Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜேர்மனி புகையிரதத்தில் தாக்குதல் நடத்தியவர் எச்சரிக்கை விடுக்கும் வீடியோவை ஐ.எஸ். வெளியிட்டது ஜேர்மனியில் பயணிகள் புகையிரதத்தில் கோடரியால் தாக்குதல் நடத்திய ஆப்கானிஸ்தான் அகதி எச்சரிக்கை விடுக்கும் வீடியோ காட்சியை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். ஜேர்மனியின் வெர்ஸ்பர்க் நகரில் பயணிகள் புகையிரதத்தில் பயணம் செய்த 17 வயது நிரம்பிய இளைஞன், சக பயணிகள் மீது சரமாரியாக கோடரியாலும், கத்தியாலும் தாக்குதல் நடத்திவிட்டு அவர் புகையிரதத்தில் இருந்து தப்ப முயன்ற வேளையில் பொலிஸார் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் அவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 17 வயது அகதி என தெரிய வந்தது. இந்த தாக்குதல் தொடர்பாக பவேரியா மாகாணத்தி…

  2. நீண்ட இழுபறிக்குப் பின்னர் நேற்று தொடங்கிய ஆர் என் சி மகாநாட்டில் இன்று உத்தியோக பூர்வமாக ஐனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.இவர் ஐனாதிபதி வேட்பாளருக்கு தேவையான(1237)டிலிகேற்ஸ் எடுப்பாரா என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்க 1767 டிலிகேற்ஸ் எடுத்து பெரும்பான்மையான வாக்குகளால் வெற்றி பெற்று ஐனாதிபதி வேட்பாளராகியுள்ளார்.இன்று அவருக்கு கிடைத்த வெற்றியை குடியரசுக் கட்சியைச் சார்ந்தவர்களே எதிர் பார்க்கவில்லை.நவம்பரில் நடக்க இருக்கும் தேர்தலில் இவர் தான் வெல்வார் என்று பரவலாக கதை அடிபடத் தொடங்கிவிட்டது. It's Official: Trump Wins GOP Presidential Nomination by Andrew Rafferty Donald Trump officially became the Republican Part…

  3. உலகிலேயே மிக வயதான சிறைக்கைதி வங்கதேசத்தில் விடுவிப்பு வங்க தேசத்தில் உலகின் மிக வயதான சிறைக்கைதியாக கருதப்பட்ட பெண்மணி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். நூறு வயதைத் தாண்டியவராகக் கருதப்படும் ஒஹிதுன்னிசா என்ற அவர், இருபது வருடங்களுக்கு முன்னர், குடும்பத் தகராறில் கொலை செய்ததாக குற்றச் சாட்டில் தவறாக தண்டிக்கப்பட்டார். நாட்டின் தலைமை நீதிபதி சுரேந்திர குமார் சின்ஹாவின் தலையீட்டால், மேல் முறையீட்டு நீதிமன்றம் அவரை விடுவித்தது. ஒஹிதுன்னிசா தனது பார்வையை இழந்துவிட்டார் என்றும் பிறர் துணையால் மட்டுமே தற்போது அவரால் நகர முடிகிறது என்றும் கூறப்படுகிறது. ஆயுள் தண்டனையில் 20 ஆண்டுகள் சிறைவாசத்தை அவர் அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்க…

  4. ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள 29 மாடிகளை கொண்ட அடுக்கு குடியிருப்பில் இருந்து கைக்குழந்தையுடன் கீழே குதித்து இந்தியப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பிரபல நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை பொறியாளராக பணியாற்றி வருபவர் கன்னாராம் ஸ்ரீநிவாஸ். இவர் தனது மனைவி சுப்ரஜா, ஐந்துவயது மகள் மற்றும் நான்குமாத ஆண் குழந்தையுடன் இங்குள்ள விக்டோரியா பகுதியில் உள்ள 29 மாடிகளை கொண்ட அடுக்கு குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த வியாழக்கிழமை தனது வீட்டு பால்கனியில் இருந்து கைக்குழந்தை ஸ்ரீஹனுடன் கீழே குதித்த சுப்ரஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தியாவில் உள்ள அவரது பெற்றோர் சுப்ரஜாவின…

