Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ´தலைவா’ வெளியீட்டு சிக்கலால் ’ஜில்லா’ படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தார் விஜய். வெளியீட்டுக்கான தடை நீங்கிய தகவல் கிடைத்ததுமே சென்னை பின்னி மில் வளாகத்தில் ‘ஜில்லா’ படப்பிடிப்பு சுறுசுறுப்பாகத் தொடங்கியது. பொதுவாகவே விஜய் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுக்கு சம்பந்தமில்லாதவர்கள் நுழையக்கூடாது என்பதால் ரொம்பவே கெடுபிடி இருக்கும். இப்போது அந்த கெடுபிடி பலமடங்கு அதிகரித்துள்ளது. ஆஜானபாகுவான பத்துக்கும் மேற்பட்டவர்களை சீருடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளார்கள் படக்குழுவினர். கடந்தவாரம் விஜய், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்களுடன் ஏராளமான ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளும் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர். படப்பிடிப்பின் இடைவேளையின்போது ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். …

    • 0 replies
    • 673 views
  2. மோசடி வழக்குகளில் கைதான பவர் ஸ்டார் ஜாமினில் வெளிவந்து கலக்கல் பேட்டி கொடுத்துள்ளார். மோசடி வழக்குகளில் கைதான பவர் ஸ்டார் சீனிவாசன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார் என்று பேஸ்புக்கில் செய்தி வெளியாகியுள்ளது. பல்வேறு மோசடி வழக்குகளில் கைதான நடிகர் பவர் ஸ்டார் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பவர் ஜாமீனில் விடுதலையாகி இருப்பதாக பேஸ்புக்கில் செய்தி வந்துள்ளது. இதையடுத்து முன்னணி நாளிதழ் ஒன்றும் அதன் இணையதளத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தொப்பையும் தொந்தியுமாக இருந்த பவர் ஸ்லிம்மாக ஆகிவிட்டாராம். சென்னைக்கு வந்த மனிதர் தனது ஸ்டைலில் ரவுசு பேட்டி ஒன்றை வேறு கொடுத்துள்ளாராம். பேட்டியில் அவர் கூறுகையில், சிறை எனக்கு ஆசிரமம் போன்று இருந்தது. அங்க…

  3. மெட்ராஸ் கபே.. தமிழ் விநியோகஸ்தருக்கு நஷ்டம் 1 கோடி! சென்னை: மெட்ராஸ் கபே படத்தை தமிழகத்திலும் புதுவையிலும் திரையிடாததால் ரூ 1கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாம் அதன் விநியோகஸ்தருக்கு. ஜான் ஆப்ரஹாம், நர்கிஸ் ஃபக்கிர் ஆகியோர் நடிப்பில் உருவான ‘மெட்ராஸ் கபே' திரைப்படம் கடந்த 23-ந் தேதி தமிழகம் - புதுவையைத் தவிர பிற மாநிலங்களில் வெளியானது. இந்த படத்தை ஷூஜித் சர்கார் இயக்கியிருந்தார். ஜான் ஆபிரகாமே தயாரித்திருந்தார். இந்தியில் உருவான இப்படம் தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் படம் தமிழருக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளைத் தவறாகச் சித்தரிப்பதாகவும் உள்ளதாக சர்ச்சை எழுந்தது. படத்தை தமிழில் வெளியிட நீதிமன்றம் தடை செய்த நிலையில், திரையரங்கு உரிமைய…

