உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27050 topics in this forum
-
நைஜீரியாவில் 75 ஆயிரம் குழந்தைகள் பட்டினியால் சாகும் நிலை : ஐ.நா. கவலை நைஜீரியா நாட்டில் அடுத்த சிலமாதங்களில் சுமார் 75 ஆயிரம் குழந்தைகள் அடுத்தடுத்த மாதங்களில் பட்டினியால் நம் கண்முன்னால் சாகும் பரிதாப நிலை உருவாகியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவின் எண்ணெய்வளம் மிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள் ஏழ்மை நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். 17 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்நாட்டில் உள்ள ஏராளமான ஏழை மக்களின் சராசரி வருமானம் நாளொன்றுக்கு 2 டொலர்களை விட குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டி…
-
- 0 replies
- 370 views
-
-
நான் தேனீர் விற்றபோது எல்லோரும் கடும் தேனீர்தான் கேட்பார்கள் – நாணயத்தாள் விவகாரம் குறித்து மோடி: நாணய செயலிழப்பு மற்றும் புதிய நாணத்தாள் அறிமுகம் குறித்த தன்னுடைய நடவடிக்கை கடுமையானது என்பதை ஒப்புக்கொள்வதாக கூறிய இந்தியப் பிரதமர் மோடி தான் தேனீர்விற்றபோது எல்லோரும் கடும் தேனீர்தான்( சாயம் கூடிய ஸ்ரோங் ரீ) கேட்பதாக தெரிவித்துள்ளார். கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைக்கு ஏழை மக்கள் தனக்கு பக்கபலமாக இருப்பதாக தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் காங்கிரஸ் இதற்கு முட்டுக்கட்டை போட முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலம் காஸிபூரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்திலேய…
-
- 0 replies
- 398 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * மியன்மாரில் இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்ட ரொஹிஞ்சா முஸ்லிம்களின் எண்ணிக்கை அறுபத்தொன்பது என்கிறது இராணுவம். பர்மிய தலைவி ஆங் சான் சூசி நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஆசியான் கோரிக்கை. * அமெரிக்காவில் விற்கப்படும் ஹெராயின் மெக்ஸிகோவில் எப்படி தயாரிக்கப்படுகிறது? நேரில் சென்று ஆராயும் பிபிசி செய்தியாளரின் பிரத்யேக புலனாய்வுச் செய்தித்தொகுப்பு. * உலகின் அதிவேக மனிதர் உசைன் போல்ட் ஓய்வு பெறுகிறார்; அடுத்தது என்ன? பிபிசிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி.
-
- 0 replies
- 480 views
-
-
ஏராளமான பறவைகள் மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் 2016-11-15 11:56:46 பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானத்தின் மீது ஏராளமான பறவைகள் மோதியதால் அவ் விமானம் அவசரமாக தரையிறக்கப் பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றது. தோமஸ் குக் நிறுவனத்தின் விமானமொன்று ஆபிரிக்க நாடான காம்பியாவின் பன்ஜுல் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி பறந்து கொண்டிருந்தது. இதன்போது, பறவைகள் கூட்டத் துடன் விமானம் மோதியது. விமானத்தின் என்ஜின்களிலும் பறவைகள் மோதின. இதையடுத்து, அவ் விமானம் மீண்டும் பன்ஜூல் நகருக்குத் திசை திருப்பப்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. …
-
- 1 reply
- 523 views
-
-
அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் யுத்த குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் – சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2003 மற்றும் 2004ம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தலிபான் தீவிரவாதிகள், ஆப்கானிஸ்தான் அரச படையினர் , அமெரிக்கப் படையினர் மற்றும் சீ.ஐ.ஏ உளவுப் பிரிவினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்ட போது இ…
-
- 0 replies
- 221 views
-
-
பாரிய பூமியதிர்ச்சியை தொடர்ந்து நியூஸிலாந்தை தாக்கியது சுனாமி நியூஸிலாந்தின் தெற்கு தீவை சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி ஒன்று தாக்கி உள்ள நிலையில், அதனைத்தொடர்ந்து சுனாமி தாக்கியுள்ளது. கிறைஸ்ட்சர்ச்சில் இருந்து சுமார் 95 கிலோமீற்றர் தொலைவில் 7.8 ரிச்டர் அளவில் குறித்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, இரு மணி நேரங்கள் கழித்து வட-கிழக்கு கடற்கரையை சுனாமி தாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் கடற்கரைக்கு அப்பால் செல்லுமாறும் அல்லது உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 6 replies
- 950 views
-
-
ஆஸியில் பிரபல பாதாளகுழு தலைவன் நடு வீதியில் வைத்து கொலை (படங்கள் இணைப்பு) அவுஸ்திரேலியா - சிட்னி சௌத் வெஸ்ட் பகுதியில் பிரபல பாதாள குழு தலைவர் ஒருவர் நடு வீதியில் வைத்து சுட்டுக்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி சௌத் வெஸ்ட் பகுதியில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பஸ்குலோ பர்பரோ என்ற 35 வயது மதிக்கத்தக்க பாதாளகுழு தலைவனே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் குறித்த பகுதிக்கு வந்த பொலிஸார் நடு வீதியில் கொல்லப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த பர்பரோவின் சடலத்தை அகற்றியுள்ளனர். இதேவேளை சம்பவம் தொட…
-
- 0 replies
- 391 views
-
-
நிலநடுக்கத்தை தொடர்ந்து நியூசிலாந்தில் மழை வெள்ளம்: மக்கள் சிக்கித் தவிப்பு நிலநடுக்கத்தை தொடர்ந்து நியூசிலாந்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனர். கைகொயுராவில் சிக்கிய மக்கள் ஹெலிகாப்டரில் ஏற்றிச்செல்லப்படும் காட்சி. வெலிங்டன்: நியூசிலாந்தில் நேற்று முன்தினம் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் 7.8 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து, 2 பேர் பலியாகினர் பலர் காயம் அடைந்தனர். ரோடுகள் துண்டிக்கப்பட்டன. மின்சாரம், ரோடுகள், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்ப…
-
- 0 replies
- 269 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * நியூசிலாந்தை இரண்டாவது சக்தி மிக்க பூகம்பம் தாக்கிய நிலையில் கடற்கரை நகரான கைகோராவில் அகப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவ கடற்படை விநியோகங்களை அனுப்புகிறது. *புதிதாக தேர்வான அதிபர் ட்ரம்ப் உயர் பதவிகளுக்கான நியமனங்களை ஆரம்பித்துள்ளார் . முஸ்லிம்கள் மற்றும் லத்தினோ அமெரிக்கர்கள் மீதான துன்புறுத்தல்களை நிறுத்துமாறும் அவர் கோரியுள்ளார். * ரோமியோ ஜூலியட் நாடகம் அரங்கேறிய முதல் அரங்கு எப்படியிருக்கும்? கிழக்கு லண்டனில் அண்மையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கட்டிடம் ஒன்று புதிய சான்றுகளை தருகின்றது.
