Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டுபாய் இல் உள்ள நகீல் (Nakheel property developers) கட்டுமான நிறுவனம் உலகில் மிக உயரமான (World's Tallest Skyscraper) கட்டுவதற்கு திட்டம். இந்த கட்டடம் கிடத்தட்ட 1400 மீட்டர் உயரம் உடையதாகக இருக்கும் என கூறப்பட்டு உள்ளது. மேலதிக தகவலுக்கு http://inhabitat.com/nakheel-tower-by-woods-bagot-will-be-worlds-tallest-tower/ http://www.architectureanddesign.com.au/news/dubai-tower-by-woods-bagot-is-world-s-tallest-unfi

    • 4 replies
    • 547 views
  2. கனேடிய அரசாங்கம் முன்வைத்துள்ள தீவிரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் தொடர்பாக இன்று கனடாவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த சட்டமூலத்தை எதிர்த்து டொரன்டோ பெரும்பாகத்திலும், ஏனைய பல நகரங்களிலும் Defend our freedom என்ற தலைப்பில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெவறுதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். அரசாங்கத்தின் இந்தப் பிரேரணை மிகவும் ஆபத்தானது என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த ஜனவரி மாதம் Bill C-15 எனப்படும் இந்த சட்டமூலப் பிரேரணையை கன்சவேற்றிவ் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இதன்கீழ் காவற்துறையினருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டு, அவர்கள் சந்தேகநபர்களைக் கைதுசெய்து தடுத்து வைக்கும் அதிகாரத்தை வழங்குகின்றது டொரன்டோவில் நேத்தன் பிலிப்ஸ் சதுக்கத்தில் நட…

    • 1 reply
    • 337 views
  3. கனடா ரொறன்றோ பல்கலைக் கழகம், உலகப் பல்கலைக் கழங்களில் 16 ஆவது இடத்தையும், கனடாவில் முதல் இடத்தையும் பெற்றதென Times Higher Education ஆய்வு குறிப்பிடுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, அனைத்துலக மட்டத்தில் ரொறன்றோ பல்கலைக்கழகம் நான்கு இடங்கள் முன்னேறியது. கனடாவில் இரண்டாவது இடத்தை வகிக்கும் மக்கில் பல்கலைக்கழகம், உலக பல்கலைக்கங்களில் 35 ஆவது இடத்தை வகிக்கின்றது. ஹாவேர்ட் பல்கலைக்கழகம், கேம்ப்றிட்ஜ் பல்கலைக்கழகம், மற்றும் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆகியன உலகத் தர வரிசையின் முதல் மூன்று இடங்களையும் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். - See more at: http://www.canadamirror.com/canada/39356.html#sthash.aLhbCRu7.dpuf

    • 0 replies
    • 336 views
  4. பசுபிக் நாடான வனுவாட்டுவை புயல் தாக்கி பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், டஜன் கணக்கான மக்கள் பலியாகியுள்ளதாகவும் உதவி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. வனுவாட்டுவில் கடும் புயல் அந்த சமூகத்தினரின் பாராம்பரிய ஓலை வீடுகள் அனைத்தும் புயற்காற்றில் வீசி எறியப்பட்டுள்ளதுடன், நவீன அடுக்கு மாடித் தொகுதிகளும் உடைந்து வீழ்ந்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். வனுவாட்டுக்குச் சொந்தமான அறுபத்தைந்து தீவுக் கூட்டங்களிலும் புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னமும் முழுமையாக கணக்கெடுக்கப்படவில்லை என நிவாரணப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் தேவாலயங்களில் தற்காலிகமாக தஞ்சம் அடைந்துள்ளதாக கூறிய நிவாரணப் பணியாளர்கள் மேலும் அனேகமானோர் தலைந…

    • 2 replies
    • 428 views
  5. உள்நாட்டு போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டு மக்களை, கருத்து வேறுபாட்டு காரணமாக ஐ.நா சபையால் காப்பாற்ற முடியவில்லை என்று பான் கி மூன் வருத்தம் தெரிவித்துள்ளார். 2011-ல் சிரியாவில் அமைதியான வழியில் அந்நாட்டு அரசுக்கு எதிராக ஆரம்பித்த மக்கள் போராட்டம் பெரும் உள்நாட்டு போராக வெடித்தது. இதன் காரணமாக இன்று வரை அந்நாட்டு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். நான்கு ஆண்டுகளையும் கடந்து ஐந்தாவது ஆண்டில் நுழையவிருக்கம் இப்போரில் இதுவரை 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும், 4 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் அகதிகளாக பக்கத்து நாடுகளுக்கும், 7.6 மில்லியன் மக்கள் அந்நாட்டிற்குள்ளாகவே அகதிகளாகியிருப்பதாகவும் பான் கீ-மூன் வெளியிட்டுள்ள அறிக…

