Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. துருக்கி எல்லையில் மனிதாபிமான நெருக்கடி - அமெரிக்க வெள்ளை மாளிகை 2016-02-08 11:02:42 துருக்­கியின் எல்­லைக்­க­ருகே, இலட்­சக்­க­ணக்­கான சிரிய அக­திகள் இடம்­பெ­யர்ந்து வந்­துள்­ளமை, மனி­தா­பி­மான நெருக்­க­டியை தோற்­று­வித்­துள்­ள­துடன், அது மோச­ம­டை­வ­தா­கவும் வெள்ளை மாளிகை தெரி­வித்­துள்­ளது. அலெப்பே நக­ருக்கு அருகே, ரஷ்யா ஆத­ர­வுடன் அர­சாங்கம் மேற்­கொண்ட தாக்­கு­தலில் இருந்து சிரி­யர்கள் தப்­பித்துச் சென்­றுள்­ளனர். அவர்­களை தமது நாட்­டிற்குள் அனு­ம­திக்­காத துருக்கி, அவர்­க­ளுக்­கான உத­வி­களை சிரிய எல்­லைக்குள் அனுப்பி வைக்­கி­றது. அதே­வேளை, சிரி­யாவில் போர் நிறுத்தம் ஒன்­றிற்கு ஆத­ரவ…

  2. இன்றைய நிகழ்ச்சியில்… - தைவானில் நிலநடுக்கத்தில் இடிந்துவிழுந்த கட்டடத்தில் இருந்து எட்டுவயதுச் சிறுமி மீட்கப்பட்டார். இரண்டு நாட்களின் பின்னர் மீட்கப்பட்ட மூன்றாவது நபர் இவர். - பிரஞ்சு போர் விமானங்கள் ஐ எஸ்ஸுக்கு எதிரான தாக்குதலை அதிகரிக்கின்றன. தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இஸ்லாமிய அரசுக்கு இனி வெற்றிக்கு வாய்ப்பில்லை என்கிறார் பிரஞ்சு தளபதி ஒருவர். - சிரியாவில் பிள்ளைகளுக்கு போரினால் ஏற்பட்ட மன ரணங்களை ஆற்ற இசை மற்றும் நடனத்தை பயன்படுத்தும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

  3. பெங்களூரில் தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை 2 பேரை கடித்து குதறிய சம்பவம் ( வீடியோ) கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் நுழைந்த சிறுத்தை ஒன்று 2 பேரை கடித்து குதறியது. கர்நாடக மாநிலம் பெங்களூரு வர்த்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளிக்கூடம் உள்ளது. பள்ளி வளாகத்தில் ஒரு சிறுத்தை நடமாடுவதை காவலாளி பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர், பள்ளி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, போலீசாருக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசாரும், வனத்துறையினரும் அங்கு விரைந்து வந்து பள்ளிக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். …

  4. குடியேறிகளுக்கு எதிரான போராட்டங்கள் 2016-02-08 10:52:09 ஐரோப்­பா­வுக்கு செல்லும் குடி­யே­றி­க­ளுக்கு எதி­ராக ஐரோப்பா மற்றும் அவுஸ்தி­ரே­லி­யாவின் பல நக­ரங்­களில் எதிர்ப்பு போராட்டம் நடத்­தப்­பட்­டது. மேற்கை இஸ்­லா­மி­ய­ மயமாக்­கு­த­லுக்கு எதி­ரான ஐரோப்­பி­யர்கள் (பிஜிடா) என்ற அமைப்பால் நேற்று முன்­தினம் நடத்­தப்­பட்ட இந்த போராட்­டத்தில் 2000க்கும் அதி­க­மானோர் கலந்து கொண்­டனர். பெரி­ய­ளவில் நடத்­தப்­பட்ட இந்த போராட்­டங்கள் ஐரோப்­பிய நாடு­க­ளான பிரான்ஸ், ஜேர்­மனி, பிரித்­தா­னியா, நெதர்­லாந்து, ஆஸ்­தி­ரியா ஆகிய நாடுகளின்…

