Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சிரியா கைதி தற்கொலை; ஜெர்மன் சிறை கையாண்ட விதத்தில் 'தவறுகள்' கடந்த வாரம் சிறைச்சாலையிலேயே தற்கொலை செய்து கொண்ட, குண்டு தாக்குதலுக்கு திட்டமிட்டவராக கருதப்பட்ட சந்தேக நபர் தொடர்பான சம்பவத்தில், தவறுகள் நடைபெற்றிருப்பதாக ஜெர்மனியின் சாக்சனி மாநிலத்தின் நீதி அமைச்சர் ஒப்பு கொண்டுள்ளார். சனிக்கிழமை சந்தேக நபரின் குடியிருப்பில் தேடுதல் நடத்திய காவல்துறையினர் புகைப்படங்களை வெளியிட்டனர் இஸ்லாமியவாத சந்தேக நபர்களை கையாள்வது தொடர்பாக சிறைச்சாலையின் அமைப்பிலுள்ள ஒவ்வொருவரும் இதிலிருந்து பாடங்களை கற்றுகொள்ள வேண்டும் என்று செபாஸ்டியான் கெம்கோக் என்பவர், வெல்ட் அம் ஸேண்டாக் என்ற ஜெர்மனி நாளிதழிடம் கருத்து தெரிவித்திருக்கிறார். ஊழி…

  2. பிரிட்டன் வெளியேற்றம்: போரிஸ் ஜான்சன் கருத்துக்களில் முரண்பாடு ஜூன் மாதம் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், பிரிட்டிஷ் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டுமென்று வலியுறுத்தி பிரசாரம் செய்த முன்னிலை அரசியில்வாதிகளில் ஒருவர், பிப்ரவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரித்து கட்டுரை எழுதியுள்ளதை பிரிட்டன் நாளிதழ் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதால் ஏற்படுகின்ற ஆபத்துக்கள் பற்றி முன்னதாக எழுதியிருந்த ஆனால் வெளியாகாத கட்டுரை ஒன்றில் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்திரு்நதார் வெளியாகாத அந்த கட்டுரையில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராக இருப்பதால் ஆகின்ற செலவு மிகவும் குறைவானது என்ற…

  3. பான் கி-மூன் சாதித்தது என்ன? கடந்த 2014 அக்டோபரில் இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் பான் கி-மூன் பயணம் செய்தார். அங்கு பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினர் அமைத்திருந்த சுரங்கப் பாதையை அவரே நேரடியாக பார்வையிட்டார். நூறு மாடுகளை மேய்க்க ஒரு குச்சி போதும். 100 மனிதர்களை மேய்க்க 100 குச்சிகள் தேவை என்கிறது ஓர் ஆப்பிரிக்க பழமொழி. ஐ.நா. சபையை வழிநடத்துவதும் அப்படித்தான். 193 நாடுகளிடம் கருத்தொற்றுமையை ஏற்படுத்து வது சாதாரண விஷயமில்லை. பத்து ஆண்டுகள் ஐ.நா.வை வழிநடத்தியுள்ள பான் கி-மூன் கூறியபோது, ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் அனைத்துமே தங்களை தலைவராகப் பாவிக்கின்றன. தங்கள் சொல்படிதான் செயல்பட வேண்டும் என்று விரும்புகின்றன. அது எப்படி சாத்தியம…

  4. அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி, பிரிட்டன், ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களை சந்தித்து சிரியா குறித்து ஆலோசிக்க லண்டனிற்கு சென்று கொண்டிருகிறார். சனிக்கிழமையன்று ஸ்விட்சர்லாந்தில் ரஷியா மற்றும் போர் நிறுத்தம் குறித்த எந்த ஒரு உறுதியான ஒப்பந்தத்திற்கும் உடன்படாத சிரியாவின் அண்டை நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் கெர்ரி நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கெர்ரியின் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் புதிய யோசனைகள் ஆலோசிக்கப்பட்டன என்றும், சிரியாவில் அமைதி நிலவுவதற்கான வெவ்வேறு அணுகுமுறைகளுக்கு அது வழிவகுக்கும் என தான் நம்புவதாக கெர்ரி தெரிவித்துள்ளார். ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லவ்ரஃப், ஆலோச…

