உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26901 topics in this forum
-
இன்றைய நிகழ்ச்சியில்… - மாலி தலைநகர் பமாகோவில் பயங்கரவாதத் தாக்குதல்! ஹோட்டல் ஒன்றை தாக்கியுள்ள துப்பாக்கிதாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட பணயக்கைதிகள் பெரும்பான்மையானோர் விடுவிப்பு! - பாரிஸ் பயங்கரவாத தாக்குதல் நடந்து ஒரு வாரம் ஆகும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை பாதுகாப்பை கடுமையாக்கவும், ஐரோப்பிய பிரஜைகளையும் தேச எல்லைகளில் பரிசோதிக்கவும் ஐரோப்பிய அமைச்சர்கள் ஒப்புதல்!
-
- 0 replies
- 673 views
-
-
பிரான்சின் , பாரிஸ் நகர தாக்குதல் திட்டத்தை தீட்டியவர் என கருதப்படும் அப்துல்ஹமீட் அபாவுட் கொல்லப்பட்டமையை பிரான்ஸ் நேற்று அறிவித்தது. 27 வயதான , பெல்ஜியப் பிரஜையான அவரின் மரணம் , மரபணு பரிசோதனைகளின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. 'செயிண்ட் - டெனிஸில் ' இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போதே இவர் கொல்லப்பட்டுள்ளார். சுமார் 6 மணித்தியால துப்பாக்கிச் சண்டையின் பின்னரே அபாவுட் கொல்லப்பட்டுள்ளார். ஸ்னைபர் தாக்குதல் நடத்தப்பட்ட துடன் , கைக்குண்டுகள் வெடிக்கவைக்கப்பட்டு அவர் கொல்லப்பட்ட தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவரது சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அபாவுட் இதற்கு முன்னரும் பிரான்சில் நான்கு முறை …
-
- 0 replies
- 564 views
-
-
சோட்டா ராஜன் திகார் சிறையில் அடைப்பு: பாதுகாப்பு அதிகரிப்பு டெல்லி திகார் சிறை மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கொலை, கொலை முயற்சி, கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட சோட்டா ராஜன் கடந்த அக்டோபர் 15-ம் தேதி இந்தோனேசியாவின் பாலி தீவில் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட அவரை சிபிஐ அதிகாரிகள் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். அவரது காவல் நிறைவடைந்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து டெல்லி திகார் சிறை எண் 2-ல் அவ…
-
- 0 replies
- 457 views
-
-
பரிஸ் தாக்குதல்கள்; மூன்றாவது சடலமும் மீட்கப்பட்டது கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பரிஸ் தாக்குதல்களையடுத்து பரிஸ் புறநகரான சென்ற் டெனிஸில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டை இடம்பெற்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து மூன்றாவது சடலமும் அரச வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை இடம்பெற்ற தாக்குதலையடுத்து, நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டபோதும், அவரது அடையாளம் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. எனினும் மேற்படி நடவடிக்கையின்போது தன்னை வெடிக்க வைத்துக் கொண்ட பெண்ணான ஹஸ்னா எய்த்பௌலாசென்னின் …
-
- 0 replies
- 760 views
-
-
சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் 28 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பதற்றமான பகுதியான சிங்ஜியானில் சீன போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது. | படம்: ராய்ட்டர்ஸ். அயல்நாட்டு தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடைய 28 பயங்கரவாதிகள் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. சின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் சீன ஆட்சியின் கீழ் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக சில ஆண்டுகளாக அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த செப்டம்பரில் நிலக்கரி சுரங்கத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலியானதையடுத்து பயங்கரவாதிகளை அழி…
