Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இளம்பெண்ணைக் கொல்பவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு அறிவித்த ஐ.எஸ்.ஐ.எஸ்.! சிரியாவில் அரசு ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடைபெற்று வருகிறது. போதாக்குறைக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பல தாக்குதல்களை நடத்தி மக்களைக் கொன்று குவித்துவருகிறது. இந்த நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு எதிராகப் போராடிவரும் 23 வயதான இளம்பெண் ஜோல்னா பலானியை கொல்பவருக்கு ஒரு மில்லியன் டாலர் அன்பளிப்பு அளிப்பதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் அறிவித்துள்ளது. யார் இந்த ஜோல்னா பலானி... எதற்காக இவர் தலைக்கு ஒரு மில்லயன் டாலர் பரிசு வழங்க வேண்டும்? ஜோல்னா பலானி, ஈரான் நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது குடும்பம் பல ஆண்டு…

  2. Lorry ploughs into German market, killing one person The Christmas market is outside the Kaiser Wilhelm Memorial Church (photo from November) One person has died and several have been injured as a lorry ploughed into a Christmas market in central Berlin, police say. Video footage from the scene shows stalls knocked over and people lying injured on the ground. It is unclear whether it was an accident or whether the vehicle was deliberately driven into the stalls. The market is at Breitscheidplatz, close to the Kaiser Wilhelm memorial church on the Kurfuerstendamm. http://www.bbc.com/news/world-europe-38373867 Berlin police: Tr…

  3. கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதலுக்கு பதிலடி எப்போது? ஏங்கெலா மெர்கலுக்கு ஆவேசக் கேள்வி ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் உள்ள மக்கள் நெரிசல் மிகுந்த சந்தைப் பகுதியில், லாரியை ஓட்டிச் சென்று 12 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான தாக்குதல் சம்பவத்துக்கு எப்போது பதிலடி கொடுக்கப் போகிறீர்கள் என்று, ஜெர்மனியின் சான்சலர் ஏங்கெலா மெர்கலுக்கு அந்நாட்டில் உள்ள குடியேறிகளுக்கு எதிரான கட்சியான ஏஎஃப்டி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல் தொடர்பாக மெர்கல் மீது குற்றச்சாட்டு ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல் குறித்து மேலும் படிக்க: பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல்: குடியேறி ஒருவரிடம் விசாரணை இத்தாக்குதலுக்கு பதில் நடவடிக்…

  4. துருக்கியில் அமெரிக்க தூதரக அலுவலகம் அருகே துப்பாக்கிச் சூடு துருக்கியில் அமெரிக்க தூதரக அலுவலகத்தின் அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்தனர். முன்னதாக, துருக்கியில் ரஷ்ய தூதர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் அமெரிக்க தூதரகம் அருகே துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து துருக்கி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனடோலு செய்தி நிறுவனம் , "அமெரிக்க தூதரக அலுவகம் அருகே ஆடைக்குள் சிறு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த நபர் வானில் 8 முறை சுட்டார். பின் அந்த நபரை பாதுகாப்புப் பணியாளர்கள்…

  5. துருக்கி சம்பவத்தை நேரில் பதிவு செய்த புகைப்பட நிருபரின் பதற்றமான நிமிடங்கள் ரஷ்ய தூதரை கொலைச் செய்யும் காட்சி | படம்:ஏபி துருக்கியின் தலைநகர் அங்காராவில் துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரை கார்லோவ் அந்நாட்டு போலீஸ் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை தனது கேமராவில் பதிவு செய்த அசோசியேடட் பிரஸ்ஸின் புகைப்பட நிருபர் புர்கான் ஒஸ்பிலிக் தனது ஆபத்தான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதோ புர்கானே பதற்றமான தனது நிமிடங்களை விவரிக்கிறார்: "ரஷ்யாவைப் பற்றிய புகைப்பட கண்காட்சி அது. ரஷ்யாவின் கலின்ங் கிராட் நகர் முதல் கம்சாட்கா நகர் வரை தொடர்பான புகைப்படங்கள் அந்தக் கண்காட்சியில் இடம்பெற…