  6. கனடா- துண்டிக்கப்பட்ட பன்றி ஒன்றின் தலை மொன்றியல் பொலிஸ் சங்க அலுவலகத்தின் முன்னால் போடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பாதுகாப்பு காட்சிகளில் இருந்து வியாழக்கிழமை இரவு இது நடந்துள்ளதென விசாரனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். பொலிஸ் சேவைக்கும் பொலிஸ் அதிகாரிகளிற்கும் இது ஒரு “நேரடி அச்சுறுத்தல்” என Cmdr. Ian Lafreniere CTV செய்தியில் தெரிவித்துள்ளார். இதனால் தான் தாங்கள் இதனை மிகவும் தீவிரமானதாக எடுத்து கொள்கின்றோம் எனவும் கூறியுள்ளார். சங்க காரியாலயத்தின் வெளியே வெண்கட்டியினால் வரையப்பட்ட ஒரு ஐந்து முனைகளையுடைய நட்சத்திர-வடிவம் ஒன்றின் மத்தியில் இந்த தலை கண்டுபிடிக்கப்பட்டது. கதவி…

  7. லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்க ஜனாதிபதி, ஒபாமாவிடம் அதிநவீன வசதிகளை கொண்ட ஸ்மார்ட் போன் கிடையாது. அவர் செல்போனில் யாருக்கும் குறுந்தகவல், படங்கள் அனுப்புவது இல்லை என தெரிய வந்துள்ளது. ஏ.பி.சி. டி.வி.க்கு அளித்த பேட்டியில் ஒபாமா, இது பற்றி குறிப்பிடும்போது, நான் பொதுவாக டிவிட் (குறுந்தகவல்) வெளியிடுவதில்லை. நான் எஸ்.எம்.எஸ். அனுப்புவதில்லை. இப்போதும் என்னிடம் ஒரு பிளாக்பெர்ரி (செல்போன்) மட்டுமே உள்ளது என்றார். ஆனால், என் மகள்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தோழிகளுடன், நண்பர்களுடன் தகவல்கள் பரிமாறிக்கொள்கிறார்கள். நான் பாதுகாப்பு காரணங்களையட்டி குறிப்பிட்ட அளவே தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துகிறேன். ஒலிப்பதிவு செய்யும் வசதி கொண்ட போன்களை பயன்படுத்துவத…

  8. கனடாவில் கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் கனேடியர்களின் வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்பின் அளவை விட, அவர்கள் பெற்ற கடன்களின் அளவில் நிலவிய அதிகரிப்பு அதிகமானதென கனடா புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிடுகிறது. கனேடியர்களின் செலவிடக்கூடிய வருமானத்தின் 163.3 சதவீதமாக அவர்களது கடன்கள் இருப்பதாக அது தெரிவித்தது. ஒவ்வொரு டொலர் வருமானத்திற்கும், கனேடியர்களக்கு சராசரியாக 163 சதம் கடன் இருந்ததென்பதை அது காட்டுகிறது,எனவும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிடுகிறது. - See more at: http://www.canadamirror.com/canada/39267.html#sthash.GqQMu9jU.dpuf

    • 0 replies
    • 385 views
  9. அமெரிக்காவில் குப்பைகளை அகற்ற காலை நேரத்தில் பொழுதோடு பணிக்கு வந்த துப்புரவு தொழிலாளிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதிகாலையில் வந்து பொதுமக்களின் தூக்கத்துக்கு இடையூறு செய்ததால் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க மாகாணமான ஜியார்ஜியாவில் துப்புரவு தொழிலாளராக பணியாற்றுபவர் கெவின் மெக்கில், இவர் தனியார் நிறுவனத்தின் மூலம் பணி செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் காலை 5 மணிக்கே பணிக்கு வருவதால், தூக்கம் கெடுவதாக சாண்டி ஸ்ப்ரிங் நகர போலீஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இவர் காலை நேரங்களில் பணியில் ஈடுபடுபட்டதற்கான ஆதாரங்களும் வழங்கப்பட்டன. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நகர மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பினார். விசாரணையின்போது, நிறுவனம்…

