Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1.  275 பயணிகளுடன் பயணித்த விமானம் தரையிறங்கும்போது விபத்து (VIDEO)) இந்தியாவின் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட எமிரேட்ஸ் எயார்லைன் விமானமொன்று டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை, விமானத்தில் பயணித்த 275 பயணிகளும் பாதுகாப்புடன் உள்ளனனர் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. போயிங் 777 ரக விமானமே தரையிறங்கும் போது தீபற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் தரையிறங்கிய இடத்தைச் சுற்றி புகை மண்டலம் வான்நோக்கி மேலெழுந்துள்ளது. …

    • 9 replies
    • 1.2k views
  2. கருப்பின மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை கண்டித்து லண்டனின் முக்கிய சாலைகளில் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவை சேர்ந்த ‘ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்ற அமைப்பை சார்ந்த சமூக ஆர்வலர்கள் அமெரிக்கா போலீஸ் அதிகாரிகளால் கருப்பின மக்கள் கொல்லப்பட்டதை கண்டிக்கும் வகையில் லண்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) விமான நிலையங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனின் போராட்டகாரர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்ட போலீஸார். இது தொடர்பாக போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜோஸ்வா வீராசாமி பிபிசி செய்தி நிறுவனத்திடம், “அமெரிக்காவில் கருப்பின மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை லண்டன் உள்ளிட்ட பிற உலக நாடுகள் அறிந்து …

    • 0 replies
    • 294 views
  3. மாயமான எம்.எச்.370 விமானி ஜஹாரி அகமது ஷா-வின் சகோதரி சகினாப் ஷா, மொபைலில் உள்ள தனது சகோதரனின் புகைப்படத்தை பார்க்கிறார். | கோப்பு படம்: ஏ.பி. விமானியின் சதி காரணமாகவே மலேசியாவின் எம்.ஹெச்.370 விமானம் திசை மாற்றப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங் நோக்கி 239 பயணிகளுடன் கடந்த 2014 மார்ச், 8-ம் தேதி புறப்பட்டுச் சென்ற மலேசிய விமான நிறுவனத்துக்கு சொந்தமான எம்.ஹெச்.370 விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது. விபத்து நிகழ்ந்து 2 ஆண்டுகள் உருண்டோடியும், இதுவரை விமானத்தின் சிதைந்த பாகங்கள் கூட கண்டுபிடிக்கப்படவில்லை. அதே சமயம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம்…

    • 0 replies
    • 324 views
  4. ஜேர்மனியில் பேருந்து ஒன்றை 11 வயதே ஆன சிறுவன் திருடி ஓட்டிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள பாவரியன் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றில் நுழைந்து குறிப்பிட்ட சிறுவன் விளையாடி வந்துள்ளான். தனியாருக்கு சொந்தமான அந்த பேருந்து சில காரணங்களால் அந்த பகுதியில் உரிமையாளர்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே பேருந்தினுள் புகுந்து விளையாடி வந்த சிறுவனின் கண்ணில் பேருந்தை இயக்கும் சாவி சிக்கியுள்ளது.இதை வாய்ப்பாக பயன்படுத்திய சிறுவன் அந்த பேருந்தை அங்கிருந்து இயக்கி தெருவழியாக பிரதான சாலைக்கு எடுத்து வந்துள்ளான். மட்டுமின்றி பேருந்து நிறுத்தங்களில் …

  5. இன்றைய நிகழ்ச்சியில் * சிரியாவில் பெரும் மனிதநேய அவலம். அங்கு போரால் காயமடைந்த மக்களுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் பிபிசியிடம் பேசினார். * தெற்கு சூடானில் ஊட்டச்சத்தின்மையால் மோசமாக பாதிக்கப்பட்ட குழந்தைகள். கடும் சண்டையால் இருப்பிடங்களை விட்டு ஓடும் பொது மக்கள். * எதிர்ப்பு போராட்டங்கள், ஊக்க மருந்து ஊழல், ஸீக்கா அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு மத்தியிலும் ரியோ ஒலிம்பிக்ஸ் இன்று ஆரம்பிக்கிறது.