    • 1 reply
    • 227 views
  6. என்ன நினைக்கிறது உலகம்? - அலெப்போ அவலம்! சிரியாவின் அலெப்போ நகரில் போரின் பிடியில் சிக்கியிருக்கும் மக்களுக்கு ஆதரவாக, ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. சிரியா மக்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, பாரிஸ், லண்டன், ஆம்ஸ்டெர்டாம், ஆஸ்லோ என்று பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ரஷ்யா, ஈரான் தூதரகங்கள் முன்னர் துருக்கி மக்கள் போராட்டம் நடத்தினர். இராக் மீது அமெரிக்கா குண்டு வீசியபோது நடந்த போராட்டங்களுக்கு இணையாக நடத்தப்பட்டிருக்கும் இந்தப் போராட்டங்கள், பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடவில்லை என்பதுதான் சோகம். கடந்த ஆறு ஆண்டுகளாக இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டிருந்தா…

  7. அமெரிக்க அதிபராக அதிகாரபூர்வமாக தேர்வானார் ட்ரம்ப்! கடந்த மாதம் நடந்து முடிந்த அமெரிக்க அதிபருக்கான தேர்தலில், குடியரசுக் கட்சி 276 இடங்களில் வெற்றி பெற்றது. ஜன நாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலரி கிளின்டன் 218 இடங்களில் மட்டுமே வென்றார். இதைத் தொடர்ந்து electoral college என்னும் தேர்தல் சபை உறுப்பினர்கள் இணைந்து, அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபரை முறைப்படி தேர்வு செய்வார்கள். அதன்படி இன்று electoral college உறுப்பினர்கள் வாக்குகளில் தேவையான 270 வாக்குகளைப் பெற்றுவிட்டார் ட்ரம்ப். இதையடுத்து 45-வது அமெரிக்க அதிபராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளார் ட்ரம்ப். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்பார். http://www.v…

  8. மீண்டும் ஒரு விமான விபத்து ; 27 பேர் பலி ரஷ்யாவின் ஐ.எல் .18 என்ற பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் பயணிக்கும் போது விமானத்தில் சுமார் 32 பயணிகள் மற்றும் 7 விமானப் பணியாளர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாதாரண காலநிலைக்காரணமாக குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் ஐவர் உயிருடன் இருக்கலாம் என நம்பப்படுவதுடன், விபத்து இடம்பெற்ற இடத்துக்கு 8 ஹெலிகொப்டர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/14523

    • 2 replies
    • 430 views
  9. ரஷ்ய தூதுவர் மீது சற்றுமுன் துப்பாக்கிச்சூடு துருக்கிக்கான ரஷ்ய நாட்டு உயர்ஸ்தானிகர் தூப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கவலைக்கிடமான நிலையில் அங்காரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துருக்கியின் ரஷ்ய தூதுவரான அன்றேய் கார்லோவ் அங்காராவில் இடம்பெற்ற புகைப்பட கண்காட்சியினை திறந்துவைத்து அந்நிகழ்வில் உரையாட்டும் வேளையிலே இனந்தெரியாத நபரினால் சுடப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவத்தில் மேலும் நால்வர் சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/14546

  10. ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் நாடு கடத்தப்படக்கூடிய அபாயத்தில் விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் நிறுவுனர் எட்வட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் நாடு கடத்தப்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றார். ஹொங்கொங்கில் வைத்து ஸ்னோவ்டனுக்கு இலங்கையரான சுபுன் திலின கெலபாத்த மற்றும் அவரது மனைவி நதீகா தில்ருக்ஸி நோனீஸ் ஆகியோர் அடைக்கலம் வழங்கியிருந்தனர். குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் உரிய நேரத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாகவும் இதனால் சிறையில் தடுத்து வைத்து நாடு கடத்தப்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகவும் சீன ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. சட்ட…

  11. இந்தியாவில் இப்படியும் ஒரு எம்.பி.! நாடாளுமன்றம் முடங்கும் நாட்களில் சம்பளம் வாங்க மாட்டார்! பரிசுப் பொருட்களை லாரியில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு செல்லும் ஜனாதிபதியை பார்த்தாச்சு. நாடாளுமன்றத்தில் உறங்கும் அமைச்சர்களை பார்த்தாச்சு. சட்டமன்றத்தில் ஆபாச படம் பார்க்கும் எம்.எல்.ஏக்களை பார்த்தாச்சு. நாடாளுமன்றத்தை முடக்குவதையே லட்சியமாக கொண்ட எம்பிக்களையும் பார்த்தாச்சு...! ஆனால், இப்போதுதான் நாடாளுமன்றம் முடங்கினால், அந்த நாட்களுக்கு சம்பளமே வாங்காத எம்பியை பற்றி கேள்விப்படுகிறோம். அந்த எம்.பியும் கடந்த 16 ஆண்டுகளாக நாடாளுமன்றத்துக்கு வந்து போய் கொண்டிருக்கிறார். ஆனால்விஷயம் இப்போதுதான் வெளியே வந்திருக்கிறது. ஒடிஷாவை சேர்ந்தவர் பையந்த் ஜே. பா…