    • 0 replies
    • 305 views
  10. இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனாவின் சவால்களை முறியடிக்குமா இந்தியா? MAR 13, 2015 | 10:53by நித்தியபாரதிin கட்டுரைகள் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனாவின் கை ஓங்கினால் அது இந்தியாவின் அதிகார சக்தியாக மிளிரவேண்டும் என்கின்ற இலட்சியத்தை முடிவுக்குக் கொண்டு வருவதையே குறித்து நிற்கும். இதன்பின்னர், இந்தியா இப்பிராந்தியத்தின் அதிகாரத்துவ சக்தியாக விளங்குவது கடினமானதாகும். இவ்வாறு “ஹிந்துஸ்தான் ரைம்ஸ்” நாளிதழில் Brahma Chellaney எழுதியுள்ள ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. இந்திய மாக்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த மூன்று நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணிப்பதானது வெளிச்சக்திகள் இப்பிராந்தியத்தில் தலையீடு …

    • 0 replies
    • 314 views
  11. இத்­தா­லிய கிரா­ம­மொன்றில் ஒரே நாளில் 100 அங்­குல (சுமார் 8 அடி) உய­ரத்­திற்கு பனிப்­பொ­ழிவு இடம்­பெற்­றுள்­ளது. ரோம் நகரின் கிழக்கே சுமார் 125 மைல் தொலை­வி­லுள்ள கப்­ர­கொதா கிரா­மத்தில் இடம்­பெற்ற இந்த பனிப்­பொ­ழி­வா­னது தனி­யொரு நாளில் இடம்­பெற்ற அதி­க­ள­வான பனிப்பொழிவு என்ற உலக சாத­னையை படைத்­துள்­ளது. மேற்­படி பனிப்­பொ­ழி­வை­ய­டுத்து மக்கள் தமது வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேறுவதற்கு பனிக்­ கு­வி­ய­லி­னூ­டாக சுரங்­கப்­பா­தை­களை தோண்ட நேர்ந்­துள்­ளது. இந்தப் பனிப்­பொ­ழிவு 1921 ஆம் ஆண்டு அமெ­ரிக்க கொல­ராடோ மாநி­லத்தில் சில்வர் லேக் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற 76 அங்­குல பனிப் பொழிவால் நிறைவேற்றப்பட்ட உலக சாதனையை முறியடித்துள்ளது. http://www.virakesari.lk/ar…

  12. நியூயார்க் : சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் அரசு படைகள் தாக்கியதில் 600க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பலியாகி இருக்கலாம் என நியூயார்க்கைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில், மருத்துவமனைகளைக் கூட விட்டு வைக்காமல் அரசு படைகள் தாக்குதல் நடத்தியதாக தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலின் போது, போரினால் மோசமாக காயமடைந்து சிகிச்சை பெற்றவர்களும், அவர்களுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த 600-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பு கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்…

    • 0 replies
    • 472 views
  13. எரிமலை வெடித்து சிதறியதில் பசிபிக் பெருங்கடலில் புதிய தீவு உருவாகியுள்ளது இது விரைவில் மறைந்து போகலாம் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து உள்ளார். பசிபிக் பெருங்கடலில் உள்ள மிகப்பெரிய தீவு நாடான டோங்கோவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்து இந்த தீவு உருவாகியுள்ளது. நிகோபோலோவிற்கு வடமேற்கே எரிமலை வெடித்து கடந்த ஜனவரி மாதம் பெரும் புகைவெளியாகியது. ஜனவரியில் எரிமலை வெடித்து சிதறியபோதே இந்த தீவு உருவாகத் தொடங்கியது. புதிய தீவானது கடல்மட்டத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் உள்ளது என்றும் 1.8 கிலோமீட்டர் நீளமும் 1.5 கிலோமீட்டர் அகலத்திலும் புதிய தீவு உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். நிகோபோலோவில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தீவுக்கு சென்ற …

    • 0 replies
    • 476 views
  14. கனடா- மார்க்கம் தொடக்க பள்ளி உட்பட யோர்க்பிராந்தியத்தின் பல பாடசாலைகள் வியாழக்கிழமை காலை பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பாடசாலைகளிற்கு பொலிசார் அனுப்பி வைக்கப்பட்டதாக யோரக் பிராந்திய பொலிசார் உறுதிப்படுத்திய போதும் சாத்தியமான அச்சுறுத்தல் தன்மை குறித்து எதுவும் வெளியிடவில்லை என கூறப்பட்டது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மதியத்திற்கு சிறிது முன்பாக நீக்கப்பட்டது ஆனால் பாடசாலைகளில் பொலிசாரின் பிரசன்னம் இருந்துள்ளது. இது ஒரு வெடிகுண்டு மிரட்டல் அல்ல என தெரிவித்த கான்ஸ்டபிள் லோறா நிக்கோல் மேலும் விளக்கமளிக்க முடியாத நிலை என கூறியுள்ளார். மிரட்டலில் வெளியிப்பட்ட பாடசாலையின் பெயரை அவர் வெளியிடவில்லை. அதே பெயர் கொண்ட பல பாடசாலைகள் …

