உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26889 topics in this forum
-
உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரியா தனது அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாமல் அந்த நாடு, இப்படி தான் நினைத்ததை நடத்திக்காட்டி வருவது உலக அரங்கை அதிர வைத்து வருகிறது. இதுவரை அணுக்குண்டுகளையும், அணு ஏவுகணைகளையும் சோதித்து பார்த்து வந்த வடகொரியா முதல் முறையாக அணுக்குண்டை விட அதிபயங்கரமான ஹைட்ரஜன் குண்டினை வெடித்து நேற்று சோதித்துள்ளது. இதற்கு உலக நாடுகள் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, “வடகொரியா ஹைட்ரஜன் குண்டுவெடித்து சோதித்திருப்பது நமது நாட்டுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதை முற்றிலும் சகித்துக்கொள்ள முடியாது” என கூறினார். மேலும் அவர் கூறும்போத…
-
- 0 replies
- 370 views
-
-
மீத்தேன் வாயு கசிவு எதிரொலி: கலிபோர்னியாவில் எமர்ஜென்சி அமலானது! லாஸ் ஏஞ்சல்ஸ்: அழிவை ஏற்படுத்தும் மீத்தேன் நச்சு வாயு கசிந்த சம்பவத்தையடுத்து, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. கலிஃபோர்னியா மாகாணத்தில் ‘சோகால் கேஸ்’ (Southern California Gas Company) எனப்படும் பிரபல தனியார் நிறுவனம் மீத்தேன் எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. 8 ஆயிரம் அடிக்கும் மேல் ஆழமுள்ள கிணற்றில் இருந்து கேஸ் கசிவது, கடந்த ஆண்டு அக்டோபர் 23 ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மீத்தேன் கசிவு, கடந்த நவம்பர் மாத இறுதியில் உச்சக் கட்டத்தை எட்டியது. இதனால் பெருமளவில் காற்று மாசு ஏற்பட்டு…
-
- 0 replies
- 509 views
-
-
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம்: சவுதிக்கு ஈரான் எச்சரிக்கை ஷியா பிரிவு மதத் தலைவர் நிமர் அல் நிமர் மரண தண்டனையை தொடர்ந்து ஈரானுக்கு சவுதிக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது. | படம்: ஏபி. தங்களது நாட்டுக்கு எதிராக தூதரக ரீதியான நெருக்கடி அளித்து எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம் என்று சவுதி அரேபியாவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக டெஹரானில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவித் ஸரீஃப் கூறும்போது, "ஈரானை எதிர்க்கும் முயற்சிகளை சவுதி எடுக்க வேண்டாம். எங்களது முயற்சி அனைத்துக்கும் சவுதி முட்டுக்கட்டை போட்டு வருகிறது. எங்களது அணுஆயுத ஒப்பந்தத்தை முதலாவதாக எதிர்த்தனர்.…
-
- 0 replies
- 643 views
-
-
ஹிரோஷிமாவை அழித்த அணுகுண்டை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு: நிபுணர்கள் தகவல் மே 21, 1956-ன் புகைப்படமான இதில் மார்ஷல் தீவுகளில் உள்ள நமூ தீவில் அமெரிக்கா சோதனை செய்த முதல் ஹைட்ரஜன் வெடிகுண்டு. | படம்: ஏ.பி. அணுகுண்டை விட சக்தி வாய்ந்தது ஹைட்ரஜன் குண்டு. இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டை விட ஹைட்ரஜன் வெடிகுண்டு ஆயிரம் மடங்கு சக்திவாய்ந்தது என்கின்றனர் நிபுணர்கள். அணுகுண்டைவிட மிகவும் சக்தி வாய்ந்த 'சூப்பர் வெடிகுண்டு' என்று கருதப்படும் ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக சோதித்ததாக வட கொரியா அறிவித்துள்ளதையடுத்து உலக நாடுகள் வடகொரியாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. …
-
- 2 replies
- 507 views
-
-
ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைய 100 பாகிஸ்தானியர்கள் சிரியா மற்றும் இராக்கில் ஊடுருவியுள்ளனர் என்று பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண சட்ட அமைச்சர் ரானா சனுல்லா கூறும்போது, “மத்திய கிழக்கு நாடுகளில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் உருவெடுத்ததிலிருந்து, பாகிஸ்தானிலிருந்து பெண்கள் உள்பட 100 பாகிஸ்தானியர்கள் சிரியா மற்றும் இராக்கில் ஊடுருவியுள்ளனர். பாகிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் வேரூன்றாமல் இருக்க அனைத்து விதமான தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு செய்துவருகிறது. பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் 8 ஜிகாதிகளை கைது செய்துள்ளோம். அவர்கள் ஜமாத்-உத்-தாவா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்கள். …
