உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27057 topics in this forum
-
மனுஸ் தீவு தடுப்புமுகாம் அரசியல் யாப்பை மீறுகிறது'- உச்ச நீதிமன்றம் அகதிகளையும் அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களையும் மனுஸ் தீவில் தடுத்து வைத்துள்ளது அரசியலமைப்பிற்கு முரணானது என்று பாப்புவா நியூ கினியின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. `ஆஸி. தடுப்பு முகாம் சட்டவிரோதமானது' சட்டவிரோத குடியேறிகள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் குற்றத்துடன் தொடர்புடையவர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் தவிர அனைவரினதும் தனிப்பட்ட சுதந்திரத்தை பப்புவா நியூ கினியின் அரசியலமைப்பு உறுதிப்படுத்துகின்றது. கடல்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியாவிற்கு வரும் தஞ்சக் கோரிக்கையாளர்களை தமது நாட்டிற்கு வெளியே வைத்து விசாரிக்கும் ஆஸ்திரேலியாவின் கொள்கையின் கீழ் அகதித் தஞ்சக்…
-
- 0 replies
- 275 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - உலகின் மிகவும் மோசமான அணு விபத்து செர்நோபிலில் நடந்து இன்றுடன் முப்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன. அங்கு பணியாற்றிய ஒருவரின் வாக்குமூலம். - வங்கதேசத்தில் தொடர்ந்து கொல்லப்படும் சுதந்திர எழுத்தாளர்கள். ஒருபாலுறவு ஆதரவு செயற்பாட்டாளர் இருவரை கொன்றதாக உரிமை கோரும் இஸ்லாமியவாத ஆயுதக்குழு. - அன்னங்களோடு பறக்கும் அணங்கு. அன்னப்பறவைகள் ஆண்டுதோறும் செல்லும் பயணத்தில் சேர்ந்து பறக்கும் பெண்.
-
- 0 replies
- 287 views
-
-
செர்னோபில் அணு விபத்து: 30 ஆண்டுகள் நிறைவு செர்னோபில் விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் தேவாலயங்களில் மெழுகுவர்த்திகளை ஏற்றி இன்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர் செர்னோபிலில் நடந்த உலகின் மிக மோசமான அணு விபத்தின் 30-வது ஆண்டு நிறைவை குறிக்கும் நிகழ்வுகளை யுக்ரெய்ன் நடத்துகின்றது. 1986-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த அணு ஆலையின் உலை உருகி வெடித்தபோது, ஆலையின் கூரை பிடுங்கி எறியப்பட்டு மண்டலமாகக் கிளம்பிய கதிரியக்க பொருட்கள், யுக்ரெய்னின் எல்லையை கடந்து அண்டையில் உள்ள பெலாரஸிலும், வடக்கு ஐரோப்பா எங்கிலும் பரவியது. அந்த விபத்து நடந்த உடனேயே பணியாளர்களும் தீயணைப்பு வீரர்களுமாக 31 பேர் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால், அடுத்த பல மாதங்களில் அங்கிருந்து வெ…
-
- 0 replies
- 265 views
-
-
பாரீஸ் குண்டுவெடிப்பு - வெளியானது பகீர் வீடியோ பாரீஸ் குண்டுவெடிப்பில் வெடிப்பு தொடர்பான அதிர்ச்சி வீடியோ ஒன்றை பிரான்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தினர். இந்த குண்டுவெடிப்பில் 130 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் முக்கிய குற்றவாளி சலா அப்தே சிலாம். வயது 26 வயதுடைய சிலாம், பெல்ஜியம் நாட்டில் பிரசல்ஸ் நகரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தபோது, காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான விசாரணை அவரிடம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாரீஸ் தாக்குதலில் தற்கொலை படையை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் வெடித்து சிதறும் அதிர்ச்சியூட்டும் வீடியோவை பிரான்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது. பாரீஸி…
-
- 0 replies
- 411 views
-
-
டெல்லியில் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பெரும் தீ விபத்து தீ விபத்து நடந்த கட்டிடம் | படம்: ஆர்.வி.மூர்த்தி. டெல்லியில் உள்ள தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பெரும் சேதம் உண்டானது. டெல்லி மாண்டி ஹவுஸ் பகுதியில் அமைந்திருக்கிறது தேசிய இயற்கை வரலாறு அருங்காட்சியகம். இங்கு இன்று அதிகாலை 1.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புப் படைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீயணைப்புப் பணியின்போது இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். "தீயி…