    • 0 replies
    • 239 views
  15. கனடா- ஒரு சாம்பல் நிற திமிங்கிலம் சுற்றுலா பயணிகளின் படகு ஒன்றில் அத்துமீறி மோதியதால் கனடிய பெண் ஒருவர் கொல்லப்பட்டார். இத்துயர சம்பவம் புதன்கிழமை நடந்தது என மெக்சிக்கோ அதிகாரிகளின் அறிக்கை தெரிவித்துள்ளது. 35-வயதுடைய கனடியரான ஜெனிவர் கரென் என்ற இப்பெண் விடுமுறையை கழிக்க காபோ சான் லுக்காஸ். மேக்சிக்கோ சென்றிருந்தார். சம்பவம் காபோ சான் லூக்காஸ் ரிசாட்டிலிருந்து 2-கிலோமீற்றர்கள் தொலைவில் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த உல்லாச படகில் 24 சுற்றுலாபயணிகள் இருந்தனர். அனைவரும் பிற்பகல் அளவில் படகில் துறைமுகத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த போது இந்த சாம்பல் நிற திமிங்கிலம் தண்ணீருக்குள் இருந்து பாய்ந்து படகிற்குள் இறங்கியது. திமிங்கிலம் படகிற்குள் பாய்ந்தபோது இப் பெண் திமிங…

    • 0 replies
    • 346 views
  16. 29007ca29b7a9557f365924bc9f4b4db

    • 0 replies
    • 532 views
  17. திடுக்கிடும் ரகசியங்களை அம்பலமாக்கிய புடின்: மிரளவைக்கும் ஆவணப்படம் (வீடியோ இணைப்பு) [ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 12:31.24 பி.ப GMT ] கிரிமியாவை கைப்பற்றியது தொடர்பான ரகசியங்களை ரஷ்ய ஜனாதிபதி புடின் தற்போது வெளியிட்டுள்ளார். உக்ரைனிடமிருந்து கிரிமியா மாகாணத்தை பிரித்து தங்களுடன் இணைத்துக் கொள்ள கடந்தாண்டில் ரஷ்ய ஜனாதிபதி புடின் கடும் போரை நடத்தி வந்தார். இதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தன. இந்நிலையில் கிரிமியாவை கைப்பற்றியது குறித்து தற்போது புடின் ரகசிய தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, கிரிமியாவை தங்கள் வசம் கொண்டு வருவதற்காக தான், சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் பாதுகாப்பு …

  18. டில்லி விமான நிலையில் தரையிறங்க முயன்ற ஓமான் விமானத்தின் டயர் வெடித்ததால், விமானத்தில் இருந்து பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. ஓமான் நாட்டை சேர்ந்த விமானம் டில்லி விமான நிலையத்துக்கு வந்தது. அதில் 120 பேர் பயணித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஓடுபாதையில் தரை இறக்கும் போது விமானத்தின் டயர் பயங்கர சப்தத்துடன் வெடித்தது. சப்தம் கேட்டதும் விமானத்தில் இருந்தவர்கள் அலறி கூச்சல் எழுப்பினர். விமானி சாதுர்யமாக விமானத்தை நிறுத்தியதால் விமானத்தில் இருந்த 120 பயணிகள் உயிர் தப்பினர். அனைவரும் அவசர அவசரமாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். . - See more at: http://www.canadamirror.com/canada/39206.html#sthash.gg6xbzYH.dpuf

    • 0 replies
    • 255 views
  19. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் மீது குற்றச்சதி அரசு ஊழியர் என்ற வகையில் செயல்பட்டு நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டதாக இந்திய தண்டனைச்சட்ட பிரிவுகளின் கீழும் ஊழலில் ஈடுபட்டதாக ஊழல் தடுப்பு குற்றச்சாட்டுகள் பிரிவுகளின் கீழும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=128128&category=IndianNews&language=tamil

