உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
மத்திய அமைச்சர் அழகிரியைச் சுற்றி மாநில மந்திரிகள் இரண்டு மூன்று பேர் உட்கார்ந்திருக்க... ஸ்பெக்ட்ரம் விவகாரம் பேச்சாக எழுந்தது. ''இப்படியே போனால் தி.மு.க. எத்தனை ஸீட் ஜெயிக்கும்?'' என்று ஒரு கிடுக்கிப்பிடிக் கேள்வியை அழகிரி எழுப்பினாராம். ஆளாளுக்கு ஓர் எண்ணிக்கையைச் சொல்ல... ''இவ்வளவு ஸீட்டெல்லாம் வரவே வராது. மிகமிக மோசமா சொற்ப இடங்கள்தான் வரும்!'' என்று சொல்லி அவர் சுட்டிக்காட்டிய கணக்கு, வெளியில் சொல்ல முடியாதது! அழகிரி - ஸ்டாலின் தரப்பு வைக்கும் ஒற்றை வரிக் கோரிக்கை, ''சட்டமன்றத் தேர்தலை தி.மு.க. எதிர்கொள்ளும்போது ஆ.ராசா நம்முடைய கட்சியில் இருக்கக் கூடாது'' என்பதுதான். இந்தத் தகவலை இவர்களது ஆதரவாளர்கள் நாலா பக்கமும் பரப்புகிறார்கள். எல்லா விஷயங்களிலும…
-
- 4 replies
- 1.1k views
-
-
இலங்கையில் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிரமான முன்னாள் உறுப்பினர்கள் என்று வர்ணிக்கப்படும் நூற்று அறுபது பேர் கொழும்பு மாஜிஸ்திரேட் ஒருவர் முன்னிலையில் புதன் கிழமை ஆஜர் படுத்தப்பட்டனர். சென்ற வருடம் முடிவடைந்த யுத்தத்தின் பின்னர் மூன்று லட்சம் தமிழர்கள் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட காலம் தொட்டே, அந்த முகாம்களுக்குள் பாதுகாப்புப் படையினர் வந்து ஆட்களைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வந்திருந்தன. விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் சிலரை யுத்தம் நடந்த சமயத்தில் பார்த்தோம் ஆனால் அதற்குப் பின்னர் அவர்கள் காணாமல் போயிருந்தனர் என்று அவர்களின் உறவினர்கள் கூறிவருகிறார்கள். புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்…
-
- 1 reply
- 523 views
-
-
""டில்லியில் இரண்டு, மூன்று நாட்கள் தங்கியிருப்பேன். சி.பி.ஐ., விசாரணைக்கு ஒத்துழைப்பேன். சி.பி.ஐ., அதிகாரிகள் முன், நாளை ஆஜராவேன்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்தார். தொலைத்தொடர்புத் துறையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம் விட்டதில், மத்திய அரசுக்கு, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டதாக பிரச்னை எழுந்தது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை, பார்லிமென்டில் தொடர்ந்து எழுப்பி சபையை முடக்கின.இதற்கிடையில், அத்துறையின் அமைச்சராக இருந்த ராஜா, தன் பதவியை ராஜினாமா செய்தார். சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள், சி.பி.ஐ., விசாரணையின் போக்கு குறித்து கேள்வி எழுப்பியதை அடுத்து, சி.பி.ஐ., தன் அதிரடி விசாரணையை துவக்கிய…
-
- 0 replies
- 277 views
-
-
நடிகர் ரஜினியின் வீரம் சினிமாவில்தான். அரசியல் என்றால் அவருக்கு பயம், என்றாரா சுப்பிரமணிய சாமி. எப்போது யாரை வாருவார், யாரைத் தூற்றுவார், யாருடன் சேருவார் என்ற கணிக்க முடியாதவர் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி. ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறிவந்தார். இப்போது தலைகீழாக பல்டியடித்து ரஜினியைத் தாக்க ஆரம்பித்துள்ளார். வீரகாளியம்மன் கோவிலில் சுப்பிரமணிய சாமி: இன்று காலை மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கீழவளவு அருகே உள்ள அடங்கான் கண்மாய்பட்டி வீரகாளியம்மன் கோவிலுக்கு சுப்பிரமணிய சாமி வந்தார். அவரை ஊராட்சி மன்ற தலைவர் தர்மலிங்கம் வரவேற்றார். கோவிலில் அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு நிருபர்களிடம் பேசிய சாமி, நடைபெறவு…
-
- 0 replies
- 391 views
-
-