  4. தெற்காசியாவின் மைக்கேல் ஜாக்‌ஷன் எனப்புகழப்படும் பிரபுதேவா, ஸ்ரீதேவியுடன், கடல் கடந்து நடத்தப்படும் இந்தியப்படங்களின் விருதுவிழாவில் ஜோடி போட்டு ஆடியதுதான் டாக் ஆஃப் த டவுனாக இருந்தது! தற்போது மறுபடியும் சம்பள விவகாரத்தில் செய்தியில் அடிபட ஆரம்பித்திருக்கிறார் பிரபுதேவா! ஒரு பாட்டுக்கு ஆடி, நடன நடிகராக இருந்து பிறகு டான்ஸ் மாஸ்டராக உருவெடுத்த பிரபுதேவா, ஒரு கட்டத்தில் கதாநாயகனாகவும் உயர்ந்தார். தனது ஹீரோ மார்க்கெட் டவுனானபோது திடுதிப்பென்று இயக்குனர் அஸ்திரத்தை கையிலெடுத்தார். ஆரம்பத்தில் அவரது இயக்கத்தின் மீது இங்குள்ள ஹீரோக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால், தெலுங்கில் அவர் அதிரடி ஹிட் கொடுத்ததையடுத்து தமிழில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஓரிரு படங்களை…

  5. ‘மெட்ராஸ் கபே’ படத்தை பாராட்டிய நடிகை நீது சந்திராவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர் தமிழில் ‘யாவரும் நலம்’ பேய் படத்தில் அறிமுகமானார். தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். ‘மெட்ராஸ் கபே’ படத்தை புகழ்ந்து தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஏற்கனவே இப்படத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக தமிழ் அமைப்புகள் கண்டித்துள்ளன. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளன. தியேட்டர் அதிபர்கள் இந்த படத்தை திரையிட மறுத்து விட்டனர். இதனால் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் மெட்ராஸ் கபே ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. மெட்ராஸ் கபே படத்தை பார்த்த நீது சந்திரா படம் பிரமாதமாக உள்ளது என கருத்து தெரிவித்து உள்ளார்…

    • 0 replies
    • 395 views
  6. பிரபுதேவா நயன்தாராவுக்காக முதல் மனைவி ரமலத்தை பிரிந்து, விவகாரத்து பெற்று அவரையே திருமணம் செய்ய இருந்த நிலையில் அவர்களுக்குள் மனகசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இதற்கிடையே பிரபுதேவா குழந்தைகளுக்காக மறுமணம் செய்ய போவதாக செய்திகள் வெளிவந்தன. ஒரு சிலநடிகைகளுடன் கிசுகிசு ஏற்பட்டு திருமணம் செய்து கொளவதாக வதந்தியும் ஏற்பட்டது. இதுகுறித்து பிரபுதேவா கூறுகையில், இப்போதைக்கு மறுமணம் பற்றிய எண்ணம் எதுவும் கிடையாது. அப்படி செய்வதவாக இருந்தால் நானே மீடியாக்களே கூப்பிட்டு சொல்வேன். தற்போது எனது கவனம் எல்லாம் சினிமாவில் தான் இருக்கிறது. ஆனாலும் பிரபுதேவா தற்போது முன்னணி பாலிவுட் நடிகை ஒருவருடன் நெருக்கமாக பழகி வருவதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பாலிவுட்டில் ப…

    • 0 replies
    • 786 views
  7. போடா போடிக்கு பிறகு சரத்குமார் மகள் வரலட்சுமி நடித்திருக்கும் படம் மதகஜராஜா. விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலியுடன் படு கிளாமராக நடித்திருக்கிறார். கிளாமராக நடித்திருப்பத பற்றி அவர் கூறியதாவது: நான் அல்ட்ரா மார்டன் பொண்ணு. ரியல் லைப்புலேயே நான் கிளாமரான ஆளு. அப்புறம் சினிமாவுல அப்படி நடிக்குறதுல எனக்கு என்ன தயக்கம். போடா போடியில ஒரு டான்சரா நடிச்சேன். அதுல அதிகமா கிளாமர் காட்டத் தேவையில்லாம இருந்துச்சு. மதகஜராவுல அட்டகாசம் பண்ற பெண் கேரக்டர். சாங்குல கிளாமர் இருக்கும். மார்டன் பொண்ணா வளர்ந்ததால இந்த வெட்கம், நாணம் எல்லாம் எங்கிட்ட கொஞ்சம் குறைவுதான். சுந்தர்.சி சார் தான் என்னை ஒரு பொண்ணா மாற்றி நடிக்க வச்சார். மதகஜராஜா ரிலீசுக்காகத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு வேற கேரக்டர்ல நடிக்கா…

