உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26881 topics in this forum
-
இன்றைய நிகழ்ச்சியில், * பேர்ள் ஹார்பர் தாக்குதல் நடத்தப்பட்டு எழுபத்தைந்து ஆண்டுகள். போரின் கொடூரங்கள் இனி கூடாது என்கிறார் ஜப்பானியப் பிரதமர். * பிரிட்டனிலும் தேர்தல் முறைகேடுகள். பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த சிலர் மீதும் பெரும் குற்றச்சாட்டு. * வெளியே தெரியா பொக்கிஷங்கள் இவை. சீனா மக்களின் வன விலங்குகளை ஆராதிக்கும் படங்கள் பற்றிய சில தகவல்கள்.
-
- 0 replies
- 226 views
-
-
ரயில் நிலையத்தில் தூங்கிய நபரை உயிரோடு கொழுத்த முயன்றதாக 7 அகதிகள் கைது கிறிஸ்துமஸ் தினத்தன்று வீடில்லாத ஒரு நபரை தீ வைத்து கொழுத்த முயற்சி செய்ததாக கூறி ஏழு இளம் அகதிகள் மீது ஜெர்மனியில் உள்ள அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். சுரங்க ரயில் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர் உறங்கிக் கொண்டிருந்த இடம் பெர்லினில் உள்ள ஒரு சுரங்க ரயில் நிலையத்தில் இருந்த அந்த நபர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் வெளியிட்ட பிறகு, உடனடியாக ஆறு சந்தேக நபர்கள் போலீசாரிடம் சரணடைந்தனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் எந்த வித பாதிப்புக்கும் ஆளாகாமல் தப்பினார். ஜெர்மன் நாட்டினரால், வீட…
-
- 0 replies
- 402 views
-
-
நத்தார் பண்டிகையை தொடர்ந்து கலவர பூமியான அமெரிக்கா (வீடியோ இணைப்பு) அமெரிக்காவின் குறிப்பிட்ட சில வர்த்தக நிலையங்களை மையப்படுத்தியதாக தாக்குதல் சம்பவங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், வர்த்த மைய நடவடிக்கைகளுக்கு இடையூரு விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அமெரிக்க பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, அமெரிக்காவின் நியூ ஜெர்சி, டெக்ஷாஸ், பீஜ்வூட், மென்ஜெஸ்டர், நோர்த் கரோலினா, ஜட்டானூகா, அரோரா மற்றும் கொலராடோ ஆகியப் பகுதிகளில் உள்ள வியாபார கட்டிடங்களை குறிவைத்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு, பொருட்கள் கொள்வனவு செய்வதற்கான தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நத்தார் பண்ட…
-
- 0 replies
- 356 views
-
-
அழிவாயுத விற்பனையில் அமெரிக்கா முதலிடம் ; கொள்வனவில் கட்டார் உலக அளவில் 2015 ஆம் ஆண்டுஅதிக ஆயுத விற்பனையை அமெரிக்கா சுமார் 40 பில்லியன் டொலர்களுக்கு மேற்கொண்டுள்ளது. அதேவேளை அதிக ஆயுத கொள்வனவை கட்டார் சுமார் 19 பில்லியன் டொலர்களுக்கு மேற்கொண்டுள்ளது. உலக ஆயுத விற்பனை வர்த்தகத்தில் தொடர்ந்தும் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. இதன் மூலம் சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளது. இரண்டாவது நிலை விற்பனையில் பிரான்ஸ் 15 பில்லியன் டொலர்களும், ரஷ்யா 11.1 பில்லியன் டொலர், சீனா 6 பில்லியன் டொலர்கள் என தமது ஆயுத விற்பனை வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளன. இதில் அமெரிக்கா 4 பில்லியன் , பிரான்ஸ் 9 பில்லியன், மற்…
-
- 0 replies
- 413 views
-
-
ஜெர்மனியைத் தாண்டியும் ஏஞ்சலா கவனிக்கப்படுவது ஏன்? ஐரோப்பிய அரசியல் புயலின் நடுவில் இருக்கிறார் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல். ஜூலை மாதம் முதல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்கின்றன. சமீபத்தில், தலைநகர் பெர்லினில் நடந்த தாக்குதல் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. ஜெர்மனியின் தாராளவாதக் குடியேற்றக் கொள்கையை இந்தச் சம்பவங்கள் கடுமையாகப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஐரோப்பாவில் வேறு யாரையும்விட அதிகமான ஆற்றல் படைத்த அரசியல்வாதி ஏஞ்சலா மெர்கல். 28 நாடுகள் பங்கேற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையிடத்தில் இருக்கிறார் அவர். ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் பன்முக ஜனநாயகப் பண்புகள் கொண்ட அரசியல் உணர்வுகளை உயர்த்திப் பிடிக்கும் இடத்தில் ஜெர்மனியை அவர்…