-
- 0 replies
- 528 views
-
-
Image captionஹன்ஸ் யர்க் மாசென் சிரியாவிலிருந்தும் இராக்கிலிருந்தும் புதிதாக வந்துள்ள குடியேறிகளுக்கு ஜெர்மனியில் வைத்தே பயங்கரவாத சித்தாந்தம் புகட்டப்படலாம் என்ற கவலை தனக்கு இருப்பதாக ஜெர்மனியின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கான தலைமை அதிகாரி தெரிவிரித்துள்ளார். 129 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை இஸ்லாமியவாத ஆயுததாரிகள் நடத்தி ஒரு வாரம் ஆகும் நிலையில், பிபிசிக்கு பேட்டி அளித்த ஹன்ஸ் யர்க் மாசென், ஜெர்மனியின் இஸ்லாமியவாதிகள் நாட்டுக்குள்ளிருந்தே இளைஞர்களை தமது அமைப்பில் சேர்க்க முயன்ற பல சம்பவங்கள் பற்றி தான் கேள்விப்பட்டுள்ளதாக கூறுகிறார். ஜெர்மனிக்கு இந்த ஆண்டில் மட்டுமே லட்சக்கணக்கான குடியேறிகள் வந்துள்ள நிலையில், குடியேறிகளின் பின்னணியை அறிந்துகொள்ளவ…
-
- 0 replies
- 754 views
-
-
ஆப்பிரிக்க நாடான பமாக்கோவின் தலைநகர் மாலியில் இஸ்லாமியவாத ஆயுததாரிகள் ஹோட்டல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹோட்டலுக்குள்ளே தானியங்கி-துப்பாக்கி வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளன. சிலரை ஆயுததாரிகள் பணயமாக பிடித்துவைத்துள்ளதாக செய்தி ஒன்று கூறுகின்றது. நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த ஹோட்டலுக்கு அருகே யாரையும் செல்ல முடியாதவாறு பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் பாதுகாப்பு வலயம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். http://www.bbc.com/tamil/global/2015/11/151120_mali_attack 180 பேர் பணய கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் அல்லாகு அக்பர் என்ற கோசத்துடன் ஆயுத தாரிகள் தாக்குதலை ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. https://uk.news.yahoo.com/gunmen-attack-hotel-mali-hostages…
-
- 2 replies
- 962 views
-
-
புதுடெல்லியில் பிரதமர் வீட்டருகே காவலுக்கு இருந்த போலீஸ்காரர் ஒருவரின் ஏ.கே.47 துப்பாக்கி திடீரென வெடித்தது. நேற்று இரவு ஏற்பட்ட வெடிவிபத்தால் பாதுகாப்பு அதிகாரிகள் மத்தியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம் நம்பர் 7 ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ளது. பாதுகாப்பு நிறைந்த இந்த பகுதியில் 24 மணி நேரமும் காவலர்களும், கமாண்ேடாக்களும் பாதுகாப்புக்கு நின்றிருப்பர். டெல்லி போலீஸ் தவிர பிரதமரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக எஸ்பிஜி எனப்படும் சிறப்பு கமாண்ேடாக்களும் பாதுகாப்பு பணியில் இருப்பர். இந்நிலையில் நேற்றிரவு 8.30 மணி அளவில் திடீரென இந்த பகுதியில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அதுவும் சாதாரண துப்பாக்கி இல்லாமல் இந்தி…
-
- 0 replies
- 339 views
-
-
சீன கோடீஸ்வரரை பிலிப்பைன்ஸில் செவ்வி கண்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஜனாதிபதிகள் நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதென்றால் பொதுவாக அவர்களிடம்தான் செய்தியாளர்கள் கேள்வி கேட்பார்கள், ஆனால், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, சீன கோடீஸ்வர வர்த்தகரான ஜக் மாவை செவ்வி கண்டுள்ளார். பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று முன்தினம் அரசாங்க – வர்த்தக உறவுகள் தொடர்பான கலந்துரையாட லொன்றில் பங்குபற்றினார். இதன்போது சீனாவின் பிரபல இணைய வர்த்தக நிறுவனமான அலி பாபா நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜக் மா மற்றும் பிலிப்பைன்ஸின் இளம் தொழலதிபர…