  12. முகநூலில் போலிச் செய்தி வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – ஜெர்மன் நீதி அமைச்சர் முகநூலில் போலிச் செய்திகள் வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜெர்மன் நீதி அமைச்சர் Heiko Maas தெரிவித்துள்ளார். ஜெர்மன் நீதவான்கள் மற்றும் அரச வழக்குரைஞர்கள் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் கருத்துச் சுதந்திரம் என்பது வதந்திகளையும், சேறு பூசல்களையும் நியாயப்படுத்தாது என சுட்டிக்காட்டியுள்ளார். இணையத்தில் போலியான செய்திகளை வெளியிடுவோருக்கு ஐந்தாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த தண்டனை பற்றி அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள…

  13. சதாம் ஹுசைன் கொல்லப்பட்டிருக்க கூடாது - விசாரணை அதிகாரியின் அதிர்ச்சி கருத்து ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன் கொல்லப்பட்டிருக்க கூடாது என அவரை விசாரணைக்குட்படுத்திய அதிகாரியான ஜோன் நிக்ஸன் தெரிவித்துள்ளார். சதாம் ஹுசைனை விசாரணைக்குட்படுத்திய ஜோன் நிக்ஸன் எழுதியுள்ள னுநடிசநைகiபெ வுhந Pசநளனைநவெ: வுhந ஐவெநசசழபயவழைn ழுக ளுயனனயஅ ர்ரளளநin எனும் நூலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சதாம் ஹுசைன் தன்னிடம்" அமெரிக்கா நினைப்பதை போன்று அரபு மொழியையும் எம்மக்களையும் புரிந்து செயற்பட முடியாது. எமக்குள்ளே பல்வேறு கலாசார மற்றும் சமூக செயற்பாடுகள் அடங்கியுள்ளன. அதனை உள்ளூர் நபர்களை தவிர வெளிநாட்டவர்;களால் சரியான முறையில் …

  14. அமெரிக்க நீர்முழ்கியை கைப்பற்றிய சீனா சர்வதேச கடற்கரை பகுதியில் வைத்து சீனா கைப்பற்றி இருக்கும் அமெரிக்காவின் ஆளில்லா நீர்முழ்கி ஆய்வு வாகனத்தை ஒப்படைத்துவிட கோரியிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். வியாழக்கிழமையன்று தென் சீன கடலில் வைத்து அமெரிக்காவின் இந்த ஆளில்லா நீர்முழ்கி வாகனத்தை சீன கடற்படை கைப்பற்றியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. யுஎஸ்என்எஸ் பௌவ்டிச் என்கிற இந்த ஆளில்லா நீர்மூழ்கி வாகனம் கடலியல் சார் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது. "கடல் மிதவை" எனப்படும் இந்த ஆளில்லாத நீழ்மூழ்கி கருவி நீரின் உப்பு தன்மையையும், வெப்பநிலையையும் சோதிக்கப் பயன்படுகிறது. நீருக்கடியிலுள்…

  15. பிரேஸில் கால்பந்தாட்ட வீரர்களை காவு கொண்ட கோர விமான விபத்து ; கடைசி தருணத்தில் ஆசனம் மாறியதால் உயிர் பிழைத்த வீரர் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி பிரேஸில் நாட்டின் கழகமொன்றின் கால்பந்து வீரர்கள் பயணம் செய்த விமானம் கொலம்பியாவில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 76 பேர் பலியானர்கள். குறித்த விமான விபத்தில் 6 பேர் மட்டுமே உயிர் பிழைத்தார்கள். அதில் ஒருவரான பிரேசில் உள்ளூர் அணியான செப்போசோஷஸ் கால்பந்தாட்ட கழக வீரர் ஆலன் ரூஸ்செல் (27) வைத்தியசாலை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தான் உயிர் பிழைத்ததை பற்றி கூறுகையில், நான் விபத்து ந…