-
- 0 replies
- 379 views
-
-
தம்மாத்தூண்டு எறும்பு யானை காதுல பூந்து அம்மாம்பெரிய யானைக்கே ஆட்டம் காட்டும் தெரியுமா? என்று தமிழ் சினிமாவில் வரும் ஒரு பஞ்ச்(!!) டயலாக்கைப் போல், ஒரே ஒரு தேனீயால் பல மணி நேரம் காத்திருந்த விநோத சம்பவம் பயணிகளிடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலிருந்து கருடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம், நேற்று காலை 156 பயணிகளுடன் இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவுக்கு செல்ல தயாராக இருந்தது. விமானத்தை டேக் ஆப் செய்ய முயற்சிக்கும் போது, விமானத்தில் ஏதோ தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதை உணர்ந்த பைலட் விமானத்தை டேக் ஆப் செய்வதை உடனடியாக கை விட்டார். தொழில்நுட்ப அதிகாரிகள் சோதனை செய்தபோது விமானத்தின் முக்கிய பகுதியான பிடாட் கு…
-
- 0 replies
- 507 views
-
-
ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க ரஷ்யாவின் அதிர வைக்கும் ஆயுதத்தை பாருங்கள்! (வீடியோ) ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க, ரஷ்ய ராணுவம் திறமை வாய்ந்த ’எலிகள் ராணுவ படையை’ தயார்படுத்தி வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் Rostov on Don நகர அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், இந்த திட்டத்தில் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். எலிகளுக்கு நுகரும் சக்தி அதிகமாக உள்ளதால், அவற்றை ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரராக ராணுவத்தில் பயன்படுத்த ரஷ்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. எலிகளின் மூளையை இணைக்கும் ‘மைக்ரோசிப்’ ஒன்று, சிகிச்சையின் மூலம் தலைக்கு உள்ளே வைக்கப்படும். இதன் மூலம், எலிகளின் மூளை எவ்வாறு செயல்படுகிறது, தற்போது அது எதனை உணர்கிறது உள்ளிட்ட தகவல்கள் அந்த …
-
- 1 reply
- 743 views
-
-
பதான்கோட் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தேசிய பாதுகாப்பு படை அதிகாரியை பேஸ்புக்கில் இழிவுபடுத்திய கேரள வாலிபர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் மரணமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரான தேசிய பாதுகாப்பு படை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் குமார், தாக்குதல் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட பயங்கரவாதி ஒருவனின் உடலில் இருந்த வெடிகுண்டை செயல் இழக்க முயன்றபோது, அது வெடித்ததில் நிரஞ்சன் குமார் பலியாகியுள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த இவர் பெங்களூரில் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ராதிகா பெங்களூரில் மருத…
-
- 0 replies
- 468 views
-
-
புத்தாண்டு நிகழ்வுகளில் பாலியல் துஷ்பிரயோகம்; ஜேர்மனில் பெண்கள் ஆர்ப்பாட்டம் [ Wednesday,6 January 2016, 04:55:27 ] புதுவருடப் பிறப்பன்று இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி ஜேர்மனில் பெண்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜேர்மனின் கொலோன் நகரில் இவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுவருடப் பிறப்பன்று குறித்த நகரில் பெண்கள் சிலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டிருப்பதாகவும், சிலரது பொருட்கள் திருடப்பட்டிருப்பதாகவும் முறைப்பாடுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பில் தற்போதுவரை 90 முறைப்பா…
-
- 11 replies
- 538 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - ஹைட்ரஜன் அணுகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்ததாக வடகொரியா பிரகடனம் செய்தபோதிலும், அதன் கூற்றை நம்ப நிபுணர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். - குடியேறிகள் வருகையை கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட எல்லைக்கட்டுப்பாடு சுவீடன் நாட்டில் ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது குறித்த பிபிசியின் நேரடித் தகவல். - திராட்சை ரசம் மேட்டுக்குடி பானம் என்ற மனப்பாங்கு சீனாவில் மாறுகிறது. அங்கு அதன் விற்பனை சாதாரண மக்களையும் கவர்ந்திருக்கிறது.