-
- 0 replies
- 1.5k views
-
-
வரலாற்றில் முதன் முதலாக தாக்கப்பட்ட இடத்தை பார்க்கச் சென்ற ஜப்பான் பிரதமர் அமெரிக்காவின் பெரல் துறைமுகம் தாக்கப்பட்டு 75 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தாக்குதலுக்குள்ளான பகுதியை ஜப்பான் பிரதமர் சின்சோ அபே முதன் முறையாக பார்க்கச் சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா ஜப்பான் பிரதமரை உத்தியோகப்பூர்வமாக ஹவாய் தீவிற்கு வரவேற்றுள்ளார். தொடர்ந்து இருவரும் பெரெல் துறைமுகம் அமைந்துள்ள ஓஹாகு தீவின் ஜக்கிய அமெரிக்க அரிசோனா ஞாபகாரத்த தளத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார்கள். 1941 ஆம் ஆண்டு ஜப்பானால் பெரெல் துறைமுகம் தாக்கப்பட்டதில் 2400 இற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். அது இரண்டாம் உலக மகா யுத்தத்தை உருவாக்கியதோடு, பழிதீர்…
-
- 1 reply
- 463 views
-
-
சவுதி அரேபியாவில் ஆண்கள், பெண்களை அதிகப்படியான கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்திய நபருக்கு ஒரு வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் "பாதுகாவலுக்கு" எதிராக சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்ததாகவும், கிழக்கு பகுதி நகரான டமாமில் எதிர்ப்பு பதாகைகளை வைத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. குடும்பத்தினரால் தவறாக நடத்தப்படும் தனது உறவுக்கார பெண்களுக்கு உதவ, ஆண்கள் "பாதுகாவலுக்கு" எதிரான பிரசாரத்தை தொடங்கியதாக அந்த மனிதர் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த வருடத்தின் தொடக்கத்தில், ஆண்களால் பாதுகாக்கப்படும் வழக்கத்தை நிறுத்த வேண்டும் என ஆயிரக்கணக்கான சவுதி மக்கள் விண்…
-
- 1 reply
- 400 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * கருங்கடலில் விழுந்து நொறுங்கிய ரஷ்ய இராணுவ விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுப்பு. ஆய்வுக்காக மாஸ்கோ எடுத்துச் செல்லப்படுகிறது. * அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் தாக்குதல் நடைபெற்று எழுபத்து ஐந்து ஆண்டுகள் ஆவதைக் குறிக்கும் நிகழ்வு. ஜப்பானியப் பிரதமர் பங்கேற்று அஞ்சலி. * தீப்பற்றாத மரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏதுவான பொருட்கள் மூலம் உருவாகும் கட்டடம்.
-
- 0 replies
- 326 views
-
-
துக்ளக் https://twitter.com/thatsTamil/status/813672808379138048/photo/1?ref_src=twsrc^tfw மறைந்த பத்திரிகையாசிரியர் சோ அவர்களின் துக்ளக் பத்திரிக்கையில் அதிமுகவின் எதிர்காலம் என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. சென்னை : அம்மாதான் எல்லாமே என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று சின்னம்மாவிடம் சரண்டர் ஆகிவிட்டனர். கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட்டு போயஸ்கார்டனுக்கு சென்று சந்தித்து வருகின்றனர். அதிமுக தொண்டர்கள் பலரும் சசிகலா பொதுச்செயலாளராக வருவதை விரும்பவில்லை. சசிகலா நடராஜன் குடும்பம் சதி செய்தது அம்பலமானதால் அவர், போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது பற்றி ச…
-
- 0 replies
- 697 views
-
-
ஓடு பாதையை விட்டு விலகிய விமானம் ; அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் டுபாயிலிருந்து 161 பயணிகளுடன் கோவா விமான நிலையத்திற்கு சென்ற ஜெட் ஏயர்வேஸ்க்கு சொந்தமான விமானம் சில பயணிகளை இறக்கிவிட்டு தொடர்ந்து மும்பைக்கு புறப்பட்டபோது இன்று அதிகாலை ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவத்தின் போது விமானத்திலிருந்து புகை வெளியேறியதால் அவசராமாக பயணிகளை இறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் விமானத்திலிருந்த 12 பயணிகள் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானத்தின் அவசர தரையிறங்கள் பகுதியின் ஊடாக பயணிகள் மோதிக்கொண்டு வெளியில் வர முனைந்தமையாலேயே பயணிகள் காயமுற்றுள்ளனர். அ…