உத்தரகாண்ட் தலைநகர் டெஹராடூனில் நடந்த ஒரு கொடூரம், கேட்பவரை ஜில்லிட வைக்கும்! இளம் மனைவியைக் கொன்ற கணவன், உடலை 70 துண்டுகளாக்கி... சுமார் இரண்டு மாதங்கள் வீட்டின் ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டு... அங்கேயே வாழ்ந்திருக்கிறான்! பிரகாஷ் நகர் காலனியின் அடுக்குமாடி வீடுகளின் இரண்டாவது தளத்தில் வசித்து வந்தவர், டெல்லியைச் சேர்ந்த 37 வயது ராஜேஷ் குலாத்தி. இவருடன் 33 வயது மனைவி அனுபமா குலாத்தி மற்றும் ஐந்து வயது இரட்டைக் குழந்தைகள். டெல்லியைச் சேர்ந்த அனுபமா இரண்டு மாதங்களாக ஒரு முறைகூட போன் செய்யாமல் வெறும் எஸ்.எம்.எஸ்., இ-மெயிலில் மட்டுமே தொடர்புகொள்ள... அவரது சகோதரர் சித்தாந்த் பிரதானுக்கு சந்தேகம் வந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த 14-ம் தேதி நேரடியாகக் கிளம்பி வந்தார். சகோத…
-
- 0 replies
- 479 views
-
-
ஸ்பெக்ட்ரம்’ தன்னை இவ்வளவு தூரத்துக்குக் கொண்டு போகும் என ராசா நினைத்திருக்க மாட்டார். மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு இந்த விவகாரம் மறக்கப்பட்டு விடும் என்றுதான் அவர் நினைத்திருந்தார். ஆனால் இப்படி தனது அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ராசா மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் இரண்டு கட்டமாக சி.பி.ஐ. ரெய்டு நடந்து முடிந்திருக்கிறது. ரெய்டில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில், கட்சி அவர்மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைத் தான் ராசா உட்பட அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலால் கட்சிக்கு கெட்டபெயர், க…
-
- 2 replies
- 701 views
-
-
சோனியா, யாரும் எதிர்பாராத ஓர் அவதாரத்தை டெல்லி காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் எடுத்திருக்கிறார். ''காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மத்தியிலும் சரி, எந்த மாநிலத்திலும் சரி... ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டால், அவர்கள் தொடர்ந்து பதவி வகிக்க அனுமதி இல்லை. காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஊழலை ஊக்குவிக்காது. அதில் சமரசத்துக்கு இடமே இல்லை. காங்கிரஸ், தொடர்ந்து ஊழலை எதிர்த்துப் போராடும்!'' என்று சோனியா சொல்லச் சொல்ல, பலருக்கும் பைஜாமா வேர்க்க ஆரம்பித்தது. இந்தப் பேச்சுக்குப் பின்னால் நம்மைச் சந்தித்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், ''ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்து இருக்கும் நேரத்தில் ஊழலை எதிர்த்து சோனியா பேசுவதைப் பார்த்தால், தி.மு.க-வுக்கு எதிரான பிரசார உத்தியே இதுவாகத்…
-
- 1 reply
- 449 views
-
-
Dec 21 மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகளை தண்டிக்க ஐ.நாவில் தீர்மானம். ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வதேவ் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளா ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்வதேவ் இன்று பிரதமர் மன்மோகன் சிங்க்கை சந்தித்து பேசினார். அணுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான ஒப்பந்தங்களில் இந்தியாவும், ரஷ்யாவும் கையெழுத்திட்டன. மெட்வதேவ் கூறுகையில், மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தண்டிக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தான் தொடர்பு தீவிரவாதிகளை ஒடுக்கும் வகையில் ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு தகுதி உண்ட…
-
- 0 replies
- 350 views
-
-