    • 0 replies
    • 551 views
  8. பலாத்காரம் செய்பவர்களுடன் சண்டைபோட ஒவ்வொரு பெண்ணுக்கும் கராத்தே கற்றுத் தரவேண்டும் என்றார் நீது சந்திரா. ‘ஆதிபகவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. இவர் கூறியதுகடந்த ஆண்டு டெல்லியில் மருத்துவக்கலூரி மாணவி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். அதில் குற்றவாளிக்களுக்கு தண்டனை கிடைத்தது. அந்த வருத்தம் ஆறுவதற்குள் சமீபத்தில் மும்பையில் ரவுடிகள் சிலரால் பெண் பத்திரிகையாளர் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். ஒரு சம்பவம் நடந்த சில மாதங்களிலேயே மீண்டும் ஒரு அசம்பாவித சம்பவம் நடந்திருக்கிறது.இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ள பெண்கள் எல்லோருக்கும் மார்ஷல் ஆர்ட் எனப்படும் சண்டை பயிற்சிகளை கற்றுத் தர வேண்டும். குறிப்பாக 4 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகள் எல்லோருக்…

    • 0 replies
    • 391 views
  9. கர்நாடக சங்கீதத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் முதன்மையானவர் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்களில் ஒருவரான தியாகராஜர். இவருக்கு இணையாக கொண்டாடப்படும் மற்றொருவர் கர்நாடக தேசத்தில் பிறந்து வளர்ந்த புரந்தரதாசர் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இசைமேதை மட்டும்மல்லாமல், இசையின் வழியாக கடவுளைக் கண்ட ஆன்மிகமிவாதியும் ஆவார். இவரது பெயரால் கர்நாடக மாநிலத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது! ஸ்ரீ புரந்தர இண்டர்நேஷனல் அறக்கட்டளை என்ற அந்த அமைப்பு சார்பில் பெங்களூரில் குரு வணக்க நிகழ்ச்சியொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ரஜினி பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கோச்சடையான் பட வேலைகளில் பிசியாக இருந்ததால் அவரால் போக முடியவில்லை. தனக்கு பதில் தன்ன…

  10. தலைவா படத்தின் வெளியீட்டிற்காக சத்யராஜ் நடிப்பில் வெளிவர இருக்கும் கலவரம் படமானது முடக்கப்பட்டுள்ளது என்றும் இதற்குக் காரணம் தலைவா படத்தின் தயாரிப்பாளர் என்று அதிரடியாக புகார் அளித்திருக்கிறார், சசிக்கலாவின் அக்காள் மகன் பாஸ் என்கிற பாஸ்கரன் நடித்திருக்கும் ‘தலைவன்’ படத்தின் பினாமி தயாரிப்பாளருமான ரமேஷ் செல்வன்! இவர் உளவுத்துறை, ஜனனம் போன்ற படங்களை இயக்கியிருக்குமம் இவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தலைவா திரைப்பட தயாரிப்பாளர் மீது புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். அந்த மனுவில்... “தற்போது சத்யராஜை கதாநாயகனாக வைத்து கலவரம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளேன். இந்த படத்தை எனது நண்பர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். எங்கள் படத்தின் விளம்பரங்களை பார்த்து, தலைவா படத்தின் தயாரிப்…

