Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 'ஒயின் அரசி'- ஜெர்மனியில் அழகி பட்டம் வென்ற முதல் சிரிய அகதி! நினோர்டா பஹ்னோ சிரியாவை சேர்ந்த மாணவி ஒருவர் ஜெர்மனியில் நடைபெற்ற அழகிகளுக்கான போட்டியில் "ஒயின் அரசி" எனும் மகுடம் சூட்டப்பட்டதன் மூலம் அழகி பட்டம் வென்ற முதல் சிரிய அகதி என்ற பெருமைக்கு சொந்தமாகியுள்ளார். லக்சம்பர்க் நாட்டின் எல்லையோரம் மேற்கு ஜெர்மனியில் அமைந்துள்ள மாசெலெ ஒயின் பிரதேச நகரம் ட்ரையர். இங்கு கடந்த புதன்கிழமை நடைபெற்ற அழகி போட்டியில் சிரியாவை சேர்ந்த 26 வயதான நினோர்டா பஹ்னோ என்ற மாணவி ஒயின் குயினாக மகுடம் சூட்டப்பட்டார். ஒயின் குயினாக மகுடம் சூடப்பட்டதன் மூலம் ஜெர்மனியில் அழகி பட்டம் வென்ற முதல் சிரிய அகதி என்ற பெருமை நினோர்டா பஹ்னோவிக்கு கிடை…

  2. இன்றைய நிகழ்ச்சியில் * இங்கு மத்திய லண்டனில் அமெரிக்க பெண் ஒருவர் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். பத்தொன்பது வயதான சந்தேக நபர் கடும்போக்காளர் என்பதற்கு ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. * ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு படகுகள் மூலம் வந்த மேலும் பல அகதிகள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். * எலிசபெத் மாகாராணியாரின் தொண்ணூறாவது பிறந்ததினத்தை முன்னிட்டு, பல தசாப்தங்களாக அவர் அணிந்த ஆடைகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.

  3. சியோல், ஜப்பான் கடல் எல்லைக்குள் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையை செலுத்தி வடகொரியா சோதனை நடத்தியது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. வடகொரியா அச்சுறுத்தல் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் ஆட்சி நடந்து வரும் வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் அன் உள்ளார். அவருடைய அரசாங்கம் அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் எல்லையில் ராணுவ குவிப்பையும், அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளையும் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தென்கொரியாவுக்கு எல்லையிலும், கடலோர பகுதியிலும் அமெரிக்கா வான் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது. தவிர, தென்கொரியாவுடன் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. …

  4. ஐ.எஸ். நிறுவியவர்களில் ஹிலாரியும் ஒருவர்: டிரம்ப் தாக்கு "ஐஎஸ் அமைப்பை நிறுவியவர்களில் ஹிலாரியும் ஒருவர்" என்று குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து இரு முன்னணி கட்சிகளின் (குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி) அதிபர் வேட்பாளர்களான டொனால்டு டிரம்பும், ஹிலாரி கிளிண்டனும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புளோரிடாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற டொனால்டு டிரம்ப், "ஐஎஸ் அமைப்பை நிறுவியவர்களில் ஹிலாரியும் ஒருவர். இதற்காக ஐஎஸ் அமைப்பினர் ஹிலாரிக்கு விருது வழங்க வேண்டும். ஒர்லா…

  5. ஆஸ்திரேலிய தேர்தலில் கால் பதித்த முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி ஆஸ்திரேலிய பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நாடாளுமன்ற மேலவையில் குடியேற்றங்களுகெதிரான ஒரே தேசம் என்ற கட்சி நான்கு இடங்களை வென்றுள்ளது. மால்கம் டர்ன்புல் பவுலின் ஹான்சன் என்பவர் தலைமைதாங்கும் இந்த கட்சி, இஸ்லாமியர்கள் ஆஸ்திரேலியாவில் அனுமதிக்க தடை விதிக்க வேண்டும் என்றும், மசூதிகள் கட்டுவதை இடைநிறுத்தம் செய்யவேண்டும் என்றும் பிரசாரம் செய்து வருகிறது. அவர் ஆஸ்திரேலியா ''ஆசியர்களால் நிரப்பப்படுகிறது'' என்றார். ஆனால், பவுலின் ஹான்சன் வருகை, ஆஸ்திரேலிய அரசியலில் வரவேற்கத்தக்கதல்ல என்று பிரதமர் மால்கம் டர்ன்புல் விமர்சித்துள்ளார். http://www.bbc.com/t…

