உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26890 topics in this forum
-
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில், மும்பை தாக்குதல் பாணியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13–ந் தேதி இரவு விளையாட்டு மைதானம், இசை அரங்கம், உணவு விடுதி என பல இடங்களில் தீவிரவாதிகள் குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் அதிபயங்கர தாக்குதல்களை நடத்தினர். உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த கொடூர தாக்குதல்களில் 130 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 400 பேர் காயம் அடைந்தனர். 221 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 57 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். தாக்குதல் நடத்திய 8 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய சாலாஹ் அப்தேசலாம் ( வயது 26) பெல்ஜியத்தில் பதுங்கி இருந்த போது கைது செய்யப்பட்டு பெல்ஜியம் சிற…
-
- 3 replies
- 657 views
-
-
அயல்நாட்டுக் கொள்கைகள் பற்றி அறியாத டிரம்ப் அதிபர் ஆகலாமா? - ஒபாமா கேள்வி அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டோனல்டு டிரம்பின் அயல்நாட்டுக் கொள்கைகள் குறித்த நம்பகங்களை அதிபர் ஒபாமா கடுமையாகக் கேள்விக்குட்படுத்தியுள்ளார். வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த அணுப்பாதுகாப்பு மாநாட்டுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஒபாமா, “அறிக்கைகளாக விட்டுக் கொண்டிருக்கும் அந்த நபருக்கு (டிரம்ப்) அயல்நாட்டுக் கொள்கை அல்லது அணுக்கொள்கை, அல்லது கொரியா, அல்லது உலகத்தைப் பற்றியே கூட எதுவும் தெரியாது என்று கூறுகின்றனர். நான் ஏற்கெனவே கூறியது போல் அமெரிக்க தேர்தல்களை உலக நாடுகள் ஆர்வத்துடன் பின் தொடர்ந்து வருகின்றன, நாம் என்ன செ…
-
- 0 replies
- 409 views
-
-
பிபிசி தமிழ்த் தொலைக்காட்சி செய்திகள் துவங்கி இன்றோடு ஓராண்டு நிறைவு செய்கிறோம். உங்கள் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி. இன்றைய நிகழ்ச்சியில் மீட்கப்பட்ட பல்மைரா நகரில் மிஞ்சியிருப்பது என்ன? இரண்டாயிரம் ஆண்டு பழமையான பல்மைரா நகருக்குச் சென்ற பிபிசி செய்தியாளர் குழு தரும் பிரத்யேக நேரடித் தகவல்கள்; ஒரு பக்கம் உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி அணு ஆயுத பாதுகாப்பு குறித்து விவாதித்துக்கொண்டிருக்க, இன்னொரு ஏவுகணையை கடலுக்குள் ஏவியது வடகொரியா; அடுத்து என்ன என்பதை ஆராய்கிறது பிபிசி; சூரியக் குளியலுக்கும் சொகுசான கடற்கரைக்கும் பேர் போன மொரீஷியஸ் தீவு பயணிகளை வரவேற்க புதியதொரு வசதியை உருவாக்கி வருகிறது. மருத்துவ சுற்றுலாவை வளர்க்கிறது மொரீஷியஸ் அரசு. எதிர்பார்த்த பலன் கிடைக்குமா…
-
- 0 replies
- 398 views
-
-
பரிஸில் பாரிய வெடிப்பு பிரான்ஸின் தலைநகர் பரிஸில் சற்று முன்னர் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. எராளமாக எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக பரிஸ் நகரம் புகைமண்டலத்தால் சூழ்ந்துள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 12.30 மணியளவில் இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. பரிஸ் நகரத்துக்கு செல்லும் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவே இந்த வெடிப்புக்கு ஆரம்ப காரணம் …
-
- 2 replies
- 1.3k views
-
-