-
- 2 replies
- 697 views
-
-
ஐஎஸ்-ல் இணையச் சென்ற பெங்களூரு நபர் தன் மனைவிக்கு எழுதி வைத்த குறிப்புகள் நேற்று முன் தினம் (18ம் தேதி) அகமதாபாத் ஜமாத்தே உலீமா அமைப்பு ஐஎஸ்.க்கு எதிராக கோஷமிட்டனர். | படம்: பிடிஐ பெங்களூரைச் சேர்ந்த முகமது அப்துல் அஹாத் அமெரிக்காவில் படித்த கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். கடந்த ஆண்டு இவர் துருக்கி அதிகாரிகளிடம் சிக்கினார். பிறகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடுகடத்தப்பட்டார். ஐஎஸ். தீவிரவாத அமைப்பில் சேரும் எண்ணத்துடன் இவர் துருக்கி சென்றாரா என்பது பற்றி சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இவர் தனது லேப்டாப்பில் தான் தலைமறைவானால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மனைவிக்கு சில ஆலோசனைகளை விட்டுச் சென்றுள்ளார்.தன் மனை…
-
- 0 replies
- 541 views
-
-
நான் தீவிரவாதியில்லை, என்னை கட்டி அணைப்பீர்களா; பிரான்ஸ் மக்களிடம் கேட்ட முஸ்லிம் இளைஞர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் கடந்த வெள்ளிகிழமை தீவிரவாதிகள் பயங்கரவாத தாக்குதல் நடத்திய இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, கண்களை கட்டியப்படி ஒரு இஸ்லாமிய இளைஞர் நான் தீவிரவாதியில்லை, என்னை கட்டி அணைப்பீர்களா என்று எழுதப்பட்ட கோரிக்கை பதாகையுடன் அந்த இடத்தில் நின்றிருந்தார். இந்த இளைஞரைப் பார்த்ததும் அந்த மக்கள் உணர்ச்சிவசப்பட்டு கட்டிப் பிடித்து கண்ணீர் சிந்திய காட்சி அனைவரையும் நெகிழ்வூட்டக்கூடியதாக உள்ளது. இறுதியாக அங்கு கூடியிருந்த மக்களிடம் அந்த இளைஞர் பேசும் போது, ´நான் ஒரு இஸ்லாமியன்…
-
- 1 reply
- 687 views
-
-
வெள்ளை மாளிகையை தகர்க்கப்போம்: ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்! வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை தகர்க்கப் போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளனர். மேலும், பிரான்ஸில் அதிகமான தாக்குதலை நடத்துவோம் என்றும் அவர்கள் அதில் சபதமிட்டு உள்ளனர். பாரீஸ் தாக்குதலில் 219 பேரை கொன்று குவித்தனர் ஐ.எஸ். தீவிரவாதிகள். இதைத் தொடர்ந்து, சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து ஃபிரான்ஸ் விமானப்படை சரமாரியாக குண்டு மழை பொழிந்து வருகிறது. இதற்கு ஆதரவாக, அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகளின் படையும் தங்களின் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் தற்கொலை …
-
- 4 replies
- 891 views
-
-
பாரிஸ் தீவிரவாதிகளுடனான சமரில் உயிரை விட்ட மோப்ப நாய் பாரிஸில் தாக்குதலாளிகளுடன் நேற்று நடைபெற்ற சமரின் போது தேசிய பொலிஸ் பிரிவின் துணிச்சல் மிக்க மோப்ப நாய் ஒன்று கொல்லப்பட்டிருக்கிறது. தற்கொலையாளிகளின் மறைவிடத்தினுள் பொலpஸ் கொமாண்டோக்கள் பிரவேசிப்பதற்கு முன்பாக அங்கே ஊடுருவிச்சென்ற இந்த நாய் அவர்களின் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கிறது. தாக்குதல், தேடுதல் மற்றும் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிப்பதில் திறனுடைய இந்த நாயின் மறைவுச் செய்தியை தேசிய பொலிஸ் பிரிவு படத்துடன் தனது ருவிட்டர் தளத்தில் வெளியிட்டதை அடுத்து, அது வேகமாக சமூகவலைத் தளங்களில் துயரச்செய்தியாகப் பரவியது. diesel எனப் பெயர…