  6. புதுடெல்லி, டெல்லி ஆஸ்பத்திரியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஆபரேஷன் நடந்தது. சோனியா காந்திக்கு காயம் உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருப்பதால், அங்குள்ள வாரணாசி நகரில் சோனியா காந்தி கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். காரில் ஊர்வலமாக சென்று தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்ட அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சோனியா காந்திக்கு தோள்படையில் காயம் ஏற்பட்டதாகவும், கடுமையான காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் சோனியா காந்தியின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஆபரேஷன் அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்ட ச…

  7. அமெரிக்காவில் ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று தவறாக கருதி இளைஞரை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெப்ராஸ்கா மாகாணத்தின், ஒமாஹா நகரில் உள்ள பிரபல உணவகத்தில் இந்தியாவை சேர்ந்த சுதாகர் சுப்புராஜ்(30), சமையல்காரராக வேலை செய்து வருகிறார். சம்பவ தினத்தன்று சுப்புராஜ் உணவகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் சுப்புராஜை பலமாக முகம் மற்றும் வாயில் தாக்கினர்.இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அந்த நபர் சுப்புராஜை அடிக்கும் போது ஐஎஸ் எங்கள் நாட்டை விட்டுவெளியே போ என்று உரக்ககத்தி விட்டு, அங்கிருந்து ஓடி விட்டார். இதை அறிந்த அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், இது…

  8. கனடாவில் பயணிகள் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து, பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.West Jet என்ற பயணிகள் விமானம் நேற்று மாலை 4.25 மணி அளவில் வான்கூவர் நகரிலிருந்து, ஒட்டாவா நகருக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம அழைப்பு ஒன்று வந்தது. அதில் ஓட்டாவா நகருக்கு புறப்பட்டு சென்றுள்ள விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் அதிகாரிகள் விமானத்தை உடனடியாக தரையிறக்கும் படி, விமான ஓட்டுனரிடம் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக Thunder Bay என்ற நகரில் விமானம் சுமார் 10.30 மணி அளவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.அதன் பின்னர் விமானத்தில் இருந்த 125 பயணிகளும் ப…

  9. அஸ்ஸாமில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழப்பு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் சற்று நேரத்துக்கு முன்னர் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். பலர் உயிரிழந்திருப்பதை, மாநில காவல்துறை தலைவர் முகேஷ் சகாய் பிபிசியிடம் உறுதியளித்தார். ஆனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முழுமையாகத் தெரியவில்லை என்றார். கீழ் அஸ்ஸாம் பகுதியில் கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள பாலாஜார் பகுதியில், மக்கள் கூட்டம் மிகுந்த மார்க்கெட் பகுதியில் தேசிய போடோலேண்ட் முன்னணி தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கித் தாக்குதல் நடத்தினார்கள்.கோக்ரஜாரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் இந்தப்பகுதி அமைந்துள்ளது. அந்தத் தாக்…

  10. வீட்டில் வளர்த்த நாகப் பாம்பு ஒன்று தீண்டி சுற்றாடல் ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆய்வு நோக்கத்திற்காக வீட்டில் வளர்த்து வந்த நாகப் பாம்பு ஒன்றே இவ்வாறு தீண்டியுள்ளது. காலியைச் சேர்ந்த 47 வதான அமல் விஜேசேகர என்பவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். காலி கலேகானே பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் இந்த நபரை வீட்டு வாயிட் கதவு அருகாமையில் இறந்து கிடந்த நிலையில் உறவினர்கள் மீட்டுள்ளனர். இலங்கைக்கே உரிய உயிரினங்கள் தொடர்பில் ஆய்வு நடத்தி வரும் ஆய்வுக் குழுவொன்றின் அங்கத்தினராக இவர் கடமையாற்றி வந்தார். பிரதேசத்தில் பல்வேறு வீடுகளுக்கு வரும் பாம்பு இனங்களை பிடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்று ஆய்வு செய்து வந்துள்ளார்…