-
- 0 replies
- 323 views
-
-
கொலை செய்வதற்காக குழந்தையை தயார்படுத்திய தந்தைக்கு நேர்ந்த கதி சிரியாவின் டமாஸ்கஸ் நகர தற்கொலைத்தாக்குதலுக்கு 7 வயதான சிறுமியை தயார்படுத்தி அனுப்பிய சிறுமியின் தந்தை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரிலுள்ள பொலிஸ் நிலையத்தில் டிசம்பர் 16 ஆம் திகதி 7 வயது சிறுமி தற்கொலை தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தார். அவரது தந்தை அபு நிம்ர் அல் சுரி தாக்குதல் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. சிறுமிகள் இருவருக்கும் இஸ்லாம் மதப்பெண்கள் அணியும் உடையை அணிவித்து அவர்களின் உடைகளுக்குள் தற்கொலை குண்டை பொருத்தி தாக்குதல் சூத்திரதாரியான சுரி குழந்தைகளுக்கு தற்கொலை தாக்குதல் …
-
- 0 replies
- 313 views
-
-
ஆற்றல் இருந்தும் ஒரு கிளப் போல ஐநா மாறிவிட்டது: டிரம்ப் விமர்சனம் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், ஐக்கிய நாடுகள் (ஐநா) சபை அமைப்பை கவலை அளிக்கும் ஒரு அமைப்பு என்று விமர்சனம் செய்துள்ளார். ஐநா அமைப்பு மீது டொனால்ட் டிரம்ப் விமர்சனம் ஐநா அமைப்புக்கு மிக அதிக அளவில் ஆற்றல் உள்ளதாவும், ஆனால் அந்த அமைப்பு மக்கள் ஒன்று கூடி சந்தித்து பேசி மகிழ ஏற்படுத்தப்பட்ட ஒரு கிளப் போல மாறிவிட்டது என்று டிவிட்டர் வலைதளத்தில் டொனால்டு டிரம்ப் ஐநா அமைப்பு குறித்து தெரிவித்துள்ளார். மேற்கு கரைப் பகுதியில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐநா பாதுகாப்பு குழு வாக்கெடுப்பை தாமதப்படுத்துவதை உறுதிசெய்ய த…
-
- 0 replies
- 344 views
-
-
100 பயணிகளுடன் ரஷ்ய விமானம் மாயம்.! 70 பயணிகள் உட்பட 100 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் ஒன்று காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் சோச்சியில் இருந்து 100 பயணிகளுடன் சென்ற டியு-154 விமானம் கருங்கடல் அருகே காணாமல் போயுள்ளது. ரஷியா நாட்டில் கருங்கடலை ஒட்டியுள்ள சோச்சி நகரில் இருந்து சிரியாவில் உள்ள லட்டாக்கிய நகரை நோக்கிச் சென்ற அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் ராடாரின் கண்காணிப்பில் இருந்து மாயமானதாக தெரியவருகிறது. http://www.virakesari.lk/article/14727
-
- 3 replies
- 616 views
-
-
மோடியின் ஏமாற்று நாடகங்கள்! நாடே அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மக்கள் வேலைக்குப் போகாமல் ஏடிஎம் வாசல்களிலும், வங்கி வாசல்களிலும் மணிக்கணக்கில் ரூபாய் நோட்டை மாற்றுவதற்காக காத்துக் கிடக்கின்றார்கள். அவர்களிடம் சென்று மோடியின் இந்தத் திட்டத்தைப் பற்றி கேட்டால் கழுவி, கழுவி ஊற்றுகின்றார்கள். மோடியை காதுகொடுத்துக் கேட்க முடியாத கெட்ட கெட்ட வார்த்தைகளால் சகட்டுமேனிக்குத் திட்டித் தீர்க்கின்றார்கள். ஆனால் சூடு சுரணையே இல்லாத பாஜகவினர் ஊடகங்களில் மக்கள் இந்தத் திட்டத்திற்குப் பெரிய அளவில் ஆதரவு தருவதாக புளுகுகின்றார்கள். சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்று அரைலூசுகளால் சொல்லப்பட்ட இந்த அறிவிப்பு ஒரு உலகமகா மோசடி என்று தற்போது தெரிய வந்துள்ளது. மோடி இந்த அறிவிப்பை வெளியிடும் முன்பே…
-
- 5 replies
- 724 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * சிரியாவுக்கு பயணித்த ரஷ்ய இராணுவ விமானம் கருங்கடலில் வீழ்ந்ததில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக ரஷ்யாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு. * சிரியப் போரில் பெரும் தீக்காயமடைந்த பாத்திமாவின் கதை இது. ஜெர்மனிய அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் அந்த குழந்தைக்கு மறுவாழ்வளிக்க முயல்கின்றனர். * மடகாஸ்கருக்கே உரிய லீமர்ஸ் விலங்கினம் அழியும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.அவற்றை காப்பாற்ற பாதுகாக்கப்பட்ட சரணாலயங்கள் அறிமுகம்.