-
- 0 replies
- 480 views
-
-
உடைக்கப்பட்ட நவக்கிரக சிலைகள். மலேசியாவில் ஈப்போ, கிரீன்டவுன் அருகே அமைந்துள்ள இந்து கோயிலில் சிலைகள் உடைக்கப்பட்டன. இதனால் அந்த நாட்டில் பதற்றம் எழுந்துள்ளது. மலேசிய மக்கள் தொகையில் இந்திய வம்சாவழியினர் 8 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். அங்கு தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பத்துமலை முருகன் கோயில் உட்பட ஏராளமான இந்து கோயில்கள் உள்ளன. இந்நிலையில் பேராக் மாநில தலைநகர் ஈப்போவில் கிரீன்டவுன் அருகே அமைந்துள்ள முனீஸ்வரர் அம்மன் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர் ஒருவர் புகுந்து அங்கிருந்த நவக்கிரக சிலைகளை உடைத்துள்ளார். இது மலேசிய தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யுள்ளது. இதுதொடர…
-
- 0 replies
- 291 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - துருக்கியில் மிகவும் தீவிரமாக தேடப்படும் குர்து பிரிவினைவாத பிகேகே அமைப்பு தலைவரை பிபிசி சந்தித்தது. துருக்கிக்கு எதிரான சண்டையை தீவிரப்படுத்தப் போவதாக அவர் கூறுகிறார். - நேபாளத்தில் ஒன்பதாயிரம் பேர் பலியான பூகம்பத்தின் ஒரு வருடத்தின் பின்னரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக்கட்டமைக்க அந்த நாடு தடுமாறுகிறது. - ஷேக்ஸ்பியரின் படைப்புகள் அவர் மறைந்து நானூறு ஆண்டுகளின் பின்னர், மேடையில் இருந்து மெய்நிகர் உலகுக்கு.
-
- 0 replies
- 389 views
-
-
பிகேகே தலைவரின் மறைவிடம் சென்ற பிபிசி: ======================================= துருக்கியால் தீவிரமாக தேடப்படும் பிகேகே அமைப்பின் தலைவர் இராக்கில் மறைந்து வாழும் இடத்துக்கு பிபிசி சென்றது. போர் நிறுத்தம் இல்லாவிட்டால், துருக்கியுடனான போரை தீவிரப்படுத்தப் போவதாக பிகேகே தலைவர் எம்மிடம் கூறியுள்ளார். வடக்கு இராக்கில் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லையில் ஒரு ரகசிய இடத்தில் ஜமீல் பாயிகை பிபிசி சந்தித்தது. அந்த அமைப்பினரை சரணடையச் செய்ய அல்லது அழிக்கப்போவதாக துருக்கிய அதிபர் சூளுரைத்துள்ளார்.
-
- 0 replies
- 500 views
-
-
பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் நீரில் மூழ்கும் அபாயம்..! உலகில் தற்போது நிகழும் வெப்பநிலை காரணமாக பனிப்பாறைகள் உருகுவதனால் உலகம் முழுவதும் கடல்மட்டத்தின் அளவு உயர்ந்து வருகிறது. இதனால் கலிப்போர்னியா சிலிகன் வெலி பகுதியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள், சிஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் அலுவலகங்கள் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளன. சமீபத்தில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்புக்கு அமைவாக கடல்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது. இதனால் சிலிகன் வெலியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் தலைமை காரியாலயங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சென் பிரான்சிஸ்கோ கடல் பகுதியை அன்மித்த சொத்துக்களும் நீரில் மூழ்கும் …
-
- 0 replies
- 485 views
-
-
மலேசிய எம்.எச்.17 விமானம் உக்ரேனிய போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது : புதிய சான்றுகள் தெரிவிப்பு மலேசிய எம்.எச். 17 விமானமானது உக்ரேனிய போர் விமானமொன்றால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக புதிய சான்று கிடைக்கப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்படி போயிங் 777 விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பக் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உத்தியோகபூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்த விமானம் 2014 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி கிழக்கு உக்ரேனுக்கு மேலாக வெடித்துச் சிதறியதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் பிரித்தானிய பிபிசி ஊடகத்தில் வெளியான புதிய ஆவணப்படத்திற்கு மேற்படி விமானம் உக்ரேனிய வான் பரப்பில்…
-
- 0 replies
- 341 views
-
-
