உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
இன்றைய நிகழ்ச்சியில் - பெற்றோர் இன்றி தனியாக ஐரோப்பா வந்த அகதி சிறார்களை பிரிட்டன் ஏற்கும் என்கிறார் பிரிட்டிஷ் பிரதமர். அப்படியான சிறார்கள் பலர் வாழும் கலே முகாமில் இருந்து பிபிசியின் சிறப்பு தகவல். - வங்கதேசத்தில் வலைப்பதிவர்கள், கல்விமான்கள் மற்றும் ஒருபாலுறவு செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து சர்வதேச கவலைகள் அதிகரிக்கின்றன. - நீர் நாய்களால் ஏற்பட்டுள்ள பிரச்சனை. மீன் தின்னும் இந்த இனத்தால் இங்கிலாந்தில் தீரா தலைவலி.
-
- 0 replies
- 243 views
-
-
ஆப்கானிஸ்தான்: தாலிபன் ஆட்சியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் வர்த்தகம் - அரசின் நிலைப்பாடு என்ன? சிகந்தர் கெர்மானி பிபிசி நியூஸ், ஆப்கானிஸ்தான் 13 டிசம்பர் 2021, 04:30 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போதைப் பொருள் பயிரிடும் கோப்புப்படம் தென் ஆப்கானிஸ்தானின் ஊரகப்பகுதியில் அமைந்துள்ள ஓர் சிறிய அறையில் குவிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளில் போதைப் பொருட்கள் மின்னுகின்றன. அவை, ஏற்றுமதி செய்யத்தக்க தரத்திலான மெத்தாம்பெட்டமின் (methamphetamine). அவை ஆஸ்திரேலியா வரையுள்ள நாடுகளுக்குக் கடத்தப்படும். அதன்பின்னர், இந்த அறையில் சேமித்து வைக்கப…
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
கொலம்பிய ஜனாதிபதி மீது பொருளாதார தடை விதித்த டொனால்ட் ட்ரம்ப்! உலகளவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளான கொலம்பியா, வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். போதைப்பொருள் கும்பலை தடுக்கும் நடவடிக்கை என்று கூறி, கரீபியன் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் நுழைந்த எட்டு கப்பல்களையும் அமெரிக்க இராணுவம் தகர்த்துள்ளது எனவும் கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி எனவும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வர…
-
-
- 4 replies
- 243 views
-
-
வாக்காளர் அட்டை இருந்தால் மட்டுமே மருத்துவ சேவை - ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். வாக்காளர் அட்டை இருந்தால் மட்டுமே மருத்துவ சேவை வாக்காளர் அட்டை இல்லாதவர்களுக்கு மருத்துவ சேவை மறுக்கப்படுவதாக ஆஃபிரிக்காவில் உள்ள புருண்டி நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை அந்நாட்டு அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது. அமெரிக்க தேர்தல் விவகாரம்- பேனனிடம் விசாரணை 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட்டதாக கூறப்படுவது குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவ…
-
- 0 replies
- 243 views
-
-
ட்ரம்ப் மீதான விசாரணையை மேற்கொண்ட சட்டத்தரணிகள் குழு பணி நீக்கம்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் அவருக்கு எதிரான இரண்டு குற்றவியல் வழக்குகளில் பணியாற்றிய பத்துக்கும் மேற்பட்ட நீதித்துறை சட்டத்தரணிகளை பணிநீக்கம் செய்துள்ளது. பதவி நீக்கமானது திங்கட்கிழமை (27) முதல் அமுலுக்கு வந்துள்ளது. ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடுப்பதில் இவர்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருப்பதால், ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலை நம்பிக்கைத் தன்மையாக செயல்படுத்துவதை நம்ப முடியாது என்று தீர்மானம் எடுக்கப்பட்டதை அடுத்து சட்டத்தரணிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக செயல் சட்டமா அதிபர் ஜேம்ஸ் மெக்ஹென்றி சுட்டிக்காட்டியுள்ளார். சட்டத்தரணிகள் முன்னாள் சிறப்பு ஆலோசகர் ஜாக் ஸ்ம…
-
- 0 replies
- 243 views
-
-