-
- 0 replies
- 386 views
-
-
சிரியாவில் முக்கிய நகரை கைப்பற்ற அமெரிக்காவின் உதவியை நாடும் துருக்கி வட கிழக்கு சிரியாவில் உள்ள ஒரு முக்கிய நகரிலிருந்து ஐ.எஸ் போராளிகளை விரட்டும் போரில் அமெரிக்க தலைமையிலான கூட்டணி படையினரின் வான்வழி ஆதரவு வேண்டி துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது. கோப்புப்படம் அத்தைகைய ஆதரவை இடைநிறுத்துவது என்பது கூட்டணிக்கு ஏற்புடையதல்ல என்று துருக்கி அதிபர் ரெசிப் தாயிப் எர்துவனின் பேச்சாளர் கருத்து தெரிவித்துள்ளார். பல வாரங்களாக, துருக்கி ராணுவத்தின் ஆதரவோடு போராளிகள் சண்டையிட்டு ஐ.எஸ் குழுவிடமிருந்து அல்-பாப் நகரை கைப்பற்றினார்கள். கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குமுன், சிரியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கைகள் தொட…
-
- 0 replies
- 405 views
-
-
இந்த ஆண்டு முழுவதும் சிரிய நாட்டுப்போரால் பொதுமக்கள் படும் இன்னல்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தகைய பாதிப்புக்குள்ளான ஒரு சிறுமிக்கு அடுத்த ஆண்டு நம்பிக்கையளிப்பதாக அமையக்கூடும். ஜெர்மனியில் அளிக்கப்பட்ட அறுவை சிகிச்சை, அவரது மறுவாழ்வின் துவக்கமாக பார்க்கப்படுகிறது. இது குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தித்தொகுப்பு. இதில் வரும் காட்சிகள் சிலருக்கு மன சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். BBC
-
- 0 replies
- 276 views
-
-
பாடகர் ஜார்ஜ் மைக்கேல் காலமானார்.! பிரிட்டீஷ் பாப் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் லண்டன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். ஜார்ஜ் மைக்கேலின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். பாடகர் ஜார்ஜ் மைக்கேல் தமது இசைக் குழு மூலமாக உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானார். ஜார்ஜ் மைக்கேலின் ஆல்பம்கள் கோடிக்கணக்கில் விற்பனை ஆகியுள்ளது. மறைந்த மைக்கேலுக்கு வயது 53. உலகம் முழுவதும் மக்கள் கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடி கொண்டிருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது. உடல்நலக் குறைவுக் காரணமான நீண்ட காலமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த மைக்கேல் நேற்று உயிரிழந்துள்ளார். http://www.virakesari.lk/article/14757
-
- 3 replies
- 710 views
-
-
சீனாவின் கடல் ஆக்கிரமிப்பு பயணத்தின் பலத்தை அதிகரிக்க தொடங்கியுள்ள கடற்படை பயிற்சிகள் (காணொளி இணைப்பு) சீனா தனது மேற்கு கடற்பகுதியில் முதன் முறையாக கடற்தள விமானப்படை பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பசுபிக் கடற்பரப்பில் அமெரிக்க மற்றும் சீன ஆக்கிரமிப்புகள் குறித்த சர்ச்சைகள் தொடரும் நிலையில் சீனா தனது கடற்படையை பலப்படுத்தியுள்ளது. அத்தோடு அண்மையில் அமெரிக்க தாய்வான் உறவுகள் வளர்க்கப்படுவது குறித்து விமர்சனங்களை தெரிவித்து வந்த சீனா திடீரென கடற்தள விமானப்படைகளுக்கு சொந்தமான டி – 15 பைடர் ஜெட் (fighter jets) விமானங்களை கொண்டு பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றமை ஆசிய பிராந்தியத்தில் சர…
-
- 0 replies
- 636 views
-
-
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவுமாறு ஸ்னோவ்டன் கோரிக்கை இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவுமாறு அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வெளியிட்டதாக குற்றம்சுமத்தப்பட்ட எட்வட் ஸ்னோவ்டன் தெரிவித்துள்ளார். ஹொங்கொங்கில் தமக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவுமாறு, ஸ்னோவ்டன் தனது நத்தார் தின செய்தியில் கோரியுள்ளார். டுவிட்டர் ஊடாக இந்தக் கோரிக்கையை ஸ்னோவ்டன் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்னோவ்டனுக்கு உதவி வழங்கியவர்களுக்கா நிதி திட்டும் நடவடிக்கையொன்று அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஸ்னோவ்டன் ஹொங்கொங்கில் தங்கியிருக்க உதவிய இலங்கையரான சுபுன் திலின கெலபெத்த, அவர…