-
- 0 replies
- 401 views
-
-
சவுதி அரேபியாவில் 45 அல் கொய்தா தீவிரவாதிகள் உள்பட 47 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அல் கொய்தா தீவிரவாதிகளின் தலைகளை துண்டித்து படுகொலை செய்த சம்பவத்துக்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக அந்நாட்டில் உள்ள முக்கிய சிறைகள் மீது தாக்குதல் நடத்தி தகர்க்கப்போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக, நேற்று வெளியிடப்பட்ட இணையவழி அறிக்கையில், சவுதி அரேபியாவில் உள்ள அல்-ஹய்ர் மற்றும் தரிஃபியா சிறைகளை அதிரடி மீது தாக்குதலால் தகர்த்தெறிவோம் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள அல்-ஹய்ர் சிறையின் அருகேயுள்ள சோதனைச்சாவடியில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் குண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு காரில்வந்த ஐ.எஸ்…
-
- 0 replies
- 562 views
-
-
சவுதி அரேபியாவின் மரண தண்டனைகளை இந்த உலகம் ஆதரிக்கிறதா? ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் புத்தாண்டை வரவேற்கிறார்கள். சிலர் கேக் வெட்டி, பலூன் வெடித்துக் கொண்டாடினார்கள். சவுதி அரேபியாவின் ஸ்டைல் சற்றே மாறுபட்டது. தலையை வெட்டி, துப்பாக்கியால் சுட்டு ரத்தக் கரங்களுடன் புத்தாண்டை வரவேற்றிருக்கிறது அந்நாடு. ஒரே நாளில் 47 குற்றவாளிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நாடு முழுவதிலும் உள்ள 12 சிறைச்சாலைகளைச் சேர்ந்த குற்றவாளிகள் கொல்லப்பட்டுவிட்டதாக கடந்த சனிக்கிழமை சவுதி அறிவித்துள்ளது. 8 சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகளின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. மிச்சமுள்ளவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த அசாதாரணமான நிகழ்வை உலகம் எப்படி எதிர்கொண்டிருக்கிறது? …
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஆத்திரமூட்டும் வட கொரியாவுக்கு பதிலடி: அமெரிக்கா சபதம் ஜான் கெர்பி. | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். வடகொரியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்கா சபதமிட்டுள்ளது. வட கொரியா ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையை செய்துள்ளதாக அறிவித்தது சர்வதேச நாடுகளை அதிர்ச்சியைடைய செய்துள்ளது. ஆனால், இதனை தங்களால் உறுதி செய்யமுடியவில்லை என ஐ.நா. அணு ஆயுத பரிசோதனை விரிவான தடை ஒப்பந்த அமைப்பும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமும் தெரிவித்துள்ளன. இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கெர்பி செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்தப் பிராந்தியத்தில் இருக்கும் தென் கொரியா உள்ளிட்ட அனைத்து நாடுகளின…
-
- 2 replies
- 567 views
-
-
வடகொரியாவில் நிலநடுக்கம்: 'ஹைட்ரஜன்’ குண்டு பரிசோதனை காரணமா? சியோல்: பேரழிவை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியதால் வடகொரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா,ரஷ்யா, உள்ளிட்ட நாடுகளில் மட்டும் ராணுவ உபயோகத்திற்காக ஹைட்ரஜன் குண்டுகள் இருக்கும் நிலையில், வடகொரியாவின் முதல் 'ஹைட்ரஜன்’ குண்டு பரிசோதனை வெற்றிகரமாக இன்று(புதன்) நடத்தப்பட்டுள்ளது.இது வடகொரியாவின் அணுசக்தி வளர்ச்சியில் ஒருமுக்கிய படியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ”வடகொரியா ஜனவரி 6-ம் தேதி காலையில் முதல் 'ஹைட்ரஜன்’ குண்டு பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது,” எ…
-
- 0 replies
- 825 views
-
-
கண்ணீர் சிந்திய ஒபாமாவால் பரபரப்பில் உலகம்! [ செவ்வாய்க்கிழமை, 05 சனவரி 2016, 09:58.23 PM GMT ] துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக பேசும் போது அமெரிக்க அதிபர் ஒபாமா கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் துப்பாக்கி சூட்டினால் பலியாகியுள்ளனர். எனவே இதை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிபர் ஒபாமா பொதுமக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த 2012ஆம் ஆண்டும் நியூடவுன் பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் 20 குழந்தைகள் பலியானார்கள். அந்த குழந்தைகளை பற்றி நினைக்கும்போது எல்லாம…
-
- 1 reply
- 562 views
-
-
அதி பயங்கர ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதித்து வட கொரியா பரபரப்பு வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். அணுகுண்டைவிட மிகவும் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக சோதித்ததாக வட கொரியா அறிவித்துள்ளது. ஏற்கெனவே கொரிய பிராந்தியத்தில் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என சர்வதேச நாடுகள் மற்றும் அமைதி அமைப்புகள் பலவற்றால் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் வட கொரியா ஹைட்ரஜன் வெடிகுண்டை சோதித்துள்ளது. வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன், தங்கள் நாடு ஹைட்ரஜன் வெடிகுண்டை தயாரித்துள்ளதாக கடந்த டிசம்பர் மாதமே அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று (புதன்கிழமை) ஹைட்ரஜன் வெடிகுண்டை வ…
-
- 0 replies
- 529 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - ஐ எஸ் அமைப்பின் அண்மைய வீடியோவில் தோன்றிய முக்கிய சந்தேக நபர், பிரிட்டனில் இந்துக் குடும்பத்தில் பிறந்து மதம் மாறியவர். - அமெரிக்காவில் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமையில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அதிபர் ஒபாமா நடவடிக்கை. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் விதிகளை அறிமுகப்படுத்த திட்டம். - சட்டவிரோத வேட்டையால் அழிந்துவரும் காண்டாமிருகங்களை காப்பாற்ற, தடுமாறும் தென்னாப்பிரிக்கர்களின் பிரயத்தனம்.
