உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27051 topics in this forum
-
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கள அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்- ஜி. ராமகிருஷ்ணன் சென்னை: மதுரை, கீழடி அருகில் களஅருங்காட்சியகம் அமைக்கவேண்டும் என்று தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். கோவை வன்முறை சம்பவத்தை காவல்துறையினர் தடுக்க முயற்சி செய்யவில்லை என்றும் ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரைக்கு அருகில் உள்ள கீழடி கிராமத்தில் கடந்த இரண்டாண்டுகளாக மத்திய தொல்லியல்துறையின் சார்பில் அகழ்வாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற அகழ்வாய்வில் 5 ஆயிரத்து 300 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. 71 தமிழ் பிராமி எழுத்துக்கள் சுடுமண் பானை ஓடுகளில் கிடைத்துள்ளன. அதில் பிராகிருதம் உள்ளிட்ட வேற்றுமொழி பெயர்களும் இடம் பெற்றுள்ளன. கிர…
-
- 2 replies
- 566 views
-
-
-
- 0 replies
- 379 views
-
-
காஷ்மீரில் இந்திய ராணுவம் வியூகத் தாக்குதல்: கட்டுப்பாட்டு எல்லையில் தீவிரவாத முகாம்கள் அழிப்பு ஜெனரல் ரன்பீர் சிங் (இடது), இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் (வலது). காஷ்மீர் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியின் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம் அழிக்கப்பட்டது என்று ராணுவம் தெரிவித்துள்ளது . இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் தங்களது இரண்டு ராணுவ வீர்ர்கள் பலியானதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. புதன் இரவு நடத்திய இந்தத் தாக்குதல் குறித்து ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர் லெப்டினண்ட் ஜெனரல் ரன்பீர் சிங் ஊடகங்களிடம் தெரிவிக்…
-
- 4 replies
- 794 views
-
-
'கர்நாடகாவுக்கு இறுதி எச்சரிக்கை..!' காவிரி வழக்கில் கொதித்த உச்சநீதிமன்றம் காவிரி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத கர்நாடகாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள உச்ச நீதிமன்றம், நாளை முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின்படி காவிரி விவகாரம் தொடர்பான கூட்டம் டெல்லியில் மத்திய நீர்பாசனத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், தண்ணீர் திறப்பது தொடர்பாக எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. மாறாக,…
-
- 1 reply
- 610 views
-
-
ஈராக்கில் இஸ்லாமிய அமைப்பு நிலைகள் மீது பிரெஞ்ச் விமானப்படை தாக்குதல் ஈராக் மொசூல் நகரத்தில் இஸ்லாமிய அமைப்பு நிலைகள் மீது பிரெஞ்ச் விமானப்படையினர் அதிகாலை முதல் தொடர் தாக்குதல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சார்ள்ஸ் டி கோல் விமானந் தாங்கி கப்பலில் இருந்து புறப்பட்ட ராவூல் தாக்குதல் விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136502/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 409 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * அதிபர் ஒபாமாவின் வெட்டு அதிகாரத்தை நிராகரித்தது அமெரிக்க நாடாளுமன்றம்; செப்டம்பர் பதினோறு தாக்குதலுக்காக சவுதி அரேபியா மீது வழக்கு தொடுக்க அமெரிக்க பிரஜைகளுக்கு அனுமதி. * சடலங்களாக வீடு திரும்பும் அகதிகளின் அவலம்; ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழையமுயன்று ஆழ்கடலில் மரணித்தவர்களின் குடும்பங்களை சந்தித்தது பிபிசி. * இனஅடையாளத்தை மறைக்க ஒருவர் எந்த எல்லைக்கு செல்லக்கூடும்? அறுவை சிகிச்சை மூலம் அடையாளத்தை மாற்ற முயன்றவரின் பிரத்யேக பேட்டி.
