Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஸ்காட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை தங்கள் எதிர்காலமாகப் பார்க்கிறது' ஸ்காட்லாந்தின் எதிர்காலம் ஐரோப்பிய ஒன்றியத்தில்தான் - நிக்கோலா ஸ்டர்ஜன் ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் , ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பு முடிவுகள் , ஸ்காட்லாந்து மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதையே தங்கள் எதிர்காலமாகப் பார்க்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன என்று கூறியிருக்கிறார். ஸ்காட்லாந்து ஐக்கிய ராஜ்ஜியத்துடன் இணைந்திருக்க வேண்டுமா என்று மக்களின் கருத்துக்களை அறிய மற்றுமொரு கருத்துக்கணிப்பு நடப்பதற்கான சாத்தியக்கூறு வெகுவாக அதிகரித்துவிட்டதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர். ஷின் ஃப்யின் (ஐரிஷ் குடியரசுக் கட்சியின்) தலைவர் , டெக்லான் கேர்னி , பிரிட்டிஷ் வா…

  2. ஜூன் 23 இங்கிலாந்திற்கு சுதந்திரம் கிடைத்த நாளாகும் - நிகல் பேரஜ் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் மக்களும் வாக்களித்துள்ளனர். அதிகமான மக்கள் விலக வேண்டும் என வாக்களித்திருப்பதால் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், இந்த தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினரான நிகல் பேரஜ் , ஒரு போரில் வெற்றியடைந்து போன்று உள்ளதாக உணர்கிறேன், இந்த வெற்றியானது உண்மையான மக்கள், சாதாரண மக்கள் மற்றும் ஒழுக்கம் நிறைந்த மக்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். ஊழல், பொருளாதாரம், அரசியல் பிரச்சனைகள் போன்ற…

    • 3 replies
    • 372 views
  3. இன்றைய நிகழ்ச்சியில் - ஒர்லாண்டோ தாக்குதலை அடுத்து துப்பாக்கிகளை கட்டுப்படுத்துவதற்கான வாக்களிப்பு கோரி அமெரிக்க காங்கிரஸில் போராட்டம். - லிபியாவில் ஐ எஸ்ஸிடம் இருந்து நகரை மீட்க அரசாங்க படைகள் கடுமையாக போராடுகின்றன. ஆனாலும், படையினருக்கு கடும் இழப்பும் ஏற்படுகின்றது. - அருகிவரும் ஒரு தவளை இனத்தை பாதுகாப்பதற்கான முயற்சி. பாதுகாப்பான இடத்தில் வைத்து அவற்றை காப்பாற்ற முயலும் ஆய்வாளர்கள்.

  4. ஜேர்மனிய திரையரங்கில் சுட்ட துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை மேற்கு ஜேர்மனியில் ஒரு சினிமா திரையரங்கில் துப்பாக்கி பிரயோகம் செய்த நபரை தாம் சுட்டுக் கொன்றுவிட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். ஜேர்மனிய திரையரங்கில் துப்பாக்கிதாரியை சுற்றிவளைத்த போலிஸார் பிராங்பர்ட்டுக்கு அருகே கினோபோலிஸ் வளாகத்தில் அந்த நபர் ஒரு வேட்டையாவது சுட்டதாக ஜேர்மனிய ஊடகங்கள் கூறின. 20 பேராவது காயமடைந்ததாக முன்னர் கூறப்பட்டதை போலிஸார் மறுத்துள்ளனர். அந்த நபர் ஆட்களை பணயமாக பிடித்து வைத்திருந்ததாக நம்பிய போலிஸார் அங்கு வேகமாக நுழைந்ததாக உள்துறை அமைச்சின் பிராந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். http://www.bbc.com/tamil/global/2016/06/160623_germantattack

  5. ஆள் கடத்தலில் ஈடுபடும் முக்கிய நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் இன்டர்போல் பெரிய சர்வதேச நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என சர்வதேச போலிஸ் அமைப்பான இன்டர்போல் தெரிவித்துள்ளது. அவர்களை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்களை எல்லைகளுக்கு அப்பால் கடத்தி பெரும் லாபம் ஈட்டியதாக சொல்லப்படும் 26 முக்கிய சந்தேக நபர்களை இன்டர்போல் கைது செய்துள்ளது. இதில், பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்கு சின்ன படகுகள் மூலம் மக்களை கடத்திய அல்பேனிய கூட்டத்தினரும் அடங்குவார்கள். கடந்தாண்டு பத்து லட…

