Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆப்கான் விமான நிலையம் அருகே தற்கொலைப்படை தாக்குதல்: ஒருவர் பலி, 13 பேர் படுகாயம் காபூலில் தாலிபான்கள் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்திய பகுதி.| படம்: ஏபி. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தற்கொலைப்படை தாக்குதலில் ஒருவர் பலியானார். மேலும் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். காபூல் விமான நிலையம் அருகே காலை வேளையில் மர்ம நபர் ஒருவர் தான் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் ஒரு சிறிய ரக பேருந்து வெடித்துச் சிதறியது. இந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும் 13 பேர் காயமடைந்ததாக காபூல் போலீஸார் தெரிவித்தனர். தாலிபான் தீவிரவாதிகள் ஆப்கானின் பல…

  2. சீனாவில் 2016-ம் ஆண்டு முதல் தம்பதிகள் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீன அரசு அதிகாரபூர்வமாக அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா இருந்து வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணகெடுப்பின் படி அந்நாட்டின் மக்கள் தொகை சுமார் 136 கோடி ஆக இருப்பது தெரியவந்தது. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக "நாம் ஒருவர் நமக்கு ஒருவர்" என்ற திட்டத்தை 1979ல் சீன அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். இந்த சட்டத்தை மீறுவோருக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதுடன், அபராதமும் விதிக்கபட்டது. இந்நிலையில் சீனாவில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து இளைஞர்களின் எண்ணிக்க…

  3. உலகில் உள்ள மற்ற நாடுகளை விட இந்திய பெண்கள் மீண்டும் மீண்டும் கருச்சிதைவால் பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மும்பையை சேர்ந்த மகப்பேறியல் மருத்துவர் இதனை கண்டறிந்துள்ளார். 2,400 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 32 சதவீதம் பெண்கள் கருச்சிதைவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. மருத்து வசதியில்லாமல் கருச்சிதைவு அல்லது தொடர்ச்சியாக கருக்கலைப்பு உலக அளவில் 10 சதவீதம் பெண்கள் மேற்கொள்கின்றனர் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ”தொடர்ச்சியான கருச்சிதைவால் இந்தியாவில் 7.46 சதவீதம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக மரபணு, வரலாற்று ரீதியான காச நோய் போன்றவற்றால் பெண்களின் கருப்பைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.” என்று…

  4. 'பொறுமையிருங்கள், கடவுள் உங்களுடனிருக்கிறார்": ஐ.எஸ் தலைவர் மோதல் களங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவுக்கு ஏற்பட்டுவரும் பின்னடைவைத் தொடர்ந்து, போராளிகளுக்க உத்வேகமூட்டுவதற்கான முயற்சியாக, போராளிகளுக்கான செய்தியொன்றை, அக்குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி அனுப்பிவைத்துள்ளார். 'இஸ்லாமிய தேசத்தின் (ஐ.எஸ்) போர்வீரர்கள், பொறுமையாக இருங்கள், ஏனெனில், நீங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறீர்கள்" என, அச்செய்தி குறிப்பிடுகிறது. 'பொறுமையிருங்கள், ஏனென்றால், கடவுள் உங்களுடனிருக்கிறார்" என அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது. இச்செய்தியில், பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான மோதல் குறித்தும், செய்தி வெளியிடப்பட்டுள்ள…

  5. ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மன்மோகன் கனவை நனவாக்கிய மோடி! - [Sunday 2015-12-27 10:00] தீடீர் பாகிஸ்தான் பயணம் மூலம் முன்னாள் பிரதமர் மன்மோகனின் 9 ஆண்டு கால கனவை தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி நனவாக்கியதாக பேசப்படுகிறது. கடந்த 2007-ல் அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசும்போது தனது கனவை பகிர்ந்துகொண்டார். அவர் கண்ட கனவை 9 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளார். டெல்லியில் அப்போது நடந்த ஒரு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது, "நாம் நமது தேசிய அடையாளங்களை எந்த வகையில் நினைவில் கொள்ளப்போகிறோம் என்ற வகையிலான கனவை ஒரு நாள் நான் கண்டேன். ஒருவர் தனது கால…