  5. இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு புதிய கவுரவம் உலகின் மிக நீண்ட கால மன்னராட்சிக்கு சொந்தக்காரர் என்ற பெருமையை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பெற்றுள்ளார். தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யாதெஜ் (88) நேற்று முன் தினம் காலமானார். கடந்த 1946-ல் அரியணை ஏறிய அவர் 70 ஆண் டுகள், 4 மாதங்கள் மன்னராக நீடித்தார். உலகின் மிக நீண்டகால மன்னராக அவர் விளங்கினார். அவரது மறைவைத் தொடர்ந்து அந்தப் பெருமை தற்போது இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு கிடைத்துள்ளது. 90 வயதாகும் அவர் 1952-ம் ஆண்டு இங்கிலாந்தின் ராணியாக பதவியேற்றார். அவர் 64 ஆண்டுகள் 8 மாதங்களைப் பூர்த்தி செய்துள்ளார். தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சுவாசிலாந்த…

  6. பிரிட்டனில் பேர் பயிற்சி பெறுவதற்காக வந்த லிபிய ராணுவ பயிற்சி படையினர் நடத்திய பாலியல் தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்கு பல இலட்சக்கணக்கான டாலர் இழப்பீட்டை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் செலுத்தியிருக்கிறது. கேம்பிரிட்ஜ்க்கு அருகிலுள்ள படையினர் பயிற்சி தளம் 2014 ஆம் ஆண்டு முந்நூறுக்கும் மேலான லிபிய ராணுவ பயிற்சி படையினர் இங்கிலாந்தின் தென் பகுதிக்கு வந்தனர். கர்னல் கடாஃபியின் வீழ்ச்சிக்கு பின்னர் லிபியாவை ஸ்திரப்படுத்த உதவுவதற்கு உருவாக்கப்பட்ட பயிற்சி திட்டத்தின் பகுதியாக அவர்கள் வந்திருந்தனர். பாலியல் தாக்குதல்கள் வெளிவர தொடங்கிய பிறகு, அந்த படைப்பிரிவினர் முன்னதாகவே தாயகம் அனுப்பப்பட்டனர். ஆனால், அவர்களால் நடத்தப்பட்ட த…

  7. ஆஸ்திரேலிய புதுமணத் தம்பதியரை இலக்கு வைத்து தாக்கிய கோபமடைந்த பறவைகள் ஒவ்வோர் ஆண்டும் “திடீர் தாக்குதல் பருவத்தில்” குண்டுக் கரிச்சான் பறவைகளால் தாக்குதலுக்கு உள்ளாகும் நூற்றுக்கணக்கானோரில் ஒரு புதுமணத் தம்பதியினர் தான் ஃபிலிப் மற்றும் சாரா மரியா புதிதாக திருமணம் செய்து கொண்ட மகிழ்ச்சியில் திளைக்கும் சிறந்த படமாக முதல் பார்வையிலேயே இது தெரிகிறது அல்லவா! கணவரும், மனைவியும் தங்களுடைய நெற்றியோடு நெற்றி வைத்து ஒட்டிக்கொண்டு, ரம்மியமான சூழலை அனுபவித்து இன்புறுகிறார்கள். சிவ பூஜையில் கரடி நுழைவது போல அங்கு வந்ததுதான் குண்டுக் கரிச்சான் குருவி. ஏதோ பறவைகள் பற்றிய கொடூர பழைய காட்சியை விவரிக்கிறேன் என்று எண்ணிவிட வேண்டாம். ஆஸ்திரேலியாவ…