  5. நடுவானில் நேருக்கு நேர் மோதி கொண்ட விமானங்கள் கடலில் விழுந்து மூழ்கின! லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் கடல் பரப்புக்கு மேல் நடுவானில் பறந்து கொண்டிருந்த இரு சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு கடலில் விழுந்து மூழ்கி உள்ளது. அமெரிக்காவில் இரண்டு சிறிய ரக விமானங்கள் வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, நடுவானில் பறந்து கொண்டிருந்த இரண்டு சிறிய ரக விமானங்களும் திடீரென நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில், இரு விமானங்களும், லாஸ் ஏஞ்சல்ஸ் கடலில் துறைமுகம் அருகே விழுந்து மூழ்கி உள்ளது. இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த விம…

  6. அகதிகளுக்கு உதவ ஆஸியின் விக்டோரியா மாநிலம் முன்வந்துள்ளது ஆஸ்திரேலியாவில் 260க்கும் அதிகமான தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு தாங்கள் அடைக்கலம் அளிப்பதாக விக்டோரியா மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது. அகதிகளுக்கு ஆதரவாக விக்டோரியா மாநில முதல்வர் குரல் கொடுத்துள்ளார் அவர்கள் பசிஃபிக் பெருங்கடலிலுள்ள ஆஸ்திரேலிய அரசின் குடிவரவு மையங்களுக்கு அனுப்பப்படவிருந்த நிலையில், விக்டோரியா மாகாணத்தின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இவர்களை நவ்ரூ தீவுக்கு அனுப்ப வேண்டாம் என ஆஸ்திரேலியப் பிரதமருக்கு, விக்டோரியா மாநில முதல்வர் டானியேல் ஆண்ட்ரூஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவர்கள் அங்கு அனுப்பப்பட்டால், உடல் மற்றும் மனரீதியான பெரும் தாக்கங்களுடன் கூடிய வாழ்க்கையை எதிர…

  7. ஐஎஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவான 1.25 லட்சம் ட்விட்டர் கணக்கு நீக்கம் கோப்புப் படம் தீவிரவாத கருத்துகளை பரப்பவும் ஆதரவாகவும் செயல்பட்டு வந்த 1.25 லட்சம் பேருடைய கணக்கு களை ட்விட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது. சர்வதேச அளவில் தீவிர வாதத்தை பரப்ப சமூக வலை தளங்களை பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. மேலும், தீவிரவாதத்துக்கு ஆட்களை சேர்க் கவும் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். தற்போது சிரியாவில் பயங்கர வன்முறை களில் ஈடுபட்டு வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதர வாகவும் ஆட்களை சேர்க்கவும் சமூக வலைதளங்களில் பலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், தீவிரவாதத் துக்கு ஆதரவாக செயல்படு வோரின் கணக்குகளை கண் காணிக்க ட்விட்டர் ந…

  8. தொழு­கையில் கலந்­து­கொள்ளத் தவ­றிய 14 வயது சிறு­வ­னுக்கு பெற்றோர் முன்­னி­லையில் மர­ண­தண்­டனை Published by MD.Lucias on 2016-02-06 10:23:27 ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தொழு­கையில் கலந்து கொள்ளத் தவ­றிய 14 வயது சிறுவன் ஒரு­வ­னுக்கு அவ­னது பெற்றோர் முன்­னி­லையில் தலையைத் துண்­டித்து மர­ண­தண்­டனை நிறை­வேற்­றி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கடந்த சனிக்கி­ழமை நிறை­வேற்­றப்­பட்ட இந்த மர­ண­தண்­டனை குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று வெள்­ளிக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. வட சிரி­யா­வி­லுள்ள ஜரா­புலஸ் நகரைச் சேர்ந்த மேற்­படி சிறுவன் அந்­ந­க­ரி­லுள்ள மத்­திய பள்­ளி­வா­சலில் கடந்த வாரம் வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற தொழு­கையில் கலந்து கொள்ளத் தவ­றி­ய­…