    • 3 replies
    • 861 views
  6. சீனாவில் விழுந்துபோயுள்ள சுரங்கத்தின் உரிமையாளர் தற்கொலை விபத்து நடந்த ஜிப்சம் சுரங்கம் சீனாவின் கிழக்கில் ஷன்டொங் மாகாணத்தில் அண்மையில் விபத்து நடந்த ஒரு ஜிப்சம் சுரங்கத்தின் உரிமையாளர் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டுள்ளார் என சீனாவின் அரச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இரண்டு நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள பதினேழு பணியாளர்களை சென்றடைய மீட்புக் குழுக்கள் தொடர்ந்தும் முயன்றுவருகின்றனர். வேறு பலர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கட்டுமானப் பணிகளில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்ற பெயரில் பயன்படுத்தப்படும் ஜிப்சம் தோண்டியெடுக்கப்படும் சுரங்கம் இது. கடந்த ஓராண்டில் சீனாவில் சுரங்க விபத்துகளில் தொள்ளாயிரம் பேருக்கும் …

  7. அமெரிக்கா: சுழல்காற்றிலும் சூறாவளியிலுமாக இருபத்து ஆறு பேர் பலி அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் நாட்டின் தெற்கே பல இடங்களில் ஏற்பட்ட கடுமையான வானிலை சீற்றங்கள் காரணமாக குறைந்தது இருபத்து ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். டெக்ஸாஸ் மாகாணம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கே டல்லாஸ் பகுதியில் டொர்னேடோ சுழல்காற்று வீசி, சாலைகளில் இருந்து வாகனங்களை வீசியெறிந்துள்ளது. அவ்வூரின் கார்லண்ட் என்ற புறநகர்ப் பகுதியில் நெடுஞ்சாலையிலிருந்து கார்கள் வீசியெறியப்பட்டதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மின் கம்பங்களும் கம்பிகளும் பிடுங்கியெறியப்பட்டதால், ஐம்பதாயிரம் பேர் வரையிலானோருக்கு மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. டெக்ஸாஸுக்கு கிழக்…

  8. Started by நவீனன்,

    பெல்ஜியம் - 1 பெல்ஜியம் நகரில் உள்ள மன்னரின் அரண்மனை. பெல்ஜியம் சாக்லெட்டுகள் உலகப்புகழ் பெற்றவை. பெல்ஜியத்தில் உருவான ‘டின்டின்’ என்ற காமிக்ஸ் கதாபாத் திரம் பல குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். பெல்ஜியம் பீர் புகழ் பெற்றது. பெல்ஜியத்தில் உள்ள தொன்மை யான, அற்புதமான கட்டிடங்களைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். ஆனால் இதையெல்லாம் புறம் தள்ளும்படி சமீப காலத்தில் பெல் ஜியம் வேறு ஒன்றுக்காக செய்தி களில் இடம்பெற்று வருகிறது. இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பெல்ஜியம் அடைக்கலமாகிறது! சமீபத்தில் பிரான்சின் பல பகுதி களில் கோரத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் பெல்ஜிய நாட்டிலிருந்து வந்த வர்கள் என்பதுதான் அ…

  9. மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து சென்னையை சிக்குமுக்காடச் செய்தது மழை. அதேபோன்று பிரித்தானியாவிலும் கனமழையினால் மான்செஸ்டர் நகர் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பிரித்தானியாவில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று விடாமல் மழை பெய்தது. அடுத்த நாள் காலை வரை தொடர்ந்த மழை காரணமாக ஏராளமான நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வடக்கு பிரித்தானியாவில் உள்ள லங்கஷியர், யோர்க்‌ஷியர், மான்செஸ்டர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால் பிரித்தானியாவில் வானிலை ஆய்வு மையம் ஒரே நாளில் 2 முறை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலு…

  10. உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் பகட்டுகளை கைவிட்டு, எளிமையான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்று புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் தன்னுடைய நத்தார் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். நத்தார் தினத்தையொட்டி வத்திக்கானிலுள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் புனித பாப்பரசர் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றினார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். புனித பாப்பரசர் தெரிவித்துள்ளதாவது, “நவீன சமூகத்தின் ஆடம்பர வாழ்க்கையால், பொருள்களை வாங்கிக் குவிக்கும் மோகம் அதிகரிக்கிறது. சொத்து சேகரிப்பதிலும், பொருளாதாயத்திலும் மட்டுமே சுகம் கிடைக்கும் நிலை ஏற்படுகிறது. தன்னலம் பெருகுகிறது. எளிமையான, சமநிலை கொண்ட, தேவைக்கு மிகாத வாழ்க்கை முறையையை கிற…