  6. பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளில் சமீபகாலமாக நடைபெற்றுவரும் தீவிரவாத தாக்குதல்களை அடுத்து சுவிட்சர்லாந்தில் பெரும்பாலான மக்கள் பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வில் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் இதுகுறித்து 18,000 பொதுமக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மக்களிடம் நைஸ் தாக்குதல் மற்றும் ஜேர்மனியின் ஆன்ஸ்பக் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் உள்ளிட்டவை குறித்து கருத்து கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதில் ஒட்டுமொத்தமாக 75 சதவிகித மக்கள் பாதுகாப்பின்மையை முன்னைவிட அதிகமாக உணர்வதாக தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் விட்டுத்தர தயார் என 64 சதவிகித மக்கள் தெரிவி…

  7. மத்திய லண்டனில் தாக்குதல் ; மக்கள் அச்சத்தில் மத்திய லண்டனில் ரஸ்ஸல் சதுக்கத்திற்கு அருகில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியானதுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கையில் கத்தியுடன் வந்த நபர் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியீட்டுள்ளன. குறித்த தாக்குதலில் ஈடுப்பட்ட 19 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இத் தாக்குதல் தீவிரவாதிகளின் நடவடிக்கையாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/9766

  8. பொதுமக்களை பாதுகாக்க அதிரடியாக களமிறங்கிய லண்டன் பொலிஸ் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி லண்டன் வீதிகளில் ஆயுதம் தாங்கிய பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். லண்டன் மேயர் Sadiq Khan - யின் அறிவுறுத்தலின்படி, உயர் காவல் ஆணையர் Bernard Hogan இதனை அமல்படுத்தியுள்ளார். பொது உத்தரவாதம் மற்றும் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்துவதே இதன் நோக்கம் ஆகும் என காவல் ஆணையர் கூறியுள்ளார். ஆயுதம் தாங்கிய அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என இதற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது, இதன்படி மொத்தம் 2,8000 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நைஸ் நகரில் நடைபெற்ற தாக்குதலில் 84 பேர் கொலை செய்யப்பட்டனர், இந்த தாக்குதலின…

  9. 5000 ஆண்டுகளுக்கு முன்பு, கடைசியாக உயிரோடிருந்த உலகின் மிகப்பெரிய உயிரினங்கள் கொல்லப்பட்டது எதனால் என்பதை வட அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக நம்புகின்றனர்.அலாஸ்காவில் உள்ள அணுக கடினமான தொலைவில் உள்ள செயின்ட் பால் தீவினில் கூட்டமாக வாழ்ந்து வந்த இந்த பெரும் உயிரினங்கள், அங்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.பனியுக காலம் முடிவடைந்தவுடன், பூமி சூடாக தொடங்கியதால், கடல்மட்ட அளவுகளும் அதிகரித்தன. இதனால், இந்த தீவு தன் அளவிலிருந்து சுருங்கி, அதன் நன்னீர் ஏரிகளை கடலில் இழந்துவிட்டது. இவ்வாறான சூழல் நிலவிய போதிலும், செயின்ட் பால் தீவினில் வாழ்ந்த மிகப்பெரும் உயிரினங்கள், பெருநிலப்பரப்பில் …

  10. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் கல்லூரிக்கு மாணவர்கள் துப்பாக்கி எடுத்து வர அனுமதி - டெக்காஸ் மாகாணத்தில் 21 வயது நிரம்பிய மாணவ, மாணவிகள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வகுப்புகளுக்கு துப்பாக்கி கொண்டு செல்லலாம், என புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் மலிந்து விட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் புகுந்து பலரை சுட்டு வீழ்த்தும் கொடுமை நடந்து வருகிறது. எனவே துப்பாக்கி வைத்துக்கொள்ள கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று சிலர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவின் டெக்காஸ் மாகாணத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் ம…

  11. இன்றைய நிகழ்ச்சியில் * இராக்கில் நூற்றுக்கணக்கான யசிடி பெண்களை கடத்திச் சென்ற ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்த ஆதாரங்களை திரட்டும் புலனாய்வாளர்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கோருவதற்கான முயற்சி குறித்த பிபிசியின் சிறப்பு தகவல். * கடந்த மாத துருக்கிய இராணுவ புரட்சியை அடுத்து பாதிக்கப்பட்ட சில தொழிலாளர்களிடம் பிபிசி பேசியது. தாம் அப்பாவிகள் என்கிறார்கள் அவர்கள்! * சூரிய வெப்பம் தகிக்கும் ஒரு நாட்டில் ஐஸ் ஹாக்கி. எதிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்காக தயாராகும் கென்யா.

