Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்க புளோரிடா மாநில இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி; பலர் காயம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள இரவு விடுதியொன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சுமார் 14 பேர் காயமடைந் துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். போர்ட் மையர்ஸ் எனும் நகரிலுள்ள மேற்படி இரவு விடுதியில் பதின்மர் பருவத்தினருக்கான வைபவமொன்றின்போது இத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=18155#sthash.45QN9tX4.dpuf

  2. ஜெர்மனி: ம்யூனிக் நகரத் தாக்குதல்தாரியின் நண்பர் கைது ம்யூனிக் நகரத் தாக்குதல்தாரி. இவரது திட்டங்களை அறிந்திருக்கலாம் என்ற அடிப்படையில் 16 வயதான நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை ம்யூனிக் நகரில் ஒன்பது பேர் கொல்லப்பட்ட துப்பாக்கி தாக்குதல் தொடர்பாக 16 வயதான ஒருவரை கைது செய்துள்ளதாக ஜெர்மனி காவல்துறை தெரிவித்திருக்கிறது. கைது செய்யப்பட்டிருக்கு பதின்ம வயது நபர் தாக்குதல்தாரியின் திட்டங்களை அறிந்திருந்திருக்கலாம் என்று சந்தேகப்படும் அவருடைய நண்பர் என்று காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக, ம்யூனிக் துப்பாக்கிதாரி டேவிட் அலி சன்போலி, ஓராண்டு காலமாக இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டு வந்துள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். …

  3. ஒரு வருடமாக தயாராகி வந்த ம்யூனிக் தாக்குதல்தாரி ம்யூனிக்கில் கடந்த வெள்ளியன்று 9 பேரை சுட்டுக் கொன்ற 18 வயது துப்பாக்கிதாரி, அந்த தாக்குதலுக்கு ஒரு வருடமாக தயாராகி வந்ததாக ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல்தாரியான டேவிட் அலி சன்பாலி முன்னர் துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்ட விநெண்டன் பள்ளிக்கூடத்திற்கு விஜயம் செய்து புகைப்படங்களை எடுத்த்தாக பவாரியன் அரசு குற்றவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதல்தாரி, சிறப்பு மென்பொருளை மட்டுமே பயன்படுத்தி வாங்கக் கூடிய டார்க் வெப் என்ற வளைதலத்தில் தான் க்ளாக் வகை துப்பாக்கியை வாங்கியதாக பவாரியன் அரசு குற்றவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. தாக்குதல்தாரி குறிப்பிட்டு யாரையும் குறிவைத்ததாக …

  4. இன்னொரு இரும்புப் பெண்மணி? கார்க்கிபவா மார்கரேட் தாட்சருக்குப் பிறகு இங்கிலாந்தின் பிரதமராகி இருக்கும் இரண்டாவது பெண் தெரேசா மே. இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியனில் தொடர வேண்டும் என கேமரூன் அதிரடிப் பிரசாரம் மேற்கொண்டபோது அமைதியாக இருந்தார் தெரேசா. இங்கிலாந்து பிரிந்துவருவதில் அவருக்கும் விருப்பம் இல்லை. ஒருவேளை மக்கள் வாக்குகள் இங்கிலாந்து பிரிய வேண்டும் என இருந்தால்... தெரேசா பொறுமை காத்தார். அதற்குக் கிடைத்த பலன்தான் தேடிவந்திருக்கும் பிரதமர் பதவி. 59 வயது ஆகும் தெரேசா மே, இயல்பாகவே தலைமைப் பண்புக்கான குணாதிசயங்கள் கொண்டவர். உலகப் பெண் தலைவர்களில் இவரையும் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெலையும்தான் ஐரோப்பியப் பத்திரிகைகள் ஒப்பிடுகின்றன. ஆனால்…

  5. ஜேர்மனி ஸ்டட்கார்டு பகுதியில் இடம்பெற்ற வெட்டுக்கத்தி தாக்குதலில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்டட்கார்டு நகரில் உள்ள ரீட்லின்ஜென் பகுதியில் இளைஞர் ஒருவருக்கும் யுவதி ஒருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினை அடுத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் உயிரிழந்த அதேவேளை மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர் சிரியாவை சேர்ந்தவர் என கூறியுள்ள அந்நாட்டு பொலிஸார், சந்தேகநபரை கைது செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர். இதேவேளை…

