உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26883 topics in this forum
-
'இங்கே அடிச்சா எங்கெல்லாம் வலிக்கும்?' - அமெரிக்க அதிபர் தேர்தலும். உலகப் பொருளாதாரமும்! #USElections2016 நாளை, நவம்பர் 8, 2016. அமெரிக்க அதிபர் தேர்தல். அரசியல் பின்னணி எதுவும் இல்லாத பிசினஸ்மேன் டொனால்டு டிரம்ப் குடியரசுக் கட்சியின் சார்பாகவும், பல ஆண்டுகள் அரசியலில் ஈடுபட்டு வெள்ளைமாளிகையின் நடவடிக்கைகளை அருகிலிருந்து பார்த்து அனுபவம் பெற்ற ஹிலரி கிளின்டன் ஜனநாயகக் கட்சியின் சார்பாகவும் மோதுகின்றனர். இவர்களுக்கிடையேயான பிரச்சாரம் அமெரிக்க அதிபர் தேர்தலில் என்றும் இல்லாத அளவுக்கு மிக மோசமான விவாதங்களாலும், வார்த்தைகளாலும் இருப்பது அரசியல் நோக்கர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அமெரிக்காவின், அந்நாட்டு மக்களின் நலன் என்பதைத் தாண்டி அமெர…
-
- 0 replies
- 565 views
-
-
"தில்லு முல்லு" அமைப்புகளால் பாதுகாக்கப்படுகிறார் ஹிலரி: ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பின் போட்டியாளரான ஹிலரி, புதிதாக கண்டறியப்பட்ட மின்னஞ்சல்கள் குறித்து எந்த ஒரு வழக்கையும் எதிர் கொள்ளமாட்டார் என்ற எஃப் பி ஐயின் கூற்றை கடுமையாக விமர்சித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப். மிஷிகனில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணியில், எட்டு நாட்களில் எஃப் பி ஐ, ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் மின்னஞ்சல்களை மறு ஆய்வு செய்திருக்க முடியாது என்று கூறிய ட்ரம்ப், மேலும் ஹிலரி "தில்லு முல்லு" அமைப்பால் பாதுகாக்கப்படுகிறார் என்றும் தெரிவித்தார். வருடத்தின் தொடக்கத்தில், ரகசிய தகவல்களை ஹிலரி கையாண்டது குறித்த தங்களது முடிவை எஃப் பி ஐ மாற்றிக் கொள்ளவில்லை என்று நாடாளுமன்றத…
-
- 0 replies
- 307 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரில் ஒருவரான கில்லாரி கிளின்டன் ஆறு லட்சத்து ஐம்பதினாயிரம் மின்னஞ்சல் சம்பந்தமாக கடந்த ஒரு கிழமையாக தொலைக்காட்சியிலும் சரி வானெலிகளிலும் சரி புரட்டி எடுத்துக் கொண்டிருந்தனர்.அந்த முறை எப்படியும் தப்ப வாய்ப்பே இல்லை தேர்தலுக்கு முன்னமேயே பிடித்துவிடுவார்கள்.இது ஓரு தேசிய குற்றம் என்றெல்லாம் ஆளாளுக்கு சொல்லிக் கொண்டிருக்க வெற்றி நிச்சயம் என்று ஏற்கனவே கணித்த முடிவுகளிலும் நிறையவே மாற்றங்கள்.12-14 வரை டொனால்ட் ரம்பை முன்னணியில் நின்ற கில்லாரி திடீரென்று பல புள்ளிகளால் கீழிறங்கி 4-5 வீதம் தான் முன்னணி சில சமயம் இருவரும் சமம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க குடியரசுக்கட்சியில் உள;ளவர்கள் கில்லாரி எப:போது கைது செய்யப்படுவார் என்றெல்லாம் பார்த்துக் கொண்…
-
- 2 replies
- 770 views
-
-
இந்தியா பெருங்கடலில் உருவாகும் 'குட்டி சீனா' அம்பாந்தோட்டை துறைமுகம், சீனாவின் கைக்குச் செல்லப் போகிறது. இந்த மாத நடுப்பகுதியில், சீன நிறுவனங்களுடன் இலங்கை அரசாங்கம் செய்து கொள்ளவுள்ள உடன்பாட்டுக்கு அமைய, அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத பங்கு உரிமை சீனா நிறுவனத்துக்கு விற்கப்படவுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம் மாத்திரமன்றி, மத்தள விமான நிலையமும் கூட அவ்வாறு தான் சீன நிறுவனத்துக்கு கைமாற்றப்படவுள்ளது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் உரிமையை சீன நிறுவனத்துக்கு கைமாற்றுவதன் மூலம், கிடைக்கும் 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியைக் கொண்டு, ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் சீனாவிட…