  6. கருத்தறியும் வாக்கெடுப்புகள் - ஒரு சுருக்கமான வரலாறு பாலியல் தொழில், மாஃபியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் பிரிட்டனின் உறுப்புரிமை ஆகியவற்றுக்கு இடையே பொதுவான அம்சம் என்ன? இவையனைத்துமே மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டுள்ளன. கோப்பு படம் (பிபிசி) பிரிட்டனின் அரசை பிளவுபடுத்தி, உலகெங்கும் தலைப்புச் செய்தியாக உருவாக்கிய ஒரு பரப்புரைக்கு பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் பிரிட்டன் உறுப்பினராக இருக்க வேண்டுமா என்ற வினா பிரிட்டிஷ் குடிமக்களிடம் இன்று கேட்கப்படவுள்ளது. பிரிட்டனில் இன்று நடக்கவுள்ள வாக்கெடுப்புக்கு தயார் ஏற்பாடுகள் ஆனால், பல வகையான வாக்கெடுப்புகள் கடந்த காலங்களில் நடந்துள்ளன. ஒரு புதிய புரட்சிகர அரசி…

  7. பிரிட்டனில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு துவங்கியது ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா அல்லது வெளியேற வேண்டுமா என்பதை முடிவு செய்வதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வாக்கெடுப்பில், ஐக்கிய ராஜ்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராகத் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா இல்லை வெளியேற வேண்டுமா என்ற ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கப்பட்டுள்ளது. ஐக்கிய ராஜ்ஜியத்தில், அதிகபட்சமாக, 46 மில்லியன் வாக்காளர்கள், வாக்களிக்கத் தகுதி படைத்தவர்கள். ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் தொடர்பாக, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு பிரிட்டனில் நடைபெற்றது. அப்போது அந்த அமைப்பு, ஐரோப்பி…

  8. பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.2000 கோடியில் பிரத்யேக விமானம் வாங்க பாதுகாப்பு துறை முடிவெடுத்துள்ளது. அமெரிக்க அதிபரின் விமானத்துக்கு இணையான வசதிகளைக் கொண்ட புதிய விமானம் வாங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பிரதமர் மோடி, ஏர் இந்தியா 747 - 400 மாடல் விமா‌னத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். புதிதாக நவீன வசதிகள் மற்றும் அதிக பாதுகாப்புடன் கூடிய போயிங் 777 - 300 ரக விமானத்தை வாங்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். இதற்கான இறுதி முடிவை வருகிற 25-ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தலைமையில் நடைபெற உள்ள பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதலுக்கான குழு எடுக்க உள்ளது. பிரதமரின் புதிய…

    • 7 replies
    • 842 views
  9. பாகிஸ்தானில் இலங்கை அணி மீதான தாக்குதல்: 3 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியின் மீது கடந்த 2009 ஆண்டு தாக்குதல் மேற்கொண்ட 6 சந்தேகநபர்களில் மூவருக்கு பிணை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று (22) குறித்த சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ள 6 சந்தேகநபர்களில் மூவருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம் ஏனைய மூவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதேவேளை விசாரணை தொடர்பான அரச தரப்பு சாட்சியங்களை எதிர்வரும் ஜுலை 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறி…

  10. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானிய கடந்த 43 ஆண்டுகளாக இணைந்து இருந்து செயற்பட்டு வருகிறது. 23 ஜூன் EU Referndum என்பது இனி ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா இருக்குமா இல்லையா என்ற பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குடியேற்றம், பாதுகாப்பு, வேலை வாய்ப்புக்கள், வர்த்தகம், நிதி போன்ற விடையங்கள் பெரும்பாலாக பாதிக்கப் படக் கூடியவை. பல விடயங்களில் கடந்த சில மாதங்களாக விவாதங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. பிரித்தானியா தொடர்ந்து இணைந்து இருக்கும் பட்ச்சத்தில் இருக்கக் கூடிய நன்மை தீமைகளையும் விலகும் பட்ச்சத்தில் இருக்கக் கூடியதையும் ஒரு சிறு தொகுப்பாக செய்துள்ளோம். http://www.tamilwin.com/e…