-
- 0 replies
- 561 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போர் ஏன் வெற்றி பெறாது? 6 காரணங்கள்..! சிரியாவில் போர் தொடங்கிவிட்டது. இந்தப் போரை நியாயப்படுத்துவதற்கு ஃபிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் பல வலுவான காரணங்களை அடுக்கிக் காட்டுகின்றன. பாரீஸ் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கவேண்டும். எகிப்து விமானத்தை வீழ்த்தியதற்குப் பழி வாங்கவேண்டும். பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டவேண்டும். உலகின் நம்பர் 1 அச்சுறுத்தலான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒழித்துக்கட்ட வேண்டும். அநீதியை வென்றெடுத்து, சமாதானத்தைத் தவழவிடவேண்டும். ஆனால் உண்மையில் இதில் எதுவொன்றும் நடக்கப்போவதில்லை... ஏன்? 1. இந்தப் போரில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் இறக்கப்போகிற வர்கள் சிவிலியன்கள்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
இஸ்லாத்துக்கு விரோதமானது 'கேர்ள் பிரெண்ட்' கலாச்சாரம்: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் 'கேர்ள் பிரெண்ட்' ஒருவர் பெயரில் பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி, அதில் அவரது புகைப்படங்களை அவரது அனுமதி இல்லாமல் பதிவேற்றிய வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் ஒருவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. 2 மாதங்களுக்கு முன்பாக முகமது முனிர் என்பவரை பாகிஸ்தான் விசாரணை அதிகாரிகள், சைபர் கிரைம் பிரிவில் கைது செய்தனர். அதாவது அவர் பெண் ஒருவரை 'கேர்ள் பிரெண்ட்' என்று கூறிக்கொண்டு, அவருக்காக பேஸ்புக் பக்கம் ஒன்றைத் தொடங்கி, அதில் அவரது புகைப்படங்களையும் அனுமதியின்றி பதிவேற்றினார் என்ற புகாரின் அடிப்படையில் முனிர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கைது செய்யப்…
-
- 0 replies
- 711 views
-
-
எங்கெல்லாம் இஸ்லாமிய புர்காவுக்குத் தடை? ஆப்ரிக்க நாடான செனகோல் , அங்கு ஜிஹாதி தாக்குதல்கள் நடக்கும் ஆபத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில், பெண்கள் தங்கள் முழு உடல் மற்றும் முகத்தை மூடும் வண்ணம் அணியும் 'புர்கா'வை தடை செய்வது குறித்துப் பரிசீலித்துவருகிறது. இந்த முழு முகத்தை மூடும் இஸ்லாமிய முகத்திரை, உடல் முழுவதையும் தளர்ச்சியாக மூடி , பார்ப்பதற்கு மட்டும் முகத்தில் ஒரு வலை வேலைப்பாடு செய்த திரையுடன் இருக்கும். பொது இடங்களில் முஸ்லீம் பெண்கள் இதை அணிகிறார்கள். ஆனல், கடந்த காலங்களில் இது இஸ்லாமியத் தீவிரவாதிகள் வெடி பொருட்களை தாங்கிச்செல்ல உதவுவதால், இது ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று சிலர் வாதிடுகிறார்கள். நைஜீரியாவிலிருந்து செயல்…
-
- 5 replies
- 2.5k views
-
-
தாக்குதலாளிகளின் ஊரிலிருந்து உறவினர்களின் 'செய்தி' பிரான்ஸில், சென்-தெனி (Saint-Denis) பகுதியில் போலீஸார் நேற்று நடத்திய அதிரடி தாக்குதலில், பாரிஸ் தாக்குதலின் சூத்திரதாரி என்று கருதப்படுகின்ற அப்தல் ஹமிட் அபாவூத் (Abdel Hamid Abaaoud) கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரது கைவிரல் ரேகையைக் கொண்டு, அவரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனிடையே, பிரான்ஸில் மேலும் மூன்று மாதங்களுக்கு அவசரகால நிலையை நீட்டிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ள நிலையில், பயங்கரவாதக் குழுக்களிடமிருந்து இரசாயன தாக்குதல்கள் நடக்கலாம் என்று அந்நாட்டு பிரதமர் எச்சரித்துள்ளார். பாரிஸ் தாக்குதல்கள…