-
- 0 replies
- 626 views
-
-
பிரெக்ஸிட்: நம்பிக்கை, கோபம், நிச்சயமற்ற நிலை ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவானது நம்பிக்கை, கோபம், நிச்சயமற்ற நிலை ஆகியவற்றை உருவாக்கி யுள்ளது. சமீபத்திய நிகழ்வுகள் இதைத்தான் உணர்த்துகின்றன. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பிரிட் டன் பிரதமர் தெரசா மே, இதற்கு பதில் அளிப்பார் என எதிர்பார்த் தால் அதில் நிச்சயம் ஏமாற்றம் தான் மிஞ்சும். ஐரோப்பிய கூட்ட மைப்பிலிருந்து பிரிட்டன் வெளி யேறிய பிறகு அதன் நடவடிக் கைகள் எப்படி இருக்கும் என்பதை எவராலும் தீர்மானிக்க முடியாத சூழல்தான் தற்போது உள்ளது. பிரெக்ஸிட் தொடர்பாக பிரிட் டன் நாடாளுமன்றத்தின் இறை யாண்மையை…
-
- 0 replies
- 286 views
-
-
ஜெர்மனியில் அகதிகள் மீது தாக்குதல்: 3 பேர் காயம் ஜெர்மனியின் ஹைடனவ் நகரில் நடைபெற்ற தாக்குதலில் மூன்று அகதிகள் காயமடைந்துள்ளனர்; ஒரு வருடத்திற்கு முன்பு வலது சாரி தீவிரவாதிகளல் அங்கு பலநாட்கள் வன்முறை போராட்டங்கள் நடத்தப்பட்டன. கோப்புப் படம் முப்பது பேர் கொண்ட குழு ஒன்று, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பதின்ம வயதைக் கொண்ட அம்மூவரை நோக்கி அவதூறாக பேசினர்; பின்பு அவர்களை தாக்கவும் செய்தனர் இது குறித்து போலிஸார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இது குறித்து பேசிய ஹைடனவ்வின் மேயர் ஜுர்ஜென் ஒபிடிஸ், இந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்; ஆனால் தனது நகரில் நிறவெறிப் பிரச்சனை நிகழ்வதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். " ஜெர்மனி முழுவதும் தின…
-
- 0 replies
- 263 views
-
-
மேடையிலிருந்து திடீரென பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்ட டிரம்ப் : அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம் (காணொளி இணைப்பு) அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் நெவடா நகரில் இடம்பெற்ற பிரசாரத்தில் உரை நிகழ்த்திக்கொண்டிருந்த போது, கூட்டத்திலிருந்த மர்ம நபர் ஒருவர், டிரம்ப் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளார். உடனே சுதாரித்த அவரது பாதுகாவலர்கள் டிரம்பை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் குறித்தப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது. தனது ஒரு கையெழுத்தால் ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றும் வலிமை கொண்டது அமெரிக்க ஜனாதிபதியின் கையெழுத்து. அந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு எப்போ…
-
- 0 replies
- 417 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளால் கைதிகளுக்கு கத்தியால் குத்தி சிலுவையில் அறைந்து மரணதண்டனை ஐ.எஸ். தீவிரவாதிகள் தம்மால் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களுக்கு சிறுவர்களாலும் வயோதிபர்களாலும் கொடூரமான முறையில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் புதிய காணொளிக் காட்சியொன்றை வெளியிட்டுள்ளனர். அந்தக் காணொளிக் காட்சியில் கைதிகளுக்கு கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும் மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது. அவர்களில் ஒரு கைதிக்கு தீவிரவாதியொருவர் கத்தியால் குத்தி மரணதண்டனை நிறைவேற்ற பிறிதொருவருக்கு தலையில் துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றப்…