பீகாரில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த போது ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் ஆட்சி அமைத்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று நிதீஷ்குமார் வாக்குறுதி கொடுத்திருந்தார்.ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று நிதீஷ்குமார் முதல்–மந்திரி பொறுப்பை ஏற்றதும் ஏப்ரல் 1–ந்தேதி முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி பீகார் மாநிலத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பான சட்ட திருத்தம் நேற்று பீகார் மாநில சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.குரல் ஓட்டெடுப்பு மூலம் அந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பீகாரில் இனி யாரும் மது விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கிடையே நாளை…
-
- 1 reply
- 431 views
-
-
சிரிய அகதிகளை கட்டாயப்படுத்தி திருப்பியனுப்புகிறது துருக்கி: அம்னெஸ்டி குற்றச்சாட்டு சர்வதேச சட்டங்களை மீறும் விதமாக, ஆயிரக்கணக்கான அகதிகளை சிரியாவுக்குள் கட்டாயப்படுத்தி துருக்கி அரசு அனுப்பியதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியா அகதிகளுக்கு துருக்கி ஒரு பாதுகாப்பான இடமல்ல என்று அம்னெஸ்டி தெரிவித்துள்ளது. ஜனவரி மாத மத்தியில் இருந்து ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட நூறு சிரிய அகதிகள் திரும்ப அனுப்பப்பட்டதாக தெற்கு துருக்கியில் இருக்கும் அந்த அமைப்பின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் சமீபத்தில் துருக்கியுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி கிரேக்க தீவுகளுக்கு வந்திறங்கும் சிரிய அகதிகளை துருக்கி திரும்ப பெற்ற…
-
- 0 replies
- 437 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… கத்தாரின் கால்பந்து உலக்கோப்பை விளையாட்டரங்கங்களைக் கட்டும் பணியாளர்கள் சுரண்டப்படுவதாக அம்னெஸ்டி குற்றச்சாட்டு; பிஃபா அமைப்பு நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை. கிழக்கு ஐரோப்பாவுக்கு ஆயிரக்கணக்கான படைகளை அனுப்பும் அமெரிக்காவுக்கு ரஷ்யா தெரிவிக்கும் எதிர்ப்பால் மோதல் முற்றுகிறது. குழந்தை சேஷ்டைகள் தெரியும்; கொரில்லாக்குட்டியின் சேஷ்டைகள் தெரியுமா? இங்கிலாந்தில் மனித அம்மாவிடம் வளரும் கொரில்லாக் குட்டியின் கதை ஆகியவற்றைக் காணலாம்.
-
- 0 replies
- 453 views
-
-
'குவாந்தனாமோ கைதிகள் வேறு நாடுகளுக்கு மாற்றப்படுவர்' தென்கிழக்கு கியூபாவில் உள்ள அமெரிக்க கடற்படை முகாமில் இந்த சிறை அமைந்துள்ளது குவாந்தனாமோ இராணுவ சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் டஜன் கணக்கான கைதிகளை, அவர்களை ஏற்க இணங்கியுள்ள குறைந்தது இரண்டு நாடுகளுக்கு இடமாற்றம் செய்யவுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அந்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. குவாந்தனாமோ சிறையை மூடிவிடுவதற்கு அதிபர் ஒபாமா எடுத்துவரும் புதிய முயற்சிகளை இந்த அறிவிப்பு குறிப்பதாக பார்க்கப்படுகின்றது. அடுத்த சில நாட்களில் முதலாவது இடமாற்றம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 2007-ம் ஆண்டிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற யேமனிய பிரஜை ஒருவரும…
-
- 0 replies
- 382 views
-
-