உக்ரைன் ஒரு துளி நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது - டிரம்பிற்கு ஜெலென்ஸ்கி பதில் 10 AUG, 2025 | 11:04 AM உக்ரைன் ஒரு துளி நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது என தெரிவித்துள்ள அந்த நாட்டின் ஜனாதிபதி வொளோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி சமாதானத்திற்காக முன்வைத்த திட்டத்தினை நிராகரித்துள்ளார். உக்ரைன் ரஸ்யா செய்த விடயங்களிற்காக அந்த நாட்டிற்கு எந்த வெகுமானங்களையும் வழங்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனியர்கள் தங்கள் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிற்கு வழங்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். ரஸ்ய உக்ரைன் மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கு சில நிலங்களை கையளி;க்கவேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையிலேயே உக்ரைன் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ரஸ்ய உக்…
-
- 0 replies
- 243 views
-
-
லண்டனில் சனிக்கிழமை ஏழு பேர் கொல்லப்பட்டமை சுதந்திர உலகின் மீதான ஒரு தாக்குதல் என்கிறார் பிரிட்டிஷ் பிரதமர்; • மத்திய கிழக்கில் ஒரு இராஜதந்திரப் போர் ஆரம்பம், கட்டார் நாட்டுடனான உறவை ஆறு நாடுகள் துண்டித்தன. • கரு முட்டையக புற்றுநோய்க்கட்டிகளை கரைக்கும் புது மருந்துக்கான ஆரம்பகட்ட பரிசோதனை முடிவுகள் நம்பிக்கையளிப்பதாக கூறும் பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் ஆகியவை இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 243 views
-
-
உக்ரைன் அணுமின் நிலையம்... பாதுகாப்பு வலையமாக, அறிவிப்பு. ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் சபோரிஜியா அணுமின் நிலையத்தைச் சுற்றி பாதுகாப்பு வலயத்தை நிறுவுவதற்கு சர்வதேச அணுசக்தி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த வாரம் ஆலைக்கு கண்காணிப்பு குழுவை அனுப்பி ஆய்வு செய்த குறித்த அமைப்பு, தற்போதைய நிலைமை ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறியுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் ஆக்கிரமிப்பு அணுசக்தி பேரழிவு பற்றிய அச்சத்தைத் தூண்டியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் சபோரிஜியா அணுமின் நிலையம் பாதுகாப்பு வலயம் என சர்வதேச அணுசக்தி அமைப்பு அறிவித்துள்ள நிலையில் அதனை உக்ரேனிய ஜனாதிபதி வரவேற்றுள்ளார். போரின் …
-
- 0 replies
- 243 views
-
-
குடியரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ஏற்றி சென்ற ரயில் விபத்து : ஒருவர் பலி!!! அமெரிக்காவில் சுற்றுலா சென்ற குடியரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ஏற்றி சென்ற ரயில் ட்ரக்குடன் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அமெரிக்காவில் குடியரசு கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் மேற்கு வர்ஜினியா மாநிலத்திற்கு சார்லோட்டஸ்வில்லி என்ற நகரை கடந்து சென்று கொண்டிருக்கும் போது ரயில் கடவையை கடக்க முயற்சி செய்த குப்பை லொறி ஒன்றியுடன் மோதி விபத்திற்குள்ளானதில் லொறி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் லொறியில் இருந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவத்தில் உறுப்பினர்களுக்கு எது வித ப…
-
- 0 replies
- 243 views
-
-
இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக பிடியாணையா? சர்வதேச நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை விதிக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றியது அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபை Published By: RAJEEBAN 05 JUN, 2024 | 10:22 AM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிரான பிடியாணை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை விதிக்கும் சட்டமூலம் அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் உள்ள இஸ்ரேல் சார்பு குடியரசுகட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த சட்டமூலத்தை சனப்பிரதிநிதிகள் சபை ஏற்றுக்கொண்டுள்ளது. அமெரிக்க குடியரசுகட்சி பெரும்பான்மை பெற்றுள்ள சனப்பிரதிநிதிகள் சபையில்…
-
- 1 reply
- 243 views
- 1 follower
-
-