  9. 36.5 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட அரியவகை பந்தயக்கார் [ Saturday,6 February 2016, 05:23:14 ] உலகில் மிகவும் அரிதானதும், வரலாற்றுடையதுமான பந்தயக்கார் 35.6 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நேற்று வெள்ளிக்கிழமை இதற்கான ஏலவிற்பனை இடம்பெற்றுள்ளது. 1957ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சிவப்பு நிறத்திலான இந்த பந்தயக் கார் தலைசிறந்ததும், சிறப்பான நிலையிலும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக இந்த ஏலவிற்பனையை ஏற்பாடு செய்திருந்த மத்தியூ லேமோர் (Matthieu Lamoure) தெரிவித்துள்ளார். 35.6 மில்லியன் டொலர்களுக்கு இந்த பந்தயக்கார் விற்பனை செய்யப்பட்டிருப்பது ஒரு சாதனை என்று கருதுவ…

  10. தைவானில் பாரிய நிலநடுக்கம்: பலமாடிக் கட்டிடங்கள் இடிந்து வீழந்தன - 4 பேர் பலி: 06 பெப்ரவரி 2016 தைவானில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்கி 10 மாத குழந்தை உள்ளிட்ட நால்வர் பலியாகியுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தெற்கு தைவானின் தைனன் நகரில் அதிகாலை 4 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.4 ஆக ரிக்டர் அளவுகோளில் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால், நகரில் உள்ள 17 மாடிகளை கொண்ட 'வேய் குவான்' குடியிருப்பு கட்டடம் உள்பட பல கட்டடங்கள் சரிந்து விழுந்தன. இதனால், அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி அடித்தப்படி தங்களது வ…

  11. பிரான்ஸ்: பயங்கரவாத குற்றங்களுக்கு குடியுரிமையை பறிக்கும் சட்ட விவாதம் துவக்கம் பிரான்ஸ் நாடாளுமன்றம் அவையின் தோற்றம் பிரான்ஸின் அரசியல்சாசனத்தில் மாற்றம் கொண்டுவருவதற்கான விவாதத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் துவங்கியுள்ளது. புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள அரசியல் சாசனத்தில், பயங்கரவாத குற்றச் செயல்களில் தண்டனை விதிக்கப்பட்ட இரட்டை குடியுரிமையுடைவர்களின் பிரெஞ்சுக் குடியுரிமையை நீக்குவதற்கான பரிந்துரையும் வைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஆண்டு நம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து, அரசியல்சாசனத்தில் கொண்டுவரப்படவுள்ள மாற்றங்கள் பலவற்றில் ஒன்றாக இது இருக்கிறது. புதிய அரசியல் சாசனமானது, ஜிகாதி அச்சுறுத்தல்…

  12. 28 வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தையை வரவேற்கும் இத்தாலிய நகரம் வட இத்தாலிய நகரான ஒஸ்டானாவில் பிறந்த குழந்தையை நகரே ஒன்றுகூடி விழா எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது வடக்கு இத்தாலியில் உள்ள சிறிய நகரம் ஒன்று, 1980 க்கு பிறகு பிறந்துள்ள முதல் குழந்தையின் வரவை மகிழ்வுடன் கொண்டாடி வருகிறது. பீட் மாண்ட் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒஸ்டானா என்ற அந்த நகரின் மேயர், இந்த குழந்தையின் வரவு, தமது சிறு நகரின் ஒட்டுமொத்த சமூகத்தின் கனவு நனவானதை குறிப்பதாக தெரிவித்தார். கடந்த நூறு ஆண்டுகளில் அந்த பகுதியில் மக்கள் தொகை படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்திருக்கிறது. கடந்த வாரம் டூரின் மருத்துவமனையில் பிறந்த குழந்தை பாப்லோவின் வருகையை அடுத்து அந்த நகரில…

  13. இன்றைய நிகழ்ச்சியில்… - ஜிம்பாப்வேயில் பல இடங்களில் வறட்சி ஏற்பட்டு, ஏராளமானோர் பட்டினியால் வாட, நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. - சிரியாவின் மோதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தப்பி ஓடிக்கொண்டிருக்க, அண்டை நாடான லெபனானில் தஞ்சமடைந்த அகதிச் சிறார்கள் பகுதி நேர வேலைகளை செய்யும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். - விரும்பிய நேரத்தில் விரும்பிய நிகழ்ச்சியை எங்கிருந்தபடியும் பார்க்க புதிய தொழில்நுட்பம் வழிவிட, சிறு பிள்ளைகளிடையே டிவி பார்க்கும் பழக்கம் குறைந்துவருகிறது.