  5. கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து வந்த ஒருபெண், அதே கல்லூரியில் படிக்கும் சகநண்பருடன், திருமணம் செய்யாமல் (லிவ்இன் டுகெதர் ரிலேஷன்ஷிப்) சேர்ந்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் வீட்டிற்கு வராததையடுத்து திடுக்கிட்ட பெற்றோர் காவல் நிலையத்தில் தங்களது பிள்ளைகளை காணவில்லை என்று புகார் அளித்தனர்.இதுபற்றி கல்லூரி நிர்வாகத்துக்கும் தகவர் தெரிவிக்கப்பட்டது. காணாமல் போனதாக கூறப்படும் மாணவனும் மாணவியும் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்தது சக மாணவர்கள் மூலம் தெரியவந்தது. இதையடுதது, கடந்த ஜனவரி மாதம் அந்த மாணவனையும் மாணவியையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. கல்லூரிய…

  6. 16வது நாடாளுமன்றம் துவங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சோனியா, அவரது மகன் ராகுல் இதுவரை ஒரு கேள்விக் கூட கேட்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா ஸ்பென்ட் நிறுவனம் செய்த ஆய்வறிக்கையில், கடந்த 2 ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத்தின் 8 கூட்டத் தொடர்களில் ஒரே ஒரு கேள்விக் கூட கேட்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியும், நாடாளுமன்றத்தில் இதுவரை எந்த கேள்வியையும் எழுப்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவையில் 128 கேள்விகளை எழுப்பியுள்ளார்.தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ர…

  7. இன்றைய நிகழ்ச்சியில் * ஜெர்மனிய ரயில் ஒன்றில் ஆப்கான் அகதி ஒருவர் தாக்குதலை நடத்தியுள்ளார். பதின்ம வயது தாக்குதலாளியின் அறையில் கையால் வரையப்பட்ட இஸ்லாமிய அரசின் கொடி கண்டுபிடிக்கப்பட்டது. * கடந்த பதினாறு வருடங்களில் எயிட்ஸ் குறித்த மிகப்பெரிய மாநாடு தென்னாப்பிரிக்காவில் தொடருகின்றது. அதேவேளை, தனது குடும்பத்தில் பெரும்பாலானோரை எயிட்ஸ்க்கு பலிகொடுத்து, தானும் எயிட்ஸ் நோயோடு வாழும் ஒரு இளைஞனை சந்தித்தோம். * மனிதனின் எதிர்கால உளவுக் கண்கள். மின்னணு மயமான வண்டுகள் மனிதனின் உயிரைக் காக்க தூர இருந்தே இயக்கப்படுகின்றன.

  8. சுவாதிக்கும், பெங்களூரில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும் பதிவு திருமணம் நடந்துள்ளது என்று ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ், பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். சுவாதி கொலை தொடர்பாக, ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீசாரின் விசாரணையில், சுவாதியை கொலை செய்ததை ராம்குமார் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. இது ஒரு பக்கம் என்றாலும், ராம்குமார் அந்த கொலை செய்யவில்லை. அவர் அதில் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் என்று அவரது வழக்கறிஞர் ராமராஜ் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், ராம்குமார்தான் குற்றவாளி என்று கமிஷனரே கூறிய பிறகு, எதற்காக போலீசார் விசாரணை மற்றும் சிறையில் அணிவகுப்பு நடத்துகிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பி…