  20. சௌதி அரேபியாவில் நிலவும் மனித உரிமைகள் குறித்து ஸ்வீடன் செய்திருந்த விமர்சனங்களினால் கோபமடைந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஸ்வீடனின் வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் கூறியுள்ளார். எனினும் ஏட்டிக்கு போட்டியாக அங்கிருந்து தமது தூதரை நாடு திரும்பும்படி கூறும் எண்ணம் ஏதும் ஸ்வீடனுக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எவ்வகையிலும் இருநாட்டுக்கும் இடையேயான ராஜீய உறவுகளில் விரிசல் இல்லை எனவும் ஸ்வீடிஷ் வெளியுறவுத்துறை பேச்சாளர் கூறியுள்ளார். ஜனநாயகம் மற்றும் மகளிர் உரிமைகள் குறித்து ஸ்வீடிஷ் வெளியுறவு அமைச்சர் மார்கட் வால்ஸ்ட்ராம் அரபு லீக் மாநாடு ஒன்றில்பேச விழைந்ததை சௌதி தடுத்ததை அடுத்து இருநாடுகளுக்கும் இடையே உரசல்கள் ஏற்பட்டன. பின்னர் நீண்டகாலமாக சௌதியுடன் …

    • 0 replies
    • 230 views
  21. புளொரிடா. பேன்சகோலா என்ற இடத்தில் ஏழு கடற்படையினரும் நான்கு படையினரும் பயணித்த ஹெலிகொப்டர் ஒன்று புளொரிடா கடற்பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒரு பயிற்சி திட்டத்தில் ஈடுபட்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதெனவும் அனைவரும் இறந்து விட்டதாகவும் ஊகிக்கப்படுகின்றது. புதன்கிழமை 11 சேவை உறுப்பினர்களும் இறந்து விட்டதாக தெரிவித்த தண்ணீருக்குள் சிதைவுகள் கடலோரகாவற் படையினரால் கண்டுபிடிக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. UH-60 Black Hawk என்ற இராணுவ தேசிய காவலர் படையை சேர்ந்த ஹெலிகொப்படர் செவ்வாய்கிழமை இரவு 8.30-மணியளவில் காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாலை 2-மணியளவில் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பணிக்குழுக்குள் தெ…

    • 0 replies
    • 430 views
  22. கனடா- ரொறொன்ரோவில் இந்த வார ஆரம்பத்தில் ஒருவர் பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. மார்ச்மாதம் 9-ந்திகதி கைதான இந்த நபர் கைது செய்யப்பட்டதை கனடா எல்லைப்பகுதி சேவைகள் முகமை உறுதி செய்துள்ளது. இது குறித்து ரொறொன்ரோவில் விசாரனை இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத சதித்திட்டத்தின் இலக்கு யுனிவேசிட்டி அவெனியுவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை இலக்கு வைத்ததெனவும் பத்திரிகை ஒன்றின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. மேலும் வரும்… - See more at: http://www.canadamirror.com/canada/39184.html#sthash.3XyKvaF1.dpuf ஆங்கில இணைப்புகள் http://www.cbc.ca/news/canada/toronto/jahanzeb-malik-accused-of-plan-to-blow-up-u-s-consu…

    • 0 replies
    • 335 views
  23. ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிணைக்கைதிகளின் தலையை துண்டித்து கொடூர கொலை செய்து வருகின்றனர். அந்த இயக்கத் தில் சிறுவர்களை அதிக அளவில் சேர்த்து பயிற்சி அளித்து வருகின்றனர். உலக முழுவதும் இருந்து சிரியா சென்று அந்த இயக்கத்தில் சேருகின்றனர். சமீபத்தில் அந்த இயக்கத் தினர் வழக்கம் போல் ஒரு கொலையை அரங்கேற்றும் வீடியோ காட்சியை வெளி யிட்டனர். அதில் வழக்கத்துக்கு மாறாக 10 வயது சிறுவன் ஒருவன் பிணைக்கைதியை துப்பாக்கியால் சுட்டு கொல்லும் கொடூர காட்சி இடம் பெற்றிருந்தது. அந்த பிணைக்கைதியின் பெயர் முகமது சயீத் இஸ்மாயில் முசலாம் (19). இவர் இஸ்ரேலை சேர்ந்த அரபி ஆவார் . பாலஸ்தீனத்தில் உளவு பார்த்ததாக கூறி இவரை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து பிணைக்கை…

    • 0 replies
    • 446 views
  24. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற முறையில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பியது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 10 ஆண்டு பதவி காலத்தில் கூடுதலாக நிலக்கரி இலாகாவையும் கவனித்து வந்தார். இந்த நிலையில் 2005–ம் ஆண்டு ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்ததாக கூறப்படுவது குறித்து சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. குமாரமங்கலம் பிர்லா மீதும் நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பாரக் மற்றும் சில அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையையும் சி.பி.ஐ. தாக்கல்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.