Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவில் அமைதிப் பேரணியில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் காயம் அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தின் பர்மிங்காம் நகரில் பொது வீட்டுரிமை சமூகம் நடத்திய அமைதி பேரணியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பர்மிங்காம் மாகாண போலீஸ் செய்தி தொடர்பாளர் ப்ரையின் ஷில்டன் கூறும்போது "இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.25 மணியளவில் நிகழ்ந்துள்ளது. சுடப்பட்ட ஆறு பேரும் பேரணியை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அப்பாவி பொது மக்கள். இந்த துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியது யார் என்று இன்னும் அறியப்படவில்லை. விசாரணை தீவிரமாக நடைபெற்று …

  2. அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் நுரையீரல் வீக்கத்தால் அவதிப்படுவதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். பொது நிகழ்ச்சி ஒன்றில் உடல்நலமின்றி அவதிப்பட்டதை அடுத்து, ஹிலரியின் நோய் கண்டறியப்பட்டுள்ளது என்றும், அவர் ஓய்வெடுக்க அறிவுறுத்தப் பட்டிருப்பதாகவும் அவருடைய மருத்துவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால், தேர்தல் பரப்புரைக்காக கலி.போர்னியா செல்வதை அவர் ரத்து செய்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 11 தாக்குதல் நினைவு நிகழ்ச்சியிலிருந்து சுகவீனம் காரணமாக அவர் முன்னதாகவே செல்ல வேண்டியதாயிற்று. கால் மூட்டு பிரச்சனையால், ஹிலரி காருக்குள் ஏறுவதற்கு உதவி செய்யப்படும் காணொளி பதிவு இணையத்தில் பிரசுரமானது. பின்னர், பொது மக்களிடைய ம…

  3. சீனாவில் 20,000 கி.மீ. புல்லட் ரயில் பாதை: உலகிலேயே மிகவும் நீளமானது சீனாவில் பயன்பாட்டில் உள்ள புல்லட் ரயில்கள் | கோப்பு படம்: ராய்ட்டர்ஸ் உலகிலேயே நீளமான அதிவேக ரயில் (புல்லட்) பாதைகளைக் கொண்ட நாடாக சீனா உருவெடுத் துள்ளது. அந்நாட்டில் உள்ள புல்லட் ரயில் பாதையின் நீளம் 20 ஆயிரம் கிலோ மீட்டரைத் தாண்டியது நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தின் ஜெங்சூ நகரையும் கிழக்கு பகுதி யில் உள்ள ஜியாங்சு மாகாணத்தின் சுசூ நகரையும் இணைக்கும் வகையில் புதிய பாதை அமைக்கப்பட்டது. இது நேற்று பயன்பாட்டுக்கு வந்தது. 360 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாதை, மிக முக்கியமான வடக்கு-தெற்கு பாதைகளை இணைக் கிறது. இதன்மூலம் கிழக்கு மற…

  4. மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் 2016-09-04 20:39:41 மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதல் காரணமாக தலையில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக கோலாலம்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத் தாக்குதலில் மலேஷியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் மற்றொரு சிரேஷ்ட அதிகாரியும் காயமடைந்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சு இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளதுடன் உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவு…

    • 19 replies
    • 1.4k views
  5. வெற்றி நாள் கொண்டாட்ட முத்தப் புகைப்பட பெண் மரணம் இரண்டாம் உலகப் போரின் முடிவை குறிக்கின்ற ஓர் அடையாள முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படத்தில் மாலுமி ஒருவரால் முத்தமிடப்பட்ட பெண் தன்னுடைய 92-வது வயதில் இறந்துள்ளார். நுரையீரல் வீக்கத்தால் துன்புற்ற கிரிட்டா சிம்மர் ஃபிரைடுமேன் வெர்ஜீனியாவின் ரிச்மண்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அவருடைய மகன் ஜோசுவா ஃபிரைடுமேன் கூறியிருக்கிறார். ஃபிரைடுமேன் 21 வயதில் பல் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்தபோது, 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் நாள் நியூயார்க்கிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் வைத்து ஜார்ஜ் மென்டோசா என்பவர் அவரை அள்ளி அணைத்து முத்தம் கொடுத்தார். அமெரிக்காவில் நடைபெற்ற ஜப்பான் மீதான வெற்றியை அ…