  14. இரட்டை கோபுர தாக்குதல் சதித் திட்டம் பின்லேடன் மூளையில் உதித்தது எப்படி?- புதிய தகவல்களை வெளியிட்டது அல்-காய்தா ஒசாமா பின் லேடன். | ஏ.பி. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சதித் திட்டத்தை ஒசாமா பின்லேடன் தீட்டியதற்கு எகிப்தைத் சேர்ந்த விமானி தூண்டுகோலாக இருந்திருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்ட 110 மாடி இரட்டை கோபுரங்களைக் கொண்ட உலக வர்த்தக மையத்தை அல்-காய்தா தீவிரவாதிகள் 2001 செப்டம்பர் 11-ம் தேதி விமானங் களை மோதி தகர்த்தனர். இந்த தாக்குதலில் 3 ஆயிரம் பேர் பலியாகினர். 6 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். அல்-காய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் தாக்குதலுக்கு மூளையாகச்…

  15. பசுவை வழிபடும் இந்துக்கள் கொல்லப்படுவர்! : ஐ.எஸ். தீவிரவாதிகளின் மிரட்டல்! இந்­தி­யாவில் பசுவை வழி­படும் இந்­துக்­களை கொலை செய்­யப்­போ­வ­தாக ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் மிரட்டல் விடுத்­துள்­ளனர். ஐ.எஸ். அமைப்பின் கொள்கை பரப்பு பத்­திரிக்­கை­யான தபிக்கில் தீவி­ர­வாதி ஒருவர் வழங்­கி­யுள்ள பேட்­டி­யி­லேயே மேற்­கண்­டவாறு தெரி­வித்­துள்ளார். அவர் அதில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, பசுக்­களை வழி­படும் இந்­துக்­களை குறிவைத்து கொலை செய்­வ­தற்­காக எமது ஐ.எஸ். அமைப்பில் கோரசான் என்ற தனிப்­படை அமைக்­கப்­பட்­டுள்­ளது. ஐ.எஸ். இயக்கம் இந்­தி­யாவின் ஜம்மு – காஷ்மீர் மாநி­லத்தில் நுழைய விரும்­பு­கி­றது இதற்­காக இந்­துக்­களை மட்டும் அல்ல ஷியா முஸ்­லிம்­க­ளையும் கொல்­வ…

  16. ஐரோப்பாவில் முதல் முறையாக ஸீகா வைரஸ் கண்டுபிடிப்பு [ Friday,5 February 2016, 05:33:28 ] ஐரோப்பாவில் முதல் முறையாக ஸீகா வைரஸ்சின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண் ஒருவர் ஸீகா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை ஸ்பெய்ன் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த கர்ப்பணிப் பெண் கம்போடியாவில் இருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்தார். கம்போடியாவில் இருந்த காலப்பகுதியில் அவர் ஸீகா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க நாடுகளில் பரவிவரும் ஸீகா வைரஸ்சினால் மூளைக் குறைபாடுகளுடைய குழந்தைகள் பிறக்கின்றன. நுளம்புகள் மூலம் இந்த வைரஸ் பரவிவருவதை உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலையாக உல…

  17. இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியா போரில் பாதிக்கப்பட்ட பல லட்சக்கணக்கான மக்களுக்கு உதவுவதற்கான கொடையாளிகளின் மாநாடு லண்டனில் நடக்கிறது. - சிரியா மற்றும் இராக்கிலிருந்து தப்பித்த ஐ எஸ் தளபதிகள் தம் நாட்டுக்கு வந்திருப்பதாகக் கூறுகின்றனர் லிபியாவின் உளவுத்துறை உயரதிகாரிகள். - நவுரு தீவுகளுக்கு அனுப்பப்படும் ஆபத்தை எதிர்நோக்கும் தஞ்சம்கோரிகளுக்கு அடைக்கலம் வழங்கப்போவதாக ஆஸ்திரேலிய திருச்சபைகள் கூறியுள்ளன.