  11. சர்வதேச தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க ரஷ்யாவுடன் சேர மேற்கத்திய நாடுகள் தவறி விட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றம்சாட்டியுள்ளார். இரண்டாம் உலகின் போருக்கு முன்பாக, நாஜி அச்சுறுத்தலுக்கு எதிராகக் கூட்டு நடவடிக்கை எடுக்க சோவியத் விடுத்த அறைகூவலை சில நாடுகள் செவிமடுக்கத் தவறியது போன்ற அதே தவறினை தற்போதும் மேற்கத்திய உலகம் செய்துள்ளதாக ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான டூமாவில் உரையாற்றிய புடின் கூறியுள்ளார். மாறாக, ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகே தனது ஆக்ரோஷமான நடவடிக்கைகளை நேட்டோ அமைப்பு தற்போது அதிகரித்து வருவதாக புடின் மேலும் கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=16003…

  12. - ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதா அல்லது அதிலிருந்து விலகுவதா என்று பிரிட்டன் முடிவு செய்ய இன்னமும் சில மணிநேரமே இருக்கின்றது. இங்குள்ள தெற்காசிய மக்கள் இதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்த கருத்துக்கள் - மாற்றுக்கருத்தாளர்களை ஒடுக்குவதற்கான சீன நடவடிக்கைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த கிராம மக்கள், தமது தலைவரை விடுவிக்க கோருகிறார்கள். - ஜப்பானில் அடைத்து வைக்கப்படும் தஞ்சக் கோரிக்கையாளர்கள். தஞ்சம் கிடைக்கும் வாய்ப்பும் மிக மிகக்குறைவு.

  13. இந்தோனேஷிய தீவில் அடையாளம் காணப்பட்ட 21 இலங்கை அகதிகள் இந்தோனேஷியாவின் அச்சே தீவில் கரையிறங்கியுள்ள இலங்கை அகதிகளில் 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஈழ ஏதிலியர் மறுவாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் நோக்கத்துடன் 30க்கும் மேற்பட்ட அகதிகளுடன் சென்று கொண்டிருந்த படகு ஒன்று, இந்தோனேஷியாவுக்கு அருகில் செல்லும்போது பழுதடைந்ததால், அவர்கள் கரைக்கு வர அனுமதி கோரினர். முதலில் அனுமதி மறுக்கப்பட்ட அவர்கள் பிறகு அச்சே என்ற தீவில் இறங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இன்னும் அவர்கள் எத்தனை நாட்கள் அங்கிருக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரியாத நிலையில், அவர்களில் பெரும்பாலானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுகுறித்து பிபிசி …

  14. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் நேற்று செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்தார். 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறலாமா? வேண்டமா? என்பது குறித்து, பிரிட்டனில் நாளை வியாழக்கிழமை பொது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டாம் என பல்வேறு நாடுகளின் தலைவர்களும், முதலீட்டாளர்களும், நிறுவன அதிபர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறினால், ஐரோப்பிய பகுதியில் அதன் அதிகாரம் குறைந்துவிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனிடேயே, ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிப்பதற்கு குறைந்த அளவ…

  15. இந்தியாவில் மின்னல் தாக்கி 80 பேர் உயிரிழப்பு கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில், கிட்டத்தட்ட 80 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோப்பு படம் உயிரிழந்துள்ளவர்களில் பெரும்பாலானோர், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். தொடர்ந்து பருவ மழை பெய்துவரும் நிலையில், விவசாய நிலங்களில் இவர்கள் பணி செய்து கொண்டிருக்கும் போது மின்னலால் தாக்கப்பட்டுள்ளனர். இது போன்ற ஒரு குறுகிய காலத்தில், வழக்கத்திற்கு மாறாக அதிகமானோர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாகக் கருதப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவெங்கும் நடந்த மின்னல் தாக்குதல்களால், ஒரு வருடத்துக்கு ஏறக்குறைய இரண்டாயிரம் பேர் …