-
- 2 replies
- 666 views
-
-
மியன்மாரில் முஸ்லிம் அல்லாதோருக்கு ஆயுதங்கள் வழங்குவது பாதகமானது – மனித உரிமை அமைப்புக்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு மியன்மாரில் முஸ்லிம் அல்லாதோருக்கு ஆயுதங்கள் வழங்கப்படுவது பாதகமானது என மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. மியன்மாரின் ராக்கினி மாநிலத்தில் இவ்வாறு முஸ்லிம் அல்லாதோருக்கு அந்நாட்டு இராணுவத்தினர் ஆயுதங்களை வழங்கியுள்ளனர்.ரொஹினியா சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஆயுததாரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் இவ்வாறு ஆயுதங்கள் வழங்கப்படுவது உரிமை மீறல்களுக்கு வழியமைக்கும் என குற்றம் சுமத்தியுள்ள மனித உரிமை அமைப்புக்கள் ரொஹினியா முஸ்லிம்கள் இந்த நடவடிக்கையினால் பாதிக்கப்படலாம் எ…
-
- 2 replies
- 617 views
-
-
அமலுக்கு வந்தது பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் பல ஆண்டுகள் நடைபெற்ற சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பருவநிலை மாற்றம் தொடர்பாக கையெழுத்தான உலக நாடுகளின் முதல் ஒப்பந்தமான பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. தொழிற் புரட்சி ஏற்பட்ட காலத்தில் இருந்த அளவிலிருந்து சராசரியாக இரண்டு டிகிரி உலக வெப்பமயமாதலைக் குறைப்பதை இது இலக்காகக் கொண்டிருக்கிறது. பலத்த புயல்கள், வறட்சிகள் மற்றும் கடல் நீர்மட்டம் உயர்தல் உள்பட ஆபத்தான பருவநிலை மாற்றங்களை தவிர்ப்பதற்கு இந்த இலக்கு முக்கியமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தொழிற் புரட்சி மேற்கொள்ளப்பட்ட காலத்திற்கு முன்பை விட பூமியில் ஏற்கெ…
-
- 0 replies
- 396 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கை: நீதிமன்றத் தீர்ப்பால் தாமதமாகுமா? ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளைத் துவக்குதவற்கு, அதற்கான விதிமுறைகளின் பிரிவைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரிட்டன் அரசாங்கத்தின் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அரச சிறப்பு அதிகாரம் என்ற பெயரில், நாடாளுமன்றத்தைத் தவிர்த்துவிட்டு அரசாங்கம் செயல்பட முடியாது என்று, பிரசாரகர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய…
-
- 4 replies
- 570 views
-
-
தீவிரவாதிகளின் புகலிடம் ஆக ஜெர்மனி உருவாகியுள்ளது என்று துருக்கி ஜனாதிபதி டய்யீப் எர்டோகன் பேசினார். துருக்கியில் கடந்த ஜூலையில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புடைய அமெரிக்காவை சேர்ந்த மதகுருவின் ஆதரவாளர்களை வெளியேற்ற ஜெர்மனி தவறி விட்டது என்றும் துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார். துருக்கியில் கடந்த 30 வருடங்களாக குர்தீஷ் இனத்திற்கு சுயாட்சி கோரி குர்தீஷ் இன போராளிகள் மற்றும் இடதுசாரிகளும் ஆயுத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஜெர்மனி நீண்ட நாட்களாக தஞ்சம் அளித்து வந்துள்ளது என்றும் எர்டோகன் கூறியுள்ளார். அவர், ஜெர்மனியிடம் இருந்து எதனையும் நாங்கள் எதிர்நோக்கி இருக்கவில்லை. ஆனால் தீவிரவாதத்தினை தூண்டியதற்காக நீங்கள் வரல…
-
- 1 reply
- 510 views
-
-