  9. கார் மாநிலத்தில் உள்ள துமரி நலா வனப் பகுதிக்குள் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலால் 10 கமாண்டோ வீரர்கள் பலி, 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம். சந்தீப் ஜி தலைமையிலான மாவோயிஸ்டு தீவிரவாதிகள் கயா - அவுரங்காபாத் எல்லையில் உள்ள துமரி நலா வனப் பகுதிக்குள் ஊடுருவி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய துணை நிலை ராணுவ வீரர்கள் அந்த வனப் பகுதியை முற்றுகையிட்டு கடந்த இரு நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அவர்களைப் பிடிக்க மத்திய பாதுகாப்பு படையான சி.ஆர்.பி.எப்-பின் 205வது கோப்ரா கமாண்டோ வீரர் கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் காட்டுக்குள் புகுந்து மாவோயிஸ்டு தீவிர வாதிகளை சுற்றி வளைத்தனர். இதனை அறிந்த மாவோயி…

  10. ஆசியாவின் கணித கற்பித்தல் முறைமை மாணவர்கள் கணிதத்தேர்வுகளில் வெற்றிபெற உதவுவதாக கருதப்படுவதால், தற்போது அந்த பயிற்றுவிப்புமுறை பிரிட்டனிலும் வேகமாக முன்னெடுக்கப்படுகிறது.ஆசிய கணித பயிற்றுவிப்பு முறையை பிரிட்டனிலுள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளில் ஊக்குவிப்பதற்காக, அரசு மேலதிக நிதியை ஒதுக்கியுள்ளது. சீனாவின் கணித கற்பித்தல் முறையை ஊக்குவிக்கும் பிரிட்டிஷ் அரசின் முயற்சி உரிய பலன் தருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். http://www.seithy.com/breifNews.php?newsID=161818&category=WorldNews&language=tamil

  11. ஜெர்மனியில் ஓடும் புகையிரதத்தில் பயணிகள் மீது கோடரியால் தாக்குதல் ஜேர்மனி நாட்டின் பவாரியா மாநிலத்தில் உள்ள டிரியூச்லிங்கென் மற்றும் உவர்ஸ்பர்க் நகரங்களுக்கு இடையிலான மின்சார புகையிரத்தில் (உள்ளூர் நேரப்படி) நேற்றிரவு 9.15 மணியளவில் பயணிகளில் ஒருவன் திடீரென கோடரி மற்றும் கத்தியால் சகப்பயணிகளை சரமாரியாக வெட்டியுள்ளார். குறித்த புகையிரதம் ஓச்ஸென்பர்ட் புகையிரத நிலையத்தை நெருங்கியபோது உள்ளே இருந்த பயணிகளில் ஒருவன் திடீரென கோடரி மற்றும் கத்தியால் சகப்பயணிகளை சரமாரியாக தாக்கியதில் 19 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். இதில் மூவரின் நிலமை கவலைக்கிடமாகவுள்ளது. ஓச்ஸென்பர்ட் புகையிரத நிலையத்தில் புகையிரதம் நின்றதும் தப்பி செல்ல முயன்றவ…

  12. துருக்கியில் இராணுவ புரட்சி என்ற போர்வையில் இஸ்லாத்தின் எழுச்சிக்கு எதிரான சதித்திட்டமொன்று முறியடிக்கப்பட்டுள்ளது. உலகின் எந்த நாட்டிலோ அல்லது ஏதாவது ஒரு மூலையிலோ இஸ்லாம் எழுச்சி பெற்றால் அதனை அடக்கி ஒடுக்க அதற்கு எதிராக அந்த நாட்டு இராணுவத்தினர்களை அல்லது எதிர் கட்சிகளை தூண்டி விடுவதும் அவைகள் தோல்வி அடையும் பட்சத்தில் புதிதாக ஆயுத இயக்கங்களை அந்நாட்டு அரசுக்கு எதிராக உருவாக்குவதும் அதற்காக பாரியளவில் பணத்தினை செலவழிப்பதும் வரலாற்று ரீதியாக உலகில் நடைபெற்று வருகின்ற நிகழ்வுகளாகும். சிதைவடைந்த இஸ்லாமிய கிலாபத்தின் இறுதி தலைநகரான துருக்கியை பொறுத்தவரையில் இராணுவ புரட்சி என்பது புதியவிடயமல்ல. அந்த நாடு பல தடவைகள் இராணுவ புரட்சிக்கு முகம் கொடுத்த…