    • 2 replies
    • 433 views
  6. தமிழ்நாடு தமிழ்நாடு இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்று. இது இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் உள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. மத்திய அரசுப்பிரதேசமான புதுச்சேரி பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு தன் எல்லைகளைக் கொண்டுள்ளது. எல்லைகள் தமிழ்நாட்டின் புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை, ஆனை மலை , பாலக்காடு கணவாயும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடாவும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன. மதராஸ் மாகாணம் தமிழகம் முன்பு ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் மதராஸ் மாகாணம் என்றும…

    • 23 replies
    • 31.1k views
  7. பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான எல்லைப்பகுதியில் அமைந்துள்ள Dover துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்பால் பிரித்தானிய பயணிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார், 250,00 வாகனங்கள் சுமார் 15 மணிநேரமாக நின்றுகொண்டிருக்கின்றன, காரில் உள்ளவர்கள் படுத்து தூங்கிவிட்டாலும், இரண்டு சாக்கர வாகன ஓட்டிகள் பெரும் இடையூறுகளுக்கு ஆளாகியுள்ளார்கள், மேலும், ஆயிரிக்கணக்கான சுற்றுலாவாசிகளும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் Kent பொலிசார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வந்த போதிலும், போக்குவரத்து சரிசெய்தபாடில்லை. அதுமட்டுமின்றி, வாகன நெரிசலில் சிக்கியுள்ளவர்களுக்கு, ஹெலிகொப்டர் உதவியுடன் 11,000 தண்ணீர் பாட்டில்கள் கொடுக்கப்பட்…

  8. சீனாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 150 பேர் பலி சீனாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் குறைந்தது 150 பேர் இறந்தனர். பலர் காணாமல் போயுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஹெபெய் மற்றும் ஹூனான் மாகாணங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. குறைந்தது 114 பேர் ஹெபெயில் பலியாகியுள்ளனர். 111 பேரை காணவில்லை. 53 ஆயிரம் வீடுகள் அழிந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 15 பேர் பலியாகியுள்ள ஹெனான் மாகாணத்திலும் 72 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர். சிங்தாய் நகரத்தில் மட்டும் 25 பேர் பலியாகியிருப்பது வெள்ளப்பெருக்கிற்கு முன்னரே அரசு எச்சரிக்கவில்லை என்…

  9. பெய்ஜிங்கில் உள்ள வன உயிரின பூங்கா ஒன்றில் இருந்த புலிகள் பெண் சுற்றுலா பயணி ஒருவரை கொன்றும், மற்றொரு பயணியை காயப்படுத்தியும் உள்ளது. வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, இருவரும் தங்கள் வாகனங்களை விட்டு வெளியேறிய போது இந்த தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். பெய்ஜிங்கில் உள்ள படாலிங் உயிரின பூங்காவில், சுற்றுலா பயணிகள் பூங்காவை சுற்றி பார்க்கும் போது, தங்கள் வாகனங்களில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனத்தைவிட்டு வெளியேறிய பெண்களில் ஒருவர் மீது புலி வேகமாக பாய்ந்து அவரை காயப்படுத்தி இழுத்து சென்றது. அப்பெண்ணிற்கு துணையாக வந்த மற்றொருவர் அப் பெண்ணைக் காப்பாற்ற முயன்றார். ஆனால், அவர் இரண்டாவது புலியால் தாக்கப்பட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தி…

  10. நீஸ் தாக்குதல்: பாதுகாப்பு அறிக்கை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மறுப்பு நீஸ் நகரில் எண்பதுக்கும் மேலானவர்களை கொன்ற டிரக் தாக்குதல் நடந்த இரவன்று இருந்த பாதுகாப்பு குறித்த அறிக்கையை மாற்றுமாறு தன்னை துன்புறுத்தியதாக மூத்த பெண் போலிஸ் அதிகாரி ஒருவர் கூறிய குற்றச் சாட்டை மறுத்துள்ளார் உள்துறை அமைச்சர் பெர்நார் கஸ்நொவ். நகரின் வீடியோ கண்கானிப்பு பொறுப்பாளரான சாண்ட்ரா பெர்டின் என்ற அந்த போலிஸ் அதிகாரி, போலிஸ் இல்லாத பகுதிகளிலும் போலிஸ் இருந்ததாக அறிக்கை தர அதிகாரிகள் கோரியதாகவும், ஆனால் அவர்கள் சொன்ன இடங்களில் போலிசார் இருக்கவில்லை என்றும் சான்ட்ரா பெர்டின் பிரான்ஸ் நாட்டு செய்தித்தாள் ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார். ஆனால் உள்துறை அமைச்சர் பெர்நார் கஸ…