-
- 0 replies
- 400 views
-
-
சிலியில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை சிலி நாட்டின் தெற்குப் பகுதியில் இன்று மாலை 7.6 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேதம் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. http://www.vikatan.com/news/world/75892-tsunami-alert-in-chile-after-76-richter-earthquake.art
-
- 0 replies
- 359 views
-
-
சிரியாவில் அளவுக்கு அதிகமாக ரத்தம் சிந்தியுள்ளது: கிறிஸ்துமஸ் உரையில் போப் உருக்கம் வத்திகானில் கிறிஸ்துமஸ் தின உரையை நிகழ்த்திய போப் ஃபிரான்சிஸ், சிரியாவில் நடைபெறும் மோதல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மேலும், இந்த மோதலில் அளவுக்கதிமாக ரத்தம் சிந்தப்பட்டுள்ளதாகக்கூறினார். வத்திகானில் கிறிஸ்துமஸ் தின உரையை நிகழ்த்திய போப் ஃபிரான்சிஸ் பகை மற்றும் பழிவாங்கும் உணர்வை கைவிடும்படி பாலத்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களை அவர் வலியுறுத்தியுள்ளார். செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் முன்னிலையில் அவர் பேசினார். கடந்த வாரம் பெர்லினில் நிகழ்ந்த லாரி தாக…
-
- 0 replies
- 626 views
-
-
ஜெர்மனியில் பாரிய சேதம் விளைவிக்க கூடிய குண்டை செயலிழக்க வைப்பதற்காக 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றம் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட, வெடிக்காத பாரிய சேதம் விளைவிக்க கூடிய குண்டு ஒன்றை செயலிழக்க வைப்பதற்காக ஜெர்மனியின் ஒக்ஸ்பர்க் (Ausburg) நகரில் இருந்து சுமார் 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சுமார் 1800 கிலோ நிறையுடைய இந்தக் குண்டு 1944-ம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்து படைகளால் பயன்படுத்தப்பட்ட போது ஒக்ஸ்பர்க் நகரமே நிர்மூலமாகிப் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுமானப் பணிக்காக ஒக்ஸ்பர்க் நகரில் அண்மையில்; பள்ளம் தோண்டியபோது கிடைத்த இந்த வெடிகுண்டை இன்றையதினம் பாதுகாப்பான முறைய…
-
- 0 replies
- 452 views
-
-
மலேசியா... "பத்துமலை முருகன்" ஆலயத்தில் நான்காவது படிக்க கட்டு, திறந்து வைக்கப் பட்டது. மலேசியாவில் பிரசித்தி பெற்ற அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் (இந்துக்கள்) மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோயில்களில் ஒன்றான.... "பத்துமலை திருத்தலத்தில்" கூடுதலாக கட்டப்பட்டுள்ள நான்காவது வரிசை படிகட்டின் திறப்பு விழா வாணவேடிக்கைகளுடன் நேற்று சிறப்பாக நடைபெற்றது. - வணக்கம் மலேசியா நியூஸ். -
-
- 0 replies
- 444 views
-
-
டிரம்பின் அதிகார வேட்டையை கட்டுபடுத்த ஓபாமா திட்டம் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் முஸ்லிம்கள் மீதான கொள்கையை நடைமுறைப்படுத்த விடாமல் தடுப்பதற்காக முஸ்லிம்கள் பற்றிய தரவுகளை அழிப்பதற்கு ஓபாமா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2001 ஆம் ஆண்டு இரட்டைகோபுர தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவிற்குள் வரும் மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் ஆபிரிக்க கண்டங்களை சேர்ந்த முஸ்லிம் மக்கள் பற்றிய தரவுகள் தேசிய குடிவரவு அடிப்படையின் கீழ் அமெரிக்காவால் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. அத்தோடு அவர்களை தீவிர கண்கானிப்பிற்கு உட்படுத்தி வரும் நடைமுறையும் பின்பற்றப்பட்டது. இந்நிலையில் முஸ்லிம்களின் வருகை க…
-
- 0 replies
- 463 views
-