  13. பெய்ஜிங், ஹிஜ்புல் முஜாகிதின் தீவிரவாத அமைப்பின் தளபதி பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீரில் வன்முறை வெடித்து அமைதியற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த வன்முறைக்கு பாகிஸ்தான் தூண்டுதலாக இருந்ததாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் லூ காங் காஷ்மீர் வன்முறை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், காஷ்மீர் வன்முறையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் சீனா எப்போதும் உறுதியான நிலைப்பாட்டிலேயே இருக்கிறது. இவ்விவகாரத்தில் அமைதியான முறையில் நிலையான தீர்வை காண இந்தியா முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அண்மைக்காலமாக, சீனா பாகிஸ்த…

  14. டெல்லியில் காஷ்மீருக்கு சுதந்திரம் தான் ஒரே வழி என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மனித உரிமைப் போராளியும் புக்கர் பரிசு பெற்ற புகழ் பெற்ற எழுத்தாளருமான அருந்ததி ராய் உரையாற்றினார். FILE அவர் உரையாற்றுவதற்கு முன்னதாக காஷ்மீரிகளின் மூத்த தலைவரான சையத் அலிஷா கிலானி மீது வெறியர்கள் சிலர் காலணி வீசி ரகளை செய்தனர். அதனை முன்னதாக குறிப்பிட்ட அருந்ததி ராய், என் மீது யாருக்கேனும் காலணியை எறிய வேண்டுமானால் இப்பொழுதே எறிந்து கொள்ளுங்கள் எனக் கூறியவாறு தனது உரையைத் தொடங்கினார். காஷ்மீரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இடத்தை இந்திய காலனி ஆதிக்கம் பிடித்துக் கொண்டது. காஷ்மீர், இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி அல…

  15. இன்றைய நிகழ்ச்சியில் * தோல்வியில் முடிந்த துருக்கி ஆட்சிக்கு எதிரான இராணுவப்புரட்சியின் எதிர்வினைகள் தொடர்கின்றன; எட்டாயிரம் காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம், நூற்றுக்கணக்கானாவர்கள் கைது. * பிரான்ஸின் நீஸ் நகரில் கொல்லப்பட்டவர்களுக்காக நாடெங்கும் ஒரு நிமிட மவுன அஞ்சலி; அஞ்சலி செலுத்த வந்த பிரதமருக்கு எதிராக வெளிப்பட்டது அரசு மீதான அதிருப்தி * பிரிட்டிஷ் பள்ளிகளில் பரவலாகும் சீனக்கணித கற்பித்தல் நடைமுறை; எதிர்பாக்கும் பலன் தருமா? ஆராய்கிறது பிபிசி.

  16. "துருக்கி மரண தண்டனையை அறிமுகம் செய்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியாது" துருக்கி மரண தண்டனையை திரும்பவும் அறிமுகம் செய்தால் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைத் தலைவர் ஃபெடரிக்கா மொகரினே எச்சரித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள், அமெரிக்க செயலர் ஜான் கெர்ரியை பிரசல்ஸில் சந்தித்த பிறகு, மனித உரிமைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உடன்பாட்டில் துருக்கி கட்டுப்பட்டுள்ளது என மொகரினே நினைவுறுத்தினார். வார இறுதியில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய ரிசப் தயிப் எர்துவான், ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட தலைவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை அவருக்கு கேட்டதாக தெரிவித்துள்…