  11. பொருளாதாரத்தில் ஸ்திரமற்ற நிலை: ஜி20 மாநாட்டில் எச்சரிக்கை ஜி20 நிதியமைச்சர்கள் மாநாடு, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வாக்களித்தமையால் உலக பொருளாதாரத்தில் புதிய ஆபத்துக்களையும், ஸ்திரமற்ற நிலையையும் புகுத்தியுள்ளது என்ற எச்சரிக்கையுடன் சீனாவில் நிறைவடைந்துள்ளது. பிரிட்டனின் வெளியேற்றம் குறித்து பேசுவது எரிச்சலூட்டும் பேச்சாக மாறும் ஆபத்து இருந்ததாக ஜி20 மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் விளைவுகளை சரியான முறையில் எதிர்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருந்தது என்றும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருங்கிய கூட்டாளியாக தொடர்ந்து இருக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளது. செப்டம்பரில் நடக்கவுள்ள ஜி20 சம்மேளனத்திற்க…

  12. பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள தெரெசா மே, ஆசிய – பசுபிக் விவகாரங்களைக் கையாளும், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலோக் சர்மாவை நியமித்துள்ளார். அண்மையில் பதவி விலகிய டேவிட் கமரூன் அரசாங்கத்தில், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சராக இருந்த, ஹியூகோ ஸ்வயருக்கு, புதிய அரசாங்கத்தில் இடமளிக்கப்படவில்லை. ஹியூகோ ஸ்வயர், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சராக இருந்த போது, சிறிலங்காவின் மனித உரிமை விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்துபவரான இருந்து வந்தார். இந்த நிலையில், புதிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சராக, நியமிக்கப்பட்டுள்ள அலோக் சர்ம…

  13. ஆப்கன் ஆர்பாட்டத்தில் குண்டுவெடிப்பு, 30 பேர் பலி, ஏராளமானோர் காயம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இதில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட படக் காட்சிகளில் பல இறந்த உடல்களும், காயமடைந்த பலரும் கிடப்பது தெரிகிறது. இந்த இரண்டு குண்டு வெடிப்புகளில் குறைந்தது ஒன்று, தற்கொலை தாக்குதல் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது. அடிக்கடி பாரபட்சத்திற்கும், வன்முறைக்கும் உள்ளாகும் ஹஸாரா சிறுபான்மை இனத்தினரால் நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் இந்த குண்டு வ…

    • 4 replies
    • 530 views
  14. சுவிட்சர்லாந்து நாட்டில் தயாராகும் விலையுயர்ந்த கைக் கடிகாரங்களை வட கொரியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வட கொரியா சர்வாதிகாரியான கிம் யோங் அன் மேற்கத்திய பழக்கவழக்கங்களில் விருப்பம் உடையவர் என கூறப்படுகிறது. உதாரணமாக, பொதுநிகழ்ச்சிகளில் கிம் பங்கேற்கும்போது அவர் விலை உயர்ந்த சுவிஸ் கடிகாரங்களை கட்டியிருப்பதையே அவர் விரும்பி வந்துள்ளார்.சர்வாதிகாரி கிம் மற்றும் அவருடைய சகோதரி ஆகிய இருவரும் ஆரம்பத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கி கல்வி பயின்றதால், சுவிஸ் கடிகாரங்கள் மீது அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, எந்த நிகழ்வாக இருந்தாலும் கிம் சுவிஸ் கடிகாரத்துடன் தான் காட்சியளிப்பார்.இதுமட்ட…

  15. டெல்லியில் கைதான விபசார தரகருடன் 2 கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்து உள்ளது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.டெல்லி சப்தர்ஜங் என்கிளேவ் பகுதியில் வசிப்பவர் பிரீதிந்திரநாத் சன்யால், 62 வயதான இவருக்கு வசந்த் கஞ்ச் மற்றும் லக்னோ நகரிலும் சொந்தமாக வீடுகள் உள்ளன.திடீர் பணக்காரராக உருவெடுத்த இவருடைய வீடுகளில் அண்மையில் வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.அப்போது, சப்தர்ஜங் என்கிளேவ் வீட்டில் ரஷ்யாவைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். அவரை அவர்கள் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மத்திய…