  11. இந்திய துணைக் கண்டமானது 100 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அன்டார்க்டிகா கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்ற கருத்துக்கான ஆதாரத்தை புவியமைப்பியல் விஞ்ஞானிகள் தங்கள் புதிய ஆய்வில் நிரூபித்துள்ளனர்.இந்தியா மற்றும் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பூமியின் வெளிப்புற அடுக்குகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். அவர்கள் இந்தியாவின் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தொன்மையான பாறைகள் குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது கண்டங்கள் உருவானது தொடர்பான முக்கிய விஷயங்களைக் கண்டறிந்தனர்.இது குறித்து இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய கோரக்பூர் ஐஐடி கல்வி நிறுவன பேராசிரியர் தேவாசிஸ் உபாத்யாயவும், ஸ்விட்சர்லாந்தின் பெர்ன் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளாஸ் மெஸ்கரும் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறி…

  12. 'ஒயின் அரசி'- ஜெர்மனியில் அழகி பட்டம் வென்ற முதல் சிரிய அகதி! நினோர்டா பஹ்னோ சிரியாவை சேர்ந்த மாணவி ஒருவர் ஜெர்மனியில் நடைபெற்ற அழகிகளுக்கான போட்டியில் "ஒயின் அரசி" எனும் மகுடம் சூட்டப்பட்டதன் மூலம் அழகி பட்டம் வென்ற முதல் சிரிய அகதி என்ற பெருமைக்கு சொந்தமாகியுள்ளார். லக்சம்பர்க் நாட்டின் எல்லையோரம் மேற்கு ஜெர்மனியில் அமைந்துள்ள மாசெலெ ஒயின் பிரதேச நகரம் ட்ரையர். இங்கு கடந்த புதன்கிழமை நடைபெற்ற அழகி போட்டியில் சிரியாவை சேர்ந்த 26 வயதான நினோர்டா பஹ்னோ என்ற மாணவி ஒயின் குயினாக மகுடம் சூட்டப்பட்டார். ஒயின் குயினாக மகுடம் சூடப்பட்டதன் மூலம் ஜெர்மனியில் அழகி பட்டம் வென்ற முதல் சிரிய அகதி என்ற பெருமை நினோர்டா பஹ்னோவிக்கு கிடை…

  13. பிரான்ஸ் நகர சாலையில் ஒயின் வெள்ளம்! ஒயின் சாலை! தென் பிரான்ஸ் நகர் ஒன்றில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒயின் குழாயை உடைத்ததால், சாலையில் ஒயின் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒயின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த, அவசர சேவைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தரையின் கீழ் தளத்தில் உள்ள கார் நிறுத்துமிடங்களுக்குள் ஒயின் வெள்ளம் புகுந்துவிடாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய ஒயின் உற்பத்தி பிராந்தியங்களில் ஒன்றான லாங்குடாக் - ருசிலோன் என்ற துறைமுக நகரில் உள்ள செடே பகுதியில் இந்தப் போராட்டம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், ஒயின் உற்பத்தியாளர்களுக்கான பிராந்திய நடவடிக்கைக் குழு (க்ரேவ்) என்ற தீவிரவாதக்குழுவைச் ச…

  14. இன்றைய நிகழ்ச்சியில் * இங்கு மத்திய லண்டனில் அமெரிக்க பெண் ஒருவர் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். பத்தொன்பது வயதான சந்தேக நபர் கடும்போக்காளர் என்பதற்கு ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. * ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு படகுகள் மூலம் வந்த மேலும் பல அகதிகள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். * எலிசபெத் மாகாராணியாரின் தொண்ணூறாவது பிறந்ததினத்தை முன்னிட்டு, பல தசாப்தங்களாக அவர் அணிந்த ஆடைகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.