  16. இலங்கை அகதிகளுக்கு உதவ சர்வதேச அமைப்புகளுக்கு இந்தோனேஷியா அனுமதி தற்காலிக முகாமில் இலங்கை அகதிகள் | படம்: ஏ.பி. இந்தோனேஷியாவில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 44 பேருக்கும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவ அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன. இருப்பினும், மோசமான வானிலை காரணமாகவே படகு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டு அகதிகள் தரையிறக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை நின்று வானிலை சரியானதும் அகதிகள் வந்த படகை சர்வதேச கடல் எல்லையில் விட்டுவிடுவோம் என இந்தோனேஷிய அரசு தெரிவித்துள்ளது…

  17. டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்ய விரும்பினேன்: பேரணியில் கைதானவர் வாக்குமூலம் டொனால்ட் டிரம்பின் பேரணியில் ஒரு போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறித்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரிட்டனை சேர்ந்த ஒருவர், தன்னை விசாரித்து வரும் அமெரிக்க விசாரணை அதிகாரிகளிடம், குடியரசு கட்சியின் உத்தேச அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்பை தான் கொலை செய்ய விரும்பியதாக தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்பின் பேரணியில் கைது செய்யப்பட்ட மைக்கேல் சான்போர்ட் நீதிமன்ற ஆவணங்களின்படி 19 வயதாகும் மைக்கேல் சான்போர்ட் எனப்படும் அந்த நபர், சனிக்கிழமையன்று டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்வதற்காக, தான் லாஸ் வேகாஸ் நகரத்துக்கு காரில் வந்ததாக கூறியுள்ளார். டொனால்ட…

  18. நாடு முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மதத்தினர் ஒன்றுகூடி யோகா தினத்தை அனுசரிக்கும் விதமாக யோகா பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். சண்டிகரில் நடைபெறும் யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி யோகா பயிற்சியில் கலந்துகொண்டார். காலை 6.30 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், முதியவர்கள் என 30 ஆயிரம் பேர் திரண்டனர். யோகா தினத்திற்கு உலக நாடுகள் அனைத்தும் ஆதரவு அளித்துள்ளன. சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் யோகாவுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது. யோகாவின் பயன்கள் மற்றும் சக்தியை பலர் அறியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்று மோடி பேசியுள்ளார். சண்டிகரில் ப…

  19. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் முறுகல் அணுமூல கூறுகளை விநியோகிக்கும் நாடுகளின் குழுமத்தில் இந்தியாவை இணைப்பது தொடர்பில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குழுமத்தில் 48 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் அங்கத்துவத்தை பெறுவதற்கு இந்தியாவும் முயற்சி எடுத்து வருகிறது. இந்தநிலையில், தென்கொரிய தலைநகர் சியோலில் இடம்பெறும் அணுமூல கூறு விநியோக குழுமத்தின் மாநாட்டில் வைத்து அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவு வெளியிட்டிருந்தது. எவ்வாறாயினும், சீனாவின் அரச ஊடகம் தொடர்பில்லாத வகையில் இந்த குழுமத்தில் இந்தியாவுக்கு பதிலாக பாகிஸ்தானை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்…

  20. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகக் கோரும் தரப்பிலிருந்து கன்சர்வேடிவ் தலைவர் விலகல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக மேற்கொள்ளப்படும் பரப்புரை வெறுப்பையும், வெளிநாட்டு துவேஷத்தையும் பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னால் தலைவர் அந்தப் பிரசார முகாமிலிருந்து பரப்புரையிலிருந்து வெளியேறியுள்ளார். ஸ்லோவேனியா மற்றும் குரோஷியாவின் இடையிலான எல்லையில் அகதிகளும், குடியேறிகளும் வரிசையாக நிற்பதை காட்டுகின்ற, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான கட்சியான யுகிப்பின் விளம்பரத்தை எடுத்துக்காட்டி சயீதா வார்சி இந்த குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார். பல பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து அவைகளின் தொழிலாளர்களுக்…

  21. இன்றைய நிகழ்ச்சியில் - டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயற்சியா? துப்பாக்கியை பறிக்க முயற்சித்ததற்காகவும், ட்ரம்பை கொலை செய்யப்போவதாக கூறியதற்காகவும் ஒரு பிரிட்டிஷ்காரர் கைதானார். - குடிநீருக்காக ஆற்றை மறிக்கும் மத்திய கிழக்கு நாடுகள். வேகமாக வறண்டு கொண்டிருக்கும் மரணித்த கடல். - அமெசான் காடுகளை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் அழிக்கிறார்கள். ஆனால், கூடவே பழங்குடியின மக்களின் வாழ்வும் அழிகிறது.