  16. சென்னையை அடுத்த தாம்பரம் விமானப் படைத் தளத்தில் இருந்து ஏ.என்.32 வகை விமானம் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேயருக்கு புறப்பட்டது.விமானி பட்சரா, துணை விமானி நந்தால், வழிகாட்டி குணால், பொறியாளர் ரஞ்சன், விமானப் படையைச் சேர்ந்த 9 பேர், கடற்படையைச் சேர்ந்த 9 பேர், கடலோரக் காவல்படையைச் சேர்ந்த 4 பேர் என 29 பேர் இருந்தனர். இவர்களில் 12 தமிழகத்தையும், 9 பேர் ஆந்திரத்தையும் சேர்ந்தவர்கள்.விமானம் வானில் பறக்கத் தொடங்கிய 16 நிமிஷத்துக்கு பின்னர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. ரேடாரின் கண்காணிப்பிலும் இருந்தும் மறைந்தது. இதையறிந்த பாதுகாப்புத் துறையினர், துரிதமாக காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் ஈடுப…

  17. ஜெர்மனி: துப்பாக்கி விற்பனையில் கடும் கட்டுபாடுகளை கொண்டுவர கோரிக்கை ம்யூனிக் துப்பாக்கி தாக்குதல், துப்பாக்கி விற்பனையில் கடும் கட்டுபாடுகளை கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது வெள்ளிக்கிழமை நடைபெற்ற ம்யூனிக் துப்பாக்கி சூட்டு தாக்குதலை அடுத்து, துப்பாக்கிகள் விற்பனையில் கடும் கட்டுபாடுகளை கொண்டு வர வேண்டுமென மூத்த ஜெர்மனி அரசியல்வாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆட்களை கொல்லுகின்ற ஆயுதங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கு சாதகமான அனைத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று ஜெர்மனியின் துணை சான்சலர் சிக்மார் கேப்ரியல் கூறியிருக்கிறார். தாக்குதல் நடத்திய 18 வயதான அலி டேவிட்சன்பொலி, தன்னை தானே அழித்துகொள்வதற்கு முன்னால், ஒன்பது பேரை ச…

  18. சென்னை சென்னையை அடுத்த தாம்பரத்தில் இந்திய விமானப்படை தளம் உள்ளது.இங்கிருந்து அந்தமானில் உள்ள போர்ட்பிளேர் நகருக்கு விமானப்படை சரக்கு விமானம் மூலம் வாரந்தோறும் பொருட்கள் கொண்டு செல்லப்படும். ராணுவ வீரர்களும் அனுப்பி வைக்கப்படுவார்கள். அதேபோல், விமானப் படைக்கு சொந்தமான ஏ.என்.-32 ரக சரக்கு விமானம் ஒன்று தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை 8.30 மணிக்கு அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு புறப்பட்டு சென்றது. அதில் 2 விமானிகள் உள்பட 6 சிப்பந்திகளும், 23 ராணுவ வீரர்களும் பயணம் செய்தனர். அந்தமான் தீவுக்கும் சென்னைக்கும் இடையேயான தூரம் 1,360 கிலோ மீட்டர் ஆகும். அந்த விமானம் காலை 11.30 மணிக்கு போர்ட்பிளேர் போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும். ஆனால் கிளம்…

    • 1 reply
    • 317 views
  19. 'Shots fired' in Munich shopping centre, German police deployed Shots have been fired in a Munich shopping centre and a police operation is under way. Reports say the area round the shopping centre in the district of Moosach has been sealed off, but details of the incident are sketchy. Several people are reported to have been killed, the Sueddeutsche Zeitung newspaper quotes police as saying. The security forces have been on alert after a migrant stabbed five people on a train in Bavaria on Monday. The authorities had warned of the danger of further attacks. Reports speak of one attacker. Helicopters are said to be flyi…

  20. பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமா­னத்தில் கஞ்சா மணம் அவ­ச­ர­கால நிலை­மையின் கீழ் தரை­யி­றக்கம் பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து கிரே­க்கத்­திற்கு சுற்­றுலா பய­ணி­க­ளுடன் நேற்று வெள்­ளிக்­கி­ழமை பய­ணித்த பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமா­ன­மொன்று அதற்குள் பர­விய கடு­மை­யான கஞ்சா போதை­வஸ்து மணம் கார­ண­மாக அவ­ச­ர­கால நிலை­மையின் கீழ் தரை­யி­றக்­கப்­பட்­டுள்­ளது. பிரித்­தா­னிய கட்விக் விமான நிலை­யத்­தி­லி­ருந்து கிரேக்­கத்­தி­லுள்ள ஹெராக்­லியன் விமான நிலை­யத்­துக்கு 174 பய­ணி­க­ளுடன் பய­ணித்த அந்த விமானம் புறப்­பட்டு 90 நிமி­டங்­களின் பின்னர் பிரான்ஸின் பாரிஸ் நக­ருக்கு மேலாக பறந்த வேளை அந்த விமா­னத்தில் கடு­மை­யான கஞ்சா மணம் அவ­தா­னிக்­கப…