  15. சியோல், ஜப்பான் கடல் எல்லைக்குள் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையை செலுத்தி வடகொரியா சோதனை நடத்தியது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. வடகொரியா அச்சுறுத்தல் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் ஆட்சி நடந்து வரும் வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் அன் உள்ளார். அவருடைய அரசாங்கம் அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் எல்லையில் ராணுவ குவிப்பையும், அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளையும் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தென்கொரியாவுக்கு எல்லையிலும், கடலோர பகுதியிலும் அமெரிக்கா வான் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது. தவிர, தென்கொரியாவுடன் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. …

  16. ஐ.எஸ். நிறுவியவர்களில் ஹிலாரியும் ஒருவர்: டிரம்ப் தாக்கு "ஐஎஸ் அமைப்பை நிறுவியவர்களில் ஹிலாரியும் ஒருவர்" என்று குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து இரு முன்னணி கட்சிகளின் (குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி) அதிபர் வேட்பாளர்களான டொனால்டு டிரம்பும், ஹிலாரி கிளிண்டனும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புளோரிடாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற டொனால்டு டிரம்ப், "ஐஎஸ் அமைப்பை நிறுவியவர்களில் ஹிலாரியும் ஒருவர். இதற்காக ஐஎஸ் அமைப்பினர் ஹிலாரிக்கு விருது வழங்க வேண்டும். ஒர்லா…

  17. மத்திய லண்டனில் தாக்குதல் ; மக்கள் அச்சத்தில் மத்திய லண்டனில் ரஸ்ஸல் சதுக்கத்திற்கு அருகில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியானதுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கையில் கத்தியுடன் வந்த நபர் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியீட்டுள்ளன. குறித்த தாக்குதலில் ஈடுப்பட்ட 19 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இத் தாக்குதல் தீவிரவாதிகளின் நடவடிக்கையாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/9766

  18. ஆஸ்திரேலிய தேர்தலில் கால் பதித்த முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி ஆஸ்திரேலிய பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நாடாளுமன்ற மேலவையில் குடியேற்றங்களுகெதிரான ஒரே தேசம் என்ற கட்சி நான்கு இடங்களை வென்றுள்ளது. மால்கம் டர்ன்புல் பவுலின் ஹான்சன் என்பவர் தலைமைதாங்கும் இந்த கட்சி, இஸ்லாமியர்கள் ஆஸ்திரேலியாவில் அனுமதிக்க தடை விதிக்க வேண்டும் என்றும், மசூதிகள் கட்டுவதை இடைநிறுத்தம் செய்யவேண்டும் என்றும் பிரசாரம் செய்து வருகிறது. அவர் ஆஸ்திரேலியா ''ஆசியர்களால் நிரப்பப்படுகிறது'' என்றார். ஆனால், பவுலின் ஹான்சன் வருகை, ஆஸ்திரேலிய அரசியலில் வரவேற்கத்தக்கதல்ல என்று பிரதமர் மால்கம் டர்ன்புல் விமர்சித்துள்ளார். http://www.bbc.com/t…

  19. உலகின் அதிசக்தி வாய்ந்த பாஸ்போர்ட்/கடவுச்சீட்டு என்ற பெருமையை ஜேர்மனி கடவுச்சீட்டு பெறுகிறது. இதைப் பயன்படுத்தி 177 நாடுகளுக்கு வீசா இல்லாமல் சென்றுவரலாம். இரண்டாம் இடத்தில் சுவீடனும் (176 நாடுகள்) மூன்றாம் இடத்தில் பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்தும் (175 நாடுகள்) 4வது இடத்தில் பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, அமெரிக்காவும் (174 நாடுகள்) உள்ளன. நியூசிலாந்து கடவுச்சீட்டு 7 வது இடத்திலும்(171 நாடுகள்) ஆஸ்திரேலியக் கடவுச்சீட்டு 8 வது இடத்திலும் (169 நாடுகள்) காணப்படுகின்றன. ஏனைய அனைத்து நாடுகளினதும் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. 1. Germany – 177 2. Sweden – 176 3. Finland, France, Italy, Spain, UK – 175 4. Belgium, Denmark, Net…