  16. சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம்! "புவியின் அனைத்து சாம்ராஜ்ஜியங்களிலும் சிதறிக் கிடப்பாய்" என்பது புகழ்பெற்ற ஹீப்ரு வாசகம். இன்று உலக நாடுகளில் வாழும் மக்கள்களில் பூர்வகுடிகளை மட்டுமே கொண்ட நாடு என ஒன்று தனியாக இருக்க வாய்ப்பில்லை. ஆதியில், கூட்டம் கூட்டமாக வாழ்ந்த மக்கள் தன் தேவைகளின் பொருட்டு பல திசைகளுக்குப் பயணித்தனர். அவ்விதம் பிரிந்ததன் தொடர்ச்சியே பல இனங்கள், பல நாடுகள். பின் வந்த காலங்களில் தேவையின் பொருட்டே மனிதர்கள் வெவ்வேறு நாடுகளுக்குச் செல்லவும் வேண்டியிருந்தது. இது அனைவருக்கும் பொதுவானது. தமிழில்கூட 'திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு' என்று சொல்லப்படுகிறது. அப்படி, பல்வேறு காலகட்டத்தில் மனிதர்கள் தொழில் ரீதியாகவும், இயற்கை பேரிடர் ரீதியாகவும…

  17. ஜனாதிபதி தேர்தலில் 94 வயதில் போட்டியிடப்போகும் ஆபிரிக்க தலைவர் (லோகேஸ்வரன்) சிம்பாபேவின் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஆளும் கட்சியின் ஒருமித்த ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதத்துடன் 94 வயது பூர்த்தியை அடையும் இவர் 2018 ஆம் ஆண்டு இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் 2013ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியல் திருத்தத்தில் அவர் மேலும் ஒருமுறைதான் தலைவராக இருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆபிரிக்க பிராந்தியத்தில் சுதந்திரமடைந்த காலம் தொட்டு ஒரு நாட்டை தொடர்ச்சியாக ஆண்டு வரும் ஜனாதிபதி இவராவார் …

  18. இந்தோனேசியாவில் விமான விபத்து : 13 பேர் பலி இந்தோனேசியா நாட்டில் இராணுவ விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தோனேசியா நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்திம் டிமிக்கா என்ற இடத்தில் இருந்து வாமெனா என்ற இடத்தை நோக்கி இன்று காலை உணவுப் பொருட்களை ஏற்றிச்சென்ற ‘ஹெர்குலஸ் சி-130’ ரக விமானம் மோசமான வானிலை காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் இருந்த 3 விமானிகளும், 10 இராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். http://www.virakesari.lk/

  19. தேர்தலில் ஆதரித்து வெற்றி பெறச்செய்ததற்காக இந்திய வம்சாவளியினருக்கு டிரம்ப் நன்றி ஜனாதிபதி தேர்தலில் தன்னை ஆதரித்து வெற்றி பெறச்செய்ததற்காக இந்திய வம்சாவளியினருக்கு டிரம்ப் தனது நன்றியை தெரிவித்தார். வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், இப்போது நாடு முழுவதும் பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் அவர் புளோரிடா மாகாணம், ஆர்லண்டோ நகரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று முன்தினம் பேசினார். அப்போது ஜனாதிபதி தேர்தலில் தன்னை ஆதரித்து வெற்றி பெறச்செய்ததற்காக இந்…

  20. Dangerous waves could be headed to some South Pacific coasts after an 7.9-magnitude earthquake struck in the sea off Papua New Guinea on Saturday night, the Pacific Tsunami Warning Center said in a preliminary alert. The quake struck in the ocean about 45 kilometers east of Papua New Guinea's New Ireland island, also known as Latangai, at about 8:51 p.m. (5:51 a.m. ET), the US Geological Survey said. Hazardous tsunamis are possible though about midnight local time along some coasts of that country, as well as the Solomon Islands, Pohnpei, Chuuk, Indonesia, Nauru, Kosrae and Vanuatu, the PTWC said. http://www.cnn.com/2016/12/17/asia/earthquake-papua-new-guin…

  21. தென் கொரிய அதிபர் பதவியை குறிவைக்கும் பான் கீ மூன் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தான் பிறந்த தென் கொரியாவில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சூசகமாக தெரிவித்துள்ளார். தென் கொரிய அதிபர் தேர்தலை குறிவைக்கும் பான் கீ மூன் டிசம்பர் மாத இறுதியில் உலகின் உயர்நிலை தூதராக பான் கி மூனின் பதவிர்காலம் முடிவடைய உள்ளது. ஐ.நாவின் பொது செயலாளராக பான் கி மூன் கடைசியாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், சிறிது காலம் ஓய்வுக்கு பிறகு தென் கொரியா செல்ல இருப்பதாகவும், அங்கு தன்னால் இயன்ற சேவைகளை நாட்டுக்கு செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அட்டவணைப்படி, அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் தென் கொரிய அதி…