    • 0 replies
    • 544 views
  11. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் மொன்றியல் உலகத் திரைப்பட விழாவில் கனடியத் தமிழ்த் திரைப்படம் – A Gun & A Ring இதுவரையில் யாரும் சொல்லாத கதையைச் சொல்ல வேண்டு-மென்ற முனைப்போடு இளம் கனடிய இயக்குநர் லெனின் எம். சிவத்தின் எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு முரளியின் தயாரிப்பில் உருவான ‘A Gun & A Ring’ திரைப்படம் 37வது மொன்றியல் உலகத் திரைப்பட விழாவுக்குத் தெரிவாகியுள்ளது. ஈழத்துப் போர்கால உயிரிழப்புகள், கொடூர நினைவுகளிலிருந்து மீளவும் முடியாமல் அவற்றை மறக்கவும் முடியாமல், தாம் குடியேறிய நாட்டில் புதியதொரு வாழ்வைக் கட்டியமைக்க முனையும் வெவ்வேறு தலைமுறையினர் எதிர்கொள்ளும் கடினமான யதார்த்தத்தை இத்திரைப்படம் ஆழமாக ஆராய முயல்கின்றது. ‘படத்துக்குக் கிடைக்கும் இவ் அங்கீக…

  12. இந்தியாவே கொண்டாடும் ஒளிப்பதிவு இயக்குனர் சந்தோஷ் சிவன். மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக அறிமுகமாகி ஹிட் படங்களை கொடுத்தவர். ரோஜா, இருவர், ராவணன், துப்பாக்கி போன்ற புகழ் பெற்ற தமிழ் படங்களிற்கும், அசோகா, டில்சே போன்ற புகழ் பெற்ற ஹிந்தி திரைப்படங்களிற்கும் ஒளிப்பதிவு இயக்குனராக தனது முத்திரையைப் பதித்தவர். இவர் தனியே ஒளிப்பதிவு இயக்குனர் மாத்திரம் அல்ல மல்லி, உறுமி, அசோகா போன்ற புகழ் பெற்ற படங்களின் இயக்குனரும் ஆவார். இவர் ஈழப் பிரச்சனையை, ஈழ மக்களின் அவலத்தை “இனம்” என்ற தலைப்பில் படமாக்கியுள்ளார். அரவிந்தசாமி, சரிகா, கருணாஸ் நடித்த இத் திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ஈழப் போரால் அநாதையான சிறுவர்களைப் பற்றிய இந்த திரைப்படத்தில் யாழ்ப்பாணம…

  13. “வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர் படங்களில் நடித்த மனிஷா யாதவ், கமர்சியல் கதாநாயகி ஆக முடிவெடுத்து விட்டார். “பட்டயக்கிளப்பு பாண்டியா என்ற படத்தில் கவர்ச்சி பிளஸ் முத்தக்காட்சி என்றெல்லாம், புகுந்து விளையாடியுள்ளாராம். அவர் கூறுகையில், “சினிமாவில் அறிமுகமான போது, அழுத்தமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து, நடிக்கும் முடிவில் இருந்தேன். ஆனால், சினிமா வேறு மாதிரியாக உள்ளது. அதாவது வெயிட்டான வேடமாக இருந்தாலும், பாடல் காட்சிகளில் கதாநாயகியை கிளாமராக காண்பித்து, ரசிகர்களை ரிலாக்ஸ் செய்ய நினைக்கின்றனர். அதனால் தான் சினிமாவுக்கேற்ப, என் முடிவை மாற்றிக் கொண்டுள்ளேன் என்கிறார். மேலும் அவர், “இந்த படத்துக்கு பின், எனக்கு ஏராளமான வாய்ப்புகள் குவியும். தமிழில், நானும் முன்…