  20. பொதுமக்களை பாதுகாக்க அதிரடியாக களமிறங்கிய லண்டன் பொலிஸ் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி லண்டன் வீதிகளில் ஆயுதம் தாங்கிய பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். லண்டன் மேயர் Sadiq Khan - யின் அறிவுறுத்தலின்படி, உயர் காவல் ஆணையர் Bernard Hogan இதனை அமல்படுத்தியுள்ளார். பொது உத்தரவாதம் மற்றும் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்துவதே இதன் நோக்கம் ஆகும் என காவல் ஆணையர் கூறியுள்ளார். ஆயுதம் தாங்கிய அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என இதற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது, இதன்படி மொத்தம் 2,8000 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நைஸ் நகரில் நடைபெற்ற தாக்குதலில் 84 பேர் கொலை செய்யப்பட்டனர், இந்த தாக்குதலின…

  21. 5000 ஆண்டுகளுக்கு முன்பு, கடைசியாக உயிரோடிருந்த உலகின் மிகப்பெரிய உயிரினங்கள் கொல்லப்பட்டது எதனால் என்பதை வட அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக நம்புகின்றனர்.அலாஸ்காவில் உள்ள அணுக கடினமான தொலைவில் உள்ள செயின்ட் பால் தீவினில் கூட்டமாக வாழ்ந்து வந்த இந்த பெரும் உயிரினங்கள், அங்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.பனியுக காலம் முடிவடைந்தவுடன், பூமி சூடாக தொடங்கியதால், கடல்மட்ட அளவுகளும் அதிகரித்தன. இதனால், இந்த தீவு தன் அளவிலிருந்து சுருங்கி, அதன் நன்னீர் ஏரிகளை கடலில் இழந்துவிட்டது. இவ்வாறான சூழல் நிலவிய போதிலும், செயின்ட் பால் தீவினில் வாழ்ந்த மிகப்பெரும் உயிரினங்கள், பெருநிலப்பரப்பில் …

  22. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் கல்லூரிக்கு மாணவர்கள் துப்பாக்கி எடுத்து வர அனுமதி - டெக்காஸ் மாகாணத்தில் 21 வயது நிரம்பிய மாணவ, மாணவிகள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வகுப்புகளுக்கு துப்பாக்கி கொண்டு செல்லலாம், என புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் மலிந்து விட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் புகுந்து பலரை சுட்டு வீழ்த்தும் கொடுமை நடந்து வருகிறது. எனவே துப்பாக்கி வைத்துக்கொள்ள கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று சிலர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவின் டெக்காஸ் மாகாணத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் ம…

  23. இன்றைய நிகழ்ச்சியில் * இராக்கில் நூற்றுக்கணக்கான யசிடி பெண்களை கடத்திச் சென்ற ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்த ஆதாரங்களை திரட்டும் புலனாய்வாளர்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கோருவதற்கான முயற்சி குறித்த பிபிசியின் சிறப்பு தகவல். * கடந்த மாத துருக்கிய இராணுவ புரட்சியை அடுத்து பாதிக்கப்பட்ட சில தொழிலாளர்களிடம் பிபிசி பேசியது. தாம் அப்பாவிகள் என்கிறார்கள் அவர்கள்! * சூரிய வெப்பம் தகிக்கும் ஒரு நாட்டில் ஐஸ் ஹாக்கி. எதிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்காக தயாராகும் கென்யா.

  24. புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுதனை அவுஸ்திரேலியா அங்கீகரிக்கின்றது புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுதனை அவுஸ்திரேலியா அங்கீகரிக்கின்றது புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுவதனை அவுஸ்திரேலியா அங்கீகரிக்கின்றது என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமை கண்காணிப்பகம் ஆகிய அமைப்புக்கள் இவ்வாறு அவுஸ்திரேலியாவின் நடவடிக்கைகளை கண்டித்துள்ளன. அவுஸ்திரேலிய அரசாங்கம் வேண்டுமென்றே புகலிடக் கோரிக்கையாளர் துன்புறுத்தப்படுவதனை அங்கீகரிக்கும் கொள்கைகளை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளன. படகு மூலம் அவுஸ்திரேலியாவை அடையும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நவுரு மற்றும் பபுவா ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.