  8. இரு புதிய நண்பர்களைவிட ஒரு பழைய நண்பரே சிறந்தவர்: புதின் முன்னிலையில் ரஷ்யாவுக்கு மோடி புகழாரம் ரஷ்ய அதிபர் புதின் (இடது), பிரதமர் நரேந்திர மோடி (வலது). | படம்: பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கம். புதிய நண்பர்கள் இருவரைவிட ஒரே ஒரு பழைய நண்பர் மேலானவர் என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், கோவாவில் நடைபெறும் 2 நாள் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் இருவரும் சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து ஆலோசித்தனர். பின்னர், அங்கு இருந்தபடியே கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமானத்துக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி, பணியைத் த…

  9. கூடங்குளம் 3, 4வது அணு உலைகளின் கட்டுமானப் பணிகளை மோதி - புதின் துவக்கி வைத்தனர் கூடங்குளத்தில் அமையவிருக்கும் மூன்றாவது, நான்காவது அணுஉலைகளின் கட்டுமானப் பணிகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் இன்று சனிக்கிழமை, காணொளிக் காட்சி மூலம் துவக்கிவைத்தனர். இந்திய நலன்களுக்கு முரணாக ரஷ்யா எதனையும் செய்யாது - மோதி பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் உச்சி மாநாடு கோவா நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் கலந்துகொண்டுள்ளார். இந்தியா - ரஷ்யா இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் இன்று காலையில் துவங்கின. இந்…

  10. 1937 ஆம் ஆண்டு நான்ஜிங் படுகொலை தொடர்பான ஆவணங்களை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்திருப்பதற்கு எதிர்ப்பை வெளிகாட்டும் வகையில், ஐக்கிய நாடுகள் அவையின் கலாச்சார நிறுவனத்திற்கு வழங்குகின்ற நிதி ஆதரவை ஜப்பான் நிறுத்தி வைத்திருக்கிறது. இரண்டாவது சீன தேசிய நான்ஜிங் படுகொலை நினைவு தினம் அனுசரிப்பு இரண்டாம் உலகப் போரின்போது, முன்னாள் சீனாவின் தலைநகரை ஜப்பான் ஆக்கிரமித்தபோது, ஆயிரக்கணக்கான சீன மக்களை ஜப்பான் படையினர் கொன்று குவித்தனர். ஆனால், நான்ஜிங் பாலியல் வல்லுறவு என்று அறியப்படும் இந்த படுகொலை பற்றி பெரிதாக பேசப்படுவதை ஜப்பான் விரும்புவதில்லை. எனவே, அது பற்றிய ஆவணங்கள் யுனெஸ்கொவில் பதிவு செய்யப்படுவதற்கு முன்பாக, அவற்றை மீளாய்வு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்…

  11. தாய்லாந்தை 70 ஆண்டுகளாக ஆண்ட மன்னர் காலமானார் தாய்லாந்தின் மன்னர் பூமிபொல் அட்டுலியடேஜ், தனது 88ஆவது வயதில், இன்று வியாழக்கிழமை (13) காலமானார் என, தாய்லாந்து அரச மாளிகை அறிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகவே நோய்வாய்ப்பட்டிருந்த மன்னர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, அரச மாளிகையின் அறிவிப்புத் தெரிவித்தது. உலகில் அதிக காலம் அரச பொறுப்பில் காணப்பட்டவர் என்ற பெருமையைக் கொண்ட மன்னர், தனது சகோதரர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தனது 18ஆவது வயதில், மன்னராகப் பொறுப்பேற்றார். மன்னர் பூமிபொலின் 64 வயதான மகன், மகா வஜிரலோங்கொன், புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/183…

  12. அமெரிக்க வரலாற்றில், அநியாயமான அரசியல் அவதூறு பிரசாரங்களால் பாதிக்கப்பட்ட நபர் நான்: டொனால்ட் டிரம்ப் பல பெண்கள் தன் மீது பாலியல் தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டியதற்குப் பின், டொனால்ட் டிரம்ப் அமெரிக்க வரலாற்றில், மோசமான அரசியல் அவதூறு பிரசாரங்களால் பாதிக்கப்பட்ட நபர் தான் எனப் புகார் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக உள்ள டிரம்ப், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நூறு சதவீதம் பொய்யானவை என்று கூறியுள்ளார். தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் இந்தத் தேர்தல் தில்லு முல்லு நிறைந்தது என்றார். ஒரு தசாப்தத்திற்கு முன்பு, பெவர்லி ஹில்ஸ் ஹோட…