  12.  275 பயணிகளுடன் பயணித்த விமானம் தரையிறங்கும்போது விபத்து (VIDEO)) இந்தியாவின் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட எமிரேட்ஸ் எயார்லைன் விமானமொன்று டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை, விமானத்தில் பயணித்த 275 பயணிகளும் பாதுகாப்புடன் உள்ளனனர் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. போயிங் 777 ரக விமானமே தரையிறங்கும் போது தீபற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் தரையிறங்கிய இடத்தைச் சுற்றி புகை மண்டலம் வான்நோக்கி மேலெழுந்துள்ளது. …

    • 9 replies
    • 1.2k views
  13. புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுதனை அவுஸ்திரேலியா அங்கீகரிக்கின்றது புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுதனை அவுஸ்திரேலியா அங்கீகரிக்கின்றது புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுவதனை அவுஸ்திரேலியா அங்கீகரிக்கின்றது என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமை கண்காணிப்பகம் ஆகிய அமைப்புக்கள் இவ்வாறு அவுஸ்திரேலியாவின் நடவடிக்கைகளை கண்டித்துள்ளன. அவுஸ்திரேலிய அரசாங்கம் வேண்டுமென்றே புகலிடக் கோரிக்கையாளர் துன்புறுத்தப்படுவதனை அங்கீகரிக்கும் கொள்கைகளை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளன. படகு மூலம் அவுஸ்திரேலியாவை அடையும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நவுரு மற்றும் பபுவா ந…

  14. உலகின் அதிசக்தி வாய்ந்த பாஸ்போர்ட்/கடவுச்சீட்டு என்ற பெருமையை ஜேர்மனி கடவுச்சீட்டு பெறுகிறது. இதைப் பயன்படுத்தி 177 நாடுகளுக்கு வீசா இல்லாமல் சென்றுவரலாம். இரண்டாம் இடத்தில் சுவீடனும் (176 நாடுகள்) மூன்றாம் இடத்தில் பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்தும் (175 நாடுகள்) 4வது இடத்தில் பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, அமெரிக்காவும் (174 நாடுகள்) உள்ளன. நியூசிலாந்து கடவுச்சீட்டு 7 வது இடத்திலும்(171 நாடுகள்) ஆஸ்திரேலியக் கடவுச்சீட்டு 8 வது இடத்திலும் (169 நாடுகள்) காணப்படுகின்றன. ஏனைய அனைத்து நாடுகளினதும் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. 1. Germany – 177 2. Sweden – 176 3. Finland, France, Italy, Spain, UK – 175 4. Belgium, Denmark, Net…

  15. இன்றைய நிகழ்ச்சியில் * ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சீன செயற்பாட்டாளர்களுக்கு சிறைத்தண்டனை. * ஐரோப்பிய குடியேறிகள் ஒப்பந்தத்தில் இருந்து விலகப் போவதாக துருக்கி மிரட்டல். ஜெர்மனியுடனான அந்த நாட்டின் உறவு மோசமடைகிறது. * ஆப்ரிக்கா எங்கிலும் ஊட்டச்சத்தின்மைக்கு தீர்வாக மீன் பிஸ்கெட்டுகள்.

  16. இந்தோனேஷியாவில் திருமணத்திற்கு முன்னர் டேட்டிங் சென்ற திருமணமாகாத ஜோடிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் கசையடி கொடுக்கப்பட்டுள்ளது.இந்தோனேஷியாவில் உள்ள Aceh மாகாணம், தொன்றுதொட்டு இஸ்லாமிய முறைகளை பின்பற்றி வரும் மாகாணம் ஆகும்.இந்த மாகாணத்தில், ஓரினச்சேர்க்கை உறவு, திருமணத்திற்கு முன்னர் உறவு கொள்வது, காதலர்களாக வெளியில் சுற்றுவது என்பது மிகவும் தவறானது மட்டுமல்லாமல் அதனை இஸ்லாமிய சட்டமும் ஏற்றுக்கொள்ளாத ஒன்று, அதனையும் மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், சட்டத்தின் தண்டனையில் இருந்து இவர்கள் தப்பவே முடியாது. இந்நிலையில், இந்த மாகாணத்தை சேர்ந்த ஜோடிகள், திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் இருவரும் சேர்ந்து ஜாலியாக டேட்டிங் சென்றுள்ளனர்.இவர்களது…