`ஐ.எஸ் தலைவரின் பிரதிநிதி கொல்லப்பட்டார்' `ஐ.எஸ் தலைவரின் பிரதிநிதி கொல்லப்பட்டார்' சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரக்கா நகரில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல் ஒன்றில் இஸ்லாமிய அரசு குழுவின் மூத்த கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அபு அல்-ஹய்ஜா அல்-ருனுசி என்ற பெயரால் அவர் அறியப்பட்டவர் என தெரிவிக்கும் பிரித்தானியாவை தளமாக கொண்டு செயற்படும் மனித உரிமைகள் நிறுவனமாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம், அவர் ஐ எஸ் தலைவர் அபு பக்கர் அல்-பக்டாதியின் பிரதிநிதி என வர்ணித்துள்ளது. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் அவரை ஆளில்லா விமானம் மூலம் இலக்கு வைத்ததாக நம்பப்படுகிறது. இந்த அறிக்கை தொடர்பில் அமெரிக்க படையினர் இதுவரை எ…
-
- 0 replies
- 556 views
-
-
கத்தாரில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றனர் - அம்னெஸ்டி 2022 இல் கால்பந்து உலகக் கோப்பை கத்தாரில் நடைபெற உள்ளது. கத்தாரில் 2022 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள கால்ப்பந்து உலகக்கோப்பை போட்டிகளை முன்னிட்டு அங்கு கட்டட வேலைகளில் தொழிலுக்கு அமர்த்தப்பட்டுள்ளவர்கள் திட்டமிட்ட வகையில் பரவலான துஷ்பிரயோகங்களுக்கு முகம் கொடுப்பதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. சில சமயங்களில் தொழிலாளர்கள் கட்டாயமாக வேலையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் குறித்த மனித உரிமைகள் குழு சாடியுள்ளது. கத்தாரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தொழில் இடங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தமது கடுமையான கவலைகளை முன்னர் மனித உரிமைகள் குழு வெளியிட்டிருந்தாலும், உலகக்கோப்பை …
-
- 0 replies
- 379 views
-
-
முஸ்லிம் யுவதிகள் 15 வயதில் பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம்! - டெல்லி உயர்நீதிமன்ற தீா்ப்பு! [Tuesday 2016-03-29 20:00] பருவமடைந்திருந்தால் முஸ்லிம் பெண்கள் 15 வயதில் தங்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 16 வயது மகளை பையன் வீட்டார் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாகவும், தங்கள் மகளை தங்களுடனேயே அனுப்பி வைக்குமாறும் கோரி பெண்ணுடைய பெற்றோர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் எனும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ். ரவீந்திர பட் மற்றும் எஸ்.பி.கார்க் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தனர். …
-
- 2 replies
- 863 views
-
-
துபாய், துபாய் விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு சேவை கட்டணம் வசூலிக்க துபாய் பட்டத்து இளவரசரும், துபாய் நிர்வாக கவுன்சில் தலைவருமான மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அனுமதி அளித்துள்ளார். இந்த தீர்மானம் எண் 8/2016 துபாய் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி துபாயில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் பயன்படுத்தும் பயணிகள் ஒவ்வொருவரும் 35 திர்ஹாம் கட்டணமாக செலுத்த வேண்டும். (இந்திய மதிப்பில் ரூ.631 வரை) இந்த புதிய கட்டணம் வரும் ஜூன் 30–ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் துபாய் விமான நிலையங்களின் உள்கட்டமைப்பு பணிகள் மேலும் மேம்படுவதற்கு உதவியாக இருக்கும். வருகிற 2023–ம் ஆண்டுக்குள் 100 மில்லியன் பய…
-
- 0 replies
- 518 views
-
-