-
- 0 replies
- 362 views
-
-
துருக்கிய கடற்கரையில் குடியேறிகளின் சடலங்கள் துருக்கியின் ஏகியேன் கடற்கரையில் குறைந்தது 21 குடியேறிகளின் உடல்கள் கரையொதிங்கியுள்ளதாக துருக்கிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பல ஆபத்துக்களுக்கு இடையேயும் பலர் ஐரோப்பா நோக்கி வருகின்றனர் இவர்களில் சிறார்களும் அடங்குவர் எனக் காவல்துறையினர் கூறுகின்றனர். இந்தக் குடியேறிகள் இரண்டு தனித்தனி படகுகளில் கிரேக்கத் தீவான லெஸ்போஸை அடைய முயற்சித்த போது, மோசமான வானிலை காரணமாக அந்தப் படகுகள் கவிழ்ந்தன என துருக்கிய ஊடகங்கள் கூறுகின்றன. துருக்கிய நகர்களாக அய்வலெக் மற்றும் டிக்கிலி நகரங்களுக்கு அருகே அவர்களின் உடல்கள் கிடைத்தன என்று கூறப்படுகிறது. கொந்தளிப்பான கடல் ஒன்றின் மணற்பாங்கான கடற்க…
-
- 0 replies
- 595 views
-
-
ஒரு சக்கரத்தில் விமானங்கள் ஓடுதளத்தில் இறங்கிய பயங்கரம் (வீடியோ) இங்கிலாந்தில் உள்ள விமான நிலையத்தில் சூறைக்காற்று வீசியதை தொடர்ந்து பல விமானங்கள் ஓடுபாதையில் இறங்க முடியாமல் போராடிய அதிர்ச்சி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இங்கிலாந்தில் உள்ள பிர்மின்கம் விமான நிலையத்தில்தான் இந்த அதிர்ச்சி காட்சிகள் நிகழ்ந்துள்ளன. சில நாட்களுக்கு முன்னர் வடக்கு இங்கிலாந்தை ஈவா மற்றும் பிராங்க் என பெயரிடப்பட்ட இரண்டு புயல்கள் தாக்கியதோடு, மழை கொட்டி தீர்த்தது. எனினும், இந்த இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு முன்னதாகவே பிர்மின்கம் விமான நிலையத்தில் கடுமையான வேகத்தில் காற்று வீசியுள்ளது. இவ்வாறு சூழ்நிலையில் ஓடுதளத்தில் இறங்க வந்த பல விமானங்கள் பெரும் போராட்டத…
-
- 0 replies
- 505 views
-
-
இவரின் கோபம்தான் பதன்கோட் தாக்குதலுக்கு காரணம்? புதுடெல்லி/இஸ்லாமாபாத்: பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவ தளபதி உள்ளதாகவும், நரேந்திர மோடிக்கும், நவாஸ் ஷெரீப்புக்கும் இடையேயான நட்பால் கோபமுற்றே அவர் தீவிரவாதிகளை தூண்டிவிட்டு இந்த தாக்குதலை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில் திடீரென பாகிஸ்தான் சென்றார். கடந்த டிசம்பர் 25 -ம் தேதியன்று நவாஸ் ஷெரீஃபுக்கு 66-வது பிறந்த நாளாகும…
-
- 1 reply
- 901 views
-
-
திருமணமாகி 45 நாட்கள்தான்... பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பஞ்சாப் மாநிலம் பதன் கோட்டில் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களில், ஹரியானா மாநிலம் அம்பாலாவைச் சேர்ந்த இளம் வீரர் குருசேவக்சிங்கும் ஒருவர். 'திருமணமாகி 45 நாட்களிலேயே தாய்நாட்டுக்காக தன் உயிரை அர்ப்பணித்த அந்த மாவீரனை பெற்றதற்காக பெருமிதம் கொள்கிறோம்' என நெகிழ்கின்றனர் குருசேவக்சிங்கின் பெற்றோர். ஹரியானா மாநிலம், அம்பாலா அருகே உள்ளது ஹர்நாலா கிராமம். இது பஞ்சாப் மாநில எல்லையையொட்டியது. இக்கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி சுசாசிங், தன் 2 மகன்களையும் நாட்டுக்காக ராணுவத்துக்கு அர்ப்பணித்துவிட்டார். சுசாசிங்கின் இளைய மகன் குருசேவக்சிங்த…
-
- 0 replies