-
- 0 replies
- 363 views
-
-
மது, புகைத்தல் பழக்கமற்ற டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றியீட்டியுள்ளார். 70 வயதான இதற்கு முன் எந்தவொரு அரசியல் பதவியையும் வகிக்காதவர் டொனால்ட் ட்ரம்ப். பெற்றோருடன் டொனால்ட் ட்ரம்ப் டொனால்ட் ட்ரம்பின் தாத்தா, அதாவது, தந்தையின் தந்தையான பிரெட்ரிக் டரம்ப், தற்போது ஜேர்மனிய பிராந்தியமாகவுள்ள பவேரியா ராஜ்ஜியத்தில் 1869 ஆம் ஆண்டு பிறந்தவர். 1885 ஆம் ஆண்டு தனது 16 வயதில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். 1901 ஆம் ஆண்டு ஜேர்மனிக்குத் திரும்பி எலிஸபெத் கிறிஸ்ட் என்பவரை திருமண…
-
- 0 replies
- 404 views
-
-
ஈக்வடார் தூதரகத்தில் அசாஞ்சேவிடம் விசாரணை நடத்திய ஸ்வீடன் அதிகாரிகள் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ள ஜூலியன் அசாஞ்சேவிடம், பாலியல் வழக்கு தொடர்பாக ஸ்வீடன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். லண்டன்: அமெரிக்க ராணுவம் தொடர்பான ரகசிய கோப்புகளை விக்கிலீக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (வயது 45) மீது நடவடிக்கை எடுக்க, அமெரிக்கா தீவிர நடவடிக்கை எடுத்தது. இதனைதொடர்ந்து, அவர் லண்டனிலுள்ள ஈக்வடா…
-
- 0 replies
- 272 views
-
-
ஜெயலலிதா பாணியில் டிரம்ப் : ஒரு டாலர்தான் சம்பளம் ! ஆண்டுக்கு ஒரு டாலர் மட்டுமே சம்பளமாக பெறப் போவதாகவும் ஆண்டு இறுதி விடுமுறை கூட எடுக்காமல் மக்கள் பணியாற்றப் போவதாகவும் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டெனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். கருத்துக் கணிப்புகள் ஹிலரி வெற்றி பெறுவார் என்றன. ஆனால், அதிரடியாக டிரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார்.மக்களிடையே ஹிலரிக்கு ஆதரவு இருந்தாலும் பிரதிநிதித்துவ வாக்குகள் கிடைக்காத காரணத்தினால் ஹிலரியால் அதிபர் ஆக முடியவில்லை. தற்போது அமெரிக்கா முழுவதுமே டிரம்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக பெண்கள் டிரம்புக்கு எதிராக திரண்டுள்…
-
- 0 replies
- 400 views
-
-
குர்தீஷ் படையினர் உயிருடன் ஐ.எஸ். தீவிரவாதியை சுற்றிவளைக்கும் பயங்கர காணொளி ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருக்கும் மொசூல் பகுதியை மீட்கும் நடவடிக்கையில் ஈராக் இராணுவம், குர்தீஷ் இன பெஷ்மெர்கா படையினர், சன்னிபிரிவு அரேபிய மலைவாழ் இன வீரர்கள் மற்றும் ஷியா அமைப்பு ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ளன. இதன் போது மொசூல் புறநகர் பகுதியிலுள்ள குடியிருப்பொன்றில் குர்தீஷ் இன பெஷ்மெர்கா படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஜ.எஸ். தீவிரவாதத்தை சேர்ந்த ஒருவர் சரணடையும் காட்சி இணையத்தளத்தில் பரவி வருகின்றது. குர்தீஷ் இன பெஷ்மெர்கா படையினர் சுற்றிவளைத்த போது குறித்த தீவிரவாதி தன் கைகளை தலைமேல் உயர்த்தியவாறு அச்சத்துடன…
-
- 0 replies
- 422 views
-
-
ட்ரம்ப் பற்றிய கூட்டத்தை பிரித்தானியா, பிரான்ஸ் நிராகரிப்பு ஐக்கிய அமெரிக்ககாவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புடன் எவ்வாறு அணுகுவது தொடர்பாக நிலவும் வேறுபாடுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிநாட்டடமைச்சர்கள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (13), கலந்துரையாடிய நிலைமையில், குறித்த சிறப்புப் பேச்சுவார்த்தைகளை, பிரித்தானிய, பிரெஞ் அமைச்சர்கள் தவறவிட்டிருந்தனர். ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளின்டனை, குடியரசுக் கட்சியின் ட்ரம்ப் வென்றிருந்த நிலையிலேயே, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு கொள்கைக்கான தலைவி பெடெரிக்கா மொகிரினி, பெல்ஜியத் தலைநகர் ப்ரசெல்ஸில், இரவுணவுப் பேச்சுவார்த்தைகளுக்காக வெளிநாட்டமைச்சர்களை அழை…
-
- 0 replies
- 479 views
-
-