சைபீரிய நிலக்கரிச் சுரங்க தீவிபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52ஆக உயர்வு! சைபீரிய நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் உயிரிழந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு சைபீரியாவின் கெமரோவோ பகுதியில் உள்ள லிஸ்ட்யாஸ்னியா சுரங்கத்தில் நேற்று (வியாழக்கிழமை) இந்த தீவிபத்து ஏற்பட்டது. மொத்தம் 285பேர், 820 அடி ஆழத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தீ வெடித்து காற்றோட்ட அமைப்பு மூலம் சுரங்கத்தை விரைவாக நிரப்பியது. இதனையடுத்து, மீட்புப் பணியாளர்கள் 239 சுரங்கத் தொழிலாளர்களை மேற்பரப்பிற்கு அழைத்துச் சென்றனர். அவர்களில் 49 பேர் காயமடைந்தனர். வெடிக்கும்…
-
- 0 replies
- 243 views
-
-
ஹமாஸ் ஒப்படைத்த பணய கைதிகளின் உடல்களில் குழப்பம்! பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைப்பதற்கு அவகாசம் தேவைப்படுவதாக இஸ்ரேலிடம் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வந்த போர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முயற்சியால் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இந்நிலையில் அமெரிக்கா முன்மொழிந்த 20 அம்ச திட்டங்களின் முதல் கட்டத்திற்கு மட்டுமே, இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளதுடன் அதன்படி பணயக்கைதிகளை பரஸ்பரமாக விடுவித்தனர். மொத்தம் 28 பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஹமாஸ் படிப்படியாக ஒப்படைத்து வருகிறது. பிணைக்கைதிகளின் உடல்கள் அடங்கிய பெட்டிகளை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் இயக்கம் ஒப்படைத்து வருகிறது. அண்மையில், பணயக்கைதியின் உடலுக…
-
- 0 replies
- 243 views
-
-
ஆங் சாங் சூகிக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை இராணுவத்தால் ஆளப்படும் மியன்மார் நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சாங் சூகி ஊழல் வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மியன்மாரில் கடந்த 2021ஆம் ஆண்டு பெப்ரவரியில் இராணுவத்தால் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தப்பட்டதிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சாங் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 76 வயதான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி மீது வாக்காளர் மோசடி உள்ளிட்ட குற்றவியல் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளதோடு, மனித உரிமைக் குழுக்கள் நீதிமன்ற விசாரணைகளை போலித்தனமானது என கண்டித்துள்ளன. வழக்கு விசாரணை தலைநகர் Nay Pyi Taw…
-
- 0 replies
- 243 views
-
-
சிட்னி விமானங்கள் தாக்குதல் குறித்து கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்; தீவிரவிசாரணை காரணமாக மன உளைச்சலிற்குள்ளாகியுள்ளார் சிட்னியில் பயணிகள் விமானங்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள முயன்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் ஓருவரை காவல்துறையினர் விடுதலை செய்துள்ள அதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகள் குறித்து அந்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார் கைதுசெய்யப்பட்டுள்ள நால்வரில் அப்துல் மெர்கி என்ற 50 வயது நபரை காவல்துறையினர் செவ்வாய்கிழமை இரவு விடுதலை செய்துள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றன எனவும் உரிய தருணத்தில் தகவல்களை வ…
-
- 0 replies
- 243 views
-
-
ஜப்பானின் மிகப்பெரிய கப்பல் ஒன்றில் தீ விபத்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட பயணிகள் கப்பலில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ பல மணிநேர போராட்டத்தின் பின்னர் கப்பலில் பணிபுரிந்தவர்கள், தீயணைப்பு மற்றும் கடற்படைவீரர்கள் ஆகியோரினால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதோடு தீ விபத்தில் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான அசுகா II என்ற கப்பலின் மேல் தளத்தில் உள்ள ஒரு களஞ்சியசாலையில் தீப்பற்ற தொடங்கியதாக உள்ளூர் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இதன்போது கப்பலில் அத…