  13. போலி கால் சென்டரில் பேசி அமெரிக்கர்களை ஏமாற்றிய 750க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சந்தேகத்தின் பேரில் கைது இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள தானே நகரத்தில் ஒரு போலி கால் சென்டரில் இருந்து அமெரிக்கர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தது அவர்களை ஏமாற்றியதாக எழுந்துள்ள சந்தேகத்தின் பேரில் 750க்கும் மேற்பட்டவர்களை போலிசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள், அமெரிக்காவில் வரி செலுத்த தவறியவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல்களைப் பெற்று அவர்களை தொடர்பு கொண்டனர் என்று போலிசார் தெரிவித்துள்ளனர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களை மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்தி அவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் பெற்று, பின்னர் பணத்தை எடுத்துக்கொண்டனர். …

  14. ஜெர்மனியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட அகதியை தேடிவரும் போலிஸார் போலிஸார் சந்தேக நபரின் வீட்டில் சோதனையிட்ட போது ஜெர்மனியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்திற்குள்ளான சிரியாவைச் சேர்ந்த நபரை போலிஸார் தேடி வருகின்றனர். ஜெர்மனியின் கிழக்கில் உள்ள கெம்னிட்ஸ் நகரில், அவரின் வீட்டை சோதனையிட்டதில் பெருமளவு வெடிபொருட்களை கண்டறிந்ததையடுத்து போலிஸாரால் அவர் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தேடப்பட்டுவரும் நபரான 22 வயதாகும் ஜபெர் அல்பக்கர் சோதனையிட்ட போது வீட்டில் இல்லை; சந்தேகத்திற்குரிய நபருடன் தொடர்புடையதாக கருதப்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் சமீபத்தில் வந்த அகதிகள் கூட்டத்தில் தேடப்பட்டு வரு…

  15. பெர்லின் தாக்குதல் திட்டம்: இஸ்லாமியவாத மதகுரு மீது சிரிய அகதியின் சகோதரர் குற்றச்சாட்டு பெர்லின் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்பட்ட சிரியா அகதி, ஜெர்மன் தலைநகரத்தில் உள்ள இஸ்லாமியவாத போதகரால் தீவிர உணர்வுமிக்கவராக மாற்றப்பட்டதாக அவருடைய சகோதரர் தெரிவித்துள்ளார். லெயிப்ஸிக் சிறைச்சாலை டேர் ஷ்பீகல் என்ற நாளிதழுக்கு அவருடைய சகோதரர் அளித்துள்ள பேட்டியில், ஜபர் அல் பக்ர் 2014 ஆம் ஆண்டு சிரியாவிலிருந்து தப்பி வந்து ஜெர்மனியில் வசித்த போது இஸ்லாமிய மதகுரு ஒருவரால் மூளைச்சலவை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். சிரியாவிற்கு மீண்டும் திரும்ப ஜபர் மதகுருவால் ஊக்கப்படுத்தப்பட்டதாகவ…

  16. இன்றைய நிகழ்ச்சியில், * தன் மீதான புதிய பாலியல் புகார்களை மறுக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்; குடியரசுக்கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளர் மீது மிஷெல் ஒபாமா கடும் தாக்குதல். * வங்கதேச எதிர்கட்சிகள் ஒடுக்கப்படுவதாக அதிகரிக்கும் புகார்கள்கா; காணாமல் போகும் எதிர்கட்சிக்காரர்கள் என்ன ஆகிறார்கள்? புலனாய்கிறது பிபிசி. * சிம்பன்ஸிகளுக்கு சிம்பன்சிகளாக இருப்பதற்கான பயிற்சி; இங்கிலாந்து மிருககாட்சி சாலையில் வித்தியாசமானதொரு முயற்சி; பிபிசியின் பிரத்யேக காட்சிகள்.