எவ்-16 யுத்த விமானத்தின் உதவியுடன் நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய நோர்வே மருத்துவர்கள் 2016-04-25 11:29:03 எவ்- –16 யுத்த விமானங்கள் தாக்குதல்களுக்குத்தான் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், நோர்வேயைச் சேர்ந்த மருத்துவர்கள் எவ்.-16 ரக யுத்த விமானத்தின் உதவியுடன் நோயாளி ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். நோர்வேயின் மத்திய பிராந்திய நகரான போடோவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நோயாளி ஒருவருக்கு Extracorporeal membrane oxygenation (எக்ஸ்ட்ராகேர்பரெல் மெம்பரன்ஸ்ஒக்ஸிஜினேஷன்) எனும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருந்தது. இதயம், நுரையீரல் செயலிழந்த வர்களை உயிர்பிழைக்க வைப்பதற்காக அவர்கள…
-
- 0 replies
- 323 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன்: 'ஒபாமாவின் கருத்து கிளிப் பிள்ளை பேச்சு' ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விதத்தில் வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் விளைவுகள் பற்றிய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் எச்சரிக்கைகளை, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்று பிரசாரம் செய்துவரும் அரசியல்வாதிகள் நிராகரித்துள்ளனர். பிரிட்டன் வெளியேறினால், தனிமைப்படுத்தப்படும் என்றும் வணிக உறவுகள் பாதிக்கப்படும் என்றும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் கூறுவதையே 'கிளிப் பிள்ளை பேச்சாக' ஒபாமா ஒப்புவிப்பதாக யூகிப் என்ற ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் தலைவர் நைஜல் ஃபராஜ் கூறியுள்ளார். …
-
- 4 replies
- 619 views
-
-
காங்கோ இசை நட்சத்திரம் பப்பா வெம்பா இசை அரங்கில் விழுந்து மரணம் காங்கோ இசைக் குழுத் தலைவர் பப்பா வெம்பா, ஐவரிகோஸ்ட்டில் இசை நிகழ்ச்சி ஒன்றின் போது அரங்கிலேயே விழுந்து மரணமடைந்துள்ளார். பப்பா வெம்பா அரங்கில் வீழ்ந்து மரணம் அவருக்கு வயது 66. சொகோஸ் இசையை ஆப்பிரிக்கா முழுவதும் இவர் மிகவும் பிரபலப்படுத்தினார். 1970, 80களில் காங்கோலிய இசை வடிவத்துக்கு சர்வதேச அரங்கில் ஓர் அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்த பப்பா வெம்பாவின் இயற்பெயர் ஜூல்ஸ் விபாடியோ. இவர் அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகளுக்கும் உள்ளாகியவர். இராணுவ ஜெனரல் ஒருவரின் மகளுடன் உறவு வைத்திருந்தமைக்காக சிறைவைக்கப்பட்டார். தனது இசைக் குழுவின் உறுப்பினர்களாக காண்பித்து சட்டவிரோதக் குடியேற…
-
- 0 replies
- 443 views
-
-
மியன்மார்: ஆலங்கட்டி மழையில் சிக்கி 8 பேர் பலி மியன்மாரில் ஆலங்கட்டி மழையில் சிக்கி குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் புயலுடன் கூடிய இந்த ஆலங்கட்டி மழை பொழிவில் கோல்ஃப் பந்து அளவுக்கு நீர்க்கட்டிகள் விழுந்துள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடு ஓடுவதை தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன. இந்த புயல்காற்றில் 1700 பகோடாக்கள் (மியன்மாரின் பௌத்த வழிபாட்டுக் கோபுரங்கள்) சரிந்துள்ளதாக கூறப்படுகின்றது. மற்றபல கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. மியன்மாரின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலவிய நீண்ட வெப்பக் காலநிலைக்குப் பின்னதாக இந்த புயல்காற்று வீசியுள்ளது. http://www.bbc.com/tamil/global/2016/04/160424_myanmar_hailstone?ocid=social…
-
- 1 reply
- 394 views
-
-
கூகுள் தலைவரான தமிழர் சுந்தர் பிச்சையின் கடந்தாண்டு சம்பளம் என்ன தெரியுமா? 666 கோடி ரூபாய் (100 மில்லியன் டாலர்). கடந்தாண்டு சுந்தர் பிச்சையின் மொத்த சம்பளம் 6 லட்சத்து 52 ஆயிரத்து 500 டாலர். அதாவது, பங்குச்சந்தையின் மதிப்பு படி 100 மில்லியன் டாலருக்கு சமம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூகுள் நிறுவனத்தின் தலைவரானார் பிச்சை; அப்போது அவருக்கு 199 மில்லியன் டாலர் பங்குகள் அளிக்கப்பட்டன. பங்குகள் அடிப்படையில் அமெரிக்காவில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு, வருமான வரி பிடித்தம் செய்யப்படும். பிச்சை, கடந்த 2004 ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சேர்ந்தார். அப்போது குரோம், ஆன்ட்ராய்டு பிரிவில் அவர் சாதனைகளை செய்தார். கூகுளின் குரோம் வெப் பிரவுசர் விஷயத்தில் அவர் சாதனைக…