  22. குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஹிட்லர் பிறந்த வீட்டை சொந்தமாக்கிய ஆஸ்ட்ரியா அரசு அடால்ஃப் ஹிட்லர் பிறந்த வீட்டை அரசு கையகப்படுத்த அனுமதிக்கும் ஒரு சட்டத்தை ஆஸ்திரிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. ஹிட்லர் பிறந்த வீடு அந்த கட்டடத்தின் உரிமையாளரான கெர்லிண்டே பொம்மெர், அந்த கட்டடத்தை விற்கவோ அல்லது புதுப்பிக்கவோ தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் நாடாளுமன்றம் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. நவ நாஜி ஆதரவாளர்களுக்கு இந்த வீடு ஒரு புனிதமான இடம்போல மாறிவிடக் கூடாது என்பதற்காக ஆஸ்திரிய அரசு பிரவ்நோவ் ஆம் இன் என்ற நகரில் உள்ள இந்த வீட்டை ஒரு ஏலத்தின் போது குத்தகைக்கு எடுத்திருந்தது. குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஹிட்லர் ப…

  23. இணையவெளி ஊடுருவல்: ரஷ்யாவுக்கு ஒபாமா எச்சரிக்கை அமெரிக்க அதிபர் தேர்தலின்போது வலையமைப்பில் புகுந்து மின்னஞ்சல்களை திருடியதாகவும், இந்த நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதினிடம் ஆணையிட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்திருக்கிறார். "விளாடிமிர் புதினுக்கு தெரியாமல் ரஷ்யாவில் எதுவும் நடைபெறுவதில்லை" - ஒபாமா வலையமைப்பில் புகுந்து நடைபெற்றிருக்கும் தரவு திருட்டு பற்றி ரஷ்ய அதிபர் நன்கு அறிவார் என்பதை குறிப்பிட்டு, "விளாடிமிர் புதினுக்கு தெரியாமல் ரஷ்யாவில் எதுவும் நடைபெறுவதில்லை" என்று ஒபாமா தெரிவித்திருக்கிறார். இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை பற்றி கடந்த செப்டம்பரில் நடைபெற்ற உச்சி மாநாட…

  24. அமெரிக்க ஊடக விமர்சனங்களால் லாபமடைந்த ட்ரம்ப் ! நடந்து முடிந்த அமெரிக்கத் தேர்தலில் ஹிலரி கிளின்டன் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகவும், டொனால்டு டிரம்ப் குடியரசுக் கட்சி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டனர். பெரும்பான்மை ஓட்டு வித்யாசத்தில் ட்ரம்ப் மாபெரும் வெற்றி பெற்றார் டொனால்டு டிரம்ப். ஹார்வர்ட் கென்னடி பள்ளியின் ஷோரன்ஸ்டெய்ன் ஊடக, அரசியல், மக்கள் கொள்கை மையம் (Shorenstein Center on Media, Politics and Public Policy) சார்பில் கடந்த நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க தேர்தலில், அமெரிக்க பத்திரிகை மற்றும் ஊடகங்களின் பங்கு குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் அமெரிக்கத் தேர்தல் சமயத்தில் ஏபிசி, என்பிசி, சிபிஎஸ், சிஎன்என் உள்ளிட்ட ஊடக நிகழ…

  25. அமெரிக்க நகர மேயராக இந்திய பெண் தேர்வு கலிபோர்னியா மாநிலத்தின் கூப்பர்டீனோ நகர மேயராக தேர்வு செய்யப்பட்ட சவீதா வைத்தியநாதனுக்கு அவரது மகள் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தின் முக்கிய நகராக விளங்கும் கூப்பர்டீனோ நகரின் புதிய மேயராக இந்திய வம்சாவளி பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ளதால் உலக அளவில் பிரபல நகராக கூப்பர்டீனோ விளங்குகிறது. இந்நிலையில் இந்நகரில் முதல்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சவீதா வைத்தியநாதன் என்ற பெண் கடந்த வாரம் புதிய மேயராக பதவியேற்றார். எம்பிஏ பட்டதாரியான சவீதா, உயர்ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.