- 682 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - ஷியா மதகுருவுக்கு சவுதி மரண தண்டனை நிறைவேற்ற, மேலோங்கியது இரானின் ஆத்திரம்! ராஜீய உறவுகளைத் துண்டித்து இரானிய அதிகாரிகள் வெளியேற சவுதி விதித்தது காலக்கெடு! - இஸ்லாமிய அரசுக்கு எதிரான கடும் சண்டை நடக்கும் இராக்கின் ரமாடி நகரில் பிபிசி! போர் முன்னரங்கிலிருந்து மக்கள் நிலை குறித்து நேரடித் தகவல்! - நடக்கவே முடியாமல் போனாலும், உள்ளத்து உறுதியால் அக்ராவில் சக்கரம் கட்டிக்கொண்டு பந்து விளையாடும் போலியோ பாதித்தவர்கள்!
-
- 0 replies
- 455 views
-
-
பஞ்சாப் - பதான்கோட் தாக்குதலுக்கு ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் பொறுப்பேற்பு பதான்கோட் விமானப்படை தளத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள். | படம்: ஏ.எஃப்.பி. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் (United Jihad Council-UJC) பதான்கோட் தீவிரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இது குறித்து ஸ்ரீநகரில் உள்ள செய்தி நிறுவனத்துக்கு ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் செய்தித் தொடர்பாளர் சையத் சதாகத் ஹுசைன் தெரிவித்துள்ள தகவல்களின் படி, 'ஹைவே ஸ்குவாட்' என்ற அமைப்புடன் தொடர்புடைய காஷ்மீர் தீவிரவாதிகள் பதான்கோட் விமான தளத்தை தாக்கியுள்ளனர். “இந்திய அரசும் அதன் ஊடகங்களும் பாகிஸ்தான் வெறுப்பில் உழன்று வருகின்றன.…
-
- 0 replies
- 574 views
-
-
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றனர். தங்களிடம் பிடிபடும் பிணைக்கைதிகளை கொடூரமான முறையில் கொலை செய்து வீடியோ மூலம் அச்சுறுத்தி வருகின்றனர். சிறிது காலமாக கொலை வீடியோ வெளியிடாமல் இருந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் சமீபத்தில் மீண்டும் ஒரு வீடியோவை ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர். அதில் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் சர்வதேச படைகளுக்கு உதவும் 5 உளவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் ரக்காவில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை. இந்த வீடியோவில் இங்கிலாந்தில் ஒரு ஐ.எஸ்.தீவிரவாதி பேசி இருக்க…
-
- 0 replies
- 531 views
-
-
ஒரு ட்விட்டுக்கு ஒரு டாலர் : திட்டினால் நன்கொடை தரும் பெண்! யாரோ ஒருவர் போட்ட ஸ்டேடஸை தேடி பிடித்து, கமெண்ட் போட்டு சண்டையும் போடும் இந்த காலத்தில், தன்னை தீவிரவாதிகளாக சித்தரிப்பவர்களுக்கு வேறுவிதத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார் ஒரு இஸ்லாமிய பெண். ஆஸ்திரேலியாவை சார்ந்த சூசன் கார்லாண்ட். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவருக்கு ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறு, ஐஎஸ்ஐஎஸ்சுடன் உனக்கு தொடர்பு இருக்கிறது, நீ ஒரு ஜிஹாதி என சராமரியாக இவரை குறிவைத்தன சில ட்வீட்கள். நாள்தோறும் நூற்றுக்கணக்கான எதிர்ப்பு ட்வீட்கள் சூசனுக்கு குவிந்தன. தன்னை ஒரு தீவிரவாதி போல சித்தரிக்கும் சமூகத்தை மாற்ற இயலாமல் அவர்களை சூசன் ப்ளாக் செய்தார். ஒரு சில முறை அவர்கள் சொல்வத…
-
- 0 replies
- 573 views
-