    • 0 replies
    • 418 views
  14. திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடிப்பீர்களா? அமலாபாலின் பதில்….! சினிமாவில் நடிப்பதும் அலுவலகம் செல்வது போன்று ஒரு வேலைதான். அதனால் என்னைக்கேட்டால், அதற்கு திருமணம் ஒரு தடையாக இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. ஆனால், பல முன்னணி நடிகைகளால் திருமணத்துக்குப்பிறகு நடிக்க முடியாத சூழ்நிலைதான் ஏற்பட்டு வருகிறது. உதாரணத்துக்கு சொல்லவேண்டுமென்றால், கேரளாவைச்சேர்ந்த மஞ்சுவாரியார், நவ்யா நாயர், கோபிகா போன்றோர் சிறந்த நடிகைகள். ஆனால், அவர்களால் திருமணத்துக்குப்பிறகு நடிக்க முடியவில்லை. சிலர் குழந்தை குட்டிகள் என்று ஆனதால் குடும்பத்தில் பிசியாகி விட்டனர். இன்னும் சிலர் நடிக்க ஆசைப்பட்டபோதும், கணவர் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் அதற்கு அனுமதி கொடுக்காமல் நடிப்பை தள்ளி வைத்து…

  15. ராஜராஜ சோழனின் போர்வாள் எனும் படத்துக்கு மக்கள் முன் இசையமைக்கப் போகிறார் இளையராஜா என்று முன்பே கூறியிருந்தோம். அவர் அப்படி இசையமைக்கப் போகிற இடம் ரொம்ப சுவாரஸ்யமானது. மாமன்னன் ராஜராஜ சோழனின் குரு எனப்படும் கருவூர் சித்தர் ஜீவசமாதி அடைந்த இடத்தில்தான் இளையராஜா மக்கள் முன் மெட்டமைக்கிறார்.இந்த இடம் கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் உள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் 11-ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. கருவூர் சித்தரின் ஜீவசமாதி உள்ள இடத்தில் இசைஞானி இசையமைப்பதைக் காண பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது .இளையராஜா இந்த இடத்தைத் தேர்வு செய்தது ஏன் தெரியுமா? சோழ மன்னர்களில் தலை சிறந்தவரான ராஜராஜ சோழனுக்கு குருவாகத் திகழ்ந்தவர் கருவூர் …

  16. சென்னை: காசோலை மோசடி வழக்கில் பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிரபல சினிமா இயக்குனரும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ககன் கோத்ரா என்பவர் என் மீது 65 லட்சம் ரூபாய்க்கான செக் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு மனுவில் முகுல் சந்த் கோத்ராவிடம் தான் 65 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அவருக்கு பதில் தான் இந்த வழக்கை தொடருவதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு பவர் ஏஜெண்டாக செயல்பட்டு என் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆர். சுப்பைய…

  17. சென்னை: பாடலாசிரியர் சினேகன் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு ராஜராஜனின் போர்வாள் எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்துக்கான ட்யூன்களை மக்கள் முன்னிலையிலேயே மெட்டமைக்கப் போகிறார் இசைஞானி. ‘யோகி' படத்தில் அமீருடன் நடிகராக அறிமுகமானார் சினேகன். அடுத்து பாரதிராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரேம்நாத் இயக்கிய ‘உயர்திரு 420' என்ற படத்தில் நடித்தார். இப்படம் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைத் தேடித் தரவில்லை.இந்நிலையில், மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு சினேகனுக்கு கிடைத்துள்ளது.ஆர்.எஸ்.அமுதேஷ்வர் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். ‘இராஜராஜ சோழனின் போர்வாள்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இளையர…

  18. சேரனின் இரு மகளுக்கும் I LOVE U சொன்ன மகளின் காதலன் – சேரன் பர பரப்பு பேட்டி வீடியோ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=9UfJrmCb6vI http://www.ampalam.com/2013/08/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-i-love-u/