-
- 0 replies
- 455 views
-
-
அமெரிக்காவின் நியூ ஜெர்சி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மோதி விபத்து: பலர் படுகாயம் என தகவல் ] நியூயார்க்: அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரயில் நிலையத்தில், ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பல பயணிகள் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டு நேரப்படி வியாழக்கிழமை காலை 8.40 மணிக்கு ஹோபோகன் ரயில் நிலையத்தில் வேகமாக வந்த பயணிகள் கட்டுப்பாட்டை இழந்து ரயில் நிலையம் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரயில் நிலையம் பெரும் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான ரயிலில் பலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. விபத்தின் சேதங்கள் குறித்து முழு விவரங்கள் தெரியவில்லை. ஆனால் இவ்விபத்தில் பலர் கா…
-
- 1 reply
- 320 views
-
-
1996 ஆம் ஆண்டின் மிஸ் யூனிவர்ஸ் அழகுராணியுடன் உடற்பருமன் தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் மோதல் 2016-09-29 14:57:56 1996 ஆம் மிஸ் யூனிவர்ஸ் அழகுராணியாக (பிரபஞ்ச அழகுராணி) தெரிவாகியிருந்த யுவதியை அவரின் உடற்பருமன் காரணமாக திட்டிய டொனால்ட் ட்ரம்ப், 20 வருடங்களின் பின்னர் இப்போது பதிலடியை எதிர்கொண்டுள்ளார். அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்புக்கும் ஒரு முன்னாள் அழகுராணிக்கும் ஏன் மோதல் ஏற்பட வேண்டும் என்ற கேள்வி எழலாம். மிஸ் யூனிவர்ஸ் மற்றும் மிஸ் யூ.எஸ்.ஏ. அழகுராணி போட்டிகளை நடத்திய மிஸ் யூனிவர்ஸ் இன்கோர்…
-
- 0 replies
- 602 views
-
-
சீன பெருஞ்சுவரில் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையத்தை அமைக்கிறது சீனா சீன பெருஞ் சுவர். உலகிலேயே மிகப்பெரிய ரயில் நிலையத்தை உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரில் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இது குறித்து சீனாவின் தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் சீனாவில் பார்வையாளர்கள் அதிகம் வந்து செல்லும் சீனப் பெருஞ்சுவரில் அமைக்கப்பட இருக்கிறது. சீனப் பெருஞ்சுவரை பார்வையிடுவதற்கு ஒரு நாள் மட்டுமே 30,000 மக்கள் வந்து செல்கின்றன. இந்த புதிய ரயில் நிலையத்தின் பணிகள் 2022 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு அமைக்கப்பட உள்ளது. …
-
- 0 replies
- 395 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * முந்நூறு பேரை பலிகொண்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை சுட்டு வீழ்த்தியது யார்? ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக்குழுவின் கட்டுப்பாட்டிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையே காரணம் என் சர்வதேச வழக்கு தொடுநர்கள் குற்றச்சாட்டு. * இஸ்ரேல் நிறுவனர்களில் ஒருவரான ஷீமோன் பெரெஸ் காலமானார்; இஸ்ரேலின் முன்னாள் அதிபரின் வரலாற்றுப்பாத்திரம் குறித்த பிபிசியின் செய்தித்தொகுப்பு. * வரலாற்றில் முதல் முறையாக மூன்று பேரின் குழந்தையை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள்; மரபணு நோய்ப்பரவலை தடுக்கும் முயற்சியில் மற்றொரு மைல்கல்.