ஆன்சான் சூ கீகிக்கு பிரதமருக்கு நிகரான பதவி- மியன்மார் ஜனநாயக தேசிய லீக்கின் தலைவி அன் சான் சூ கீக்கு பிரதமருக்கு நிகரான பதவியொன்று வழங்கப்பட உள்ளது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் சூ கீயின் கட்சி வெற்றியீட்டியது. எனினும், நாட்டின் அரசியல் சாசனத்திற்கு அமைவாக சூ கீயினால் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கட்சியின் ரின் கியாவ் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். தற்போது நாட்டின் பிரதமர் பதவிக்கு நிகரான ஓர் பதவியை ஆன் சான் சூ கீக்கு வழங்க புதிய அரசாங்கம் திர்மனரித்துள்ளது. இது தொடர்பிலான உத்தேச சட்ட மூலமொன்றும் வரையப்பட்டுள்ளது. நாட்டுக்கான ஆலோசகர் என்ற பெயரில் இந்தப் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிற…
-
- 0 replies
- 507 views
-
-
யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் அகஸ்தியர் மலை! [Wednesday 2016-03-30 07:00] உலகெங்கிலும் அரிய வனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் யுனெஸ்கோ இணைத்து வருகிறது. அதனடிப்படையில், தமிழகக்ததில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் மலையை உலகின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் யுனெஸ்கோ இந்த மாதம் 19-ஆம் தேதி முதல் இணைத்துக் கொண்டது. இந்தப் பட்டியலில் அகஸ்தியர் மலை இணைந்ததின் மூலம் உலகளவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தமிழக வனத் துறையினர் தெரிவித்தனர். கடந்த ஆண்டு யுனெஸ்கோ பட்டியலில் கனடா நாட்டின் பீவர் மலைப் பகுதியும், இந்தோனேசியாவின் பாம்பங்கன் வனப் பகுதியும் இணைந்தன.தமிழகத்தில் ஏற்கெனவே நீலகிர…
-
- 0 replies
- 1.2k views
-
-
பயங்கரவாதச் செயல்பாடுகள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு, குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் குடியுரிமையை பறிக்கும் திட்டம் கைவிடப்படுவதாக பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸ்வா ஒலா(ந்) அறிவித்துள்ளார்.கடந்த ஆண்டு நவம்பரில் பாரிஸில் இடம்பெற்றத் தாக்குதல்களை அடுத்து, குடியுரிமையை பறிக்க அரசியல் சாசனத்தில் மாறுதலைக் கொண்டுவரும் திட்டம் முன்வைக்கப்பட்டது.ஆனால் அத்திட்டமானது அவரது சொந்தக் கட்சியான சோஷலிஸ கட்சிக்குள் ஆழமான பிளவுகளை ஏற்படுத்தி, நீதியமைச்சர் பதவி விலகவும் காரணமாக அமைந்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதால், குடியுரிமையை பறிக்கும் திட்டம் கைவிடப்படுவதாக ஒலா(ந்) அறிவித்துள்ளார்.யதார்த்த ரீதியில் மிக்குறைந்த தாக்கதத்தையே ஏற்படுத்தியிருக்கக் க…
-
- 0 replies
- 377 views
-
-
உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், இந்த வருட மத்திக்குள் 4,500 பணியிடங்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.புதிய விமானங்களுக்கான ஆர்டர்கள் குறைந்திருப்பதால் போயிங் நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கிறது.இதில் 1,600 பணியிடங்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என்றும் பிற இடங்கள் நீக்கப்படும் என்றும் அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.வாடிக்கையாளர்கள் விமானங்களை வாங்குவதைக் குறைத்துக்கொண்டிருப்பதால், வணிக ரீதியான விமான தயாரிப்புப் பிரிவிலேயே பெரும் பணி இழப்புகள் இருக்கும்.நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் இதன் மூலம் பணியை இழப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் போயிங் நிறுவனத்தில் 1,61,000…
-
- 0 replies