நௌரு , மனுஸ் தீவில் உள்ள அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றம்? அவுஸ்ரேலியாவில் புகலிடம் தேடிச் சென்று, நௌரு மற்றும் மனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள 1800 அகதிகள், அமெரிக்காவில் குடியேற்றப்படவுள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவும் அவுஸ்ரேலியாவும் மீள்குடியேற்ற உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவுள்ளன. இதுதொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கமைய, நௌரு மற்றும் மனுஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1800 அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நௌரு மற்றும் மனுஸ் தீவுக…
-
- 2 replies
- 443 views
-
-
2020 தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் இந்திய பெண்: அமெரிக்க ஊடகங்கள் கணிப்பு கமலா ஹாரிஸ் கடந்த 8-ம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலோடு 34 செனட்டர் பதவிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் கலிபோர்னியா செனட்டர் பதவிக்கு போட்டியிட்ட கமலா ஹாரிஸ் (51)'அமோக வெற்றி பெற்றார். இவரது தாயார் சியாமளா கோபாலன் சென்னையைச் சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். புதிய அதிபர் ட்ரம்புக்கு எதிராக கமலா ஹாரிஸ் இப்போதே தீவிர பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். அமெரிக்கா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ட்ரம்பின் இனவாத கொள்கைகள், தெளிவில்லாத உலகப் பார்வை, தவறான பொருளாதார கொள்கைகள் குறித்து மக்களிடம் எடுத்துரைத்து வருக…
-
- 5 replies
- 506 views
-
-
(CNN)Thousands of protesters targeted Trump buildings in New York and Chicago on Wednesday, chanting anti-Trump slogans as protests against President-elect Donald Trump popped up throughout the United States. In Austin, Texas, protesters blocked a highway. Students burned a flag on the campus of American University in Washington, and they walked out of class in high schools and colleges across the country the day after the presidential election. http://www.cnn.com/2016/11/09/politics/election-results-reaction-streets/index.html நியூயோர்க் சிக்காக்கோ உட்பட பல மாநிலங்களில் வீதிகளை மறித்து ரம்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கின்றனர்
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
அமெரிக்கர் அல்லாத 30 லட்சம் பேரை உடனடியாக வெளியேற்றுவேன்: டிரம்ப் உறுதி அமெரிக்காவில் வாழும் பிறநாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் 30 லட்சம் பேரை உடனடியாக வெளியேற்றப் போவதாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் அமெரிக்காவில் வாழும் பிறநாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் 30 லட்சம் பேரை உடனடியாக வெளியேற்றப் போவதாக இன்று அதிரடியாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொலைக்காட்சிக்கு டிரம்ப் அளித்த பே…
-
- 9 replies
- 688 views
- 1 follower
-
-
ஆணாதிக்கத்தின் வெற்றி! அதிகபட்ச பாசாங்குத்தனம் கொண்ட நாடு அமெரிக்கா என்று அதன் சமீபத்திய அதிபர் தேர்தல் முடிவு தெளிவாக விளக்கிவிட்டது. அமெரிக்க அதிபர் பொறுப்புக்குத் தேவையான ஆகச் சிறந்த தகுதி கொண்ட வேட்பாளர் என்று ஊடகங்களாலும் அறிஞர்களாலும் கருதப்பட்ட ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளின்டன் பல கடைசி நிமிடப் பிரச்சினைகள் எழுந்தாலும் நிச்சயமாக வென்றுவிடுவார் என்று எல்லாத் தேர்தல் கணிப்புகளும் அறிவித்தன. முதல் முறையாக ஒரு பெண்மணியை அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுத்து அமெரிக்கா வரலாறு படைக்கப்போகிறது என்று பெண் சமூகம் எதிர்பார்த்துக் காத்திருந்தது. மூன்று முறை நடந்த வேட்பாளர்களின் நேரடி விவாதத்தில் ஹிலாரியின் கைதான் ஓங்கியிருந்தத…
-
- 0 replies
- 347 views
-
-