-
- 0 replies
- 271 views
-
-
சீனாவில் சூறாவளி ; ஐவர் பலி ; 100 இற்கு மேற்பட்டோர் காயம் (படங்கள் இணைப்பு) சீனாவின் புயூஜியான் மாகாணத்தை தாக்கிய சூறாவளியால் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கு மேற்பட்டோர் கயாமடைந்துள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன. மணிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் சீனாவை நெருங்கிய ’மெகி’ சூறாவளி சீனாவின் வடமாகாணமான பியூஜியானை தாக்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் வசித்துவந்த ஒருலட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பாக அனுப்பட்டுள்ளதோடு, குறித்த பகுதியின் விமான சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பலத்த மழையுடன் இன்று அதிகாலை கரையை கடந்த சூறாவளியி…
-
- 0 replies
- 593 views
-
-
ஐக்கிய அரபு நாட்டில் பாலின மாற்று அறுவை சிகிச்சை! - விண்ணப்பித்த முதல் பெண் [Sunday 2016-09-25 19:00] ஐக்கிய அரபு எமிரேட்டுகளில், பாலின மாற்று அறுவை சிகிச்சையை சட்டபூர்வமானதாக ஆக்கிய புதிய சட்டம் ஒன்றின் கீழ் , முதல் விண்ணப்பதாரராக ஒரு பெண், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்காக விண்ணப்பித்துள்ளார். ஐக்கிய அரபு நாட்டில், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு முதலில் விண்ணப்பித்தவர் ஒரு பெண் ஆவார்உ ள்ளூர் ஊடகங்களிடம் பேசிய அந்த பெண்ணின் வழக்கறிஞர், அந்த பெண் எப்போதுமே தனது உண்மையான பாலின அடையாளம் என்பது ஆணாக இருப்பது என்று அவர் உணர்ந்துள்ளார். மேலும், அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக உடல் மற்றும் உளவியல் சிகிச்சை எடுத்து வருகிறார் என்று கூறினார். …
-
- 0 replies
- 462 views
-
-
பாகிஸ்தானில் சார்க் மாநாடு: இந்தியாவை அடுத்து வங்கதேசம், பூடான் புறக்கணிப்பு சார்க் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தேசியக் கொடிகள் | கோப்புப் படம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் சார்க் மாநாட்டில் பங்கேற்பதில்லை என இந்தியா முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இந்தியாவைத் தொடர்ந்து வங்கதேசம், பூடான் நாடுகளுக்கு சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. காரணம் என்ன? தங்கள் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவதாக தெரிவித்துள்ள வங்கதேசம், இதன் காரணமாக இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சார்க் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. பூடான் நாடோ, தெற…
-
- 0 replies
- 435 views
-
-
இஸ்ரேலின் முன்னாள் ஜனாதிபதி காலமானார் இஸ்ரேலின் முன்னாள் ஜனாதிபதி சிமோன் பெரஸ் காலமானார். சிமோன் பெரஸ் தனது 93ம் வயதில் காலமானார். பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பெரஸ் சுகமடைந்ததாகவும் பின்னர் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணமானார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சிமோன் பெரஸ் இரண்டு தடவைகள் இஸ்ரேலிய பிரதமராகவும், ஒரு தடவை ஜனாதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார். 1994ம் ஆண்டு பெரஸிற்கு நோபல் சமாதான விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிமோன் பெரஸின் மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136416/la…
-
- 0 replies
- 337 views
-
-
ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரில் மசூதி, மாநாட்டு மையம் மீது இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் ஜெர்மனியின் கிழக்கு நகரான ட்ரெஸ்டனில் நடத்த இரண்டு குண்டு தாக்குதல் சம்பவங்களில் ஒரு சர்வதேச மாநாட்டு மையமும், ஒரு பள்ளிவாசலும் இலக்கு வைக்கப்பட்டன என்று போலிசார் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரத்தில் குண்டு தாக்குதல் நடந்த சர்வதேச மாநாட்டு மையத்தின் ஒரு பகுதி திங்களன்று நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை . இந்த தாக்குதலை நடத்தியதாக இது வரை யாரும் பொறுப்பு கோரவில்லை மற்றும் இனவாதம் இந்த தாக்குதல்களின் நோக்கமாக தெரிகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ட்ரெஸ்டனில் உள்ள பள்ளிவாசல்களின் முன் பாதுகாப்பு பலப்படுத…
-
- 1 reply
- 313 views
-
-