  17. ட்ரம்புக்கு எதிராக குவியும் பாலியல் புகார்கள் படம்.| ஏ.பி. அமெரிக்க குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக ஏராளமான பெண்கள் பாலியல் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2005-ம் ஆண்டில், பெண்கள் குறித்து ட்ரம்ப் ஆபாசமாக பேசிய வீடியோ அண்மையில் வெளியானது. இதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக ஏராளமான பெண்கள் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள இரண்டு பெண்கள், ட்ரம்ப் தங்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். பீப்பிள் மேகஸின் பெண் நிருபர் ஒருவர் கூறியபோது, ட்ரம்ப் தன்னை வலுக்கட்டாயமாக முத்தமிட்டதாக கூறியுள்ளார். விமானப் பயணத்த…

  18. லிபியா கடற்கரைக்கு அருகே குடியேறிகள் சென்ற படகு விபத்து; 17 பேர் பலி லிபியா கடற்கரைக்கு அப்பால், குடியேறிகள் சென்ற ரப்பர் படகு பிரச்சினைக்கு உள்ளானதால் குறைந்தது 17 குடியேறிகள் கடலில் மூழ்கிப் போயுள்ளதாக நம்பப்படுகிறது. ரப்பர் படகு மூழ்கிக் கொண்டிருந்த போது விபத்து நடந்த பகுதிக்கு ஐரோப்பிய தொண்டு நிறுவன குழுக்கள் சார்பில் இயக்கப்படும் ஒரு மீட்பு கப்பல் விரைந்து வந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் காப்பாற்றப்பட்டார்கள். ஆனால், கடல் சீற்றமிகுந்து காணப்பட்டதால் பலர் காணாமல் போனார்கள். காணாமல் போனவர்களில் மூன்று வயது குழந்தை ஒன்றும் அடங்கும். http://www.bbc.com/tamil/global-37650622

  19. ஜப்பானியருக்கு மருத்துவத்துக்கான நோபல்! #NobelPrize #Medicine உலகின் உயர்ந்த பரிசாக கருதப்படும் நோபல் பரிசுகள் இந்த வாரம் முழுக்க அறிவிக்கப்படும். இன்று ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில், மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த வருடத்துக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு, ஜப்பான் நாட்டை சேர்ந்த யோஷினோரி ஓஷுமிக்கு வழங்கப்பட உள்ளதாக நோபல் கமிட்டி அறிவித்தது. BREAKING NEWS The 2016 #NobelPrize #Medicine awarded to Yoshinori Ohsumi @tokyotech_en ”for his discoveries of mechanisms for autophagy” ஆட்டோபேஜி(Autophagy) எனப்படும் செல் தொடர்பான நிகழ்வின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டறிந்ததற்காக இவருக்கு இந்த விருது வழங்க…

  20. இன்றைய நிகழ்ச்சியில், * உலகின் மிக நீண்டகால முடியாட்சியின் அரசராக பதவி வகித்த தாய்லாந்து மன்னர் எண்பத்தியெட்டாம் வயதில் காலமானார். * இஸ்லாமிய அரசு என்னும் அமைப்பில் இருந்து விலகியவர்கள் எங்கே போவார்கள்? அப்படிப்பட்டவர்கள் வடக்கு சிரியாவிலுள்ள ரகசிய முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது குறித்த பிபிசியின் பிரத்யேகத் தகவல்கள். * பிரிட்டிஷ் நிறுவனம் உருவாக்கும் ஓட்டுனரில்லா ட்ராக்டர்கள்; விவசாயத்தின் எதிர்காலம் இதுதானா? ஆராய்கிறது பிபிசி.