  17. தமிழக மீனவனின் வாழ்வாதாரத்திற்காக, கட்சத்தீவினை மீட்க இங்கே போராட்டங்கள்நடத்தப்படுகின்றன. ஆனால் வணிகப் பேராசையால் இரு தீவுக் கூட்டங்களை ஆக்கிரமிக்க 6 ஆசிய நாடுகள் மல்லுக்கட்டி வருகின்றன. தெற்கு சீனக் கடலிலுள்ள பாரசெல்ஸ் மற்றும் ஸ்ப்ராட்லிஸ் தீவுகளை சீனா, தைவான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய 6 நாடுகளும் தங்களுடையது, என்று சொந்தம் கொண்டாடுகின்றன. நடுவர் தீர்ப்பு நீதிமன்றம் சீனாவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் சீனாவும் அமெரிக்காவும் அப்பகுதியில் போர் விமானங்களையும் கப்பல்களையும் நிலை நிறுத்தியுள்ளதால், தெற்கு சீனக் கடல் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. தெற்கு சீனக்கடலில் அமைந்திருக்கும் மனிதர்கள் வாழாத இரு தீவுக் கூட்டங்கள் தான் பாராசெல் …

  18. அமெரிக்காவில் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கு எதிராக பெண்கள் நிர்வாணமாக போராட்டம் செய்து வருகின்றனர். அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8ஆம் தேதி நடக்க இருக்கிறது. அங்கு ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியின் சார்பில் பெரும் கோடீசுவரர் டொனால்டு டிரம்ப்பும் மோதுவது உறுதியாகி விட்டது. டொனால்டு டிரம்ப் அதிபர் ஆவதற்கு அந்த நாட்டில் பெண்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிளீவ்லேண்டில் உள்ள குடியரசுக் கட்சியின் தேசிய அலுவலகம் முன்பு திடீரென 100க்கும் அதிகமான பெண்கள் டொனால்டு அதிபர்…

  19. அரை நிர்வாண கோலத்தில் தண்டனை அனுபவிக்கும் துருக்கி இராணுவ வீரர்கள் ; அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியானது துருக்கியில் ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க இராணுவத்தின் ஒரு பிரிவினர் புரட்சியில் ஈடுபட்டனர்.இந்த இராணுவ புரட்சியை பொதுமக்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 290 பேர் உயிரிழந்தனர். 1,500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இராணுவ புரட்சியில் ஈடுபட்ட 6,000 போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், பொலிஸாருக்கும், இராணுவீரர்களுக்கும் நடைபெற்ற சண்டையில் தோற்கடிக்கப்பட்ட இராணுவீரர்களை, துருக்கி குடிமகன்கள் அடித்து உதைக்கும் புகைப்படங்கள் மற்றும் இராணுவவீரர்களின் ஆடைகள் களையப்பட்டு, அவர்களின் …

  20. நான் யுஎஸ் அதிபரானால் ஐஎஸ் எதிராக போர் தொடுப்பேன்: டிரம்ப் சூளுரை டிரம்ப். | படம்: ராய்ட்டர்ஸ். நான் அமெரிக்க அதிபரானால் ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக போர் தொடுக்கப்படும் என சூளுரைத்துள்ளார் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப். குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அமெரிக்க மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெற்றுள்ளார். டிரம்ப் தனது பிரச்சாரத்தை தொடங்கியதிலிருந்தே பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பேசி வருகிறார். முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்படும் என அவர் கூறிய கருத்து சர்வதேச அளவில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. 'வீரர்களை விட வியகம…

  21. ராணுவ புரட்சிக்கு ஆதரவு தெரிவித்ததால் துருக்கியில் 2,750 நீதிபதிகள் கைது துருக்கி ராணுவ புரட்சியின்போது உயிரிழந்த பொதுமக்களின் இறுதிச் சடங்கு இஸ்தான்புல்லில் நேற்று நடந்தது. இதில் அதிபர் எர்டோகன் (இடது ஓரம்) பங்கேற்றார். | படம்: ராய்ட்டர்ஸ் துருக்கியில் ராணுவ புரட்சிக்கு ஆதரவு அளித்த 2,750 நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். கடந்த 15-ம் தேதி இரவு ராணுவத்தின் ஒரு பிரிவினர் அதிபர் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவ புரட்சியில் ஈடுபட்டனர். அதனை ஆளும் ஏ.கே. கட்சி, எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து வெற்றிகரமாக முறியடித்தனர். புரட்சியில் ஈடுபட்டதாக …