அமெரிக்க தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது? அதன் நடைமுறைகள் என்ன? 2017 ஆம் ஆண்டு ஜனவரியில், உலகின் மிக சக்திவாய்ந்த நாடு ஒரு புதிய தலைவரை பெற்றிருக்கும்- ஆனால் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடைமுறைகள் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது ? அமெரிக்கா அதன் அதிபரை தேர்ந்தெடுக்கும் போது வெறும் நாட்டின் தலைவரை மட்டுமல்ல ஒரு மிகப்பெரிய அரசாங்கத்தின் தலைவரையும், இந்த உலகத்தில் இருக்கும் மிகப்பெரிய ராணுவத்தின் தளபதியையும் தேர்ந்தெடுக்கின்றது. எனவே அது ஒரு முக்கிய பொறுப்பு. அது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். அதிபராக தகுதி பெற்றவர்கள் யார்? அமெரிக்காவின் அதிபராவதற்கு நீங்கள் "இயற்கையான முறையில்" அதாவது அமெரிக்காவில் பிறந்த அமெரிக்கக் குடிமக…
-
- 0 replies
- 485 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க ஐந்து நாட்களே உள்ளநிலையில் முக்கிய மோதல் களமான ஃப்ளோரிடா மாநிலத்தின் கறுப்பினத்தவரின் வாக்கைக் கவர இரு வேட்பாளர்களும் மும்முரமாக ஈடுபட்டிருப்பது குறித்த செய்தி. * போரில் பலியானவர்களை நினைவு கூறும் தினத்தில் பாப்பி அணிய இங்கிலாந்து கால்பந்து வீரர்க்ளுக்கு உலக கால்பந்து அமைப்பு தடை; பெரும் கோபத்தில் பிரிட்டிஷ் பிரதமர். * ஆப்பிரிக்கா எங்கும் மருத்துவர்களுக்கு பெரும் தட்டுப்பாடு; இதற்குத் தீர்வு காணுமா நமீபியாவின் புதிய மருத்துவ கல்லூரி?
-
- 0 replies
- 548 views
-
-
இந்த நாட்டிற்கும், உலகிற்கும் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல்: அதிபர் ஒபாமா இந்த நாட்டிற்கும், உலகிற்கும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல் என்று அதிபர் ஒபாமா, தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்துள்ளார். இந்த நாட்டிற்கும், உலகிற்கும் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல்: அதிபர் ஒபாமா ஆதரவு ஊசலாடும் மாநிலம் என்று கருதப்படும் மாநிலங்களில் ஒன்றான, வட கரோலினாவில் மாகாணத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அதிபர் ஒபாமா, அடுத்த அமெரிக்க அதிபராக ஹிலரி தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், கடந்த எட்டு ஆண்டுகளில் தான் அதிபராக இருந்த போது அடைந்த முன்னேற்றங்கள் அனைத்தும் பின் தள்ளப்படும் என்றார். சிறுபான்மை குழுக்களின் சிவில் உரிமைகளை ட்ரம்…
-
- 0 replies
- 367 views
-
-
ஊடகங்களுக்கு நம்பகத்தன்மை என்பது மிகப்பெரிய சவால்! ஊடகத் துறை தொடர்பாக விருது வழங்கும் நிகழ்ச்சி தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு விருது வழங்கினார். பின்னர் பேசிய மோடி தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய காலத்தில் நம்பகத்தன்மை என்பது ஊடகங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது:- நம்பகத்தன்மையை தக்கவைத்து கொள்ளது ஊடகங்களுக்கு முக்கியமானது. மக்களுக்கு தற்போது நிறைய செய்திகள் சென்று சேர்கிறது. ஆனால் அந்த செய்திகளில் நம்பகத் தன்மை என்பது மிகவும் பெரிய பிரச்சனையாக உள்ளது. எல்லாவற்றின் மீதும் எல்லோர் மீதும் கருத்து சொல்ல ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் இருந்த போதும், அது மற்றவர…
-
- 0 replies
- 286 views
-
-