-
- 0 replies
- 243 views
-
-
பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியின் மைக்கேல் கோவின் தேர்தல் கொள்கை வெளியீடு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டுமென்று பரப்புரை செய்த தலைவர்களில் ஒருவரான மைக்கேல் கோவ், கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்தத் தலைவராகவும், பிரதமராகவும் வருவதற்கு போட்டியிடப் போகும் நிலையில், தனது தேர்தலுக்கான தனது கொள்கைத் திட்டத்தை வெளியிட்டுள்ளார். இதுவே சரியான செயல்பாடு என்பதால் போட்டியிடப் போவதாக கூறியுள்ள மைக்கேல் கோவ், இதே காரணத்திற்காக தான் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டுமென வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருகின்ற கட்டுப்பாடற்ற குடியேற்றத்தை முடிவுக்கு கொண்டுவர அவர் உறுதியளித்துள்ளார். பெரி…
-
- 0 replies
- 243 views
-
-
லிவர்பூல் வாகனத் தரிப்பிட தீ தீவிபத்து: 1,600ற்கு மேற்பட்ட வாகனங்கள் தீயிற்கு இரையாகின… பிரித்தானியாவின் வடபகுதியின் லிவர்பூல் நகரில் பல மாடிகளைக் கொண்டு அமைந்துள்ள வாகனத் தரிப்பிடமொன்றில் திடீரென தீ பரவியதில், சுமார் ஆயிரத்து 600ற்கு மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.இந்த நகரில் அமைந்துள்ள கிங்ஸ் டொக் வாகனத் தரிப்பிடத்திலேயே, நேற்று ஞாயிற்றுக்கிழமை (31.12.17) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வாகனத் தரிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள குடியிருப்புத் தொகுதியில் ஒரே புகைமூட்டமாகக் காணப்பட்டதால், அக்குடியிருப்புத் தொகுதியில் வசித்துவந்த குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக, காவற்த…
-
- 0 replies
- 243 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்ஸிக்கோவிற்கு 30 % வரி! ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பு! மெக்ஸிக்கோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 30 % வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றது முதல் பரஸ்பர வரிவிதிப்பு என்ற பெயரில் பல்வேறு நாடுகளுக்கு வரி விதித்து வருகிறார். இந்த நிலையில் எதிர்வரும் ஒகஸ்ட் 1ம் திகதி முதல் மெக்ஸிக்கோ, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 30 % வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் நேற்று (12) அறிவித்துள்ளார். மேலும், ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கு(Ursula von der Leyen) எழுதிய கடிதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான தொடர்ச்சியான வர்த்தக பற்றாக்குறைகள் விரக்தியை ஏற்படுத்துகிறது எனவும் அவர் …
-
- 0 replies
- 243 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த டிசம்பர் மாதம் நடந்த 29வது காலநிலை உச்சிமாநாட்டில் காலநிலை செயல்முறையில் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான ஐ.நா திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு நீடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த சில ஆண்டுகளில், காலநிலை மாற்றத்தின் தாக்கமும் அதன் விளைவுகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, தெற்காசியா முழுவதும் நிகழ்ந்து வரும் காலநிலை பேரிடர்கள், புறக்கணிக்க முடியாத ஒரு கேள்வியை முன்வைத்துள்ளன. இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகள் அனைத்துமே காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களுக்குக் கூட எளிதில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலையில், க…
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