- 370 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… தற்கொலை அங்கியை அணிந்திருப்பதாக கூறிய எகிப்திய பயணிகள் விமானத்தை கடத்திச் சென்று சைப்ரஸில் தரையிறக்கிய நபர் சரணடைந்திருப்பது குறித்த நேரடித் தகவல்கள்; சிரியாவுக்கும் துருக்கிக்கும் இடையிலான எல்லையின் பெரும்பகுதியை சிரியாவுக்குள் இருக்கும் குர்துப் படைகள் காவல் காக்கும் பின்னணியில் சிரியாவில் என்ன நடக்கிறது என்பது குறித்து பிபிசியின் பிரத்யேகச் செய்திகள்; யேல் பல்கலைகழக ஆய்வின்படி அமெரிக்காவில் விளையும் முப்பத்து நான்கு சதவீத உணவு, அதாவது அறுபது பில்லன் கிலோகிராம் உணவு வீணாக்கப்படுவதாகவும் ஒட்டுமொத்த உலகின் பட்டினியைப் போக்க தேவையான உணவின் அளவை விட இது மிக அதிகம் என்றும் தெரிவித்திருக்கும் நிலையில், உணவு வீணாவதைக் குறைக்க தென் கொரியாவில் கடைப…
-
- 0 replies
- 505 views
-
-
இந்தியா முழுவதும் அவசர அழைப்புக்கென இனி ஒரே எண் இந்தியாவில் நாடு முழுவதும் அவசர அழைப்புக்கென 112 என்ற ஒரே எண்ணை பயன்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அவசர அழைப்புக்கு பல்வேறு எண்கள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. இந்த ஒரே எண்ணின் மூலம் காவல்துறை, அவசர மருத்துவசேவை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறையினரையும் தொடர்புகொள்ள முடியும். இந்தத் திட்டத்தை தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்புத் துறை அமைச்சரின் அனுமதி கிடைத்ததும் இந்தத் திட்டம் சில மாதங்களிலேயே நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. அவசர கால அழைப்புகளுக்கென …
-
- 0 replies
- 329 views
-
-
தேன் தடவிய பேச்சால் கியூபா மக்களை திசைதிருப்ப முயலும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கருத்துக்கு புரட்சியாளரும், கியூபா முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ கண்டனம் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவிவந்தது. இந்நிலையில், கியூபாவுடன் நட்பு பாராட்டுவது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்து அதற்கான முயற்சிகளையும் செய்தார். 54 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் கியூபா நாட்டு தூதரகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது.…
-
- 0 replies
- 475 views
-
-
சைப்ரஸில் அரசியல் தஞ்சம் வேண்டும்... எகிப்து விமானத்தைக் கடத்திய சமஹா கோரிக்கைஎகிப்து பயணிகள் விமானத்தை கடத்திய இப்ராஹிம் சமஹா தனக்கு சைப்ரஸில் அரசியல் தஞ்சம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். எகிப்தின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து எகிப்து ஏர் நிறுவன விமானம் எம்எஸ்181 இன்று கெய்ரோவுக்கு கிளம்பியது. விமானத்தில் 81 பயணிகள், 7 சிப்பந்திகள் இருந்தனர். இந்நிலையில் விமானம் கடத்தப்பட்டு சைப்ரஸ் நாட்டில் உள்ள லார்னாகா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தை தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிய எகிப்தை சேர்ந்த இப்ராஹிம் சமஹா(27) என்பவர் கடத்தியது தெரிய வந்துள்ளது. எகிப்து அதிகாரிகள் சமஹாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பேச்சுவார்த்தையின் பலனாக விம…
-
- 6 replies
- 1k views
-
-
முடிவுக்கு வந்தது ஈஜிப்ட் ஏர் விமானக் கடத்தல் விவகாரம் - கடத்தியவர் சரண் ஈஜிப்ட் ஏர் விமானக் கடத்தலில் சிக்கிய அனைத்து பயணிகளும் பத்திரமாக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் முடிவுக்கு வந்துவிட்டது. கடத்தப்பட்ட ஈஜிப்ட் ஏர் விமானம் லார்னகா விமானநிலையத்தில் ஒரு பதற்றமான நெருக்கடி நிலைக்குப் பின்னர் , விமானத்தைக் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். தனது கைகளைத் தூக்கியபடி விமானத்திலிருந்து வெளியே வந்த அவர், பின்னர் பயங்கரவாதத் தடுப்பு அதிகாரிகளிடம் சரணடைந்தார். அதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக , பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்கள் விமானத்தின் படிகளில் ஒடி இறங்கி தப்பிக்கும் காட்சிகளை தொலைக்காட்சிப் படங்கள் காட்டின. …