பெங்களூருவில் மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த இலங்கை அமைச்சருக்கு எதிராக கறுப்பு கொடி பிடித்து ஆக்ரோஷம் காட்டியவர்கள் மீண்டும் ஒரு புரட்சி செய்து தமிழர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள். பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற 'நான்காவது சர்வதேச ஆயுர்வேத மாநாட்டில்' கலந்து கொள்வதற்காக வந்திருந்த இலங்கை கண்டி மாகாணத்தின் சுகாதாரத் துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுனில் கே அமரதுங்காவுக்கு கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கறுப்பு கொடி காட்டிய 40 பேரும் பெங்களூரு போலிசாரால் கைது செய்யப்பட்டனர். இதில் ரம்யா தயாளன் என்ற ஒரு கன்னட பெண்ணும் அடக்கம். கைது செய்யப்பட்ட பின்பு என்ன நடந்தது என்பதை கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் கல…
-
- 0 replies
- 362 views
-
-
திமுகவின் தலைவரும், முதலமைச்சருமான மு.கருணாநிதியின் சொத்து மதிப்பு ரூ. 26.5கோடி. அஇஅதிமுக ஜெ. ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரு,25.35கோடி. இது 2006 தேர்தலின் போது இரு தலைவரும் தங்களது வேட்பு மனுவோடு சமர்ப்பித்த சொத்துப்பட்டியலில் இருந்து எடுக்கப்பட்ட புள்ளி விவரம். இந்த இரண்டு கோடீஸ்வர முதல்வர்கள் வசிக்கும் இதே தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களின் எண்ணிக்கை சுமார் 3கோடிக்கும் மேல். தமிழகத்தை சுமார் 40வருடங்களாக ஆட்சி செய்து வரும் இந்த இரண்டு கழகங்களுமே தங்களது ஆட்சியை பொற்கால ஆட்சி என்று பெருமைப்பட்டுக் கொள்கின்றன. ஆனால், நிதர்சனம் தலைகீழாக இருக்கிறது. தமிழகத்தில் சரிபாதிக்கும் மேலான மக்கள் உண்ண உணவு, உடுக்க உடை, சுகாதாரமான இருப்பிடம், மலத்தை கழி…
-
- 0 replies
- 429 views
-
-
அல்குவைதாவின் தாக்குதல் பட்டியலில் கனேடியர்கள்! அல்குவைதா அமைப்போடு தொடர்புடைய இணையத்தளமொன்று 100 க்கும் மேற்பட்ட கனடாவைச் சேர்ந்த கிறிஸ்தவ அராபியர்களை இலக்குவைத்து அவர்களைப் பட்டியலிட்டுள்ளது. முஸ்லிம்களை மதம்மாற்றும் முயற்சியில் ஈடுபடுத்துவதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலைப் பார்த்துவிட்டு அதிலிருக்கும் சிலரோடு கனடா புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். ஷுமுக் அல் இஸ்லாம் என்ற இணையத்தளமே இந்த நபர்களின் பெயர்,படம்,விலாசம்,தொலைபேசி இலக்கம், என்பனவற்றை வெளியிட்டுள்ளது. இவர்களுள் அநேகமானவர்கள் எகிப்திய கனேடியர்கள், வெளிப்படையாகவே இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுபவ…
-
- 2 replies
- 580 views
-
-
கனடாவில் புதிய குடிவரவாளர்கள் ஏனைய கனேடியர்களை விடக் குறைவான வருமானத்தைப் பெறுவதற்கு இன ரீதியிலான பாகுபாடு காரணமாக இருக்கலாமெனக் கருத்து வெளியாகியுள்ளது. கனடாவில் பிறந்தவர்களுக்கு நிகரான வருமானத்தைப் பெறுவதற்கு மொழி, மற்றும் கலாச்சார வேறுபாடுகள் -புதிய குடிவரவாளர்களுக்கு பாதகமாக உள்ளதாக மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் சமுக விஞ்ஞானி ஆர்தர் சுவீட்மன் (Arthur Sweetman) தெரிவித்தார். 1990 களில் இருந்து குடிவரவாளர்களின் வருமான வேறுபாடு அதிகமாக இருந்து வருவதைப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. ஆனால், வருமான வேறுபாடு தொடர்ந்து வருவதற்கு வெளிப்படையான காரணங்கள் எவையும் இல்லையென சுவீட்மன் தெரிவிக்கிறார். வெளிநாடுகளில் பெறப்பட்ட கல்வித் தராதரங்களையும், அனுபவங்களையும் க…
-
- 7 replies
- 865 views
-
-