கடலில் 171 ட்ரில்லியன் பிளாஸ்டிக் குப்பைகள்: உயிர்க் குலத்தை அச்சுறுத்தும் 'மிதக்கும் நோய்' பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஜியார்ஜினா ரன்னார்டு பதவி,பிபிசி கால நிலை, அறிவியல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் உலக பெருங்கடல்களில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் மொத்த எண்ணிக்கையை அறிவியல்பூர்வமாக மதிப்பிட்டிருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு வேலையற்ற வேலை என்று தோன்றுகிறதா? அந்த பிளாஸ்டிக் உங்களை, நம்மை என்ன செய்யும் என்று படித்துவிடுங்கள். பிறகு அப்படி நினைக்கமாட்டீர்கள். சரி மீண்டும் எண்ணிக்கைக்கு வருவோம். …
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
ஸ்பெயினில் நடந்த இரட்டை பயங்கரவாத தாக்குதலில் பதின்னான்கு பேர் பலியானது குறித்த செய்திகள், போதைமருந்துக்கு எதிரான தனது போரை பிலிப்பைன்ஸ் அதிபர் தீவிரப்படுத்தியுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு மற்றும் முதலாம் வகை நீரிழிவு நோய்க்கான புதிய சிகிச்சை முறை ஒன்று குறித்த சிறப்புச் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 243 views
-
-
வன்முறை போராட்டங்களின் பின் துனிசியா பிரதமர் பதவி நீக்கம் நாடு முழுவதும் வன்முறை போராட்டங்கள் வெடித்ததை அடுத்து துனிசியாவின் ஜனாதிபதி, பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சியை பதவி நீக்கம் செய்து பாராளுமன்றத்தை இடைநீக்கம் செய்துள்ளார். கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதாரத்தை அரசாங்கம் தவறாக கையாள்வது தொடர்பாக பல துனிசிய நகரங்களில் வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளது. இந் நிலையில் ஒரு புதிய பிரதமரின் உதவியுடன் நிறைவேற்று அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி கைஸ் சையத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாராளுமன்றம் இடையே அதிகாரங்களை பிரிக்கும் துனிசியாவின் 2014 அரசியலமைப்பிற்கு இது மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. பல நகரங்களில் …
-
- 0 replies
- 243 views
-
-
துருக்கியில் வெடிப்புச்சம்பவம் - பலர் காயம் By RAJEEBAN 13 NOV, 2022 | 08:36 PM துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற வெடிப்புச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர் இஸ்தான்புல் ஆளுநர் இதனை உறுதி செய்துள்ளதுடன் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வெடிவிபத்திற்கான காரணங்கள் இன்னமும் வெளியாகவில்லை இந்த வெடிவிபத்தை பதிவு செய்த பலர் அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அவசரசேவை பிரிவினர் விரைந்துள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர் என உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வீதிகளில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர் …
-
- 2 replies
- 243 views
- 1 follower
-
-
உலகப் பார்வை: ''கேட்டலோனியா ஸ்பெயினிடம் இருந்து சுதந்திரத்தை விட, சுயாட்சியை பெறலாம்'' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். "சுவிஸ் பாணியிலான கூட்டாட்சி சுயாட்சியை பெறலாம்" படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஸ்பெயினிடம் இருந்து முழு சுதந்திரத்தை பெறுவதை விட, சுவிஸ் பாணியி…
-
- 0 replies
- 243 views
-
-
கலிபோர்னியா மாகாணம் இர்வின் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்துக்குள் சோதனையிடுவதற்காக செல்லும் போலீஸார். | படம்: ஏ.பி. தங்கள் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை பெற கர்ப்பிணி என்பதை மறைத்து சீன பெண்கள் பலர் அமெரிக்காவுக்கு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மகப்பேறு சுற்றுலா சேவை என்ற பெயரில் இந்த மோசடி தொழில் நடைபெறுகிறது. இது தொடர்பாக கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ள பல்வேறு அடுக்கு மாடிக் குடியிருப்பு பகுதிகளில் போலீஸார் அதிரடி சோதனையை தொடங்கி உள்ளனர். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இர்வின், ரான்சோ குகமோங்கா, ரோலேண்ட் ஹைட்ஸ் மற்றும் வால்நட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் இதுபோன்ற சோதனை நடத்தப்படும் என்றும் அமெரிக்க குடி…
-
- 0 replies
- 243 views
-