ஹிலரி - ட்ரம்ப் இடையேயான முதல் தொலைக்காட்சி விவாதத்தில் கடும் மோதல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டனுக்கும், டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இடையே நடந்த முதல் தொலைக்காட்சி விவாதத்தில் அவர்கள் கடுமையான கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட்டார்கள். ஹிலரிக்கும் ட்ரம்ப்புக்கும் இடையேயான தொலைக்காட்சி விவாதம் பொருளாதாரம், வரி விதிப்பு, இன உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஆகிய விஷயங்கள் குறித்து இந்த 90 நிமிட நேரம் நடந்த ஒளிபரப்பில் விவாதிக்கப்பட்டது. ஹிலரி கிளிண்டன் அரசில் பதவி வகித்த போது நாட்டின் பிரச்சனைகளில் பலவற்றுக்கு அவரே காரணமாக இருந்தார் என்று அவரை தொலைக்காட்சி விவாதத்தின் போது பலமுறை இடைமறித்த டொனால்ட் ட்ரம்ப் கு…
-
- 4 replies
- 852 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * சூடுபிடிக்கிறது அமெரிக்க அதிபர் தேர்தல் களம்; ஹிலரி கிளிண்டனுக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையிலான முதலாவது நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் காரசார மோதல். * சீனாவின் சிறு முதலீட்டாளர்கள் போராட்டம்; நிதி நிறுவன மோசடியில் பல மில்லியன் இழப்புக்கு அரசு நடவடிக்கை தேவையென கோரிக்கை. * உலகுக்கு வெளியிலும் உயிர்கள் இருக்கிறதா? வியாழனின் நிலவில் நீரிருப்பதை கண்டறிந்தது நாசா நிறுவனம்
-
- 0 replies
- 358 views
-
-
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொலம்பிய சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொலம்பிய சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொலம்பிய அரசாங்கத்திற்கும் இடதுசாரி பார்க் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் இந்த சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொலம்பியாவில் இடம்பெற்று வந்த 52 ஆண்டுகால சிவில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கோருவதாகவும் கிளர்ச்சிக் குழுத் தலைவர் வுiஅழஉhநமெழ தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக அனைத்து தரப்பினருக்கும் ஏற்படுத்திய வலிகள் வேதனைகளுக்கா…
-
- 0 replies
- 301 views
-
-
அமெரிக்காவின் ஹ்யூஸ்டன் நகரில் துப்பாக்கிச் சூடு 9 பேர் காயம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹ்யூஸ்டன் நகரில் உள்ள வர்த்தக வளாகத்திற்கு அருகில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயமடைந்துள்ளனர் என்று டெக்ஸாஸ் போலிசார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் குடியிருப்புவாசிகள் அந்த பகுதியை தவிர்க்குமாறு அறிவுருத்தப்பட்டுள்ளனர். சந்தேக நபரை சுட்டுக் கொன்றுவிட்டதாகவும்; அவர் ஒரு வழக்கறிஞர் என்றும் அவரின் நிறுவனம் பிரச்சனைகளில் இருந்ததாகவும் போலிஸார். தெரிவித்துள்ளனர் இதில் வேறுயாருக்கும் தொடர்பில்லை என கருதப்படுவதாக நகரின் தலைமை போலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். http://www.bbc.com/tamil/global-37473010
-
- 0 replies
- 277 views
-
-
பிரான்ஸில் குடியேறிகள் நெருக்கடியை கையாள பிரிட்டனுக்கு ஒல்லாந்து அழைப்பு பிரான்ஸின் வடக்கு பகுதியில் நிலவும் குடியேறிகள் நெருக்கடியை கையாள்வதில் பிரிட்டன் தனது பங்கை அளிக்க வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஒல்லாந்து வலியுறுத்தியுள்ளார். கலெய் துறைமுகத்தில் ஒல்லாந்த் கலெய் துறைமுகத்திற்கு விஜயம் செய்த அவர், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக பிரிட்டன் வாக்களித்துள்ளதால் மட்டும், பிரான்ஸிற்கான அதன் கடமைகளிலிருந்து பிரிட்டன் விடுபட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். குடியேறிகள் டிரக்குகளில் ரகசிய பயணம் மேற்கொள்வதை தடுக்க, பிரிட்டனின் நிதி உதவியுடன், முக்கிய சாலையில், சுவர் எழுப்பும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஜங்…
-
- 0 replies
- 333 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * கொலம்பியாவில் சமாதானத்துக்கான புதிய நம்பிக்கை; ஐம்பதாண்டுகால ஆயுதமோதலை முடிவுக்கு கொண்டுவரும் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. * ஹிலரி கிளிண்டன், டொனால்ட் ட்ரம்புக்கு இடையிலான முதல் நேரடி விவாதத்துக்கு தயாராகிறது அமெரிக்கா; அதிபர் தேர்தலுக்கான நேரடி விவாதங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது எது?—ஆராய்கிறது பிபிசி. * விவசாய நெருக்கடிக்கு புதுவகை தொழில்நுட்பத்தீர்வு; கென்யாவின் இளம் தலைமுறையினரை ஈர்க்கும் செல்பேசி விவசாயம்.