Driving in adverse weather conditions (226-237)226 You MUST use headlights when visibility is seriously reduced, generally when you cannot see for more than 100 metres (328 feet). You may also use front or rear fog lights but you MUST switch them off when visibility improves (see Rule 236). [Law RVLR regs 25 & 27] 227 Wet weather. In wet weather, stopping distances will be at least double those required for stopping on dry roads (see Rule 126). This is because your tyres have less grip on the road. In wet weather you should keep well back from the vehicle in front. This will increase your ability to see and plan ahead if the steering becomes u…
-
- 1 reply
- 947 views
-
-
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராசா இன்று பிற்பகல் திடீரென்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார. சிபிஐ தன்னைக் கைது செய்யாமல் இருக்க, முன்ஜாமீன் பெறும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளார் ராசா. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் வரும் புதன்கிழமை விசாரணைக்கு வர வேண்டும் என ஆ. ராசாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. சிபிஐயின் சம்மனைப் பெற்றுக் கொண்ட சில மணி நேரங்களில், கடும் காய்ச்சல் என்று கூறி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ராசா. மேலும், அவருக்கு கடும் உடல்நலக் கோளாறுகள் இருக்கலாம் (?) என சந்தேகப்படுவதால் தீவிர சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக…
-
- 4 replies
- 769 views
-
-
சென்னைப் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தால் வழக்கு தொடருவோம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி வருகிற 22 ஆம் தேதி சென்னைக்கு வருகிறார் என்றும், தமிழ்நாட்டில் இளைஞர் காங் கிரசை வலுப்படுத்தும் நோக்கத்திற்காகவும் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசின் பங்கு குறித்து ஆலோசனை செய்யும் நோக்கத்துடன் அவரது பயணம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தி பங்கேற்கும் சென்னை அரசியல் நிகழ்ச்சியானது பாரம்பரிய மிக்க சென்னை பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது என்ற தகவல் வருகிறது. இதனை நாம் தமிழர…
-
- 5 replies
- 1k views
-
-
வடக்கு – தெற்கு கொரிய நாடுகளிடையே அணுகுண்டு போர் ஆரம்பிப்பதற்குரிய ஆபத்தான சூழல் கருக்கொண்டுள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. வரும் திங்கள் அல்லது செவ்வாய் தென்கொரிய படைகள் பாரிய இராணுவ ஒத்திகையை நடாத்தவுள்ளன. வடகொரியாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ள தென்கொரியா தன்னை தயார் படுத்துகிறது என்று கூறும் அமெரிக்கா தென்கொரியாவின் படைத்துறை பயிற்சிக்கான ஆதரவையும் தெரிவித்துள்ளது. ஆனால் தென்கொரியா பயிற்சியை ஆரம்பித்து, அதனால் ஒரு போர் மூளுமானால் வடகொரியா அணுகுண்டு ஏவுகணைத் தாக்குதலை நடாத்தும் அபாயம் தெரிவதாக இராணுவ ஆய்வாளர் தெரிவிக்கிறார்கள். அதேவேளை இரு கொரியாக்களையும் ஒன்றாக்க முனையும் சீனாவின் கனவும் கைகூடாது என்று தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும…
-
- 1 reply
- 617 views
-
-
ராணுவத்தில் ஓரினச்சேர்க்கை வீரர்கள் பணியாற்றுவதற்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு அதிபர் ஒபாமாவும் விரைவில் கையெழுத்திடவுள்ளார். அமெரிக்க ராணுவத்தில் வீரர்கள் பலர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தடுக்க கடந்த 1993-ம் ஆண்டு முன்னாள் அதிபர் பில்கிளின்டன் ஆட்சியின் போது சட்டம் கெதண்டுவரப்பட்டு, அதன்படி 13,ஆயிரம் ஓரின சேர்க்கை வீரர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். இதனை அப்போதிருந்த ஓரினச்சேர்க்கையாளர்கள் எதிர்த்து வந்தனர். இந்நிலையில் அமெரிக்க ராணுவத்தில் ஓரின சேர்க்கை வீரர்கள் பணியாற்ற அனுமதிப்பது குறித்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றம்கொண்டுவரப்பட்டு செனட் சபை, பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதில், 65…