  21. இரண்டாவது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கான மசோதா தாக்கல் செய்யப்படும்: ஸ்காட்லாந்து முதல்வர் ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து ஸ்காட்லாந்து விடுதலைக்கான இரண்டாவது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர், நிக்கோலா ஸ்டர்ஜன் உறுதிப்படுத்தியுள்ளார். ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் கிளாஸ்கோவில் நடைபெற்ற அவரது கட்சியான, ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி மாநாட்டின் போது, ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கான மசோதா அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். இரண்டாவது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவத…

  22. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகியவுடன், ஐரோப்பிய சந்தைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் அணுகும் வாய்ப்பை அதிகபட்ச அளவில் பெற்றுத் தர தான் உறுதியுடன் இருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் தெரீசா மே அவர் அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு உரிமையில் எந்தெந்த பகுதிகளை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தன்னை தானே கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் அதற்கு மாறாக, பிரிட்டனின் குடிமக்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிகபட்ச நன்மைகளை வழங்குவதற்கான சரியான உறவைவத் தான் அது வேண்டுகிறது என்றார். பிரதமர் மே, ஐரோப்பிய ஒன்றிய ஒற்றைச் சந்தையில் பிரிட்டன் தொடர்ந்து உறுப்புரிமை வைத்திருக்க வேண்டும் என்பதற்க…

  23. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் புதிய பொதுச்செயலராக போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த ஆன்டோனியோ கட்டரஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ.நா. மன்றம் எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலராக தென்கொரிய நாட்டை சேர்ந்த பான்-கி-மூன் உள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் அவர் இந்தாண்டு இறுதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, புதிய பொதுச்செயலரை தெரிவு செய்யும் பணி நடைபெற்றது. இதுதொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் போர்த்துகல் முன்னாள் பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் அதிக வாக்குகள் பெற்று தெரிவானார். இவருக்கு ஐ.நா., பாதுகாப்பு சபையில் உள்ள 15 நாடுகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர் தற்போது ஐ.நா., சபையின் அகதிகள்…

  24. மேற்கு ஆசியாவில் ஒபாமா செய்ததென்ன? ஏழரை ஆண்டுகளுக்கு முன்னர், கெய்ரோ பல்கலைக்கழகத்தில் மூவாயிரம் பார்வையாளர்களின் முன்பாக உரை நிகழ்த்திய பராக் ஒபாமா, இஸ்லாமிய உலகத்துக்கு ஒரு புதிய தொடக்கத்தைத் தரவிருப்பதாகச் சொன்னார். அவநம்பிக்கை மிகுந்த ஆண்டுகளைக் கடக்க முயற்சி செய்த அவர், இஸ்ரேல் - பாலஸ்தீன அமைதி முயற்சிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். அது தொடர்பாக நிலையான கொள்கை எதையும் அவர் குறிப்பிடவில்லை என்றாலும், அமெரிக்காவின் புதிய அதிபர், முந்தைய அதிபர்களின் தவறுகளைச் சரிசெய்வதுடன், மேற்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவுடனான அமெரிக்காவின் உறவில் புதிய அத்தியாயத்தைத் திறந்துவைப்பார் என்று பெரிதும் நம்பப்பட்டது. வெள்ளை மாளிகையைவிட்ட…

  25. "தி டவர்" துபாயில் புதிதாய் அமைந்துவரும் 'கிரீக் ஹார்பர்' பகுதியில் உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் "தி டவர் (The Tower)" எனும் பெயரில் அமைக்க துபாய் அரசரால் கடந்த 10 திகதி அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கட்டிடத்தின் இறுதியான உயரம் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தின் உயரம், சவுதி அரபியாவில் தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வரும் 1000 மீ உயரமான கிங்டம் டவரை விட அதிக உயரமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. துபாயில் வரும் 2020 வருடம் நடைபெறவுள்ள "எக்ஸ்போ 2020" விழாவிற்கு முன்பாக இக்கட்டிடம் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.. புர்ஜ் கலீஃபா கட்டிடத்தை கட்டிய எம்மார் நிறுவனமே இதற்கும் பொறுப்பேற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.