  18. அசாஞ்சுக்கு சாதகமாக ஐநா தீர்ப்பு' விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சின் விவகாரத்தை ஆராய்ந்த ஐநா குழு அவருக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது. 'அசாஞ்சுக்கு சாதகமாக ஐநா தீப்பு' பிரிட்டன் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளால், தான் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் முறையிட்டிருந்தார். சுவீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்ப்பதற்காக அசாஞ்ச் லண்டனில் உள்ள ஈக்குடோரியன் தூதரகத்தில் 3 வருடங்களுக்கும் மேலாக தஞ்சமடைந்திருக்கிறார். சுவீடனில் ஒரு பாலியல் வல்லுறவு குறித்த குற்றச்சாட்டுக்கான விசாரணையை அவர் எதிர்கொள்கிறார். சட்டப்படி அமல்படுத்தப்பட முடியாத தமது முடிவு குறித்து …

  19. பறந்து கொண்டிருந்த விமானத்தில் வெடிப்புச் சம்பவம் பாரிய துளைக்கூடாக பயணி வீழ்ந்து உயிரிழப்பு! 2016-02-04 11:08:26 பறந்து கொண்­டி­ருந்த சோமா­லிய பய­ணிகள் விமா­ன­மொன்றில் ஏற்­பட்ட வெடிப்­பினால் அவ்­வி­மா­னத்தில் பாரிய துளை­யொன்று ஏற்­பட்­டுள்­ளது. அத்­ து­ளைக்கு ஊடாக பய­ணி­யொ­ரு­வரும் கீழே வீழ்ந்து இறந்­துள்­ள­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. டால்லோ எயார்லைன்ஸ் நிறு­வ­னத்­தினால் இயக்­கப்­பட்ட பிளைட் டி3159 எனும் மேற்­படி விமானம், நேற்­று­முன்­தினம் இரவு சோமா­லிய தலை­நகர் மொகா­டி­ஷு வி­லி­ருந்து டிஜி­பௌட்டி நாட்டின் தலை­நகர் டிஜி­பௌட்டி சிற்­றியை நோக்கிப் பறந்து­ கொண்­டி­ருந்­தது. …

  20. "பிரிட்டனில் கிறித்தவர்களைவிட இந்துக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்" பிரிட்டனில் மிகவும் சந்தோசமாக வாழ்பவர்கள் 65 தொடக்கம் 79 வயதானவர்களே பிரிட்டனில் வாழ்பவர்களில் 65 முதல் 79 வயது வரையானவர்கள் அதிக மகிழ்ச்சியோடிருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வயது வந்தவர்களில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று இதை பரிந்துரைத்துள்ளதாக தேசிய புள்ளிவிவர ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது. இந்த வயது இடைவெளியில் உள்ளவர்களே வாழ்க்கையில் நிறைவாகவும், மகிழ்வாகவும் இருப்பதோடு வாழ்க்கையில் முழுமை அடைந்ததாக கருதுவதாகவும் தெரிவிக்கும் இந்த ஆய்வு, ஆனால் இந்த உணர்வுகள் அனைத்தும் 80 வயதுகளில் குறைந்து விடுவதாகவும் தெரிவிகிறது. இதற்கு அவர…

  21. உலகின் மிகப்பெரிய கடிகார கோபுரம் மைசூருவில் அமைகிறது உலகிலேயே மிகப் பெரிய கடிகார கோபுரத்தை கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள தங்களது பயிற்சி மையத்தில் அமைக்கவிருப்பதாக இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. இன்ஃபோசிஸ் கட்டவுள்ள கடிகார கோபுரத்தின் மாதிரிப் படம் மைசூருவில் 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பன்னாட்டு கல்வி மைய வளாகத்தில் இந்தக் கோபுரம் அமைக்கப்படும் என இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. சுமார் 135 மீட்டர் உயரத்தைக் கொண்டதாக இருக்கும் இந்தக் கடிகாரக் கோபுரத்தின் அடித்தளம் 22 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும். லண்டனில் உள்ள பிக் பென் கடிகாரக் கோபுரம் 96 ம…

