறப்பான வடிவமைப்புகளைக் கொண்டிருக்கிறது…
-
- 0 replies
- 410 views
-
-
துபாய்: தொழில்நுட்பப் புரட்சியின் துவக்கமாக துபாய் காவல்துறையில் முதல் முறையாக ரோபோடிக் காவலர் பணியமர்த்தப்பட்டுள்ளார். துபாய் காவல்துறையில் கடந்த புதன்கிழமை ரோபோடிக் காவலர் தனது பணியைத் தொடங்கினார். தொடர்ந்து 2030க்குள் காவல்துறையின் மொத்த எண்ணிக்கையில் கால் பங்கு ரோபோடிக் காவலர்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான கட்டடம் என்று புகழ்பெற்ற புர்ஜ் கலிஃபா கட்டடத்தின் வாசலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரோபோடிக் காவலரைப் பார்த்த மக்கள் ஆச்சரியமடைந்தனர். காவல்துறையின் தொப்பையை அணிந்து கொண்டு சக்கரத்தின் மூலம் நகரும் ரோபோடிக்கின் நெஞ்சுப் பகுதியில் 'டச் ஸ்க்ரீன்' பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏதேனும் குற்றங்கள் நடந்தாலும…
-
- 0 replies
- 431 views
-
-
மலேசிய விமானத்தில் குண்டு புரளியை ஏற்படுத்திய இலங்கைப் பயணி கைது மலேசிய விமானத்தில் குண்டுப் புரளியை ஏற்படுத்திய இலங்கைப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசிய விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று அவுஸ்திரேலியாவின் மெல்பர்னிலிருந்து கோலாலம்பூர் நோக்கிப் பயணித்த போது, குறித்த இலங்கையர் குண்டுப் புரளியை ஏற்படுத்தி சக பயணிகளை அச்சமடையச் செய்துள்ளார். தம்மிடம் வெடிகுண்டு இருப்பதாகவும் விமானத்தை வெடிக்கச் செய்யப் போவதாகவும் கூறி குறித்த இலங்கைப்பயணி விமானியின் அறையை நோக்கிப் பிரவேசிக்க முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த பிரச்சினை காரணமாக விமானம் மீளவும் அவுஸ்திரேலியாவிற்கே திரும்பிச் சென்றுள்ளதாகவும் குற…
-
- 3 replies
- 714 views
-
-
அண்டார்டிக் பனிப்பிளவு முக்கியத் திருப்பம் அண்டார்டிகாவில், 'லார்சன் சி' பனியடுக்கில் (Ice shelf) ஏற்பட்டுள்ள பிளவில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. விளம்பரம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய பனித் தகர்வு ஏற்படுவதற்கான அபாயத்தைக் கொண்டிருக்கும் பனிப் பிளவு, ஆச்சரியப்படும் வகையில் திசை மாறியிருக்கிறது. "அந்தப் பிளவு மேலும் 16 கிலோமீட்டர் பெருகி, பனியடுக்கின் விளிம்பில் இருந்து அதன் மூக்கை வலப்புறமாக குறிப்பிடத்தக்க அளவு வெளிப்படையாக 13 கிலோமீட்டர் அளவு திரும்பிவிட்டது," என்று ஸ்வான்சீ பல்கலைக்கழக பேராசிரியர் அட்ரியன் லுக்மன் கூறுகிறார். பனித் தகர்வு இனி எப்போது வே…
-
- 0 replies
- 966 views
-
-
காலநிலை மாற்ற உடன்படிக்கையில் இருந்து விலகும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புக்கு உலகத்தலைவர்கள் கடும் கண்டனம், பாரிஸ் ஒப்பந்தம் பாதுகாக்கப்படும் என்றும் அறிவிப்பு; பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் சூதாட்ட நிலையத்தின் மீது துப்பாக்கிதாரி தாக்குதல்! குறைந்த்து முப்பத்தியாறு பேராவது பலி இது குறித்த மேலதிக தகவல்கள் மற்றும் பிரிட்டனின் இளம் வாக்காளர்கள் தகவல்களுக்காக இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் தங்கியிருப்பது அதிகரித்துள்ள நிலையில் பொய் செய்திகளுக்கான வாய்ப்பும் அதிகரிக்குமா? என்பதை ஆராயும் பிபிசியின் சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 311 views
-
-
மணிலாவிலுள்ள களியாட்ட விடுதியில் தீவிரவாதத் தாக்குதல் : 30 க்கும் மேற்பட்டோர் பலி - காணொளி இணைப்பு பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 37 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவிலுள்ள களியாட்ட விடுதியொன்றுக்குள் புகுந்த ஆயுததாரியொருவர் திடீரென துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் பின்னர் குறித்த ஆயுததாரி தன்னைத்தானே சுட்டு தற்கொலைசெய்துகொண்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் உரிமைகோராத நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தாக்குதலாக இருக்கலாமென மணிலா பொலிஸ…
-
- 1 reply
- 361 views
-
-
சஹாரா பாலைவனத்தில் பழுதான லாரியில் இருந்த 44 பேர் தாகத்தால் உயிரிழப்பு கானா மற்றும் நைஜீரியாவில் இருந்து சஹாரா பாலைவனப் பகுதி வழியாக பயணம் மேற்கொண்ட 44 பேர் தாகத்தினால் உயிரிழந்துவிட்டதாக, ஒரு தொலைதூர கிராமத்தை சென்றடைந்த ஆறு பெண்கள் தெரிவித்தனர். படத்தின் காப்புரிமைAFP இதுதொடர்பாக செஞ்சிலுவைச் சங்கம் விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த ஆப்பிரிக்க குடியேறிகள், லிபியா வழியாக ஐரோப்பாவிற்கு செல்ல முயன்றனர். பொதுவாக வடக்கு ஆப்ரிக்க பகுதிகளுக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்துவது வழக்கம். அங்கிருந்து மத்தியதரைக் கடலை கடந்து அவர்கள் ஐரோப்பா செல்வார்கள். டிரக்குகளில் செல்லும் இவர்கள் குடிப்பதற்…