  11. மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? பிரதமர் மோடியின் நேற்றைய திடீர் பாகிஸ்தான் பயணம் எல்லோர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், ஆர்.எஸ்.எஸில் இருந்து வந்த மோடி, பாகிஸ்தான் குறித்த தனது கருத்தை மாற்றிக் கொண்டாரா என்ற விவாதம் பரபரக்கிறது. இந்நிலையில் மோடியின் திடீர் பயணத்திற்கு வேறொரு ரகசிய காரணம் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அன்று பாகிஸ்தானிற்கு சென்றது மோடி மட்டுமல்லவாம்; சஜ்ஜன் ஜிண்டால் என்பவரும் அன்று பாகிஸ்தான் சென்றதுதான் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. யார் அந்த சஜ்ஜன் ஜிண்டால்? சஞ்சன் ஜிண்டால் இந்தியாவைச் சேர்ந்த ஜே.எஸ்.டபுள்யூ ஸ்டீல் என்ற நிறுவனத்தின் இயக்குனர். இவர் தான் இந்த இரு பிரதமர்களுக்கும் இட…

  12. யார்மூக்கிலிருந்து சிரிய கிளர்ச்சியாளர்களை வெளியேற்றும் பணி நிறுத்தம் யார்மூக் முகாமில் உள்ள கிளர்ச்சிக்காரர்களை வெளியேற்றும் நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் தெற்கில் உள்ள யார்மூக் அகதிகள் முகாமிலிருக்கும், சிரிய அரச எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் வெளியேற்றும் நடவடிக்கை தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஐஎஸ் அமைப்பைச்சேர்ந்த சிலரும், அல் நுஸ்ரா முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிலரும், அவர்களது குழுக்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு அனுப்பப்படுவதற்கான பேருந்துகள் ஏற்கனவே முகாமுக்கு வந்துசேர்ந்துவிட்டன. அந்த முகாமில் சிக்கியுள்ள பொதுமக்களுக்குத் தேவையான அவசர உதவிப் பொருட்களை ஐநா வழ…

  13. "சிரிய ராணுவ வான் தாக்குதலில் கிளர்ச்சிக்குழுத் தலைவர் கொல்லப்பட்டார்" சிரிய இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் மூத்த கிளர்ச்சித் தலைவர் ஸஹ்ரூன் அலூஷ் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது சிரியாவில் வெள்ளியன்று தாம் நடத்திய வான்தாக்குதலில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுவின் மூத்தத் தலைவர்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த வான் தாக்குதல்கள் ரஷ்ய போர்விமானங்களால் நடத்தப்பட்ட தாக்குதல் என்று சிரிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர். தலைநகர் டமாஸ்கஸில் கிளர்ச்சிக்குழுக் கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டம் ஒன்றில், அந்த கிளர்ச்சிக்குழு தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூத்தத் தலைவர் ஸஹ்…

  14. ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் 100 வீடுகள் எரிந்து நாசம் ஆஸ்திரேலிய காட்டுத்தீயை அணைக்க அரசு கட்டமைப்பு போராடிவருகிறது ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் எரிந்து நாசமாயின. இதில் பிரபல சுற்றுலா நகரங்களான வைரிவர் மற்றும் செபரேஷன் கிரீக் ஆகிய இரண்டு நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலங்களை இந்த காட்டுத்தீ பாதித்துள்ளது மேலும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயணிக்கும் Great Ocean Roadஉம் இந்த காட்டுத்தீயால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வேகமாக பரவிய காட்டுத்தீயின் தீவிரம் காரணமாக இந்தப் பகுதிகளில் வசித்த பலரும் அங்கே சென்றிருந்த சுற்றுலாப்பயணிகளும்…

  15. தென்அமெரிக்க நாடுகளில் வெள்ளப்பெருக்கு: ஒன்றரை லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம் ----------------------------------------------------------------------------------- பராகுவே, அர்ஜென்டினா, உருகுவே, பிரேசில் நாடுகளில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். கோடை காலத்தில் பெய்த கடுமையான மழையின் காரணமாக ஆறுகள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் பராகுவே கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அங்கு நெருக்கடி நிலை அமல்படுத்தப்படுவதாக அதிபர் ஹொராசியோ கார்டே அறிவித்துள்ளார். நிவாரண உதவிகளுக்காக 230 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டிருக்கிறது. …