  17. பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்துவது இஸ்லாமியத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என பிரித்தானியவை சேர்ந்த இஸ்லாமிய தலைவர் ஒருவர் கூறிய ஓடியோ வெளியாகியுள்ளது.இஸ்லாம் தலைவரான Imam Ali Hammuda என்பவர் பிரித்தானியாவில் உள்ள Cardiff Al-Manar மசூதியில், சிறுவயது ஜிகாதிகளை அமர வைத்து, அவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார், அதில் ஒரு பகுதியாக, பெண்களை ஐஎஸ் தீவிரவாதிகள் பாலியல் அடிமைகளாக பயன்படுத்துகின்றனர்.அதில் தவறேதும் இல்லை, பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்துவதை இஸ்லாமிய மதம் முழுமையாக ஏற்றுக்கொள்கிறது என அவர்களுக்கு மூளைச்சலவை செய்துள்ளார். இவர் பேசியது, நிருபர் ஒருவரால் ரகசியமாக ஓடியோ வடிவில் பதிவுசெய்யப்பட்டு, தற்போது வெளியாகியுள்ளது, பாலஸ்தீனத்த…

  18. கொல்­லப்­பட்ட பாதி­ரி­யா­ருக்­கான தேவா­லய பிரார்த்­த­னையில் முஸ்­லிம்­கள் பிரான்ஸ் தேவா­ல­ய­மொன்றில் பாதிரி­யார் ஒருவர் வெட்­டிக்­கொல்­லப்­பட்­டதையடுத்து, பிரெஞ்சு மக்களின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை தேவா­ல­யத்­தில் நடத்­தப்­பட்ட பிரார்த்­த­னையில் அங்­குள்ள முஸ்­ஸி­ம்கள் கலந்து கொண்­டிருப்­ப­தனை படங்­களில் காணலாம். - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=18346#sthash.vjRVtc4x.dpuf

  19. ஹிலரி கிளிண்டனை ''சாத்தான்'' என்று அழைத்த டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தனது சொந்த கட்சியினரிடமிருந்தே கடுமையான தாக்குதல்களை சந்தித்து வரும், அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரும், தனது போட்டியாளருமான ஹிலரி கிளிண்டனை '' சாத்தான் '' என்று வர்ணித்ததுள்ளார். பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் உரையாற்றிய டிரம்ப், ஜனநாயக கட்சியின் சார்பாக அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியிட கட்சியின் நியமனம் பெறும் போட்டியில், ஹிலரியிடம் பணிந்துவிட்டார் என்று பெர்னி சாண்டர்ஸ் மீது தாக்குதல் தொடுத்தார். தொழில் அதிபரான டிரம்ப் உரையாற்றுகையில், ''பெர்னி சாண்டர்ஸ் அந்த சாத்தானுடன் ஒரு ஒப்பந…

  20. டிரம்ப்பின் மனைவி மிலானியாவின் நிர்வாண படங்களை வெளியிட்டது நியூயார்க் போஸ்ட் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் போட்டியும், கருத்து மோதல்களும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க பத்திரிக்கையான நியூயார்க் போஸ்ட், டிரம்ப்பின் மனைவி மிலானியாவின் நிர்வாண படங்களை தனது முதல் பக்கத்திலும், உள் பக்கங்களிலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி ஆக்ளி ஆபீஸ்" (The Ogle Office) என தலைப்பிட்டு மிலானியாவின் நிர்வாண படங்களுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது. இது போன்ற ஆற்றல்மிக்க அ…

  21. செக்ஸ் குற்றவாளிகள் போக்கிமான் - கோ விளையாட வருகிறது தடை பாலியல் குற்றவாளிகள் பரோலில் இருக்குபோது போக்கிமான் - கோ விளையாட்டை விளையாடுவதை அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் தடை செய்யவுள்ளது. மிகவும் பிரபலமான இந்த இணையதள விளையாட்டை விளையாடுகின்ற ஆயிரக்கணக்கான குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக மாகாண ஆளுநர் ஆன்ரூ குவோமோ தெரிவித்திருக்கிறார். இந்த விளையாட்டை விளையாடும் குழந்தைகள், உண்மையான உலகில் சுற்றிதிரிவதன் மூலம், தங்களுடைய செல்பேசிகளில் மெய்நிகர் கதாபாத்திரங்களை தேடுகின்றனர். இந்த தடை அறிவிக்கப்பட்டால், நியூயார்க்கில் தற்போது பரோலில் இருக்கின்ற ஏறக்குறைய மூவாயிரம் பதிவு செய்யப்பட்…