  6. கொரிய தீபகற்பத்தில் பதட்டம்: வட கொரிய தலைநகரை அழித்துவிட திட்டமா? மேற்கொள்ளப்பட இருக்கும் அணு குண்டு தாக்குதலை குறிப்புணர்த்தி வட கொரியாவின் தலைநகரை முழுமையாக அழித்து விடுகின்ற திட்டம் ஒன்றை தென் கொரிய அதிகாரிகள் வெளிப்படுத்தியிருக்கும் கொரிய தீபகற்பத்தில் விவாதங்கள் அதிகரித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த திட்டத்தின் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தென் கொரிய அரசடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள யான் ஹப் செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் வழக்கமான ஏவுகணைகள் மூலமும், கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஷெல் குண்டுகள் மூலமும் பியாங்யாங்கிலுள்ள அனைத்து மாவட்டங்களும் அழிக்கப்படுவதை இந்த திட்டம் விவரிக்கிறது. வ…

  7. சிட்னியில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது சிட்னியின் தென் மேற்கு பகுதியில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதாகவும், கொலை செய்ய முயற்சித்ததாவும் 22 வயதான ஒருவர் மீது ஆஸ்திரேலிய காவல் துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த நபர் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரால் தூண்டப்பட்டவர் என்று அவர்கள் கூறுகின்றனர். புறநகர் பூங்கா ஒன்றில் வைத்து 59 வயதான ஒருவரை இந்த நபர் பல முறை கத்தியால் குத்தியதாகவும், கைது செய்ய சென்ற காவல் துறையினரை தாக்க முயற்சித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட இருக்கும் இந்த குற்றம் சாட்டப்படுபவரிடம் இருந்து பெரியதொரு கத்தியை …

  8. ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்ற சட்ட விதிகளை திருத்த திட்டம். 1 ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகரிக்கும் குடியேறிகளின் நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்கு அடைக்கலக் கோரிக்கை தொடர்பான சட்ட விதிகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பிரதான தெற்கு ஐரோப்பிய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. ஐரோப்பிய நாடுகளுக்கடையேயான அடைக்கலம் கோருவது தொடர்பான சட்ட விதிகளை மாற்றியமைப்பது ஒன்றியத்தின் முன்னரங்க நாடுகள் குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கு அவசியமான நிபுணத்துவ ஆலோசனையை பெறுதல் தந்திரோபாய நடவடிக்கைகளுக்கான முதலீட்டை இரட்டிப்பாக்குதல் ஆகிய அம்சங்களில் இணங்குவதாக பிரான்ஸ் இத்தாலி ஸ்பெயின் கிறீஸ் போத்துக்கல் மோல்ற்றா மற்றும் சைப்பிரஸ் ஆகிய நாடுகள் …

  9. இட்லிப், அலெப்போ நகரங்களில் விமானத் தாக்குதல்கள், 100-க்கு அதிகமானோர் பலி சிரியாவில் திட்டமிடப்பட்டுள்ள போர்நிறுத்தத்திற்கு முன்னதாக, போரிடும் பல தரப்பினரும் தங்களுடைய நிலைகளை பலப்படுத்தி கொள்வதற்காக, சிரியாவின் இட்லிப் மற்றும் அலெப்போ நகரங்களில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தரைமட்டமாகியுள்ள கட்டிடங்களில் இருந்து எழுகின்ற புகை மேகங்களையும், இடிபாடுகள் நிறைந்திருக்கும் தெருக்களில் காயமுற்றோரை மக்கள் தூக்கி செல்வதையும் இட்லிப் நகரில் எடுக்கப்பட்ட காணொளி பதிவுகள் காட்டுகின்றன. ரஷியாவும் அமெரிக்காவும் உடன்பட்டுள்ள போர்நிறுத்தம் திங்கள்கிழமை முதல் அமலாகும். ஜெனிவாவி…