-
- 0 replies
- 614 views
-
-
துருக்கிய பிரதமரை டுவிட்டரில் விமர்சித்த நெதர்லாந்து பெண் கைது துருக்கிப் பிரதமர் ரஸெப் தையிப் ஏர்துவானை சமூக வலைத்தளமான டுவிட்டரில் விமர்சித்த நெதர்லாந்தைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளரை துருக்கியில் வைத்து அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது. துருக்கி பிரதமரை விமர்சித்த டச்சு பத்திரிகையாளர் துருக்கியில் கைது துருக்கி வம்சாவளியான எப்ரு உமர் என்ற அந்தப் பெண் துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள குசாடாசி சுற்றுலா மையத்தில் வைத்து நேற்று சனிக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதை நெதர்லாந்து வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. துருக்கிப் பிரதமரை அவமானப்படுத்தும் விடயங்கள் தொடர்பில் தங்களுக்கு அறியத்தருமாறு …
-
- 0 replies
- 463 views
-
-
நீதித்துறையைக் காப்பாற்றுங்கள்: பிரதமர் மோடியிடம் தலைமை நீதிபதி கண்ணீர் மல்க வேண்டுகோள் மாநில முதல்வர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்ட மாநாட்டில் நீதித்துறையைக் காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் கோரிக்கை வைத்த போது கண்ணீர். | படம்: ஆர்.வி.மூர்த்தி. மோடி-தாக்கூர். | படம்: ஆர்.வி.மூர்த்தி. நீதிமன்றங்களில் நீதிபதிகளை அதிகரித்து சாமானிய, ஏழை மக்களுக்கும், விசாரணைக் கைதிகளாக சிறையில் வாடுபவர்களுக்கும் நீதி வழங்க நீதித்துறையின் சுமையைக் குறைத்து நீதித்துறையை காப்பாற்றுங்கள் என்று உச்ச நீத…
-
- 0 replies
- 292 views
-
-
விஜய் மல்லையா பாஸ்போர்ட் முடக்கம்; இந்தியா அழைத்து வர மத்திய அரசு தீவிரம் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட் முடக்கம். | கோப்பு படம். வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள மத்திய அரசு அவரது பாஸ்போர்ட்டை முடக்கி உத்தரவிட்டது. முன்னதாக அமலாக்கப்பிரிவினர் கோரிக்கைக்கு இணங்க விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை தற்காலிகமாக முடக்கிய மத்திய வெளியுறவு அமைச்சகம் தற்போது, தங்களது விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸுக்கு மல்லையா அளித்த பதில், அமலாக்கத் துறையினர் அளித்த தரவுகள், மற்றும் ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது ஆகியவற்றை கருத்தில் கொண்டு தற்…
-
- 1 reply
- 414 views
-
-
சிரியாவுக்கு தரைப்படைகளை அனுப்பக்கூடாது என்கிறார் ஒபாமா சிரியாவின் அதிபர் அஸாதை பதவியிலிருந்து அகற்றும் நோக்கில், மேற்குலக நாடுகள் தரைப்படைகளை அனுப்புவது தவறானாதாக இருக்கும் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். பிபிசிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு பேட்டி பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். சிரியாவில் செயல்படும், இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் பயங்கரவாத இயக்கத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த வேண்டியது அவசியம் எனக் கூறியுள்ள அவர், சுயாதீனமாக அங்கு இராணுவத் தலையீட்டைச் செய்வது உள்நாட்டு பிரச்சனைகளைத் தீர்க்க உதவாது எனவும் தெரிவித்துள்ளார். அங்கு உள்நாட்டு மோதல்களுக்கு பொறுப்பான, அதிப…
-
- 0 replies
- 387 views
-
-
பெங்களூருவில் தமிழ் நூலகம் சூறை: 20 ஆயிரம் நூல்கள் வீதியில் வீசப்பட்டன நூலக கட்டிடம் வீதியில் வீசியெறியப்பட்ட புத்தகங்கள் பெங்களூருவில் உள்ள திருக்குறள் மன்ற நூலகம் சூறையாடப்பட்டு அங்கிருந்த 20 ஆயிரம் நூல்கள் வீதியில் வீசப்பட்டன. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அல்சூரில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 1964-ம் ஆண்டு தமிழ் ஆர்வலர் நல்ல பெருமாள் என்பவரால் திருக்குறள் மன்றம் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் நூலகம் அங்குள்ள தாமோதர் முதலியார் தெருவில் 1976-ம் ஆண்டு முதல் ச…