-
- 0 replies
- 561 views
-
-
பிரான்ஸ் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தற்கொலை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து திட்டம் தீட்டியது, சிரியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதக் குழுவிடம் பயிற்சி பெற்று பெல்ஜியம் நாட்டு போலீஸாரால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள அப்துல் ஹமீது அபாவுத்(28) என்று அண்மையில் தெரியவந்தது. மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த அபவுட், பெல்ஜியம் நாட்டு குடிமகனாவான். பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் பதுங்கியிருந்த ஒரு வீட்டை இலக்குவைத்து பாரீஸின் வடக்கே பொலிஸாரும் இராணுவத்தினரும் சேர்ந்து நேற்று அத…
-
- 3 replies
- 1.7k views
-
-
தெற்கு சீன கடற்பகுதியில் அந்நாடு அமைத்துவரும் செயற்கை தீவு அருகே அமெரிக்காவின் போர்க் கப்பல் ரோந்து செல்வது தொடர்பாக அமெரிக்கவிற்கும் சீனாவிற்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.சில வாரங்களுக்கு முன்பு யு.எஸ்.எஸ் லாசன் என்ற போர்க்கப்பல் ஸ்பார்ட்லி தீவு அருகே ரோந்து சென்றது. அந்தப் பகுதி சீனாவுக்கு உட்பட்ட பகுதி இல்லை என்றாலும் அது சீனாவால் அமைக்கப்பட்ட செயற்கை தீவு அந்த பகுதியில் உள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீனா கடுமையாக கண்டித்ததுடன், தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டால் போர் ஏற்படலாம் என்றும் எச்சரித்தது. தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க போர்கப்பல்கள் ரோந்து செல்வது எந்த நாட்டையும் அச்சுறுத்துவதற்கு அல்ல. இந்த நடவடிக்கையானது, சர்வதேச கடல்பகுதி …
-
- 0 replies
- 442 views
-
-
ஐஎஸ் அமைப்பை விட பயங்கரமான போகோ ஹராம் போகோ ஹராம் தீவிரவாதிகள் எழுச்சியினால் அகதிகளான நைஜீரிய மக்கள் மைடுகுரியில் பள்ளி ஒன்றில் தங்கியுள்ளனர். | படம்: ஏ.பி. நைஜீரியாவின் போகோ ஹராம் என்ற தீவிரவாத அமைப்பு ஐஎஸ் தீவிரவாத அமைப்பை விடவும் பயங்கரமானது என்று உலகப் பயங்கரவாத குறியீடு தரவு ஒன்று தெரிவித்துள்ளது. 2014-ம் ஆண்டில் மட்டும் போகோ ஹராம் தீவிரவாதத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 6,644, மாறாக ஐஎஸ் தீவிரவாதத்துக்கு பலியானோர் எண்ணிக்கை இதே ஆண்டில் 6,073. மார்ச் மாதம் ஐஎஸ் அமைப்புடன் கூட்டணி வைத்துக் கொள்வதாக போகோ ஹராம் அறிவித்திருந்தது. மேற்கு ஆப்பிரிக்காவின் ஐஎஸ் பிரிவு என்றே தங்களை போகோ ஹராம் அதன் பிறகு அழைத்துக் கொள்ளத் தொடங்கியது. ப…
-
- 0 replies
- 857 views
-
-
'பாரீஸ் தாக்குதல்: அன்பை பரிமாறுகிறவர்களே இறுதியில் ஜெயிக்கிறார்கள்!' கடந்த நவம்பர் 13-ம் தேதி பாரிஸில் நடந்தக் கொடூர தீவிரவாதத் தாக்குதலுக்கு 130க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் இறந்து போனார்கள். இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் ( இரானியன் ஸ்டேட் ஆஃப் ஈராக் அண்ட் சிரியா) இயக்கம், உலகம் முழுதும் இருந்து கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் எதிர்கொண்டுள்ளது. இந்த மனிதத் தன்மையற்ற செயலுக்கு பலியான மக்களுக்காக எங்கும் நினைவஞ்சலிகள் நடத்தப்படுகின்றன. இதே போல், கடந்த ஜனவரியில் ஃபிரான்ஸின் சார்லி ஹெப்டோ என்கிற பத்திரிக்கை, இஸ்லாமியர்களின் முகம்மது பற்றிய கேலிச் சித்திரங்களை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து அந்த அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத…
-
- 0 replies
- 633 views
-
-