  10. தான்சானியாவில் பூமியதிர்ச்சி ; 13 பேர் பலி ; 200 பேர் காயம் தான்சானியாவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் 13 பேர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வடமேற்கு தான்சானியாவில் ஏற்பட்ட குறித்த பூமியதிர்ச்சி 5.7 ரிச்டராக பதிவாகியுள்ளது. குறித்த பூமியதிர்ச்சியினால் 200 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. காயம் அடைந்த 200 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறித்த பூமியதிர்ச்சியனது ருவாண்டா, உகாண்டா மற்றும் கெ…

  11. அமெரிக்க அரசின் இணையதளங்களில் ஊடுருவியதில் ரஷியாவுக்கு தொடர்பு: ஸ்நோடன் எட்வர்ட் ஸ்நோடன் நாடு கடந்து ரஷியாவில் வாழ்ந்து வரும் அமெரிக்காவின் முக்கிய ரகசியங்களை பொதுவெளியில் வெளியிட்டவரான எட்வர்ட் ஸ்நோடன், ரஷியாவின் மனித உரிமைகள் பதிவுகள் மீது அரிய தாக்குதல் ஒன்றை தொடுத்துள்ளார். மேலும், சமீபத்திய கணிணி ஹேக்கிங் மோசடியில் ரஷியா ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஃபைனான்ஷியல் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், முற்றிலும் தேவையற்ற, அதிக செலவு பிடிக்ககூடிய மற்றும் சேதங்களை உண்டாக்கும் விவகாரங்களில் தனிநபர் மற்றும் கூட்டு உரிமைகளில் வரம்பு மீறி ரஷியா செயல்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா அரசாங்கத்தின் இரு பெரிய இணையதளங்கள் ச…

  12. மனித உரிமை பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது (லியோ நிரோஷ தர்ஷன்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. இதன் போது மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசேனின் ஆரம்ப உரையில் இலங்கையின் மனித உரிமைகளின் நிலவரம் குறித்து விளக்கமளிக்க உள்ளார். இந்தக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையின் விவகாரங்கள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை. எனினும் இலங்கையின் மனித உரிமைகள் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் கருத்துக்களை வெளியிட்டு கேள்விகளை எழுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.…

  13. சிரிய விவகாரம் தொடர்பில் அமெரிக்காவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையில் இணக்கப்பாடு சிரிய விவகாரம் தொடர்பில் அமெரிக்காவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. யுத்த நிறுத்தமொன்றை மேற்கொள்வது தொடர்பில் இவ்வாறு இணங்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்த்தரப்பினரின் பிடியில் காணப்படும் சில பகுதிகளின் மீது சிரிய படையினர் தாக்குதல் நடத்துவதனை நிறுத்திக் கொள்ள உள்ளனர். ரஸ்யாவும் அமெரிக்காவும் இணைந்து ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர். அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி மற்றும் ரஸ்ய ராஜாங்கச் செயலாளர் Sergei Lavrov ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போ…

  14. தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த வெள்ளை மாளிகை வெள்ளை மாளிகையில் நடந்த மாணவர்களுக்கான தேசிய கவிதைப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற (இடமிருந்து) மாணவி சலாமே, மாணவர் ஜோயே ரெய்ஸ்பெர்க், மிஷேல் ஒபாமா, மாணவர் கோபால் ராமன், மாணவிகள் மாயா ஈஸ்வரன் மற்றும் ஸ்டெல்லா | படம்: ஏஎப்பி அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது தாய் மொழியான தமிழை மறந்துவிட்டு ஆங்கிலத்தை மாற்று மொழியாக ஏற்றது மிகுந்த மனவலியை தருகிறது என மாணவி வாசித்த கவிதை அனைவரையும் வெகுவா கக் கவர்ந்தது. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் தேசிய மாணவர்களுக்கான கவிதைப் போட்டி நேற்று நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மாணவ, மாணவிகள் உட் பட 4 …