-
- 0 replies
- 395 views
-
-
Terror alert in Malmo as explosion rocks city after gun attack leaves 'multiple casualties' in southern neighbourhood The shooting occurred just before 7pm local time this evening and police have an ongoing operation in the area Getty Terror fears have been raised in Malmo after an explosion has rocked the outskirts of the city. The blast was hear in the just before 9pm local time at Heleneholm. This came two hours after a gun attack left 'multiple injuries' just one kilometer away in the south …
-
- 0 replies
- 697 views
-
-
1962 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த, 8 ஆண்டுகளாக நடந்த, அல்ஜீரியா சுதந்திர போரின் போது, பிரெஞ்சு தரப்புக்கு ஆதரவாக சண்டையிட்ட அல்ஜீரியர்கள் புறக்கணிக்கப்பட்டதை பிரான்ஸ் முதற்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து அல்ஜீரியாவிலிருந்து பிரெஞ்சு படையினர் பின்வாங்கியதை தொடர்ந்து, 'ஹர்கிஸ்' என்றழைக்கப்பட்ட அல்ஜீரிய தன்னார்வலர்கள் பல்லாயிரக்கணக்கானோர் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அங்கிருந்து தப்பி பிரான்ஸிற்கு திரும்பியவர்கள் முகாம்களில் வைக்கப்பட்டனர். தன்னார்வலர்களுக்கு அஞ்சலி செலுத்த நடத்தப்பட்ட ஒரு தேசிய நாளை குறிக்கும் விதமாக, பாரீஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து, தன்னார்வலர்கள் நடத்தப்ப…
-
- 1 reply
- 455 views
-
-
வொஷிங்டனில் துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி ஐக்கிய அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்திலுள்ள பேர்லிங்டன் நகரிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிலே, இலங்கை நேரப்படி இன்று காலை எட்டு மணியளவில் இடம்பெற்ற துப்பாகக்கிச்சூட்டில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிதாரி, சம்பவ இடத்திலிருந்து தப்பியுள்ளதாகவும் பொலிஸார் சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/182512/வ-ஷ-ங-டன-ல-த-ப-ப-க-க-ச-ச-ட-ந-ல-வர-பல-#sthash.KMeCMAHe.dpuf
-
- 2 replies
- 430 views
-
-
ஃபின்லாந்தில் அதிகரித்து வரும் இனவெறியை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் பேரணி ஃபின்லாந்தில் அதிகரித்து வரும் இனவெறி மற்றும் வலதுசாரி தீவிரவாத வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் பேரணிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். ஃபின்லாந்த் தலைநகர் ஹெல்சிங்கியில் சுமார் 15,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக போலிஸ் தெரிவித்துள்ளது. ஃபின்லாந்த் தலைநகர் ஹெல்சிங்கியில் சுமார் 15,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக போலிஸ் தெரிவித்துள்ளது. குவோப்பியோ நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஃபின்லாந்து பிரதமர் ஜுஹா சிபிலா கலந்து கொண்டார். பெரும்பாலான ஃபின்லாந்த் மக்களுக்கு அதிகரித்து வரும் தீவி…
-
- 1 reply
- 446 views
-