ரஷ்ய விமானத்தை வீழ்த்திய ‘ஷ்வெப்ஸ்’ குண்டு: ஐஎஸ் புகைப்படம் வெளியீடு இஸ்லாமிக் ஸ்டேட் இதழான தபிக்கில் வெளியான ரஷ்ய விமானத்தை தகர்த்த வெடிகுண்டு புகைப்படம். | ராய்ட்டர்ஸ். ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் அதிகாரபூர்வ இதழ் தபிக்கில் ரஷ்ய விமானத்தை வீழ்த்திய வெடிகுண்டின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. எகிப்தின் சினாய் அருகே வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானம் நொறுங்கியதில் 224 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. ஐஎஸ் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஷ்வெப்ஸ் கோல்டு குளிர்பான குப்பி, டெடனேட்டர் மற்றும் ஒரு சுவிட்ச் ஆகியவை இருந்தன. “கலிஃபேட் முஸ்லிம்களை கோழைத்தனமாக குண்டு வீசி கொலை செய்தவர்கள் தங்கள் விமானத்தில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்தனர். ஓட்டுநர்…
-
- 0 replies
- 596 views
-
-
ஐ எஸ்ஸுக்கு துருக்கி, சவுதி, கத்தார் ஆகியவை ஆதரவு: பஷார் அல் அஸத் இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் பயங்கரவாதிகள் வளர்வதற்கு சிரியா ஒரு களமாக உள்ளது என்பதை நாட்டின் அதிபர் பஷார் அல் அஸத் மறுத்துள்ளார். பஷார் அல் அஸதுக்கு ரஷ்யாவின் ஆதரவு உள்ளது இத்தாலியத் தொலைக்காட்சி ஒன்றில் பேசும்போதே சிரியாவின் அதிபர் இதைத் தெரிவித்தார். துருக்கி, சவுதி அரேபியா, கத்தார் உட்பட பல வெளிநாடுகளின் உதவியுடனேயே, சிரியாவில் பயிற்சி பெற்ற அந்த ஜிகாதிகள் தாக்குதல்களை நடத்துகின்றனர் என அவர் கூறுகிறார். பயங்கரவாதிகள் என அவர் கூறுவோரின் பிடியில் நாட்டின் சில பகுதிகள் இருக்கும் நிலையில், சிரியாவில் தேர்தல் மூலம் இடைக்கால ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரும் நடவடிக…
-
- 0 replies
- 547 views
-
-
ஐ எஸ் அமைப்பின் மீது சீனா கடும் சீற்றம் தமது நாட்டு பிரஜை ஒருவர் கொலைக்கு பொறுப்பான ஐ எஸ் அமைப்பின் பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்த சீன சூளுரைத்துள்ளது. ஐ எஸ் அமைப்பால் கொல்லப்பட்ட நார்வேஜிய மற்றும் சீனப் பிரஜைகள் அவரின் மரணம் குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது. நார்வே அரசும் ஐ எஸ் அமைப்பே தமது பிரஜை ஒருவரை கொலை செய்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனக் கூறியுள்ளது. முன்னதாக இந்த இருவரின் சடலங்கள் எனக் கூறி அந்த ஜிகாதிக் குழு புகைப்படங்களை வெளியிடிருந்தது. எனினும் எங்கே அல்லது எப்போது அந்தக் கொலை நடைபெற்றன என்பது பற்றி ஐ எஸ் எவ்விதத் தகவலும் வெளியிடவில்லை http://www.bbc.com/tam…
-
- 0 replies
- 236 views
-
-
பரிஸ் - பெய்ரூட்: தேர்ந்தெடுக்கப்பட்ட கோபமா? -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா பிரான்ஸ் தலைநகர் பரிஸில் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அந்தத் தாக்குதல் தொடர்பான செய்திகள் பரவியதோடு, மக்களின் அனுதாபங்களும் குவிந்திருந்தன. ஆனால், அவற்றைத் தவிர, 'ஏன் நீங்கள் லெபனானைப் பற்றிக் கதைக்கிறீர்களில்லை?' என்ற கேள்வியும் அதிகமாகவே எழுப்பப்பட்டிருந்தது. பரிஸ் மக்களின் உயிர் மாத்திரம் தான் பெறுமதியானதா, லெபனான் மக்களின் உயிர்கள் ஏன் பெறுமதியில்லை போன்று செயற்படுகிறீர்களா எனக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டிருந்தன. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நவம்பர் 12ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொடூரத் தாக்குதலில் குறைந்தது 43 பேர் க…
-
- 0 replies
- 493 views
-