  15. வியட்நாம் போரின் வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை நீக்கி ஃபேஸ்புக் சர்ச்சை அந்த வரலாற்று சிறப்புமிக்க படம் ஃபேஸ்புக் நிறுவனமானது வியட்நாம் போரின் உக்கிரத்தை எடுத்துச் சொல்லும் பிரபல புகைப்படம் ஒன்றை தொடர்ந்து நீக்கி அதன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது. அந்த புகைப்படத்தில், கொத்துக்குண்டு வீச்சிலிருந்து தப்பிக்க சிறுமி ஒருவர் ஆடைகளின்றி ஓடி வரும் காட்சி உள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு, குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்களுக்கும், வரலாற்று புகைப்படங்களுக்கும் உள்ள வேறுபாட்டை வேறுபடுத்தி புரிந்து கொள்ள இயலாமை காரணமாக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக நார்வே செய்தித்தாள் நிறுவனமான ஆஃப்டென்போஸ்டென் கருத்து தெரிவித…

  16. போத்துக்கல்லின் அந்தோனியே குற்றாரஸ் - ஐ.நாவின் அடுத்த பொதுச் செயலாளர்? ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளருக்கான தேர்வில் போத்துக்கல்லின் முன்னாள் பிரதமரும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பான (ருNர்ஊசு) ன் முன்னாள் தலைவருமான அந்தோனியோ குற்றாரஸ் முன்னிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கு நெருக்கமான ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் இறுதியாக நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற வாக்கெடுப்பில் 15 நாடுகளின் பிரதிநிதிகளில் 11 பேரின் ஆதரவை குற்றாரஸ் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாடுகளின் பிரதிநிதிகள் இவரின் தெரிவில் அதிருப்தியும் ஒரு பிரதிநித…

  17. பிரிட்டனில் MASTER CARD பாவனையாளர் ஒவ்வொருவருக்கும் £300 இழப்பீடு கிட்டும். பிரித்தானியாவில் MASTER CARD பாவனையாளர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தது £300 ஸ்ரேலிங் பவுண் இழப்பீடு வழங்கப்பட இருக்கிறது. MASTER CARD நிறுவனம் முறைகேடாக அளவுக்கதிகமாக வாடிக்கையாளர்களிடம் சேவைப்பணம் அறவிட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் பாவனையாளர்களுக்கு இழப்பீடாக 14 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் வழங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. பிரிட்டனின் நிதித்துறை கண்காணிப்பு மையமான ((Financial Ombudsman Service) தொடர்ந்திருக்கும் வழக்கில் 1992 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சுமார் நான்கு கோடியே 60 லட்சம் மக்களிடம் …

    • 2 replies
    • 755 views
  18. தமிழர்களை உறைய வைக்கும் 'பந்த்' கர்நாடகாவில் திரும்புகிறதா 1991? உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது. பாஜக, மஜத உட்பட நூற்றுக்கணக்கான கன்னட அமைப்புகள், விவசாய அமைப்புகள் பங்கேற்றுள்ளதால் கர்நாடகாவில் பதற்றம் நிலவுகிறது. மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள் கர்நாடகா வாழ் தமிழர்கள். பந்த்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையென்றால் வீடு புகுந்து தாக்குவோம் என்ற அடாவடி அறிவிப்பு அவர்களை மிரட்சிக்குள்ளாக்கியுள்ளது. 700க்கும் மேற்பட்ட அமைப்புகளின் ஆதரவோடு …

  19. 9/11 தாக்குதல்: சவுதி மீது வழக்கு தொடுக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஆதரவு அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற இரட்டை கோபுரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சவுதி அரேபிய அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்க வழிசெய்யும் மசோதவுக்கு, அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் அவை ஆதரவு வழங்கியுள்ளது. இரட்டைக் கோபுரத் தாக்குதல் இந்தச் சட்டமூலம் அதிபரால் நிராகரிக்கப்படலாம் எனும் அச்சுறுத்தல் இருந்தாலும், பிரதிநிதிகள் அவை இந்த ஆதரவைத் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவுடனான உறவுகளை, இந்த மசோதா சட்டமானால் பாதிக்கும் என அதை எதிர்ப்பவர்கள் கூறிய நிலையிலும், கடந்த மே மாதம் அமெரிக்க மேலவையான செனட் இதற்கு ஒப்புதல…