-
- 0 replies
- 771 views
-
-
பருவநிலைமாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் வேலைகளை இழக்கச்செய்யும் நியாயமற்ற ஒப்பந்தம் என்று கூறி, அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஒரு புதிய உடன்படிக்கையை நிறுவுவதற்கான பேச்சுவார்த்தை நடத்த அல்லது மேம்படுத்தப்பட்ட விதிமுறைகள் இருந்தால் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீண்டும் ஒப்புக்கொள்ளும் என்று வெள்ளை மாளிகளியில் பேசியபோது டிரம்ப் தெரிவித்தார். '' அர்த்தமுள்ள கடமைகளை உலகின் முன்னணி மாசுபாட்டாளர்கள் மீது சுமத்த முடியாதுபோது…
-
- 4 replies
- 751 views
-
-
இதை சொன்னால்தான் அமெரிக்காவுக்கு செல்லாமாம் அமெரிக்கா வீசாவை எதிர்பார்க்கும் வௌிநாட்டவர்களுக்கு, அவர்கள் கடந்த 5 வருடங்களில் பயன்படுத்திய சமூகவலைத்தள பெயரை வௌியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தின் கீழ், இது கட்டாயமாக்கப்படும். இது குறித்த சட்டத்துக்கு, கடந்த 23ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தலைமையிலான அரசாங்கத்ததால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்துக்கு அமைய, வீசாவுக்கு விண்ணப்பிக்கும் நபர், கடந்த 5 வருட காலத்தில் பயன்படுத்திய சமூக ஊடகங்கள் தொடர்பான தகவல், மின்னஞ்சல் முகவரி, அலைபேசி இலக்கங்கள் தொடர்பில் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். …
-
- 1 reply
- 690 views
-
-
’ட்ரம்ப்பை மிகவும் பிடிப்பதற்கான காரணமே ’இது’ தான்!’: விளக்குகிறார் ரஷ்ய அதிபர் புதின்! ’ஒரு மனிதன் எப்படியிருந்தால் எனக்குப் பிடிக்குமோ, அப்படியே இருக்கிறார் ட்ரம்ப்’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்து புகழுரை வாசித்துள்ளார், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை இதுவரை சந்திக்காத ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ட்ரம்ப்பை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், அந்த அமெரிக்கத் தலைவரை விரைவில் சந்திக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபர் குறித்து நேற்று பேசிய ரஷ்யாவின் புதின், ‘எனக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. எளிமையாக, நேர்மையாக, எதையும் வெளிப்படையாகக்…
-
- 0 replies
- 292 views
-
-
* அமெரிக்கா நிராகரிக்குமானால் காலநிலை ஒப்பந்தத்தை காப்பாற்ற புது வியூகம் வகுக்க சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் முயற்சி, * வங்கதேசத்தை தாக்கிய புயல்; இலங்கையில் பெய்த பெருமழை! பலர் பலி; பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்து தவிப்பு மற்றும் * உலகின் தனித்துவமான புகைப்படங்கள்; உலகின் பிரபல புகைப்பட இல்லத்திலிருந்து வரும் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 202 views
-
-
அவுஸ்திரேலியாவுடன் மலபார் போர் ஒத்திகை : மறுப்பு தெரிவித்துள்ள இந்தியா மலபார் கூட்டுப்படை போர் ஒத்திகை பயிற்சிற்கு விருப்பம் தெரிவித்திருந்த அவுஸ்திரேலியா கடற்படையுடன், பயிற்சியில் ஈடுபடுவதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இந்துசமுத்திர எல்லையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஜப்பானும் இணைந்து கடல்தள போர் ஒத்திகைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மலபார் கூட்டு கடற்படை போர் ஒத்திகை என பெயரிடப்பட்டிருந்தது. குறித்த கூட்டு கடற்படை பயிற்சியானது இந்துசமுத்திற கடல் எல்லையிலிருந்து கிழக்கே பசுபிக் கடல் எல்லை வரை நீடித்திருந்தமையால், கடற்படை பயிற்சியானது சீனாவை…
-
- 0 replies
- 337 views
-
-
ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் மோடி சந்திப்பு அரசுமுறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு வேந்தர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பெர்லின்: வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் 6 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நேற்று தொடங்கிய இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக அவர் ஜெர்மனிக்கு இந்திய நேரப்படி நேற்றிரவு சென்றடைந்தார். …
-
- 4 replies
- 640 views
-