-
- 0 replies
- 831 views
-
-
தமிழகத்தை சேர்ந்த நான்குபேர் உள்பட 5 பேர் ஓமன் நாட்டில் தீயில் கருகி பரிதாபமாக இறந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே வெள்ளங்குழி கிராமத்தை சேர்ந்த இசக்கி மகன் சுப்பிரமணியன்(35). இவருக்கு திருமணமாகி இந்துமதி என்ற மனைவியும் இரண்டரை வயதில் பிரியதர்சினி, ஒன்றரை வயதில் இஷாந்திகா என இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்குமுன்பு மணிகண்டன் ஓமன் நாட்டில் எலக்ட்ரிஷியன் வேலைக்கு சென்றிருந்தார். பைசியா என்ற நகரில் நண்பர்கள் 5 பேருடன் ஒரே அறையில்தங்கியிருந்தார். இவருடன் நெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மணிகண்டன்(32) என்பவரும் தங்கியிருந்தார். இவருக்கு திருமணமாகி தங்கம் என்ற மனைவியும் சக்திமாரி(2) என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன் …
-
- 0 replies
- 426 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயருடன் ‘பிள்ளை’ என்ற பெயர் சேர்ந்து வருவதால் அவரை எல்லோரும் ‘பிள்ளைமார்’என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. பிரபாகாரன், ‘மீனவர்’ சமுதாயத்தைச் சேர்ந்தவர்’’என்ற புதிய தகவலை வெளியிட்டார் திருமாவளவன். மீனவர் உரிமை மீறலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு, மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் சார்பில் மீனவர் வாழ்வுரிமை மூன்றாவது மாநில மாநாடு திருச்செந்தூரை அடுத்துள்ள வீரபாண்டியப்-பட்டினத்தில் கடந்த 11-ம் தேதி நடந்தது. திருச்செந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க.கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். கூட்டம் நடந்த வ.உ.சி. திடல் முழுவதும் விடு…
-
- 0 replies
- 5.3k views
-
-
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகேயுள்ள சிங்காநல்லூரை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி காளீஸ்வரி (27). இவர்களுக்கு 1 1/2 வயதில் சவுந்தர்ராஜ் என்ற குழந்தை இருந்தது.நேற்று தாத்தூரை அடுத்த ராஜீவ் நகர் பாறைக்குழி அருகேயுள்ள கிணற்றில் குழந்தை சவுந்தர்ராஜ் பிணமாக மிதந்தான். தகவல் அறிந்ததும் ஆனைமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றினார்கள். நேற்று ஆனைமலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்ப்பதற்காக காளீஸ்வரி தனது குழந்தையுடன் சென்றார். இந்த நிலையில் குழந்தை கிணற்றில் பிணமாக கிடந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து காளீஸ்வரியிடம் விசாரணை நடத்தியபோது ஆஸ்பத்திரியில் உறவினரை பார்த்துவிட்டு தாத்தூர் எல்.ஆர…
-
- 0 replies
- 711 views
-
-
ஊழல் புகார்களுக்குள்ளானவர்கள் மீது காங்கிரஸ் கட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்தது. அதேபோல பாஜகவால் செயல்பட முடியுமா என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சவால் விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் 83வ மாநாடு டெல்லி அருகே புராரியில் தொடங்கியது. கட்சி்த தலைவர் சோனியா காந்தி கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், ஊழலை எந்த மட்டத்திலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். ஊழலுக்கு எதிராகவும், ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராகவும் காங்கிரஸ் விரைந்து செயல்பட்டது. ஆனால் அதேபோல செயல்பட முடியுமா பாஜக என்பதை அறிய விரும்புகிறேன். எங்களது முதல்வரை, அமைச்சரை ராஜினாமா செய்ய வைக்க முடிந்தது. அதேபோல பாஜகவால் செய்ய முடியுமா? அரசு நில ஒதுக்கீடு போன்றவற்றில் நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழும் …