  22. பெய்ஜிங், என்.எஸ்.ஜி.யில் இந்தியாவை சேர்ப்பது தொடர்பாக் உறுப்பு நாடுகளுடன் ஆலோசிப்பதாக சீனா கூறிஉள்ளது. அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்று கூறி அணுசக்தி நாடுகள் குழுவில் இந்தியாவை சேர்ப்பதற்கு சீனா மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் என்.எஸ்.ஜி.யில் அங்கம் வகிக்கும் பிரான்ஸ் அணு ஆயுத தடை பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்று சீனாவிற்கு பதிலடி கொடுத்த இந்தியா அதே அடிப்படையில் வாய்ப்பளிக்க வேண்டும் என்றது. சீனா தொடர்ச்சியாக எதிர்க்கும் நிலையில் அமெரிக்கா உறுப்பு நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளது. ஆலோசனை …

  23. இன்றைய நிகழ்ச்சியில் - வன்செயலாலும், போராலும், ஆறு கோடியே ஐம்பது லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மோதல்களை தடுக்க அவசர நடவடிக்கை கோருகிறது ஐநா. - சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் தமது மீனவர் மீது சுட்டதாக இந்தோனேசியா மீது சீனா குற்றச்சாட்டு. ஆனால், அவர்கள் வெறும் மீனவர்கள் மாத்திரந்தானா என்பது குறித்த பிபிசியின் சிறப்பு ஆய்வு. - ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதா அல்லது அதிலிருந்து விலகுவதா என்று முடிவெடுக்கவுள்ள பிரிட்டிஷ் மக்கள். இந்த சிக்கலான விவகாரம் குறித்த பிபிசியின் விளக்க காணொளி.

  24. இனிமேல் என் வாழ்க்கையில் எங்கும் செல்லமாட்டேன் : விஜய் மல்லையா அதிரடி எனது வாழ்க்கையில் எங்கும் அழையா விருந்தாளியாக சென்றதில்லை இனிமேலும் செல்லமாட்டேன் என்று தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். பண மோசடி குற்றத்தில் சிக்கியுள்ள விஜய் மல்லையா இலண்டனில் தங்கியுள்ளார். அவர், சனியன்று இலண்டனில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் இங்கிலாந்துக்கான இந்திய தூதரும் பங்கேற்றார். மல்லையாவை பார்த்ததும் அங்கிருந்து தூதர் வெளியேறிவிட்டார். இதனால் பலத்த சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இது தொடர்பாக மல்லையா, “எனது வாழ்க்கையில் எங்கும் அழையா விருந்தாளியாக சென்றதில்லை. இனிமேலும் செல்லமாட்டேன். புத்தக வெளியீட்டு விழாவில் …

  25. இத்தாலி தேர்தல்: ரோமின் முதல் பெண் மேயர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இத்தாலியின் மிக பெரிய நகரங்களின் குடிமக்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். எட்டு மில்லியன் இத்தாலியர் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். ஐந்து நட்சத்திர இயக்கத்தின் எழுச்சிமிகு நடசத்திரமாக ராக்கி பார்க்கப்படுகிறார் ரோம் நகர புதிய மேயருக்கான போட்டி தான் மிகவும் கவனிக்கப்படுகிறது. இங்கு மக்களின் தேவைகளுக்காய் குரல் கொடுக்கும் ஐந்து நட்சத்திர இயக்கத்தின் வெர்ஜீனியா ராக்கி அம்மையார், பிரதமர் மாட்டியோ ரென்சியின் ஜனநாயக கட்சியின் மூத்த அதிகாரியான ரோபர்டோ கியசெட்டிக்கு எதிராக மேயர் பதவிக்கு போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் வேட்பாளர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.