தனது தோல்விக்கு ஜேம்ஸ் கோமியே காரணம்: ஹிலரி அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது அதிர்ச்சிகரமான தோல்விக்கு, எஃப் பி ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமியின் மீது ஹிலரி குற்றம் சுமத்தியுள்ளார். தனது மின்னஞ்சல் பயன்பாடு குறித்து தேர்தலுக்கு சற்று முன்னதாக வந்த கோமியின் புதிய விசாரணை அறிவிப்பு, தனது பிரச்சாரத்தின் வேகத்தை குறைத்தது விட்டது என கட்சியின் நிதி வழங்கியவர்களிடம் ஹிலரி தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் நான்காவது நாளாக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். நியூயார்க்கில் உள்ள யூனியன் சதுக்கத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலிஸார் தடுத்து நிறுத்தினர்; டிரம்ப் எதிர்ப்…
-
- 0 replies
- 362 views
-
-
UNSC நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு குவியும் ஆதரவுகள் ! ஐ.நா. பாதுகாப்பு சபையில் (UN Security Council) நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு, ஆதரவு வலுத்துள்ளது. இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் உட்பட, பல ஐ.நா. உறுப்பு நாடுகள் கடந்த வாரம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பொதுக் கூட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன. ஐநா பாதுகாப்பு சபை 15 நாடுகளைக் கொண்ட அதிகாரமிக்க அமைப்பாகும். இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. மீதி 10 இடங்கள், நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை உயர்த்தவும், நிரந்தர உ…
-
- 0 replies
- 278 views
-
-
அமெரிக்காவில் 3-வது நாளாக கலவரம்: ட்ரம்ப் எதிர்ப்பு பேரணியில் துப்பாக்கிச்சூடு அமெரிக்காவின் ஒரிகான் மாகாணம் போர்ட்லேண்டில் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர் | படம்: ஏஎப்பி அமெரிக்காவில் 3-வது நாளாக நேற்றுமுன்தினம் இரவும் கலவரம் நீடித்தது. போர்ட்லேண்ட் நகரில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதை எதிர்த்து அந்த நாடு முழுவதும் பொதுமக்கள் பல்வேறு போராட் டங்களை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாள் மாலை, இரவில் முக்கிய நகரங்களின் சாலைகளில் பேரணி,…
-
- 0 replies
- 413 views
-
-
ரூ.2000 நோட்டில் எழுத்துப் பிழை: சிரிப்பாய் சிரிக்கும் ட்விட்டர் சென்னை: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டில் எழுத்துப் பிழை இருப்பதை கண்டுபிடித்து மக்கள் அதை ட்விட்டரில் கிண்டல் செய்து வருகிறார்கள். கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டில் எழுத்துப்பிழை உள்ளதை மக்கள் கண்டுபிடித்துள்ளனர். பிழை புதிய 2000 ரூபாய் நோட்டில் எழுத்துப் பிழை. இந்தியில் தோன் ஹஜார் ருபியா என்று உள்ளது. உருது மொழியிலும் பிழை உள்ளது என்று கேள்விப்பட்டேன். இந்தி 2000 ரூபாய் நோட்டில் இந்தி மொழியில் எழுத்துப் பிழை.…
-
- 3 replies
- 453 views
-
-
தெற்கு பாகிஸ்தானில் தொலைதூரத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் இருக்கும் ஒரு சூஃபி தர்காவில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோப்புப்படம் இந்தச் சம்பவத்தில், குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், டஜன் கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். உள்ளூர் தொலைக்காட்சியில், துறைமுக நகரமான கராச்சியின் வடக்கு பகுதியில், நூற்றுக்கணக்கான மக்கள் தொலைவில் உள்ள ஷா நூரானி வழிபாட்டுத்தலத்தில் இருந்தனர் என்று கூறுகிறது. காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்சுகள் வந்துள்ளன. http://www.bbc.com/tamil/global-37962119
-
- 2 replies
- 364 views
-
-
புதிய 2000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளில் இந்தியை திணித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவில் கறுப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழிப்பதாகக் கூறி ரூ.1000, ரூ.500 தாள்களை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்த அறிவிப்பால் மக்களிடம் ஏற்பட்டுள்ள பதற்றத்தையும், பரபரப்பையும் பயன்படுத்திக் கொண்டு புதிய 2000 ரூபாய், 500 ரூபாய் தாள்களில் இந்தியை திணித்திருப்பது கண்டிக்கத்தக்கது. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒருகட்டமாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரூ.2000, ரூ.500 தாள்களில் வழக்கமாக இடம் பெறும் பன்னாட்டு எண் …
-
- 0 replies
- 446 views
-