  20. நேதாஜியின் மரணத்தை ஜப்பான் உடனே உறுதி செய்தது: பிரிட்டிஷ் ஊடகம் புதிய தகவல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் | கோப்புப் படம். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணத்தை சில வாரங்களிலேயே அமெரிக்காவிடம் ஜப்பான் உறுதி செய்தது என்று பிரிட்டிஷ் ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. நேதாஜியின் இறப்பு விவரங்கள் அடங்கிய ஜப்பான் அரசின் 60 ஆண்டு பழமையான ஆவணம் அண்மையில் பிரிட்டிஷ் இணையதளம் ஒன்றில் வெளியானது. அதில் 1945 ஆகஸ்ட் 18-ம் தேதி தைவான் விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டார் என்று உறுதியாக கூறப்பட்டுள்ளது. நேதாஜி பயணம் செய்த விமா னம் ஓடுபாதையில் இருந்து மேலெழும்பி 20 மீட்டர் உயரத்தில் பறந்தபோது, இடதுபக்க இறக்கை யில் விசிறி உடைந்து…

  21. இலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார் இலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய சர்வதேச பொப் இசை பாடகி மாயா அருள்பிரகாசம் அவர்கள் வரும் 9 ம் 10ம் திகதி நடைபெறும் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளன வெள்ளிவிழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொள்கின்றார் அவர் பற்றி சிறு குறிப்பு நான் அப்படித் தான் இருப்போம்! மனம் திறந்துள்ளார் பொப் இசைப் பாடகி மாயா. இலங்கையில் பிறந்த மாதங்கி அருட்பிரகாசம் பின்னர் அரசியல் தஞ்சம் கோரி பிரித்தானியா வந்தார். ஈழத் தமிழ் பெண்ணான இவர், பின்னர் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பொப் இசைப் பாடகியாக இருக்கிறார். மாதங்கி என்ற பெயரைச் சுருக்கி எம்.ஐ.ஏ என்று மாற்றிக்கொண்டார். ம…

  22. இந்தியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய விளம்பரம்: பணிந்தது ஏர் சைனா! லண்டனில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என 'ஏர்சைனா' விமானத்தின் 'விங்ஸ் ஆஃப் சைனா' செப்டம்பர் மாத பதிப்பில் இடம் பெற்றுள்ள விளம்பரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. '' பொதுவாக லண்டன் பாதுகாப்பான நகரம்தான். ஆனால் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் கருப்பின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பயணிகள் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும். இந்த இடங்களில் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது அவசியம் என அந்த விளம்பரம் கூறுகிறது. 'அத்துடன் பயணிகள் இரவில் இந்த பகுதியில் தனியாகப் போகக் கூடாது. பெண்கள் துணையுடன் மட்டும்தான் போக வேண்டும்' என்றும் அந்த விளம்பரம் அறிவுறுத்…

  23. பள்ளத்தாக்கில் பயணம் உலகின் நீண்ட, 16 வருட உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து, மருத்துவமனையிலிருந்து இரோம் ஷர்மிளா திரும்பிய மறுநாள் அவரைச் சந்திக்கப் போயிருந்தேன். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ஜவாஹர்லால் நேரு மருத்துவமனையின் முன் நிறுத்தப்பட்டிருந்த காவல் படையினரின் எண்ணிக்கையில் பெரிய மாறுதல் ஏதும் ஏற்பட்டிருந்ததாகத் தெரியவில்லை. இங்குதான் ஷர்மிளா வைக்கப்பட்டிருந்தார். இதுவே நீண்ட காலம் அவரது சிறைக் கூடமாகவும் இருந்தது. ஊரின் முக்கிய இடங்கள், கடை வீதிகள், சாலை முக்குகள் எங்கிலும் இந்தியப் படையினர் நிறைந்திருந்தார்கள். சாலையில் ரோந்து வாகனங்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தன. மாலை ஆறு மணிக்கெல்லாம் ஊரடங்கு சூழல் …

  24. தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட மேலும் நால்வரை தேடும் மலேசிய காவல்துறை மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராகிம் அன்சார் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மேலும் நான்கு பேரைத் தேடி வருவதாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராகிம் அன்சார் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, கோலாலம்பூர் விமான நிலையத்தில் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்ப ட்டுள்ளனர். இவர்களின் விளக்கமறியல் மேலும் இரண்டு நாட்கள் – நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, மலேசிய கா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.