  22. தாய்லாந்தின் முக்கிய இடங்களில் உள்ள பாலியல் விடுதிகள் மற்றும் மசாஜ் நிலையங்களில் நடைபெற்ற தொடர் சோதனையின் மூலம் நாட்டின் பாலியல் தொழிலை அதிகாரிகள் குறிவைத்துள்ளனர்.தரமான சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், தாய்லாந்தில் உள்ள சிவப்பு விளக்கு பகுதிகளை மூட தான் விரும்புவதாக தாய்லாந்தின் சுற்றுலா அமைச்சர் கோப்கர்ன் வட்டனவ்ரங்குல் பிரபல செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் பாலியல் தொழில் சட்ட விரோதமானது. ஆனால், இது பரவலாக அங்கு நடைமுறையில் உள்ளது. மேலும், நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்ப ஆற்றுவதாக அது பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில், பாங்காக்கில் உள்ள பெரிய மசாஜ் நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனையி…

  23. தென் சீனக் கடலில் பெரும்பாலான கடற்பரப்பை சீனா தனக்கு சொந்தமானதாக உரிமை கொண்டாடுவதற்கு எதிராக போராட முயன்ற டஜன்கணக்கான வியட்நாம் செயற்பாட்டாளர்கள் தலைநகர் ஹனோயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சீனா உரிமை கோருவதற்கு எவ்வித சட்ட அடிப்படையும் இல்லை என்று சர்வதேச நடுவர் நீதிமன்றம் கடந்த வாரம் ஆணை பிறப்பித்திருப்பதை தொடர்ந்து இந்த செயற்பாட்டாளர்கள் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தனர்.சீனாவின் எல்லை கோரிக்கையை வியட்நாம் அரசு எதிர்த்தாலும், உள்நாட்டில் கருத்து வேறுபாடுகளை உருவாக்குமென அஞ்சி, இத்தகைய பொது போராட்டங்களை வழக்கமாக அடக்கி வருகிறது என பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். த ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேசத் தீர்பாயத்திற்கு எல்லை எதுவும் இல்லை எ…

  24. 'போக்மான் கோ' என்ற பிரபலமான அலைபேசி விளையாட்டை விளையாடியதன் மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தங்கள் அலைபேசியை பறிகொடுத்த தகவல் தெரிய வந்துள்ளது.'போக்மான் கோ' என்பது பிரபலமான அலைபேசி செயலி வடிவிலமைந்த விளையாட்டு.இது கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ப்ளே ஸ்டோர்களில்கிடைக்கிறது. கணிப்பொறியினால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பிம்பத்தை, பயனீட்டாளரின் நேரடியான பார்வையில் இருப்பது போன்ற தோற்றத்தை (ஆக்மெண்டட் ரியாலிட்டி) உருவாக்கும் ஒரு விளையாட்டு.பயனீட்டாளரின் அலைபேசியில் உள்ள ஜி.பி.எஸ் வசதியை, கூகுள் மேப்ஸ் வசதியுடன் இணைத்து இது செயல்படும். இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கணிப்பொறி பிம்பம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். அதை பயனீட்டாளர் த…

  25. அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: 3 போலீசார் பலி அமெரிக்காவில் லூயிசியனா மாகாணத்தில் போலிசாரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் காயமடைந்திருப்பதால், கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. முகத்தை மறைத்த மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ஆயுததாரியை பிடிக்கும் முயற்சியில் போலிசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த நபர் கறுப்பு ஆடை அணிந்து, முகத்தை துணியால் மூடியபடி வந்ததாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடந்த அந்த பகுதி தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இருவாரங்கள…

    • 2 replies
    • 416 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.