  16. நவாஸ் ஷெரீப் தாயார் காலை தொட்டு ஆசி பெற்ற பிரதமர் மோடி! லாகூர்: பாகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி, அங்கு நவாஸ் ஷெரீப்பின் தாயார் காலை தொட்டு வணங்கி ஆசி பெற்றார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்ப இருந்த நிலையில் நேற்று, திடீர் பயணமாக பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்றார். லாகூர் விமான நிலையம் சென்றடைந்த அவரை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்டித்தழுவி வரவேற்றார். நவாஸ் ஷெரீப்க்கு நேற்று பிறந்த நாள் என்பதால், அவருக்கு பிரதமர் மோடி, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன் பின் நவாஸ் ஷெரீப், தனி ஹெலிகாப்டர் மூலம் மோடியை லாகூரின் புறநகர் பகுதியில் உள்ள தனது ரைவிண்ட் மாளிகைக்கு அழைத்துச் சென்றார். அங்…

  17. ஆப்கனில் பூகம்பம்: ரிக்டர் அளவிவல் 6.5 ஆக பதிவு காபூல்: ஆப்கானிஸ்தான் - தஜகிஸ்தானை மையமாக வைத்து பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து உடனடி தகவல் இல்லை. http://www.dinamalar.com/news_detail.asp?id=1418966 வட இந்தியாவிலும் நில அதிர்வு உணரப்பட்டது புதுடில்லி: தஜிகிஸ்தான் - ஆப்கன் எல்லையை மையமாக வைத்து ஏற்பட்ட பூகம்பம், காஷ்மீர், டில்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் முழுவதும் உணரப்பட்டது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். …

  18. ஐரோப்பாவின் நம்பிக்கை! ஜெர்மனி என்றதுமே அடால்ஃப் ஹிட்லரின் முகம் நினைவுக்கு வந்தால் நீங்கள் இன்னும் வரலாற்றிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். வெளியே வாருங்கள். நிகழ்காலத்தில் நவீன ஜெர்மனியின் நிஜ முகம் அதன் சான்ஸிலர் (பிரதமர்) அங்கலா மெர்கெல் (Angela Merkel). ஜெர்மனிக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கான நம்பிக்கையூட்டும் ஒரே முகமாகவும் அறியப்படுபவர். `Person of the Year - 2015’ என தன் அட்டையில் பிரசுரித்துப் பெருமிதப்படுத்தி யிருக்கிறது `டைம்' பத்திரிகை. மேற்கு ஜெர்மனியில் பிறந்து, கிழக்கு ஜெர்மனியில் வளர்ந்தவர் மெர்கெல். சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்த கிழக்கு ஜெர்மனியில் கெடுபிடிகள் அதிகம். கருத…

  19. ஐ.எஸ். தீவிரவாதிகள் உடல் உறுப்புகள் தோண்டி எடுக்க ஒப்புதல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பத்வா எனப்படும் மார்க்க தீர்ப்பு அடங்கிய ஆவணங்களை அமெரிக்க உளவு நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கிழக்கு சிரியாவில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது கைப்பற்றப்பட்ட இந்த ஆவணங்களில் அவர்களின் ஆதரவாளர்களின் உயிரை காப்பாற்ற, சிறைப்பிடித்து வைத்துள்ளவர்களின் உடலில் இருந்து உறுப்புகள் தோண்டி எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்புகள் தோண்டி எடுக்கும்போது அந்த குறிப்பிட்ட நபரின் உயிர் போனால் அதுபற்றி கவலைப்பட தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளதுமேற்கூறிய தகவல்களை வைத்து பார்க்கும் போது…

  20. இன்றைய நிகழ்ச்சியில்… - உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் - கிறிஸ்துமஸ் கொண்டாடும் வேளையில், மக்கள் பொருளாசையை துறக்க வேண்டும் என்கிறார் போப் பிரான்சிஸ். - கனவுகளோடு ஜெர்மனிக்கு சிரியாவிலிருந்து ஜெர்மனிக்கு சக்கர நாற்காலியில் வந்த அகதி நூஜின் முஸ்தஃபாவுக்கு புது இடமும், புதுப் பருவமும், புதுவாழ்க்கையைத் தந்ததா? - கை கடுக்க வேலை செய்பவர்களுக்கு கைகொடுக்கும் அமைப்பு- மெக்சிக்கோவில் வீட்டுவேலை செய்வோரின் உரிமைகளுக்காக போராடும் ஒரு தொழிற்சங்கம்!