  19. அசின் வாய்ப்பை கைப்பற்றிய ஸ்ருதி தெலுங்கு, இந்தி சினிமாவில், சில முன்னணி நடிகைகளுக்கு, கிடைக்கவிருந்த படங்கள், ஸ்ருதி பக்கம் திரும்பியுள்ளன.தெலுங்கில், கப்பர் சிங்-2 படத்தை எடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்தபோது, காஜலைத்தான், ஹீரோயினாகஒப்பந்தம் செய்ய, பேசி வந்தனர். ஆனால், கடைசியில், அந்த வாய்ப்பு, ஸ்ருதிக்கு வந்தது. அடுத்ததாக, இந்தியில் தமன்னாவை, ரமணா ரீ-மேக் படத்துக்கு கதை சொல்லி ஓ.கே., செய்து வைத்திருந்தனர். டி-டே படம் வெற்றி பெற்றதால், ஸ்ருதியை, அந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்து, தமன்னாவுக்கு அல்வா கொடுத்து விட்டனர். தற்போது, அசின் இந்தியில் நடிக்கவிருந்த, வெல்கம் பேக் என்ற படமும், ஸ்ருதிக்கு கிடைத்துள்ளது.இந்த கதைக்கு ஸ்ருதியே பொருத்தமாக இருப்பதாக, படத் தயாரிப்பாள…

  20. பாலா இயக்கிய சேது படம் மூலம்தான் விக்ரமுக்கு தமிழ்சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் அதை தக்கவைத்துக்கொண்டு விக்ரம் ஒரு கமர்ஷியல் ஹீரோவாக மேலேறிவரமுடியவில்லை! இதை தில், தூள் படங்களின் மூலம் மாற்றிக்காட்டியவர் இயக்குனர் தரணி! இருவரும் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். கல்லூரிக் காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். இதைவிட ஆச்சர்யம்.. இருவருமே மிகப்பெரிய சாலை விபத்தில் சிக்கியவர்கள். இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்த தில், தூள் படங்களின் அதிரடி வெற்றியை தமிழ்சினிமா ஃபாக்ஸ் ஆபீஸ் அத்தனை சீக்கிரம் மறந்து விடாது! இப்படி இரண்டு மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்தும்கூட இருவரும் நீண்ட நாட்களாக இணைந்து படம் பண்ணாமல் இருந்தார்கள். விக்ரம் - தரணி இருவருக…

    • 0 replies
    • 787 views
  21. டைரக்டர் சேரனின் 2-வது மகள் தாமினி, சூளைமேட்டைச் சேர்ந்த நடன கலைஞர் சந்துரு காதல் விவகாரம் கோர்ட்டு வரை சென்றது. தாமினி 2 வாரங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி சந்துரு குடும்பத்தினருடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் மனு கொடுத்தார். அதில் காதலன் சந்துருவை கொலை செய்ய முயற்சிப்பதாக தந்தை சேரன் மீது புகார் கூறினார். இதை மறுத்த டைரக்டர் சேரன் சந்துருவின் நடவடிக்கை சரியில்லை. எனவேதான் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். இது தொடர்பாக கண்ணீர் மல்க பேட்டி அளித்த சேரன் ``தனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். காதலுக்கு நான் எதிரி இல்லை'' என்று தெரிவித்தார். இதையடுத்து சேரனின் மகள் தாமினிக்கு பெண் போலீசார் கவுன்சிலி…

    • 0 replies
    • 551 views
  22. சென்னை: காதலும் வேண்டாம் காதலனும் வேண்டாம் என நீதிமன்றத்தில் கூறிவிட்டு மகள் தாமினி தன்னோடு வந்ததில் மிகுந்த சந்தோஷமடைந்த இயக்குநர் சேரன், மீடியாவுக்கு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி நன்றி தெரிவித்தார். நீதிமன்றத்தில் இன்று தாமினி காதல் வழக்கு விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. பழையபடி தாய் தந்தையுடன் சேர்ந்துவிட்டார் தாமினி. தன் மகள் திரும்பக் கிடைத்தது சேரனுக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்துள்ளது. இதற்காக அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். நீதிமன்ற வளாகத்தில் ஏராளமானோர் அவரைச் சுற்றி நின்றிருந்தனர். ஏராளமான மீடியாக்காரர்களும் வந்திருந்தனர். தரையில் விழுந்து... அப்போது அனைவர் மத்தியிலும் பேசிய சேரன், 'என் பொக்கிஷம் திரும்பக் கிடைத்துவிட்டது. எ…