  21. ஜேர்மனியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியான சம்பத்தை விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நகைச்சுவையாக பதிலளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜேர்மனியில் உள்ள முனிச் நகர வணிக வளாகம் ஒன்றில் நேற்று மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியானதுடன் 16 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக நேற்று வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களுக்கு ஜனாதிபதி ஒபாமா பேட்டி அளித்துள்ளார். அப்போது, ‘ஜேர்மனியில் என்ன நடக்கிறது என்பது நமக்கு உறுதியாக தெரியாவிட்டாலும், பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என தொடங்கியுள்ளார். பின்னர் இந்த துக்க நிகழ்வில் இருந்து உடனடியாக …

  22. மலேசியாவில் பொலிஸாரை தாக்க திட்டம் தீட்டிய 14 பேர் கைது மலேசியாவில் பொலிஸாரை குறிவைத்து நடத்தப்படவிருந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் 14 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் நடந்த பரவலான சோதனையில் 13 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். சுமார் ஒரு கிலோ எடையுள்ள குறித்த நேரத்தில் வெடிக்கும் குண்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/9340

  23. உலகின் மிகப் பெரிய தகவல் திருட்டு இணையதளமான கிக்ஆஸ் டாரண்ட்ஸ் முடக்கம் உலகின் மிகப் பெரிய தகவல் திருட்டு இணையதளமான கிக் ஆஸ் டாரண்ட்ஸ் (Kickass Torrents) முடக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் உரிமையாளர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆர்டம் வாலின் என்பவரை போலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 28 மொழிகளில் இயங்ககூடியது கிக்ஆஸ் டாரண்ட்ஸ் இணையதளம். சமீபத்தில் வெளியான கேப்டன் அமெரிக்கா-சிவில் வார், பைண்டிங் டோரி உட்பட அனைத்து புதிய படங்கள், இசை ஆல்பங்கள் என அனைத்தும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. வெளியான அன்றே இந்த படங்கள் இந்த இணையதளத்தில் கிடைக்கும் அளவிற்கு செயல்பட்டு வந்துள்ளது. இந்த இணையதளத்தின் மதிப்பு 5.4 கோடி டாலராகும். இண…

  24. வெளிநாடுகளில் வசிக்கும் நம் நாட்டவர் தமது ஊரில் சொந்த வீட்டை கட்ட விரும்புவது வழக்கம். உள் நாட்டில் வசிப்பவர்கள் எந்த ஊரிலும் சொந்த வீடு கட்டுவது எளிதானது. ஆனால் அவர்களே வெளிநாட்டில் வசித்தால், மனை வாங்குவது அதில் சொந்த வீடு கட்டுவது ஆகியவற்றில் பலவித சட்ட திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. பல குடும்பங்களில் வெளிநாட்டு வேலை பார்க்கும் குடும்ப அங்கத்தினர்கள் இருப்பார்கள். தமது குடும்ப நலனுக்காகவும், சேமிப்பாகவும் வீடு அல்லது மனை வாங்க அவர்கள் விரும்பும்போது, நடைமுறையில் எவ்வகையிலான சட்ட திட்டங்களை பின்பற்ற வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம். முக்கியமான வாடிக்கையாளர் இந்தியாவில் மனை வாங்க அல்லது வீடு கட்ட விரும்பும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு கடன் தர, நிதி நிறு…

  25. ஜெர்மனி: ஏங்கெலா மெர்கல் தலைமையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஒன்பது பேர் கொல்லப்பட்ட ம்யூனிக் வணிக வளாகத் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கல் தலைமையில் பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது. தாக்குதல் நடத்திய 18 வயதான இரானிய - ஜெர்மனி துப்பாக்கிதாரி, தன்னை தானே சுட்டுக் கொண்டதாக நம்பப்படுகிறது என காவல்துறை தெரிவிக்கிறது. இந்த அவசரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆப்ஸ் மலைத்தொடருக்கு செல்லும் தன்னுடைய விடுமுறை பயணத்தை மெர்கல் ஒரு நாள் தாமதப்படுத்தியுள்ளார். அமெரிக்காவுக்கு செல்ல இருந்த பயணம் ஒன்றை இடைநிறுத்திவிட்டு ஜெர்மனி உள்துறை அமைச்சர் தாமஸ் தெ மெய்சியார் நாடு திரும்பியுள்ளார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.