செளதி அரச குடும்ப இளவரசருக்கு சிறையில் சவுக்கடி தண்டனை செளதி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு மற்றுமொரு இளவரசருக்கு, அதிகாரபூர்வ தண்டனையாக சிறையில் சவுக்கடிகள் வழங்கப்பட்டன என செய்திகள் தெரிவிக்கின்றன. செளதியின் தற்போதைய அரசர் சல்மான் இளவரசரின் அடையாளமோ அல்லது அவர் புரிந்த குற்றங்கள் பற்றிய தகவல்களோ இதுவரை வெளியிடவில்லை. இந்த நிகழ்வு அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவும் இல்லை. ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இருக்கும் சவுதி அரசக் குடும்பத்தில் இம்மாதிரியான நீதிமன்ற தண்டனையை எதிர்க்கொள்வது அரிதான ஒன்று. இஸ்லாமிய சட்டம் அனைவரையும் ஒரே மாதிரி நடத்துகிறது என்று கூறி சவுத…
-
- 7 replies
- 915 views
-
-
ஹிலரி அமெரிக்க அதிபரானால் பில் கிளிண்டன் எவ்வாறு அழைக்கப்படுவார்? வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஹிலரி கிளிண்டனை பின் தொடர்ந்த கேள்வியும், பல ஆயிரக்கணக்கில் கூகுள் தேடுதளங்களில் தேடப்பட்டதும் ஒரே கேள்வி தான் . எவ்வாறு அழைக்கப்படுவார் பில்? ஹிலரி கிளிண்டன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரது கணவரான பில் கிளிண்டன் எவ்வாறு அழைக்கப்படுவார்? - இது தான் அந்த கேள்வி. உலக அரங்கில் , பில் கிளிண்டன் முக்கிய அரசியல் பங்கு வகிப்பது புதிதில்லை. ஜெர்மனியின் சான்சலர் ஏங்கெலா மெர்கலின் கணவரும், வேதியல் பேராசிரியருமான யோவாசிம் ஜார், அவரது இயற் பெயரால் தான் அழைக்கப்படுகிறார். அதே போல் தான், புதிய ப…
-
- 5 replies
- 759 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. * மொசூலின் புறநகர் பகுதிக்குள் நுழைந்த இராக்கிய படைகள் நகரை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வீடு வீடாக நகருகின்றன. * மொறோக்கோவில் மீன் வியாபாரி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து இரவு பகலாக போராட்டம். இரு போலிஸார் உட்பட பதினொரு பேர் கைது. * எவரெஸ்ட் சிகரத்துக்கு அருகே ஆபத்தான ஏரியை சீர் செய்யும் நேபாளிகள். நீர்வரத்து பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களை இது பாதுகாக்கும்.
-
- 0 replies
- 394 views
-
-
புலியை... நேருக்கு நேர் சந்தித்து, போட்டோ எடுத்த பிரதமர் மோடி! ராய்ப்பூர்: ராய்ப்பூர் விலங்கியல் பூங்காவில் புலியை பிரதமர் மோடி எடுப்பது போன்ற புகைப்படம் டுவிட்டரில் வேகமாக பரவி வருகிறது. சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் ஆண்டு விழா "ராஜ்யோத்சவம்' என்ற பெயரில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சென்றுள்ளார். இதனிடையே அம்மாநிலத்தில் உள்ள நந்தன் வனவிலங்குகள் பூங்காவைப் பார்வையிட்டார். பூங்காவில் இருந்த விலங்குகளைப் பார்வையிட்ட அவர், வேலி அருகே நிற்கும் புலியைத் தனது கேமரா மூலம் புகைப்படம் எடுத்தார். பிரதமர் கேமராவில் படம் பிடிப்பது போன்ற…
-
- 2 replies
- 797 views
-
-
பிரான்சின் கலே முகாமிலிருந்து ஆதரவற்ற குழந்தைகள் வேறு முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர் ஜங்கிள் என்ற புலம் பெயர்ந்தவர்களுக்கான முகாமில் தற்போதும் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளை பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள், பிரான்சில் உள்ள புதிய மையங்களுக்கு இன்று கூட்டிச் செல்கின்றனர். பிரிட்டனுக்குப் பயணம் செய்வதற்கான நம்பிக்கையுடன் அந்த முகாமில் கப்பல் கொள்கலன்களைத் தற்காலிக இருப்பிடமாகக் கொண்டு சுமார் 1,500 இளைஞர்கள் வாழ்ந்துவந்தனர். அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆவணங்களில், இனிமேல் ஐக்கிய ராஜ்யத்திற்கு மாறிச் செல்வதற்கான மனுக்கள் எதுவும் கலேயில் கையாளப்படாது என்று கூறப்பட்டுள்ளது . செவ்வாயன்று இரவு நேரத்தில், பதின்ம வயதில் உள்ள எரித்திரி…