  22. துருக்கி அதிபரின் உரை இருட்டடிப்பு: ஜெர்மனிக்கு கண்டனம் ஜெர்மனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில், துருக்கி அதிபர் ரசீப் தயிப் எர்துவான் காணொளி இணைப்பு மூலம் உரையாற்றியதை ஜெர்மனி தடைசெய்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், துருக்கியிலுள்ள ஜெர்மனியின் மூத்த ராஜிய அதிகாரி ஒருவரை அழைத்து துருக்கி கண்டனம் தெரிவித்திருக்கிறது. கலோனில் நடைபெற்ற துருக்கிய அதிபர் ஆதரவு பேரணி நடைபெறும்போது, எர்துவான் உரையாற்றுவது, அரசியல் முறுகல் நிலையை தூண்டும் என்று அஞ்சி, அதற்கு அனுமதி கோரி எர்துவான் சமர்ப்பித்த விண்ணப்பத்தை ஜெர்மனியின் அரசியல் சாசன நீதிமன்றம் நிராகரித்தது. கடந்த மாதம் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பின்னர் மேற்குலக நாடுகளில…

  23. இன்றைய நிகழ்ச்சியில் * டொனால்ட் ட்ரம்ப் மீது கடும் விமர்சனம். தனது வேதனையை ஏளனம் செய்ததாக அமெரிக்க முஸ்லிம் போர்வீரனின் தாய் குற்றச்சாட்டு. * ரியோ ஒலிம்பிக்ஸ்ஸுக்கு சில தினங்களே இருக்கும் நிலையில் அங்கு நீர் மாசடைந்தது குறித்த அதிர்ச்சி அறிக்கை ஒன்று வந்துள்ளது. ஏற்பாடுகள் சரியில்லை என்றும் குற்றச்சாட்டு. * ஐரோப்பாவின் தெற்கு கரையோர குகைகளில் நியாண்டர்தால் மனித குலம் குறித்த புதிய தகவல்கள்.

  24. இந்தியாவின் இரண்டாவது ஆட்சி மொழி தமிழ்? தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வடநாட்டு பா.ஜ.க எம்.பி பாராளுமன்றத்தில் கோரிக்கை! இந்திய பாராளுமன்றதில் உள்ள தமிழக எம்பிக்கள் ஒருக்கணம் வியப்பில் மூழ்கினர். அதற்கு காரணம் பாஜகவின் ராஜ்ய சபை உறுப்பினர் தருண் விஜய் தமிழை இந்தியாவின் இரண்டாம் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நேற்று எழுப்பியதால் தான். தமிழ் மொழியின் அருமை பெருமைகளை பற்றி வடநாட்டு மக்கள் உணராது , அதற்கு உரிய இடம் அளிக்காதது அவர்களின் கடும் போக்கையே காட்டுகின்றது. ஏழ்கடல் தாண்டி தன்மனம் வீசி புகழ்கொண்டு வாழும் தமிழ் மொழி உயர்தனிச் செம்மொழியாக பன்னெடுங்காலமாக நம் நாட்டில் வாழ்ந்து கொண்டு வருகிறது என்று பாராளுமன்றத்தில் பறைசாற்றினார் தருண் விஜய்.…

    • 0 replies
    • 2.7k views
  25. ஆஸ்திரேலியா: தடுப்பு மைய உரிமை மீறல் புலனாய்வின் தலைவர் பதவி விலகல் ஆஸ்திரேலியாவில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குழந்தைகள் மீது நடத்தப்பட்ட உரிமை மீறலை விசாரிப்பதற்காக அமைத்திருந்த புலனாய்வின் தலைவர், நியமிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் அந்த பதவிலியிருந்து விலகியுள்ளார். உள்நாட்டு பழங்குடியினத் தலைவர்களிடம் இருந்து ஆதரவு இல்லாததை முன்னாள் நீதிபதியான பிரேயின் மார்டின் குறைகூறியிருக்கிறார். தடுப்பு காவல் மையம் ஒன்றின் காவலர்கள், அங்குள்ள பெரும்பாலும் பழங்குடியின, பதின்ம வயதான இளைஞர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசுவதையும், தாக்குவதையும் தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பியதை அடுத்து இந்த புலனாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தங்களுக்கு பிர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.