    • 4 replies
    • 1.2k views
  23. விஸ்வரூபம் திரைப்படத்துக்கு சிக்கல் வந்தபோது, பெரும்பாலானோருக்கு கமல் மீது ஒரு அனுதாபம் இருந்தது. ஆனால், எது சிக்கல் என்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் விஜய் மீது ஏன் அவர் ரசிகர்களைத் தவிர யாருக்குமே அனுதாபம் இல்லை... ? 2007 - ஆம் ஆண்டு. விஜய் டிவியில் வரும் லொள்ளு சபா நிகழ்ச்சியை பார்த்து ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. பல திரைப்படங்களை ரசிக்கும் வகையில் கலாய்ப்பார்கள். அப்படி பல படங்களை கலாய்த்து பெரிய நடிகர் ஆனவர்தான் சந்தானம். சந்தானம் திரைத்துறைக்கு சென்றதையடுத்து, அவர் இடத்தில் லொள்ளு சபாவில் நடித்தவர் நடிகர் ஜீவா. விஜயின் போக்கிரி படத்தை பேக்கரி என்ற பெயரில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் செம்மையாக கலாய்த்தார். நடிகர் விஜய்க்கும் அவர் தந்தை சந்திரசேகருக்கு…

  24. மௌனகுரு படத்தில் ஆரம்பித்து சூடுபிடிக்க ஆரம்பித்தது ஜான் விஜயின் மார்க்கெட்! தற்போது பெரும்பாலான படங்களில் குறைந்தது துணை வில்லனாக நடித்து விடிகிறார். தற்போது 'விடியும் முன்’ படத்தில் நான் கடவுள் பூஜா நீண்ட இடைவெளிக்குப் பின் நடிக்கிறார். திகில் படமான இதில் நான்கு வில்லன்களில் ஜான்விஜயும் ஒரு வில்லன். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிக்கப்போன இடத்தில் ஜான் மூணு கிலோ சிக்கன், மூணு கிலோ மட்டன், மூணு கிலோ மீன் என தன் சொந்த பணத்தில் வாங்கி வரச்செய்து யூனிட்டிற்கு சமைத்துப் போட்டிருக்கிறார். இதில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டவர் பூஜா. இது பற்றி ஜான் விஜய், “நான் ஓரம்போ படத்திற்குப் பிறகு நடிச்சு தள்ளியிருக்குற படம் விடியும் முன் படம்தான். படத்துல நான் ரொம்ப கெட்டவன். ரெட் ஹில்ஸ், …

    • 0 replies
    • 433 views
  25. தலைவா ரிலீஸ்: ஆடு வெட்டி, மொட்டை போட்டு, பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள். நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் திருட்டு சி.டி வெளிவந்துவிட்டது. இந்த சி.டியை ரசிகர்களே பல இடங்களில் பிடித்து கொடுத்தனர். இந்த நிலையில் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து இன்று செவ்வாய் கிழமை தலைவா திரைப்படம் தமிழ கத்தில் திரைக்கு வந்தது. புதுக்கோட்டையில் திரையரங்கம் முன்பு திரன்ட ரசிகர்கள் மாவட்ட அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜாபர் அலி தலைமையில் ஆடு வெட்டி, மொட்டை போட்டு விஜய் படத்திற்கு பாலா பிஷேகம் செய்தனர். அப்போது அவர்கள் கூறும் போது தலைவா படம் தமிழகத்தில் நீண்ட நாட்கள் ஓட வேண்டும் என்பதற்காகத் தான் இந்த ச…

    • 13 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.