-
- 0 replies
- 440 views
-
-
இடையிலே எத்தனையோ நிகழ்ச்சிகள் - சம்பவங்கள் - கழகத்திலே உயர்வு தாழ்வுகள் - ஆட்சிக்கு வந்த நேரங்களும் உண்டு - ஆட்சியை இழந்து சோதனையிலே நடைபோட்ட நாட்களும் உண்டு - அத்தனையிலும் சளைக்காமல், சோர்வடையாமல் அன்று போலவே இன்றும் இளைஞராக, கருணாநிதி என்ற இளைஞனுக்கும் துணை நிற்கும் அன்பழக உடன்பிறப்பாக விளங்கி வருகிறார். நமது கழகத்திற்கு துயரங்கள், துன்பங்கள் வந்த நேரத்தில் எல்லாம் அதைப்பற்றி சிறிதும் கலங்காமல் கழக வளர்ச்சிக்குத் தூணாக விளங்கியவர்தான் நம்முடைய பேராசிரியர் அன்பழகன் என்று அவருடைய 89வது பிறந்த நாளையொட்டி முதல்வர் கருணாநிதி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: 1942-ம் ஆண்டு திருவாரூர், விஜயபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் இண…
-
- 0 replies
- 539 views
-
-
தமிழ்நாட்டிற்கு வரும் விமானங்கள் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து கிளம்பும் விமானங்கள் ஆகிய அனைத்திலும் தமிழில் அறிவிப்பு வெளியாக வேண்டும். இல்லையெனில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சீமான் அறிவித்துள்ளார். இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் தமிழ்நாட்டின் சென்னை உட்பட மதுரை, திருச்சி, கோவை நகரங்களுக்கு பல்வேறு தனியார் விமான சேவைகளும், அரசின் இந்தியன் ஏர்லைன்ஸ் சேவையும் இயங்குகின்றன. இதில் தமிழர்களே பெரும்பான்மையினர் பயணம் செய்கின்றனர். தமிழர்கள் மூலமே இந்த நிறுவனங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. ஆனால் இந்த விமான சேவை எதிலும் மருந்துக்கு கூட தமிழ் இல்லை. அறிவிப்புக்கள், பயணிகளை வரவேற்கும் வரவேற்புகள் என அனைத்தும் ஆங்கி…
-
- 0 replies
- 427 views
-
-
கூட்டணி, தேர்தல் வியூகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக, வரும் 22ம் தேதி தமிழகம் வருகிறார். சென்னை, மதுரை, திருச்சி, விழுப்புரம், நெல்லை, திருப்பூர் ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்யும் ராகுல் இந்த முறையாவது தங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக தலைவரான முதல்வர் கருணாநிதியை சந்திப்பாரா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் 13 லட்சம் பேர் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நடந்த நிர்வாகிகள் தேர்தலில் பல்வேறு பதவிகளுக்கு 60,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த புதிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவும், கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிக்கவு…
-
- 0 replies
- 424 views
-
-
டெல்லியில், அகில இந்திய காங்கிரஸ் மாநாடு இன்று தொடங்குகிறது. வடமேற்கு டெல்லியில், டெல்லி-சண்டிகார் சாலையில் புராரி என்ற இடத்தில் இம்மாநாடு நடைபெறுகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு, இம்மாநாடு நடைபெறுகிறது. இது, 83-வது மாநாடு ஆகும். கடந்த 1978-ம் ஆண்டுக்கு பிறகு, இப்போதுதான் டெல்லியில் மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட சுமார் 20 ஆயிரம் பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள். மன்மோகன்சிங், சோனியா ஆகியோர் இன்று ஹெலிகாப்டரில் மாநாட்டு மைதானத்துக்கு வந்து சேருகிறார்கள். மேடையையொட்டி, அவர்களுக்காக தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, சாப்பாட்டு கூடங்கள், வெந்நீர், ஹீட்டர் வசதியுடன் கூடிய குளியலறைகள், 8 படுக்கைகள் கொண…
-
- 0 replies
- 443 views
-