  22. உலகில் முதன்முறையாக 'ஸிகா' வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிப்பு: - இந்திய விஞ்ஞானிகள் சாதனை [Wednesday 2016-02-03 22:00] உலகில் முதன்முறையாக 'ஸிகா' வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இப்போது தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் ஸிகா வைரஸ், கால் பதித்துள்ளது. கர்ப்பம் தரித்த பெண்களை ஸிகா வைரஸ் தாக்கினால், பிறக்கக்கூடிய குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளை கொண்டிருக்கும். குறிப்பாக தலை சிறியதாக இருக்கும், மூளை பகுதியில் பாதிப்பு இருக்கும். பிரேசிலில் இப்படி ஏறத்தாழ 4,074 குழந்தைகள் சிறிய தலைகளுடன் பிறந்துள்ளதால், அங்கு பெண்கள் கர்ப்பம் அடைய வேண்டாம் என இப்போது அறிவுறுத்…

  23. இன்றைய நிகழ்ச்சியில்… - ஸீகா வைரஸ் உடலுறவு மூலம் பரவிய ஆபூர்வ சம்பவம், அமெரிக்காவில் நடந்துள்ளது. பொதுவாக இது கொசுக்களின் மூலமே பரவும். - அடைக்கலம் தேடிச் சென்ற தங்களை, ரகசிய ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு, மூன்றாவது நாடுகளில் கொண்டுபோய் இஸ்ரேல் தள்ளுவதாகக் கூறும் ஆப்பிரிக்க குடியேறிகளுடன் பேசியது பிபிசி. - ஒல்லிதான் பேஷன் என்ற காலம் மாறுகிறது. மிகவும் ஒல்லியாக இருக்கும் மாடல்களை ஃபேஷன் துறையில் பயன்படுத்த தடை கொண்டுவருகிறது பிரான்ஸ்.

  24. பங்களாதேஸில் போர்க்குற்றவாளிகள் 18 பேருக்கு இதுவரை மரண தண்டனை [ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2016, 03:46.15 AM GMT ] பங்களாதேஸ் நாட்டில் சுதந்திரப் போரின் போது போர்க்குற்றம் செய்ததாக தொடரப்பட்டுள்ள 22 வழக்குகளில் இதுவரை 18 பேர் போர்க்குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பங்களாதேஸ் நாட்டில் கடந்த 1971-ம் ஆண்டு சுதந்திரப்போர் நடந்த போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், அப்பாவி இந்து மக்களை கொடூரமாக கொன்று குவித்தனர். அங்கு அப்படி சுமார் 30 இந்துக்களை கொன்று குவித்ததுடன், 450 கடைகளுக்கு தீயும் வைத்ததாக பாகிஸ்தான் துணைப்படையான ரஜாக்கர் பானியின் ஒபைதுல் ஹக் தார் (வயது 66), அதாவுர் ரகுமான் நானி (62) ஆகிய இருவர் மீது குற்ற…

  25. பாகிஸ்தானில் இந்துக்கோவில் மீது தாக்குதல்: - சிறுபான்மை மக்களிடையே பதற்றம் [Wednesday 2016-02-03 08:00] பாகிஸ்தானின் துறைமுக நகரம் கராச்சி. அங்கு உயிரியல் பூங்காவின் அருகில் இந்துக்கோவில் ஒன்று உள்ளது. 60 ஆண்டுகள் பழமையான கோவில் இது.இந்த கோவிலுக்குள், சம்பவத்தன்று தாடியுடன் கூடிய 3 பேர், கைத்துப்பாக்கிகளுடன் நுழைந்தனர். அப்போது அங்கு அந்தக் கோவிலை கட்டியவர்களின் குடும்பத்தினரும், பராமரிப்பவர்களும் மட்டுமே இருந்தனர். அவர்கள், துப்பாக்கி ஏந்திய நபர்களைக் கண்டதும் என்ன நடக்கப்போகிறதோ என்று கலங்கினர்.அவர்களை நோக்கி அந்த நபர்கள், “கோவிலை விட்டு வெளியேறுங்கள், கோவில் வளாகத்துக்குள்ளே இருக்கக்கூடாது” என உத்தரவிட்டனர். அதில் அவர்கள் பயந்து போய் வெளியேறினர். பாகிஸ்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.