-
- 0 replies
- 223 views
-
-
ஹிலாரியை சற்றே முந்தினார் டிரம்ப்: புதிய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தகவல் அமெரிக்காவின் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப். | கோப்புப் படம்: ஏபி அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி நடத்தப்பட்ட புதிய கருத்துக்கணிப்பில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிலையில், அமெரிக்க தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஏபிசி/வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட புதிய கருத்துக்கணிப்பின் முடிவில் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப், ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரியை விட 1% முன்னிலை பெற்றிருக்கிறா…
-
- 0 replies
- 341 views
-
-
வீதியோர கடைகளில் விற்கப்படும் பூனை கறி பிரியாணி: - அதிர வைக்கும் சம்பவம்! [Monday 2016-10-31 17:00] சென்னை ரோட்டோர கடைகளில் விற்கப்படும் உணவுகளில் பூனை கறி பயன்படுத்தி வருவது ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.விலங்கு உரிமை ஆர்வலர்கள் பல்லாவரம் பகுதி இளைஞர்களின் உதவியோடு பூனைகள் இறைச்சிக்காக பயன்படுத்துவதை வீடியோவாக பதிவு செய்து ஆதாரத்துடன் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.குறித்த வீடியோவில் பூனைகளை உயிருடன் கொதிக்கும் தண்ணீரில் முக்கி கொன்று தோலை உரித்து இறைச்சிக்காக பயன்படுத்துவது பதிவாகியுள்ளது. விலங்கு உரிமை ஆர்வலர்கள் கொடுத்த புகாரை தொடர்ந்து பல்லாவரம் பகுதியல் உள்ள ரோட்டோர கடைகளில் பொலிசார்…
-
- 4 replies
- 874 views
-
-
ஹிலரியின் உதவியாளர் மின்னஞ்சல்களை சோதனையிடவுள்ள எஃப் பி ஐ ஹிலரி கிளிண்டனின் மூத்த உதவியாளர் ஒருவரின் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை சோதனையிடுவதற்கான நீதிமன்ற உத்தரவை அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் பெற்றுள்ளனர். ஹிலரி கிளிண்டன் வெளியுறவுச் செயலராக இருந்த போது தனியார் மின்னஞ்சல் சர்வர்களை பயன்படுத்தியது குறித்த விசாரணையை மீண்டும் தொடங்கவுள்ளதாக, வெள்ளியன்று மத்திய புலானாய்வுத் துறையின் தலைவர் ஜேம்ஸ் கோமி அறிவித்தார். அமெரிக்க செனட்டின் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஹேரி ரெய்ட், கோமியின் நடவடிக்கைகள் சட்ட விரோதமானதாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்பிற்கும் ரஷிய அரசாங்கத்திற்கும் இடையே உள்ள நெருங்கிய உறவு குறித்த ஆச்சரியத்திற்குரிய தக…
-
- 4 replies
- 495 views
-
-
இரண்டாம் உலகப் போரின் 'ஹீரோ' மரணம்..?! கடந்த 1939-ம் ஆண்டு இரண்டாம் உலகக் போர் தொடங்கியது. சுமார் 6 ஆண்டுகள் நடைபெற்றது. ஜெர்மனியின் ஹிட்லருடன் சேர்ந்து கொண்டு சில நாடுகளும் பிரிட்டன் தலைமையில் நேச நாடுகளும் இரு தரப்பாக போரிட்டன. கிட்டத்தட்ட 10 கோடி வீரர்கள் போரில் பங்கேற்றனர். இன அழிப்பு, அணுகுண்டு வீச்சு போன்ற பெரும் நிகழ்வுகளை சந்தித்த போர் இது. கடந்த 1939-ம் ஆண்டு நாஜி ஜெர்மனி போலந்து மீது தாக்குதல் நடத்தியதே இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டது. போர் தொடங்கிய 2 ஆண்டுகளில் ஜெர்மனி தன்னை சுற்றியிருந்த பல நாடுகளை ஆக்கிரமித்துக் கொண்டது. ஹிட்லரோ தன் வீரர்கள் மீது அக்கறை காட்டுவதை விட, யூதர்களை தேடி தேடி கொல்வதையும் கொடுமைப்படுத்துவதையும்தான் மு…
-
- 0 replies
- 486 views
-