-
- 0 replies
- 402 views
-
-
இஸ்லாமியவாதியின் ஐபோன் தரவுகளை ஆராய்கிறது அமெரிக்க நீதித்துறை அமெரிக்காவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிர இஸ்லாமியவாத நபருக்கு சொந்தமான ஐபோனின் தரவுகளுக்குள் நுழைந்துள்ளதாக அந்நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது. இந்த இஸ்லாமியவாத நபரால், அமெரிக்காவின் சான் பெர்னாடினோவில் வைத்து கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில், ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக எடுக்கவிருந்த சட்ட நடவடிக்கை கைவிட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது. ஐபோனுக்குள் இருக்கின்ற உள்ளடக்க தகவல்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், மூன்றாம் தரப்பு நபர் ஒருவரின் உதவிய…
-
- 1 reply
- 464 views
-
-
கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தில் இருந்த 7 பேரைத் தவிர அனைவரும் விடுவிப்பு கடத்தப்பட்டு சைப்ரஸுக்கு திருப்பிவிடப்பட்ட ஈஜிப்ட் ஏர் விமானத்தில் இருந்தவர்களில் ஏழு பேரைத் தவிர அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட விமானம் லார்னாகா விமான நிலையத்தில் உள்ளது அலெக்ஸாண்ட்ராவிலிருந்து கெய்ரோ சென்றுகொண்டிருந்த அந்த விமானத்தில் இருந்த பயணி ஒருவர் குண்டுகள் நிரம்பிய இடுப்புப்பட்டி ஒன்றைத் தான் அணிந்திருந்ததாகக் கூறி விமானத்தை கடத்தினார். இதையடுத்து அந்த விமானம் சைப்ரஸிலுள்ள லார்னாகா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. தற்போது சைப்ரஸில் தஞ்சம்கோரியுள்ள அந்த நபர், அந்நட்டைச் சேர்ந்த தனது முன்னாள் மனைவியைக் காணவேண்டும் எனக் கோரியுள்ளார். …
-
- 1 reply
- 327 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்பிரச்சாரத்தில் தற்போது காணப்படும் நிலைக்கு ஊடகவியலாளர்களே காரணம் ஒபாமா குற்றச்சாட்டு: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்பிரச்சாரத்தில் தற்போது காணப்படும் நிலைக்கு ஊடகவியலாளர்கள் வேட்பாளர்களிடம் கடுமையான கேள்விகளை கேட்காததே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களிற்கு விருது வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் 2016 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் காணப்படும் ஆபாச உரைகள், தேர்தல் கூட்டங்களில் வன்முறைகள் இடம்பெறுவது மற்றும் யதார்த்தத்திற்கு மாறான வாக்குறுதிகள் போன்றவற்றிற்கு பத்திரிகைகள் அதிக முக்கியத்துவம் வழங்குவது குறித்து ஏமாற்றத்தையும் வெளியிட்டுள்ள…
-
- 0 replies
- 339 views
-
-
மூர்க்கமான வன்முறைமிக்க தீவிரவாதத்தை அன்பெனும் ஆயுதத்தின் துணையுடன் எதிர்த்துப் போராடுவோம் பாப்பரசர் பிரான்சிஸ் குடியேற்றவாசிகளுக்கு உதவத் தவறுபவர்கள் தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டி ஆற்றிய தனது பாரம்பரிய உரையிலேயே அவர் இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார். குடியேற்றவாசிகள் அவர்களுக்கு வரவேற்பும் உதவியும் அளிக்கப்பட வேண்டியவர்களால் எப்போதும் நிராகரிக்கப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். அத்துடன் தீவிரவாதத்தை குருட்டுத்தனமான மூர்க்கமான வன்முறையொன்றாகக் குறிப்பிட்ட பாப்பரசர், அதற்கு எதிராக அன்பு எனும் ஆயுதத்தின் துணையு…
-
- 0 replies
- 254 views
-