  21. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது தேசியப் பணியாகும் என குறிப்பிட்டுள்ள சிவசேனா, ராமரின் ஆசியால் பதவிக்கு வந்தவர்கள் அயோத்தியில் கோவில் கட்டத் தொடங்கும் தேதியை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் இன்று வெளியிடப்பட்டுள்ள தலையங்க கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:- அயோத்தியில் நமக்கு ஒரு ராமர் கோவில் வேண்டும். ஆனால், நமது கடவுளான ராமர், வெளியேற்றப்பட்டவராக ஒதுக்குப்புறமாக ஒரு கூடாரம் போன்ற கோவிலில் வாழ வேண்டியுள்ளது. ராமர் கோவிலுக்கு நேர்ந்துள்ள இந்த நிலைமை குறித்து அதிகாரத்தில் உள்ளவர்கள் வெட்கப்பட வேண்டும். ராமரின் ஆசியால் அதிகாரத்துக்குவந்து முக்கிய பதவிகளை வகித்து வருபவர்கள் ர…

  22. உலகை உறையவைத்த தீவிரவாத தாக்குதல் - 2015 ஒவ்வொரு வருடமும் உலகம் ஏதேனும் ஒரு வகையில் மாறுதலுக்கு உள்ளாகிக் கொண்டே வருகிறது. ஆனால் எந்த மாற்றமும் அடையாமல் பல வருடங்களாக இறவா நிலையுடன் சில பழக்கங்கள் மட்டும் நம்முடன் தொடர்ந்து வருகிறது. அப்படி இறவா நிலையுடன் இருக்கும் பழக்கங்களில் முதன்மையானது காதல். காதலுக்கு அடுத்த படியான நிலையில் இருப்பதுதான் தீவிரவாதம். பலவருடங்களாக உலகை ஏதோ ஒரு வகையில் இந்த தீவிரவாதம் ஆட்டுவிக்கிறது. ஒவ்வொரு நாளும் உலகின் எங்கோ ஒரு பகுதியில் வாழும் மக்கள் ஏதோ ஒரு வகையில் தீவிரவாத தாக்குதல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள், பெண்கள் கடத்தப்படுகிறார்கள், குழந்தைகள் இருக்கும் பள்ளிக்கூடங்களில் குண்டுகள் வெடிக்கின்றன,துப்பாக்கி சூடுகள் நடத்தப…

  23. "பாலியல் அடிமைகள்" பிரச்சினையைத் தீர்க்க ஜப்பான் முன்னெடுப்பு இரண்டாம் உலகப் போர் காலத்தில், கொரியப் பெண்களை ஜப்பான் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தது தொடர்பில், இரு நாடுகளுக்கும் இடையே மிகநீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர ஜப்பான் முயற்சிகளை எடுத்து வருகிறது. "பாலியல் அடிமைகள்" பிரச்சினை இன்னும் தென் கொரியாவில் உணர்வுபூர்வமான ஒரு விஷயமாகவே உள்ளது. இச்சர்ச்சைத் தொடர்பில் அரச நிதியம் ஒன்றை ஜப்பான் ஏற்படுத்துவதற்கு திட்டங்களைத் தீட்டியுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. "சுகமளிக்கும் பெண்கள்" எனக் கூறப்பட்ட இந்தக் கொரியப் பெண்கள், ஜப்பானிய இராணுவத்தின் விடுதிகளில் பாலியல் அடிமைகளாக பலவந்தமாகப் பயன்படுத்தப்பட்டனர். சோலி…

  24. நைஜீரியாவில் ஒரு எரிவாயு டேங்கர் லாரி வெடித்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த விபத்து நடந்ததால் 100க்கும் மேற்பட்டோர் பலியாயினர். தென்கிழக்கு நைஜீரியாவில் சமையல் எரிவாயு தொழிற்சாலை அருகே இச்சம்பவம் நடடந்துள்ளது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொழிற்சாலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நிரப்ப வந்தவர்கள் விபத்தில் சிக்கினர். தீயணைப்பு நிர்வாகம், விபத்தை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது எனினும் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்தன்று அங்கு நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=147755&category=WorldNews&language=tamil

  25. பாகிஸ்தானுக்கு நரேந்திர மோடி திடீர் விஜயம் பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு திடீர் விஜயம் மேற்கொள்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானுக்கான தனது முதலாவது பயணத்தை இன்று மேற்கொண்டுள்ளார். முன்னறிவிப்பில்லாத திடீர் விஜயமாக பாகிஸ்தானின் லாஹூர் நகருக்கு அவர் சென்றுள்ளார். இந்த திடீர் விஜயம் தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்ட அவர், பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷரிப்பை இன்று மதியம் லாகூரில் சந்திக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார். அத்துடன் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நவாஸ் ஷரிப்புக்கு தான் வாழ்த்து தெரிவித்ததாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று மதியம் பாகிஸ்தானின் லாஹோர் நகருக்கு செல்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.