-
- 0 replies
- 393 views
-
-
இந்திய கால் சென்டர்களை கலாய்த்த டொனால்ட் டிரம்ப் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் டெலாவர் மாகாணத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்திய கால் சென்டர்களை கடுமையாக கிண்டல் செய்தார். டிரம்ப் பேசியதாவது: "எனக்கு கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவை தொடர்பு கொண்டேன். அந்த சேவை மையம் அமெரிக்காவில் இருந்து இயங்குகிறதா இல்லை வேறு ஏதாவது வெளிநாட்டிலிருந்து இயக்கப்படுகிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே நான் அவ்வாறு செய்தேன். எதிர்முனையில் பேசியவர் நான் எதிர்பார்த்ததுபோலவே ஒரு இந்தியர். அவரிடம் நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள் என…
-
- 0 replies
- 619 views
-
-
இந்தியா - பஞ்சாப் மாநிலத்தில் முக்த்சர் நகரில் கணணி நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த தலித் இளம் பெண்ணை இளைஞன் ஒருவர் வெளியே இழுத்து கட்டாயப்படுத்தி கடத்தி சென்று பாலியல் துஷ்பிரியோகம் செய்துள்ளான். அந்த பெண் தனக்கு உதவி செய்யுமாறு அங்கிருந்தவர்களை கேட்டும் யாரும் உதவி செய்ய முன்வராது நிலையில் பின்னர் அந்த பெண்ணை கடத்தி சென்று ஒரு பண்ணையில் அடைத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பின்னர் மறுநாள் அந்த பெண்ணை விடுதலை செய்ததை தொடர்ந்து அந்த இளம் பெண் தனது தந்தையுடன் சென்று பொலிஸில் முறைப்பாடு கொடுத்தும் அந்த முறைப்பாட்டை வாங்கவில்லை. பின்னர் அவர்கள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து 5 நாட்களுக்கு பிறகு பொலிஸார் வழக…
-
- 0 replies
- 483 views
-
-
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 175 நாடுகள் கையெழுத்து பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பேசும் பிரான்ஸ் அதிபர் ஹாலந்தே | படம்: ஏ.பி. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 175 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. சவுதி அரேபியா, ஈராக், நைஜீரியா, கஜகஸ்தான் உள்ளிட்ட எண்ணெய் வளம் மிகுந்த நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. புவி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் இலக்கு. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உலகத் தலைவர்கள் புவி வெப்பமடைவதை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஒப்பந்தம் கைய…
-
- 1 reply
- 353 views
-
-
வரலாற்றில் முதல் முறை: ஹிரோஷிமா செல்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா அமெரிக்க அதிபர் ஒபாமா. | கோப்புப் படம். அணு குண்டு வீச்சில் நாசமான ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா செல்லவுள்ளார். அமெரிக்க அதிபர் ஒருவர் ஹிரோஷிமா செல்வது இதுவே முதல் முறையாகும். இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது அமெரிக்கா அணு குண்டு வீசியது. இதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந் தனர். அடுத்த 3 நாட்களுக்கு பின் நாகசாகி மீது மற்றொரு அணுகுண்டு வீசப்பட்டதில் 74 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதன் பிறகே அமெரிக்காவிடம் ஜப்பான் சரணடைந்தது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பின்னர் மன்னிப்பு கேட்டாலும், இதுவரை அணுகுண்ட…
-
- 2 replies
- 521 views
-
-
உலகின் செல்வாக்குமிக்க 100 பேர் : டைம் இதழ் வௌியிட்டது (Full List) inShare அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் இதழ் உலகின் செல்வாக்குமிக்க 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷக்கர்பர்க் மற்றும் அவரது மனைவி ப்ரிசில்லா ச்சான், ஒஸ்கார் விருது வென்ற லியனார்டோ டிகாப்ரியோ, போப் பிரான்ஸிஸ், ஹிலரி கிளின்டன், ஆங் சான் சூ கி, பராக் ஒபாமா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் என்பதுடன், டைம் இதழின் ஆறு அட்டைப் படங்களின் ஒன்றில் பிரியங்கா ச…
-
- 1 reply
- 674 views
-